Wednesday 20 January 2016




#Exclusive

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும்,சாத்தானின் தந்திரங்களும்

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
(வெளி 22: 12)

ஜான்: இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றி பரிசுத்த வேதாகமம் தெளிவாய் போதிக்கிறது,

பீட்டர்: ஆமா இரண்டாம், வருகைக்கு முன்பு நடக்க போகிற கரியங்கள் என சொல்லப்பட்ட விஷயங்கள்,வேதத்தின் படி நடந்துகிட்டு தான் இருக்கு...

ஜான்: அதுமட்டுமல்ல ஜான்,
கடவுளை பற்றிய உண்மையான வேதாகம உபதேசத்தை திசைமாற்ற,சாத்தான் பல்வேறு மதங்களை உண்டாக்கி மக்களை  வஞ்சித்துக்கொண்டு எப்படி, இருக்கிறானோ அதேபோல,இயேசுவின் இரண்டாம் வருகையின் உண்மைத்துவத்தை மறைப்பதற்கு சாத்தான் மக்களுக்குள் பொய்யான உபதேசங்களை பரப்பி அதை நம்ப வைத்துகொண்டும் இருக்கிறான்.....

பீட்டர்: ஆமா பீட்டர்,பௌத்த மதத்து மக்கள், "மைத்திரேயர்" என்னும் வருங்கால புத்தர் உலகத்தில் அவதரிக்கப்போவதாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். "மைத்திரேயர்"வந்து மக்களுக்கு தர்மத்தை போதித்திப்பார் என்று நம்புகிறார்கள்

ஜான்: இந்து மதத்தில் விஷ்ணு என்பவர் "கல்கி"-யாக தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார்
என்று நம்புகிறார்கள்.

பீட்டர்: அதேபோல் இஸ்லாமிய மக்கள் "ஈஷா நபி" என்பவர் இறுதி நாள்களில் மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்புவார்,
"வழிகாட்டப்பட்டவர்" (மாதி [மாக்தி] Mahdi) என்பவரோடு இணைந்துகொண்டு "போலி மெசியா"வை எதிர்த்து முறியடிப்பார் என்று நம்புகின்றார்கள்.

ஜான்: அதோடுகூட,யூதர்கள் இன்னம் கிறிஸ்துவின் முதல் வருகை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பீட்டர்: கத்தோலிக்க மக்கள்,
இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை விசுவாசிக்கிறார்கள்,
ஆனால் இயேசு போதிக்காத,
வேதத்தில் இல்லாத உபதேசங்களையும்,போதனைகளையும் நம்பிக்கொண்டு வாழ்கிறார்கள்.

ஜான்: ஆமா பீட்டர்,தேவனுடைய வார்த்தையில் இல்லாத காரியங்களை,
சாத்தான் நம்பவைக்கிறான்,அந்த நம்பிக்கைக்கு "உருவம்" கொடுக்க,ஒளியின் வேடம் தரித்துக்கொண்டு வருகிறான் (2கொரி11: 14)

பீட்டர்:இப்படி உலகம் முழுதும் சாத்தனின் பொய் உபதேசத்தாலும்,பொய்யான எதிர்பார்ப்புகளாலும்  நிறைந்திருக்கும்,இந்த காலங்களை நாம் கவனிக்கும் போது, நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிகவும் சமீபமாக இருப்பதை நாம் நன்கு உணரமுடிகிறது.

ஜான்: இப்படி எல்லாம் அறிந்திருந்தும்  மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்காமல்,பொய் உபதேசங்களை தோலுறித்து காட்டாமல், போலி எதிர்பார்ப்புகளை சுட்டிகாட்டி எதிர்காமல்,நமக்கென் வம்பு என்று வாயை மூடிக்கொண்டு எந்த ஒரு உண்மையான கிறிஸ்தவனும் இருக்க மாட்டான்....

