Thursday 31 December 2015

#கடந்த வருடத்தில்,நீ கடந்து
வந்த பாதைகளை சற்று
திரும்பி பார்...

யாரும் எளிதாக கடக்க முடியாத கடுமையான பாதைகளை கர்த்தர்
உன்னை எளிதாக கடக்க வைத்திருக்கிறார்...

எவராலும் விரைவில் முடிக்க முடியாத காரியங்களை, கர்த்தர் உன்னை வைத்து முடித்திருக்கிறார்...

உன்னால் முடியாததை,உனக்காக உனக்குள் இருந்து முடித்தவர் கர்த்தர்...

கடந்த வருடத்தில்,உனக்கு கிடைத்த எல்லா வெற்றிகளும் கர்தருடையது...
 நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும்
அதே தான்...

ஏனென்றால் நீ அவருடையவன்/அவருடையவள்,அவர் இல்லாமல் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது...

நீ அடைந்த,அடைகிற,இனி அடையப்போகிற ஒவ்வொரு உயர்வுக்கு ஆதாரமாய்,இருக்கிறவர் 'கர்த்தர்' மாத்திரம் தான் வேற யாரும் கிடையாது...

உனக்கு கிடைத்த மேன்மைகள் எல்லாம்,நீ உழைத்த உன் கரத்தின் வலிமையால் வந்தது அல்ல...
அவைகள் கர்த்தரின் மாக பெரிய கரத்தின் வலிமையால் வந்தது...

நீ அறிவோடும்,திறமையோடும் உழைத்தால்,கடந்த வருடத்தில் வெற்றிகள் பல உனக்கு கிடைத்துவிட்டது என்று,உன்னை பற்றி மேன்மையாக நினைத்து விடாதே...
உன்னை விட அறிவாலிகளும் திறமைசாலிகளும் அவிசுவாசிகளாய்  அடிமட்டத்தில் இருக்கிறார்கள்,
அவர்களுக்கு எட்டாத உயரத்தில், உன்னை தூக்கி வைத்தவர் 'கர்த்தர்' இதை உன் வாழ்நாளில் என்றும், மறந்துவிடாதே...

உனக்கு கிடைத்த வெற்றிகள்,
உன் அறிவாலும்,திறமையாலும், வந்ததல்ல.ஆண்டவருடைய வார்த்தையாலும்,வல்லமையாலும் வந்தது...

எனவே,நன்றி நிறைந்த உள்ளத்தோடு கர்த்தரை நினைத்து...
அவருடைய நாமத்தை மாத்திரம் என்றேன்றும் உயர்த்து...

இந்த வருடத்தின் ஆரம்ப நாள்
முதல் நீ இந்த பூமியில் வாழ்கிற
கடைசி நாள் வரை,உன் சுய பெருமையை  தவிர்த்து,நான் அல்ல கிறிஸ்துவே என்று கர்த்தரின் நாமத்தை மாத்திரம்  உயர்த்து...

ஆமென்....... அல்லேலூயா.......

ஜீவ வழி -LIVING WAY

marveljerome.blogspot.in

Tuesday 15 December 2015

ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.

(நீதிமொழிகள் 16: 7)

நம்முடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமான இருந்தால்,இன்று நம்மை எதிரியாக நினைப்பவர்களை,கர்த்தர் நமக்கு நண்பர்களாக மாற்றுவார்.

நாம் அவருக்கு பிரியமான அவரின் வார்த்தையின் வழியிலே நடப்போம்!

அவதூறு,அவமரியாதை பேச்சுக்கள் என எதுவந்தாலும் அன்பின் சுபாவத்திலேயே நிலைப்போம்!

தீமையோடு எதிர்த்து நிற்காமல்(மத்5:39)
பிசாசுக்கு எதிர்த்து நின்று(யாக்4:7) சாட்சியின் வசனத்தினாலும்,
இயேசுவின் இரத்தினாலும் சாத்தானை (வெளி12-11)ஜெயிப்போம் !

