Tuesday 9 June 2020

உலகத்தை நேசிக்காதே,உலகத்தை படைத்தவரை #நேசி

#உலகத்தைநேசிக்காதே,
#உலகத்தை #படைத்தவரை #நேசி


உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்;ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் 
அன்பில்லை.(1யோவான் 2:15)

கிறிஸ்துவுக்குள் பிரியமான 
என் அன்பு சகோதர,சகோதரிகளே உலகத்திலும்,உலகத்தில் உள்ளவைகளின்,மீதும் அன்பு கூராதிருங்கள்,என்றும் 
உலகத்தின் மீது ஒருவன் அன்பு கூருகிறவனாக இருந்தால், 
அவனிடத்தில் பிதாவின் 
அன்பில்லை (1யோவா 2:15)
என்றும்,உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை (யாக் 4:4)
என்றும் வேதம் திட்டவட்டமாக போதிக்கின்றது.நாம் உலகத்தின் 
மீது அன்புகூருகிறவர்களாக,
இராமல் உலகத்தைப் படைத்த தேவன் மீது அன்பு கூருகிறவர்களாக  இருக்க
வேண்டும் என்று தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.
(மாற் 12:30)(மத் 10:37)

இறைமகன்,இயேசு மனித அவதாரம் எடுத்து,இந்த மண்ணகத்திற்கு, வந்தபொழுது சாத்தான் அவருக்கு இந்த உலகத்தின் ராஜ்யங்களையும் அதன் மகிமைகளையும்,காண்பித்து அதை தருவேன் என்று சொல்லியும் இயேசு அதற்கு இணங்கி போகவில்லை,அவர் சாத்தனுக்கு எதிர்த்து நின்றார்,(மத் 4:8-10)எனவே நாமும் உலகின் மகிமைக்கு ஐசுவரியத்திற்குமயங்காமல்,
சாத்தானுக்கு எதிர்த்து நிற்க வேண்டும்.நாம் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்காமல் 
(ரோம 12 :2) மெய்யான நீதியிலும்,பரிசுத்தத்திலும்,
தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனிதனின் சாயலை தரித்துக்கொண்டு இந்த உலகத்திலேயே வாழ வேண்டும் (எபே 4:22-24) நாம் உலக கவலையும், ஐசுவரியத்தின் மயக்கமும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் (மத்13:22)

I) உலகத்திலுள்ளவைகளின் மீது அன்புகூராதிருங்கள் 

ஆம் பிரியமானவர்களே 
1 யோவான் 2:16 சொல்கிறது மாம்சத்தின் இச்சை,கண்களின் இச்சை,ஜீவனத்தின் பெருமை
ஆகிய இவைகள் உலகத்திலுள்ளவைகள் இவைகளின் மீது நாம் சிநேகம்  கொள்ளாதிருக்க வேண்டும்.

II) #மாம்சத்தின்இச்சை 

1) மாம்சமும் மனமும் விரும்புகின்ற காரியங்களை செய்கின்றவர்கள் மாம்ச இசையின் படி நடக்கிறவர்கள் ஆவார்கள்,அவர்கள் மீது கோபாக்கினை இருக்கும் (எபே 2:3) கிறிஸ்துவுக்கள்,நாம் இன்று இந்த நிலையில் இல்லை.

2) மாம்சமும் மனமும் எதை விரும்புகிறது?மாம்சமும்,மனமும் 
மாம்ச கிரியைகளை விரும்புகின்றது,
மாம்ச கிரியைகள் எவைகள்?

விபசாரம்,வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,விக்கிரகாராதனை, பில்லிசூனியம்,பகைகள், விரோதங்கள்,வைராக்கியங்கள், கோபங்கள்,சண்டைகள், பிரிவினைகள்,மார்க்கபேதங்கள்.
பொறாமைகள்,கொலைகள், வெறிகள்,களியாட்டுகள் 
இவைகளாகும்,இப்படிப்பட்ட காரியங்களை  செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று
வேதம் நமக்கு போதிக்கிறது.
(கலா 5:19-21)

3) மாம்ச இச்சையானது ஆத்துமாவுக்கு விரோதமாக,போர் செய்கின்ற ஒரு காரியமாக இருக்கின்றது,எனவே அவற்றை விட்டு நாம் விலக வேண்டும் என்று வேதம் சொல்கிறது (1பேது 2:11)

4) மாம்சமும்,ஆவியும் ஒன்றுக்கொன்று விரோதமாக இருக்கிறது,நாம் ஆவியின் படி நடக்கிறவர்களாக இருந்தோமென்றால்,மாம்ச இச்சைகளை நிறைவேற்றாது இருப்போம் (கலா 5:16-17)

ஆம் பிரியமானவர்களே இன்று நாம் 
கிறிஸ்துவுக்குள் இருக்கின்றோம்,
கிறிஸ்துவினுடையவர்களாகிய 
நாம்,மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறோம்,(கலா 5:24)
நாம் உலகத்திற்கும் பாவத்திற்குமரித்துவிட்டோம்.
நாம் உலகத்தின் ஆவியை அல்ல,
தேவனிலிருந்து புறப்படுகிற ஆவிவை பெற்றவர்களாக இருக்கிறோம்,(1 கொரி 2:12) கிறிஸ்துவுக்குள் தேவபிள்ளைகளாக இருக்கும்,நம்மால் ஆவிக்கேற்றபடி நடக்கவும்,மாம்ச இச்சைகளை ஜெயிக்கவும் முடியும்.(ரோம 8:14)

III) #கண்களின்இச்சை 

1) நாம் கண்களில் எவைகளை பார்க்கிறோம்,என்பதைப் 
பொறுத்தே நம்முடைய சரீரமானது வெளிச்சமாகவோ அல்லது இருளாகவோ,பரிசுத்தமாகவோ அல்லது பாவமாகவோ  இருக்கின்ற, நிலை தீர்மானிக்கப்படுகின்றது 
என்று இயேசுகிறிஸ்து இங்கே சொல்கின்றார் (மத் 6:22-23)
ஒரு மனிதனின் இச்சையான பார்வை,தேவனுடைய பார்வையில் விபச்சார பாவமாகவே,
கருதப்படுகின்றது (மத் 5:28)

2) நாம் கண்ணினால் இச்சையானவைகளை பார்த்தால், நம்முடைய சரீரம் இச்சையான 
விரும்ப ஆரம்பிக்கும்,பிறகு சரீரம்  இச்சைகளை நிறைவேற்ற ஆரம்பிக்கும்,இச்சையானது கர்ப்பம் தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும் பாவமானது மரணத்தைப் பிறப்பிக்கும் என்று வேதம் தெளிவாக சொல்கிறது 
(யாக் 1:12) எனவே நாம் எதை பார்க்கிறோம்,என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

3) ஆதாம் ஏவாள் ஏதேனை இழந்ததற்கும் உலகத்திலே பாவம் பிரவேசித்ததற்கும் காரணமான காரியங்களில் கண்களின் 
இச்சையும் ஒன்று (ஆதியாகமம் 3:6)
அப்பொழுது ஸ்திரீயானவள், 
அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், 
புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று #கண்டு, அதின் கனியைப் #பறித்து,#புசித்து, தன் #புருஷனுக்கும் #கொடுத்தாள்; அவனும் #புசித்தான்.

4) தாவீது தன் கண்களில் இச்சையினால்,மாற்றான் மனைவியாகிய பத்சேபாளோடு
பாவம் செய்து,அந்தப் பாவத்தை மறைப்பதற்காக,கொலை செய்து 
தேவ கோபத்துக்கு உள்ளானான்,
சாபத்தை பெற்றான்,அவன் குழந்தையும் மரித்தது.(2சாமு 11,12)

ஆம் பிரியமானவர்களே,இன்று 
நாம் கிறிஸ்து இயேசுவுக்குள்,
நியாயப்பிரமணத்திற்கு கீழ்பட்டிராமல் கிருபைக்கு கீழ்பட்டு இருக்கிறோம் கிருபைக்கு கீழ்பட்டு இருக்கிற நம்மை பாவம் மேற்கொள்ளமாட்டது,
(ரோம 6:14) எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ
அவர்கள்,நியாயப்பிரமணத்திற்கு
கீழ்ப்பட்டவர்கள் அல்ல (கலா 5:18)
ஆக தேவனுடைய ஆவினால் நடத்தப்படுகிற,நம்மால் இந்த கண்களின் இச்சையை,
ஆவியானவரின் துணைகொண்டு எளிதாய்,மேற்கொள்ள முடியும்.

IV) #ஜீவனத்தின்பெருமை

1) பிரியமானவர்களே,நாம் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டு
இருக்கின்றோம்,பெருமை பாராட்டுவதற்கு நம்மிடத்தில் 
ஒன்றும் இல்லை,ஏனென்றால் 
கிருபை,விசுவாசம்,இரட்சிப்பு,
இவை மூன்றுமே கர்த்தரிடத்திலிருந்து நமக்கு உண்டானது (1கொரி1 :6)
(ரோம 12:3)(சங்:3:8)

2) நாம் மேன்மை,பாராட்ட வேண்டும் பெருமை பாராட்ட வேண்டும்,
என்றால் கர்த்தரை குறித்தே,நாம் மேன்மை பாராட்ட வேண்டும்.
(2கொரி 10:17) (சங் 20:7-8)அப்:பவுல்
 சொல்லுகிறார்,கலாத்தியர் 6:14....
நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, 
நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.

3) பெருமை உள்ளவர்களுக்கு 
தேவன் எதிர்த்து நிற்கிறார்,தாழ்மை உள்ளவர்களுக்கு அதிகமதிகமாக கிருபையை அளிக்கின்றார் (யாக் 4:6)

4) காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் 
இருந்த பிராதான தூதனான
(எசே 28:14) இருந்தவன்,தனது பெருமையான மேட்டிமையான,
சிந்தனையினால்,கீழே தள்ளப்படு சபிக்கப்பட்ட சாத்தானாக மாறினான்
(ஏசா 14:13-15) நாம் பெருமையுள்ளவர்களாக இருந்தால்,
கர்த்தர் நம்மை வைத்த நிலையிலிருந்து, தள்ளப்பட்டுபோவோம்.
எனவே கர்த்தருக்கு முன்பாக 
நம்மை நாம் தாழ்த்துவோம் அவர் நம்மை உயர்த்துவார் (யாக் 4:10)

5) இயேசு சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவராய் இருந்தார் (மத் 11:29) தேவனுக்கு சமமாக உயர்ந்த நிலையிலிருந்த,
இயேசு தன்னைத் தானே தாழ்த்தினார்,நிறைவான 
இயேசு தன்னைத் தானே வெறுமையாக்கினார்,
ஆண்டவராகிய அவர் அடிமையின்
ரூபமெடுத்தார்,எனவே எல்லாவற்றிற்கும் மேலான 
ஒரு மகா பெரிய நாமத்தை,
பிதாவாகிய தேவன் அவருக்கு தந்தருளி அவரை உயர்த்தினார்,
எனவே இயேசு என்னும் நாமத்திற்கு,
பரலோகத்திலும்பூலோகத்திலும்,
பாதாளத்திலும் இருக்ககூடிய,
யாவருடைய முழங்கால்களும்,
மண்டியிடும் படி,எல்லா நாமத்திற்கும்,மேலான நாமத்தை அவருக்கு தந்தருளினார்,
அவர் பெருமையாய் இராமல் கர்த்தருக்கு முன்பாக தன்னைத்தானேதாழ்த்தினார்,
எனவே அவர்உயர்த்தப்பட்டார்,
இயேசுவில் இருந்த அதே சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது 
(பிலி 2:5-11)

ஆம் என் அன்பு சகோதர சகோதரிகளே பெருமை என்கிற இருளின் சாயலை நாம் களைந்துவிட்டு,தாழ்மை 
என்கிற ஒளியின் சாயலை,நாம் தரித்துக்கொள்வோம்,
நம்முடைய,பெருமை மேன்மை பாராட்டுதல்,அனைத்தும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கல்வாரி சிலுவை குறித்து அல்லாமல் வேறு ஒன்றையும் குறித்து இருக்கக்கூடாது.
நாம் தாழ்மையுள்ளவர்களாக,
இருக்கும் போது,கர்த்தர் நமக்கு அதிகமதிகமாக கிருபைகளை அளிப்பார்,கர்த்தருக்கு முன்பாக நம்மை நாம்,தாழ்த்துவோம், அப்பொழுது,கர்த்தர் நம்மை உயர்த்துவார்.

ஆம்! எனக்கு அன்பார்ந்தவர்களே,
நாம் உலகத்தின் மீது அன்பு கூருவதற்கு,உலகத்தின் ஆவியை உடையவர்கள் அல்ல,நாம் உலகத்தை ஜெயித்த,இயேசு கிறிஸ்துவின் ஆவியை உடையவர்கள், இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவ அன்பு,நம்முடைய இருதயத்தில் ஊற்றப்பட்டு இருக்கின்றது,எனவே நாம் 
இயல்பாகவே தேவனை நேசிக்கின்றவர்களாகவும்,
உலகத்தை,வெறுக்கின்றவர்களாகவும் இருக்கின்றோம்,நாம் இருக்கின்ற நிலையிலேயே,தொடர்ந்து நிலைத்து, இருக்க,பரிசுத்த ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக,
தேவனை விட உலகத்தை அதிகமாக நேசிக்கின்ற விசுவாசிகள்,மனம் திரும்புவதற்கு ஆண்டவர்தாமே 
அருள்புரிவாராக

ஆமென்... அல்லேலூயா...

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்;தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
(1 யோவான் 2:17)

Pr.Marvel jerome 
Calvary living way ministries 
Bangalore-India

For Prayer 
+919141043063

Monday 8 June 2020


விசுவாசித்தேன்,ஆகையால் 
பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.
(2 கொரிந்தியர் 4:13)

கிறிஸ்துவுக்குள் பிரியமான 
என் அன்பு சகோதர
சகோதரிகளே எதிர்மறையான சூழ்நிலைகளை நாம் 
எதிர்த்து நிற்கவும்
பிரச்சனைகளையும்  போராட்டங்களையும் 
உபத்திரங்களையும்,
நாம் மேற்கொண்டு,அதில் 
ஜெயம் எடுக்கவும் நாம் 
தேவனால் அழைக்கப்பட்டு இருக்கின்றோம்,

நாம் பார்க்கின்றதை 
உணர்கின்றதை பேசுகின்ற 
சாதாரண ஆவியை உடையவர்கள் அல்ல,நாம் விசுவாசிக்கின்றதை பேசுகின்ற விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருக்கின்றோம்.
காலேப் யோசுவாவை போல..
மோசேயினால் கானானுக்குள் அனுப்பப்பட்ட 12 வேவுகாரர்களில் 
10 பேர் பார்த்ததை பேசினார்கள்
(எண் 13:31-33)ஆனால் காலேப்பும் யோசுவாவும் மட்டும் தாங்கள் விசுவாசிக்கிறதை பேசினார்கள்
(எண்: 13:27-30)(எண்14:6-9)
அவர்களின் விசுவாசம் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் 
இருந்தது.(யாத் 3:17) அவர்களுக்கு வேறே ஆவி இருந்தது
( எண்:14:24)

தாங்கள் பார்க்கிறதை 
பேசினவர்கள் கானானுக்குள் பிரவேசியாமல் போனார்கள்,
ஆனால் தாங்கள் விசுவாசிக்கிறதை பேசினவர்கள், கானானுக்குள் பிரவேசித்தார்கள் மரணத்தை பேசியவர்கள் மரணித்தார்கள்,
ஜீவனை பேசினவர்கள் 
சாகவில்லை,வாக்குத்தத்தை சுதந்தரித்தார்கள்.

நாம் பேசுகிற வார்த்தைகள் 
மிகவும் முக்கியம் ஏனென்றால்
(நீதி18:21)சொல்கிறது..
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்;அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் 
கனியைப் புசிப்பார்கள் என்று..அதுமட்டுமல்ல 
தேவனுடைய செவிகள் 
கேட்க நம் என்ன சொன்னோமோ அதன்படி,நான் செய்வேன் என்று தேவனே சொல்லியிருக்கிறார்
(எண் 14:28) நமது இருதயம் 
எதனால் நிறைந்து இருக்கின்றதோ அதுவே நம்முடைய வாயின் வார்த்தைகளாக வரும்
(லூக் 6:45) 

ஆம் பிரியமானவர்களே 
இன்று நாம் கடைசி 
காலமாகிய கொடிய 
காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
(2 தீமோ 3:1) கள்ள 
ஊபதேசங்கள் நம்மை 
சுற்றி சூழ்ந்து இருக்கிறது.
ஜனத்துக்கு விரோதமாய் 
ஜனமும்,ராஜ்யத்துக்கு 
விரோதமாய் ராஜ்யமும் எழும்பியிருக்கிறது,
பஞ்சங்களும்,
கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் 
பல இடங்களில் 
உண்டாகிகொண்டிருக்கிறது
(மத் 24:7)இந்த நிலையில் 
இயேசு கிறிஸ்துவின் மீது
நாம் கொண்ட அன்பை விட்டு 
நம்மை பிரிப்பதற்காக 
உபத்திரவம்,வியாகுலம்,
துன்பம்,நாசமோசம்,ஆகிய 
காரியங்கள் நம்மீது மோதி 
தாக்குதல் நடத்துகின்றன.
ஆனால்
இவையெல்லாவற்றிலேயும் 
நாம் நம்மில் அன்புகூருகிறவராலே 
முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய்
இருக்கிறோம் என்று வேதம் சொல்கிறது,(ரோம 8:35-37) 
எனவே நாம் காண்கின்ற,
உணர்கின்ற,அனுபவிக்கின்ற 
மோசமான காரியங்களை 
குறித்து பேசாமல்,இவைகள் எல்லாவற்றிலிமிருந்து
நம்மில் அன்புகூருகிற 
தேவனாலே நாம் முற்றிலும் 
ஜெயம் கொள்கிறவர்களாக,
இருக்கின்றோம்என்று நமது விசுவாசத்தை பேசுவோம்.

