Monday 23 November 2015

மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ,அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள்.

மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ,அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள்.

******************************************
t

ஜான்: வானத்து பறவைகள் விதைக்கிறதுமில்லை,
அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை;
தேவன் அவைகளை போஷித்து பிழைக்கவைக்கிறார்... 
பறவைகளை விட விசேஷித்த நம்மையும் போஷிப்பார் (மத் 6: 26)

ஜேம்ஸ்: (உற்சாகமாக)
ஆமென்.... அல்லேலூயா 

ஜான்: எனவே கவலைபடாம
நாம் நமது ஆகாரத்தை,ஆகாரம் இல்லாதவருக்கு கொடுக்க வேண்டும் (லூக் 3:11)

ஜேம்ஸ் :(சலிப்புடன்) ம்ம்ம்ம்....

ஜான் : காட்டு புஷ்பங்கள் 
உழைக்கிறதுமில்லை,நூற்கிறதுமில்லை;தேவன் அவைகளை உடுத்துவிக்கிறார்.... அவர் நம்மையும் உடுத்துவிக்கிறவர். (மத் 6:28-30)

ஜேம்ஸ்: (உற்சாகமாக) ஆமென்.... தேவனுக்கே மகிமை அல்லேலூயா 

ஜான் :எனவே அனேக ஆடைகள் உடைய நாம்,ஆடை இல்லாதவருக்கு ஆடை கொடுக்க வேண்டும் (லூக் 3:11)

ஜேம்ஸ்: (சலிப்புடன்) ம்ம்ம்ம்......

ஜான்: எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்;மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
நம்மையும் தேவன் திருப்தியாக்கி மிச்சம் எடுக்க வைப்பார் (மத்14: 20)

ஜேம்ஸ்: (உற்சாகமாக) ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா

ஜான் : நாம் விருந்துபண்ணும்போது,  ஏழைகளையும்,ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைத்து விருந்து கொடுக்க வேண்டும். லூக் (14:13) 

ஜேம்ஸ்: (திகைப்புடன்) ??????

ஜான்: என்ன திகைக்கிறாய் ?
 நமக்கு தேவன் கொடுத்ததே  மற்றவர்களுக்கு நாம் கொடுப்பதற்காக தான்.....
மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ,அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்25:45)
என்று இயேசு சொல்லியிருக்கிறாரே ?
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்க மற்றவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் 

ஜேம்ஸ் : எதுக்கு தேவன் கூட கொடுக்கனும் ?

ஜான் : நம்ம தேவைக்குபோக மற்றவைகளை இல்லாதவர்களுக்கு கொடுக்கத்தான் 

ஜேம்ஸ் : ????????? 


www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

Marvel Jerome

No comments:

Post a Comment