ஆமென், அல்லேலூயா



ஜீவ வழி -LIVING WAY

marveljerome.blogspot.in

Monday 14 December 2015

சாண்டா கிளாஸ் VS ஞானமுள்ள குழந்தைகள்

#Exclusive

சாண்டா கிளாஸ் VS ஞானமுள்ள குழந்தைகள்

சாண்டா கிளாஸ்: Hello குழந்தைகளா,
நான் தான் Santa Claus (கிறிஸ்மஸ் தாத்தா) நான் இல்லாம Christmas யே  இல்ல... வாங்க வந்து எங்களோடு சேர்ந்து ஆடுங்க

குழந்தைகள்:நீங்க மொத பைபில்லயே இல்ல... அதனால இடத்த காலிபண்ணிட்டு ஓடுங்க..

சாண்டா கிளாஸ்: நான் உங்களுக்கு 2
Chocolate தர்ரேன்.. Christmas-க்கு என்கூட சேர்ந்து Jingle bells, jingle bells,Song பாடுங்க

குழந்தைகள்: நாங்க உங்களுக்கு 5 Chocolate தர்ரோம்..நீங்க உங்க வாயை மொத மூடுங்க...நாங்க Christmas-க்கு  Jesus songs மட்டும் தான் பாடுவோம்

சாண்டா கிளாஸ்:(சலிப்புடன்)
இன்னம்மா நீங்க இப்படி பண்ணுரீங்களேமா !!!!

குழந்தைகள்: Hello Santa Claus,
நீங்கள்  கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவத்தை மறைக்க, சாத்தானால் ஏற்படுத்தப்பட்ட தந்திரம்

அதனால.. நாங்க உங்க group-ல
சேர மாட்டோம்,நாங்க இயேசு கிறிஸ்துவை அறிவிக்கும் Group,
நீங்க வேணுமுனா ஏங்க கூட  வாங்க நாங்க உங்களுக்கு,இயேசப்பா எதற்காக இந்த world -க்கு வந்தார்னு உங்களுக்கு சொல்லித்தர்றோம்.

 சாண்டா கிளாஸ்: ?????!!!!!


ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in





Sunday 13 December 2015

ஆவியிலே அனலாயிருங்கள்

#Regular

அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்;ஆவியிலே அனலாயிருங்கள்
; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
(ரோமர் 12: 11)

பரத்: ஒவ்வொரு தேவப்பிள்ளைகளும் எப்பொழுதும் ஆவியில் அனலாயிருக்க வேண்டும், அப்போதுதான் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை எப்பொழுதும் ஜெயமுள்ளதாக  இருக்கும்.

பிரவீன்:நீ சொன்னது சரிதான் பரத், அப்போஸ்தலனாகிய
 பவுல் அத்தேனே பட்டணத்தில் சீலாவுக்காகவும், தீமோத்தேயுவுக்காகவும் காத்துக் கொண்டிருந்த வேளையில் அவன்
ஆவியில் அனலாயிருந்ததால், காத்திருந்த நேரத்தையும் அவன் பிரயோஜனப்படுத்திக் கொண்டான்.(அப்.17:16,17)

பரத்:ஆமா பிரவீன்,
அந்த பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதை பவுல் கண்டு
தன் ஆவியில் வைராக்கிமடைந்து யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணை பண்ணினான்.

பிரவீன்:ஆவியில் அனலாயிருக்கிற  மனிதர்களால் சும்மாயிருக்க முடியாது. அவன் இயேசுவுக்காக ஏதாவது செய்ய, தன் ஆவியில் தூண்டப்பட்டு கொண்டே இருப்பார்கள்

பரத்:ஆமா பரத், அவர்கள் இருக்கும் இடம் மற்றும் செல்லும் இடங்களில் தேவனுடைய வார்த்தைகளுக்கு எதிராக செய்யப்பட்டு வரும் கரியங்களை கண்டால்; அவர்களால் நமக்கேன் வம்பு என்று அதை  பார்த்துக்கொண்டு சும்மா
இருக்க முடியாது.ஏனென்றால் அவர்களுடைய ஆவி அனலாயிருக்கிறபடியில், அவர்கள்
 தைரியத்தோடு, வைராக்கியத்தோடு அவைகளை எதிர்த்து நிற்பார்கள்.

