Monday 16 November 2015

விண்ணகம் விட்டு மண்ணகம் வந்தீர்

விண்ணகம் விட்டு மண்ணகம் வந்தீர்
விண்ணகம் என்னை சேர்த்திடவே !

கல்வாரியில் காயப்பட்டு கஷ்டப்பட்டீர்,
கடைசி சொட்டு இரத்தம் வரை இஷ்டப்பட்டு சிந்தினீர்
நித்திய வாழ்வை எனக்கு தந்திடவே !

வாலிப வயதிலே சாவை ஏற்றுக்கொண்டு உம் ஜீவனையே எனக்காக தந்தீர்
என் ஜீவன் பரிபூரணம் அடைந்திடவே !

பாதாளத்திற்குள் இறங்கினீர்
நான் பரலோகம் வந்து சேர்ந்திடவே !

சாத்தானை தோற்கடித்தீர்
நான் உலகை ஜெயித்திடவே !

சாவை வென்று உயிர்த்தெழுந்தீர்
என்னையும் உம்மை போல் உயிர்ப்பித்திடவே !

பரமேறி பரலோகம் சென்றீர்
எனக்கு பரிசுத்த ஆவியின் வரங்களையும் தந்தீர்
நான் பரலோக ராஜ்யத்தின் பிரதிநிதியாய் என்றும் வாழ்ந்திடவே !

பாரம்பரிய குருட்டிலிருந்த
என் ஆவிக்குரிய கண்களை
உமது வசனத்தால் திறக்கச்செய்தீர் !

ஜீவ வார்த்தையின் ஒளியில்
என்னை நடக்க செய்தீர் !

என்றும் மகிமையாய் உம்மோடு உமக்காக வாழ்ந்திடவே !

ஆமென்

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

Marvel Jerome

No comments:

Post a Comment