எனக்கு விரோதமாக 
உருவாக்கப்படும் எந்த 
ஆயுதமும் வாய்க்காதே
போகும்.(ஏசா 54:17)
ஏனென்றால் நான் 
விசுவாசம் என்னும் 
கேடயத்தை மேலே 
பிடித்திருக்கின்றேன்
எனவே பொல்லாங்கன், 
எனக்கு எதிராக எய்யும் 
ஆயுதங்கள் வாய்க்காதே
போகும்(எபே 6:16) 
ஆம் என் அன்பு சகோதர 
சகோதரிகளே நமது ஆண்டவராகிய  
இயேசு சொல்லி இருக்கின்றார்,
இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள் நான்
உலகத்தை ஜெயித்தேன் 
(யோவா16:33) என்று...
தேவனால் பிறந்த 
நம்முடைய விசுவாசமே 
உலகத்தை ஜெயிக்கிற 
ஜெயம் என்று வேதம் 
சொல்கிறது (1யோவ 5:4) 
எனவே இந்த உலகத்தின் உபத்திரங்களை
நாம் ஜெயிக்கிறதிற்கு,
நமக்கு விசுவாசம் மிகவும் 
அவசியமாக இருக்கின்றது,
விசுவாசம் தேவனுடைய 
வார்த்தைகளை கேட்பதினால் 
வரும் (ரோம10:17) நாம் கேட்கிற 
வார்த்தைகள் நம்முடைய 
காதுகள் வழியாக இருதயத்திற்கு உள்ளே சென்று,அங்கே வாசம் 
செய்ய ஆரம்பிக்கின்றன,
இதனால் நம்முடைய இருதயம் நிறைந்து,தேவனுடைய 
வார்த்தைகள் 
நம்முடைய வாயின் 
வார்த்தைகளாக வர 
ஆரம்பிக்கிறது,இதனால்‌,
நாம் எதிர்மறையான 
சூழ்நிலைகளில் நேர்மறையான வார்த்தைகளை பேச ஆரம்பிக்கிறோம்,இருளான வேளைகளில்,ஒளியை பேச ஆரம்பிக்கின்றோம்,எனவே நமது வாழ்வில் எதிர்மறை காரியங்கள் நேர்மறையாக மாறுகின்றது,
இருள் அகன்று ஒளி பிறக்கின்றது
எனவே நாம் தேவனுடைய வார்த்தைகளை கேட்பதில் 
தீவிரமாக இருக்க வேண்டும்
(யாக் 1:19)ஆம் என்,அன்பு 
சகோதரசகோதரிகளே நமது 
விசுவாச வாழ்க்கை பாதையிலே,
சந்திக்கிற எதிர்மறையான 
சூழ்நிலைகளை நாம் 
இயேசுவின் நாமத்தினால்
எதிர்த்து நிற்போம்,
பிரச்சனைகளையும்  போராட்டங்களையும் 
உபத்திரங்களையும்,
விசுவாசத்தோடும் 
பொறுமையோடும்
சகிப்புத்தன்மையோடும்,
இருந்து,நமக்குள்ளே இருந்து,
நமக்கு பெலன் தரும்,
தேவ ஆவியானவரின் 
உதவியோடு அவைகளை 
நாம் மேற்கொண்டு,
எல்லாவற்றிலும்,
எப்போதும் ஜெயம் 
எடுப்போம்.

ஆமென்... அல்லேலூயா...

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் 
எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

(2 கொரிந்தியர் 2:14)

Pr.Marvel Jerome 
Calvary living way ministries 
Bangalore-south India 

For Any Prayer Request- 
+919141043063

Whatsapp message 

https://api.whatsapp.com/send?phone=919141043063&text=I%20Need%20Tamil%20Good%20News%20In%20My%20Whatsapp

Monday 4 May 2020

மாதிரியாயிரு


உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, 
நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும்,ஆவியிலும்,விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.(1 தீமோத்தேயு 4:12)

கிறிஸ்துவுக்குள் பிரியமான!
என் அன்பு சகோதர,சகோதரிகளே 
மூத்த ஊழியக்காரராகிய அப்:பவுல்
இளம் ஊழியக்காரர் தீமோத்தேயுக்கு இவ்விதமாக அறிவுரை வழங்குகிறார்.........
"உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, 
நீ #வார்த்தையிலும்,#நடக்கையிலும், #அன்பிலும்,ஆவியிலும்,
#விசுவாசத்திலும்,#கற்பிலும்,
விசுவாசிகளுக்கு #மாதிரியாயிரு"
என்று.......இளம் ஊழியர்கள்,
மூத்தவர்களால்,அசட்டை 
பண்ணப்படுகிற நிலை,
ஆதிகால திருச்சபையிலேயே இருந்திருக்கிறது,அவ்வாறு இளம் ஊழியர்கள் அசட்டை பண்ணப்படுவதை அப்:பவுல் விரும்பவில்லை,எனவே இளம் ஊழியர்கள்,விசுவாசிகளுக்கு முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று,யாரும் உங்களை அசட்டை செய்கிற மாதிரி வாழக்கூடாது என்று,
அறிவுறுத்துகிறார்.(1கொரி16:11)
(தீத் 2:15)(தீத்து 2:7)

சாதாரண மாவுடன் கலந்த கொஞ்சம் புளித்த மாவு,எப்படி மொத்த மாவையும்புளிக்க செய்கிறதோ! அதேபோல் நம்முடைய நல்ல குணமோ!அல்லது கெட்ட குணமோ!
அது மற்றவர்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும்.(1 கொரி 5:1-6)ல் புளித்த மாவு ஒரு மோசமான முன் மாதிரிக்கும்,(மத் 13:33)ல் புளித்த 
மாவு,பரலோகராஜ்யத்திற்கும் உதாரணமாக காட்டப்படுகிறது,
நாம் பரலோக ராஜ்யத்தை பரவ செய்கின்ற,புளித்த மாவாக இருக்கவேண்டும்(லூக்13:20-21)
நம்முடைய வாழ்க்கை முறை மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும்,மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் கற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

1) #வார்த்தையிலே முன் #மாதிரியாக இருக்க வேண்டும்.(யாக் 3:1-12)
(மத் 12:36:37)

சத்தியத்தை அறிவிப்பதிலே,
போதிக்கும்,போதனையிலே முன் 
மாதிரி:

A) நம்முடைய வாயிலிருந்து வருகிற
வசனம் எப்பொழுதும் #கிருபை #பொருந்தினதாயும் #உப்பால் #சாரமேறினதாயுமிருக்க வேண்டும்
(கொலோ 4:6)

B) சமயம் வாய்த்தாலும் #வாய்க்காவிட்டாலும் #திருவசனத்தை ஜக்கிரதையாய் #பிரசங்கம் பண்ணகிறவர்களாகவும்
எல்லா #நீடியசாந்தத்தோடும் உபதேசத்தோடும் #கண்டனம்பண்ணி, #கடிந்துகொண்டு #புத்தி சொல்லக் கூடியவர்களாக நாம் இருக்க
வேண்டும்.(2 தீமோ4:2)

C) #சுவிசேஷத்தை நான் பிரசங்கிக்கும் போது,நாம் #மேன்மைப்பாரட்ட கூடாது
ஏனென்றால் அது நம் மேல் விழுந்த #கடமை(1 கொரி 9:16)

D) நாம் போதிக்கிற #போதனை  #தேவனுடையவாக்கியங்களின்படி
இருக்க வேண்டும்(1 பேது4:11)

E) மற்றவர்களின் #மதநம்பிக்கை,
#புண்படுத்த கூடாது,அவர்களின் தெய்வங்களை #தூஷித்து அவர்களை #காயப்படுத்த கூடாது.(அப்:19:37)

F) சத்திய வசனத்தை #நிதானமாய்ப் #பகுத்துப் போதிக்க வேண்டும்
(2 தீமோ 2:15)

விமர்சனங்களை,பிரச்சனைகளை
கையாளும் விதத்தில் முன் மாதிரி:

A) நம்முடைய  நம்பிக்கையைக்குறித்து நம்மிடத்தில்,விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் #சாந்தத்தோடும் #வணக்கத்தோடும் #பதில் சொல்ல வேண்டும்.(1பேது 3:15)

B) கேட்கிறவர்களுக்கு பிரயோஜனம் 
இல்லாத,கெட்டவார்த்தை பேசாமல் 
கேட்கிறவர்களுக்கு #பிரயோஜனமான
மற்றவர்களின் #பக்திவிருத்திக்கு ஏதுவான #நல்லவார்த்தைகளை 
பேச வேண்டும் (எபே 4:29)

C) இயேசுவை போல,நம்முடைய வாயிலே #வஞ்சனை #இல்லாத #வார்த்தைகள் காணப்பட வேண்டும்
(1 பேது 2:22)

D) நமது,பேச்சிலே குற்றம் சாட்டும் படி
நம்மை சோதிக்கும் படி வருகிற சத்துருக்களிடம்,இயேசு எப்படி 
நிதானமாய்,வேதவசனத்திலிருந்து,
எடுத்து சத்தியத்தை பேசினாரோ,
அதேப்போல்,நாமும் பேசி
சத்துருக்களின்‌,சூழ்ச்சிக்கு தம்பிக்க வேண்டும்.(லூக் 20:22-47)(மத் 4:11)

வீண் வார்த்தைகளைப் பேசக்கூடிய 
வாய்,சகோதரர்கள்,மீது குற்றம் சாட்ட 
கூடிய வார்த்தை,குற்றவாளி என்று தீர்ப்பு கொடுக்க கூடிய நாவு,
மற்றவர்களை சபிக்க கூடிய பேச்சு,ஆகிய காரியங்களுக்கு,
நாம் விலகியிருக்க வேண்டும்.

A)தேவனுடைய சாயலின்படி படைக்கப்பட்ட #மனிதர்களை #சபிக்கிற வார்த்தைகளை நாம் #பேசக்கூடாது. (யாக் 3:8-12)

B) அனைவரையும் #ஆசீர்வதிக்கிற #வார்த்தைகளை,நாம் பேச வேண்டும் 
(1பேது 3:9)

C) மற்றவர்களை #குற்றவாளிகள் 
என்று நாம் தீர்க்க #கூடாது.(மத் 7:1-2)

D) சகோதரர்கள்,மீது #குற்றம்சாட்டி கொண்டே இருக்கிற குணம் #பிசாசின் #குணம்,அந்த குணம் நமக்கு இருக்க கூடாது. (வெளி 12:10)

ஆம் பிரியமானவர்களே!
ஒருவரும் நம்மை குற்றம் சாட்டாதபடி
நாம்,நற்கிரியைகளிலும்,
நல்லோழுக்கத்திலும்
நிறைந்தவர்களாய்,#ஆரோக்கியமான 
#வசனத்தைப் #பேசுகிறவர்களாக நாம் இருக்க வேண்டும்.(தீத்2:7-8 )
பொல்லாப்புக்குத் நம்முடைய நாவையும், கபடத்துக்குத் நம்முடைய  உதடுகளையும் விலக்கிக்காத்து நடக்க வேண்டும்.(1 பேது 3:10-11)
இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்,எனவே நம்முடைய இருதயத்தை தேவனுடைய வசனத்தினாலும்,தேவ அன்பினாலும்  நிறைத்து இருக்க வேண்டும் (லூக் 6:45)(ரோம 5:5) அப்பொழுது நம்முடைய பேச்சு,மற்றவர்களுக்கு 
முன் மாதிரியான இருக்கும்.

++++++++++++++++++++++++++++

2) நமது #நடக்கையில் முன் #மாதிரி:
(கொலோ 1:9-14)

A) நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு 
நமக்குள் இருந்த கெட்டுபோகிற 
#பழைய மனிதனின் சுபாவத்தை #களைந்துபோட்டு,கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாக இருக்கிற #புதிய மனிதனின் சுபாவத்தை #தரித்துக் கொண்டு வாழ வேண்டும்.
(எபே 4:22-24)

B) நம்மை அழைத்த தேவன் பரிசுத்தராக இருப்பது போல,நாமும் நம்முடைய நடக்கையில் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்(1 பேது 1:15)(2 பேது 3:11)

C) புறஜாதிகள் முன்பாக தேவனின் மகிமைக்காக,நல்நடத்தை கொண்டவர்களாக நாம்,இருக்க வேண்டும்.(1 பேது 2:12)

D) போதனையே,இன்றி மற்றவர்களை
இரட்சிக்கப்பட வைக்க கூடிய வகையிலேயே நம்முடைய நடக்கை ஒழுக்கமாகவும்,கற்பு உள்ளதாகவும் இருக்க வேண்டும்.(1 பேது 3:1-2)

E) நம் நிமித்தம்,சத்தியமார்க்கம், #தூசிக்கப்பட்டு விடக்கூடாது
எனவே நாம் #நல்நடக்கை கொண்டவர்களாக,இருக்க 
வேண்டும்.(2 பேது 2:2)

F) நாம் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்துகொள்ள வேண்டும் (எபே 4:1)(அப் 26:17-18)
நாம்,பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ள கூடாது.(2 தீமோ 2:4)
நாம் எவ்விதத்திலும் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாக  நடந்துகொள்ள வேண்டும்.(பிலி 1:27)
நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும்,தேவனுக்கு  பிரியமானவர்களாயிருக்க நாட வேண்டும்.(2 கொரி 5:9)

G) காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை,நாம் நோக்கியிருக்க வேண்டும்,
(2 கொரி 4:17)
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாட 
வேண்டும்.(கொலோ 3:2)

H) #கிறிஸ்துவின் நிமித்தம்,வருகிற,
பாடுகளை நாம் #சந்தோஷமாக #ஏற்றுக்கொள்ள வேண்டும்,(1 பேது 4:13-16) அப்.பவுலையும்,சீலாவையும் போல,(அப் 16:22-25)

I) இயேசுவின் சீஷர்களாகிய,நாம் 
கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும்
(யோவா 8:31)(2யோவா 1:9)
சத்திய வசனத்தை நிதானித்து
பகுத்து போதிக்கிற,ஊழியர்களாகவும்,
தேவனுக்கு முன் உத்தமர்களாகவும் இருக்க வேண்டும்.(2 தீமோ 2:15)

++++++++++++++++++++++++++++

3) #அன்பிலே #மாதிரி (யோவா 15:9-13)

A) அன்பு செய்வதிலே இயேசு நமக்கு முன் மாதிரியை,காண்பித்து இருக்கிறார்,அதாவது,மற்றவர்களின் நலனுக்காக தன் #உயிரயே#கொடுக்க கூடிய #அன்பு (யோவா 15:13)

B) அன்பு செய்வது என்பது வேதத்திலேயே பிராதான கட்டளையாக இருக்கிறது,
#தேவனுடைய #கட்டளைகள் எல்லாம் #அன்பிலே #இயங்குகிறது (மத் 22: 36-40)(ரோம 13:10)(காலா 5:14)

C) இயேசு நம்மில்
அன்பாயிருந்ததுபோல 
நாமும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க #இயேசு நமக்கு கட்டளை #கொடுத்திருக்கிறார்.(யோவா 13:34)

D) எப்படி நம்மிலே இருக்கிற,விசுவாசத்தை 
நாம் கிரியையிலே,காட்டுகிறோமோ
(யாக்:2:14) அதே போல் நமக்குள் இருக்கிற தேவ #அன்பை நமது #அன்பின் #கிரியைகளால்,
#வெளிபடுத்தி காட்ட வேண்டும். (1யோவா 3:16-17 4:19-20)

E) நாம் நீதிமானாக இருக்குபோது,அல்ல 
(அதாவது தகுதியோடு இருக்கும் போது அல்ல)நாம் பாவிகளாக இருக்கும் போதே நம்மிடம் அன்புகூர்ந்தார் (ரோம 5:8)
எனவே நாம் யாரிடமும் #தகுதி 
#பார்த்து #நேசிக்க கூடாது.

F) நம்முடைய பரலோகத் தகப்பன்,எப்படி பூரண சற்குணராய் இருக்கிறாரோ,அதே போல நாமும் பூரண சற்குணர்களாக இருக்க வேண்டும்,என்று இயேசு நமக்கு போதித்து இருக்கின்றார் (மத் 5:48) நம்முடைய தகப்பனாகிய தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் போதிக்கின்றது (1யோவா 4:8) அன்பென்பது பூரண சற்குணத்தின் பண்பு,அந்த இறையியல் பண்பாகிய அன்பை,தரித்தவர்களாக இந்த உலகத்திலே, நாம் இருக்க வேண்டும்
(கொலோ 3:14).

