Monday 30 November 2015

(11) முழுக்கு ஞானஸ்நானம் அவசியமா ? பகுதி-1

முழுக்கு ஞா
னஸ்நானம் அவசியமா ?

பகுதி-1

அந்தோனி:என்ன பீட்டர் நம்ம ஜேம்ஸிடம் முழுக்கு ஞானஸ்நானம் ரெம்ப அவசியமுனு சொன்னியாமுல அப்படியா வேதம் சொல்லுது ?

பீட்டர்: ஆமா,வேதம் அப்படிதான் சொல்லுது அந்தோனி, இது பெந்தகோஸ்தே சபைக்காரவங்களோ அல்லது ஏதாவது ஒரு மனிதர் கண்டுபிடிச்சு ஏற்படுத்துன சடங்காச்சாரம் இல்ல.இது இயேசுகிறிஸ்துவோட கட்டளை (மத்28:19) பிதாவாகிய தேவனே நியமிச்சது (யோ 1:33)

அந்தோனி: அப்படியா ?

பீட்டர்: நீ வேதத்தை நல்ல படிச்சுபாரு ஞானஸ்நானம் என்றாலே முழுகி எடுப்பதுதான்.
இது தேவ நீதி(மத் 3:15) அதனால தான் யோவான் ஸ்நானகன் இயேசுவை தடுத்தும் அவர் முழுகி ஞானஸ்நானம் எடுத்து தேவநீதியை நிறைவேற்றினார்.எனவே தான் ஆவியானவரால ஏவப்பட்டு அப்போஸ்தலர்கள் அதை போதிச்சாங்க (அப் 2:38) அதத்தான் நானும் நம்ம பிரதர் ஜேம்ஸ்-க்கு போதிச்சேன்

அந்தோனி: அப்படியா ? நான் இத  சும்மா ஏதோ ஒரு சடங்குமுனு  நெனச்சுக்கிட்டு இருந்தேன்,வேதத்துல இதுபற்றி இவ்வளவு விஷயம் இருக்கா !

பீட்டர்: ஆமா அந்தோனி,

விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். (மாற்கு 16:16)

ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் (யோ 3: 5)
என்று இயேசு கிறிஸ்து  பற்றியும் சொல்கிறார்

 மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்,அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.(அப் 2: 38) என்று பேதுரு போதிக்கிறார்.

மனம்திரும்புதல்,விசுவாசித்தல்,
ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தல்(ஞானஸ்நானம்) புது சிருஷ்டியாக மாறுதல் பரலோகராஜ்யத்தில் பிரவேசித்தல் என எல்லாம் ஒரு தொடர்வரிசையாக வருகிறது

#மனம்திரும்பாமல்,இயேசுவை விசுவாசிக்காமல் ஒருவன் எடுத்த எந்த ஞானஸ்நானமும், வேதத்தின்படி ஞானஸ்நானம் இல்லை

#மனம்திரும்பி இயேசுவை விசுவாசித்தும்,ஒருவன் ஞானஸ்நானம் எடுக்காமல் இருப்பதும் வேதத்தின்படி ஏற்புடையது அல்ல

ஞானஸ்நானத்தில் தண்ணிக்குள்ள முழுகுகிற சமயத்தில் நாம் இயேசுவோட சேர்ந்து அடக்கம் பண்ணப்படுகிறோம்.தண்ணியை விட்டு எழுந்திருக்கும் போது பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத்து புதிய ஜீவனைப்பெற்றுக்கொண்டு  
"மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக நாம் எழுந்திருக்கிறோம். இதெல்லாம் மனம்திரும்பிய பிறகு விசுவாசத்தில் நடக்கிற காரியம்.

இது குறித்து (ரோமர்:6:3-6)யில் தெளிவா எழுதியிருக்கு..

அப்பரம் ஞானஸ்நானம் என்பது ஒரு சடங்கு இல்ல அந்தோனி, பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத்தல்(ரோமர் 6:2)

ஞானஸ்நானம் என்பது தேவனைப்பற்றி பிடித்துக்கொள்ளும் ஒரு நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை என்று (1பேதுரு 3:21) ல்
எழுதியிருக்கு அது தேவ நீதி(மத் 3:15)
அந்த தேவ நீதிக்கு நம்ம இயேசு கிறிஸ்துவே கீழ்படிந்தது போல நாமும் கீழ்படிந்து முழுகி ஞானஸ்நானம் எடுக்கனும் அப்ப தான் பிதாவுக்கு பிரியமானவர்களாக நாம் இருப்போம் (லூக் 3:22)

அப்போஸ்தலர் நடவடிக்கைகளில் பார்த்தால் தெரியும்
கொர்நெலியு சிறந்த பக்திமான் நிறைய தான தர்மங்கள் செய்தவன் நியாயப் பிரமாணங்களை கற்றுத்தேர்ந்து அவைகளை தவறாமல் தன் வாழ்வில் கடைபிடித்தவன். அவனோடு சேர்ந்து அனேகர் அந்நியபாஷை பேசி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.இருந்தாலும் பேதுரு அவர்களை ஞானஸ்நானம் எடுக்கும்படி கட்டளையிட்டார்
(அப்:10:1,2,45,46,48,)

அந்தோனி: இப்ப புரியுதுப்பா இந்த ஞானஸ்நானத்தோட முக்கியத்துவம். நல்ல வேலை நான் குழந்தையா இருக்கும்போதே எங்க கோயில்ல எனக்கு ஞானஸ்நானம்  கொடுத்துட்டாங்க

பீட்டர்: உனக்கு என்ன புரிந்தது  அந்தோனி ! குழந்தையிலே ஞானஸ்நானமா? வேதத்துல எந்த குழந்தைக்காவது ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதை
நீ வாசிச்சு இருக்கியா ?

அந்தோனி: இல்லையே

பீட்டர்: இயேசு கிறிஸ்து,மக்களுக்கு சுவிசேஷம் சொல்லி, சீஷராக்கி ஞானஸ்நானம் கொடுக்கும்படி சொன்னாரா ?
இல்ல குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி சொன்னாரா ? அப்போஸ்தலர்கள்,குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் படி வேதத்துல போதித்திருக்காங்களா ?

அந்தோனி: இல்ல

பீட்டர்: அப்பரம் எத வச்சுக்கிட்டு  குழந்தையில உனக்கு கொடுத்தது ஞானஸ்நானம் என்று நீ சொல்ற ?

அந்தோனி: எங்க சபையில சொல்றததான் நான் சொல்றேன் பீட்டர்

பீட்டர்: உங்க சபையில சொல்றத விடு வேதாகமம் என்னசொல்லுதுனு நான் சொல்றேன் அத கவனி

அந்தோனி : சொல்லு பீட்டர் கவனிக்கிறேன்....

தொடரும்.......

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

மன மேட்டிமை

மன மேட்டிமை

ஒரு ஊரில் சுவிசேஷக்கூட்டம் நடைபெறும் மேடைக்குப் பின்புறம்,
ஊழியக்காரரை அழைத்து அந்த ஊரின் தலைவர் பேசுகிறார்

ஜோசப்: தம்பி இந்த ஊர்லயே சர்ச்சுக்கு வாரிவாரி கொடுத்து உத்தமமா வாழ்ந்துக்கிட்டு இருக்கிற ஒரே ஆளு நான்தான்... எனவே கூட்டம் ஆரம்பிச்ச உடனே என்ன பத்தி மேடையில் கொஞ்ஜம் மேன்மையா பேசுங்க...

ஜான்:மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
(2கொரி10: 17-18) என்று வேதத்தின் எழுதியிருக்கு ஐயா

ஜோசப் :என்ன தம்பி எழுதியிருக்கு ! நான் ஊருக்குள்ள எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா ?பணபலத்தாலும்  செல்வாக்காலும் என்ன வீழ்த்துறதுக்கு இந்த ஜில்லாவிலே யாருமே இல்ல தெரியுமா ?

ஜான்: ஐயா உங்களுக்கு ஒரு எச்சரிக்கை,
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.(நீதி16: 18)
வேதத்தில் இப்படி எழுதியிருக்கு
நீங்க இருக்கிற நிலையிலிருந்து விழுந்து போகாம நல்லா இருக்கனும்னு நான் விரும்புகிறேன்,
எனவே இந்த அகந்தையையும், மனமேட்டிமையும் தயவுசெய்து விட்டுவிடுங்க,இந்த மேட்டிமைதான் தேவதூதனா இருந்தவன அந்த ஸ்தானத்திலிருத்து விழவச்சு சாத்தானா  மாத்திடுச்சு

ஜோசப்: என்ன தம்பி இப்படி சொல்லிபுட்டிங்க,நான் என்ன திருத்திக்கிறேன் தம்பி,நான் விழாமல   மேன்மையா இருக்க என்ன செய்யனும் ?

ஜான் :மேன்மைக்கு முன்னானது தாழ்மை.(நீதி18: 12)மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.(நீதி 29: 23)

ஜோசப்: சரிங்க தம்பி நான் சாந்தமும், மனத்தாழ்மையுள்ளவனாக ஆக விரும்புகிறேன்,அதை யாரிடம் கற்றுக்கொள்ளனும் ?

ஜான்: இயேசு கிறிஸ்துவிடம்
(மத் 11: 29)நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்;
என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

இயேசு கிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதை பெரிதாக எண்ணாமல்,தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனிதனாகவந்து தம்மைத்தாமே தாழ்த்தி நமக்காக சிலுவை மரணத்தையே ஏற்றார் ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தியிருக்கிறார்
(பிலி 2: 6-9)
# நமக்கு உயர்வு தேவனிடத்திலிருந்து வரவேண்டும்,
# நாம் தேவனை மட்டுமே உயர்த்த வேண்டும்

ஜோசப்: சரி தம்பி இனிமேல் நான்
என் சுய பெருமையை ஒரு பொருட்டாக எண்ணவே மாட்டேன், கர்த்தரைக்குறித்து தான் மேன்மைப்பாராட்டுவேன்..
என்னை தாழ்த்தி இயேசுவின் நாமத்தை மட்டுமே உயர்த்துவேன்

ஜான்: ஆமென் அல்லேலூயா, வாங்க நம்ம மேடைக்கு போய்,
கர்த்தரைக்குறித்து மேன்மைப்பாராட்டி,
அவரின் நாமத்தை உயர்த்துவோம்


ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

Monday 23 November 2015

மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ,அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள்.

மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ,அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள்.

******************************************
t

ஜான்: வானத்து பறவைகள் விதைக்கிறதுமில்லை,
அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை;
தேவன் அவைகளை போஷித்து பிழைக்கவைக்கிறார்... 
பறவைகளை விட விசேஷித்த நம்மையும் போஷிப்பார் (மத் 6: 26)

ஜேம்ஸ்: (உற்சாகமாக)
ஆமென்.... அல்லேலூயா 

ஜான்: எனவே கவலைபடாம
நாம் நமது ஆகாரத்தை,ஆகாரம் இல்லாதவருக்கு கொடுக்க வேண்டும் (லூக் 3:11)

ஜேம்ஸ் :(சலிப்புடன்) ம்ம்ம்ம்....

ஜான் : காட்டு புஷ்பங்கள் 
உழைக்கிறதுமில்லை,நூற்கிறதுமில்லை;தேவன் அவைகளை உடுத்துவிக்கிறார்.... அவர் நம்மையும் உடுத்துவிக்கிறவர். (மத் 6:28-30)

ஜேம்ஸ்: (உற்சாகமாக) ஆமென்.... தேவனுக்கே மகிமை அல்லேலூயா 

ஜான் :எனவே அனேக ஆடைகள் உடைய நாம்,ஆடை இல்லாதவருக்கு ஆடை கொடுக்க வேண்டும் (லூக் 3:11)

ஜேம்ஸ்: (சலிப்புடன்) ம்ம்ம்ம்......

ஜான்: எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்;மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
நம்மையும் தேவன் திருப்தியாக்கி மிச்சம் எடுக்க வைப்பார் (மத்14: 20)

ஜேம்ஸ்: (உற்சாகமாக) ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா

ஜான் : நாம் விருந்துபண்ணும்போது,  ஏழைகளையும்,ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைத்து விருந்து கொடுக்க வேண்டும். லூக் (14:13) 

ஜேம்ஸ்: (திகைப்புடன்) ??????

ஜான்: என்ன திகைக்கிறாய் ?
 நமக்கு தேவன் கொடுத்ததே  மற்றவர்களுக்கு நாம் கொடுப்பதற்காக தான்.....
மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ,அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்25:45)
என்று இயேசு சொல்லியிருக்கிறாரே ?
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்க மற்றவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் 

ஜேம்ஸ் : எதுக்கு தேவன் கூட கொடுக்கனும் ?

ஜான் : நம்ம தேவைக்குபோக மற்றவைகளை இல்லாதவர்களுக்கு கொடுக்கத்தான் 

ஜேம்ஸ் : ????????? 


www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

Marvel Jerome

Thursday 19 November 2015

மற்ற மனிதர்களை வெறுக்க சொல்லி போதிப்பது இறைவேதமா ? பகைவர்களையே நேசிக்க சொல்லி போதிப்பது இறைவேதமா ?

ஜான் : நண்பா அமீர் எப்படி இருக்க ?

அமீர்: சீ..சீ.. என்னை உன்  நண்பன் என்று,கூப்பிடாதே

ஜான் : ஏன்டா நான் சின்ன வயசுல இருந்து உன்னை இப்படிதான கூப்பிடுகிறேன்.இப்ப உனக்கு என்னாச்சு!?

அமீர் : அது அப்போ, இப்ப நான் குர்ஆன் படிக்க ஆரம்பிச்சு இருக்கேன் இனிமேல் குர்ஆன் சொல்றபடி தான் நான் நடக்கப்போறேன்

ஜான் : என்னடா சொல்ற ?

அமீர்: எங்க இறை வேதம் குர்ஆன்ல  யூதர்களையும், கிறிஸ்தவர்களையும், நண்பர்களாக ஆக்க வேண்டாம் என்று (குர்ஆன் 5:51) எழுதியிருக்கு அப்பரம் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் மாறு செய்யுங்கள் (கிண்டல்,கேலி செய்யுங்கள்)என்று புஹாரி 3462 கட்டளையாக சொல்லியிருக்கு

ஜான்: ஆனா பரிசுத்த வேதாகமத்தில்,
உங்கள் எதிரிகளை சிநேகியுங்கள், உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் (லூக்கா 6:27) என்று உண்மையான தேவனுடைய  வேதம் கூறுகிறது
அதுமட்டுமல்ல
தன்னை காட்டி கொடுக்க வந்த யூதாஸை கூட இறைமகன் இயேசு  சிநேகிதனே என்று அன்பாக அழைத்தார்
(மத்தேயு 26:50)

அதனால நீ என்னை பகைத்தாலும், கிண்டல் கேலி செய்து என்னை அவமானப்படுத்தினாலும், என்னை நீ எதிரியாக நினைத்தாலும்,நான் உன்னை நேசிப்பேன் இன்னும் அதிகமாக நேசிப்பேன்... எனென்றால் உன்னை  நேசிப்பது போல் மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்று ஜீவனுள்ள மெய்யான இறைவன் பரிசுத்த வேதாகமத்தில் மனிதர்களுக்கு கட்டளை கொடுத்திருக்கிறார்

அமீர்: !!!

தொடரும்....

ஜீவ வழி-LIVING WAY

facebook.com/lwcomm

உண்மையான கடவுளின் விருப்பம் பாவத்திலிருந்து மனிதனை மீட்டு அவனுக்கு சமாதானத்தை கொடுத்து மன்னிப்பதா ? இல்லை மனிதனின் பாவத்தை அதிகமாக்கி அவனை வேதனைப்படுத்தி தண்டிப்பதா ?


====================================

அமீர்: என்ன ஜான் சோகம இருக்க எதாவது பிரச்சனையா ?

ஜான்: இல்லடா அமீர் நம்ம கூட படிச்ச சுரேஷ் இருக்கான்ல அவன இப்பதான் பார்த்து பேசுனேன்..

அமீர்: ஓ...அந்த போதக்கார நாயையா ?

ஜான்: டேய் !அவன் நம்ம நண்பண்டா ஆரம்பத்தில் எப்பயாவது ஒரு தடவ குடிக்க ஆரம்பிச்சான், நான் அப்பவே  குடிக்காதேனு சொன்னேன் அவன் கேட்கல,இப்ப அவன் குடிகாரனவே ஆகிட்டானே.... ச்ச்சே....

அமீர்: அவன் வெறும் குடி போதைக்காரன் மட்டும் இல்ல கஞ்ஜா,விபச்சாரம்,சூது என
எல்லா  பாவத்தையும் செய்கிறான்
அவன் பாவங்கள் பெருகிவிட்டது

ஜான் : எதனாலடா இப்படி ஆனான் ?

அமீர்: எல்லாம் அல்லாவின் செயல்.....

ஜான்: இது சாத்தானின் செயல்

அமீர்: இல்லப்பா இது அல்லாவின் செயல் அப்படிதான் எங்க குர்ஆன் சொல்லுது...

குர்ஆன் (3:178)
பாவம் செய்கிறவர்களை தண்டிக்காமல் அல்லா தாமதமாக இருக்கிறார் ஏனென்றால் அவர்களின் "பாவத்தை அதிகமாக்கி" அவர்களை இழிவுபடுத்தி வேதனைக்கு உட்படுத்த...

இதுவே அல்லாவின் விருப்பம் அதையேதான் நானும் விரும்புறேன்
அந்த சுரேஷ் கெட்டு நாசமா போகட்டும்.

ஜான் :ஆனால் உண்மையான கடவுளின் வழியை பின்பற்றுபவர்கள் உன்னை போல் விரும்ப மாட்டார்கள்.

உண்மையான கடவுள்
பாவிகள் மனம் திரும்பவேண்டும் என்று விரும்புவார் ..(மாற்கு 2: 17)

தன்னை விசுவாசிக்கும் யாவருக்கும் பாவ மன்னிப்பை அளித்து அவர்களை பரிசுத்தமாக்க விரும்புவார். (அப்போஸ்தலர் 26:18)

ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்புவார், (2 பேதுரு 3 :9 )

எல்லா மனிதர்களும் பாவத்திலிருந்து மீட்படைய வேண்டுமென்று விரும்புவார் (1தீமோத்தேயு 2:4)

அமீர்: அப்படியா ????

ஜான்: ஆம் நான் சாத்தானின் விருப்பத்தை அல்ல...
உண்மையான கடவுளின் விருப்பத்தையே விரும்புகிறேன்...

மனிதர்களின் பாவங்களை அதிகமாக்கி அவர்களை இழிவுபடுத்தி வேதனைக்கு உட்படுதுவது கடவுளின் செயல் அல்ல

மனிதர்களின் பாவங்களை போக்கி,விடுதலையாக்கி
அவர்களை உலகத்தில் எதற்கும் அடிமை இல்லாத பரிசுத்த மக்களாக மாற்றி அவர்களை இன்பமயமான நித்திய வாழ்வுக்குள் உட்படுத்துவதே நம்மை படைத்த கர்த்தராகிய கடவுளின் செயல்.....

நீ எதை விரும்ப போகிறாய் அமீர்?
உண்மையான கடவுளின் விருப்பத்தையா ? இல்லை சாத்தானின் விருப்பத்தையா ?