பீட்டர்: ஆமா நண்பா,நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர்,நம்மை ஆவியில் அனலாக்கி கொண்டிருக்கிறாரே..அப்பரம்
நம்மால் எப்படி சும்மா இருக்க முடியும்,

ஜான்: கர்த்தருடைய ஆவியானவர் இன்னும் வல்லமையாய் நம்மைக்கொண்டு செயல்படுவார்,நாம் அவரின் ஆளுகையை நமக்குள் அனுமதிப்போம்.
கர்த்தருடைய வருகை மிகவும் அருகில் இருக்கிறது,அவரை சந்திக்க நாம் ஆயத்தமானது போல்,மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.

ஆமென்... அல்லேலூயா...

இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.

(வெளி 1: 7)

செய்தி : ஜீவ வழியிலிருந்து சகோ:பரத்

====================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

Wednesday 13 January 2016

தேவனை தேடு

Exclusive

ஜான்: நாம் தேவனைத் தேட வேண்டும்,அவருடைய வார்த்தைகளை ஆர்வமாய் நாட வேண்டும்....

விக்டர்: நானுமா ? நல்ல காமெடி ஜான்,நானே வாழ்க்கையில வாழ்றதுக்கு வழியவே இன்னம் கண்டுபிடிக்க முடியாம திரிந்துகிட்டு இருக்கேன்... நான் போய் தேவனை தேடுவா ?

ஜான்: ஆமா நண்பா, ஒவ்வொரு மனிதனும் தேவனை தேட வேண்டும்,அவரை அறிந்துகொண்டு அவரோடு நெருக்கிய ஐக்கியம் கொண்டு வாழ வேண்டும் அதுதான் மனித வாழ்வின் பிரதான நோக்கம்,அவற்றை நீ செய்தால் என்ன விக்டர் ?

விக்டர்: உனக்கெல்லம் என்ன தெரியும் ஜான், என் வாழ்க்கை வறுமையால் நெறஞ்சு இருக்கு, கடன் தொல்ல, குடும்ப பிரச்சனை, பொருளாதார தேவைகளை என எல்லாம் எங்கள சூழ்ந்து இருக்கு, கையில பணமே நிக்க
மாட்டிங்கிது...ஜான்,ஒரு சில நேரத்துல பட்டினியா இருக்க வேண்டிய நிலை கூட வருது... இதலாம் அந்த ஆண்டவரு  தெரியாதா ?

ஜான்: சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத்தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது'.சங்.34:10ல் எழுதியிருக்கு நீ மொத கர்த்தரை தேடு,விக்டர்.. அப்பரம் உனக்கு என்ன தேவை என்பதை, நம்முடைய பரமபிதா ஏற்கனவே அறிந்திருக்கிறார்' (மத்.6:8).
நீ அவரை அறிந்திருக்கிறாயா ? அவரை அறிந்திருந்தால் நீ இப்படி பேச மாட்ட

விக்டர்: ஆமா ஜான்....

ஜான்: நம்மை படைத்து தேவன்,
அவர் வார்த்தையாகவே இருக்கிறார் உன்னுடைய தேவைகளை சந்திக்கிற தேவனாகவும் இருக்கிறார், விசுவாசத்தோடு பேசு

விக்டர்: ம்ம்ம்.....

ஜான்: உனக்கும் உன் குடும்பத்திற்கும் என்ன என்ன தேவைகள் உண்டோ அவைகள் அனைத்தையும் நிச்சயம் நீங்கள் பெற்றுக் கொள்வீ்ர்கள்,
நீ மொத தேவனைத் தேடு,அவர் அறிகிற அறிவை வேதத்தின் மூலம் வளர்த்துக்கொள்.

மரியதாஸ்: ஓகே... நண்பா எப்படி வளர்த்துக்கொள்வது ?

ஜான்:  ஒவ்வொரு நாளையும் நீ துவக்கும் போது தேவனோடு நீ துவக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான காரியம்.....

விக்டர்: ஆனா காலையில் எழுந்தவுடன் என் கண்ணுக்கு முன்னாடி என் பிரச்சினைகளும், தேவைகளும், பாரங்களுமே வந்து நிக்குது ஜான்.