பிரவீன்: அதுமட்டுமல்ல அவர்களால்  இயேசுகிறிஸ்துவை பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்காமல்  இருக்கவே முடியாது...
 அப்.18:5ல் சீலாவும், தீமோத்தேயுவும் வந்தபோது அவர்களுக்குள் ஆவியில் அனல் இருந்தபடியினால் இன்னும் வைராக்கியமடைந்த பவுல்,
இயேசுவே கிறிஸ்து என்று உறுதியாக திட்டவட்டமாக அறிவிக்கத் தொடங்கினான்.

பரத்: ஆமா பிரவீன் நாமும் நமது  ஆவியை  ஒவ்வொரு நாளும் அனல்மூட்ட வேண்டும்,
ஆண்டவருக்காக வைராக்கியம் பாராட்ட வேண்டும், கர்த்தருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு
அசதியாக சும்மா இருக்காமல்
ஆண்டவருக்காக எதையாவது நாம்
செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஆம் என் சகோதர சகோதரிகளே !
நாம் ஆவியில் அனல் கொண்டு இயேசுவே ஆண்டவர் என்று,எல்லா இடங்களிலும் அறிவிக்க வேண்டும் !

கிறிஸ்துவுக்குள் வைராக்கியம் கொண்டு,பொய் உபதேசத்திற்கு எதிராக,தேவனுடைய வார்த்தையே !  சத்தியம் என்று தைரியத்தோடு தெரிவிக்க வேண்டும் !

ஆமென்..... அல்லேலூயா.....


ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

Wednesday 9 December 2015

(12) முழுக்கு ஞானஸ்நானம் அவசியமா ? பகுதி-2

#exclusive

#முழுக்கு ஞானஸ்நானம் அவசியமா ?

பகுதி-2

குழந்தையில் எடுப்பது வேதத்தின் படி ஞானஸ்நானமே இல்லையா ?

தயவுசெய்து பகுதி -1 யை படித்துவிட்டு இந்த பகுதியை-2 யை படியுங்கள்

பீட்டர்:அந்தோனி குழந்தை ஞானஸ்நானம்,தெளிப்பு ஞானஸ்நானம்,இதெல்லாம் வேதம் போதிக்கும் ஞானஸ்நானம் இல்ல

பாவத்திலிருந்து மனம்திரும்பி,
ஒரே கர்த்தரை விசுவாசித்து,சீஷராகி பிறகு முழுகி எடுப்பதுதான் தேவன் சொன்ன ஒரே ஞானஸ்நானம்
(மத்28:19(அப் 2:38)(எபே 4:5)

அந்தோனி: அப்படியா ? ஆனா எங்க சபையில குழந்தைகள் பிறக்கும்போதே ஜென்ம பாவத்தோட பிறக்கிறது எனவே குழந்தையிலேயே ஞானஸ்நானம் கொடுக்கலாமுனு,வேதத்தில் இல்லாத உபதேசத்தை சொல்றாங்களே !

பீட்டர்: தேவன் கொடுத்த கட்டளைகளை  மனிதன் மீறி நடக்க செய்ய,சாத்தான் போதிக்கும் தந்திர உபதேசத்தில் இதுவும் ஒன்று,

#கிறிஸ்தவ சபைகளுக்குள் பல விதமான  உபதேசங்கள் இருக்கின்றன அதெல்லாம் நமக்கு முக்கியம் அல்ல.