அமீர் :???????????

Jerard Maradona & Marvel Jerome

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

====================================

மனிதனுக்கு துன்மார்க்கத்தை செய்ய தூண்டுவதும்,மனிதன் பாவங்கள் செய்யபோதிப்பதும் இறை வேதமா ? மனிதனுக்கு நீதிநெறியை போதித்து அவன் பாவம் செய்யாமல் பரிசுத்த வாழ்க்கை வாழ போதிப்பது இறை வேதமா ?


ஜான்: என்ன அமீர் உங்க கடையில் வேலை பார்த்த பையன் இம்ரான்
50,000 ரூபாய் பணத்தை எடுத்துட்டு ஓடிட்டனாமே உண்மையா ?

அமீர்: ஆமாடா நண்பா நேத்து மத்தியம்
2 மணிக்கு, நான் கடைல இல்லாத சமயம் பாத்து கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை எடுத்துட்டு ஓடிட்டான்

ஜான் : இம்ரான் நல்ல பையன் ஆச்சே !
இதுவரைக்கும் அவன் இந்த மாதி தப்பு செஞ்ஜதே இல்லையே ! எப்படி?
அவனுக்கு என்னாச்சு ?

ஆமீர் : நேத்து காலை 11 மணிக்கு
ஷஹீஹ் புகாரி அத்தியாயம்:59 எண்
3222 யை படிச்சுகிட்டு இருந்தேன்,
இம்ரான் அதற்கு விளக்கம் கேட்டான், நானும் நல்ல விளக்கமா சொல்ல குர்ஆன்ல இருந்தும் சில வசனங்கலோட சேர்த்து அவனுக்கு அருமையா போதித்தேன்,அவனும் சில கேள்விகள் கேட்டான் அதுக்கு பதில் கொடுத்துட்டு.... அவன்ட கடைய பாத்துக்கடா இம்ரான் ! நான் போய் சாப்பிட்டுட்டு வந்துரேனு சொல்லிட்டுத்தான்
போனேன்......
 நான் போன அரைமணி நேரத்திலேயே அவன் பணத்தை எடுத்துட்டு ஓடிருக்கான்

ஜான் : அப்படி நீ அவனுக்கு என்னத்தடா போதிச்ச ? அவன் உன்னட்ட என்ன கேள்விகள் கேட்டான் ?
 
அமீர்: ஷஹீஹ் புகாரி அத்தியாயம் 59
எண் 3222 -னில் ஒருவன் அல்லாவுக்கு இணையாக எதையும் கருதாமல் (அதாவது)  அல்லாவுக்கு சமமாக எதையும் கருதாமல் வாழ்ந்து,அவன் இறந்து போனால் அவன் சொர்க்கத்தில் நுழைவான்,நரகம் செல்ல மாட்டான்,அவன் "விபசாரம்" புரிந்தாலும், "திருடினாலும்" சரி அவன் "நரகம் போகவே மாட்டான்" "நிச்சயம்" "சொர்க்கம்" தான் போவான் என்று அவனுக்கு போதித்தேன்... இதை கேட்டவுடன் இம்ரான் குஷியாகிவிட்டான்....

ஜான்: சரி,அவன் உன்னிடத்தில் என்ன கேள்விகள் கேட்டான் ?

அமீர் : அல்லாவை எதற்கும் இணையாக வைக்காம.... அல்லாவை மட்டும் தொழுது கொண்டு என்ன பாவம் செய்தாலும் அல்லா மன்னித்து சொர்கத்தில் அனுமதிப்பானா?என்று கேட்டான்...
அதற்கு நான்,ஆம் அனுமதிப்பான் அப்படிதான் (அல்குர்ஆன் :4:31) சொல்கிறது
என்றேன்.

#திருடினாலும்,#விபச்சாரம் செய்தாலும்  நாம் சொர்க்கம் போகலாமா ?
என்று கேட்டான்...
அதற்கு நான்,ஆம் தாரளமாக  போகலாம் அப்படிதான் ஷஹீஹ் புகாரி அத்தியாயம் :59 எண் 3222 சொல்கிறது என்றேன்.
 
ஜான் :அப்பரம் என்னாச்சு ?

அமீர் : விபச்சார விடுதிகள் எங்கே அதிகமாக இருக்கிறது ?என்று கேட்டான்... மும்பையில் அதிகம் இருக்கிறது என்று சொல்லி முடித்து..
நான் போய் சாப்பிட்டுட்டு வந்துரேன் கடையை பாத்துக்கோனு சொல்லிட்டு வீட்டுக்கு கெளம்பிட்டேன்..
அவளவுதான் 50,000 ரூபாய் பணத்தை எடுத்துகிட்டு எங்கயோ போயிட்டான்...

ஜான் : எங்கயோ ! இல்ல  மும்பைக்குதான் போயிருப்பான்...
நல்ல இருந்தவனுக்கு இப்படி துன்மார்கத்தை செய்ய சொல்லி தூண்டி அவன இப்படி நாசமா ஆக்கிட்டியே......  

அமீர் :நான் என்னப்ப செய்ய?
எங்க இறைவேதம் #குர்ஆன்ல  போதிக்கிறததான,நான் இம்ரானுக்கு சொன்னேன்

ஜான்: இறைவேதமா ????!!!!
மனிதனுக்கு துன்மார்க்கத்தை செய்ய தூண்டுவதும்,மனிதன் பாவங்கள் செய்யபோதிப்பதும் எப்படி இறைவேதம் ஆகும் ?

உண்மையான இறைவேதம் மனிதனுக்கு நீதிநெறியை போதித்து,அவன் பாவம் செய்யாமல் பரிசுத்த வாழ்க்கை வாழ போதிக்கும்....

(எபேசியர் 4: 28) திருடக்கூடாது என்றும்
(1கொரிந்தியர் 6:9-10) (கலாத்தியர் 5:19-21)
விபச்சாரம் செய்பவரும்,திருடரும், அவைகளை விட்டுவிட்டு மனம்திருந்தவில்லையென்றால் பரலோகம் செல்லவே முடியாது என்று உண்மையான இறைவேதம் திட்டவட்டமாக போதிக்கிறது(1பேதுரு 1:15-16)
நம் கர்த்தராகிய கடவுள் பரிசுத்தராய் இருப்பது போல நாமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு போதிக்கிறது.....

 இப்ப புரிகிறதா எது உண்மையான இறைவனின் வேதம் என்று.....

அமீர் :??????????????

Marvel Jerome

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

****************************

திருடுகிறவன் இனித் #திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
(எபேசியர் 4: 28)

அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், #விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
#திருடனும்,பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
(1கொரிந்தியர் 6:9-10)

மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: #விபசாரம்,வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே;இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச்சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(கலாத்தியர் 5: 19-21)

உங்களை அழைத்தவர்  #பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும்உங்கள்நடக்கைகளெல்லாவற்றிலேயும் #பரிசுத்தராயிருங்கள்.
நான் பரிசுத்தர்,ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்
(1பேதுரு 1:15-16)

கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.(பிலிப்பியர் 4: 8)

Wednesday 18 November 2015

மறந்து விடாதே!

மறந்து விடாதே !

நீ செய்த தவறுக்காக
உன் தாயும் தந்தையும் உன்னை வெறுத்தாலும் உன்னை வேண்டாம் ஏன்று அவர்கள் மறுத்தாலும் இயேசு உன்னை மறப்பதும் இல்லை  வெறுப்பதும் இல்லை
அவர் உன்னை தன் உள்ளங்கையில் வரைந்திருகிறார் உன் பாசமிகு பெற்றேரைவிட கோடி மடங்கு அதிகமாய் இயேசு உன்னை  நேசிக்கிறார்  
இதை நீ மறந்து விடாதே!

உன்னை நேசிக்கும் உன்னுடைய  சினேகித சினேகிதிகள் உனக்கு பெரிதாக இருக்கலாம் ஆனால் தன்  ஜீவனை விட உன்னை பெரியாக நினைத்தவர் உன்னோடு தான் இருக்கிறார் இதை நீ மறந்து விடாதே !

நீ நேசிக்கும் உன் உறவுகள்  உன்னை வெறுத்து ஒதுக்கி புறம்பே தள்ளி இருக்கலாம்
ஆனால்  நீ நேசிக்காமல் இருந்த போதும் இயேசு உன்னை வெறுக்கவும் ஒதுக்கவும் இல்லை
இதை நீ மறந்து விடாதே!

ஜீவ வழி-LIVING WAY

எல்லேரையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள்

எல்லேரையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள்

கிறிஸ்தவனாய் இருக்கும் நீ இயேசுவை போல்  எப்போதும் எல்லோரிடமும் இரக்கம் காட்டுகிறவாராய் வாழ கற்றுக்கொள்...

உனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாரபட்சம் இன்றி
அவரைப்போல்  அனைவரிடமும் அன்பாய் மட்டுமே இருக்கிறவராக உன்னை மாற்றிக்கொள்...

உனக்கு எதிராக தீமை செய்து உன் பெயரை கெடுத்து உனக்கு இழப்பை ஏற்படுத்தி உன்னை ஆழ்துயரத்தில் ஆழ்த்திய ஒருவன் மனம் வருந்தி உன்னிடத்தில் வந்து  மன்னிப்புக்கேட்டால் அவனை தயக்கமின்றி ஏற்றுக்கொள்...

ஏனென்றால் உன்னோடு இருக்கும் கிறிஸ்து மன்னிப்பிலே தயவு பெருத்தவர்,மனதுருக்கம் நிறைந்தவர் அவரது இரக்கத்தையும் கிருபையையும் பெற்று உலகத்தில் பிழைத்திருக்கிற உனக்கு இது  அனுபவ ரீதியாக நன்றாக தெரியும் எனவே அவனை உன்  முழு இருதயத்தோடு  சேர்த்துக்கொள்...

நீ தீமையில் திரும்பி
தவறி விழுந்து..
மீண்டும் மனம் வருந்தி
திருந்தி எழுந்து...
 இயேசு கிறிஸ்துவிடம் மறுபடியும் மறுபடியும் மன்னிப்புக்கேட்கிறாய்...

இயேசுவும் உன் மீது அன்பும் மனதுருக்கம் கொண்டு உன்னை மறுபடியும் மறுபடியும் மன்னித்துக்கொண்டே இருக்கிறவராய்

கிறிஸ்து உன்னிடத்தில் இப்படி இருக்க !

கிறிஸ்தவனாக நீ மற்றவர்களிடம் எப்படி இருக்கிறாய் ?

மன்னித்து மறக்கிற தேவ சுபாவம் உள்ள தேவ மனிதனாகவா ?

இல்லை....

மன்னிக்காமல் வெறுத்து ஒதுக்குகிற  மாம்ச சுபாவம் உள்ள அற்ப மனிதனாகவா ?

உன்னை நீயே ஆராய்ந்து பார்

உனக்கு எதிராக குற்றம் செய்து வருந்தி திருந்தியனை தேவனை போல் மன்னித்து மறுபடியும் ஏற்றுக்கொள்...

நீ செய்த குற்றம் "தேவனால்" மன்னிக்கப்பட்ட பிறகு நீ எப்படி தேவனிடத்திலிருந்து தேவ சமாதானத்தை பெற்று பழையபடி தேவனிடம் வந்து நல்உறவு கொள்கிறாயோ!

அதே போல் உனக்கெதிராக குற்றம் செய்தவனை நீ மனதார மன்னித்தப்பிறகு அவனை  சமாதானத்தோடு அழைத்து பழையபடி அவனிடத்தில் நல்உறவு கொள்... ...

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார் என்று எழுதியிருக்கிறதே...

தேவன் உன்னிடத்தில் எப்படி அன்பாய்  இருக்கிறாரோ அதேபோல் நீயும் மற்றவர்களிடத்தில் இரு...

அவர் எப்படி உன்னிடம் நீடிய பொறுமையுடன் இருக்கிறாரோ அதேபோல் நீயும் அனைவர்களிடமும் இரு...

ஆமென்

ஜீவ வழி-LIVING WAY

கர்த்தர் நல்லவர்

கிறிஸ்துவுக்குள் என்  சகோதர சகோதரிகளே !

கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் நல்லவராகவே இருக்கிறார்!
அவர் உங்களை அல்ல
உங்கள் பாவத்தையே வெறுக்கிறார்!

நாம் சில சமயம் தவறி போய் பாவம் செய்த போது அவர் நம்மை வெறுக்கவில்லை அடித்து நெறுக்கவில்லை
நாம் திரும்பிஅவரிடம் திருந்தி வருவோம் என்று ஆவலோடு எதிர்பார்த்தார்
அந்த நேரத்திலும் கூட
நம் ஜீவனை அழிவிலிருந்து பாதுகாத்தார்
அவர் நல்லவர்
அவர் மட்டுமே நல்லவர்
அவர் எவ்வளவு பெரியவர் !
வானாதி வனங்களும் கொள்ளாத
மாக பெரிய தேவன் !
அவர் நம்மீது கொண்டுள்ள அளவற்ற அன்பை நினைத்து பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது அழுகை வருகிறது
அவரின் நிகரில்லா அன்பை நம் இருதயத்தில் நினைத்து அதிலே நிலைத்து இருந்தால் எந்த பாவ எண்ணமும் நம்மை மேற்கொள்ள முடியாது

ஆம் என் அன்பு என்  சகோதர சகோதரிகளே !

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்...

அவரது அளவற்ற
அன்பைஅனுதினமும் ரசித்துப்பாடுங்கள்...

அவர் என்றும் நம்மை காக்கும் தேவனாகவே இருக்கிறார் அதை நினைத்துப்பாருங்கள்...

கர்த்தர் நம்மை பல வகை வேடர்களுடைய கண்ணிகளுக்கு தப்பிவித்துக்கொண்டு இருக்கிறார் அவரை வணங்கி வாழ்த்துங்கள்...

நம்மை எல்லா தீங்குக்கும் விலக்கி காக்கிறாரே
அவரை துதித்து போற்றுங்கள்...

கர்த்தரே நம் அடைக்கமும் நம் கோட்டையும் நம் தஞ்சமுமாய் இருக்கிறார் அவரை மட்டும் சார்ந்தவர்களாய் வாழுங்கள்...

உங்கள் பக்கதில் ஆயிரம் பேரும் உங்கள் வலது பக்கத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் நீங்கள்
விழ மாட்டீர்கள் எதுவும் உங்களை அனுகாது
சேதப்படுத்தாது...

ஆனால் நீங்கள் பழைய பாவத்தில் மீண்டும்
விழுந்து தீமையிடம் அனுகி சென்று உங்களை நீங்களே சேதப்படுத்தி கொள்ளாதீர்கள்...

கர்த்தர் உங்களை எல்லா தீங்கிற்கும் விலக்கி காக்கிறவராய் இருக்கிறார்...

நீங்கள் அவருடைய கட்டளைகளை உங்கள் வாழ்விலிருந்து விலக்கி  விடாமல் காத்து கைகொள்ளுங்கள்...

உங்களுடைய வாழ்நாளில் எந்த ஒரு தருணத்திலும் சத்துரு உங்களை எதிர்த்து ஜெயிக்க தேவன் அனுமதிக்க மாட்டார்...

ஆனால் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு எதிராக "பாவம் செய்து சத்துரு உங்களை ஜெயிக்கும் தருணத்தை  நீங்களே உண்டாக்கி விடாதீர்கள்...

ஆமென்

ஜீவ வழி-LIVING WAY

கிறிஸ்துவுக்குள் உங்கள் வாழ்வு என்றும் ஒளிமயமே

கிறிஸ்துவுக்காய் வாழ்ந்து கொண்டிருக்கும் தேவனுக்கு பிரியமாய் இருக்கிற தேவ பிள்ளையே!
 நீ எதற்காக உன் எதிர்காலத்தை குறித்து கவலைப்படுகிறாய் ?

நீ ஒரு சாதாரண மனிதன் போல் என்னைக்குறித்த தேவனுடைய சித்தம் எப்படி இருக்கப்போகுதோ ?
 என் எதிர்காலம் எப்படி அமையப்போகிறதோ?என்று உன் இருதயத்தில் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்காதே

கிறிஸ்துவை விசுவாசிக்கிற நீ சாதாரண மனிதன் இல்லை
வனத்துக்கும் பூமிக்கும் செந்தக்காரராகிய கர்த்தர் உன்னுடைய தகப்பன்
உன்னுடைய காலங்கள் அவருடைய கையிலிருக்கிறது என்பதை நன்கு புரிந்துகொள்!

ஆபிரகாமின் ஆசிர்வாதங்கள் கிறிஸ்து இயேசுவினால் உனக்கு செந்தமாய் இருக்கிறது
இதை உன் உள்ளத்தில் உணர்ந்துகொள்!

அதனால் நீ ஈசாக்கை போல வர வர விருத்தியடைந்து மாக பெரியவனாவாய் இதை உன் இருதயத்தில் வைத்து நன்றாக பிணைத்துக்கொள்!

நீ போகையிலும் ஆசிர்வதிக்கப்பட்டவன்...
நீ வருகையிலும் ஆசிர்வதிக்கப்பட்டவன்...
இதை நீ கடக்கும் வழிகளில் எல்லாம்  நினைத்துக்கொள்!

நீதிமானுடைய பாதை நடுபகல்  வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கும் சூரிய பிரகாசம்
நீதிமானுடைய பாதை ராஜ பாதை  என்று எழுதியிருக்கிறதே!

எதிர்காலத்தில் என் வாழ்வு அப்படி ஆகிவிடுமோ இப்படி போய்விடுமோ என்று கவலையுடன் வாழ்கிறவனாய் இருக்காதே...

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் நான் எதிர்காலம்  ஒருபோதும் தாழ்ச்சியடைந்த நிலையில்  இருக்கமாட்டேன் என்ற வைராக்கியத்தில்  வாழ்கிறவனாய் இரு...

கிறிஸ்துவுக்காய் வைராக்கியம் கொள்கிற உன் நீதியை தேவன் ஊரறிய உலகறிய நிச்சயம் விளங்கப்பண்ணுவார்

கிறிஸ்துவுக்குள் உன் எதிர்காலம் கண்டிப்பாக  ஒளிமயம் தான் அதையே எதிர் நோக்கிப்பார்த்திரு !

அது அமையும் காலம் வரை  யோசேப்பை போல் தாவீதை போல் பொறுமையோடு காத்திரு!

ஆமென்

ஜீவ வழி-LIVING WAY

பெயரில் மட்டும் கிறிஸ்தவர்களாய் அல்ல செயலில் கிறிஸ்தவர்களாய் வாழவேண்டும்

சர்வ வல்லமையுள்ள தேவன் நமது சொந்த பிதாவாய் இருக்கிறார்...

நம் அவரின் பிள்ளைகளாய் இருக்கிறோம்...

அவர் கருணை நிறைந்த அப்பா என்பதை கல்வாரியில் நமக்கு வெளிப்படுத்தி காட்டி விட்டார்...

தன் கடைசி செட்டு இரத்தம் வரை சிந்தி நம்மை மீட்டு விட்டார்...

அவர் சாவாமை உள்ளவராய் இருப்பது போல் நம்மையும் சாவாமை உள்ள மக்களாக தனது மரணத்தாலே மாற்றி விட்டார்...

