Monday 16 November 2015

எனது சாட்சி


எனது சாட்சி 

என் பெயர் அந்தோனி மார்வெல் ஜெரோம் நான் கடந்த 2013 -ல் இரட்சிக்கப்பட்டேன். என்னுடைய சாட்சியை உங்களோடு பகிர்கிறேன்  

எனக்கு விவரம் தெரிந்தது முதல் 
கடந்த 2013 மார்ச் மாதம் வரை.......

நான் பாவம் என்னும் பள்ளத்தாக்கில்  பன்றி போல திறிந்தேன்.....

போதைக்கும் சிற்றின்பத்திற்கும் அடிமையாக என்னை விற்றுத்திறிந்தேன்.....

சாபம் என்னும் சாக்கடையில்
சாக்கடையாய் ஊறிக்கிடந்தேன்.....

வேதத்தை வெறுத்து சத்தியத்தை மறுத்து பாரம்பரியத்தில் நம்பிக்கையாய் இருந்தேன்.....

ஆம் பிறகு பாவ பழக்கத்திலிருந்து விடுதலை பெற பல பாதையாத்திரைகளை மேற்கொண்டேன்.
மது போதை பழக்கத்திலிருந்து 
மீண்டு வர யோகா,தியானம் என பல வழிகளில் முயற்சி செய்தேன்.
அமைதி இல்லை ! சமாதானம் இல்லை ! எங்கும்  இருள் சூழ்ந்த நிலை..... உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு..... இவைகள் என்னை நீ ஏன் வாழ வேண்டும் ?என்று கேள்வி எழுப்பியது 
சிலைகளுக்கு முன் மண்டிபோட்டு பல மணிநேரம் அழுது புலம்பினேன்  

எங்கள் பங்கு கோயிலில் உள்ள சிலைகளிடம் இருந்து விடுதலையும், வாழ்வும் பெறலாம் என்று நம்பி, வெள்ளி, செவ்வாய்க்கு முழு நேர விரதம் இருந்து பல மன்றாட்டுக்களையும்,இடைவிட ஜெபமாலைகளையும் சொல்லி 
கெஞ்சி கேட்டு இருக்கிறேன்.

ஒரு சதவீதம் கூட முன்னேற்றம் இல்லை.....
அனுதினமும் என்னை பாவ கயிறுகள் இன்னும் இறுக்கி கொண்டன.....
என் உடல் நிலையின்  மருத்துவரால் குணமாக்க   முடியாத வியாதியின் தீவிரம்,உறவும் நட்பும் என்னை புறக்கணித்த நிலை இவைகள் எனக்குள் தற்கொலை எண்ணத்தை இன்னும் தீவிரப்படுப்தியது ...

 வெளியிலிருந்து பார்க்கும் போது
நான் அடிக்கடி கோயிலுக்கு செல்லும் பக்திமான்.....
ஆனால்  நான் உண்மையில்  வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை.....

நான் வேலை செய்த தனியார் நிறுவனத்திலிருந்து நான் வேலையை விட்டு விலக வேண்டிய நிலையும் வந்தது,யாருக்குமே பிரயோஜனமாக  வாழாத நான் எனக்காக கூட பிரயோஜனமாக வாழவில்லை.....
செத்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.....

அந்த இரவு நேரத்தில் எனக்கு   ஒருவரிடமிருந்து  போன் கால் வந்து.....
அவர் எங்கள் பாரம்பரிய மார்க்கத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர் 
வேதாகமத்தை மட்டும் பின்பற்றும் நபர்
எங்கள் பாரம்பரிய நம்பிக்கைகளை வேதத்தின் படி தவறு என்று சுட்டிக்காட்டும் அவரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.....
 அவர் வேறு ஒரு காரணத்திற்காக எனக்கு கால் செய்தார்.....

பிறகு என்னை தனிப்பட்ட முறையில் விசாரித்தார்..... எனக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை பற்றி சொன்னார்..... அவர் நமக்காக  செய்து முடித்த காரியங்கள்,பாவமன்னிப்பு மற்றும் பரலோக வாழ்வின் நிச்சயம் பற்றி விளக்கி சொன்னார்..