G) நம்முடைய தேவன் அன்பாகவே இருக்கிறார் அதனால் நாமும் மற்ற மனிதர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும் (1யோவா 4:8) நம்முடைய தேவன் நல்லோர்,தீயோர் நீதியுள்ளவர்,அநீதியுள்ளவர் என்ற #பாரபட்சமின்றி,அனைவரையும் #நேசிப்பது போல்,(மத் 5:45) நாமும் மற்ற மனிதர்களை #பாரபட்சமின்றி #நேசிக்க வேண்டும்,

++++++++++++++++++++++++++++

4)#ஆவியிலே முன் #மாதிரி:

1) ஆண்டவரோடு கொண்ட ஐக்கியம்:

A) ஆவியானவரோடு #ஐக்கியம் இருக்க #வேண்டும்.(2 கொரி 13:14)

B) ஆவியில் #எளிமை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.(மத் 5:3)

C) ஆவியோடும் உண்மையோடும் தேவனைத் #தொழுது கொள்ள 
வேண்டும் (யோவா4:24)

D) ஆவியினாலே தேவனுக்கு 
#ஆராதனை செய்ய வேண்டும் 
(பிலி 3:3)

E) ஆவியினாலே #ஜெபம் செய்ய 
வேண்டும் (எபே 6:18)

F) ஆவியில் ஜெபம் செய்தபோது 
பரிசுத்த ஆவியினால் #நிரப்பப்பட்டு, #தேவவசனத்தைத் #தைரியமாய் பேசுகிறவர்களாய் நாம் இருக்க 
வேண்டும்.(அப் 4:31)

G) ஆவியோடு #பாடல் பாட வேண்டும்
(1கொரி 14:15)

H) நம்முடைய பரிசுத்த நடக்கையினால் நம்முடைய #சரீரத்தினாலும்  #ஆவியினாலும் தேவனை #மகிமைப்படுத்த வேண்டும்.(1கொரி 6:20)

2) ஆவியில் வைராக்கியம்:

A) அத்தேனே  பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, 
தன் #ஆவியில் மிகுந்த #வைராக்கியமடைந்து,
#சத்தியத்தை #போதித்தார் 
(அப் 17:16)

B) கொரிந்து பட்டணத்தில் பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்.(அப் 18:5)

3) ஆவியில் அனல்: 

A) அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருந்து,ஆவியிலே #அனலாயிருந்தால் தான், கர்த்தருக்கு #ஊழியஞ்செய்ய முடியும் (ரோம 12:11)

B) அப்பொல்லோ ஆவியில் #அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம் பண்ணிக்கொண்டுவந்தான்.(அப்18:25)

C) நாம் ஆவியில் #அனலின்றி #இருந்தால் கர்த்தர்  வாயினின்று நம்மை#வாந்திபண்ணிப்போடுவார் (வெளி 3:16)

4) ஆவியில் பலப்படுதல்:

A) ஆவியினாலே #வல்லமையாய்ப் #பலப்பட வேண்டும்:(அப்:1:8)
(எபே 3:16)

B) தேவன் நமக்கு பலமுள்ள ஆவியை கொடுத்திருக்கிறார்‌.(2தீமோ 1:7)

C) நம்முடைய பேச்சும் பிரசங்கமும் ஆவியினால் பெலப்பட்டிருக்க வேண்டும்.(1கொரி 2:5)

5) ஆவியிலே அன்பு :

A) ஆவியானவரினால் #தேவஅன்பு நமது #இருதயத்திலே #ஊற்றப்பட்டு இருக்கிறது.(ரோமர் 5:5)

B) நமக்கு கொடுக்கப்பட்ட ஆவி  அன்புள்ள ஆவி (2தீமோ 1:7)அன்பு ஆவியின் கனி (காலா 5:22)

C) ஆவியினாலே சத்தியத்திற்கு கீழ்ப்படிந்து ஒருவருக்கொருவர் சுத்த இருதயத்தோடே  ஊக்கமாய் அன்பு கொள்ள வேண்டும்.(1பேது 1:22)

6) ஆவினால் நடத்தப்படுதல்: 

A) ஆவினால் நடத்தப்படுதல்:
(ரோம 8:14) 

B)ஆவினால் போதிக்கப்படுதல் 
(சங் 32:8) (1யோவா 2:27) (ஏசா 30:21)

7) ஆவியில் நிறைந்திருத்தல்: 

A) மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து இருக்க வேண்டும் (எபே 5:18)(அப் 2:13)

B) ஆவியில் நிறைந்து அந்நியபாஷைகள் பேசுதல் (அப்:2:4)

C) ஆவியில் நிறைந்து தரிசனம் காணுதல்(அப் 7:55)

D) ஆவியில் நிறைந்து மற்றவர்களின் சுபாவத்தை கண்டுபிடித்தல்
(அப் 13:9-10)

++++++++++++++++++++++++++++

5) #விசுவாசத்தில் முன் #மாதிரி (எபி 11:1-40)

ஆபேல்,ஏனோக்,நோவா,ஆபிரகாம்,
காலேப்-யோசுவா ஆகிய தேவ மனிதர்கள் விசுவாசத்தில் நமக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்.

விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம் என்று வேதம் சொல்கிறது (எபி 11:6) எனவே நாம் விசுவாசத்தில் மற்றவர்களுக்கு மாதிரியாக,இருக்க வேண்டும்

ஆபேல்,ஏனோக்,நோவா,ஆபிரகாம்,
காலேப்-யோசுவா ஆகிய தேவ மனிதர்கள் விசுவாசத்தில் நமக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்.

ஆபேலின் மேன்மையான பலி 
செலுத்தி நீதிமானென்று சாட்சி பெற்றான்,(எபி:11:4) இயேசு கிறிஸ்து நம்மை நீதிமானாக்க தன்னையே பலியாக,கொடுத்தார்,(1யோவா 2:2)அவர் சிந்திய #இரத்தத்தால் 
நாம் இன்று #நீதிமானாக #ஆக்கப்பட்டிருக்கிறோம்.(ரோம 5:9)
#நீதிமானுக்குரிய முன் #மாதிரி,
வாழ்க்கை #வாழவேண்டும்.
(1கொரி 15:34)

ஏனோக் விசுவாசத்தினாலே,
மரணத்தை காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான் அவன் தேவனுக்கு பிரியமானவன் என்று அவன் சாட்சியும் பெற்றான்
(எபி 11:5) தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ்ந்தால்,நாமும் 
ஒரு நாள் #இரகசிய வருகையிலே,
#எடுத்துக்கெள்ளப்படுவோம்.

நோவா தன்னுடைய காலங்களில் காணாத காரியங்களை,குறித்து தேவன் எச்சரித்த போது,அதை விசுவாசித்தான் பேழை செய்தான்,அவன் விசுவாசத்தினால் உண்டான நீதிக்கு சுதந்திரவாளியானான்.(எபி 11:7)
அதேபோல நாமும்,கிழ்படிந்து
வேதத்திலே தேவன் நமக்கு சொன்ன வரப்போகிற காரியங்களை #எதிர்நோக்கி #காத்திருப்போம்,
#சுதந்தரிப்போம்.

ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து,தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.(எபி 11:8) நாமும் தேவனுடைய வார்த்தைகளை முற்றிலும் #விசுவாசித்து,அவர் #சொல்கிறபடி செய்ய #ஆரம்பிப்போம்.

தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற,
வல்லவராய் இருக்கிறார் என்று விசுவாசித்து,அவன் தன் சரீரம் செத்துப் போனதையும்,தன்னுடைய மனைவியின்,கர்ப்பம் செத்துப் போனதையும் அவன் #எண்ணிப்பார்காமல் இருந்தான்,
ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொண்டான்.
விசுவாசத்தில்,வல்லனானான்
(ரோம 4:19-21) நாமும் அதேபோல் #விசுவாசமுள்ளவர்களாய்,
#இருப்போம்.

கானான் தேசத்தை வேவு பார்க்கச் சென்ற,12 பேரில் 10 பேர் அவிசுவாசத்தை பேசினார்கள் காலேப்பும்,யோசுவாவும் விசுவாசத்தை பேசினார்கள்,
தேசத்தை சுதந்தரித்துக் கொண்டார்கள்.
(எண் 13:27-30)எனவே,நாம் அவிசுவாசத்தை பேசாமல் விசுவாசத்தை பேசுவோம்.#வாய்க்கு #வந்ததெல்லாம் #பேசாமல் அவர் கொடுத்த #வாக்குத்தத்தங்களை #பேசுவோம்.

பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவின் வஸ்திரங்களை ஆவது தொட்டால்
நான் சொஸ்பமாவேன்,என்று விசுவாச அறிக்கை செய்து,இயேசுவை தொட்டு சுகத்தைப் பெற்றுக் கொண்டாள்.
அவளுடை விசுவாசம் அவளை 
இரட்சித்தது.(மாற் 5:24-34)எனவே 
நாமும் விசுவாச #அறிக்கை,செய்து ஆண்டவரை தொடுவோம்,#அற்புதம் பெறுவோம்.

கானானிய ஸ்திரீயின் விடாப்பிடியான விசுவாசம்
 அவளின் மகளுக்கு விடுதலையை பெற்றுத்தந்தது,(மத் 15:22-28) 
எனவே,நாமும் #விடாப்பிடியான விசுவாசம் கொண்டு விடுதலை பெற்றுக் #கொள்வோம்.

நான் பாத்திரன் இல்லை என்று தன்னை தாழ்த்திய விசுவாசித்த நூற்றுக்கதிபதி,இயேசுவின் வார்த்தையின் வல்லமையை,
அறிந்து விசுவாசித்தான்
அவனின் வேலைகாரன் குணமடைந்தான்.(லூக் 7:2-10)
எனவே நாமும் கர்த்தரிடத்தில் 
நம்மை தாழ்த்துவோம்,அவருடைய வார்த்தையின் வல்லமையை விசுவாசிப்போம்.

#சாதகமான சூழ்நிலையில்,மாத்திரம்
அல்ல,#சூழ்நிலைகள் நமக்கு #பாதகமாக இருந்தாலும்,தேவன் மீது வைத்திருக்கிற #விசுவாசத்தை விட்டு நாம் #விடக்கூடாது.
(1சாமு 30:6) (ஆபகூக் 3:17-18) 
(சங் 23:4)

ஆதி கிறிஸ்தவ விசுவாசிகள் அதிக 
வாஞ்சையும் பக்திவைராக்கியமும்,
ஞானமும், கொண்ட முன் மாதிரிகளாக நமக்கு இருக்கிறார்கள்,ஏனெனில் அவர்களின் விசுவாசம்  முழுவதும் கிறிஸ்துவின் உபதேசத்தின் அடிப்படையில் மட்டுமே இயங்கியது.

அவர்களுக்கு போதித்த அப்போஸ்தர்கள் இயேசு கிறிஸ்துவை பற்றிய சுவிசேஷத்தை மட்டுமே(அப்8:5,35,9:20,10:36)
(1கொரி1:23,1:17,2:2,15:1-2)(2கொரி4:5) (ரோம16:25) போதிக்கிறவர்களாக காணப்பட்டனர்.

எனவே நாமும்,கிறிஸ்துவின் உபதேசத்தை விட்டு விலகிப் போகாமல் இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருப்போம் (2யோவா 1:9-11)ஆதி கிறிஸ்தவ விசுவாசிகள் அதிக வாஞ்சையும் பக்திவைராக்கியமும்,ஞானமும், கொண்ட விசுவாச முன் மாதிரிகளாக மற்றவர்களுக்கு இருப்போம்.


++++++++++++++++++++++++++++

6) #கற்பில்(பரிசுத்தத்தில்)முன் #மாதிரி:

நம்மை அழைத்தவர் #பரிசுத்தராய், #இருப்பது போல,நாமும் நம்முடைய நடக்கையில் அனைத்திலும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
கிறிஸ்தவர்களாகிய #நாம்,
பரிசுத்தத்தில் மற்றவர்களுக்கு,
மாதிரியாக #இருக்க வேண்டும்.
(1பேது 1:15)

இதற்காக நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம்,கிறிஸ்து நமக்காக,பாடுபட்டு, தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி நமக்கு மாதிரியைப் பின்வைத்து போயிருக்கிறார்,அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை இல்லை(1பேது 2:21-22) அவர் எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும்,
இல்லாதவராய் இருக்கிறார்.(எபி 4:15) அவரே நமது முன் மாதிரி.

விசுவாசிகளாகிய நாம்,கற்புள்ள கன்னிகையை,போல நம்முடைய மணவாளனாகிய  இயேசு கிறிஸ்துவுக்காக நியமிக்கப்பட்டு இருக்கின்றோம்,சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே 
ஏவாளை வஞ்சித்ததுபோல,
நம்முடைய மனது கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகாதபடி 
இருக்க வேண்டும்,(2 கொரி11:2-3)

கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாவற்றிலும்,பரிசுத்த நடக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.அந்தகார இருளில் இருந்த நம்மை ஆச்சரியமான ஒளியினிடத்திற்கும் உளையான சேற்றில் கிடந்த,நம்மை உயரமான ஸ்தானத்திற்கும்,நம் தேவன் கொண்டு வந்திருக்கின்றார்,
தேவன் இந்த உலகத்திலிருந்து நம்மை பிரித்தெடுத்து தன்னுடைய உன்னதமான திட்டத்திலே,
நோக்கத்திலே ஓட்டத்திலே நம்மை வைத்திருக்கின்றார்,இன்று 
நாம் மறுபடியும் அந்தகார இருளையோ,உளையான சேற்றையோ,உலகத்தையோ திரும்பிப் பார்க்கக்கூடாது,
கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டு பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார் (லூக் 9:62) உலகத்திலே ஒரு பந்தயத்திலே பங்குகொள்கிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சை அடக்கமாய் இருப்பார்கள்‌,அழிவுள்ள ஒரு பரிசை,கிரீடத்தை
பெற்றக்கொள்ள அவர்கள் இச்சையடக்கமாய் இருந்து,வெற்றி பெருகிறார்கள்,ஆனால்,நாமோ அழிவில்லாத ஜீவ கிரீடத்தை (யாக் 1:12)(வெளி 2:10) பெறும்படி அவ்வாறு இச்சையடக்கத்தோடு பரிசுத்தமாய் இருக்கிறோம் (1கொரி 9:25)

நாம் எந்த பாவத்திற்கு உடன்படாமல்
நம்மை சுத்தமாய் காத்துக்கொள்ள வேண்டும்.(1 தீமோ 5:22)

பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு,
நாம் விலகி ஓட வேண்டும்
நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடவேண்டும்
(2 தீமோ 2:22)

நமது ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை 
விட்டு விலக வேண்டும் (1பேது 2:11)

இச்சையானது கர்ப்பந்தரித்து,
பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்,(யாக் 1:14-15) எனவே  இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் இச்சையடக்கம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்,அதுமட்டுமல்ல 
பாவ சோதனையிலிருந்து தப்பிக்க 
இச்சையடக்கம் மிக அவசியம்

விசுவாசிகள் பாவத்தின் வஞ்சனையினாலே,கடினப்பட்டு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது, 
எனவே ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள் வேதம் வலியுறுத்துகிறது.(எபி 3:13) 
தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
என்றும் சொல்லுகிறது(1கொரி 10:12)

இயேசு கிறிஸ்துவினால் நீதிமான்கள் ஆக்கப்பட்ட ஒரு நீதிமான்(ரோம 3:24)
தான் பெற்ற நீதியின் படி பாவஞ்செய்யாமல் விழித்துக்கொண்டு,தெளிவாய் இருக்க வேண்டும் (1 கொரி 15:34)

ஆக கிறிஸ்தவர்களாகிய,நாம் பாவம் செய்யாமல் பரிசுத்தமாய்,
வாழவேண்டும்,பரிசுத்ததில் மற்றவர்களுக்கு,நாம் முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

A) நாம் பரிசுத்தமுள்ளவர்களாக  இருக்கவேண்டும்,என்பதே தேவனுடைய சித்தமாக இருக்கின்றது,எனவே நம்முடைய பரிசுத்தத்திற்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற,பாதிப்பை உண்டாக்குகின்ற எந்த காரியமாக இருந்தாலும் அதற்கு நாம் விலகி 
இருக்க வேண்டும் (1 தெச 4:3)

B) தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் உடுத்துகின்ற உடைகள்,நமக்கு தகுதியானவைகளாகவும் கண்ணியமானவைகளாகவும் இருக்க வேண்டும்,(1 தீமோ 2:9-10)

C)நாம் #உடுத்துகின்ற #உடைகள் எதிர்பால் இனத்தாருக்கு #இச்சையைத் தூண்டக்கூடிய வகையிலோ, அவர்களுக்கு #இடறலை  உண்டாக்கக்கூடிய வகையிலோ,  #இருக்கக்கூடாது (மத் 5:28)(மத் 18:6)

D) தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்,#மதுபானம்,#புகையிலை #போதை பொருட்கள் ஆகியவைகளை உபயோகபடுத்துகிறவர்களாகவும், அதற்கு அடிமைப்பட்டவர்களாகவும் 
நாம் இருக்க கூடாது,களியாட்ட 
வெறி கொண்டு,இழிவான ஆதாயத்திற்க்காக இச்சிக்கிறவர்களாயும் நாம் இருக்க கூடாது,நாம் இச்சை அடக்கத்தோடு  #பரிசுத்தமாய் #வாழ #வேண்டும்.
(எபே 5:18)(1தீமோ 3:8)(தீத் 1:7)
(கலா 5:21)

E) நம்முடைய சரீரம் தேவனுடைய 
பரிசுத்த ஆலயம் ஆக இருக்கின்றது,
இயேசு தன்னுடைய சரீரத்தை பலியாக தந்து,நம்முடைய சரீரத்தை பரிசுத்தமாக்கியிருக்கிறார் (எபி10:10,14) எனவே நம்முடைய சரீரத்தை எக்காரணத்தைக் கொண்டும்,கெடுக்கிற நடவடிக்கைகளில் நாம்,ஈடுபடக்கூடாது,
அது தேவனுக்கு பிரியமில்லாத காரியம்.(1கொரி 3:16-17)

F) தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்#லஞ்சம்,#ஊழல்,#சூதாட்டம்,
கடத்தல்‌,பதுக்கல்,கருப்பு பணம்,கள்ள நோட்டு,
வட்டி,ஆகிய பாவ வழிகளில் பணம் சம்பாதிக்க உடன்பட கூடாது,
அது நமக்கு சாபத்தையும்,
அழிவையும் கொண்டுவரும் 
(எரே 17:11)(எசே 22:13) குறுக்கு வழிகளில் வருகின்ற,
ஐசுவரியம் வேதனையை தரும் 
(1 தீமோ 6:9-10)ஆனால் நேர்மையான வழியிகளில்,கர்த்தருடைய ஆசீர்வாதத்தால் வருகிற ஐசுவரியம் 
வேதனையை தராது (நீதி 10:22)

ஆக தேவனுடைய பிள்ளைகளாகிய நம்முடைய,சிந்தனை,சொல் செயல்பாடு,நடவடிக்கைகள் அனைத்திலும்,பரிசுத்தம் இருக்கவேண்டும்.பரிசுத்தத்திலே நாம் மற்றவர்களுக்கு,மாதிரியாக இருக்க வேண்டும்.