ஜான்: அந்த சிந்தனைகளை கண்முன் நிறுத்தாதே, ஆவியாய் இருக்கிற ஆண்டவரை உன் கண்முன் நிறுத்து  அவருக்கு முக்கியத்துவம் கொடு். வேதத்தை வாசி, வேத வசனத்திலிருந்து ஆண்டவர் உங்களோடு என்ன பேசுவார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். பிறகு ஜெபம்பண்ணி அந்த நாளுக்குரிய சகல காரியங்களுக்காக அவரை ஸ்தோத்தரி, அதன் பிறகு உன்  தேவைகளை, விண்ணப்பங்களை தேவனுக்குத் தெரியப்படுத்து நிச்சயம் உன் ஜெபத்திற்கு ஆண்டவர்  பதில் கொடுப்பார். உன் தேவைகள் கட்டாயம் சந்திக்கப்படும். அவிசுவாசமாய் பேசாதே ஓகேவா ?

விக்டர்: ஓகே... ஜான் நீ சொன்னவாறே நாளை முதல் செய்ய ஆரம்பிக்கிறேன்,நன்றி....

ஜான்: கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்....

===================
கவலையான,பிரச்சனையான சிந்தனைகளை கண்முன் நிறுத்தாதே, உன் பிரச்சனைக்கு தீர்வாய் இருக்கிற, கர்த்தருடைய வார்த்தைகளை கண்முன் நிறுத்து...

மற்றவர்கள் உன்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள்,என்பதில் நீ உன் கவனத்தை செலுத்ததே...
ஆண்டவருடைய வார்த்தை உன்னைப்பற்றி என்ன சொல்கிறதோ அதில் நீ கவனத்தை செலுத்து...
===================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

Friday 8 January 2016

அல்லேலூயா

ஜேம்ஸ்: ஒரு சில சபைகளில மூச்சுக்கு முன்னூறு தடவை அல்லேலூயா சொல்றாங்களே இது தேவையா பீட்டர் ?

பீட்டர்: அல்லேலூயாங்கிறது ஒன்னும் கெட்ட வார்த்த இல்ல ஜேம்ஸ் ! அது தேவனின் நாமத்தை மகிமை படுத்தும் ஒரு வார்த்தை, எனவே நாம் அதை எத்தன தடவை வேண்டுமானாலும் சொல்லி அவர மகிமைப்படுத்தலாம்.

ஜேம்ஸ்: அப்படியா !

பீட்டர்: ஆமா ஜேம்ஸ், சங்கீதக்காரனாகிய தாவீது
(சங் 106: 48)ல் 'இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்:
"ஆமென், அல்லேலூயா",
என்பார்களாக. என்கிறான்.... சங்கீதங்களில் மட்டுமல்ல வேதத்தில் மற்ற பகுதிகளிலும் சொல்லப்பட்டு இருக்கு.

(வெளி 19: 4) ல் 'இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து:
"ஆமென், அல்லேலூயா" என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்'.

ஜேம்ஸ்: நான் இது நாள் வரைக்கும் அல்லேலூயாவை ஒரு முக்கியமில்லாத வார்த்தையாக நெனச்சுகிட்டு இருந்தேன் பீட்டர்,இப்பதான் அதன் முக்கியத்துவதை புரிஞ்சுகிட்டேன்.

பீட்டர்: "அல்லேலூயா" என்பது பரலோகத்திலும்,பூலோகத்திலும் சொல்லப்படுகிற ஒரு மகிமையான  வார்த்தை, உலகத்திலுள்ள எல்ல மொழிகளிலும் எந்த மாற்றமும் இல்லாம சொல்லபடுகிற வார்த்தையும் கூட..... எனவே நாமும் நமது தேவனை மகிமைப்படுத்தும் படி ஆமென்....... அல்லேலூயா....... என்று சொல்வோமா ?

ஜேம்ஸ்&பீட்டர்: ஆமென் அல்லேலூயா

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in