தேவனுக்கு உன் இருதயத்தை கொடு அவர் உனக்குள் புது இருதயத்தை வைப்பார் என்றும்,ஆண்டவர் உன்னோடு பேசுவார் என்றும் அவர் பேசினால் வேத வசனத்தின் மூலம் தான் பேசுவார் அவர் ஜீவனுள்ள தேவன் அவர்  வார்த்தையாகவே இருக்கிறார் என்று சொல்லி முடித்தார்.
பிறகு இது பற்றி சிந்தித்தேன்.....

நான் பல முறை சிலைகளை பார்த்தும் போட்டோக்களை பார்த்தும் ஆண்டவரே என் கூட பேசுங்கனு சொல்லியிருக்கேன்.....
இது வரை எந்த சிலையும் எந்த போட்டோவும் என் கூட பேசியதும் இல்ல.எனக்கு விடுதலை கொடுத்ததும் இல்ல.

ஒரே ஒரு தடவை இவர் சொல்ற மாதரி செஞ்சுதான் பார்போமே ! ? என்று முடிவுசெய்து எங்கள் வீட்டில் இருந்த திருவிவிலியத்தை எடுத்து ஒரு பக்கத்தை திருப்பினேன்.....

அது எசாயா 42 அதில் ஒரு வசனம் என் கண்ணில் பலிச்சென்று பட்டது.....

நானே ஆண்டவர்; அதுவே என் பெயர்; என் மாட்சியைப் பிறருக்கோ, என் புகழைச் சிலைகளுக்கோ விட்டுக்கொடேன்.
(எசாயா 42:8) என்று தேவனே என்னோடு நேரடியாக பேசுவதுபோல் என் உள் மனதில் நன்றாக உணர்ந்தேன்.....

நான் சிறுவயதிலிருந்து பல முறை திருவிவிலியத்தை எடுத்து வாசித்திருக்கிறேன்,பல வேதப்பகுதிகளை மனப்பாடம் செய்து எங்கள் கோயிலில் பரிசும் வாங்கி இருக்கிறேன். ஆனால் அது ஏதோ சடங்குக்காகவும்,கடமைக்காகவும்,
பரிசு வாங்குவதற்காகவுமே இருந்தது.
 அப்போதெல்லாம் நான் தேவசத்தத்தை உணரவும் அனுபவிக்கவும் இல்லை. ஆனால் இது  ஒரு புது மாதிரியாக இருந்தது.....

என் உள் மனதின் ஆழத்தில் ஏதோ ஒரு புதுவிதமான அனுபவத்தை உண்மையாகவே உணர்தேன்.....

பிறகு திருவிவிலியத்தை எடுத்து வைத்துவிட்டு டீவியை ஆன் செய்து சேனலை மாற்றிக்கொண்டிருந்தேன் 
அப்போது ஒரு சேனலில் ஒரு பாஸ்டர் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்.
 இந்த மாதிரி கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை நான் கண்டுகொள்ளவே மாட்டேன் சேனலை மாத்திடுவேன். அன்றைக்கு எனக்கு மாத்த மனமில்ல ஏன் என்றும் புரியல..... நான் பிரசங்கத்தை  கவனித்தபோது 
அந்த போதகர் (ஏசாயா 42:8) ல் கர்த்தர் இவ்வாறு சொல்கிறார் என்று ஆரம்பித்தார்.....

அது என்னவாக இருக்கும் என்று நான் கவனித்துக்கொண்டிருக்கும் போது
டீவியில் வசனம் அடங்கிய ஸ்லைடு வந்தது அதில் இவ்வாறு இருந்தது 

நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன் (ஏசாயா 42:8) 
இதை பார்த்தவுடன் நான் அதிர்ந்தது விட்டேன்.இதைத்தான் நம் சிறிது நேரத்திற்கு முன்பு படித்தேன் அதே வசனம் திரும்பி என்னை துரத்தி வருகிறதே என்னவாக இருக்கும் என்று சிந்தித்தேன்..... 