ஆம் பிரியமான! என் அன்பு சகோதர,சகோதரிகளே 
அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுக்கு அறிவுரை கூறினார்,அதாவது.
"உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, 
நீ #வார்த்தையிலும்,#நடக்கையிலும், #அன்பிலும்,#ஆவியிலும்,
#விசுவாசத்திலும்,#கற்பிலும்,
விசுவாசிகளுக்கு #மாதிரியாயிரு"
என்று சொன்னது போல,இன்று கர்த்தருடைய ஆவியானவர்,
நமக்கும் அறிவுரை வழங்குகிறார்.
நாமும் வார்த்தையிலும்,
#நடக்கையிலும்,#அன்பிலும்,
#ஆவியிலும்,#விசுவாசத்திலும்,
#கற்பிலும்,விசுவாசிகளுக்கு முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று.அதற்கு ஆவியானவர் தாமே,நம்மோடு கூடவே இருந்து,நம்மை முன்மாதிரியான வாழ்க்கை வாழ வைப்பாராக.

ஆமென்... அல்லேலூயா...

Pr.Marvel jerome 
Calvary living way ministries 
Bangalore-south India

We hope that you are blessed 
by our ministry.


Saturday 25 April 2020

இச்சையடக்கம்


#இச்சையடக்கம் #சுயகட்டுப்பாடு

கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
(கலாத்தியர் 5:24)

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமானவர்களே! கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாவற்றிலும்,சுயக்கட்டுப்பாடு (அதாவது) இச்சையடக்கம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.
அந்தகார இருளில் இருந்த நம்மை ஆச்சரியமான ஒளியினிடத்திற்கும் உளையான சேற்றில் கிடந்த,நம்மை உயரமான ஸ்தானத்திற்கு,நம்
தேவன் கொண்டு வந்திருக்கின்றார்,
தேவன் இந்த உலகத்திலிருந்து நம்மை பிரித்தெடுத்து தன்னுடைய உன்னதமான திட்டத்திலே,நோக்கத்திலே ஓட்டத்திலே நம்மை வைத்திருக்கின்றார்,இன்று
நாம் மறுபடியும் அந்தகார இருளையோ,உளையான சேற்றையோ,உலகத்தையோ
திரும்பிப்பார்க்கக்கூடாது,
கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டு பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார் (லூக் 9:62) உலகத்திலே ஒரு பந்தயத்திலே பங்குகொள்கிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சை அடக்கமாய் இருப்பார்கள்‌,அழிவுள்ள ஒரு பரிசை,கிரீடத்தை பெற்றக்கொள்ள அவர்கள் இச்சையடக்கமாய் இருந்து,வெற்றி பெருகிறார்கள்,
ஆனால்,நாமோ அழிவில்லாத ஜீவ கிரீடத்தை (யாக் 1:12)(வெளி 2:10) பெறும்படி அவ்வாறு இருக்கிறோம்
(1கொரி 9:25)

1) இச்சையடக்கம் என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஒரு அங்கம்.

தேசாதிபதியாகிய பேலிக்ஸ்,அப். பவுலிடம் கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தை குறித்து கேட்கும் போது பவுல் நீதியையும், இச்சையடக்கத்தையும்,இனிவரும் நியாயத்தீர்ப்பையும் குறித்து 
பேசினார். (அப் 24:24-25)

2) இச்சையடக்கம் என்பது இயேசுவின் ஊழியக்காரனுடைய,
நீதிமானுடைய பரிசுத்தவானுடைய 
குணம் (தீத்து1:5-8)

3) இச்சையடக்கம் என்பது ஆவியின்
கனியில் ஒன்று (கலா 5:22-23)
மரமானது நிலத்தோடு இணைந்து ஐக்கியத்தில் இருக்கும் பொழுது
அது தானாகவே கனி கொடுக்க, ஆரம்பிக்கின்றது,அதேபோல,
நாம் தேவனுடைய வார்த்தையில்
தியானமாய்,இருந்து
ஆவியானவரோடு,ஐக்கியத்தில்  இணைந்து இருக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் ஆவியின் கனி வெளிப்பட ஆரம்பிக்கிறது(சங் 1:2-3)(2கொரி 13:14)

4) இச்சை என்பது தேவனால் உண்டானது அல்ல,அது உலகத்தில் உண்டானது (1 யோவா 2:16)

5) இச்சையடக்கம் என்பது தேவனுடைய சித்தம்,அவர் சித்தம் செய்கிறவன்,என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.(1 யோவா 2:17)

6) இச்சை என்பது அஞ்ஞானிகளின்
குணம்,கிறிஸ்துவுக்கள் ஞானிகளாகிய நாம் இச்சையடக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும்,(1தெச 4:4)(1கொரி 1:31)(2 பேது1:6)

7) நாம் தேவபக்தி உள்ளவர்களாய்
இந்த உலகத்தில் வாழ்வதற்கும்,
நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும்,மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலில் பங்கு கொள்வதற்கு நாம் இச்சையடக்கமுள்ளவர்காக
இருக்க வேண்டும் (தீத்து 2:11-13)

கிறிஸ்தவர்களாகிய,நாம் பாவம் செய்யாமல் பரிசுத்தமாய், வாழ்வதற்கு இச்சையடக்கம் மிகவும்,அவசியம் என்று வேதம் போதிக்கின்றது

A) நாம் எந்த பாவத்திற்கு உடன்படாமல் நம்மை சுத்தமாய் காத்துக்கொள்ள வேண்டும்.(1 தீமோ 5:22)

B) பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு,
நாம் விலகி ஓட வேண்டும்,
நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடவேண்டும்( 2 தீமோ 2:22)

C) நமது ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலக வேண்டும் (1பேது 2:11)

ஏன் இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் இச்சையடக்கம் கொண்டவர்களாக
இருக்க வேண்டும்?

ஏனென்றால் இச்சையானது கர்ப்பந்தரித்து,பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது, மரணத்தைப் பிறப்பிக்கும்,(யாக் 1:14-15) எனவே  இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் இச்சையடக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்,அதுமட்டுமல்ல
பாவ சோதனையிலிருந்து தப்பிக்க
இச்சையடக்கம் மிக அவசியம்.

இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் பாவம் செய்ய வாய்ப்புகள் உள்ளதா?

விசுவாசிகள் பாவத்தின் வஞ்சனையினாலே,கடினப்பட்டு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது,
எனவே ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள் வேதம் வலியுறுத்துகிறது.(எபி 3:13)
தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
என்றும் சொல்லுகிறது(1கொரி 10:12)

நீதிமான்கள் எப்படி இருக்க வேண்டும்?

இயேசு கிறிஸ்துவினால் நீதிமான்கள் ஆக்கப்பட்ட ஒரு நீதிமான்(ரோம 3:24)
தான் பெற்ற நீதியின் படி பாவஞ்செய்யாமல் விழித்துக்கொண்டு,தெளிவாய் இருக்க வேண்டும் (1 கொரி 15:34)

ஆக கிறிஸ்தவர்களாகிய,நாம் பாவம் செய்யாமல் பரிசுத்தமாய்,வாழ்வதற்கு இச்சையடக்கம் (அதாவது)சுய கட்டுப்பாடு மிகவும்,அவசியம் என்று வேதம் போதிக்கின்றது.

நாம் எந்தெந்த விஷயங்களில் இச்சையடக்கம் (சுய கட்டுப்பாடுடன்) இருக்க வேண்டும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது?

1) நம்முடைய சுபாவத்தினே சுய கட்டுப்பாடு,மிகவும் அவசியம்,

A) நாம் கோபம் கொண்டு பாவம் செய்யாமல் இருக்க,(எபே4:26)(நீதி 19:19)(நீதி12:16)நீதி 29:11)

B) சடாரென கோபம் கொள்ளாமல்,கோபத்திற்கு தாமதிக்கும் அடக்க சுபாவம்  கொண்டவர்களாக,
இருக்க (யாக் 1:19) சுய கட்டுப்பாடு நமக்கு மிகவும் அவசியம்
2)நாம் பேசக்கூடிய வார்த்தையிலே
கட்டுப்பாடு (அதாவது)அடக்கம்,மிக அவசியம்.

A) மரணமும்,ஜீவனும் நம்முடைய நாவின் அதிகாரத்தில் இருக்கிறது,
(நீதி 18:21)

B) வார்த்தைகளை அடக்குகிறவன் அறிவாளி என்றும்,தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான்
என்றும்,வேதம் கூறுகிறது
(நீதி 17:27-28)(நீதி:29:20)

C) பெருமையானவைகளை பேசும் நாவு,நமது முழுசரீரத்தை கறைப்படுத்து வாழ்நாளை அழித்துவிடும் (யாக் 3:4-6)

D) யாருக்கும் பிரயோஜனம் இல்லாத
கெட்ட வார்த்தைகளை,நாம் பேசாமல்,
சுய கட்டுப்பாடுடன் இருந்து கேட்கிற அனைவருக்கும் பிரயோஜனமான பக்தி விருத்தியை  உண்டாக கூடிய நல்ல வார்த்தைகளை நாம் பேசவேண்டும் (எபே 4:29)

3) நாம் பரிசுத்தமாய் வாழ சுய கட்டுப்பாடு (இச்சையடக்கம்) அவசியம்.

A) நாம் பரிசுத்தமுள்ளவர்களாக  இருக்கவேண்டும்,என்பதே தேவனுடைய சித்தமாக இருக்கின்றது,எனவே நம்முடைய பரிசுத்தத்திற்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற,பாதிப்பை உண்டாக்குகின்ற எந்த காரியமாக இருந்தாலும் அதற்கு நாம் விலகி
இருக்க வேண்டும் (1 தெச 4:3)

B) தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் உடுத்துகின்ற உடைகள்,நமக்கு தகுதியானவைகளாகவும் கண்ணியமானவைகளாகவும் இருக்க வேண்டும்,(1 தீமோ 2:9-10)

C) நாம் உடுத்துகின்ற உடைகள் எதிர்பால் இனத்தாருக்கு இச்சையைத் தூண்டக்கூடிய வகையிலோ, அவர்களுக்கு இடறலை  உண்டாக்கக்கூடிய வகையிலோ,  இருக்கக்கூடாது (மத் 5:28)(மத் 18:6)

D) தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்,மதுபானம்,புகையிலை போதை பொருட்கள் ஆகியவைகளை உபயோகபடுத்துகிறவர்களாகவும், அதற்கு அடிமைப்பட்டவர்களாகவும்
நாம் இருக்க கூடாது,களியாட்ட வெறி கொண்டு,இழிவான ஆதாயத்திற்க்காக இச்சிக்கிறவர்களாயும்,நாம் இருக்க கூடாது,நாம் இச்சை அடக்கத்தோடு  பரிசுத்தமாய் வாழ வேண்டும்.
(எபே 5:18)(1தீமோ 3:8)(தீத் 1:7)
(கலா 5:21)

E) நம்முடைய சரீரம் தேவனுடைய
பரிசுத்த ஆலயம் ஆக இருக்கின்றது,
இயேசு தன்னுடைய சரீரத்தை பலியாக தந்து,நம்முடைய சரீரத்தை பரிசுத்தமாக்கியிருக்கிறார் (எபி10:10,14) எனவே நம்முடைய சரீரத்தை எக்காரணத்தைக் கொண்டும்,கெடுக்கிற நடவடிக்கைகளில் நாம், ஈடுபடக்கூடாது,
அது தேவனுக்கு பிரியமில்லாத காரியம்.(1கொரி 3:16-17)

F) தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்
பண ஆசை இல்லாதவர்களாகவும்,
பணத்தின் மீது இச்சை, கொண்டவர்களாகவும் இருக்க கூடாது
லஞ்சம்,ஊழல்,சூதாட்டம்,கடத்தல்‌,
பதுக்கல்,கருப்பு பணம்,கள்ள நோட்டு,
வட்டி,ஆகிய பாவ வழிகளில் பணம் சம்பாதிக்க உடன்பட கூடாது,
அது நமக்கு சாபத்தையும்,அழிவையும்
கொண்டுவரும் (எரே 17:11)(எசே 22:13) குறுக்கு வழிகளில் வருகின்ற,
ஐசுவரியம் வேதனையை தரும்
(1 தீமோ 6:9-10)ஆனால் நேர்மையான வழியிகளில்,கர்த்தருடைய ஆசீர்வாதத்தால் வருகிற ஐசுவரியம்
வேதனையை தராது (நீதி 10:22)

ஆமென்... அல்லேலூயா...



Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-south India

We hope that you are blessed
by our ministry.

Thursday 23 April 2020

மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்



மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்;
கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். (1 சாமுவேல் 16:7)

கிறிஸ்துவுக்குள் புதுபடைப்புக்களே!
தாவீது மேய்ப்பனாக இருந்த போது,
இவன்,கோலியாதை வீழ்த்தி இஸ்ரவேலின் சேனைக்கு வெற்றி கொடுக்கப்போகிறவன்
இவன் இஸ்ரவவேலின் ராஜாவாக ஆக போகிறவன் என்று அனேகருக்கு தெரியாது, தாவீதை எல்லோரையும் போல ஒரு சாதாரண வாலிபனாக,ஆடுகளை
மேய்பவனாக,தன் சகோதரர்களுக்கு,
உணவு கொண்டு செல்கிறவனாக,
மனிதர்கள் பார்த்தார்கள்,ஆனால் தேவன் அவ்விதம் அவனை பார்க்கவில்லை,
தேவன் தாவீதை ஆடுகள் மேய்த்துக்கொண்டு இருந்த அரசனாக பார்த்தார்,ஒரு அபிஷேகம் பண்ணப்பட்ட வாலிப ராஜாவாக பார்த்தார்,
அதுமட்டுமல்ல தாவீதின் சந்ததியில் இயேசுவை பார்த்தார்,இயேசுவை தாவீதின் குமாரனாக பார்த்தார்.

மோசே எகிப்தியனை கொலை செய்த
பிறகு,பார்வோனின் கைக்கு தப்ப மீதியான் தேசத்தில் அடைக்கலம் புகுந்தான்,
திருமணம் புரிந்தான்,குமாரனைப்
பெற்றான் அங்கே அவன் தன்னை ஆடு மேய்த்துக்கொண்டு இருக்கிற ஒரு பரதேசியாக பார்த்தான்,(யாத்2:22)
தனது எதிர்காலம் இவ்வளவு தான் என்று பார்த்தான்,அவனுடைய மனைவியும்,
மாமனாரும் அவ்விதமாக தான் அவனை பார்த்திருப்பார்கள்,ஆனால் தேவன் மோசேயை அவ்விதமாக பார்க்கவில்லை,
அவனுக்கு முன்பாக செங்கடல் இரண்டாக பிரித்து போவதை பார்த்தார்,
எகிப்திய சேனையை கடலில் போட்டு முறியடிக்கிறவனாக பார்த்தார்.
அவனை இஸ்ரவேல் மக்களின் இரட்சகனாக பார்த்தார்.

கிதியோன் தன்னை சிறியவனாகவும்,
பலவீனமானவனாக பார்த்தான்,
ஆனால் கர்த்தர் அவனை பராக்கிரமசாலியாக பார்த்தார்
(நியா 6:12,15) தாவீதை மனிதர்கள்
ஒரு சாதாரண வாலிபனாக பார்த்தார்கள்,ஆனால் தாவீதை தேவன் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு ராஜாவாக பார்த்தார்,(1சாமு16:10-13)மோசேவை மனிதர்கள் கொலைகாரனாக, ஆடு மேய்க்கிற மேய்பவனாக பார்த்தார்கள்,
அவன் தன்னை பரதேசியாக பார்த்தான்,
ஆனால் தேவன் அவனை இஸ்ரவேலின் இரட்சகனாக பார்த்தார்.(யாத்2,3)
பேதுருவை மனிதர்கள் மீன் பிடிக்கிற மீனவனாக பார்த்தார்கள்,ஆனால் தேவன் பேதுருவை மனிதர்களை பிடிக்கிறவனாக பார்த்தார், பவுலை மனிதர்கள் பிரதான ஆசாரியரிடம்,நிருபங்களை வாங்கி கொண்டு சபையை துன்புறுத்துகிறவனாக பார்த்தார்கள்,ஆனால் தேவன் பவுலை,
சபைகளை கட்டி எழுப்பி,சபைகளுக்கு நிருபங்களை எழுதுகிற அப்போஸ்தலனாக பார்த்தார்.

தேவன் மனிதன் பார்க்கிறபடி பார்க்கிறவர் இல்லை,அவரோட பார்வையே வேற,மனிதர்கள் நமது கடந்த காலத்தை,நிகழ்காலத்தை பார்ப்பார்கள் அதை வைத்து நம்மை கணிப்பார்கள்,
பார்ப்பார்கள்,முடிவுகளை எடுப்பார்கள்,
ஆனால் தேவன் நமது எதிர்காலத்தை பார்த்து,முடிவெடுப்பார்,நம்மை நடத்துவார்.
உயர்த்துவார்,மேன்மைப்படுத்துவார்.
எனவே சகோதர சகோதரிகளே மற்றவர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள்,என்பதை பற்றி கவலைப்படாதிருங்கள்,மற்றவர்கள் உங்களை பார்ப்பதோ,அல்லது நீங்கள் உங்களை பார்ப்பதோ முக்கியம் அல்ல தேவன் உங்களை எப்படி பார்க்கிறார் என்பதே முக்கியம்,எனவே எதைக்குறித்தும் கலங்க வேண்டாம். கிறிஸ்துவுக்குள் இருக்கும் உங்களை தேவன் தன் சொந்த பிள்ளையாக பார்க்கிறார்,பரிசுத்த ஜாதியாக பார்க்கிறார்,நீதிமானாக பார்க்கிறார்,புதுசிருஷ்டியாக பார்க்கிறார்,ராஜாவாக பார்க்கிறார்,
ஆசாரியராக பார்க்கிறார்,
ஒளியின் பிள்ளைகளாக பார்க்கிறார்,
எனவே எதைக்குறித்தும் கலங்க வேண்டாம்,உங்களுக்காக தேவன்,
பெரிய ஒளி மயமான திட்டத்தை வைத்திருக்கிறார்,அதை அவரே நிறைவேற்றுவார்.