நமது பாவத்தையும் சாபத்தையும் அவர் சிலுவையில் சுமத்து தீர்த்து
பூமியில் பரிபூண வெற்றி வாழ்வையும்
பரலோகத்தில் நிகரில்லா நித்திய ஜீவ வாழ்வையும்.  நமக்கு எற்கனவே எற்படுத்தி வைத்து விட்டார்...

நம் சத்தியத்தை அறிந்து கொள்ள நன்றாக புரிந்து கொள்ள சத்திய ஆவியானவரையும் நமக்குள் அனுப்பிவிட்டார்...

இப்படி அவர்தான் நம்முடைய நிலையான அன்பான ஒரே அப்பா என்பதை முழுமையாக நமக்கு நிரூபித்து காட்டி விட்டார்...

நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய பிள்ளைகாளாய் இருக்கிறோம் அந்த பிள்ளைகளுக்குரிய பண்பு நமக்குள் முழுமையாக இருக்கிறதா ?

நம்முடைய ,சொல், செயல்,வாழ்க்கை முறை,
என எல்லாம்,தேவன் நம்மீது காட்டிய தெய்வீக சுபாவத்தை இந்த உலகுக்கு எடுத்துக்காட்டுகிறதா ?

இல்லை மாம்சீக எண்ணம் கொண்ட நம் சுய சுபாவத்தை எடுத்துக்காட்டுகிறதா?

நம்முடைய,சிந்தனை,சொல், செயல்,வாழ்க்கை முறை,
என எல்லாம் தேவ அன்பையும்,ஞானத்தையும் பரிசுத்தத்தையும், சமாதானத்தையும், நீதியையும் இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும்...

நம்மடைய வாயிலிருந்து புறப்படும் எல்லா சொற்களும்   தேவனுடைய வார்த்தைகளை எடுத்துரைக்க வேண்டும்...

நம்முடைய வாழ்வில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படிகளும் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பிரதிபலிக்க வேண்டும்...

மொத்தத்தில்.........
நாங்கள் தான் பாரம்பரிய உண்மையான கிறிஸ்தவர்கள்...
கிறிஸ்தவ குடும்பத்திலேயே  பிறந்தவர்கள் கிறிஸ்தவ சூழ்நிலையில் வளர்ந்தவர்கள்  என்று தங்களை தங்களாகவே பெருமையாக பேசிக்கொண்டு இருக்கும் "பெயர்" கிறிஸ்தவர்களாய் வாழாமல்

வாழ்வது நான் அல்ல என்னில் வாழ்வது கிறிஸ்துவே என்ற உண்மையை மற்றவர்களிடம் வெளிப்படுத்திக்காட்டி இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவர் என்பதை நம் செயல்கள் மூலம் அறிவிக்கும் "செயல்" கிறிஸ்தவர்களாய் வாழ வேண்டும்

ஆமென்

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

Tuesday 17 November 2015

பாரம்பரியமா ? பரமனின் வார்த்தையா ?

இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்த
கிரயத்தால் மீட்டெடுக்கப்பட்ட நீதிமானே!
நீ சாத்தானின் வஞ்சக தந்திர கள்ள உபதேசத்தால் வஞ்சிக்கப்படாமல் உன் மனதை வேத வார்த்தைகளால் நிறைத்து காத்துக்கொள்...

ஏவாளும் ஆதாமும் ஏமாந்தது போல் நீயும் ஏமாந்துவிடாமல்
தேவனுடைய வார்த்தைகளை மட்டும் உன் இருதயத்தில் ஏற்றுக்கொள்...

பாரம்பரியம் என்று சொல்லிகொண்டு வேதாகமத்தில் இல்லாததை இயேசு கிறிஸ்து சொல்லாததை துனிந்து கடைபிடித்து உன் பந்தய பொருளை இழந்து பாதாளத்துக்கு போய்விடாதே!

அந்த போதகர் அப்படி போதிக்கிறார் இந்த பாதரியார்
இப்படி போதிக்கிறார் இவர்களில் யார் சொல்வது சத்தியம் என்பதை அவர்கள் வாதத்தை வைத்து முடிவு செய்துவிடாதே!

அவர்களில் யார் சொல்வது சத்தியம் என்பதை வேதத்தை வைத்து முடிவு
செய் !(யோவான்:17-17)
தேவனுடைய வசனமே "சத்தியம்"என்று
எழுதியிருக்கிறதே !

வேதத்தில் எழுதப்படாத பாரம்பரிய சபைகளில் உபதேசங்கள் சத்தியமாக இருக்குமோ? என்று உன் மனதில் நினைத்துக்கூட பார்த்து
விடாதே !(1கொரிந்தியர்:4-6)
எழுதப்பட்டதிற்கு மிஞ்சி எண்ணவேண்டாம் என்று
எழுதியிருக்கிறதே!


வேதத்தில் இல்லையென்றால் என்ன நாம் பாரம்பரியாமாக இதை தான் கடைபிடிக்கிறோம் இது தவறு இல்லை என்று யாராவது உனக்கு
போதித்தால் அவர் யாராக இருந்தாலும் சரி அவரின் போதனையை ஏற்றுக்கொள்ளாதே!(1பேதுரு:4-11)
ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின் படி போதிக்கடவன் என்று எழுதியிருக்கிறதே!

நான் மறுபடியும் எச்சரிக்கிறேன் வேதத்தில் இல்லாததை இயேசு கிறிஸ்து சொல்லாததை பாரம்பரியம் என்ற ஆட்டுத்தோலை போர்த்திக்கொண்டு வந்து பொய்களை போதித்து உன்னை பரலோகம் போகவிடாமல் தடுக்க பல
ஓநாய் கூட்டங்கள் சுற்றி இருக்கிறது...

எச்சரிக்கை!

ஆயிரம் பேர் வந்து ஆயிரம் சொல்லலாம் அதை விடு...
ஆண்டவருடைய வார்த்தை என்ன சொல்கிறது அதை மட்டும் எடு...

வானமும் பூமியும் ஒழிந்து போய்விடும் ஆனால் ஆண்டவருடைய
வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்து போகாது...

உன் பாரம்பரிய வழி உன்னை நரகத்திலிருந்து தப்பிவிக்காது
தேவனுடைய வார்த்தையின் வழிமட்டுமே உன்னை நரகத்திலிருந்து தப்பிவிக்கும்...

கடைசி நாளில் நியாயதீர்ப்பில் நீ தேவனுக்கு முன்பாக நிற்கும்
போது தேவனுடைய வார்த்தைகளை புறம்பே தள்ளி நீ கடைபிடித்த வேதத்தில் இல்லாத பாரம்பரிய காரியங்களோ சடங்குகளோ
சம்பர்தாயங்களோ வந்து உனக்காக சாட்சி சொல்லப்போவது
இல்லை...(யோவான் 12 :48)
என்னைத் தள்ளி என் வார்த்தைகளை
ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் என்று
எழுதியிருக்கிறதே!

மறுபடியும் சொல்கிறேன் வேதத்தில் இல்லாததை,இயேசு கிறிஸ்து நமக்கு சொல்லாததை யார் சொன்னாலும் அதை கடைபிடிக்காதே...

எது முக்கியமானது என்பதை நீயே நிதானித்து தெரிந்து கொள்...

பாரம்பரியமா ? பரமனின் வார்த்தையா ?

ஜீவ வழி-Living way 

கிறிஸ்துவுக்குள் உன்னால் எல்லாம் முடியும்

என்னால் இதை செய்ய முடியுமா?

இந்த காரியம் ஏணி வச்சா கூட எனக்கு எட்டாதே?

இதல்லாம் என் வாழ்கையில நடக்குற காரியமா ?

என்று எதை நினைத்தும் திகையாதே...

நீ உனக்காக வாழாமல் இயேசுவுக்காக வாழ்ந்து பார்,நீ தலை கீழா நின்றாலும் செய்ய முடியாத பெரிய காரியத்தை தேவன் ஒரு நொடியில் உனக்காக செய்து முடிப்பார்

நான் சாதாரண மனிதன் என்னால் என்ன செய்ய முடியும் என்று நீ வீணாய்
யோசித்துக்கொண்டு இருக்காதே...

இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக கொண்ட,நீ சதாரண மனிதன்அல்ல நித்திய மரணத்தை வெல்லப்போகிற அசாதரண மனிதன்...

நீ கனவிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத பிரம்மாண்டமான பெரிய
காரியங்களை தேவன் உன்னை வைத்து செய்து முடிப்பார்

நீ தேவனுக்கு பிரியமான காரியங்களை மட்டும் செய்தால்...எனவே...........

நீ கர்த்தர் விரும்புகிற காரியங்களை மட்டும் செய்பவனாய் இரு...

கர்த்தர் விரும்பாத காரியங்களை ஒதுக்கி புறம்பே தள்ளி வெறு...

ஜீவ வழி-LIVING WAY

facebook.com/lwcomm

சாத்தானின் தாக்குதலுக்கு நீ ஆளாக கூடாது... சாத்தான் தான் உன்னுடைய தாக்குதலுக்கு ஆளாகவேண்டும்...

உன்னை பாவ படுகுழிக்குள் இழுக்கும் இச்சையை விரும்பி இனிமேலும் பாவம் செய்யாதே...

ஈடு இணையற்ற தேவ அன்பை விட்டு மீண்டும் தடம் புரளாதே...

பிசாசுக்கு உன் வழியில் திரும்பவும் இடம் கொடாதே...

அவன் கொலைபாதகன் உனக்கு பாவ ஆசை காட்டி,உலக இச்சையை  உன் இருதயத்தில் கூட்டி மோசமான வழியில் உன்னை மிகவும் மோசமாக நடத்துவான்...அது உனக்கு ஏற்கனவே நன்றாக தெரியும்...

மறுபடியும் மோசம் போய்விடாதே...

சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டு நீ
அனுபவித்துக்கெண்டு இருக்கிற பேரின்ப சமாதானத்தை அடிக்கடி இழந்து விடாதே...

பயம்,படபடப்பு,அவிசுவாசம், நிம்மதி இன்மை,கெட்ட கனவு,நோய்கள்,விபத்து,பணகஷ்டம்,என பல வழிகளில் சாத்தான் உன்னை தாக்க வருவான்

அவைகளை கண்டு என்று அலறி திக்கி
திணறி நின்று விடாதே...

சாத்தானின் தாக்குதலுக்கு நீ
ஆளாக கூடாது...

சாத்தான் தான் உன்னுடைய
தாக்குதலுக்கு ஆளாகவேண்டும்...

சாத்தானின் சகல அதிகாரங்களையும் உன் காலுக்கு கீழே போட்டு மிதி...

அந்த அதிகாரத்தை உனக்கு
கொடுத்த இயேசுவின் அன்பை நினைத்து என்றென்றும் அவரை துதி...

ஜீவ வழி-LIVING WAY

பொருளாதார உதவி

பொருளாதார உதவி

உனக்கு உதவி வேண்டி எந்த மனிதனிடத்திலும் போய் வேண்டிக்கொண்டும் கெஞ்சிக்கொண்டும் வெட்டியாக காத்திருக்காதே...

உனக்கு ஏற்ற சமயத்தில் உதவிட வரும் கன்மலையாகிய கர்த்தரை கெட்டியாக பிடித்து அவர் சமூகத்தில் உனக்கு ஒத்தாசை வரும் வரை துதியுடன் காத்திரு...

 என் பொருளாதார குறைவுகளால் நான் தரித்திரன்ஆகிவிட்டேனே  என்ற உன் தரித்திரமான "அந்த சூழ்நிலையை" நினைத்து நீ வருத்தப்பட்டு வாட வேண்டாம்...

 உன்னை ஐஸ்வரியவானாக்க கிறிஸ்து இயேசு சிலுவையில் தரித்திரரானாரே!
"அந்த சத்தியத்தை" நினைத்து சந்தோஷப்பட்டு அவரை நீ பாட வேண்டும்...

என் குறைவுகளை போக்க என்னிடம் ஐஸ்வரியம் இல்லையே என்று உன் குறைவுகளை பார்த்து கவலையோடு கண்ணீர் விடாதே !

 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் என் குறைவுகளை எல்லாம் நிறைவாக ஆக்குவார் என்ற ஆழமான விசுவாசத்தில்  கர்த்தரை எதிர் பார்த்து ஆனந்த கண்ணீர் விடு!

உனக்கென்று தனியாக வாழ்வாதாரம் இல்லாத நிலையில் கூட அவர் உன்னை ஆச்சரியமாய் வாழ வைத்திருக்கிறார் !
எந்த பொருள்களும் உனக்கு  இல்லாத நிலையில் கூட அவர் உன்னை போஷித்து திருப்தியாக்கி நடத்தியிருக்கிறார் !
இதை நீ மறந்து விடாதே...

இந்த உலகத்தில் கோடான கோடி மக்களுக்கு கிடைத்திடாத
தேவ சமாதானத்தையே தேவன் உனக்கென்று  இலவசமாக தந்திருக்கும் போது  இன்று இருந்து நாளை அழிந்துபோகக்கூடிய உலக ஐஸ்வரியத்தையும் செல்வத்தையும் அள்ளி கொடுக்க மாட்டாரா?
நிச்சயம் சம்பூர்ணமாக கொடுப்பார் தேவனிடத்தில் விசுவாசம் உள்ளவனாய் இரு

தேவன் உனக்கு தந்திருக்கும்  
தேவ சமாதானத்திற்கு முன்னால் உலக ஐஸ்வர்யங்களும்  செல்வங்களும் ஒரு பொருட்டே இல்லை
இதை முதலில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்

கிறிஸ்துவுக்குள் தேவன் உன்னை சகலவிதமான ஆசீர்வாதங்களினாலும்
ஆசிர்வதிப்பார்

ஆம் சகோதர சகோதரிகளே
கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் உன் தலைக்கு மேலே....
ஆஸ்தியும் ஐஸ்வரியமும் இனி வரும் உன் கால்களுக்கு கீழே...

உன் வாழ்வில் கர்த்தரை மட்டும் வை எல்லாவற்றிற்கும் மேலே...

நீ நிச்சயம் இருக்க மாட்டாய் என்றும் கீழே...

ஆமென்

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

நீ எதை விதைக்கிறாயோ, அதை தான் அறுப்பாய்...

கர்த்தர் உன் சகாயராய் இருக்கிறார்,
மனிதர்கள் உனக்கு எதிராக என்ன
செய்ய முடியும் !
தேவனை தவிர யாருக்கும் நீ அஞ்சாதே...

தன்னை தொழுது கொள்கிற
அனைவருக்கும் அவர் ஐஸ்வர்ய சம்பூரணராய் இருக்கிறார்,
எனவே நீ யாரிடமும் போய் கடன்
கேட்டு கெஞ்ஜாதே...

உன் பெலவினங்களையும்,
உன் நோய்களையும்,
தேவன் முழுமையாக சுமந்து தீர்த்துவிட்டார்.உன் வியாதியை பற்றி யாரிடமும் சொல்லி புலம்பாதே...

இந்த வாக்குத்தத்தங்கள் எல்லாம் எப்போது எங்கள் வாழ்வில் நிறைவேறும்...

தேவனுடைய வசனத்தில் மூலம்,
எப்படி எங்கள் வாழ்கையின் நிலைமாறும்...
என்று சிந்தித்து வருந்தி
கொண்டிருக்காதே...

கிறிஸ்துவுக்குள் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது. என்று எழுதியிருக்கிறதே...

அதை நீ உன் முழு இருதயத்துடன்
விசுவாசிக்கிறாயா?

நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை நிச்சயம் காண்பாய்...

உனக்கு எதிராக இருக்கும் எதிர்மறை சூழ்நிலையை பார்த்து, இது மாறாது இந்த பிரச்சினை என்றும் ஓயாது, என்று அவிசுவாசமாய் பேசாதே...

அந்த எதிர்மறை சூழ்நிலைக்கு எதிராக தேவனுடைய வார்த்தைகளை எடுத்து பேசு.

பிறகு பார் உன் எதிர்மறையான சூழல்
நேர்மறையாக மாறிவிடும்...

உனக்கு இருக்கிற எல்லா பிரச்சினைகளும்,உன்னைவிட்டு நீங்கி ஓடி விடும்...

உன் பயங்கள்,பிரச்சினைகள், வியாதிகளை,நோக்கி
பார்ப்பதையும் அதை பற்றி அடிக்கடி பேசுவதையும் முதலில் நிறுத்து...

அதை முற்றிலும் இல்லாமல் போக செய்ய ஒரே தீர்வாக இருக்கிற, தேவனுடைய வார்த்தைகளை நோக்கி உன் முழு பார்வையையும்
செலுத்து...

பிரச்சினையை பேசாதே தீர்வை பேசு...

தரித்திரத்தை பேசாதே,தேவனுடைய மகிமையின் ஐஸ்வரியத்தை பேசு...

வியாதியை பேசாதே,தேவன் உனக்காக ஏற்படுத்தி வைத்திருக்கும் ஆரோக்கியத்தை பேசு...

தேவனுடைய ஜீவன் நிறைந்த வாக்குத்தத்தங்கள்,
உன் வாழ்வில் நிறைவேறுவதும், நிறைவேறாமல்
போவதும்,உன்னுடைய நாவின் அதிகாரத்தில் தான் இருக்கிறது
இதை நீ மறந்துவிடாதே...

நீ எதை விதைக்கிறாயோ,
அதை தான் அறுப்பாய்...

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

மதவாத அடக்குமுறைக்கு பயப்படாதே



இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மக்களுக்கு அறிவிக்கும் ஊழியர்களே !

 உனது ஊழியத்தில் மதவாத மரண சக்தியின் கூட்டத்தால் எதிர்ப்பு எழும்போது தைரியத்தோடும்
திடனோடும்  இரு.....

நீ ஜீவ(இயேசு) சக்தியை அறிவிக்கிற கூட்டம், ஜீவனை மரணம் எப்படி ஜெயிக்க முடியும் ?

ஒளியை இருள் எப்படி வெல்ல முடியும் ?

 அஞ்சாதே பயப்படாமல் தைரியமாக சத்தியத்தை எடுத்து மக்களுக்கு போதி

கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் பலரால் பகைக்கப்படும் போது,
சுவிசேஷத்தை எதிர்க்கிறவர்களால்,
நீ எல்லா பக்கங்களிலும், நெருக்கப்பட்டும் போது,
நீ  மனமுடைந்து பெலன் இழந்து உன் சுவிசேஷ வேலையை மட்டும் நிறுத்திவிடாதே...

ஏற்கனவே தோன்றுப்போன பிசாசிடம்  வம்படியாக போய் உன் வெற்றியை அவனிடம் விற்று விடாதே...

அற்ப பிசாசை ஆண்டவனாக கொண்ட, அந்த சொற்ப மாமிச பலம் கொண்ட, மதவாத  மனிதர்களிடத்தில் போய்,
தேவனுடைய ஆவியின்
பலம் பெற்ற நீ போய்  பயந்து பின்வாங்கலாமா !?