#அந்த உபதேசங்கள் இயேசு கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலர்கள் வேதத்தில் நமக்கு போதித்த உபதேசமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

அதன்படி இல்லையென்றால் அதை யார் போதித்தாலும் (கலா1:8-9) எங்கிருந்து வந்தது போதித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளாதே,தூக்கி எறிந்துவிடு

அந்தோனி :ஓகே பீட்டர், ஆனா எனக்கு ஒரு சந்தேகம், பாவத்திலிருந்து மனம்திரும்பி,ஒரே கர்த்தரை விசுவாசித்து,சீஷராகி பிறகு முழுகி எடுப்பதுதான் தேவன் சொன்ன ஒரே ஞானஸ்நானம் (மத்28:19(அப் 2:38)(எபே 4:5) அப்படித்தான் வேதம் போதிக்குது,ஆனா ஒரு குழந்தை வளர்ந்து பெரிய ஆளாகி ஞானஸ்நானம் எடுக்கிறதற்கு முன்பே அதற்கு ஏதாவது ஆகி இறந்து விட்டால் அந்த குழந்தையின் பரலோக வாழ்வு கேள்விக்குறியாகிடுமுல ?அதனால குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுத்தா என்ன தப்பு ?

பீட்டர்: அந்தோனி இந்த கேள்வியை,  உனக்கா தோன்றி நீயா கேட்கிறியா ? இல்ல,உங்க சபையில உனக்கு போதித்த,போதனையிலிருந்து கேட்கிறியானு எனக்கு தெரியல,

அந்தோனி: நீ என்ன சொல்ற !

பீட்டர்: அந்தோனி,ஒரே கர்த்தரை விசுவாசித்து,சீஷராகி,ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்.என்று தேவன் சொன்ன கட்டளையை, மனிதனை எப்படியாவது மீறி நடக்க செய்ய சாத்தான் கள்ள உபதேசிகள் மூலம் உபதேசித்துக் கொண்டிருக்கிறான்.
அது சபை வழியாகவும் நடக்கிறது....

அந்தோனி: அப்படியா ?

பீட்டர்: ஆமா அந்தோனி, ஞானஸ்நானம் எடுக்காவிட்டாலும்,குழந்தைகள் கண்டிப்பாக பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் ஏனென்றால் பரலோக ராஜ்யம் குழந்தைகளுடையது (மத்18: 3)(மத்19:14)(லூக்18:16) என்று இயேசு கிறிஸ்து தெளிவா சொல்லிவிட்டார்.பாவ சிந்தனையற்ற கபடமில்லாத குழந்தை மனம் கொண்டவர்களாக நாமும் மாறவேண்டும்.

அந்தோனி: தேவனுடைய வார்தையே சொல்லிவிட்டது,பரலோக ராஜ்யம் குழந்தைகளுடையதுனு அப்ப சரியாக தான் இருக்கும்... அப்ப ஞானஸ்நானம் ?

பீட்டர்: வளர்ந்து விவரம் தெரிந்த பிறகு  மனம்திரும்பி,ஒரே கர்த்தரை விசுவாசித்து,சீஷராகி பிறகு முழுகி எடுக்கும் ஞானஸ்நானமே தேவனுடைய வார்த்தையின் படி ஞானஸ்நானம்.
வேதத்தை வாசித்துபார் எல்லோரும் அப்படித்தான் எடுத்தார்கள்

அந்தோனி: ஓகே பீட்டர் நான் ஒப்புக்கொள்கிறேன் குழந்தைக்கு கொடுக்கப்படும் ஞானஸ்நானம்
தேவன் சொன்ன ஞானஸ்நானம் இல்லை. மனம்திரும்பி,ஒரே கர்த்தரை விசுவாசித்து,சீஷராகி பிறகு முழுகி எடுப்பதே ஞானஸ்நானம்.
ஆனா இயேசு கிறிஸ்துவோட சேர்ந்து சிலுவையில் அறையப்பட்ட
கள்வனில் ஒருவன்,ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்கல ஞானஸ்நானமே எடுக்கல ஆனா அவன் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் தகுதியை அடைந்தானே ?(லூ 23:42-43)

பீட்டர்: அதுபற்றி இதோ விளக்கி சொல்கிறேன் கவனி

அந்தோனி: சொல்லு கவனிக்கிறேன்

தொடரும்.........

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

Monday 7 December 2015

#Regular

ஜீவனை தெரிந்தெடுத்தல்:

"நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் (உபா. 30:19)."

