நற்செய்தி
ஒரு ஊரில் ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள ஒரு தெருவில் ஒரு டீக்கடை இருக்கிறது பலர் அந்த டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்
அதில் சுரேஷ் மற்றும் பிரதாப்
பேப்பர் படித்துகொண்டு இருக்கிறார்கள்.அந்த டீக்கடை வாசலுக்கு முன் ஒரு கார் வந்து நின்றது.காருக்குள்ளே இருந்து குமார் என்னும் நபர் கைபிரதிகளுடன்(நோட்டீஸ்)
இறங்கி அங்கே இருந்த எல்லோரிடமும் அந்த நோட்டிஸை வினியோகித்தார் .
அந்த நோட்டீஸ் சுரேஷ் மற்றும் பிரதாப் கையுக்கும் வந்து சேர்ந்தது. அந்த நோட்டீஸின் தலைப்பு "நற்செய்தி" என்று எழுதியிருந்தது. அதை அவர்கள் ஆர்வத்தோடு படிக்க தொடங்கினார்கள்.பிறகு குமார் நோட்டீஸை எல்லாம் கொடுத்துவிட்டு தன் காரை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது
சுரேஷ் மற்றும் பிரதாப் நோட்டீஸை சுருட்டி தங்கள் சட்டை பையில் வைத்துக்கொண்டே அவரை பின் தொடர்ந்து சென்று அவரை அழைக்கிறார்கள் .
பிறகு.........
சுரேஷ் :ஹலோ பிரதர் கொஞ்சம் நில்லுங்க
குமார்: சொல்லுங்க தம்பி!
சுரேஷ்&பிரதாப்: பிரதர் உங்க நோட்டீஸ்ல மனுசனுக்கு எற்படுற பிரச்சனைகளை பற்றி எழுதியிருக்கு, இதுல பாதிக்கு மேல எங்க வாழ்கையில நடந்துக்கிட்டு இருக்கு .எங்க எதிர்காலம் இருள் நிறைந்ததா ஆகிடுமோனு கவலையா இருக்கு
குமார் :சகோதரர்களே!
கவலப்படாதிங்க, உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கு. ஆண்டவராகிய இயேசு உங்கள் வாழ்வை ஒளிமயமாக்குவார்.
சுரேஷ்: எப்படி சொல்றீங்க பிரதர் ?
குமார்: கடவுளுடைய குமாரன் இயேசுவை ,நோக்கிப்பார்த்தவர்கள் பிரகாசமடைந்தார்கள். அவர்களுடைய முகங்கள் வெட்கப்படவில்லை என்று வேதம் கூறுகிறது..
சுரேஷ்: இயேசுவா! அவரு கிறிஸ்தவ மதத்தோட தலைவர் தானே?
பிரதாப்: கிறிஸ்தவ மதத்துக்கு உரியவர் தானே ?
குமார்:இயேசு மதத்தலைவர் இல்ல சகோதரா !அவர் மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்
அவர் எல்லா மனிதர்களுக்கும் உரியவர்.
சுரேஷ் :அப்படியா ?
குமார்:ஆமா,ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வானத்தையும்,பூமியையும் படைத்தவர்.வானத்திற்கும் பூமிக்கும் சொந்தக்காரர். வானத்திலும் பூமியிலும் பெரியவர், மிகவும் நல்லவர், மகா வல்லவர், இவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. இவர் அன்பாகவே இருக்கிறார். அவர் உங்களை அன்போடு நேசிக்கிறார்.
பிரதாப் :எனக்கு இயேசுவை பற்றி ஒன்னுமே தெரியாது அவர் என்னையுமா நேசிப்பார் ?
குமார் : உங்களை படைத்த கடவுளே அவர்தாங்க தம்பி.உங்களுக்காக தன் உயிரயே கொடுக்கும் அளவுக்கு உங்களை நேசிக்கிறார். அந்த அளவில்லா அன்பை கல்வாரி சிலுவையில் காட்டியும் இருக்கிறார் .
தன் கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி உங்களுக்கு இரட்சிப்பையும் விடுதலையையும் ஏற்படுத்தி வச்சிருக்காருப்பா
பிரதாப்: (சிரித்தபடி)
அப்படியா ! நான் ஒரு ஆஸ்துமா நோயாளி ...என்னை எங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கே பிடிக்காது... எல்லாரும் என்ன வெறுக்கிறாங்க .
இதுவரைக்கும் நான் நம்பியிருந்த தெய்வங்கள் எல்லாம் என்னை கைவிட்டுருச்சு ....
இயேசுவுக்கு மட்டும் என்ன எப்படி பிடிக்கும்?
