Monday 16 November 2015

(3) புனிதர்கள் வந்தது காட்சி கொடுத்துருக்காங்கள அப்பரம் ஏன் அவங்களிடம் வேண்டக்கூடாது ?

அந்தோனி: மாதா,அந்தோனியார் மற்றும் புனிதர்களிடம்  வேண்ட  கூடாது "தேவனிடம்" மட்டும்தான் வேண்டனும் இது தான்  வேதாகமத்தின் படி சரி இத நான் ஒத்துக்கிறேன்,ஆனா...…

பீட்டர்: என்ன அந்தோனி சொல்லு..

அந்தோனி: ஆனா புனிதர்கள் தங்களிடம் வேண்ட  சொல்லியும்,ஜெப மாலை சொல்ல சொல்லியும்,
தங்களுக்கு கோயில் கட்ட சொல்லியும் பல இடங்களில் வந்து காட்சி கொடுத்துருக்காங்களே இந்த விஷயம் தான் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு ?

பீட்டர்:இதுல குழம்புறதற்கு ஒன்னும் இல்ல அந்தோனி, வேதாகமத்தின் படி "சாத்தான் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் போலவும், ஒளியின் தூதர்கள் போலவும் வேஷம் தரித்துக்கொள்வான்" (2கொரிந்தியர் 11:13-14) என்று எழுதியிருக்கு, மக்களை தேவனுடைய வார்த்தைகளை விட்டு விலகி  திசை திருப்ப  சாத்தான் செய்யும் ஏமாத்து வேலைதான் இது, ஜெபமாலை மாதா அப்படினு ஒரு காட்சி கொடுக்கப்பட்டது அதனால மக்கள் ஜெபமாலை சொல்லிக்கிட்டு மாதாவிடம் வேண்ட ஆரம்பிச்சுட்டாங்க, புனிதர்கள் வந்து காட்சி கொடுத்ததாக சொல்லப்படும் இடங்களிலும் இதேபோல் தான் மக்கள் அந்த புனிதர்களை நோக்கி வேண்டுகிறார்கள், இப்படி மக்களை தேவனுடைய கட்டளைகளை மீற வைத்து நரகத்துக்கு அழைத்துச்செல்ல  சாத்தான் செய்யும் தந்திரங்களில் இதுவும் ஒன்று, எச்சரிக்கை

தொடரும்......

ஜீவ வழி-LIVING WAY

facebook.com/lwcomm

No comments:

Post a Comment