பரத்:ஆண்டவர் நமக்கு மரணத்திற்கும் ஜீவனுக்கும் ஏதுவான ஒரு தெரிந்தெடுத்தலை நமக்குக் கொடுத்திருக்கிறார்.

பிரவீன்:ஆமா,அதோடு கூட  ஆசீர்வாதத்துக்கும் சாபத்திற்கும் ஏதுவான தெரிந்தெடுத்தலையும் நம்மிடமே தேவன் கொடுத்திருக்கிறார்.
 சரியான ஒன்றைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பு நமக்கே உள்ளது.

பரத்: நாம் எதைவைத்து ஜீவனை தெரிந்தெடுக்க வேண்டும் ?

பிரவீன்: மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும். அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள் (நீதி. 18:21).என்று எழுதியிருக்கிறது.

பரத்: ஆமா பிரவீன்,நாம் நேர்மறையான வார்த்தைகளைப் பேசுவதன் மூலமும், ஆண்டவருடைய வார்த்தையை அறிக்கையிடுவதன் மூலமே நாம் ஜீவனை தெரிந்தெடுக்க முடியும்

பிரவீன்:சரியாக சொன்னாய், வேதத்திலே ஆயிரக்கணக்கான வாக்குத்தத்தங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் எடுத்து, நாம் தினமும் அறிக்கை செய்ய வேண்டும்.

பரத்: அதுமட்டுமல்ல இருதயத்தையும், சிந்தையையும் வேத வசனத்தினாலே நிறைக்க வேண்டும், அப்போது நம் இருதயத்தின் நிறைவை நம் வாய் பேச ஆரம்பிக்கும்.....

பிரவீன்:ஆமா பரத் நாம் நம் இருதயத்தை வேத வசனத்தால் நிறைக்கும் போது, நம் வாய் தேவனுடைய வார்த்தைகளை அதிகம் பேச ஆரம்பிக்கும், அது நமக்கும் நம்மை சுற்றி இருக்கிறவர்களுக்கும் மிகவும் பலனுள்ளதான இருக்கும். நிச்சயம் ஜீவன் இழந்த வாழ்வில் நாம் பேசும் தேவனுடைய வார்த்தைகள் ஜீவனை ஏற்படுத்தும்.

பரத்: அதோடு கூட நாம் நமது வாழ்வில் பிரச்சனைகள் எழும்பும்போது, ஆண்டவரின் சமூகத்திலே அந்த பிரச்சனைக்கு உரிய தீர்வைப் பேச  முற்படவேண்டும்,தீர்வானது, கர்த்தரிடமிருந்து தான் வருகிறது என்பதை நாம் நமது விசுவாச அறிக்கையில் மூலம் உறுதிசெய்ய வேண்டும்.

பிரவீன்: ஆமா பிரச்சனை என்ன என்பதை அறிக்கையிடவோ, அதை குறித்து விவாதிப்பதற்கு மாறாக, அந்த பிரச்சனைக்குரிய தீர்வை சொல்லி, அதை அறிக்கையிடுவோம் ஏனெனில், நம்மோடிருக்கும் நம் தேவன், பிரச்சனைகளைக் காட்டிலும்  பெரியவர்.

பரத்:ஆமென்

பிரவீன்: நம் இருதயமானது ஒரு நிலம். நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் விதை. நம் வாயிலிருந்து என்ன வார்த்தைளெல்லாம் வருகிறதோ, நாம் அவற்றை நம் இருதயமாகிய நிலத்திலே விதைக்கிறோம்.

பரத்: நாம் எவற்றையெல்லாம் விதைக்கிறோமோ அதற்கான பலனையே அறுப்போம்.

பிரவீன்: ஆமா நண்பா, நாம் நல்ல நேர்மறையான வார்த்தைளையும், ஆண்டவருடைய வார்த்தையையும்
நம் இருதயமாகிய நிலத்திலே விதைத்தால், ஜீவனுக்கேதுவான பலனைப் பெறுவோம்.