நீ வேதத்தை பிரசங்கிக்கும் போது உலகமே உன்னை எதிர்த்து நின்றால் கூட நீ யாருக்கும் அஞ்ஜக்கூடாது...
வெறும் உடலை மட்டும் அழிக்க கூடிய மதவாத  மனிதர்களின் மிரட்டலுக்கு பயந்து உன் ஊழியத்தின் வேகத்தை நீ குறைக்ககூடாது...

சரிர மரணம் ஒன்றும் நித்திய மரணம் அல்ல...கிறிஸ்துவின் மரணத்தை நீ உன் சரிரத்தில் சுமப்பதனால்
மரணம் உனது வாழ்வின் முடிவல்ல...

நீ தைரியத்தோடு நிற்க வேண்டும்...
என் அன்பு சகோதர சகோதரியே,
தேவனுடைய அனுமதி இல்லாமல் ஒருவனும் உன்னை தொடக்கூட முடியாது

உலகத்தில் இருக்கிறவனை காட்டிலும் உனக்குள் இருக்கிறவர் மிகவும் பெரியவர் என்பதை உன் இருதயத்தில் என்றும் நினை....

அண்ட சராசரத்தையே தன் வல்லமையான வார்த்தையால் தாங்குகிற தேவாதி தேவனாகிய  நம்முடைய கர்த்தருக்கு யார் இணை?...

 இடுக்கமான நேரத்தில் உன்னை எல்லா தீங்கிற்கும் விலக்கி காக்கும் ராஜாதி ராஜாவாகிய அவரே உனக்கு என்றும் துணை...

கிறிஸ்துவின் நிமித்தம்
உன்னை எதிர்ப்பவர்கள்  எண்ணிக்கையில் எத்தனை பேர்  இருந்தாலும் பரவாயில்லை....
அவர்களை விட உனக்குள் வாசமாய் இருக்கிற வானத்தையும் பூமியையும் படைத்த தேவன் இலக்கங்களின் எண்ணிக்கையில் அடங்கா ∞ மடங்கு பெரியவர்

அவருக்கு மேல் ஒருவரும் இல்லை அவர்தான் எல்லாம்,வானத்திலும் பூமியிலும் அவருக்கு அஞ்சாத ஒருவரும் இல்லை அப்பேர்பட்ட தேவனுடை ஐனமாகிய நீ அற்ப பிசாசின் மதமாத போக்கிற்கு
போய் பயப்படலாமா !?

மனிதனை தந்திரமாக ஏமாற்றி
இந்த பூமிக்கு அதிபதியாகிய
திருட்டன் பிசாசு
அக்கினி கடலில் தள்ளப்பட்டு அழிக்கப்பட போகிறான்
அந்த  பெய் சொல்லி புளுகுன்னிகாரனின் போலியான அநித்திய வல்லமையைக்கண்டு...

தாமாய் தெடக்கமும் முடிவும் இன்றி அநாதி காலமாய் அண்ட சராசரங்களுக்கு ஆண்டவராய் இருக்கிற ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா வானத்திற்கும் பூமிக்கும் சொந்தக்காரராகிய ஜீவனுள்ள தேவனுடைய மக்களாகிய நீ எப்படி பயப்படலாம் !?

அண்ட சராசரத்தை ஒப்பிட்டும் போது இந்த பூமி கண்ணுத்தெரியாத தூசி....

நீ ஆரதிக்கிற தேவன் எப்படிப்பட்டவர் என்பதை மறுபடியும் நல்ல உட்கார்ந்து யோசி...

நீ எதற்கும் பயப்படாமல் துணிச்சலோடு போய் இயேசுவே ண்டவர் என்று எல்லா இடங்களிலும் அறிவி...

தேவன் யார் என்பதை அறியாமல்  இருக்கிற எல்லோருக்கும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தைரியத்தோடு சென்று தெரிவி...

ஆமென்


ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

தேவனுடைய வார்த்தைகளை நம்பு

கர்த்தருடைய வார்த்தைகளை நம்பிய ஜனங்களுக்கு முன்னால்

எதிரே இருந்த செங்கடல் பிரிந்துவிலகியது ...
எதிர்த்து வந்த சேனைகள்  முறிந்து  மூழ்கியது ...
யோர்தான் விழகி குவியலாக நின்றது...
தடையாய் இருந்த ஏரிகோ இடிந்தது தகர்ந்தது...
புது வழியும் பிறந்தது
கானான் கிடைத்தது...

ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளை நம்பி செயல்பட்டார்கள்

ஆம் என் சகோதர சகோதரிகளே,
நாமும் கர்த்தருடைய வசனங்களையே நம்பியிருக்கிறோம் அவர்தான்
வானாதி வானங்களையும் பூமியையும் படைத்த  உண்மையான கடவுள்
அவருடைய வார்த்தைகள் மேல் முழுமையான நம்பிக்கை வைத்தால் மட்டுமே அசாதாரண அதிசய காரியங்கள் நம் வாழ்வில் நடக்கும்...

கர்த்தர் நமக்கு கொடுக்க விரும்பிகிற எல்லா நன்மையான காரியங்கள்  நமக்கு கிடைக்கும்...

அவரை முழுமையாக நம்பி அவர் நியமித்த வேத வழிகளில் மட்டுமே நாம் நடக்க வேண்டும்...

அவர் நியமிக்காத வேதத்தில் இல்லாத வேறு வழிகளை வெறுத்து ஒதுக்க வேண்டும்...

அவருடைய வார்த்தையின் ஆதாரமில்லாத
கர்த்தருடைய வேதத்தில் சொல்லாத வழிகள் இருளின் பாதாள வழிகள் எனவே அவற்றை யார் வந்து சொன்னாலும் நாம் அதை
 ஏற்க மறுக்க வேண்டும்...

கர்த்தருடைய வசனமே நம் கால்களுக்கு தீபமாகவும் நம் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்க வேண்டும்...

நிச்சயமாக என் சகோதர சகோதரிகளே !

நீ கர்த்தருடைய வார்த்தைகளை மட்டும் முழுமையாக நம்பி வாழ்ந்து பார்...

மனித முயற்சியால் கடந்து செல்ல முடியாத செங்கடல் போல் சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளை கர்த்தரின் வார்த்தையை உடைய நீ எளிதாய் பிழந்து ஜெயத்துடன் கடந்து செல்வாய்...

மாமிச பலத்தால் எவனாலும் முறியடிக்க முடியாத
உன்னை பட்சிக்க வரும் சாத்தானின் சேனைகளை
ஆண்டவர் உனக்கு அளிக்கும் ஆவியின் பலத்தால் முறித்து  மூழ்கடித்து நீ சத்துருக்களை வெல்வாய்...

நீ நடந்தது செல்லும் வழியில் பணப்பிரச்சனை பற்றாக்குறை பொருளாதார சுமைகள் என
வெள்ளப்பெருக்காய் புரண்டு வந்து உன்னை இழுத்து செல்ல வரும் யோர்தான்  போன்ற ஆறுகளை கர்த்தர் உனக்காக குவியலாய் நிற்க செய்வார்
உன்னை முழ்கிபோகாமல் அவரே உன்னை நடத்தி அக்கறைக்கு கொண்டுபோய் சேர்ப்பார்...

தேவன் உனக்கு கொடுக்க விரும்புகிற பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசம் என்னும் பரிபூரண ஜீவன் நிறைந்த வாழ்க்கைக்குள் உன்னை பிரவேசிக்க விடாமல் தடை மதிலாய் இருக்கிற ஏரிகோ என்னும் நம்முடைய அவிசுவாச வார்த்தைகளால் உண்டான சாத்தானின் அலங்கத்தை கர்த்தரின் வல்லமையினால் நீ தகர்த்து  தவிடு பொடியாக ஆக்கிடுவாய்   ஆர்ப்பரித்து என்றும் தேவனை நீ நன்றி உணர்வோடு துதித்துப்பாடிடுவாய் ...

தேவனுடைய வார்த்தையை(இயேசு) உடையவன் ஜீவனை உடையவன்...

இந்த ஜீவன்(இயேசு) நமக்கு பூலோகத்தில் பரிபூரண வாழ்வையும்
பரலோகத்தில் நித்திய வாழ்வையும் உண்டாக்கியிருக்கிறார்...

இந்த இரண்டையும் நாம் பெற்றுக்கொள்ள தேவனுடைய வார்தையின் வழியில் மட்டும் தான் நடக்க வேண்டும்...

அதற்கு தடையாக வரும் வரும் சாத்தானின் போலி உபதேசங்களையும் பொய்யான அந்தகார வல்லமைகளையும் ஆண்டவரின் வார்த்தையால் அடித்து விரட்ட வேண்டும்...

இந்த உலகத்தில் இயேசுவை போல் என்றுமே நாம் ஜெயிக்கிறவர்களாய் இருக்க வேண்டும்...

ஆம் சகோதர சகோதரிகளே,

கிறிஸ்துவுக்குள் எப்போதும் நம்மை வெற்றி சிறக்கப்பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்...

நாம் அடைந்த இனி அடையப்போகிற எல்லா வெற்றிகளுக்கும் "தேவனுடைய  வசனங்கள்" மட்டும் தான் சூத்திரம்...

ஆமென்

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15 அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழா
=============================

பீட்டர்: என்ன அந்தோனி உங்க கோயில்ல என்ன விஷேசம்? நெறய கூட்டம் இருக்கு மக்களெல்லாம் பொங்கல் வச்சுகிட்டு இருக்காங்க

அந்தோனி: இன்னைக்கு ஆகஸ்ட் 15 அன்னை மரியாள்  உடலோடும் ஆன்மாவோடும் விண்ணேற்றம் அடைந்த நாள் அதான் இவ்வளவு கூட்டம்

பீட்டர்: நீ என்ன சொல்ற ! அன்னை மரியாள் உடலோடும்... ஆன்மாவோடும் விண்ணேற்றமா? இதல்லாம் பைபிள்ல எங்க இருக்கு அந்தோனி ?

அந்தோனி: பைபிள்ல இல்லாமலா எங்க சர்ச்சுல இந்த நாளை கொண்டாடுவாங்க? இது பற்றி கண்டிப்பா பைபிள்ல இருக்கும்

பீட்டர்: நீ சொல்றது மாதிரி பைபிள்ல ஆதியாகமம்5:24 ல் ஏனோக்கு விண்ணேற்றம் பற்றியும், 2இராஜாக்கள்2:11 ல் எலியா விண்ணேற்றம் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது
கடைசியாக
மாற்கு16:19, லூக்கா 24: 51
 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரமேறுதல் பற்றி தான் எழுதப்பட்டிருக்கிறது...
மரியாளின் விண்ணேற்றம் பற்றி வேதத்தில் எங்கயும் எழுதப்படல அந்தோனி

அந்தோனி: வேதத்தில் எழுதப்படலேனா என்னப்ப?  ஒருவேளை மரியாளின் உடலோடு விண்ணேற்றம் அடைந்து உண்மையா கூட  இருக்கலாம்ல ?

பீட்டர்:1கொரிந்தியர்:4-6 ல்
"எழுதப்பட்டதிற்கு மிஞ்சி எண்ணவேண்டாம்"
என்று எழுதியிருக்கு..
அப்பரம்(யோவான்:17-17)
"தேவனுடைய வசனமே சத்தியம்"என்று எழுதியிருக்கு, அந்த சத்திய வசனத்தில் அன்னை மரியாளின் விண்ணேற்றம் பற்றி இல்லவே இல்லை,அந்தோனி நீ எதை நம்ப போற எதை விசுவாசிக்கப்போற ?

அந்தோனி:(சிந்தித்துக்கொண்டே)
பைபிள்ல உள்ள தேவனுடைய வார்த்தைகள் மட்டுமே சத்தியம்.எனவே நான் அதை மட்டும் தான் நம்பப்போறேன், விசுவாசிக்கப்போறேன்,
ஏனென்றால் யோவான்12:48-ன்படி நியாயத்தீர்ப்பில் தேவனுடைய வார்த்தைகள் தான் நம்மை நியாயம் தீர்க்கப்போகிறது  

பீட்டர்: சூப்பர், இதைத்தான் தேவன் எல்லாரிடமும் எதிர்பார்க்கிறார்

அந்தோனி:ஆமா பீட்டர்,ஆனா எங்க சர்ச்சுல உள்ள பாதர்,அன்னை மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணேற்றம் அடைந்தார் என்றும்,பிறகு பிதாவாகிய தேவனால் அவர் விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசியாக முடிசூட்டப்பட்டார் என்று வேதத்தில் இல்லாததையெல்லாம் நம்ம மக்களுக்கு போதிக்கிறாங்கப்பா

பீட்டர்: அந்தோனி
(1பேதுரு:4-11) -ல்
"ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின் படி போதிக்கடவன்"என்று எழுதியிருக்குப்பா

அந்தோனி: அடப்பாவிகளா !?

தொடரும்.......

ஜீவ வழி-LIVING WAY

facebook.com/lwcomm

கிறிஸ்து இயேசுவுக்குள் நீ தேவனுடைய பிள்ளை...

கிறிஸ்து இயேசுவுக்குள் நீ தேவனுடைய பிள்ளை...

உனக்கு ஈடு இணை இந்த உலகத்தில் யாரும் இல்லை...

நீ உன்னதமான தேவனுடைய கையின் செய்கையாய் இருக்கிறாய்...

இதைஉணராமல்,
அவிசுவாச வார்த்தைகளை பேசி,ஏன் ஆண்டவரின் செய்கை உன் வாழ்வில் நடைபெறவிடாமல்  நீயே தடுக்கிறாய்...

விசுவாச வார்த்தைகளை
அறிக்கை செய்து தேவன் உன்னை வைத்து செய்யப்போகிற பெரிய காரியங்களுக்கு வழியே ஆயத்தப்படுத்து...

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட உன்னை தேவன் தன் பிள்ளை என்றும், நீதிமான் என்றும், பரிசுத்தவான் என்றும் அழைக்கிறார்....

ஆனால் நீ உன்னை தூசி என்றும், துரும்பு என்றும், குப்பை என்றும், சொல்லிக்கொண்டு உன்னதமானவரின் அழைப்பை உதாசினப்படுத்துகிறாய்...

இது தான் தேவன் எதிர்ப்பார்க்கும்  தாழ்மையான பேச்சு என்று  நினைத்து, தேவனுடைய வார்த்தைகளுக்கு நீ எதிராக பேசுகிறாய்...

தேவனுடைய வார்த்தைகளுக்கு எதிர்த்து பேசாமல், உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் என்று அப்படியே ஏற்றுக்கொள் அதுதான் தேவன் எதிர்பார்க்கும் தாழ்மை...

 ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

நற்செய்தி அறிவியுங்கள்

நற்செய்தி

ஒரு ஊரில் ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள ஒரு தெருவில் ஒரு டீக்கடை இருக்கிறது பலர் அந்த டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்
அதில் சுரேஷ் மற்றும் பிரதாப்
பேப்பர் படித்துகொண்டு இருக்கிறார்கள்.அந்த டீக்கடை வாசலுக்கு முன் ஒரு கார் வந்து நின்றது.காருக்குள்ளே இருந்து குமார் என்னும் நபர் கைபிரதிகளுடன்(நோட்டீஸ்)
இறங்கி அங்கே இருந்த எல்லோரிடமும் அந்த நோட்டிஸை வினியோகித்தார் .
அந்த நோட்டீஸ் சுரேஷ் மற்றும் பிரதாப் கையுக்கும் வந்து சேர்ந்தது. அந்த நோட்டீஸின் தலைப்பு "நற்செய்தி" என்று எழுதியிருந்தது. அதை அவர்கள் ஆர்வத்தோடு படிக்க தொடங்கினார்கள்.பிறகு  குமார் நோட்டீஸை எல்லாம் கொடுத்துவிட்டு தன் காரை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது
சுரேஷ் மற்றும் பிரதாப் நோட்டீஸை சுருட்டி தங்கள் சட்டை பையில் வைத்துக்கொண்டே அவரை பின் தொடர்ந்து சென்று அவரை அழைக்கிறார்கள் .

பிறகு.........

சுரேஷ் :ஹலோ பிரதர் கொஞ்சம் நில்லுங்க

குமார்: சொல்லுங்க தம்பி!

சுரேஷ்&பிரதாப்: பிரதர் உங்க நோட்டீஸ்ல மனுசனுக்கு எற்படுற  பிரச்சனைகளை பற்றி எழுதியிருக்கு, இதுல பாதிக்கு மேல எங்க வாழ்கையில நடந்துக்கிட்டு இருக்கு .எங்க எதிர்காலம் இருள் நிறைந்ததா ஆகிடுமோனு கவலையா இருக்கு

குமார் :சகோதரர்களே!
கவலப்படாதிங்க, உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கு. ஆண்டவராகிய இயேசு உங்கள் வாழ்வை ஒளிமயமாக்குவார்.

சுரேஷ்: எப்படி சொல்றீங்க பிரதர் ?

குமார்: கடவுளுடைய குமாரன் இயேசுவை ,நோக்கிப்பார்த்தவர்கள் பிரகாசமடைந்தார்கள். அவர்களுடைய முகங்கள் வெட்கப்படவில்லை என்று வேதம் கூறுகிறது..

சுரேஷ்: இயேசுவா! அவரு கிறிஸ்தவ மதத்தோட தலைவர் தானே?

பிரதாப்: கிறிஸ்தவ மதத்துக்கு  உரியவர் தானே ?

குமார்:இயேசு மதத்தலைவர் இல்ல சகோதரா !அவர் மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்
அவர் எல்லா மனிதர்களுக்கும் உரியவர்.

சுரேஷ் :அப்படியா ?

குமார்:ஆமா,ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வானத்தையும்,பூமியையும் படைத்தவர்.வானத்திற்கும் பூமிக்கும் சொந்தக்காரர். வானத்திலும் பூமியிலும் பெரியவர், மிகவும் நல்லவர், மகா வல்லவர், இவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. இவர் அன்பாகவே இருக்கிறார். அவர் உங்களை அன்போடு நேசிக்கிறார்.

பிரதாப் :எனக்கு இயேசுவை பற்றி ஒன்னுமே தெரியாது அவர் என்னையுமா நேசிப்பார் ?

குமார் : உங்களை படைத்த கடவுளே அவர்தாங்க தம்பி.உங்களுக்காக தன் உயிரயே கொடுக்கும் அளவுக்கு உங்களை நேசிக்கிறார். அந்த அளவில்லா அன்பை கல்வாரி சிலுவையில் காட்டியும் இருக்கிறார் .
தன் கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி உங்களுக்கு இரட்சிப்பையும் விடுதலையையும் ஏற்படுத்தி வச்சிருக்காருப்பா

பிரதாப்: (சிரித்தபடி)
அப்படியா ! நான் ஒரு ஆஸ்துமா நோயாளி ...என்னை எங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கே பிடிக்காது... எல்லாரும் என்ன வெறுக்கிறாங்க .
இதுவரைக்கும் நான் நம்பியிருந்த தெய்வங்கள் எல்லாம் என்னை கைவிட்டுருச்சு ....
இயேசுவுக்கு மட்டும் என்ன எப்படி பிடிக்கும்?

குமார்: தகப்பனும் தாயும் உங்களைத் தள்ளியிருக்கலாம். இயேசு உங்களைத் தள்ளமாட்டார்.
இயேசுவே உண்மையான தெய்வம் அவர் ஒரு போதும் உங்களை கைவிடமாட்டார் தம்பி !