நான் எங்கள் பாரம்பரிய உபதேசத்தில் நடக்கிறவனாகவும்.....
தேவனுக்கு கொடுக்க வேண்டிய மகிமையை இறந்த புனிதர்களுக்கு கொடுக்கிறவனாகவும்.....
தேவனுக்கு கொடுக்க வேண்டிய துதிகளை விக்கிரகங்களுக்கு செலுத்துகிறவனாகவும்.....
இருந்தேன் அதை அந்த நேரத்தில் நன்றாய் உணர்ந்தேன்.....
 நீ அப்படி செய்யாதே என்பதை எனக்கு எடுத்து சொல்லத்தான் 
தேவன் இந்த வசனத்தின் மூலம் என்னிடம் பேசுகிறார் என்பதை 
அறிந்து அழுதேன்.....

நான் ஒரு சாக்கடை,பாவங்கள் நிறைந்த குப்பைத்தொட்டி என்னை 
ஒரு ஆளாக மதித்து என்னிடம் தேவன் இடைபட்டு பேசுகிறாரே !
என்று அன்று இரவு கதறி அழுதேன்.....

உடனே முழங்காலில் இருந்தது கைகளை உயர்த்தி 

"இயேசுவே நீரே ஆண்டவர்; அதுவே உங்களோட பெயர்; உங்களுக்கு கொடுக்க வேண்டிய  மகிமையையும் மாட்சிமையும்  இனி இறந்த புனிதர்களுக்கோ வேறு எந்த நபருக்கோ கொடுக்க மாட்டேன்"

"உங்களுக்கு செலுத்த வேண்டிய துதியையும் புகழ்ச்சியையும் இனி எந்த சிலைக்கும் செலுத்த மாட்டேன்"
என்று சொல்லி அழுது ஜெபித்துக்கொண்டே 
என் அறையில் தூங்கிவிட்டேன்.

பிறகு தேவன் சில காரியங்களை அந்த இரவே எனக்கு ஆவியில் வெளிப்படுத்தினார். நம் தேவன் யார் என்பதையும், அவர் அளவிட முடியாத முடிவில்லாத அளவு மாக பெரியவர் என்பதையும்,அவரின் அளவற்ற  அன்பையும் எனக்கு காண்பித்தார்.
பிறகு எனக்கு திடீரென எனக்கு விழிப்பு ஏற்பட்டது.

நான் எழுந்து உட்கார்தேன் 
என் மனது முழுவதும் மகிழ்ச்சியாலும்,அமைதியாலும்  நிறைந்திருந்து.....
1% கூட கவலை இல்லை. எனக்குள் இருந்த பாவ எண்ணங்கள்,போதை அடிமைத்தனங்கள் எல்லாம் முற்றிலுமாக நீங்கிவிட்டது.
நான் என்னை ஒரு புது மனிதனாக உணர்ந்தேன். இப்படிப்பட்ட உணர்வுகளை என்னால் நம்பவே முடியவில்லை.....

இது உண்மையா என்பதை சோதித்துப்பார்க்க,நான் விரும்பி செய்த பழைய பாவ காரியங்களையும்,
போதைப்பழக்கங்களையும் பற்றி சிந்தித்து பார்க்க ஆரம்பித்தேன்.
 அதன் மீது எனக்கு ஒரு துளியளவு கூட விருப்பம் இல்லை...
1% கூட அதன் மீது ஈர்ப்பு இல்லை 
ஏதோ திரைப்படங்களில் காண்பிப்பது போல் பழைய நினைவுகளை மறந்த மனிதன் போல் பழைய சுபாவங்களை மறந்தவனாய்,பாவத்தின் அடிமைத்தனத்திற்கு இறந்தவனாய் என்னை உணர்ந்தேன்.

எனக்குள் ஏற்பட்ட உள்ளார்ந்த மாற்றத்தை உடனே யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் 
அதிகாலை 3 மணிக்கு மேல் என் நெருங்கிய நண்பனுக்கு கால் செய்தேன் அவன் என்னை  தூக்கத்தில் உளறாதே என்று அதட்டி விட்டு நான் சொல்வதை முழுமையாக கேட்க மறுத்துவிட்டான்.
விடிந்ததும் இது பற்றி என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் அறிவித்தேன்.
சிலர் அதை கேட்டு ஆச்சரியப்பட்டார்கள்  பலர் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் பேசுகிறாய் என்று சொல்லி அசட்டை செய்தார்கள்.