பரத்:மறுபுறம்,நாம் எதிர்மறையான வார்த்தைகளை விதைத்தால், அதற்கான பலனையும் அறுக்கத் தான் வேண்டும்.

பிரவீன்: ஆம் நண்பா, நாம் நம்  வார்த்தைகளில் கவனமாயிருக்க வேண்டும்,

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

Sunday 6 December 2015

நம் தேவன் நிறைவின் தேவன்

#Regular


நம் தேவன் நிறைவின் தேவன்


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராயிருக்கிறார் (எபேசியர் 3: 20)


பரத்: நம் தேவன், நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாய் கிரியைச் செய்கிற,தருகின்ற தேவன்.

பிரவீன்: ஆம் அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். அவர் வல்லமை மகத்துவமானது.
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் கிரியைசெய்கிறவர் அவர்.

பரத்: ஆமா நண்பா அண்ணாளின் வேண்டுதலையும்,தேவன் அவள்  வேண்டிக்கொண்டதற்கு அதிகமாக கொடுத்ததையும் எண்ணிப்பார்க்கும் போது ஆச்சரியமா இருக்கு. நம் தேவன் நிறைவாக கொடுக்கும் தேவன்.

 பிரவீன்: ஆம் அவர் நிறைவின் தேவன்,
அண்ணாள் குழந்தையவற்றவளாய், ஒரே ஒரு மகனைத் தான் கேட்டாள்.  கர்த்தர் தன் வார்த்தையை அனுப்பினார், அவள் தேவனுடைய வார்த்தை முழுமையாக நம்பினாள், அதுக்கப்பறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.
அவள் கேட்டது ஒரு குழந்தை ஆனால்  சர்வவல்ல தேவன் ஆறு பிள்ளைகளை சேர்த்துக் கொடுத்தார்.

பரத்: ஆமா பிரவீன் அவள்,தான் ஒரு பிள்ளையை பெற்றெடுப்போம் என்று கூட நினைத்திருப்பாள்.ஆனால் தேவன்,அவள் கேட்டதற்கும் அதிகமாகவே கொடுத்தார்.

பிரவீன் :அதுமட்டுமல்ல சாலமோனைப் பாரு ! அவர் ஞானம் மட்டுமே கேட்டார். ஆனால் தேவன் அவர் கேட்டதற்கும், எதிர்பார்த்ததற்கும் மேலாக அவருக்கு செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தார்.

பரத்:அவர்களின் வேண்டுதல்களில்,
#சுய நலம் இல்லை.

பிரவீன்: நீ என்ன சொல்ற ?

பரத்:அண்ணாள் #கர்த்தருடைய காரியங்களுக்கு,ஒரு மகனையும், சாலமோன்,#மக்களின் நலனுக்காக ஞானத்தையும் கேட்டான்,ஆனால் தேவன் அவர்கள் கேட்டதற்கும் அதிகமாக நிறைவாய் கொடுத்தார்.

பிரவீன் :ஆமா பரத்,இன்று கூட நாம் நமது தேவையை தேவன் சந்திக்கும்படி அவரை கேட்டுக் கொண்டிருக்கிறோம், ஆனால் நம் தேவன், நாம் வேண்டிக் கொள்வதற்கும், நினைப்பதற்கும் அதிகமாய், நம் தேவைகளுக்கு மிகுதியாகவே அதை சந்திக்க வல்லவராய்  இருக்கிறார்.

பிரவீன்: நிச்சயமாக பரத் நாம் அவரது வார்த்தையை நம்பி, அதைப் பிடித்துக் கொள்வோம்,சுய நல வேண்டுதல்களை குறைத்துக்கொள்வோம்,
நம் தேவன்,நமது குறுகிய எண்ணத்திற்கும் தேவைக்கும் அதிகமாய் செய்ய வல்லவர் என்பதை நம்மூலமாய் கண்டிப்பாக நிரூபித்து காட்டுவார்,

பரத்: சரி வா ! நாம் சேர்ந்து அவரது நாமத்தை மகிமைப்படுத்துவோம்

பிரவீன்:ஆமென் அல்லேலூயா




ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

Saturday 5 December 2015

"கர்த்தரிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்

#Regular

பலப்படுங்கள்:

"கர்த்தரிலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்

(எபேசியர் 6:10)."