பிரதாப்: என் வியாதிக்கு நான் வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரை எடுத்துக்கனும் வேறு வழியே இல்லைனு  எங்க டாக்டர் சொல்றாரு.
இயேசு என்னை குணமாக்கி எனக்கு விடுதலைக்கொடுப்பாரா ?

குமார்: நீங்க இயேசு கிறிஸ்துவை முழு மனதோடு விசுவாசித்தால் தேவனுடைய குணமாக்கும் மகிமையை உடனே பார்ப்பீங்க. இயேசு உங்களை விடுதலையாக்கினால் நீங்க 100% பூரண விடுதலை அடைந்து விடுவீங்க தம்பி !

சுரேஷ்:இயேசு கடவுளின் மகன்னு நீங்க சொல்றீங்க, அவர் எதுக்கு
 இரத்தம் சிந்தனும் ? எதுக்காக சிலுவைக்கு வந்து மரிக்கனும் ?

குமார் : சொல்றேன் கேளுங்க தெடக்கத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார். பிறகு கடவுள் பூமியில் உள்ள அனைத்தையும் உண்டாக்கி கடைசியாக மனிதனை உண்டாக்கினார். உலகத்துல உள்ள அனைத்தையும் கடவுள் மனிதனுக்காக படைத்தார்.
அவருடைய படைப்பில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் தான், ஏனென்றால் கடவுள் மனிதனை தம்முடைய சாயலில் படைத்தார்
அவர் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார் கடவுள் மனிதனை மிகவும்  நேசித்தார்.

கடவுள் அவர்களை நோக்கி:

நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும்  வானத்து பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற எல்லா  உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதித்தார். பிள்ளைகளின் கீழ்ப்படிதலைப் பெற்றோர்கள் விரும்புவது போல கடவுளும் மனிதனிடமிருந்து கீழ்ப்படிதலை எதிர்பார்த்தார். கடவுள் மனிதனுக்கு சுயமாக முடிவெடுக்கும் திறனையும் தந்தருளினார், ஆனால் மனிதன் அதை தவறாக பயன்படுத்தி கடவுளுக்கு கீழ்ப்படியாமற் போனான்.

சுரேஷ்:அதனால் என்ன நடந்தது ?

குமார் : மனிதனின் கீழ்ப்படியாமை நிமித்தம் பாவம் இவ்வுலகில் தோன்றியது. இந்த பாவம் மனிதனை கடவுளிடமிருந்துப் பிரித்தது.

சுரேஷ்: அது எப்படி ?

குமார்: கடவுள் மனிதனை மிகவும் நேசிக்கிறார் ஆனால்
பாவத்தை வெறுக்கிறவராக  இருக்கின்றார்.

சுரேஷ்: அப்படியா பிரதர் ?

குமார்: ஆமாங்க தம்பி,
பாவத்தின் சம்பளம் மரணம். எல்லோரும் பாவம் செய்து நரகத்தில் முடிவில்லாத மரண தண்டனை பெறுவதற்கு ஏதுவானார்கள்.
நன்மைகள் செய்வதின் மூலமாக இந்த பாவ சாபத்திலிருந்து மனிதனால் விடுதலை பெற முடியவில்லை.
மனிதர்கள் இருளின் சக்திகளுக்கு செவிகொடுத்து அக்கிரமத்தையும், அநியாயத்தையும் செய்தான்.
கடவுள் மனிதனுக்கு நன்மை தீமையை பகுத்துஅறியும் அறிவை கொடுத்திருந்தும்  அவன் தீமையே விரும்பி செய்து தனது ஆன்மாவை அழிவுக்கு உட்படுத்திக்கொண்டிருந்தான்

பிரதாப்: இந்த நிலையிலிருந்து மனிதனை மீட்டு காப்பாத தான் இயேசு பூமிக்கு வந்தாரா ?

குமார்:ஆமாங்க தம்பி
மனிதனின் பாவ கட்டுகளை  சிலுவையாலே இயேசு உடைத்தார்

பிரதாப்: அதற்க்கு எதுக்கு இயேசு சிலுவையில் பலியாகனும் ?

குமார்: பாவம் நிறைந்த மனித இனத்தின் மீட்பிற்காக,பாவ நிவாரணமாக பாவமே இல்லாத ஒரு உன்னதமான பலி தேவை என்று கடவுள்  சொல்லியிருக்கிறார்.
கடவுளைத்தவிர பாவம் இல்லாத உன்னதர் யாரும் இல்லை
ஆதலால் தான் கடவுளோடு கடவுளாக ஒரே ஐக்கியத்தில் இருந்த கடவுளின் மகன் இயேசு இவ்வுலகில் மனிதனாக வந்து மொத்த மனித இனத்தின் பாவங்களையும் சாபங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டு

மனிதன் மீது செலுத்தப்பட வேண்டிய கடவுளுடைய கோபத்தை இயேசு தன் மீது வாங்கிக்கொண்டு
தன்னையே கடவுளுக்கு முன்பாக பலியாக கொடுத்தார்

இப்படியாக கடவுள் தம்முடைய ஒரே மகனயே உலகத்திற்கு தந்தருளி தம்முடைய அன்பை உலகிற்கு வெளிப்படுத்தினார்

சுரேஷ் : கடவுள் மனிதனை இந்த அளவுக்கா நேசிக்கிறார் ஆச்சரியமா இருக்கு ?

குமார் : ஆமா தம்பி  கடவுள்  அன்பாகவே இருக்கிறார்.எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்றும்,
எல்லா மனிதர்களும் வேதனை நிறைந்த நிலையான
நரக தண்டனைக்கு தப்பி
முடிவில்லாத பரலோக(மோட்ச)
வாழ்வை பெறவேண்டும் என்பதே
கடவுளின் விருப்பம்.ஆனா அதற்கு மனிதனுடைய பாவம் தடையா இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவை
விசுவாசிப்பதன் வழியாக மட்டுமே
அந்த தடை விலகும்.
இயேசுவின் மூலமாய் மட்டுமே மனிதன் பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து, சமாதானம் நிறைந்த வெற்றிவாழ்வையும்,
நிலையான நரக  தண்டனையிலிருந்து, முடிவில்லா பரலோக(மோட்ச) வாழ்வையும் பெற முடியும்.
இயேசுவே பரலோகத்திற்கு செல்ல ஒரே வழி அவர் அல்லாமல் யாரும் கடவுளிடம்  சேர முடியாது.

பிரதாப்: சரிங்க பிரதர் இரட்சிப்புனா என்ன ?

குமார் : இரட்சிப்பு என்றால் பாவம்,வியாதி,தரித்திரம்,பயம்,சாபம்,
முடிவில்லா நரக தண்டனை ஆகிய இருளின் சக்திகளிடமிருந்து விடுதலை ஆகும்.
இவைகளை இயேசு
 சிலுவையின் மேல் தமது சரீரத்தில் சுமந்து,இருளின் சக்திகளிடம் இருந்து நமக்கு விடுதலையை ஏற்படுத்தி  வைத்திருக்கிறார்.

பிரதாப்: சரி ஓ.கே பிரதர்  ஒரு மனிதன் இரட்சிப்பை பெறனுமுனா
 அவன் என்ன செய்யனும் ?

குமார்: அவன் தன் பாவ நிலையை உணர்ந்து கடவுளுக்கு முன் தன்னை தாழ்த்தி மனம் வருந்தி இயேசுவை விசுவாசிக்க வேண்டும்.இயேசுவே என் ஆண்டவர் என்று ஒரு மனிதன்  வாயினாலே அறிக்கையிட்டு,
அவரை தன் உள்ளத்திற்குள் வரும்படி அழைப்புக்கொடுக்க வேண்டும். அவர் உள்ளத்திற்குள் வருவார்
ஒளி வந்த உடன் இருள் இல்லாமல் போவது போல், இயேசு வந்த உடன் அந்த மனிதனிடம் இருந்த தீமையான இருளின் காரியங்கள் எல்லாம் மறைந்து அவன் இரட்சிக்கப்பட்டு புது வாழ்வைப்பெறுவான்.

சுரேஷ்: பிரதர் எனக்கு தெரிஞ்ச கிறிஸ்தவங்களே நீங்க சொன்ன அந்த இருளின் அடிமைதனத்திலிருந்து  இரட்சிக்கப்படாம இருக்காங்களே !

குமார் : சகோதரரே ஒரு மனிதன் சும்மா  கிறிஸ்தவ பெயரை வைத்தால் மட்டும் அவன் இரட்சிப்பை பெற முடியாது ...

அவன் கிறிஸ்துவின் மீது முழு விசுவாசம் வைத்தால் தான் இரட்சிப்பை அடைய முடியும்...

அவன் ஏதோ ஒரு கிறிஸ்தவ குடும்பத்துல பிறந்தால் மட்டும் அவனுக்கு தானா இரட்சிப்பு ஏற்படாது

கிறிஸ்துவுக்குள் புது மனிதனாக பிறந்தால் தான் அவனுக்கு இரட்சிப்பு ஏற்படும்

நீங்க உங்கள சுற்றி இருக்கிற பெயர் கிறிஸ்தவங்களோட வாழ்கையை பார்க்கிறத விட,இயேசு கிறிஸ்து மனிதர்களிடம் எப்படி வாழ்ந்தார்
அவர் நம்மை எப்படி வாழ சொன்னார்.
 என்பதை வேதாகமத்தில் பாருங்கள்
வேதாகமே சத்தியம்
இந்த உலகத்துல இருக்கிற எல்லா மனிதர்களுக்கும் கடவுளால் நியமிக்கப்பட்ட ஒரே முன் மாதிரி இயேசு கிறிஸ்து மட்டும் தான் தம்பி

உண்மையிலே
இரட்சிக்கப்பட்டவங்க எதற்கும் அடிமையா இருக்க மாட்டாங்க
அவங்க உலகத்தில் கீழ்நிலையில் நிலையில் இருக்கவே மாட்டாங்க, சகல இருளின் சக்திகளையும் தங்களுக்கு கீழ்படுத்தி ஆண்டு கொள்கிறவர்களாவும்,
இந்த உலகத்தில் எல்லோரையும்   நேசிக்கிறவர்களாகவும் எல்லோரிடமும் அன்பு செய்கிறவர்களாகவும்
தன்நலமற்ற தியாக மனம் கொண்டவர்களாகவும் இருப்பாங்க.
எல்லாருக்கும் பிரயோஜனமான ஒளியின் மக்களாக வாழ்வாங்க

பிரதாப் & சுரேஷ் :
இன்றே நாங்கள் இயேசுவே எங்கள் ஆண்டவர் என்று முழுமனதுடன்   அறிக்கையிட்டப்போகிறோம்
நாங்களும்  இரட்சிக்கப்படனும். எங்களுக்கும் இயேசு இந்த உலகத்தில் வெற்றி வாழ்கையும்,பரலோகத்தில்
(மோட்சம்) முடிவில்லா ஆனந்த வாழ்கையும் தனது கல்வாரி பாடுகள்
மூலம் சம்பாதித்து வைத்திருக்கிறார் அதை நாங்கள் விசுவாசித்து பெற போகிறோம்.

குமார்: தேவனுக்கே மகிமை
உங்கள் விசுவாசத்தின் படியே உங்களுக்கு நிச்சயமாக ஆகும்.

அமென்

@@@@@@@@@@@@@@@@@@

இந்த உரையாடலை வாசித்துக்கொண்டிருக்கிற என் அன்பு சகோதர சகோதரிகளே!

வாழ்வில் பல்வேறு பிரச்சினையால் சலிப்படைந்து விட்டீர்களா ?

பண நஷ்டத்தினால் வாழ்க்கையில் வெறுப்படைந்து விட்டதா ?

வேதனையால் வாடுகிறிங்களா?

 பாசத்திற்குரியவர்கள் உங்களை ஏமாற்றிவிட்டார்களா ?

பேய் பிசாசு பில்லி சூனிய கோளாறுகளால் துன்படுகிறீர்களா ?

கடந்த காலத்தில் செய்த தவறுகள் உங்களை மிகவும் வருத்துகிறதா ?

உங்கள் வாழ்க்கையில் எங்கும் இருள் நிறைந்து இருக்கிறதா ?

மருத்துவர்களால் குணமாக்க முடியாத வியாதியின் பிடியில் இருக்கிறீர்களா ?

இனி நம்பிக்கையே இல்லை இது தான் என் தலை எழுத்து என்று   எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா ?

 உங்களுடைய பிரச்சினைகள் எல்லாவற்றையும் இயேசு அறிந்திருக்கிறார்.
உங்களுக்கு உதவி செய்யும்படி இயேசு உங்கள் அருகிலேயே இருக்கிறார்.
ஆம் அவர் உங்கள் கண்ணீரை நிச்சயமாகவே துடைப்பார்.
அவரால் செய்ய முடியாத  காரியம் ஒன்றுமே இல்லை.அவர் உங்கள் வாழ்விலும் பெரிய அற்புதங்கள் செய்வார்......
ஆனால் இயேசுவை நீங்கள் ஆண்டவராக உள்ளத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

ஆம் என் அன்பு சகோதர சகோதரிகளே!

இயேசு உங்களை தன் சாயலாக படைத்திருக்கிறார்,அவரின் படைபிலேயே உயர்தரமான படைப்பு நீங்கள் தான்.ஆகவே அவர் உங்கள் மேல் மதிப்புவைத்திருக்கிறார்
அவர் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் உள்ளத்திற்குள் வர மாட்டார்..

இதோ உள்ளத்தின் வாசற்படியில் நின்று கதவை தட்டிக்கொண்டிருக்கிறேன்.
ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு கதவை திறந்தால் உள்ளே வருவேன்  என்று இயேசு வேதாகமத்தில் கூறுகிறார். உலகத்தின் ஒளியாம் இயேசு உங்கள் உள்ளத்திற்குள் வரும்போது, உங்கள் வாழ்வு நிச்சயம் ஒளிமயமாகும்.

இயேசு ஒளியாகவே இருக்கிறார்.அவரிடத்தில் சிறிதளவேனும் இருள் இல்லை.
அவர் மனிதனாக அவதரித்தார்
உங்களுக்கு சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் தரும்படிக்கு அவர் உங்களுக்காக பாவமானார்.
நீங்கள் ஐஸ்வரியவானாகும் படிக்கு அவர் தரித்திரரானார்.
நீங்கள் ஆரோக்கியமடையும்படிக்கு அவர் உங்கள் வியாதிகளை ஏற்றுக்கொண்டார்.அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமடைந்திருக்கிறீர்கள் உங்களுக்காக மரித்து அவர் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்.

அவர் அநாதி காலமாய் உயிரோடு இருக்கிறவர்,ஆரம்பமும் முடிவும் இல்லாதவர்.அவரை உள்ளத்தில் முழுமனதோடு இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களானால் இன்றே நிலையான சமாதானத்தையும் சந்தோஷத்தையும்,ஆரோக்கியத்தையும் ஆசீர்வாதத்தையும்,
இந்த பூலோகத்தில் பரிபூரண ஜீவன் நிறைந்த புது வாழ்வையும்,
பரலோகத்தில் முடிவில்லா நித்திய ஜீவ வாழ்வையும்,இலவசமாக உங்களுக்குத் தருவார்.

ஒளியாகிய இயேசு இயேசு உங்களுடைய வாழ்வில் வரும்போது இருள் யாவும் மறைந்து ஓடிப்போகும். ஒளிமயமான எதிர்காலம் உங்களுடையதாகும். இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக.

ஆமென்

என் அன்புக்குரிய இரட்சிக்கப்பட்ட சகோதர சகோதரிகளே !

இந்த உரையாடல் வடிவ சுவிசேஷ செய்தியை கைப்பிரதியாக (நோட்டீஸ்)
பிரின்ட் செய்து மக்கள் மத்தியில் வினியோகியுங்கள்

இது புது முயற்சியாக இருக்கும்
அனேகர் இரட்சிக்கப்படுவார்கள்

நன்றி

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

Marvel Jerome

பாவத்திற்கு மரித்து, நீதிக்கு எங்களை பிழைக்கவைத்தவரே !

தேவாதி தேவனே ராஜாதி ராஜனே !

பாவத்திற்கு மரித்து, நீதிக்கு
எங்களை பிழைக்கவைத்தவரே !

மாம்சிக காரியங்களுக்கு எங்களை மரிக்க செய்து......
 கிறிஸ்துவுக்குள் எங்களை மறுபடியும் பிறக்க செய்தவரே !

பழைய மனித சுபாவத்தை விட்டு "பிரித்து"
புதிய பரிசுத்த மனிதனை எங்களுக்குள் "தரித்து"
மகிமையின் மேல் மகிமை பெற்று...... எங்களை மறுரூபமாக நிற்க செய்பவரே !

நாங்கள் எப்படி மறப்போம் ? தேவனே உந்தன் அளவற்ற அன்பை......
இரத்தம் சிந்தி இரட்சிப்பை எங்களுக்கு  தந்திருக்கிறீரே !

நாங்கள் எப்படி இருப்போம் ? தாழ்த்தப்பட்ட நிலையில்......
கர்த்தாவை நீரே எங்கள் மேய்பராய் இருக்கிறீரே !

நாங்கள் எப்படி வெறுப்போம் ?
மற்ற மனிதர்களை......
உன்னை போல் பிறரையும் நேசி என்று உமது தேவ ரக அன்பையே எங்கள் உள்ளத்தில் ஊற்றியிருக்கிறீரே !

எப்படி அழைக்காமல் இருப்போம் ? உம்மை அப்பா பிதாவே என்று......
எங்களுக்குள் அடிமைத்தனத்தின் ஆவியை அகற்றி பரிசுத்த ஆவியை அளித்திருக்கிறீரே !

அப்பா பிதாவே!
நீர் எங்களை முன் குறித்து,அழைத்து,
நீதிமானாக்கியிருக்கிறார்
எங்களை மகிமைப்படுத்திக்கொண்டும் இருக்கிறீ்ர். இன்னும் மகிப்படுத்துவீர்

எங்களை அழைத்த நீர்  உண்மையுள்ளவர்.........

வெறும் சாதாரணமான காரியங்களை செய்யும் படி நீர் எங்களை அழைக்கவில்லை
"அசாதாரணமான" காரியங்களை
சாதாரணமான எங்களை கொண்டு
செய்யும்படி தேவாதி தேவனே !
நீர் எங்களை அழைத்திருக்கிறார்

இனி நாங்கள் உமக்கு என்றும் உண்மையுள்ளவர்களாக இருப்போம் !

உமது ஆலோசனையின் படிதான் நடப்போம் !

எல்லா இடங்களிலும் உமது நாமத்தின் மகிமைக்காக மட்டுமே உழைப்போம் !

உமது இரத்தினாலும்,வசனத்தினாலும் நாங்கள் எங்கும்
வெற்றி சிறப்போம் !

ஆமென்


ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm


எந்த மதமும் மனிதனை இரட்சிக்க முடியாது

இயேசுவே மெய்யான தேவன் அவரே நித்திய ஜீவன்

எந்த மதமும் மனிதனை இரட்சிக்க முடியாது...இயேசுவால் மட்டுமே மனிதனை இரட்சிக்க முடியும்...