ஆமென்... அல்லேலூயா...

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
(ஏசாயா 55:8-9)



Tuesday 21 April 2020

தேவனிடத்தில் அன்புகூருவது என்றால் என்ன? பிறரிடத்தில் நாம் அன்பு செய்வது குறித்து,தேவன் நமக்கு எவ்விதமாக கட்டளையிட்டு இருக்கின்றார்?

தேவனிடத்தில் அன்புகூருவது என்றால் என்ன?

பிறரிடத்தில் நாம் அன்பு செய்வது குறித்து,தேவன் நமக்கு எவ்விதமாக கட்டளையிட்டு இருக்கின்றார்?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
நம்முடைய பரலோகத் தகப்பன்,எப்படி பூரண சற்குணராய் இருக்கிறாரோ,
அதே போல நாமும் பூரண சற்குணர்களாக இருக்க வேண்டும்,என்று இயேசு நமக்கு போதித்து இருக்கின்றார் (மத் 5:48) நம்முடைய தகப்பனாகிய தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் போதிக்கின்றது (1யோவா 4:8) அன்பென்பது பூரண சற்குணத்தின் பண்பு,அந்த இறையியல் பண்பாகிய அன்பை,தரித்தவர்களாக இந்த உலகத்திலே,நாம் இருக்க வேண்டும்
(கொலோ 3:14).எப்படி ஒரு ஆடையோடு உடலை இணைத்து கட்ட பெல்ட் என்னும் கச்சை பயன்படுத்தப்படுகிறதோ
அதே போல தேவனின் பூரண சற்குணம் என்னும் தெய்வீகப் பண்போடு,நம்மை இணைத்து கட்டக்கூடிய கட்டுதான் அன்பு.
நம்முடைய தேவன் அன்பாகவே இருக்கிறார் அதனால் நாமும் மற்ற மனிதர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும் (1யோவா 4:8) நம்முடைய தேவன் நல்லோர்,தீயோர் நீதியுள்ளவர்,
அநீதியுள்ளவர் என்ற பாரபட்சமின்றி,
அனைவரையும் நேசிப்பது போல்,(மத் 5:45) நாமும் மற்ற மனிதர்களை பாரபட்சமின்றி நேசிக்க வேண்டும்,என்று வேதம் போதிக்கின்றது

தேவன் மனிதனுக்கு கொடுத்த கட்டளைகள் எல்லாம் அன்பிற்குள்ளே அடங்கி இருக்கின்றது (மத் 22:36-40)

அன்பு என்பது இயேசுவின் சீஷர்களின் சிறப்பியல்பு,நாம் இயேசுவின் சீஷர்கள் என்பதை மற்றவர்களிடம் நாம் செலுத்துகிற  அன்பே வெளிப்படுத்தி காட்டுகிறது (யோவா 13:34-35)

மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டியது என்பது,நாம் செலுத்த வேண்டிய #கடன் அதாவது தேவனிடத்தில்,
நாம் பெற்றுக்கொண்ட, அன்பின் கடனை,மற்ற மனிதர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும் (ரோம 13:8)

நாம் மிகப்பெரிய வல்லமையுடைய,
வரங்கள் பெற்ற மனிதராக இருந்தாலும்,
மலையை பேர்க்கத்தக்க விசுவாச வீரனாக இருந்தாலும்,தானதர்மங்கள் செய்கின்ற,
தாராள பிரபுவாக இருந்தாலும்,நம்முடைய உடலயே சுட்டு எரிக்க கொடுக்கின்ற தியாகியாக இருந்தாலும்,நம்மிடத்தில் அன்பு,என்கிற பண்பு இல்லையேல்,
அதனால் நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை (1 கொரி 13:1-3)

#தேவனிடத்தில் #அன்புகூருவது என்றால் #என்ன?

தேவனிடத்தில் அன்பு கூருவது,என்பது அவருடைய கட்டளைகளைக் கடைபிடித்து வாழுதல்,அவருடைய வார்த்தையின் வழியில்,நமது வாழ்க்கையை,அமைத்துக்
கொள்ளுங்கள் என்பதே ஆகும்.என்ஜின்
இல்லாமல் எப்படி பைக்கை ஓட்ட முடியாதோ! பேட்டரி இல்லாமல் எப்படி மொபைல் போனை யூஸ் பண்ண முடியாதோ! அதேபோல தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் நாம் அவரிடத்தில், அன்பு கூற முடியாது.
(யோவா 14:23)(1யோவா 5:3) (2யோவா 1:5)
கிறிஸ்துவின் உபதேச சட்டத்திற்கு நாம் மனபூர்வமாய் கீழ்ப்படிந்ததினாலே இன்று நாம் இரட்சிக்கப்பட்டு இருக்கின்றோம் (ரோம 6:17-18 )நாம் உண்மையாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களாக இருந்தால் அவருடைய கற்பனைகளை நிச்சயமாக நாம் கடைபிடிப்போம்,

#பிறரிடத்தில் நாம் #அன்பு செய்வது குறித்து,தேவன் நமக்கு #எவ்விதமாக #கட்டளையிட்டு #இருக்கின்றார்?

1)உங்கள் எதிரிகளை,நேசியுங்கள் அவர்களுக்கு,நன்மை செய்யுங்கள் உங்கள் பரமபிதா,இரக்கம் உள்ளவராக இருப்பது போல,நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.(லூக் 6:35-36)

2)உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்,உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும்,
உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.(மத் 5:44)

3)உங்கள் எதிரி,பசியாய் இருந்தால் அவனுக்கு உணவு கொடுங்கள்,
உங்கள் எதிரி தாகமாய் இருந்தால் அவனுக்கு தண்ணீர் கொடுங்கள்.(ரோம 12:20)

4)மற்றவர்களுக்காக உயிரையே கொடுக்கிற அளவுக்கு,மேலான அன்பு கொண்டவர்களாக, இயேசு கிறிஸ்துவைப்போல தியாக உள்ளம் கொண்டவர்களாக,நாம் இருக்க வேண்டும்.(யோவா 15:13)(1யோவா 3:15-16)

5)மற்ற மனிதர்கள்,உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ (அதாவது) மற்றவர்களிடத்தில், நீங்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை நீங்கள் அவர்களுக்கு செய்யுங்கள்.(லூக் 6:31)

6)ஒருவன் தேவனிடத்தில் அன்புகூருகிறவனாக,இருந்தால்,தன் சகோதரனிடத்திலும் அவன் அன்பு கூறுகிறவனாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அவன் பெய்யன்
(1யோவா 4:20)

7)நாம் வழி விலகிப் போகும் போது,
நம் மீது அன்பாய் இருக்கிற,கர்த்தர் நம்மை கடிந்து கொண்டு,கண்டித்து சிட்சித்து,நல்வழிப்படுத்தி நடத்துகிறாரோ,
அதே போல,(எபி 12:6)நாமும்,சத்திய வசனத்திற்குகீழ்ப்படியாமல்,
போகிறவர்களை,சத்துருக்களாக எண்ணாமல் சகோதரர்களாக,எண்ணி அவர்களுக்கு,புத்தி சொல்ல வேண்டும்.
(2 தெச 3:14-15 )(நீதி:13:24)

8)சகோதரர்களுக்கு,ஆறுதல் கூறி அவர்களை,மன்னித்து அன்பை காட்ட வேண்டும்.(2 கொரி 2:6-7)

9)தேவ அன்பில் நிலைத்திருக்கிற ஒருவன்,தன் சகோதரன் வறுமையிலே,
குறைச்சலிலே,இருக்கும் பொழுது,
அவனுக்கு கொடுத்து உதவி செய்ய வேண்டும்,வெறும் வசனத்திலும் வார்த்தையினாலும்அல்ல,
கிரியையினாலும்,உண்மையினாலும்,
அவனிடத்தில் அன்பை வெளிப்படுத்தி காட்டி அவனுக்கு உதவி செய்ய வேண்டும்.(1யோவா 3:17-18)

10)நாம் அன்பிலே ஏவப்பட்டு மற்றவர்களுக்கு சுவிசேஷம் என்கிற சத்தியத்தை பிரசங்கிக்க வேண்டும்
(பிலி 1:17) ஏனென்றால்,அன்பானது சத்தியத்தில் சந்தோஷப்படும்(1கொரி 13:6) சிலர் இரட்சிக்கப்படும்படியாக,அவர்கள் நிலைக்கு,நாம் இறங்கி போய்யாவது,
அவர்களை கிறிஸ்துவுக்கு
ஆதாயப்படுத்திக் கொள்ள பிரயாசப்பட வேண்டும் (1 கொரி 9:22)

11)நாம் சுயநலவாதிகளாய்,
நமக்குரியவைகளையே,நாம் நோக்கி கொண்டிருக்காமல்(அதாவது நம்முடைய தேவை,வளர்ச்சி...)நாம் பிறர் நலவாதிகளாய், மற்றவர்களுக்குரியவைகளை  நோக்கிக்கொண்டு இருக்க வேண்டும்
(பிலி 2:1,4)

12)கிறிஸ்து சபையை அன்பு கூருவது போல,கணவன் தன் மனைவியை தன்னுடைய சொந்த,சரீரமாக பாவித்து அன்பு கூற வேண்டும்.கணவனானவன்
தன்னை அன்புகூருவது போல,தன் மனைவியினிடத்திலும் அன்புகூர வேண்டும்.(எபே 5:25,28,33)

13)மனைவி கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல,தன் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் எப்படி சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதோ அதேபோல் மனைவியும் தன் கணவனுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.(எபேசியர் 5:22,24)(தீத்து 2:5)

14)கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாக இருக்கிற,நாம் அன்பிலே ஒருவரையொருவர் தாங்கி,ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து நமக்கு மன்னித்ததுபோல,
ஒருவருக்கொருவர் நாமும் மன்னிக்க வேண்டும்.(கொலோ 3:10,13) (எபே 4:2)

15)நாம்,சாப்பிடுகிற உணவு ஒரு சகோதரனுடைய விசுவாச வாழ்க்கையை கெடுப்பதாகவோ, அல்லது அவனுக்கு விசனத்தை உண்டாக்க கூடியதாகவோ இருக்கக்கூடாது,அது அவனுக்கு இடறலுண்டாக்க கூடாது,அவ்வாறு இருந்தால்,அவன் மீது கொண்ட அன்பின் காரணமாக அப்படிப்பட்ட உணவுகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் (1 கொரி 8: 9-13)( ரோமர் 14:15)

16)நீங்கள் செய்யக்கூடிய எந்த காரியமாக இருந்தாலும் அதை அன்பிலே செய்யுங்கள்
(1 கொரி16:14)

17)கிறிஸ்து இயேசுவுக்குள் உள்ள அனைவரையும் அன்பென்னும் முத்தத்தோடு வாழ்த்துங்கள்( 1 பேது5:14)

18)பரிசுத்தவான்களுக்கு உதவி செய்தல்,ஊழியம் செய்தல்,
அவர்களுக்கு கொடுத்து உதவுதல்,
குறைச்சலை நீக்குதல் ஆகியவை,
தேவன் மீது நாம் வைத்திருக்கிற
அன்புள்ள பிரயாசம்,அதை தேவன் மறக்க மாட்டார்.(ரோம 12:13)(எபி 6:10)

பிரியமானவர்களே!
நியாயத்தீர்ப்பு நாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக
அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது;
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும் ஏனென்றால், அவர் இருக்கிற பிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம் என்று வேதம் சொல்கிறது (1 யோவா 4:17-18)அவர் எவ்வாறு இருக்கிறார்? என்கிற கேள்விக்கு பதில்,அவர் அன்பாகவே இருக்கிறார்,(1யோவா 4:8)அந்த தேவ அன்பு நமது இருதயத்தில் ஊற்றப்பட்டு இருக்கிறது (ரோம5:5) நம்மில் ஊற்றப்பட்ட தேவ அன்பை தேவ ஆவியானவரின் துணை கொண்டு,செயல்படுத்துவோம்,
பாரபட்சமின்றி அனைவரையும்,அன்பு செய்வோம்,மன்னிப்போம், இரக்கம் காட்டுவோம்,ஆதரிப்போம்,
அரவணைப்போம்,இயேசுவுக்கு
சாட்சியாக வாழுவோம்.

ஆமென்... அல்லேலூயா...

ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;(1 பேதுரு 1:22)

இப்பொழுது விசுவாசம்,நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

(1 கொரிந்தியர் 13:13)
******************************
போதகர்:மார்வெல் ஜெரோம்
கல்வாரி ஜீவவழி ஊழியங்கள்
பொங்களூர்-இந்தியா


Monday 20 April 2020

பொறாமை படாதே! பாவத்தில் விழாதே!



பொறாமை படாதே !

"பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல்,பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்".
(ரோமர் 13:13)

ஜான் : பொறாமை என்பது ஒரு இருளின் சக்தி அது மனிதர்களை பல பிரச்சனைகளுக்குள்ளும்,
பாவத்திற்குள்ளும் நடத்துகிறது.
பொறாமையில் நடக்கிறவர்கள் இருளில் நடக்கிறார்கள்...

பீட்டர் : ஆமா ஆனால் நாம்  அவ்விதமாக இருக்கக்கூடாது.
பொறாமை எவ்விதம் கொடுமையான காரியங்களை உண்டாக்க துணிகிறது என்பதை நாம்,வேதத்தில் பல இடங்களில் பார்க்கிறோமே....

ஜான்: பொறாமைப் படுகிறவர்கள்,அதினால் பாதிக்கப்படாமல் இருப்பதில்லை. அதாவது அவர்கள் யார் மேல் பொறாமை கொள்ளுகிறார்களோ,  அவர்கள் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ ஆனால் பொறாமை படுகிறவர்கள் பயங்கரமாக பாதிக்கப்படுகிறார்கள்,பாவத்தில் விழுகிறார்கள்.

பீட்டர்: ஆமா ஜான்,நீ சொல்றது 100% சரி,பொறாமை படுகிறவர்களின் இருதயம் பொறாமையால் பாதிக்கப்படுகிறது. அவர்களின் இருதயம் கடினப்படுகிறது.
அது மாத்திரமல்ல தொடர்  பொறாமையானது எரிச்சலை ஏற்படுத்தி,இன்னும் அதிகமான பாவத்திற்குள் அவர்களை வழிநடத்திச் செல்லும்.அவர்கள் தேவனை  துக்கப்படுத்துகிறார்கள்.

ஜான்: ஆமா பொறாமையான எண்ணங்கள்,பாவம் செய்ய வழிவகுக்கும்...

பீட்டர்: ஆமா,ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் நாம் பார்கிறோமே,  ஆபேலின் பலியை தேவன் அங்கிகரித்து, காயீனின் பலியை தேவன் புறக்கணித்தார். தேவன் அதை "நீதியாக" செய்தார்.ஆனால் காயீன் ஆபேலின் மேல் பொறாமை கொண்டு   எரிச்சலடைந்தான்,காயீன் அதோடு நிற்கவில்லை, அவன் ஒரு கொலைகாரனாக ஆக்கும் அளவுக்கு பொறாமை,அவனை  கொண்டு சென்றது.

ஜான்: பொறாமை என்பது ஒரு ஆவிக்குரிய கிறிஸ்தவனின் சுபாவம் இல்லை,அது உலத்தனமான மனிதனின் சுபாவம்,நாம் ஒருவேளை யார் மீதாவது பொறாமை கொண்டவர்களாய் இருந்தால் நாம் இன்னும் ஆவிக்குரிய வகையில் வளரவில்லை,ஆவியில் நாம் நடக்கிறவர்கள் இல்லை என்று நமக்கு காண்பிக்கிறது.....

பீட்டர்: ஆம் நாம் மற்றவர்களின் வளர்ச்சியை கண்டோ,முன்னேற்றத்தை கண்டோ,அவர்கள் கர்த்தரால்  ஆசீர்வதிக்கப்படுகிறதை கண்டோ
கர்ததர் அவர்களுக்கு கொடுத்த
தாலந்துகளை கண்டோ
பொறாமை கொள்ளக்கூடாது,
அவர்களின் மீது பொறாமை படுவதை விட்டுவிட்டு,கர்த்தரை நோக்கி பொறுமையோடு காத்திருப்போம் அவர்களை அங்கிகரித்த,தேவன் நம்மையும் அங்கிகரிப்பார்...
அவர்களை ஆசீர்வதித்த தேவன் நம்மையும் ஆசீர்வதிப்பார்...
அவர்களை உயர்த்திய தேவன் நம்மையும் உயர்த்துவார்...
நாம் தேவனுக்கு முன்பாக
"நீதியின் வழியில்"நடப்போம்.
ஏற்றக்காலத்தில் அவர் நம்மை மேன்மைப்படுத்துவார்...

ஆமென்... அல்லேலூயா...


