Tuesday 17 November 2015

தேவனுடைய வார்த்தைகளை நம்பு

கர்த்தருடைய வார்த்தைகளை நம்பிய ஜனங்களுக்கு முன்னால்

எதிரே இருந்த செங்கடல் பிரிந்துவிலகியது ...
எதிர்த்து வந்த சேனைகள்  முறிந்து  மூழ்கியது ...
யோர்தான் விழகி குவியலாக நின்றது...
தடையாய் இருந்த ஏரிகோ இடிந்தது தகர்ந்தது...
புது வழியும் பிறந்தது
கானான் கிடைத்தது...

ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளை நம்பி செயல்பட்டார்கள்

ஆம் என் சகோதர சகோதரிகளே,
நாமும் கர்த்தருடைய வசனங்களையே நம்பியிருக்கிறோம் அவர்தான்
வானாதி வானங்களையும் பூமியையும் படைத்த  உண்மையான கடவுள்
அவருடைய வார்த்தைகள் மேல் முழுமையான நம்பிக்கை வைத்தால் மட்டுமே அசாதாரண அதிசய காரியங்கள் நம் வாழ்வில் நடக்கும்...

கர்த்தர் நமக்கு கொடுக்க விரும்பிகிற எல்லா நன்மையான காரியங்கள்  நமக்கு கிடைக்கும்...

அவரை முழுமையாக நம்பி அவர் நியமித்த வேத வழிகளில் மட்டுமே நாம் நடக்க வேண்டும்...

அவர் நியமிக்காத வேதத்தில் இல்லாத வேறு வழிகளை வெறுத்து ஒதுக்க வேண்டும்...

அவருடைய வார்த்தையின் ஆதாரமில்லாத
கர்த்தருடைய வேதத்தில் சொல்லாத வழிகள் இருளின் பாதாள வழிகள் எனவே அவற்றை யார் வந்து சொன்னாலும் நாம் அதை
 ஏற்க மறுக்க வேண்டும்...

கர்த்தருடைய வசனமே நம் கால்களுக்கு தீபமாகவும் நம் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்க வேண்டும்...

நிச்சயமாக என் சகோதர சகோதரிகளே !

நீ கர்த்தருடைய வார்த்தைகளை மட்டும் முழுமையாக நம்பி வாழ்ந்து பார்...

மனித முயற்சியால் கடந்து செல்ல முடியாத செங்கடல் போல் சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளை கர்த்தரின் வார்த்தையை உடைய நீ எளிதாய் பிழந்து ஜெயத்துடன் கடந்து செல்வாய்...

மாமிச பலத்தால் எவனாலும் முறியடிக்க முடியாத
உன்னை பட்சிக்க வரும் சாத்தானின் சேனைகளை
ஆண்டவர் உனக்கு அளிக்கும் ஆவியின் பலத்தால் முறித்து  மூழ்கடித்து நீ சத்துருக்களை வெல்வாய்...

நீ நடந்தது செல்லும் வழியில் பணப்பிரச்சனை பற்றாக்குறை பொருளாதார சுமைகள் என
வெள்ளப்பெருக்காய் புரண்டு வந்து உன்னை இழுத்து செல்ல வரும் யோர்தான்  போன்ற ஆறுகளை கர்த்தர் உனக்காக குவியலாய் நிற்க செய்வார்
உன்னை முழ்கிபோகாமல் அவரே உன்னை நடத்தி அக்கறைக்கு கொண்டுபோய் சேர்ப்பார்...

தேவன் உனக்கு கொடுக்க விரும்புகிற பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசம் என்னும் பரிபூரண ஜீவன் நிறைந்த வாழ்க்கைக்குள் உன்னை பிரவேசிக்க விடாமல் தடை மதிலாய் இருக்கிற ஏரிகோ என்னும் நம்முடைய அவிசுவாச வார்த்தைகளால் உண்டான சாத்தானின் அலங்கத்தை கர்த்தரின் வல்லமையினால் நீ தகர்த்து  தவிடு பொடியாக ஆக்கிடுவாய்   ஆர்ப்பரித்து என்றும் தேவனை நீ நன்றி உணர்வோடு துதித்துப்பாடிடுவாய் ...

தேவனுடைய வார்த்தையை(இயேசு) உடையவன் ஜீவனை உடையவன்...

இந்த ஜீவன்(இயேசு) நமக்கு பூலோகத்தில் பரிபூரண வாழ்வையும்
பரலோகத்தில் நித்திய வாழ்வையும் உண்டாக்கியிருக்கிறார்...

இந்த இரண்டையும் நாம் பெற்றுக்கொள்ள தேவனுடைய வார்தையின் வழியில் மட்டும் தான் நடக்க வேண்டும்...

அதற்கு தடையாக வரும் வரும் சாத்தானின் போலி உபதேசங்களையும் பொய்யான அந்தகார வல்லமைகளையும் ஆண்டவரின் வார்த்தையால் அடித்து விரட்ட வேண்டும்...

இந்த உலகத்தில் இயேசுவை போல் என்றுமே நாம் ஜெயிக்கிறவர்களாய் இருக்க வேண்டும்...

ஆம் சகோதர சகோதரிகளே,

கிறிஸ்துவுக்குள் எப்போதும் நம்மை வெற்றி சிறக்கப்பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்...

நாம் அடைந்த இனி அடையப்போகிற எல்லா வெற்றிகளுக்கும் "தேவனுடைய  வசனங்கள்" மட்டும் தான் சூத்திரம்...

ஆமென்

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

No comments:

Post a Comment