எந்த ஆன்மீக முயற்சியும் மனிதனின் ஆன்ம அழிவை தடுக்க முடியாது...
இயேசுவால் மட்டுமே தடுத்து மனிதனை மீட்க முடியும்...

எந்த பரிகாரமும் மனிதனின் பாவத்தை போக்க முடியாது...
இயேசுவால் மட்டுமே மனிதனின் பாவத்தை போக்கி அவனை பரலோகத்தில் சேர்க்க முடியும்...

இயேசு கிறிஸ்து ஒரு மதத்திற்கு உரியவர் அல்லஅவர் எல்லா மனிதர்களுக்கும் உரியவர்...

இயேசு கிறிஸ்து மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மெய்யான தேவனுடைய மகன்...

இயேசு கிறிஸ்து ஒரு ஆன்மீக தலைவர் அல்ல...
இந்த அண்ட சராசரத்தை படைத்து ஆண்டு கொண்டிருக்கும் உண்மையான ஆண்டவர்...

இந்த பூமிக்கு வந்ததாக சொல்லப்படும், பொய்யான அவதாரங்களில் இயேசு கிறிஸ்து ஒருவர் இல்லை...

மெய்யாகவே மெய்யாகவே இந்த பூமிக்கு வந்த ஒரே அவதாரம் இயேசு கிறிஸ்து மட்டும் தான்

இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் வந்து பிறந்த மனிதர்களில் ஒருவர் இல்லை, இந்த மண்ணுலகிற்கு மாம்சத்தில் வந்த ஒரே தேவன்...

என் அன்பு சகோதர சகோதரிகளே !இயேசு கிறிஸ்துவை உங்கள் ஆண்டவராக, இரட்சகராக ஏற்றுக்கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு உண்டாகும் நித்திய நன்மை.இது தான் உண்மை...இயேசுவை கடைசி வரைக்கும் ஏற்றுக்கொள்ளாத மனிதர்கள்,இந்த உலகைவிட்டு பிரிந்த பிறகு இயேசு தான் உண்மையான தேவன் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அதனால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை..அவர்கள் பூமியில் இருக்கும் காலத்தில் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காததால்அவர்களின் முடிவு கொடூரமான அக்கினி கடலும் முடிவில்லா நித்திய வேதனையும் தான்.எனவே உலகில் இருக்கும் போதே இயேசுவே மெய்யான தேவன் என்பதை நாங்கள் அறிவித்துக்கொண்டிருக்கிறோம்........................
இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுங்கள்...
இந்த பூலோகத்தில் பரிபூரண ஜீவன் நிறைந்த வெற்றி வாழ்வையும், முடிவில்லா பரலோக நித்திய வாழ்வையும் இலவசமாய் பெற்றுக்கொள்ளுங்கள்...

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

(10) குழந்தை ஏசு !?



பீட்டர்: என்ன அந்தோனி கையில மெழுகுதிரியை எடுத்துக்கிட்டு எங்க அவசரமா கிளம்பிட்ட ?

அந்தோனி: எங்க குழந்தை ஏசு கோயில்ல இன்னைக்கு விசேஷம்பா
அதான் அங்க போய்க்கிட்டு இருக்கேன்

பீட்டர்: குழந்தை ஏசுவா ! இயேசு இப்ப குழந்தயாவா இருக்காரு ?

அந்தோனி : ஆமா! ஏசு குழந்தையா தான் இருக்காரு. வேணுமுனா எங்க கோயிலுக்கு வந்து பாரு

பீட்டர்: நீ மொத வீட்டுக்கு போயி  வேதாகமத்தை எடுத்துப்பாரு .
(லூக்கா 2: 40,2: 52) குழந்தையாய் பிறந்த இயேசு வளர்ந்தார் ஆவியில் பெலன் கொண்டார்..
ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
அவர் குழந்தையாகவே கடைசிவரைக்கும் இருக்கவில்லை .
அவர் இந்த பூமிக்கு வந்த வேலையை கல்வாரியில் முடித்தார்,பாதாளம் இறங்கினார், உயிர்த்தெழுந்து பரமேறி இப்போது பிதாவின் வலது பாரிசத்தில்
அமர்ந்து நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

அந்தோனி : அப்ப குழந்தை ஏசு ?

பீட்டர்: அது ரோமானிய அரசால் புற மத பழக்கத்திலிருந்து கிறிஸ்தவத்துக்குள் புகுத்தப்பட்ட குழந்தை தெய்வ வழிபாடு... வரலாறு சம்மந்தமா நான் அப்பரம் பேசுறேன்.

இயேசு  கடைசி வரைக்கும் சிலுவையில் அறையப்படாம குழந்தையாகவே இருந்திருந்தா இந்த உலகத்தில் யாரும் மீட்படைய முடியாது

அந்தோனி : அப்படியா !

பீட்டர்: ஆமா அந்தோனி, நீ ஆவிக்குரிய வளர்ச்சியில் குழந்தையாவே இருக்கிற அதான் நீ இன்னும் இயேசு கிறிஸ்துவை குழந்தையாவே பார்க்கிற

அந்தோனி: நான் ஆவியில் வளர என்ன செய்யனும் ?

பீட்டர்: 1பேதுரு 2: 3
நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

(9) பரிசுத்தவான்களின் ஜெபம் தேவனுக்கு முன்பாக தூபமாக செலுத்தப்படுதுல இதுக்கு என்ன சொல்ற ?


அந்தோனி: திருவெளிப்பாடு 5:8, 8:3,ல் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபம் தேவனுக்கு முன்பாக செலுத்தப்படுகிறது.
அப்படீனு எழுதியிருக்குல இதுக்கு
நீ என்ன சொல்ற ?

பீட்டர்: பரிசுத்தவான்கள் என்றால் யார் ?

அந்தோனி: எங்க திருச்சபை யாரை பரிசுத்தவான்னு சொல்லுதோ அவங்க தான்பரிசுத்தவான்.

பீட்டர்: உங்க திருச்சபை சொல்றதெல்லாம் இருக்கட்டும்.
தேவனுடைய வார்த்தைகள் யாரை பரிசுத்தவான் என்று சொல்கிறதுனு கொஞ்சம் கவனி

இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம் இயேசுவின் நாமத்தினாலும், தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்
(1கொரி 6: 11)என்றும் இயேசுவே நமது பரிசுத்தமாக இருக்கிறார் (1கொரி 1:31) என்றும் நம்முடைய சரீரம் தேவன் வாசம் செய்யும் பரிசுத்த ஆலயம் (1கொரி 3:17) என்றும் தேவனுடைய வார்த்தைகளுக்குள்ளான அதாவது கிறிஸ்து இயேசுவுக்குள்ளான விசுவாசிகளாகிய நாம் யாவரும் பரிசுத்தவான்கள்,(பிலி 4: 21)
(எபே 4:12) என்றும்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தொழுதுகொள்கிற அனைவரும் பரிசுத்தவான்கள்
(1கொரி1:2 )என்றும் நாம் மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷன் என்றும் அந்த புதிய பரிசுத்த மனுஷனை தரித்துக்கொள்ளுங்கள்
(எபே 4: 24) என்றும் தேவனுடைய வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நம்மை பரிசுத்தவான் என்று அங்கீகாரப்படுத்துகிறது

அந்தோனி: அப்படியா ! ஆனா எங்க திருச்சபையில, பாவியாக இருக்கிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள், பாவியாக இருக்கிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று அடிக்கடி சொல்லிக்கொடுத்து எங்களை பாவிகள் என்று அங்கீகாரப்படுத்துகிறார்களே !

பீட்டர்:சாத்தான் தான் எப்போதுமே தேவனுடைய வார்த்தைகளுக்குஎதிராக செய்யும் படி சொல்லிக்கொடுப்பான்

அந்தோனி: அப்ப பரிசுத்தவான்களின் ஜெபம் என்றால் அது நம்முடைய ஜெபம் தானா ?அது தான் தேவனுக்கு முன்பாகதூபமாக செலுத்தப்படுகிறதா ?

பீட்டர்: ஆமா! அந்தோனி.இது குறித்து ஆதி பரிசுத்தவானாகிய தாவீது இவ்வாறு சொல்கிறார் என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும்,என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.(சங் 141: 2)

அந்தோனி: !!!!!!


(தொடரும்....)

ஜீவ வழி-LIVINGWAY

www.facebook.com/lwcomm


Monday 16 November 2015

(8) நீங்க மட்டும் உங்க பாஸ்டர்கிட்ட எங்களுக்காக ஜெபம் பண்ணுங்கனு சொல்லலாம் ! ஆனா நாங்க எங்க புனிதர்களிடம் எங்களுக்காக ஜெபம் பண்ணுங்கனு சொல்லக்கூடாதா ? இது என்னயா நியாயம் ?




கிறிஸ்துவுக்குள் என் அன்பு சகோதர சகோதரிகளே!இந்த பதிவை படிப்பதற்கு முன்பு இதற்கு முன்பாக வெளியிடப்பட்ட அந்தோனி,பீட்டர் உரையாடல்கள் அடங்கிய அனைத்து பதிவுகளையும் தயவுசெய்து முழுமையாக படிக்கவும் நன்றி

அந்தோனி: இயேசு கிறிஸ்து, ஆவியானவர் நமக்காக தேவனிடத்தில் வேண்டுதல் செய்கிறார் என்றும், நமக்காக பரிந்து பேசுகிறார் என்றும்இயேசுவின் இரத்தம் நமக்காக நன்மையானவைகளை பேசுகிறது, புனிதர்கள்யாரும் பரிந்து பேசுகிறது கிடையாது இது தான் வேதாகமத்தின் படி சத்தியம்.

பீட்டர்: ஆமா வேதாகமம் சொல்வதுதான் சத்தியம்

அந்தோனி: சரி சரி ஓ.கே ... ஆனா எனக்கு ஏதாவது இக்காட்டான சூழ்நிலை வரும் போது நான் உன்னிடம் எனக்காக ஜெபம் பண்ணு என்று கேட்டுருக்கேன்...

உனக்கும் அதே மாதி நிலைமை ஏற்பட்டா நீயும்... உங்க பாஸ்டரிடமோ இல்ல வேறயாரிடமோ சொல்லி உனக்காக ஜெபிக்க சொல்லியிருப்ப....

பீட்டர்: ஆமா....

அந்தோனி: இந்த பூமியில் உயிரோடிருக்கும் மனிதர்களிதர்களிடம் நமக்காக வேண்டிக்கொள்ள சொல்லாம் அது தப்பு இல்ல ! ஆனா தேவனுக்காக வாழ்ந்து மரித்து பரலோகத்தில் இருக்கிற புனிதர்களிடம் நமக்காக வேண்டிக்கொள்ள சொன்ன மட்டும் தப்பா ? இது என்னயா நியாயம்?

பீட்டர்:அந்தோனி இந்த பூமியின் உயிரோடு இருக்கிறவங்க,பூமியின் உயிரோடு இருக்கிறவங்களுக்காக தேவனை நோக்கி ஜெபங்களையும் விண்ணப்பங்களையும் செய்யவேண்டும்.
இதையே நம் வேதாகமம் போதிக்கிறது

மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் என்றும் அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது என்றும் சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற எதிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.
(பிரசங்கி 9:5-6) சொல்கிறது மற்றவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும் மத்தேயு 5: 44
1தீமோத்தேயு 2:1 யாக்கோபு 5:16
என்று வேதத்தில் மரித்துப்போன விசுவாசிகளிடம் சொல்லவில்லை
இந்த பூமியில்உயிரோடிருக்கும் விசுவாசிகளிடம் தான் சொல்லி இருக்கு

அந்தோனி: அப்படியா ?

(தொடரும்....)

ஜீவ வழி-LIVINGWAY

www.facebook.com/lwcomm


(7) நான் இதுக்கு முன்னாடி புனிதர்கள் மற்றும் சிலை வழியா தேவனிடம் பரிந்து பேச சொல்லி நெறய நன்மைகளை பெற்றுக்கேன் அது எப்படி ?


அந்தோனி: வேதாகமத்துல இருந்து
நீ சொன்ன காரியங்களேல்லாம் எனக்கு இப்ப தான் தெரியும் ஆனா இதுக்கு முன்னாடி நான் பல முறை புனிதர்களிடமும், சிலைகளிடமும் எனக்காக தேவனிடம் பரிந்து பேசும்படி ஜெபித்து பல நன்மையான காரியங்களை பெற்றிருக்கேன்...
அது எப்படி ?

பீட்டர்:என்ன அந்தோனி இவளவு சொல்லியும் இன்னம்புனிதர்கள் சிலைகள்னு சொல்லிகிட்டே இருக்க ! ?இயேசுவின் இரத்தம் நமக்காக நன்மையானவைகளை பேசுகிறது (எபிரேயர்12:24)என்றும் நன்மையான எல்லா காரியங்களும் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது (யாக்கோபு 1:16) என்றும்...இயேசு கிறிஸ்து, ஆவியானவர் நமக்காக தேவனிடத்தில் வேண்டுதல் செய்கிறார் என்றும், நமக்காக பரிந்து பேசுகிறார (ரோமர்8:34) (1யோவான் 2:1-4) (ரோமர் 8:26) என்று தேவனுடைய வார்த்தைகள் நமக்குமிக தெளிவாக போதிக்கிறது....

புனிதர்கள் நமக்காக தேவனிடம் பரிந்து பேசுவாங்க எனவே அவங்கள நோக்கி ஜெபம் பண்ணனும் என்பது எல்லாம் பொய் உபதேசம் அது தேவனுடைய வார்த்தைகளுக்கு எதிரான பாவம்

அந்தோனி :சரி இருந்தாலும் நான் தேவனுடைய வார்த்தைகளுக்குஎதிராக அனேக முறை பாவம் செய்து இருக்கிறேன்ல அப்பரம் இயேசு ஏன் என்னை தண்டிக்காம எனக்காக பரிந்து பேசிக்கிட்டு இருக்கிறார் ?

பீட்டர்: அந்தோனி,அன்று யூதர்கள் இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்கள், ரோமர்கள் இயேசுவை கசையால் அடித்து முள்முடி சூட்டி அவமானப்படுத்தி சிலுவையில் அறைந்து துன்புறுத்தினார்கள் அந்த நிலையில் கூட இயேசு அவர்களை மன்னிக்கும் படி தேவனிடம் ஜெபித்தார்இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நீ சத்தியத்தை அறியாமல் சிலைகளையும், புனிதர்களையும் வணங்கி தேவனுடைய வார்த்தைகளுக்கு எதிராக பாவம் செய்தாய் ஆனாலும் கூட உன் அன்பு நேசர் இயேசு உனக்காக பிதாவினிடத்தில்
" பிதாவே, என் மகனை மன்னியும், தான் செய்கிறது இன்னதென்று இவன் அறியாதிருக்கிறான்" என்று உனக்காக பரிந்து பேசி உனக்கு நன்மையானகாரியங்களை
பெற்று தந்துகொண்டிருக்கிறார்.

நீ எப்படியாவது சத்தியத்தை அறிந்து மனம் திருந்தி தேவனுடைய வார்த்தையின் வழிக்கு வந்து விடுவாய் என்று அவர் உனக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்

(அந்தோனி கண்கலங்கிய படி அமைதியாக நிற்கிறார்...)

(தொடரும்....)

ஜீவ வழி-LIVINGWAY

www.facebook.com/lwcomm

(6) புனிதர்கள் நமக்காக பரிந்துபேசுறங்கள்ல அப்பரம் ஏன் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கனு அவங்கட்ட ஜெபிக்க கூடாது ?



புனிதர்கள் நமக்காக தேவனிடம்
பரிந்து பேசுவாங்கள்ல அப்பரம் ஏன் எங்களுக்காக வேண்டிங்கொள்ளுங்கனு
அவங்கட்ட ஜெபிக்க கூடாது ?

அந்தோனி: அன்னை மரியாள், செபஸ்தியார், போன்ற புனிதர்களை கும்பிடக்கூடாது அது வேதாகமத்தின் படி பாவம்.

அந்த பாவத்தை நம்மை செய்ய வைக்க சாத்தான் புனிதர்கள் வடிவில் வந்து காட்சி கொடுக்கிறான் என்பதை நீ வேத வசனம் மூலம் விளக்கி சொன்ன சரி ஒ.கே..

புனிதர்களை கும்பிடாதான பாவம்,அவங்களைநோக்கி எங்களுக்காக தேவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று (அதாவது) எங்களுக்காக தேவனிடம் பரிந்துபேசும் படி சொல்லி ஜெபிக்கலாம்ல ?

பீட்டர்: புனிதர்களிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கனு ஜெபிக்கனுமா ?!
அவங்க தேவனிடத்தில் நமக்காக பரிந்து பேசுவாங்களா? !
நீ என்ன சொல்ற !இதல்லாம் பைபில்ல இருக்கா ?

அந்தோனி: பைபிள்ல இல்லாமலா எங்க சபையில் இதை மக்களுக்கு போதிப்பாங்க ?

பீட்டர்: இல்ல அந்தோனி, பைபிள்லஇப்படி இருக்கு....
இயேசுவின் நாமத்தில் பிதாவிடமும் (யோவான் 16:23-24),(யோவான் 15:16)
பிதாவிடம் நேரடியாகவும் (லூக்கா 11:24) இயேசுவிடம் நேரடியாகவும் (யோவான் 14:13-14) ஜெபிக்க வேண்டும் என்று இயேசுவே நமக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்அப்பரம்..

கடவுளுக்கும் மனிதனுக்கு இடையே ஒரே மத்தியஸ்தராக இயேசு ஒருவர் மட்டுமே இருக்கிறார் (1தீமோதேயு 2:5) என்றும். இயேசு நமக்காக தேவனிடத்தில் வேண்டுதல் செய்கிறார் என்றும்,
நமக்காக பரிந்து பேசுகிறார்
 (ரோமர்8:34) (1யோவான் 2:1-4) என்றும்
இயேசுவின் இரத்தம் நமக்காக பரிந்து பேசுகிறது
(எபிரெயர் 12:24) என்றும், பரிசுத்த
ஆவியானவர் நமக்காக தேவனிடம் பரிந்து பேசுகிறார் (ரோமர் 8:26) என்று தான் வேதத்தில் இருக்கு

புனிதர்களிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கனு ஜெபிக்கனும் அப்படினோ, அவங்க தேவனிடத்தில் நமக்காக பரிந்து பேசுவாங்க அப்படினோ வேதத்தில் இல்லவே இல்லை

அந்தோனி:அடப்பாவிகாளா ?!


ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

(5) புனிதர்கள்"மரித்து போன பிறகு வந்து,மக்களை தேவனுடைய வார்த்தைகளைமீறி நடக்க சொல்வார்களா ?

"புனிதர்கள்"மரித்து போன பிறகு வந்து,மக்களை தேவனுடைய வார்த்தைகளைமீறி நடக்க சொல்வார்களா ?

