பீட்டர்: என்ன அந்தோனி கையில மெழுகுதிரியை எடுத்துக்கிட்டு எங்க அவசரமா கிளம்பிட்ட ?
அந்தோனி: எங்க குழந்தை ஏசு கோயில்ல இன்னைக்கு விசேஷம்பா
அதான் அங்க போய்க்கிட்டு இருக்கேன்
பீட்டர்: குழந்தை ஏசுவா ! இயேசு இப்ப குழந்தயாவா இருக்காரு ?
அந்தோனி : ஆமா! ஏசு குழந்தையா தான் இருக்காரு. வேணுமுனா எங்க கோயிலுக்கு வந்து பாரு
பீட்டர்: நீ மொத வீட்டுக்கு போயி வேதாகமத்தை எடுத்துப்பாரு .
(லூக்கா 2: 40,2: 52) குழந்தையாய் பிறந்த இயேசு வளர்ந்தார் ஆவியில் பெலன் கொண்டார்..
ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
அவர் குழந்தையாகவே கடைசிவரைக்கும் இருக்கவில்லை .
அவர் இந்த பூமிக்கு வந்த வேலையை கல்வாரியில் முடித்தார்,பாதாளம் இறங்கினார், உயிர்த்தெழுந்து பரமேறி இப்போது பிதாவின் வலது பாரிசத்தில்
அமர்ந்து நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்.
அந்தோனி : அப்ப குழந்தை ஏசு ?
பீட்டர்: அது ரோமானிய அரசால் புற மத பழக்கத்திலிருந்து கிறிஸ்தவத்துக்குள் புகுத்தப்பட்ட குழந்தை தெய்வ வழிபாடு... வரலாறு சம்மந்தமா நான் அப்பரம் பேசுறேன்.
இயேசு கடைசி வரைக்கும் சிலுவையில் அறையப்படாம குழந்தையாகவே இருந்திருந்தா இந்த உலகத்தில் யாரும் மீட்படைய முடியாது
அந்தோனி : அப்படியா !
பீட்டர்: ஆமா அந்தோனி, நீ ஆவிக்குரிய வளர்ச்சியில் குழந்தையாவே இருக்கிற அதான் நீ இன்னும் இயேசு கிறிஸ்துவை குழந்தையாவே பார்க்கிற
அந்தோனி: நான் ஆவியில் வளர என்ன செய்யனும் ?
பீட்டர்: 1பேதுரு 2: 3
நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
ஜீவ வழி-LIVING WAY
www.facebook.com/lwcomm
No comments:
Post a Comment