பொருளாதார உதவி
உனக்கு உதவி வேண்டி எந்த மனிதனிடத்திலும் போய் வேண்டிக்கொண்டும் கெஞ்சிக்கொண்டும் வெட்டியாக காத்திருக்காதே...
உனக்கு ஏற்ற சமயத்தில் உதவிட வரும் கன்மலையாகிய கர்த்தரை கெட்டியாக பிடித்து அவர் சமூகத்தில் உனக்கு ஒத்தாசை வரும் வரை துதியுடன் காத்திரு...
என் பொருளாதார குறைவுகளால் நான் தரித்திரன்ஆகிவிட்டேனே என்ற உன் தரித்திரமான "அந்த சூழ்நிலையை" நினைத்து நீ வருத்தப்பட்டு வாட வேண்டாம்...
உன்னை ஐஸ்வரியவானாக்க கிறிஸ்து இயேசு சிலுவையில் தரித்திரரானாரே!
"அந்த சத்தியத்தை" நினைத்து சந்தோஷப்பட்டு அவரை நீ பாட வேண்டும்...
என் குறைவுகளை போக்க என்னிடம் ஐஸ்வரியம் இல்லையே என்று உன் குறைவுகளை பார்த்து கவலையோடு கண்ணீர் விடாதே !
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் என் குறைவுகளை எல்லாம் நிறைவாக ஆக்குவார் என்ற ஆழமான விசுவாசத்தில் கர்த்தரை எதிர் பார்த்து ஆனந்த கண்ணீர் விடு!
உனக்கென்று தனியாக வாழ்வாதாரம் இல்லாத நிலையில் கூட அவர் உன்னை ஆச்சரியமாய் வாழ வைத்திருக்கிறார் !
எந்த பொருள்களும் உனக்கு இல்லாத நிலையில் கூட அவர் உன்னை போஷித்து திருப்தியாக்கி நடத்தியிருக்கிறார் !
இதை நீ மறந்து விடாதே...
இந்த உலகத்தில் கோடான கோடி மக்களுக்கு கிடைத்திடாத
தேவ சமாதானத்தையே தேவன் உனக்கென்று இலவசமாக தந்திருக்கும் போது இன்று இருந்து நாளை அழிந்துபோகக்கூடிய உலக ஐஸ்வரியத்தையும் செல்வத்தையும் அள்ளி கொடுக்க மாட்டாரா?
நிச்சயம் சம்பூர்ணமாக கொடுப்பார் தேவனிடத்தில் விசுவாசம் உள்ளவனாய் இரு
தேவன் உனக்கு தந்திருக்கும்
தேவ சமாதானத்திற்கு முன்னால் உலக ஐஸ்வர்யங்களும் செல்வங்களும் ஒரு பொருட்டே இல்லை
இதை முதலில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்
கிறிஸ்துவுக்குள் தேவன் உன்னை சகலவிதமான ஆசீர்வாதங்களினாலும்
ஆசிர்வதிப்பார்
ஆம் சகோதர சகோதரிகளே
கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் உன் தலைக்கு மேலே....
ஆஸ்தியும் ஐஸ்வரியமும் இனி வரும் உன் கால்களுக்கு கீழே...
உன் வாழ்வில் கர்த்தரை மட்டும் வை எல்லாவற்றிற்கும் மேலே...
நீ நிச்சயம் இருக்க மாட்டாய் என்றும் கீழே...
ஆமென்
ஜீவ வழி -LIVING WAY
www.facebook.com/lwcomm
உனக்கு உதவி வேண்டி எந்த மனிதனிடத்திலும் போய் வேண்டிக்கொண்டும் கெஞ்சிக்கொண்டும் வெட்டியாக காத்திருக்காதே...
உனக்கு ஏற்ற சமயத்தில் உதவிட வரும் கன்மலையாகிய கர்த்தரை கெட்டியாக பிடித்து அவர் சமூகத்தில் உனக்கு ஒத்தாசை வரும் வரை துதியுடன் காத்திரு...
என் பொருளாதார குறைவுகளால் நான் தரித்திரன்ஆகிவிட்டேனே என்ற உன் தரித்திரமான "அந்த சூழ்நிலையை" நினைத்து நீ வருத்தப்பட்டு வாட வேண்டாம்...
உன்னை ஐஸ்வரியவானாக்க கிறிஸ்து இயேசு சிலுவையில் தரித்திரரானாரே!
"அந்த சத்தியத்தை" நினைத்து சந்தோஷப்பட்டு அவரை நீ பாட வேண்டும்...
என் குறைவுகளை போக்க என்னிடம் ஐஸ்வரியம் இல்லையே என்று உன் குறைவுகளை பார்த்து கவலையோடு கண்ணீர் விடாதே !
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் என் குறைவுகளை எல்லாம் நிறைவாக ஆக்குவார் என்ற ஆழமான விசுவாசத்தில் கர்த்தரை எதிர் பார்த்து ஆனந்த கண்ணீர் விடு!
உனக்கென்று தனியாக வாழ்வாதாரம் இல்லாத நிலையில் கூட அவர் உன்னை ஆச்சரியமாய் வாழ வைத்திருக்கிறார் !
எந்த பொருள்களும் உனக்கு இல்லாத நிலையில் கூட அவர் உன்னை போஷித்து திருப்தியாக்கி நடத்தியிருக்கிறார் !
இதை நீ மறந்து விடாதே...
இந்த உலகத்தில் கோடான கோடி மக்களுக்கு கிடைத்திடாத
தேவ சமாதானத்தையே தேவன் உனக்கென்று இலவசமாக தந்திருக்கும் போது இன்று இருந்து நாளை அழிந்துபோகக்கூடிய உலக ஐஸ்வரியத்தையும் செல்வத்தையும் அள்ளி கொடுக்க மாட்டாரா?
நிச்சயம் சம்பூர்ணமாக கொடுப்பார் தேவனிடத்தில் விசுவாசம் உள்ளவனாய் இரு
தேவன் உனக்கு தந்திருக்கும்
தேவ சமாதானத்திற்கு முன்னால் உலக ஐஸ்வர்யங்களும் செல்வங்களும் ஒரு பொருட்டே இல்லை
இதை முதலில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்
கிறிஸ்துவுக்குள் தேவன் உன்னை சகலவிதமான ஆசீர்வாதங்களினாலும்
ஆசிர்வதிப்பார்
ஆம் சகோதர சகோதரிகளே
கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் உன் தலைக்கு மேலே....
ஆஸ்தியும் ஐஸ்வரியமும் இனி வரும் உன் கால்களுக்கு கீழே...
உன் வாழ்வில் கர்த்தரை மட்டும் வை எல்லாவற்றிற்கும் மேலே...
நீ நிச்சயம் இருக்க மாட்டாய் என்றும் கீழே...
ஆமென்
ஜீவ வழி -LIVING WAY
www.facebook.com/lwcomm
No comments:
Post a Comment