அந்தோனி: கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் போலவும்,நமது அன்னை மரியாள்,செபஸ்தியார்,
என புனிதர்கள் போலவும் வேஷத்தை சாத்தான் தரித்துக்கொண்டுவந்து, தங்களை நோக்கி வேண்டவும்,தங்களுக்கு கோயில் கட்டி கும்பிடவும் சொல்லி மக்களை வேத வசனத்திற்கு விரேதமாக நடக்க செய்கிறான் என்பதை (2கொரிந்தியர்11:13-14)- படித்து புரிஞ்சுக்கிட்டேன்

பீட்டர்: ஆமா, அந்தோனி இதுபற்றி தான் அப்போஸ்தலனாகிய பவுல்(கலாத்தியர் 1: 8) ல் இவ்வாறு சொல்கிறார்"நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்துவருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால்,அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

அந்தோனி: புரியல கொஞ்சம் தெளிவா விளக்கி சொல்லு பீட்டர்

பீட்டர்: அப்போஸ்தலர்கள் வேதத்தில் நமக்கு பிரசங்கித்த சுவிசேஷத்திற்குமாறாக, மரியாளிடம் வேண்ட வேண்டும், புனிதர்கள் மற்றும் வானதூதர்களிடம் வேண்ட வேண்டும்,சிலைகளை நோக்கி வேண்ட வேண்டும் என்றும் இன்னும் பல வேதத்தில் இல்லாத உபதேசங்களை அதாவது அப்போஸ்தலர்கள் நமக்கு பிரசங்கிக்காத உபதேசங்களைஅப்போஸ்தலர்களோ
(அவர்கள் வேஷம் தரித்த சாத்தான்) அல்லது வானத்திலிருந்துவருகிற தூதனோ(அவர்கள் வேஷம் தரித்த சாத்தான்) உங்களுக்கு பிரசிங்கித்தால்அவன் சபிக்கப்பட்டவனாய் இருப்பான்.... சபிக்கப்பட்டு இருக்கிறவன் யாரு அந்தோனி?

அந்தோனி : வேற யாரு சாத்தான் தான்

பீட்டர் : இப்ப புரியுதா ? அப்போஸ்தலர்கள்
வேதத்தில் நமக்கு பிரசங்கிக்காத உபதேசங்களை,அப்போஸ்தலர்கள் போலவும் வானத்திலிருந்துவந்த தூதன் போலவும் வந்து நமக்கு பிரசங்கித்ததுயாருனு ?

அந்தோனி: எனக்கு இப்ப நல்லா புரிஞ்சிருச்சுப்பா

தொடரும்......

ஜீவ வழி-LIVING WAY

facebook.com/lwcomm

(4) தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாக மக்களை செய்ய சொல்லி புனிதர்களா வந்து காட்சி கொடுப்பார்கள் ?

தேவனுடைய
வார்த்தைகளுக்கு விரோதமாக
மக்களை  செய்ய சொல்லி
புனிதர்களா வந்து காட்சி  கொடுப்பார்கள்  ?

பீட்டர்: தேவன் ஒருவரை மட்டும் வணங்கி, தேவனுடைய
கட்டளைகளின் படி நடந்து,
தேவனுடைய வசனத்தை போதித்து,தேவனுடைய வார்த்தையின் வழியில் நடந்த "புனிதர்கள்"மரித்து போன பிறகு வந்து, நம்மல தேவனுடைய கட்டளைகளை
மீறி நடக்க  வைக்க,அவர்கள் தங்களை நோக்கி வேண்ட  சொல்லியும், தங்களுக்கு கோயில் கட்ட சொல்லியும்  காட்சிக்கொடுப்பாங்களா ?

அந்தோனி: புரியல, கொஞ்சம் தெளிவா சொல்லு

பீட்டர்: சொல்றேன் அந்தோனி,  அன்னை மரியாள் அவர்கள்
தேவனுடைய கட்டளைகளின் படி பரிசுத்தமாக வாழ்ந்து வந்த
ஓர் இஸ்ரவேல் மங்கை அப்படிப்பட்டவர்,தேவன் கொடுத்த முதல் இரு கட்டளைகளை மீறி, அவர் தன்னை நோக்கி வேண்ட சொல்லியும், இயேசு நமக்கு சொல்லித்தராத ஜெப மாலை ஜெபத்தை செய்ய சொல்லியும், தனக்கு சிலை வைத்து கோயில் கட்ட சொல்லியும் வந்து காட்சி கொடுப்பாங்களா ?

அந்தோனி: நிச்சயமா  கொடுத்திருக்கவே மாட்டாங்க

பீட்டர் : அப்ப அன்னை மரியாள் வேஷத்தை தரித்துக்கொண்டு வந்து நம்மை தேவனுடைய  கட்டளைகளை மீற செய்கிறது யாரு ?

அந்தோனி: இதுக்குதான் பதில் (2கொரிந்தியர் 11:13-14)-ல் இருக்கே

தொடரும்.......

ஜீவ வழி-LIVING WAY

facebook.com/lwcomm

(3) புனிதர்கள் வந்தது காட்சி கொடுத்துருக்காங்கள அப்பரம் ஏன் அவங்களிடம் வேண்டக்கூடாது ?

அந்தோனி: மாதா,அந்தோனியார் மற்றும் புனிதர்களிடம்  வேண்ட  கூடாது "தேவனிடம்" மட்டும்தான் வேண்டனும் இது தான்  வேதாகமத்தின் படி சரி இத நான் ஒத்துக்கிறேன்,ஆனா...…

பீட்டர்: என்ன அந்தோனி சொல்லு..

அந்தோனி: ஆனா புனிதர்கள் தங்களிடம் வேண்ட  சொல்லியும்,ஜெப மாலை சொல்ல சொல்லியும்,
தங்களுக்கு கோயில் கட்ட சொல்லியும் பல இடங்களில் வந்து காட்சி கொடுத்துருக்காங்களே இந்த விஷயம் தான் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு ?

பீட்டர்:இதுல குழம்புறதற்கு ஒன்னும் இல்ல அந்தோனி, வேதாகமத்தின் படி "சாத்தான் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் போலவும், ஒளியின் தூதர்கள் போலவும் வேஷம் தரித்துக்கொள்வான்" (2கொரிந்தியர் 11:13-14) என்று எழுதியிருக்கு, மக்களை தேவனுடைய வார்த்தைகளை விட்டு விலகி  திசை திருப்ப  சாத்தான் செய்யும் ஏமாத்து வேலைதான் இது, ஜெபமாலை மாதா அப்படினு ஒரு காட்சி கொடுக்கப்பட்டது அதனால மக்கள் ஜெபமாலை சொல்லிக்கிட்டு மாதாவிடம் வேண்ட ஆரம்பிச்சுட்டாங்க, புனிதர்கள் வந்து காட்சி கொடுத்ததாக சொல்லப்படும் இடங்களிலும் இதேபோல் தான் மக்கள் அந்த புனிதர்களை நோக்கி வேண்டுகிறார்கள், இப்படி மக்களை தேவனுடைய கட்டளைகளை மீற வைத்து நரகத்துக்கு அழைத்துச்செல்ல  சாத்தான் செய்யும் தந்திரங்களில் இதுவும் ஒன்று, எச்சரிக்கை

தொடரும்......

ஜீவ வழி-LIVING WAY

facebook.com/lwcomm

(2 ) மாதாவை கும்பிட்டா அற்புதம் நடக்குதே !!!!

அந்தோனி: மாதாவை கும்பிட்டா அற்புதம் நடக்குதே !!!!

பீட்டர்: நீ மாரியம்மாவை கும்பிட்டாலும், காளியம்மாவை கும்பிட்டாலும், முருகனை கும்பிட்டாலும்,அற்புதம் நடக்கும்... சாத்தானும் அற்புதங்கள் செய்வானு வேதாகமம் தெளிவா சொல்லுது (யாத் 7:10-12) (லூக் 4:6-7)  (வெளி 16:14)

அந்தோனி: அதனாலதான் இவங்கட்ட வேண்டுனா அற்புதம் நடக்குதா ?

பீட்டர் : ஆமா நம்மள பரலோகம் போக விடாதபடிக்கு தடம் புரள செய்ய சாத்தான் செய்யும் தந்திர வேலைகளில் இதுவும் ஒன்னு... ஏமாந்து போயிடாத நண்பா.....

அந்தோனி : அடப்பாவிகளா !!!!

பீட்டர்: வேதாகமம் தெளிவா செல்கிறது
"என்னை அன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்"
(யாத் 20:2-6) தேவனோட முதல் கட்டளையே அதுதான், பிறகு எதுக்குப்போட்டு குழப்புற ?

அந்தோனி: அப்படியா ?????


தொடரும்......

(1) இயேசுவுக்கு உயிர் கொடுத்தது மரியாளா ?

அந்தோனி: இயேசுவுக்கு உயிர் கொடுத்தது மரியாள் அல்லவா

பீட்டர்: இல்லை மரியாளுக்கு உயிர் கொடுத்தவர் இயேசு

அந்தோனி : எப்படி ? !

பீட்டர்: மரியாள் இயேசுவை சுமந்தார் அவளவுதான் (யோவான்: 1-3) சொல்கிறது.... சகலமும் இயேசு மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் இயேசுவால் அல்லாமல் உண்டாகவில்லை

அந்தோனி: அப்படியா ?

தொடரும்........

இறைமறுப்பாளர்களுக்கு தேவன் இருக்கிறார் என்பதை சொல்லும் கடிகாரமும் காலண்டரும்

இது தான் சத்தியம்
பகுதி-1

நார்திகர்களுக்கு தேவனைஇருக்கிறார் என்று சாட்சி கொடுக்கும் வாட்ச் &
காலண்டர்....

பரத் மற்றும் பிரவீன் இவர்கள் சிறு வயது முதல் நல்ல நண்பர்கள் விவரம் தெரிந்த நாள் முதல் இவருவரும் கடவுள் மறுப்பு கொள்கைகொண்டவர்களாக இருந்தார்கள்..

ஆனால் இடையில் பரத் தனது பகுத்தறிவாள் பகுத்து ஆராய்ந்து தேவன் இருக்கிறார் அவர்
பெயர் இயேசு என்பதை கண்டுபிடித்து
தன்னுடைய நர்த்திக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு
இயேசு கிறிஸ்துவை தனது
சொந்த இரட்சகராகவும்
ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டு
தேவனுக்காக வாழ்ந்து வருகிறார்..

இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம் பல முறை பரத் பிரவீனுக்கு தேவனை பற்றி
போதித்து வருகிறார்...

அதே போல் ஒரு நாள்..

நடந்த வாட்ச் காலண்டர் பற்றிய
உரையாடல்...இதோ...

காலை:11:30 இடம்:பரத் வீடு

பரத்: நீ இயேசு கிறிஸ்துவை பத்தி என்ன நெனக்கிற ?

பிரவீன்: இயேசுவா அவர் ஒரு மத
தலைவர்டா.....ஒவ்வொரு மதத்துக்கும்
ஒவ்வொரு தலைவர் இருக்கிறங்கள
அதே மாதிரி கிறிஸ்தவ மதத்துக்கு இயேசு தலைவரு...

பரத்:(சிரித்தபடி)
இயேசு ஒரு மத தலைவர் இல்ல நண்பா அவர் வானத்தையும் பூமியையும் சகலத்தையும் உன்னையும் என்னையும் படைத்தவர்டா...
நாம்ம கண்காளால் பார்க்கிற மற்றும்
கண்களால் பார்க்க முடியாமல் இருக்கிற எல்லா படைப்புகளும் அவரால் அவருடைய
வார்த்தையால்... உண்டாக்கப்பட்டது...

இயேசு மத தலைவரா ?!
அவர் மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்டா அவர் தான் உண்மையான தேவன்

பிரவீன்: என்னாது ? இயேசு வானத்தையும் பூமியையும் உன்னையும் என்னையும் படைத்த
தேவனா ?
நீ நல்லா எதுகை மோகனையா
எடுப்பா பேசுறடா...ஆனா அதல்லாம்
உண்மை இல்ல...இந்த கட்டுக்கதை
காம்மிக்ஸ்ல வர்ற கார்ட்டுன்
கதையெல்லாம் என்னாய மாதிரி
பகுத்தறிவாளர்கள் நம்பவே
மாட்டாங்க..பாஸ்...

இயேசு கிறிஸ்து தான்
தேவனா ? அப்ப மத்த மத கடவுள்கள்
எல்லாம் என்ன சாத்தானா ?

இங்க பாரு பரத் இந்த உலகத்துல பல
கடவுள் நம்பிக்கை கொள்கைகள் இருக்கு அவுங்கவங்க தன் மதத்தோட கடவுள்தான் உண்மையான கடவுள்னு
சொல்லுறாங்க அதே மாதிரி தான்
கிறிஸ்தவங்களும் இயேசு தான் உண்மையான கடவுள்னு சொல்றாங்க...

இப்ப நீயும் சொல்ல ஆரம்பிச்சுட்ட...
எப்படியோ கெட்டு நாசமா போடா...
ஆனா எனக்கு எந்த கடவுள் மேலயும் நம்பிக்கை வராது ஏன்னா கடவுள்னு ஒருத்தர் இல்லயே அப்பரம் எப்படி வரும்....

பரத்: பல கடவுள் எல்லாம் இல்ல பிரவீன் தேவன் ஒருவரே, அவரை அணுக அவரே ஏற்படுத்தி
வைத்திருக்கும் ஒரே வழி அவருடைய ஒரே குமாரன் இயேசு கிறிஸ்து,
இது மாற்றவே முடியாத ஒரே
வழி மறுக்கவே முடியாத ஒரே சத்தியம்...

எற்றுக்கொண்டாலும்
ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இயேசு
இல்லாம இல்லை நித்திய ஜீவன்..
இது தான் மெய்யான நித்திய சத்தியம்..

பிரவீன்:ஏன்டா டேய்... நீ ஒருத்தன்
சொல்றதுனால இது எப்படிடா
உண்மையான சத்தியமுனு ஆகும் ?

பரத்: நான் ஒருத்தன் மட்டும் இல்ல பாஸ் இந்த உலகத்துல இருக்கிற
பெரும்பான்மையான மக்களின்
தொகுப்பு என்னோடு கூட சேர்ந்து இது
தான் சத்தியமுன்னு சொல்றாங்க
அது உனக்கு தெரியுமா ?

பிரவீன்: அது எப்புடிடா?

பரத்: இந்த உலகத்துலயே
பெரும்பான்மையான மக்கள்
கிறிஸ்தவங்க தாம்பா... நான்
சொல்றததான் அவங்களும்
சொல்றாங்க..

பிரவீன்: நெனச்சேன்டா நீ இந்த மாதிரி
தான் பேசுவேனு .. ஏன்டா இப்படி முட்டள்
மாதிரி பேசுற...அது எப்படிடா சகலமும்
தேவனோட வார்தையால உண்டாகும்? உன் பைபிள் கோட்பாடு கொஞ்ஜமாவது நம்புற மாதிரியா இருக்கா?

தம்பி பரத்து நீ இன்னும் வளரனும்...நீ ஒரு படிச்ச முட்டாள்னு நிரூபிச்சிட்ட
பார்த்தியா.....

*பல கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி சுழன்று கொண்டு இருந்த வாயு கோளத்துல இருந்து தான் எல்லா கிரகங்களும் வந்தது அதுல நம்ம பூமியும் ஒன்னு பிறகு உயிரினங்கள் தோன்றின..எல்லாம் பரிணாம
வளர்ச்சியின் மூலம் படிப்படியா..வந்தது..
யாரும் வந்து எவற்றையும் வார்த்தையாலயோ கீர்த்தயாலயோ... படைக்கல பாஸ் எல்லாமே
தானாக உண்டாக்கிடுச்சு....

இது தான் சரியான கோட்பாடு.. உனக்கு இதல்லாம் சொல்லி புரிய வைக்க வேண்டிய தேவை இல்ல ஏன்னா..உனக்கு..சார்புக் கோட்பாடு
(General Theory of Relativity) அண்டவியற் கொள்கை (Cosmological Principle)பெரு வெடிப்புக் கோட்பாடு
(Big-Bang Theory).. இதேல்லாம் என்னைய விட உனக்குத்தான் நல்லா தெரியும் அப்படி இருந்த நீ இப்ப ஏன் பைபிள் தியரியை தூக்கி
பிடிச்சுகிட்டு இருக்குறேனு எனக்கு புரியல...டா... ஏன்டா..?

(இவ்வாறு பிரவீன் பேசிக்கொண்டு
இருக்கையில் பரத் பிரவீனின் வாட்ச்சை உற்று பார்த்துக்கொண்டே)

பரத்: நண்பா பிரவீன் நீ படைப்புகளை வச்சு எது சரியான தியரினு பார்த்து
சொல்றதுக்கு முன்னாடி உன் கையில்
கட்டிருக்குற வாட்ச்ச பார்த்து இப்ப
சரியான டைம் என்னானு சொல்லு...

பிரவீன்: நீ தான் வாட்ச் கட்டிருக்கிரியே
அப்பரம் எதுக்கு என்னட்ட டைம் கேட்குற ?

பரத்: காரணம் இருக்கு நண்பா
மொதல டைம்ம சொல்லு...

பிரவீன்: இப்ப சரியா மதியம்12:05 ஆகுதுடா

பரத்:(தன் மெபைலை எடுத்து கூகுள் சர்ச்சில் பார்த்தபடி)

நீ சொன்ன டைம் தப்புடா இப்ப
சரியான இந்தியன் டைம் காலை
11:45...ஆனா நீ மதியம் 12:05
சொல்ற?
நீ சொல்றதுனால இப்ப இங்க
மதியம் 12:05னு ஆயிடுமா ?

நீ ஏதோ தவறான டைம் ஓடுன கிலாக்க
பார்த்து அது தான் சரியான டைம்முனு
அப்படியே நம்பி உன் வாட்ச்சுல அந்த
தவறான டைம்ம செட் பண்ணி இருக்குற...

பிரவீன்: அப்படியா! அட ஆமா.. !

பரத்: இங்க பாரு பிரவீன் சரியான டைம்
தெரிஞ்ஜதும் தான் உன் வாட்சுல
செட் பண்ணி இருக்குறது தப்பான
டைம்முனு உனக்கு தெரியவந்தது .. அதே மாதிரி தான் நானும் உண்மையான படைப்பு
கோட்பாட்டை என் அறிவாலும் சிந்தனையாலும் நன்றாக பகுத்தறிந்து கண்டுபிடிச்சுடேன்

அப்பரம் எது போலியினு தெரிஞ்சிருச்சு
பொய்யான கோட்பாடுகளை தூக்கி
எறிந்து விட்டு உண்மையான பைபிள் கோட்பாட்டை தூக்கி பிடித்து கிட்டு
உன் கூட மெய்யான சத்தியத்தை பேசிக்கிட்டு இருக்கிறேன்

பிரவீன்: (சிரித்தபடி)ஆமா இவரு பெரிய
சந்திராயன் சயன்டிஸ்டிடு... அப்புடியே
உண்மைய கண்டுபிடிச்சு அதை செயற்கை கோள்ள வச்சு பரலோகத்துக்கு அனுப்ப போறாரு....
எதுவும் பேசாத பைபிள்ள இருந்து நான்
தெரிஞ்சுகிற வேண்டியது ஒன்னும் இல்ல...

பரத்: இல்ல பிரவீன் நீயும் நானும் ஏன் இந்த உலகத்தில் உள்ள எல்லாரும் கண்டிப்பாக தெரிஞ்சிக்க வேண்டிய எல்ல விசயங்களும் பைபிள்ள மட்டும் தான் இருக்குது... சரி இப்ப கதைக்கு
வர்றேன்.. பிரவீன்..