அந்த நாளிலிருந்து 3 மாத காலம் நான் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.யாரிடமும் அதிகம் பேசவில்லை.பரிசுத்த வேதாகமத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தேன்,வேதம் வாசிப்பதிலும்,பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தும் காரியங்களை குறிப்பு எடுப்பதிலும்,அதிக நேரத்தை செலவழித்தேன்.
6 ஆம் மாதத்தில் தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாக கடைபிடிக்கப்பட்டுவரும் பாரம்பரிய காரியங்கள் மற்றும் அது பற்றி வேதாகமம் என்ன போதிக்கிறது என்பது தொடர்பாக இரு நபர் உரையாடல் வடிவில் ஒரு சிறிய புத்தகத்தை எழுதி அதை என் இரட்சிக்கப்பட்ட புதிய நண்பர்கள் மூலம் வெளியிட்டேன். 

அவைகளை நீங்கள் நமது ஜீவ வழி -Living way Facebook page ல் அந்தோனி மற்றும் பீட்டர் உரையாடல் வடிவில் பார்க்கலாம்.
பிறகு 2015 முதல் நான் பகுதி நேர ஊழித்தை செய்துகொண்டு இருக்கிறேன்..... கவிதை,கதை,உரையாடல் என கர்த்தர் எனக்கு கொடுத்த எழுத்து தாலந்துகளை ஜீவ வழி-Living way என்கிற Facebook page உருவாக்கி அதை நான் சத்தியத்தை அறிவிக்கும் பணிக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

எதற்கும் பிரயோஜனமாக வாழாத என்னை கர்த்தர் பிரயோஜனமாக ஆக்கிவிட்டார்.....
பாவ,சாப,வியாதிகளை என்னை விட்டு முற்றிலும் நீக்கிவிட்டர்.....
என்னை உண்மையாகவே புது சிருஷ்டியாக மாற்றிவிட்டார்.....
இவைகள் எல்லாம் அவருடைய வார்த்தைகளை மட்டும் நான் விசுவாசித்ததால் என் வாழ்வில் 
ஏற்பட்ட விளைவு.

என்னுடைய சாட்சி அனேகருக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும் என்று 
நம்புகிறேன் 

எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 

ஆமென் 

ஜீவ வழி- Living way 

www.facebook.com/lwcomm

Marvel jerome 

=================================
நான் எதற்கும் பயன்படாத பாத்திரம் 
நீர் என்னை நினைப்பதற்கும் விசாரிப்பதற்கும் நான் எம்மாத்திரம்

வீணாய் பாவத்தில் விழுந்து கிடந்த என்னை ........
தானாய் வந்து பாசத்தோடு  தூக்கிவிட்டவரே !

வெட்டியாய் இருந்த என்னை விலையேறப் பெற்ற இரத்தால் 
விலையேறப் பெற்றவனாய் 
ஆக்கி விட்டவரே !

எதற்கும் பிரயோஜனம் இல்லாத 
என்னை உமக்கு பிரயோஜனமானவனாக 
மாற்றி விட்டவரே !

எல்லோருக்கும் தொல்லையாக
இருந்த என்னை உம் இரத்ததால் கழுவி தேவனுடைய பிள்ளையாக ஆக்கி அபிசேஷத்தை என் மேல் ஊற்றிவிட்டவரே !

இயேசுவே ! உம்மை அல்லாமல் நான் வேறு யாருக்காக வாழுவேன் ?

உமது சித்தம் நிறைவேற்றாமல் வேறு எங்கு நான் ஓடுவேன் ?

உம் அன்பையே என்றும் புகழ்ந்து பாடுவேன் !

உமது வசன ஆதாரம் இல்லாத எதற்கும் என் செவிகளை மூடுவேன் !

என் உயிருள்ள நாளெல்லாம்
உம் வேத ஜீவ வார்த்தைகளை மட்டுமே அதிகமதிகமாய் நாடுவேன் !

ஆமென்
=================================

No comments:

Post a Comment