Sunday 19 April 2020

உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு,நன்மை செய்யுங்கள்

தீமைக்குத் தீமையையும்,
உதாசனத்துக்கு
உதாசனத்தையும்
சரிக்கட்டாமல்,
அதற்குப் பதிலாக,நீங்கள்
ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டு இருக்கிறவர்கள் என்று அறிந்து,ஆசீர்வதியுங்கள்
(1 பேதுரு 3:9)

கிறிஸ்து இயேசுவுக்குள்
பிரியமானவர்களே!
பழைய ஏற்பாடு காலத்தில்
கண்ணுக்குக் கண்,பல்லுக்குப் பல்,
கைக்கு கை,காலுக்கு கால்,ஜீவனுக்கு
ஜீவன் என்கிற நியாயப்பிரமாணம் செயல்பாட்டில் இருந்தது,அது
அக்கால மக்களுக்கு
சட்ட  கட்டளையாக
கொடுக்கப்பட்டது (யாத் 21:24)
(லேவி 24:20)(உபா19:21)

ஆனால் இன்று நாம் புதிய உடன்படிக்கையின் கீழ் கிருபைக்கு
கீழாக இருக்கிறோம்,தேவ அன்பு
நமது இருதயத்தில் ஊற்றப்பட்டு இருக்கிறது (ரோம5:5) எனவே
நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு
நாம் தீமை செய்யாமலும்,
நம்மை உதாசனப்படுத்துபவர்களை,
நாம் பதிலுக்கு உதாசனப்படுத்தாமலும்
இருக்க வேண்டும் என்றும்
(1 பேது 3:9)நம் சத்துருக்களைச்
சிநேகிக்க வேண்டும்,என்றும்
நம்மை சபிக்கிறவர்களை
ஆசீர்வதிக்க வேண்டும்,என்றும்,
நம்மை பகைக்கிறவர்களுக்கு
நன்மை செய்ய வேண்டும் என்றும்,
நம்மை நிந்திக்கிறவர்கிறவர்களுக்காகவும்  நம்மை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ண வேண்டும் என்றும்
(மத்5:44)(லூக்6:28-29) புதிய உடன்படிக்கையின் போதனை
தொடர்ந்து நமக்கு வலியுறுத்துகிறது....

பழைய ஏற்பாட்டிலே,யேசபேல் எலியாவைப் பழிவாங்க வேண்டுமென்று துடித்தாள் (1இரா 19:2),ஆகாப் ராஜா தீர்க்கதரிசியாகிய மிகாயாவைப் பழிவாங்க வேண்டுமென்று துடித்தார் (1இரா 22:27). ஆமான் மொர்தெகாயைப் பழிவாங்க வேண்டுமென்று துடித்தார் (எஸ்தர் 3:6). ஆனால் அவர்களுடைய நிலைமையெல்லாம் பரிதாபமாய்
முடிந்தது,ஆம் பிரியமானவர்களே!
கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற
நாம் எந்த சூழ்நிலையிலும் நமக்கு
தீமை செய்தவர்களை பழிக்கு பழி
வாங்க வேண்டும்,பழி தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணக்கூடாது,
ஏனெனில்।"பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார்"(ரோம12:19)(எபி 10:30)
ஆம் பிரியமானவர்களே! ஆதி திருச்சபையிலே பவுல் சீஷர்களை துன்புறுத்தினான்,சபையைப்
பாழாக்கினான் (அப் 8:3) ஆனால்
சீஷர்கள் அவனை பழிவாங்க
வேண்டும்,அவனுக்கு பதிற்செய்ய வேண்டுமென்று நினைக்கவில்லை
ஆனால் கர்த்தர் பவுலுக்கு பதிற்செய்தார்
(அப்9:3-5)எனவே பவுல் மனமாறினான்,
சபையைப் பாழாக்கினவன்
சபைகளை கட்டி எழுப்புகிறவனாக ஆனான்,தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்ட அப்போஸ்தலனாக மாறினான் கர்த்தருடைய பதிற்செய்தல்
இவ்விதமாக தான் இருக்கும்.

கிறிஸ்தவர்களாகிய நாம் நமக்கு விரோதமாய் குற்றம் செய்தவர்களை,
தண்டிக்க வேண்டும்,பழிவாங்க
வேண்டும் பகைக்க வேண்டுமென
வேதம் சொல்லவில்லை,
கிறிஸ்தவர்களாகிய நாம், நமக்கு விரோதமாய் குற்றம் செய்தவர்களுக்கு
தயவுகாட்ட வேண்டும்,மனதுருக்கம் கொள்ள வேண்டும்,கிறிஸ்துவுக்குள்
தேவன் நம்மை மன்னித்ததுபோல,
நாமும் அவர்களை மன்னிக்க வேண்டும்
(எபே 4:32) என்று புதிய ஏற்பாடு வழியுறுத்துகிறது..

பிரியமானவர்களே! மற்றவர்கள் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவர்களுக்கு செய்வேன்,அவர்கள் எனக்கு செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவர்களுக்கு சரிக்கட்டுவேன் என்று
நாம் சொல்லகூடாது...(நீதி 24:29)
ஏனென்றால் நம் தேவன் நம்மை
நமது செய்கைக்கு,தக்க சரிக்கட்டுகிறவர் அல்ல,அவ்வாறு அவர் நமது
செய்கைக்கு தக்க நம்மை சரிக்கட்டியிருந்தால் நம்மை நியாயம் தீர்த்திருந்தால்,நாம் என்றோ அழிந்து போயிருப்போம்,ஆனால் அவர்
நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்,(சங்103:10)
ஆம் எனக்கு அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவனுடைய அன்பை,மன்னிப்பை,இரக்கத்தை,
மனதுருக்கத்தை,தயவை,
ருசிபார்த்துக்கொண்டிருக்கிற
நாம் மற்றவர்களிடமும் அந்த
தெய்வீக பண்பின் சுபாவத்தை
வெளிபடுத்தி காட்ட வேண்டும்,
நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு
நாம் நன்மை செய்வோம்,
நம்மை உதாசனப்படுத்துபவர்களை,
ஆசீர்வதிப்போம்,நம் சத்துருக்களைச்
சிநேகிப்போம்,நம்மை சபிக்கிறவர்களை
வாழ்த்துவோம்,நம்மை நிந்திக்கிறவர்கள் மற்றும் நம்மை துன்பப்படுத்துவோர்க்காக
ஜெபம் செய்வோம்,இப்படிப்பட்ட தேவ சுபாவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் நம்பிடம் எதிர்பார்க்கிறார்,அவரின் எதிர்பார்ப்பை
ஆவியானவரின் துணைகொண்டு நிறைவேற்றுவோம்,ஆண்டவர்
அருளும் ஆசீர்வாதங்களை  சுதந்தரிப்போம்.

ஆமென்... அல்லேலூயா...

Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-India


Saturday 18 April 2020

தட்டுங்கள்,அப்பொழுது
உங்களுக்குத் திறக்கப்படும்;
(மத்தேயு 7:7)

கிறிஸ்து இயேசுவுக்கு
பிரியமானவர்களே!
விசுவாச வாழ்க்கை
பயண பாதையிலே
விடுதலைக்கான,
ஆசீர்வாதத்திற்கான
அற்புதத்திற்கான,
உயர்வுக்கான
முன்னேற்றத்திற்கான,
பல வழிகளும்,
பல கதவுகளும்
அடைக்கப்பட்டும்
மூடப்பட்டும்
இருக்கின்றன,
ஒவ்வொரு
விசுவாசிகளுக்குள்ளும்
ஒரு தவிப்பு இருக்கின்றது,
அதாவது"எனக்கு
வழிகள் வாய்க்காதா
என் வாழ்க்கை
மாறாதா?"கதவுகள்
திறக்காதா என்
கஷ்டங்கள் தீராதா?
என்று கவலைப்படுகிறார்கள்.
விசுவாசிகளுக்கு
வாய்க்காத வழிகள்
வாய்க்கவும்,அடைக்கப்பட்ட
கதவுகள் திறக்கவும்,
கர்த்தர் வைத்த
நியமங்களுக்கு
அவர்கள் வரவேண்டும்,
அப்படி செய்யாமல்
விசுவாசிகள் சுயமாக
ஏதாவது,முயற்சி
செய்து தோற்றுப்போய்
கொண்டிருக்கிறார்கள்.
தட்டுங்கள் திறக்கப்படும்
என்று இயேசு
சொல்லியிருக்கின்றார்,
எதை தட்டுவது,
எப்படி கட்டுவது என்பதை
நாம் வேத வசனத்தின்
வாயிலாக பார்ப்போம்
வாய்க்காத வழிகள்
வாய்ப்பதற்கும்,
அடைக்கப்பட்ட கதவுகள் திறக்கப்படுவதற்கும்
கர்த்தர் வைத்த
நியமங்களை கற்போம்.

1)இயேசுவின் நாமத்தை
மறுதலியாமல்,அவர்
நாமத்தைஉயர்த்தி,
கர்த்தருடைய வசனத்தை கைக்கொண்டு,அவருக்கு
பிரியமான வாழ்க்கை,
வாழ்கிறவர்களுக்கு
முன் #திறந்த #வாசலை,
கர்த்தரே வைப்பார் யாரும்
அதை #பூட்ட முடியாது.
(வெளி 3:8)

2)கர்த்தரால் அபிஷேகம்
பெற்றவர்கள் முன்னால்
#வாசல்கள் #பூட்டப்படாதிருக்கும்
#கதவுகள் #திறந்து இருக்கும்
#கோணலானவைகளைச் #செவ்வையாக்கப்படும்
(ஏசா45:1-4)

கர்த்தரால் அபிஷேகம்
பெற்றவர்கள் யாவர்?

இயேசு கிறிஸ்துவை
ஆண்டவராக,இரட்சகராக
ஏற்றுக்கொண்டு பரிசுத்த
ஆவியானவரின் அபிஷேகத்தை
பெற்ற நாம் தான்.(எபே 1:13)
(2 கொரி1:21)(1 யோவா 2:20)

3) தொடர்ந்து நாம் #ஜெபம்
செய்து கொண்டே இருக்கும்
பொழுது அடைக்கப்பட்டு,
இருக்கின்ற அத்தனை
#வாசல்களும் #திறக்கப்படும்
சுவிசேஷம் அறிவிக்க
வழி உண்டாக்க படும்.

உதாரணம்:

அப்.பவுல்
கொலோசெயர்களுக்கு
எழுதின திருமுகத்திலே
நாங்கள் திருவசனத்தை
சொல்லும் படியாக
தேவன் #வாசலை
#திறந்தருளும்படி
விசுவாசிகளிடம்
ஜெபிக்க
சொல்கிறார்
(கொலோ 4:3-4)

பேதுரு சிறையில்
இருந்தபொழுது,சபையார்
அவனுக்காக ஊக்கத்தோடு
ஜெபம் செய்தார்கள்,
தேவன் அவர்கள்
ஜெபத்தைக் கேட்டு,
தனது தூதனை அனுப்பி
பல #கதவுகளை திறக்கச்
செய்து,பேதுருவை
விடுவித்தார்(அப் 12:5-11)

சுவிசேஷத்தை
பிரசங்கிக்க கர்த்தரால்
#கதவு #திறக்கப்பட்டது
என்று அப்:பவுல்
சொல்கிறார்
(2 கொரி 2:12)

#நம்மைப்போல #பாடுள்ள
மனிதனாகிய #எலியா
ஜெபம் செய்து மூன்று
வருஷமும்
ஆறு மாதமும்
அடைக்கப்பட்டிருந்த
வானத்தை #ஜெபம்
செய்து #திறக்க
செய்தார்.
(யாக் 5:17-18)

4)தேவனை துதிக்கும்
போது,ஆர்ப்பரிக்கும்
போது அடைக்கப்பட்ட
கதவுகள் திறக்கின்றன,
அலங்கம் இடிந்து
விழுகின்றன

உதாரணம்:

பவுலும் சீலாவும் தேவனை
துதித்துப்பாடும் போது,
பூமி அதிர்ந்தது,சிறை
#கதவுகள்திறந்தது,
#கட்டுகள் அறுந்தது
(அப் 16:25-26)

இஸ்ரவேல் மக்கள்
எரிகோவை சுற்றி
வந்து,மகா சத்தமாய்
எக்காளம் ஊதி
ஆர்ப்பரித்தார்கள்
அப்பொழுது
தடையாக இருந்த
அலங்கம் இடிந்து
விழுந்தன (யோசு 6:20)

5)கர்த்தருடைய
வார்த்தைக்கு,நாம் செவி கொடுக்கும்,போது
அடைபட்டிருக்கிற
பாதைகள் திறக்கும்

உதாரணம்:

மோசே கர்த்தருடைய
வார்த்தைக்கு செவி
கொடுத்ததினால்
இஸ்ரவேல் மக்களுக்கு
தடையாக இருந்த
செங்கடல் இரண்டாக
பிரிந்தது (யாத்14:16)

யோசுவா கர்த்தருடைய
வார்த்தைக்கு செவி
கொடுத்ததினால்
தடையாக இருந்த
யோர்தான்
இரண்டாக பிரிந்து
குவியலாக நின்றது
(யோசு 3:15-17)

கர்த்தருடைய
ஊழியத்திற்கென்று,
நாம் கொடுக்கும் பொழுது,
அடைக்கப்பட்டு இருக்கின்ற
பொருளாதார ஆசீர்வாத
கதவுகள் நமக்காக
திறக்கின்றன (மல் 3:10)

ஆம் பிரியமானவர்களே!
வாய்க்காத வழிகள்
வாய்ப்பதற்கும்,
அடைக்கப்பட்ட கதவுகள் திறக்கப்படுவதற்கும்
கர்த்தர் வைத்த
நியமங்களை
கைகொள்ளுவோம்

ஆமென்.. அல்லேலூயா...

Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-India


Wednesday 15 April 2020

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமானவர்களே!
வியாதி என்பது பிசாசின்
வல்லமை,அதில் அகப்பட்டவர்களை
குணமாக்குவதே தேவனின்
வல்லமை (அப் 10:38)
நம் தேவன் வாதையை
அனுப்பி,மக்களை
நோயாளியாக்கி
அழிக்கிறவர் அல்ல,
நம் தேவன் வசனத்தை
அனுப்பி,மக்களை குணமாக்கி
அழிவுக்கு தப்பிக்கிறவர்
(சங் 107:20) மக்கள் மீது பலவீனங்களையும்
நோய்களையும்,சுமத்தியது
கர்த்தர் அல்ல,மக்களுக்காக பலவீனங்களையும்
நோய்களையும்,கல்வாரி
சிலுவையில் சுமந்து
தீர்த்தவரே கர்த்தர்
(ஏசா 53:4)(மத் 8:17)

கொரோனா என்கிற
வாதைக்கு காரணம்
தேவ கோபத்தின் மிகுதியோ,
மனித பாவத்தின் மிகுதியோ
இல்லை,இது கடைசி காலமாக இருப்பதினால் கொள்ளை
நோய்கள் வர தான் செய்யும்
என்று வேதம் தெளிவாக
போதிக்கின்றது (மத்24:7-8)
இயேசு கிறிஸ்துவின்
இரகசிய வருகை,சபை
எடுத்துக்கொள்ளப்படுதலின்
காலம் சமீபமாக
இருப்பதினால்
பிசாசானவனுக்கு கொஞ்சக்காலமாத்திரம்
உண்டென்று அவன் அறிந்து,
மிகுந்த கோபங்கொண்டு,
உலகில் அழிவின் கரியங்களை
செய்து வருகிறான்,அவனால்
ஆபத்து வருமென்று வேதம்
நமக்கு எச்சரிக்கிறது,
(வெளி 12:12) அவன்
கொல்கிற அழிக்கிற
வேலையையே
செய்கின்றவனாகவே
இருக்கிறான் (யோவா 10:10)
கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.(1 பேது 5:8)
அவன் ஆதிமுதற்கொண்டு
மனுஷ கொலை பாதகனாய்‌
இருக்கிறான்(யோவா 8:44)

ஆம் பிரியமானவர்களே!
கொல்லுகின்ற அழிக்கின்ற சங்கரிக்கின்ற,வேலைகளை
செய்வதெல்லாம் சாத்தான்.
இவைகளிலிருந்து நம்மை
மீட்கின்ற,தப்புவிக்கின்ற,
பாதுகாக்கின்ற,காரியங்களைச் செய்கின்றனர் நம்முடைய
கர்த்தர் இவைகளை,நாம்
நன்றாக புரிந்துகொள்ள
வேண்டும்.நம் கர்த்தர்
நல்லவர்,அவரின் அன்பை
எண்ணிப்பாருங்கள்
அவரின் செயல்பாடுகளை
நோக்கிப்பாருங்கள்,
பிள்ளைகளாகிய நாம்,
மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க,
கர்த்தராகிய இயேசுவும்
நம்மைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராக
இந்த பூமிக்கு வந்து மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனையும் அவனின் கிரியைகளையும்,
தமது கல்வாரி சிலுவை,
மரணத்தினாலே அழித்து
செயலற்று போக செய்து,
பிசாசானவனை இல்பொருள்
ஆக்கி அவனின்
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு,வெளியரங்கமான கோலமாக்கி,அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
(எபி:2:14) (கொலோ2:15)

இயேசு கிறிஸ்து பெற்ற வெற்றி
நாம் பெற்ற வெற்றியாகும்...
இயேசுவின் நாமத்தை நாம் பிரயோகிக்கும் போது பிசாசின் வல்லமைகள் நமக்கு கிழ்படியும்
இயேசு நமக்கு சாத்தானின் சகல வல்லமையின் மீதும் அதிகாரம் கொடுத்து இருக்கிறார்,
அந்த இருளில் வல்லமைகள்
நம்மை சேதப்படுத்தமாட்டாது
(லூக்கா 10:17,19) சாத்தானின்
சகல வல்லமைகளையும்
மேற்கொள்ள,நமக்கு இயேசுவால் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது,
என்பதை நாம் விசுவாசிக்கும் பொழுது,கொரோனாவோ அல்லது
வேறு எந்த கொள்ளை நோயோ
நம்மை அணுகவோ,
சேதப்படுத்தவோ,முடியவே முடியாது,இதை நீங்கள் விசுவாசிப்பீர்களானால்
சேதமாகாமல் இருப்பீர்கள்
(எபி 11:31)

#சாத்தானின் வல்லமைகளால்
நம்மை #சேதப்படுத்த முடியாது.

இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக இரட்சகராக  ஏற்றுக்கொண்ட
நமக்குள் அவரே வாசமாயிருக்கிறார் எனவே எந்த சாத்தானின்  வல்லமைகளும்,நம்மை
சேதப்படுத்த முடியாது,
வானத்திலும் பூமியிலும்
சகல அதிகாரமும்
உடைய (மத்:28:18)
இயேசு கிறிஸ்து நமக்குள்ளே  இருக்கின்றார் (கொலோ 1:27)
நாம் கர்த்தரோடு இசைந்து
இருக்கிறோம் அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறோம்
(1 கொரி 6:17) அதுமட்டுமல்ல
நாம் இயேசுவினுடைய  சரீரத்தின் அவயவங்களாயும்,அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.(எபே 5:30)
மொத்ததில் நாம் கிறிஸ்துவிலும்,
கிறிஸ்து நம்மிலும் இருக்கிறார்..
இனி நாம் அல்ல, கிறிஸ்துவே
நமக்குள் பிழைத்திருக்கிறார்
(கலா 2:20) எனவே நாம் எதற்கும்
பயப்படக்கூடாது,எதுவும் நம்மை
சேதப்படுத்த முடியாது.

இயேசுவின் நாமத்தை
நாம் உபயோகிக்கும் போது
பிசாசின் வல்லமைகள்
நமக்கு கிழ்படிந்து அடங்கும்,
அது தாமதமானாலும்,
அது அடங்குகிற வரை
இயேசுவின் நாமத்தை
பிசாசின் வல்லமைகளுக்கு
எதிராக பயன்படித்திகொண்டே
இருங்கள்,இயேசுவின் நமத்திற்கு
முன் எந்த வல்லமையும் எதிர்த்து
நிற்க முடியாது,அது அடங்கி
முடங்கும் (பிலி 2:10-11)
இதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இயேசு நமக்கு சாத்தானின்
சகல வல்லமைகளின்
மீதும் அதிகாரம் கொடுத்து இருக்கிறார்,வாழ்வது எனக்குள்,
நான் அல்ல,இயேசுவே எனக்குள் வாழ்கின்றார்,என்கிற விசுவாச
மனநிலையோடு உங்கள்
அதிகாரத்தை பயன்படுத்துங்கள்
நீங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிப்பீர்களானால்
நீங்கள் சத்துருவின் சகல வல்லமைகளையும்,
மேற்கொள்வீர்கள்
சாத்தானால் உங்களை
மேற்கொள்ள முடியாது,
சாத்தானுக்கு உங்களால் சேதம் உண்டாகும்,ஆனால்,உங்களை
எதுவும் சேதப்படுத்த முடியாது
ஏனென்றால் நீங்கள் அல்ல,
கிறிஸ்துவே உங்களுக்குள்
வாழ்கின்றார்,இந்த எண்ண
ஓட்டம் உங்களுக்குள் என்றும்
இருக்கட்டும்.

Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-India

To support our ministry

Google pay:9677819582

Our face book page,kindly like And follow

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

https://www.facebook.com/marvelcmgm/

https://youtube.com/channel/UCNWsmeveSIo7Mxp8iKoHb7A view_as=subscriber

👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻

Our youtube channel,kindly subscribe
#நோக்கிப்பார்த்தால் #பிழைப்பான்

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்;ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்
(சங்கீதம் 23:4)

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமானவர்களே!
இன்று உலகம் ஒரு
அசாதரண சூழ்நிலையில்
உள்ளது,மக்கள் அனைவரும் பயத்தோடும் பதட்டத்தோடும்,
அச்சத்தோடும்,அபாய
மனநிலையோடும்,
ஒவ்வொரு நாளையும் நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள்,நம்மை
சுற்றி நடக்கிற நிகழ்வுகளை
நாம் பார்க்கும் போதும்,
செய்திகளை கேட்கும் போதும்,
மரண இருள் நம்மை சூழ்ந்து
கொண்டது போல் தோன்றுகிறது,
இந்த நிலையில்,நாம் மரண
இருளின் காரியங்களையே
நோக்கிக் கொண்டு இருக்காமல்
அதாவது வியாதி,மரணம்,
துர்செய்தி,எதிர்மறையான
நிகழ்வுகள்,இவைகளையே
நோக்கி கொண்டிருக்காமல்,
இந்த மரண இருள் சூழ்நிலையிலும்,
தேவன் நம்மோடு கூடவே
இருக்கிறார் (சங் 23:4) என்று
நாம் தேவனை நோக்கி
பார்க்க வேண்டும்.கொரோனா
என்கிற வாதை என்னை அணுகிவிடுமோ? மரணம்
என்கிற பொல்லாப்பு எனக்கு நேரிட்டுவிடுமோ? என்று
வாதையையும் பொல்லாப்பையும் நோக்கிப்பார்ப்பதை விட்டுவிட்டு, கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் நமக்கு எந்த வாதையும் அணுகாது,
எந்த பொல்லாப்பும் நேரிடாது
(சங் 91:10)என்று வசனத்தை நோக்கிப்பார்க்‌க ஆரம்பியுங்கள்.

ஆம் பிரியமானவர்களே!
வனாந்தரத்திலே,கொள்ளிவாய்
சர்ப்பங்களால் கடிக்கப்பட்டு,
சாகபோகிற நிலைமையிலிருந்த இஸ்ரவேல் மக்கள்,எப்படி
மோசேயினால் உயர்த்தப்பட்ட
வெண்கல சர்ப்பத்தை நோக்கி,
பார்த்து பிழைத்தார்களோ
(எண் 21:9) அதேபோல் கல்வாரி சிலுவையில் நமக்காக
உயர்த்தப்பட்ட கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவை
நாம் நோக்கி பார்த்து
பிழைக்கும்படியாக கர்த்தரால் அழைக்கப்படுகின்றோம்
(யோவா 3:14-15)

நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு,நம்முடைய
நோய்களை கல்வாரி சிலுவையில் சுமந்து தீர்த்தவரை,நோக்கி
பார்ப்போம் (மத் 8:17) நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் நொறுக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை நோக்கி பார்ப்போம் (ஏசா 53:5)
இயேசுவின் தழும்புகளால்,
நாம் சுகமாக்கப்பட்டிருக்கின்றோம்,
எனவே அவருடைய தழும்புகளை
நாம் நோக்கி பார்ப்போம் (1பேது 2:24)
மரண இருளின்,காரியங்களை அல்ல மரணத்தை ஜெயித்தவர் நம்மோடு கூடவே இருக்கிறார் அவரை நோக்கி பார்ப்போம்,பிழைத்துக்கொள்வோம்.

ஆமென்... அல்லேலூயா...

நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் (எண்ணாகமம் 21:8)

Pr.Marvel jerome
Calvary living way ministries
Bangalore-south India
#சத்துருக்கள் #அடங்குவார்கள்

இஸ்ரவேலே,நீ பாக்கியவான்;
கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்;அவர்கள் மேடுகளை மிதிப்பாய்,என்று சொன்னான். (உபாகமம் 33:29)

கிறிஸ்து இயேசுவுக்குள்
பிரியமான சகோதர சகோதரிகளே!
இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக இரட்சகராக ஏற்றுக்கொண்ட,
நீங்கள்,கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட
ஜனம்,கிறிஸ்துவுக்கள் நீங்கள்
இஸ்ரவேலர்களாக இருக்கின்றீர்கள் (எபே 2:15-16) இந்த உலகம்
உங்களை சாதாரணமானவர்களாக
நினைக்கலாம்‌,ஆனால் நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல,
நீங்கள் கர்த்தரால் விலைக்கிரயம் கொடுத்து வாங்கப்பட்டவர்கள்
(1கொரி 6:20) வெள்ளியை கொடுத்து தங்கத்தைக் கொடுத்து தேவன் உங்களை மீட்டு கொள்ளவில்லை தன்னுடைய ஜீவனையே கொடுத்து,
தன்னுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை கொடுத்து உங்களை
மீட்டு கொண்டார் (1பேது1:18-19)
எனவே நீங்கள் தேவனுடைய பார்வையில் மிகவும் விலையேறப்பெற்றவர்களாக  இருக்கின்றீர்கள்.இந்த எண்ணங்களை எப்பொழுதும் உங்கள் மனதிலேயே
நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

பிரியமானவர்களே! நாம் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை ஆனால் நம் மீது பொறாமை கொண்ட,போட்டி மனப்பான்மை  கொண்ட,சிலர்
நம்மை எதிரியாக நினைக்கிறார்கள்.
நாம் அழவேண்டும்,விழவேண்டும்
அழிய வேண்டும்,ஒழிய வேண்டும்
என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே
விரும்புகிறார்கள்,எதிர்பார்க்கிறார்கள்
அதுமட்டுமல்ல! நீ அழுதால் உன்
சத்தத்தை கேட்க யார் இருக்கின்றார்?
உன் கண்ணீரைத் துடைக்க யார் இருக்கின்றார் ? நீ விழுந்தால்
உன்னை தூக்கி விடுவதற்கு
யார் இருக்கின்றார்? உன்னை உயர்த்துவதற்கு யார் இருக்கின்றார்?
உனக்கு உதவி ஒத்தாசை
செய்ய யார் இருக்கின்றார்?
என்று நம்மைப்பார்த்து
ஏளனமாக பேசுகிறார்கள்
ஆனால் அவர்களுக்கு தெரியாது
நாம் அழுகையின் சத்தத்தை
கேட்க,ஆண்டவர் இருக்கின்றார்
(ஆதி 21:16-17)(ஏசா 38:5)
நம் கண்ணீரை துடைக்க கர்த்தர் இருக்கின்றார் (சங்6:8-9)(ஏசா 25:8)
அழுகையை,ஆனந்தமாகவும்,
துக்கத்தை சந்தோஷமாகவும்,
மற்றிப்போட நம் தேவன்
இருக்கின்றார் (எரே 31:13)
விழுந்த நம்மை தூக்கவும்,
உயரமான கன்மலையின்மேல்
நம்மைநிறுத்தவும் நம் தேவன் இருக்கிறார் (மீகா 7:8)(சங் 9:13)(சங்40:2-3)நமக்கு உதவி செய்ய ஒத்தாசை செய்ய,வானத்தையும் பூமியையும் படைத்த நம் தேவனாகிய கர்த்தர் நமக்காக இருக்கின்றார்
(சங் 121:2)(சங் 72:12)(சங் 37:40)
 (சங் 118:13)

ஆம் பிரியமானவர்களே!
நாம் மற்றவர்களுக்கு எதிராக
நாம் எந்த குற்றமும் செய்யாமல்
இருக்கும்போது கூட,அவர்கள்
நம்மை காரணமின்றி
வெறுப்பார்கள்,எதிரியாக நினைப்பார்கள்,முகாந்திரம்
இல்லாமல் பகைப்பார்கள்
(சங்25:3)(சங் 35:7)(சங் 109:3)
(யோவ 15:25) நாம் அவர்களுக்கு
நன்மைதானே செய்தோம்
ஏன் அவர்கள் நமக்கு தீமை
செய்ய பார்ப்பார்க்கிறார்கள்,
ஏன் நம்மை எதிரியாக நினைக்கிறார்கள்
என்று நமக்குள்ளே கேள்விகள்
வருவதுண்டு.அவர்கள்
அவ்வாறு இருப்பதற்கான
காரணம் அவர்களின் பின்புலமாக இருந்து செயல்படும் பிசாசுதான்,
அவன்தான் அதற்கு காரணம்.
எனவே நம்மை
வெறுக்கிறவர்களுக்கு,
நம்மை எதிரியாக நினைக்கிறவர்களுக்கு
முகாந்திரம் இல்லாமல் பகைக்கிறவர்களுக்கு,
நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு,
நாம் நன்மை மாத்திரம்
செய்வோம்.அவர்களை
நேசிப்போம்,அவர்களோடு சண்டையிடுவதும்,
அவர்களோடு போராடுவதும்,
நமது வேலை இல்லை,
ஏனெனில் நம்முடைய
போராட்டம் மாம்சத்தோடும்
இரதத்தோடுமல்ல,மாம்சத்திற்கும் இரத்ததிற்கும் பின் நின்று
நம்மோடு போராட்டம் சாத்தானோடும் அவனுடைய சேனைகளோடும்
தான் (எபே 6:12) எனவே நம்மை பகைக்கிறவர்களையும்,நாம்
அன்பு செய்ய வேண்டும்.
கிறிஸ்தவர்களாகிய நாம்
எந்த மனிதரையும்,பகைவராக
பார்க்கவும் நம்மை பகைக்கிறவர்களை பழிவாங்க நினைக்கவும் கூடாது.ஏனெனில் பழிவாங்குதலும் பதிற்செய்தலும் நமக்குரியது அல்ல,அது கர்த்தருக்குரியது (ரோம12:19)
(எபி 10:30) நாம் பழிவாங்காமல்
பதிற்செய்யாமல் அமைதியாக
சும்மா இருக்கும் போது கர்த்தர்
நமக்காக யுத்தம் பண்ணுவார்
(யாத் 14:14)

என்னங்க பாஸ்டர் நீங்க
இப்படி சொல்றீங்க?எங்கள்
சத்துருக்களுக்கு நாங்கள்
என்ன செய்றது? எங்களைப் பகைக்கிறவர்களுக்கு நாங்கள்
என்ன செய்வது? எங்களை சபிக்கிறவர்களுக்கு நாங்கள்
என்ன செய்வது? எங்களை நிந்திக்கிறவர்களுக்கு நாங்கள்
என்ன செய்வது? என்று ஒரு கிறிஸ்தவன் கேட்டால்
அவனுக்கு இயேசு சொல்கிற
பதில்!!!!!!!!!!"

"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்".(மத்தேயு 5:44)
இதைத்தான் நாம் செய்ய வேண்டுமென்று தேவன் நம்மிடம்
எதிர்பார்க்கிறார்.

பாஸ்டர் அவர்கள் என் பெயரை சிறுமைப்படுத்த வேண்டும்,
எனக்கு அவப்பெயரை
உண்டாக்க வேண்டும்
என்னை அவமானப்படுத்தி,அதிலே அவர்கள் சந்தோஷப்பட வேண்டும்
என்று காரியங்களை தீவிரமாய்
செய்கிறார்கள்,என்னை குறித்து மற்றவர்களிடம்,இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி
இச்சகம் பேசி என் பெயரை கெடுக்க
பார்க்கிறார்,அவர்களை நான் என்ன செய்ய? பிரியமானவர்களே!
நீங்கள் அவர்களை ஒன்றும்
செய்ய வேண்டாம்அவர்கள் உங்களுக்கு விரோதமாக செய்கின்ற துன்பங்களையும்,அவர்கள் உங்களுக்கு
விரோதமாக பேசுகின்ற
வார்த்தைகளையும் நீங்கள் பொறுமையோடு சகித்துக் கொண்டிருக்க வேண்டும்
(1 பேதுரு 2:20) கர்த்தர்
அனைத்தையும் பார்த்துக் கொள்வார்,நீங்கள்
கவலைப்படாதீர்கள்.

உங்கள் சத்துருக்கள் பல இடங்களில் உங்களை வெட்கப்படுத்தினார்களா?
உங்கள் புகழும்,கீர்த்தியும் போய்விட்டதா ? நான் உங்களுக்கு சொல்கின்றேன்,நீங்கள் வெட்கம் அநுபவித்த சகல தேசங்களிலும் உங்களை புகழ்ச்சியும் கீர்த்தியும் மீண்டும் வைக்க கர்த்தர் இருக்கிறார்,(செப்பனியா 3:19) நிச்சயமாக அவர்
உங்களை உயர்த்துவார்.

உங்கள் சத்துருக்கள் உங்களை குறித்து இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி உங்கள் பெயரை
கெடுக்க நினைக்கிறார்களா?
கவலைப்பாடதிருங்கள்,
உங்கள் பெயரை பெருமைப்படுத்த
கர்த்தர் இருக்கிறார்(ஆதி:12-2)
நிச்சயமாக அவர் உங்கள் பெயரை பெருமைப்படுத்துவார்.

உங்களுக்கு விரோதமாக இச்சகம்
பேசி இல்லாதது பொல்லாதது,
பேசுகிறவர்கள் தானாகவே அடங்குவார்கள்,கர்த்தர் அவர்களை
அடக்குவார் (சங் 76:11-12)
அவர்களின் மேடுகளை,நீங்கள்
மிதிக்கும்படி கர்த்தர் செய்வார்,
(உபா 33:29) அதாவது அவர்கள்
உயர்வானதாக கருதுகிற காரியங்களை,அவர்களின்
ஆஸ்தி,அந்தஸ்து,அதிகாரம்,
பணம்,செல்வாக்கு ஆகிய
மேடுகளை,உங்கள் கால்களுக்கு
கீழே கொண்டுவரும் படி கர்த்தர் செய்வார்.

ஆமென்.. அல்லேலூயா..

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்;
கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

(உபாகமம் 33:29)

Pr.Marvel Jerome
Calvary living way ministries
Bangalore-south India


கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் நற்கிரியைகளை செய்ய வேண்டும்?ஏன் தானதர்மங்கள் செய்யவேண்டும்?தானதர்மங்கள் செய்வதால் இம்மையில் நமக்கு உண்டாகக்கூடிய நன்மைகள் யாவை? தானதர்மங்கள் செய்வதால் மறுமையில் நமக்கு உண்டாகக்கூடிய நன்மைகள் யாவை?



1)#கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் நற்கிரியைகளை செய்ய வேண்டும்?
ஏன் #தானதர்மங்கள் #செய்யவேண்டும்?