உன் வாட்சுல செட் பண்ணி இருக்குற
டைம் சரியா? தவறான்னு?
தெரிஞ்சிக்கிடாம இவளவு நாளா நீ இது தான் சரியான டைம்முனு நம்பி இருந்துறுக்க..

அது மட்டுமா..

நிச்சயமாக எங்கயாவது யாராவது
அவசரமா வந்து உன்கிட்ட டைம் என்னானு கேட்டுருப்பாங்க ரைட்டா ?

பிரவீன்:ம்ம்ம்.....

பரத்: ஆனா நீ உன் வாட்சுல காட்டுற
தப்பான டைம்ம சொல்லி அவங்கள
நம்ப வச்சி பலரை குழப்பிருப்ப... சிலரை இடறல் அடைய வச்சுருப்ப..
 இது கண்டிப்பா நடந்துருக்கும்

தேவன் இல்லைனு எவனோ ஒருத்தேன் ஆரம்பிச்சு விட்ட கட்டு கதைய அப்படியே நம்பி... அவர் இருக்கிறாரா ? இல்லையானு?

கண்டுபிடிக்கிற முயற்சியில இறங்காம நீ எப்படி தேவன் இல்லைன்னு தீர்கமான முடிவுக்கு வந்தேனு எனக்கு தெரியல...

நீ எதையும் முழுசா தெரிஞ்சுக்கிடாம..அறைகுறைய
அறிஞ்சுகிட்டு...தவறானதை சரினு முடிவு செஞ்சு மத்தவங்களையும் இடறல் அடைய வச்சுக்கிட்டு இருக்குற..

தவறான வழியை சரியான வழின்னு நம்பிக்கிட்டு நடந்துகிட்டு
இருக்குற..

உண்மையானதை
கண்டுகொள்ளும் போது
பொய்கள் எல்லாம் ஒடிவிடும்..

பகுத்தறிவை பத்தி பரவசாமா பேசும் நீ எது உண்மையான சத்தியமுனு கொஞ்ஜம் பகுத்து ஆராய்ந்து கண்டுபிடி..

பிரவீன்: (கோபமாக)
டேய் ஒரு வேளை நான் உன்ன மாதிரி பைபிள் படிக்கிற..வெட்டி பயளா இருந்தா நீ சொன்ன மாதிரி உண்மையான சத்தியத்தை கண்டுபிடிக்க போகலாம் ஆனா
அத விட எனக்கு இங்க நெறய வேலை
இருக்குடா கிறுக்கு.. மங்கூஸ் மண்டயா
நீ என்ன தான் கடிகார முள்ளு மாதிரி சுத்தி சுத்தி வந்து பேசுனாலும் நான் கடவுள் மறுப்பு கொள்கையில இருந்து பின் வாங்க போறது இல்ல..

பரத்: (சிரித்த படி)

நீயும் என்ன எவ்வளவு கேவலமா திட்டி
பேசுனாலும் உனக்கு சுவிசேசம்
சொல்ற வேலையில் இருந்து நான் பின்
வாங்கப்போறது இல்ல நண்பா... சரி இங்க பாரு இப்ப எனனோட வாட்சுல சரியா செட் பண்ணியிருக்கிற நேரம் 12:00Pm, தேதி 16 ,மாதம் Jan அப்படினு காட்டுது சரியா ?

பிரவீன்: டேய் இன்னம் நீ இந்த வாட்சு கதைய விடலயா.. போதும்டா.. மண்டயகாய வைக்காதா...

பரத்: டேய் ஜஸ்ட் சிம்ப்புலானா விசயத்தை சொல்றதுக்கு உனக்கு என்னா? சொல்லுடா

பிரவீன்: (சலிப்புடன்) உன் வாட்சுல
எல்லாம் சரியா தான்டா கட்டுது...

பரத்:(சிரித்தபடி)
சரி ஓகே.. இப்ப என் வாட்சுல மாதம் ,தேதி,நேரத்தை...
 Dec 18.. 3:45 Am னு செட்
பண்ணிட்டேன்..

உன் வாட்சுலையும் அதே
மாதிரி செட் பண்ணிடு அப்பரம் இந்த
ரூம்ள இருக்கிற கடிகரம் மற்றும் காலண்டர் என எல்லாத்தையும் இதே மாதிரி கால வரிசையில் மாத்தி வைச்சுடுவோம் அப்படி நம்ம
எல்லாத்தையும் மாத்தி வச்சுட்டா...இப்ப
இங்க.. டிசம்பர் 18 , 3:45 Am,னு சூழ்நிலை மாறிடுமா ?

பிரவீன்: டேய் இது என்ன Iq டேஸ்டு
கொஸ்டீனா? இந்த மாதி
சின்னபுள்ளத்தானமான
கேள்வியெல்லாம் எதாவது Lkg ukg
படிக்கிற சின்னப்புள்ளைங்கட்ட போய் கேளு..அவங்க உன்னய விட அறிவா பேசுவாங்க தெளிவாவும் பதிலும்
சொல்லுவாங்க....

அப்பரம் நீ என்னோட பகுத்தறிவுக்கு ஏத்த மாதிரி நல்லா பதமான
கொஸ்டீன் ஏதாவது இருந்த மட்டும்
கேளு நான் பதில் சொல்றேன்....

இந்த சில்லித்தன கொஸ்டீனுக்கு நான்
பதில் சொல்ல மாட்டேன்..

பரத்:(சிரித்தபடி)

ஹலோ... மிஸ்டர்.பகுத்தறிவு பக்கோடா..இது உனக்கு ஏத்த பதமான
கொஸ்டீன் தான் இதுக்கு மோதல
பதில் சொல்லு.. இதோட பதம் போகப்போக உனக்கே புரியும்

பிரவீன்: சரி சரி சொல்றேன் நீ
சொல்ற மாதிரி கடிகாரத்தையும்
காலண்டரையும் மாத்தி வெச்சா
ஒன்னும் ஆக போறது இல்ல சரியான
நேரத்தையும், காலத்தையும் ,
கடிகாரத்தை நம்பியோ காலண்டரை நம்பியோ துள்ளியமாக சொல்ல முடியாது..

தெளிவா சொல்லனும்னா
காலநிலையை வச்சுதான் சொல்ல
முடியும்..

பரத்: எப்படி ?

பிரவீன்:
*அதாவது நேரம் என்பது கடிகாரத்தை
அடிப்படையா வைச்சு செயல்படுவது
கிடையாது அது பூமி தன்னை தானே சுற்றி வரும் காலத்தை வைச்சு செயல்படுகிறது...

*எப்படினா... பூமி தன்னை தானே சுற்றி வர சாராசரி 24 மணி நேரம் ஆகும்.. அதுல பகல் 12 மணி நேரம் இரவு 12 மணி நேரம்..

* இதை வச்சு தான் உலகத்தில் நேரத்தை கணக்கிடப்படுகிறோம்

*அது மட்டுமல்ல சரியான மாதமும்
பருவகாலமும் காலண்டரை அடிப்படையா வச்சு செயல்படுவது இல்ல... அது பூமி சூரியனை சுற்றி வரும் காலத்தை அடிப்படையா
வச்சு செயல்படுகிறது..

*அதாவது பூமி சூரியனை சுற்றி வர
சாராசரியாக 365 நாட்கள் ஆகும்
அதைத்தான் நாம் ஒரு வருடம் என்றும்
பருவகால மாற்றங்களை குறிக்க மாதங்கள் என்றும் கணக்கிடுகிறோம்..

பரத்: ஓகே.. அப்படினா பூமி தன்னை தானே சுற்றி கொள்ளும் காலத்தை( 24hours) அடிப்படையாக வச்சுத்தான் உலகத்தில்
கடிகாரமே உருவாக்கப்பட்டிருக்கு சரியா ?

பிரவீன்: ஆமா சரி தான்

பரத்: அப்பரம் பூமி சூரியனை சுற்றி வர ஆகும் காலத்தை (365Days) அடிப்படையா வச்சுத்தான் இந்த உலகத்தில் காலண்டரே
உருவாக்கப்பட்டிருக்கு சரியா ?

பிரவீன்: ஆமாடா சரி தான்

பரத் :சரி இப்ப நல்லா யோசித்து பதில்
சொல்லு பிரவீன் இந்த உலகத்துல
மனித இனம் பயன்படுத்தும் கடிகாரங்களும் காலண்டர்களும் தன்னைத்தானே உருவாக்கி
கொண்டதா ?

பிரவீன்: தன்னைத்தானேவா? லூசு மாதிரி கேட்கிறேயேடா...அது எப்படிடா தன்னைதான் உருவாக்கி கொள்ள முடியும் ?
அது மனிதானால் உருவாக்கப்பட்டது

பரத்: சரி.. அப்படினா அந்த
கடிகாரங்களையும், காலண்டர்களையும்
வடிவமைத்து உருவாக்கிய ஒருவர் இருக்கிறார் என்பதை நீ ஒத்துக்கிறியா ?

பிரவீன்: ஒத்துக்கிறேன் யாருமே இல்லாம கடிகாரமும் காலண்டரும் எப்படி தானாக உருவாக்கி கொள்ள முடியும் அதை ஒருவர் வடிவமைத்து உருவாக்கி இருக்கிறார்

பரத்: குட்.. இப்ப நான் கேட்கிறதுக்கு
கொஞ்ஜம் உன் பகுதாதறிவால்
நல்ல பகுத்து ஆராய்ந்து பார்த்து பதில்
சொல்லு......

*இந்த உலகத்திலுள்ள எல்லா
கடிகாரங்களையும் நிர்வாகிக்கிற பூமி
எவ்வளவு பெரிய கடிகாரம்? அது
தன்னைத்தான் சுழல்வதை வச்சுத்தான் நேரமே கணக்கிடப்படுது..
என்னா ?

பிரவீம்: ஆமா..

பரத்: கொஞ்ஜம் ஆழ்ந்து
சிந்தித்துப்பார்... பிரவீன்..

*இந்த உலகத்தின் காலநிலை மற்றும் பருவநிலை।மாற்றங்களை நிர்வாகிக்கிற இந்த சூரிய
குடும்பம் எவ்வளவு பெரிய காலண்டர்?
என்னா ?

பிரவீன்: ஆமா...

பரத்:
* இந்த உலகத்துல இருக்கிற தம்மாத்துண்டு கடிகாரமும் காலண்டரும் யாருடைய ஆளுகையும் உருவாக்கமும் இல்லாமா
தன்னைத்தான் உருவாக்கி கொள்ள
முடியாத போது..

*இந்த உலகத்தின் எல்லா கடிகாரங்களின் நேரத்தை நிர்வாகிக்கிற நம்ம பூமி.....
எவ்வளவு பெரிய கடிகாரம் ?

*இந்த உலகத்தின் காலநிலை மற்றும்
பருவநிலைகளை நிர்வாகிக்கிற சூரிய குடும்பம்.....
எவ்வளவு பெரிய காலண்டர் ?

*இவைகள் மட்டும் யாருடைய ஆளுகையும் உருவாக்கமும் இல்லாமா எப்படி தன்னைதான் உருவாக்கி கொள்ள முடியும் ? பதில் சொல்லு நண்பா எப்படி முடியும் ?

பிரவீன் : (சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் மௌனமாக யோசித்து பார்த்த பிறகு)

ஆமா பரத் எதுவும் தானாக
தன்னைத்தான் உருவாக்கி கொள்ள
முடியாது ஏன்னா எல்லாத்துக்கும் ஓரு
ஆரம்பம் இருக்கும்..

பரத்: நீ சொன்னது நூற்றுக்குநூறு
உண்மை பிரவீன் எல்லாப்படைப்புகளுக்கும் ஒரு
ஆரம்பம் இருக்கு

*பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சுழன்று கொண்டிருந்த வாயுக்கோளத்திலிருந்து
தான் எல்லா கோள்களும் வந்ததுனா அந்த வாயுக்கோளம் எங்கிருந்து வந்தது ?
பதில் சொல்லு

பிரவீன்: தெரியலப்பா..

பரத்:
*ஆரம்பம் என்று ஒன்று இருந்தா அதை
ஆரம்பித்தவர் நிச்சயமாக இருந்தே ஆக
வேண்டும்.. நண்பா...என்ன
சொல்ற?

பிரவீன்:(ஒன்றும் பேசாமல் அமைதியாக)ம்ம்ம்..

பரத்:
*24 மணி நேரத்திற்கு ஒருமுறை தன்னைத்தான் சுற்றும் பூமி...

*இரவு,பகல்,பருவகாலங்கள், பாதை
மாறாமல் குறிப்பிட்ட பாதையில் ஓடும்
கோள்கள் என எல்லாம் ஒரு திட்டத்தை
காட்டுகிறது...

*இப்படி ஒரு திட்டம் இருந்தாதுனா இவைகளை திட்டமிட்டவர் நிச்சயமாக இருந்தே ஆக வேண்டும்...
என்ன சொல்ற பிரவீன்?

பிரவீன்:(ஒன்றும் பேசாமல் அமைதியாக) ம்ம்ம்ம்...

பரத்: கொஞ்ஜம் சிந்தித்து பார்
நண்பா..

*மேலே எறிந்தால் பூமியை நோக்கி விழும் பொருள், நிறமில்லாவாயுக்கள்,
விதைக்கப்படும் விதை மாறாமல் முளைத்தல், மரங்கள் வெளியிடும் பிராண வாயு ,நீரில் மட்டும் வாழ்வன, நிலத்தில் மட்டும் வாழ்வன என எல்லாம் ஒரு சட்டத்தை
காட்டுகிறது..

*இப்படி ஒரு சட்டம் இருக்குதுனா அந்த
சட்டத்தை உருவாக்கியவர் நிச்சயம்
நிச்சயமாக இருந்தே ஆக வேண்டும்...

தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லி
கொள்கிறான்(சங்கீதம்14:1)
பரிசுத்த வேதாகமம்

*இந்த அண்ட சாராசரத்தில்
காணப்படுகிறவைகள், காணப்படாதவைகள் என எல்லாம் தேவனுடைய வார்த்தையால்
உண்டாக்கப்பட்டது

*சகலமும் அவருடைய வல்லமையுள்ள
வார்த்தையால் நிலைபெற்று நிற்கிறது...

*அவர் சொல்ல ஆகும் அவர்
கட்டளையிட நிற்கும் அவருடைய மாக பெரிய ஞானத்தையும்,வல்லமையும்,
அளவிடவே முடியாது...

*தேவனை பற்றி சிந்தனையின் முடிவில் மனிதன் அறிவுப்பூர்வமான அதிர்ச்சி அடைகிறான்...

*விண்வெளிக்கு சென்ற முதல்
மனிதர்கள் சந்திரனில் தரை இறங்கியவுடன்...விண்வெளி மண்டலத்தையும்,
நட்சத்திரக்கூட்ங்களையும்
உற்று நோக்கியபடி பரிசுத்த வேதாகமத்தை எடுத்து
சங்கீதம்8:3-4 வசனங்களை வாசித்தார்கள்
உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும்,
நீர் ஸ்தாபித்த சந்திரனையும்
நட்சத்திரங்களையும் நான் பார்க்கும் போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும்,மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
சங்கீதம் 8 :3-4
என்று தேவனை புகழந்தார்கள்

பிரவீன்: நண்பா நீ சொன்ன
அறிவுப்பூர்வமான எல்லா கருத்துக்களையும் நான் ஏத்துக்குறேன் ஆனா... என்னால தேவன் இருக்கிறார் என்பதையும் அவரால் தான் எல்லாம் படைக்கப்பட்டது என்பதையும்
இன்னும் என்னால முழுசா
ஏத்துக்கொள்ள முடியல...

பரத்: சரி இப்ப இந்த கொஸ்டீனுக்கு
பதில் சொல்லு

* உன் கண்ணுக்கு முன்னாடி இந்த
உலகத்துல இதுக்கு முன்னாடி யாருமே
அறியாத... யாருமே பார்த்திடாத...
யாருமே உபயோகித்திடாத.. ஒரு இயந்திரம்(மெசின்) இருக்குதுனு வச்சுக்க

பிரவீன்:சரி

பரத்: உனக்கு அந்த இயந்திரத்தை பத்தி ஒன்னும் தெரியாது

பிரவீன்: ஆமா அதை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது

பரத்: ஆனா அந்த இயந்திரத்தை நீ தான் இயக்கி செயல்பட வைக்கனும்...
அப்படி இருக்கும் போது..

அந்த இயந்திரத்தை இயக்கும் முறையை நீ யாருட்ட கேட்டு தெரிஞ்சுகிடுவ ?

பிரவீன்: (சிறிது நேர யோசனைக்கு பிறகு)
அந்த இயந்திரத்தை உருவாக்கியவரிடம் இருந்து தான் தெரிஞ்சிக்கிடனும்...

பரத்: அது எப்படிப்பா பிரவீனு இந்த
உலகத்துல யாருமே அந்த இயந்திரத்தை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்ல யாருக்குமே அதை பற்றி ஒன்னும் தெரியாது...

யாருமே அதை உபயோகித்ததும்
இல்ல அப்படிப்பட்ட ஒரு இயந்திரம் முதல் முறையா உனக்கு முன்னாடி இருக்கு..

நீதான் அதை மொதல பர்க்குற.. அப்பரம் எப்படி அந்த இயந்திரத்தை ஒருவர் உருவாக்கிஇருக்க முடியும்?

அது தானாக உருவாகி
இருக்ககூடாதா ?

பிரவீன்: (அமைதியாக)
இல்ல பரத்து தானாக அது எப்படி
உருவாக்கி கொள்ள முடியும்?

அது என் கண்ணுக்கு முன்னாடி ஒரு
இயந்திரமா இருக்குதுன்னா அதை
இயந்திரமா வடிவமைத்து உருவாக்கியவர் நிச்சயம் இருந்து தான் ஆக வேண்டும்..

பரத்:(சிரித்தபடி) இப்ப புரியுதா பிரவீன் எந்த ஒரு படைப்புக்கு பின்னும் அதை வடிவமைத்து உருவாக்கியவர் நிச்சயம் இருந்தே ஆக வேண்டும் இதை நீ உன் முழு மனதுடன் ஒத்தக்கிறியா?

பிரவீன்: ஒத்துக்கிறேன் நண்பா தேவன்
இருக்கிறார் அவராலே எல்லாம்
படைக்கப்பட்டது இதை என் முழு மனதுடன் ஏத்துக்கிறேன்...

பரத்: தேவனுக்கே மகிமை இயேசுவுக்கே புகழ்...

பிரவீன்: பரத் எனக்கு இப்ப இயேசு கிறிஸ்துவை பற்றி நெறய தெரிஞ்சிகிடனும்னு ஆர்வமா இருக்குடா...ஆனா இப்ப டைம்
ஆகிடுச்சு நான் வீட்டுக்கு கிழம்புறேன்..

நாளைக்கு ஈவினிங் மீட் பண்ணுவோம் ஓ.கே வா ?

பரத்: கண்டிப்பா மீட் பண்ணுவோம்.. டா..
நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு
கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியை உனக்கு அறிவிக்க நானும் அதிக ஆர்வமா இருக்கேன்..
மீண்டும் சந்திப்போம்


ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

Marvel Jerome