பிரவீன்: பலப்படுங்களா ? எப்படி கர்த்தரில் பலப்படுவது?

பரத்: சூழ்நிலையை மறந்து, எந்த சூழ்நிலையிலும் அவரைத் துதிக்க வேண்டும். மேலும் அவரது அன்பில் நம்மையே மறந்து, அந்த அன்பை ரசிக்கிறவர்களாக, அனுபவிக்கிறவர்களாக நாம் இருக்க வேண்டும்.

பிரவீன்: புரியல !!!!

பரத் : அதாவது தானியேல் செய்தது போல

பிரவீன்: ஓ.... இப்ப புரிகிறது ராஜாவை தவிர வேறு யாரையும் 30 நாட்களுக்கு வணங்கவோ, ஆராதிக்கவோ கூடாது என்று கட்டளை, சட்டமாக கையெழுத்திடப்பட்டதை அறிந்தும், தான் முன் செய்து வந்தது போலவே தேவனாகிய கர்த்தரை இடைவிடாது ஆராதித்து வந்தார். அவர் அவ்வாறு அந்த சட்டத்தை மீறினால் சிங்கங்களின் குகையிலே போடப்படுவார் என்று தெரிந்தும், அவர் அதைக் குறித்துக் கவலைப்படாமல் தேவனை துதித்து, ஆராதித்தார். அவர் தன்னைக் கர்த்தருக்குள் பலப்படுத்திக் கொண்டார் அதுதானே ?

பரத்: ஆமா பிரவீன் அதனால், கர்த்தர் சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டு, தானியேலை காத்தார். (தானி. 6).

நாமும் சூழ்நிலையை கண்டு பயப்படாமல் இருந்து அவரை முழுமையாக நம்பி கர்த்தருக்குள் நம்மை பலப்படுத்திக் கொள்ளும்போது, சாத்தான் எய்யும் அம்புகளைத் தடுத்து, எல்லாவற்றையும் கர்த்தர் நன்மையாக மாற்றியும் முடிப்பார்.

பிரவீன்: அது சரி, அவரது சத்துவத்தின் வல்லமையில் நாம் எப்படி பலப்படுவது?

பரத்: நம்மை முற்றிலும் அவரது கரத்தில் அர்ப்பணிப்பதன் மூலமும், நமது கரத்தை உயர்த்தி, "ஆண்டவரே, இதை என்னாலோ, எனது சுயபெலத்தினாலோ, எனது அறிவினாலோ செய்யமுடியாது. உமது கிருபையின் செட்டைகளுக்குள் என்னை மூடிமறைத்து, என் சார்பில் நீரே செயலாற்றுவீராக," என்று அர்ப்பணிப்பதன் மூலமே.

பிரவீன் : ஆமா நண்பா நமது அன்றாட வாழ்க்கையில், நமது பலத்தினாலோ, வல்லமையாலோ, ஞானத்தினாலோ நாம் இதை செய்தோம், என்று மேன்மை பாராட்டிக்கொள்ள நம்மிடம் என்ன இருக்கு ?எல்லாமே அவருடைய கிருபையாலே நமக்கு கிடைத்து இருக்கு

பரத் : நீ சொல்வது 100% சரி, கர்த்தரும் நம்மிடம் இப்படிப்பட்ட தாழ்மையை தான் விரும்புகிறார்............
யோசபாத் எப்படி தன்னைக் கர்த்தரின் சத்துவத்தின் வல்லமையில் பலப்படுத்திக் கொண்டார் என்று நாம் வேதத்தில் பார்கிறோமே.

பிரவீன் : ஆமா பரத், பெருந்திரளான படை ஏதோமிலிருந்து, யூதாவுக்கு எதிராக
பாளையமிறங்கியிருக்கிறார்கள்
என்று கேள்விபட்டபோது,
தேவனின் நடத்துதலுக்காக அவரிடம் கெஞ்சினார். அவரின் ஜெபத்தை 2நாளாகமம் 20:6-12ல் பார்க்கிறோமே

 "எங்கள் தேவனே, எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்கு பெலனில்லை. நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது, " என்று ஜெபம் செய்தார்.