2)#தானதர்மங்கள் செய்வதால்
#இம்மையில் நமக்கு உண்டாகக்கூடிய  நன்மைகள் யாவை?

3)#தானதர்மங்கள் செய்வதால் #மறுமையில் நமக்கு உண்டாகக்கூடிய  நன்மைகள் யாவை?

கிறிஸ்து இயேசுவுக்குள்
பிரியமான,என் அன்பு
சகோதர சகோதரிகளே!
முன்பு பிதாவுக்கு பிரியமில்லாத,
துற்கிரியை செய்து வந்த நம்மை,
இயேசு கிருபையாய் இரட்சித்து,
பிதாவுக்கு பிரியமாக நற்கிரியை செய்கிறவர்களாக நம்மை மாற்றி
இருக்கிறார்,முன்பு இந்த உலகில்
பிசாசின் செய்கையாக இருந்த
நாம்,இன்று இயேசுவின் மூலம்,
தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்
(எபே2:10) நாம் ஒரு காலத்தில்
இந்த உலகத்திற்கு இருளை
காட்டிகொண்டு இருந்தோம்,
அந்தகார இருளின் பிள்ளைகளாக இருந்தோம்,ஆனால் இயேசு நமது வாழ்கையில் வந்து,நம்மை
இருளிலிருந்து மீட்டு,நமது வாழ்வை
ஒளிமயமாக்கி,நம்மை பிராகசிக்க
செய்து,இன்று இந்த உலகத்திற்கு
நம்மை வெளிச்சமாக வைத்திருக்கிறார்,
(எபே5:8)(யோவா 1:9)(மத்5:14)
நாம் நற்கிரியை செய்ததினால்,
இரட்சிக்கப்படவில்லை,நாம்
கிருபையினால் விசுவாசத்தை
கொண்டு இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்,
அவரின் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட நாம்,நற்கிரியைகளை செய்வதற்கு
தேவனுடைய செய்கையாய் இருக்கிறோம்,என்பதை
இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும்,நமது தேவன் நல்லவர்
அவர் நன்மைகள் மாத்திரம் செய்கிறவர் என்று இந்த உலகத்திற்கு,நமது நல்ல செயல்கள் மூலம் வெளிப்படுத்தி காட்ட வேண்டும்,இதனால் இயேசுவின்
நாமத்திற்கு மகிமையும்,நமக்கு இம்மையிலும்,மறுமையிலும்
அனேக நன்மைகளும் உண்டாகும்.

ஆம் எனக்கு அன்பானவர்களே!
நமது ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின் மூலம் வெளிச்சத்தின்
பிள்ளைகளாக ஆக்கப்பட்டிருக்கிற
நாம்,இருள் நிறைந்த இந்த உலகத்தில்,வெளிச்சத்தின்
பிள்ளைகளாய் நடந்துகொள்ள
வேண்டும் என்றும் மற்ற மனிதர்கள்
நாம் செய்கிற நற்கிரியைகளை
கண்டு நம்முடைய பரலோக பிதாவை,
மகிமைப்படுத்தும் படி நம்முடைய செயல்பாடுகள் பிராகசிக்கிறதாக
இருக்க வேண்டும்,என்று
வேதம் வழியுறுத்துகிறது
(எபே5:8)(மத்5:16)
நாம் கர்த்தருக்கு அடுத்த
கரியங்களுக்கு அதாவது,
காணிக்கை,தசமபாகம்,
ஊழியர்களுக்கு உதவி செய்தல்,ஊழியங்களை
தாங்குதல்,மிஷனரிமார்களுக்கு
கொடுத்தல்,சபை கட்ட உதவுதல்,பரிசுத்தவான்களின்
குறைவில் உதவுதல்,ஆகிய காரியங்கள் மூலம் தேவன் மீது நம் கொண்டுள்ள அன்பை காட்டுகிறோம்,அது மிகவும் நல்லது,அதே போல் கஷ்டப்படுகிற,
கைவிடப்பட்ட மக்கள்,திக்கற்ற
பிள்ளைகள்,ஏழைகள்,உடல்
ஊனமுற்றவர்கள்,மனநலம்
குன்றியவர்கள் ஆகிய மக்களுக்கும்,
நாம் உதவிகளை செய்து,தேவ அன்பை இந்த உலகத்திற்கு வெளிபடுத்தி காட்ட வேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்பார்கிறார்.

தேவன் நம்மை நேசிக்கிறார்,அதனால் நம்மை #போஷிக்கிறார்,#உடுத்துவிக்கிறார்,
#திருப்தியாக்குகிறார்,அதேபோல் நாமும்
ஏழைகளையும் வறியவர்களையும்
நேசிக்க #போஷிக்க #உடுத்துவிக்க #திருப்தியாக்க வேண்டும்.

பிரியமானவர்களே!வானத்து
பறவைகள் விதைக்கிறதுமில்லை,
அறுக்கிறதுமில்லை,களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை;
அவைகளை நம் தேவன் தான்
போஷித்து பிழைக்கவைக்கிறார்,
விசேஷமாக அவரின் பிள்ளைகளாகிய
நம்மையும் போஷித்து வருகிறார்
(மத் 6: 26)அவரால் போஷிக்கப்பட்ட
அவரால் ஆகாரம் சாப்பிட,நாம்,
ஆகாரம் இல்லாதவர்களுக்கு நமது ஆகரத்தை கொடுத்து அவர்களை போஷிக்க வேண்டும் (லூக் 3:11)
(மத்25:35)(ஏசா58:7)(நீதி22:9)
(எசே 18:7-9)

காட்டு புஷ்பங்கள் உழைக்கிறதுமில்லை,
நூற்கிறதுமில்லை,நம் தேவன் தான்
அவைகளை அழகாய்  உடுத்துவிக்கிறார்,
அவரின் பிள்ளைகளாகிய நமக்கும் அழகழகாய் ஆடைகளை கொடுத்து நம்மையும் உடுத்துவிக்கிறவர் (மத் 6:28-30)
அவரிடமிருந்து அழகழகாய் ஆடைகளை பெற்று உடுத்தி மகிழ்கிற நாம்,
அடையில்லாத ஏழைகளுக்கு
ஆடைகளை கொடுத்து அவர்களை
உடுத்துவிக்க வேண்டும்,(லூக் 3:11)
(எசே 18:16)(மத்25:36)

கிறிஸ்துவுக்குள் தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்
அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும்,நம் தேவன் நமக்கு,சம்பூரணமாய்க் கொடுத்துக்கொண்டிருக்கிறார்
(1 தீமோ6:17) நம்மை அவர்
திருப்தியாக்கி (மத்14: 20)
 நடத்துகிறார்,நமது வாழ்வாதார தேவைகளை அவர் சந்தித்து எல்லாவற்றிலும் எப்பொழுதும்
நாம்  சம்பூரணமாய் இருக்கவும் செய்திருக்கிறார்,(2 கொரி9:8)
இப்படி தேவனால் திருப்தியாக்கப்பட்ட
நாம்,கஷ்டப்படுகிற,கைவிடப்பட்ட மக்கள்,திக்கற்றபிள்ளைகள்,
ஏழைகள்,உடல் ஊனமுற்றவர்கள்,
மனநலம் குன்றியவர்கள் ஆகிய
மக்களுக்கு நம்மால் இயன்ற
உதவிகளை செய்து அவர்களின்
வாழ்வாதார தேவைகளை பூர்த்தி
செய்து அவர்களை திருப்தியாக்க வேண்டுமென்று நம் தேவன்
விரும்புகிறார்.(ஏசா58:10-11)
(லூக்14:13) (மத்25:45)

#கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் நற்கிரியைகளை செய்ய வேண்டும்?
ஏன் #தானதர்மங்கள் #செய்யவேண்டும்?

நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்
(எபே 2:10)

கிறிஸ்தவர்களாகிய நாம்,
நன்மைசெய்யவும்,தானதர்மம்
பண்ண #மறவாமல்
இருக்க வேண்டுமென்றும்,
அப்படிப்பட்ட #பலிகளின்மேல்
தேவன் #பிரியமாயிருக்கிறார் என்று
வேதம் சொல்கிறது (எபி13:16)

பலவீனரைத் தாங்க வேண்டும்
என்றும் கொடுப்பது பாக்கியம் என்று
இயேசு நமக்கு சொல்லியிருக்கிறார்
(அப்20:35)

கிறிஸ்தவர்களாகிய நாம் தரித்திரரை நினைத்துக்கொள்ள வேண்டும்
(கலா2:10)

நம்மிடத்தில் கேட்கிறவனுக்கு
கொடுக்க வேண்டும்(மத்5:42)

நாம் தர்மஞ்செய்வதை,நம்
பிதா பார்க்கிறார் அதற்கு பலன்
அளிக்கிறார்.. தர்மஞ்செய்வது நமது நடைமுறை வாழ்க்கையில் ஒரு
பகுதியாகஇருக்கட்டும் (மத்6:3-4)

இவ்வுலக ஆஸ்தி உடைய கிறிஸ்தவர்களாகிய உங்களுக்குள்
தேவ அன்பு நிலைகொள்ளுகிறது
என்றால்,குறைவில் இருக்கிற
சகோதரனுக்கு கொடுத்து உதவ
வேண்டும்,வசனத்தினாலும் நாவினாலுமல்ல, #கிரியையினாலும் #உண்மையினாலும் #அன்புகூர
வேண்டும் (1 யோவா 3:17-18)

அந்நியரை உபசரிக்க மறவாமல் இருக்க வேண்டும்,ஏன் அவர்கள் தேவதூதர்களாக கூட இருக்கலாம் (எபி 13:2)

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரித்து உதவுவது தேவனுக்கு முன் மாசில்லாத சுத்தமான பக்தி (யாக் 1:27)

நம்மூலமாய் ஞான நன்மைகளில்
பங்கு பெற்றவர்கள்,நம்மூலமாய்
சரீர நன்மைகளிலும் பங்கடைய
அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் அதாவது தரித்திரர்களாய் இருக்கிற பரிசுத்தவான்களுக்கு,பொருள்
சகாயம் செய்து உதவுவது நமது
கடமை (ரோம15:26-27)

இந்த உலகிலே பசியாய் இருக்கிறவர்களுக்கு
தாகமாய் இருக்கிறவர்களுக்கு வஸ்திரமில்லாமல்
இருக்கிறவர்களுக்கு
வியாதியாயிருக்கிறவர்களுக்கு
காவலிலிரருக்கிறவர்களுக்கு
மொத்தத்தில் தேவையில்
இருக்கிறவர்களுக்கு,நாம்
செய்கிற உதவிகள்,தானதர்மங்கள்
நற்கிரியைகள் எல்லாம்,இயேசுவுக்கே
நேரடியான செய்யப்படுவதாக,
இயேசுவே கூறுகிறார் அதன் அடிப்படையில் அவர் நியாயத்தீர்ப்பு
வழங்குகிறார்.(மத் 25:41-46)

இரக்கஞ்செய்யாதவனுக்கு
இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும் (யாக் 2:13)

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
(மத் 5:7)

#தானதர்மங்கள் செய்வதால்
#இம்மையில் நமக்கு உண்டாககூடிய  நன்மைகள்

தரித்திரருக்கு தயை செய்கிறவர்கள்
கர்த்தரை கனம்பண்ணுகிறார்கள்
(நீதி14:31) என்னைக் கனம் பண்ணுகிறவர்களை,நான்
கனம் பண்ணுவேன் என்று
கர்த்தர் சொல்லுகிறார் (1சாமு2:30)

ஏழைக்கு இரங்குகிறவர்கள் கர்த்தருக்ககே கடன்கொடுக்கிறார்கள் என்றும் அவன் கொடுத்ததை கர்த்தர் திரும்பக் கொடுப்பார்
என்றும் (நீதி 19:17)ஏழைகளுக்கு தரித்திரருக்கு கொடுக்கிறவர்கள்
தாழ்ச்சி அடைய மாட்டார்கள்
தாழ்ச்சியில்லாத ஒரு நிலை
அதாவது உயர் நிலை அவர்களின்
வாழ்வில் உண்டாகும் (நீதி 28:27)
வேதம் சொல்கிறது

வாரியிறைத்து ஏழைகளுக்குக் கொடுக்கிறவர்களின் நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்றும் அவர்களின் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும் (சங் 112:9)
என்றும் வாரியிறைத்தால் விருத்தி உண்டு என்றும் உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்;  தண்ணீர் பாய்ச்சுகிறவர்களுக்கு  தண்ணீர் பாய்ச்சப்படும்.(நீதி11:24-25)
என்று வேதம் சொல்கிறது.

அநியாயமாக சம்பாரிக்கப்பட்ட ஆஸ்திகள்,தரித்திரர்பேரில்
இரங்குகிறவனுக்கு கொடுக்கப்படுகிறது
அதை அவன் சேகரிக்கிறான் பெற்றுக்கொள்ளுவான் (நீதி 28:8)

சிறுமைப்பட்டடவர்கள்
மேல் சிந்தையுள்ளவர்கள் பாகியவான்களாய் இருப்பார்கள்
என்றும்,தீங்குநாளில் அவர்கள்
கர்த்தரால்  விடுவிப்பார் என்றும்,
கர்த்தர் அவர்களை பாதுகாத்து
அவர்கள் உயிரை காப்பார்,
என்றும்,அவர்களின் சத்துருக்களின்
இஷ்டத்திற்கு தேவன் அவர்களை 
விடாமல் காத்துக்கொள்வார் என்றும்
ஒரு வேளை அவர்கள் வியாதி படுக்கையில் இருந்தால்,அவர்களை
கர்த்தர் தாங்குவார் என்றும்,அவர்களின் வியாதி படுக்கை முழுவதையும் கர்த்தர்  மாற்றிப்போட்டு அவர்களை காப்பார்
என்று வேதம் சொல்கிறது(சங் 41:1-3)

அந்தரங்கமாக தர்மஞ்செய்கிறவர்களுக்கு பிதாவாகிய தேவனால் வெளியரங்கமாக பலன் அளிக்கப்படும்(மத் 6:3-4)

பசியாக இருக்கிறவர்களுக்கு
உணவளித்து,சிறுமைப்பட்டவர்களை திருப்தியாக்குகிறவர்களின்,வாழ்வில்
இருள் நீங்கி ஒளிமயமாகும் என்றும்
கர்த்தர் அவர்களை நித்தமும் நடத்தி,
மகா வறட்சியான காலங்களில் அவர்களின்
ஆத்துமாவைத் திருப்தியாக்கி,அவர்களின் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்
என்றும்,அவர்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பார்கள்
என்று கர்த்தர் சொல்லுகிறார்.(ஏசா58:10-11)

நாம் நற்கிரியை செய்யும் போது,
தேவன் நமக்கு கிருபையை பெருக செய்வார்,வாரியிறைத்து ஏழைகளுக்கு
கொடுத்தால் நம்முடைய நீதி என்றென்றும் நிற்கும்,தேவன் நமது நீதியின்
விளைச்சலை வர்த்திக்கப்பண்ணுவார்
(2கொரி 9:8-9)

#தானதர்மங்கள் செய்வதால் #மறுமையில் நமக்கு உண்டாககூடிய நன்மைகள்

பூமியிலே நாம் செய்யக்கூடிய தானதர்மங்கள்,நமது பரலோக
தேவனின் சந்நிதி வரை
வந்து,அது அவருக்கு
நினைப்பூட்டப்படுகிறது என்று
வேதம் கூறுகிறது.(அப் 10:4)

இயேசு கிறிஸ்து  மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்அப்பொழுது,தமது
வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து,வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
பசியாயிருந்தேன்,எனக்குப் #போஜனங்கொடுத்தீர்கள்;
தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் #தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் #சேர்த்துக்கொண்டீர்கள்;
வஸ்திரமில்லாதிருந்தேன்,
எனக்கு #வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன்,
என்னை #விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் #பார்க்கவந்தீர்கள் என்பார் என்றும்,
அதற்கு அவர்கள்,ஆண்டவரே
எப்போது நீர் வந்தீர்,எப்போது
உமக்கு நாங்கள் இவைகளை
செய்தோம்,என்பார்கள் அதற்கு
ஆண்டவர் இயேசு இவ்வாறாக
மறுமொழி கூறுவார்,மிகவும் #சிறியவர்களாகிய இவர்களில்
ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ,
அதை #எனக்கே #செய்யாதிருந்தீர்கள்
என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
(மத் 25:34-40)

இந்த உலகிலே பசியாய் இருக்கிறவர்களுக்கு
தாகமாய் இருக்கிறவர்களுக்கு வஸ்திரமில்லாமல்
இருக்கிறவர்களுக்கு
வியாதியாயிருக்கிறவர்களுக்கு
காவலிலிரருக்கிறவர்களுக்கு
மொத்தத்தில் தேவையில்
இருக்கிறவர்களுக்கு,நாம்
செய்கிற உதவிகள்,தானதர்மங்கள்
நற்கிரியைகள் எல்லாம்,இயேசுவுக்கே
நேரடியான செய்யப்படுவதாக,
இயேசுவே கூறுகிறார்.

இயேசு சொல்லுகிறார்..
விருந்து பண்ணும்போது
பதில் செய்ய முடியாத
#ஏழைகளையும் #ஊனரையும் #சப்பாணிகளையும் #குருடரையும்
அழைத்து அவர்களுக்கு #விருந்து
கொடுத்து உபசரிக்கிறவர்கள்,
பாக்கியவான்கள்,அவர்களுக்கு நீதிமான்களின் #உயிர்த்தெழுதலில்
#பதில் #செய்யப்படும் என்று....
(லூக் 14:13-14)

ஆமென்... அல்லேலூயா...

நினைவிற்கு: (நீதி 21:13) (நீதி 28:27)
(எசே16:49) (மத் 25:41-46)(யாக் 2:13)
(மத் 5:7) (1 பேது4:8)