பரத் : ஆம் அவர், தனது முழு தேசத்தையும் தேவனின் கரத்தில் ஒப்படைத்து, தங்களை வெறுமையாக்கி, ஜெபித்தார். அப்பொழுது கர்த்தர், "இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது", என்று சொல்லி யூதாவை காப்பாற்ற தேவனே இரங்கி வந்து, யுத்தம் செய்து, யூதா ஜனங்களுக்கு, பெரும் வெற்றியைக் கொடுத்தார். எனவே நாமும் வாழ்க்கையை தேவனின் பலத்த சத்துவத்தின் வல்லமைக்கு அர்ப்பணித்து, ஒப்புக்கொடுப்போம்

 ஆமென்

 "அவருடைய கிருபையே உங்களுக்கு போதும் (2 கொரி. 12:9)." உங்களை, அவரிலும், அவரது சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுத்தும்.

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

Thursday 3 December 2015

வாக்குப்பண்ணின தேவன் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார் நீங்கள் அவைகள் நிறைவேறும் வரை பொறுமையோடு காத்து இருப்பீர்களா ?

#Regular

வாக்குப்பண்ணின தேவன் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார்
நீங்கள் அவைகள் நிறைவேறும் வரை பொறுமையோடு காத்து இருப்பீர்களா ?

"தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி,தேவனை மகிமைப்படுத்தி,
விசுவாசத்தில் வல்லவனானான்
(ரோமர் 4:21)."

பரத்: வாக்குத்தத்தம் செய்தவர் அதை எப்படியும் நிறைவேற்றி முடிப்பார். அவரால் மாத்திரமே அதை செய்து முடிக்க முடியும், அவரே அதை செய்து முடிக்க வேண்டும்.

பிரவீன்: அப்படியா ?

பரத்: ஆமா நமது பலத்தால் அவரது
வாக்கத்தத்தங்களை நாம்
நிறைவேறச் செய்ய முடியாது.நாம் செய்ய வேண்டியதெல்லாம்,
 வாக்குத்தத்தை விசுவாசித்து அறிக்கையிட்டு,அதற்காய் அவரைத் துதித்து,ஸ்தோத்தரித்து, அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

பிரவீன்: ஓகோ.....

பரத் : ஆம் பிரவீன் ஆபிரகாமைப் பாரு
அவருக்குக் குழந்தை இல்லாதபோதே, தேவன்,அவர் பெரிய தேசமாய் மாறுவார், அவரது சந்ததி வானத்து
நட்சத்திரத்தைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் இருக்கும் என்று வாக்குப் பண்ணினார். ஆனால் ஆபிரகாமாலும் அவரது மனைவி சாராளாளும் தேவனுடைய
வாக்குத்தத்தை தேவனே
நிறைவேற்றக் காத்திருக்க முடியவில்லை.

பிரவீன்: ஆமாப்பா அவர்கள் வேறு வழியாய் தேவனுடைய வாக்குத்தத்தை,
அவர்களே நிறைவேற்ற முயற்சி செய்தார்கள்.
ஆனால் அது சூழ்நிலையை வேறுவிதமாய் மாற்றி,
பெரிய பிரச்சனையை உருவாக்கிவிட்டது.

பரத்: எனவே, வாக்குத்தத்தம் பண்ணினவரையே
நம்பு உன்  சுய பெலத்தை நம்பாதே,
அவரது வார்த்தைகளை விசுவாசித்து அவர் கொடுத்த வாக்குத்தத்தை
அறிக்கையிட்டு, அந்த
வாக்குத்தத்தத்திற்காய் அவருக்கு நன்றி செலுத்து, பொறுமையோடு காத்திரு, அவர் அதை எப்படியும்
நிறைவேற்றுவார்.


ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in