குமார்: தகப்பனும் தாயும் உங்களைத் தள்ளியிருக்கலாம். இயேசு உங்களைத் தள்ளமாட்டார்.
இயேசுவே உண்மையான தெய்வம் அவர் ஒரு போதும் உங்களை கைவிடமாட்டார் தம்பி !
பிரதாப்: என் வியாதிக்கு நான் வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரை எடுத்துக்கனும் வேறு வழியே இல்லைனு எங்க டாக்டர் சொல்றாரு.
இயேசு என்னை குணமாக்கி எனக்கு விடுதலைக்கொடுப்பாரா ?
குமார்: நீங்க இயேசு கிறிஸ்துவை முழு மனதோடு விசுவாசித்தால் தேவனுடைய குணமாக்கும் மகிமையை உடனே பார்ப்பீங்க. இயேசு உங்களை விடுதலையாக்கினால் நீங்க 100% பூரண விடுதலை அடைந்து விடுவீங்க தம்பி !
சுரேஷ்:இயேசு கடவுளின் மகன்னு நீங்க சொல்றீங்க, அவர் எதுக்கு
இரத்தம் சிந்தனும் ? எதுக்காக சிலுவைக்கு வந்து மரிக்கனும் ?
குமார் : சொல்றேன் கேளுங்க தெடக்கத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார். பிறகு கடவுள் பூமியில் உள்ள அனைத்தையும் உண்டாக்கி கடைசியாக மனிதனை உண்டாக்கினார். உலகத்துல உள்ள அனைத்தையும் கடவுள் மனிதனுக்காக படைத்தார்.
அவருடைய படைப்பில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் தான், ஏனென்றால் கடவுள் மனிதனை தம்முடைய சாயலில் படைத்தார்
அவர் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார் கடவுள் மனிதனை மிகவும் நேசித்தார்.
கடவுள் அவர்களை நோக்கி:
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் வானத்து பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற எல்லா உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதித்தார். பிள்ளைகளின் கீழ்ப்படிதலைப் பெற்றோர்கள் விரும்புவது போல கடவுளும் மனிதனிடமிருந்து கீழ்ப்படிதலை எதிர்பார்த்தார். கடவுள் மனிதனுக்கு சுயமாக முடிவெடுக்கும் திறனையும் தந்தருளினார், ஆனால் மனிதன் அதை தவறாக பயன்படுத்தி கடவுளுக்கு கீழ்ப்படியாமற் போனான்.
சுரேஷ்:அதனால் என்ன நடந்தது ?
குமார் : மனிதனின் கீழ்ப்படியாமை நிமித்தம் பாவம் இவ்வுலகில் தோன்றியது. இந்த பாவம் மனிதனை கடவுளிடமிருந்துப் பிரித்தது.
சுரேஷ்: அது எப்படி ?
குமார்: கடவுள் மனிதனை மிகவும் நேசிக்கிறார் ஆனால்
பாவத்தை வெறுக்கிறவராக இருக்கின்றார்.
சுரேஷ்: அப்படியா பிரதர் ?
குமார்: ஆமாங்க தம்பி,
பாவத்தின் சம்பளம் மரணம். எல்லோரும் பாவம் செய்து நரகத்தில் முடிவில்லாத மரண தண்டனை பெறுவதற்கு ஏதுவானார்கள்.
நன்மைகள் செய்வதின் மூலமாக இந்த பாவ சாபத்திலிருந்து மனிதனால் விடுதலை பெற முடியவில்லை.
மனிதர்கள் இருளின் சக்திகளுக்கு செவிகொடுத்து அக்கிரமத்தையும், அநியாயத்தையும் செய்தான்.
கடவுள் மனிதனுக்கு நன்மை தீமையை பகுத்துஅறியும் அறிவை கொடுத்திருந்தும் அவன் தீமையே விரும்பி செய்து தனது ஆன்மாவை அழிவுக்கு உட்படுத்திக்கொண்டிருந்தான்
பிரதாப்: இந்த நிலையிலிருந்து மனிதனை மீட்டு காப்பாத தான் இயேசு பூமிக்கு வந்தாரா ?
குமார்:ஆமாங்க தம்பி
மனிதனின் பாவ கட்டுகளை சிலுவையாலே இயேசு உடைத்தார்
பிரதாப்: அதற்க்கு எதுக்கு இயேசு சிலுவையில் பலியாகனும் ?
குமார்: பாவம் நிறைந்த மனித இனத்தின் மீட்பிற்காக,பாவ நிவாரணமாக பாவமே இல்லாத ஒரு உன்னதமான பலி தேவை என்று கடவுள் சொல்லியிருக்கிறார்.
கடவுளைத்தவிர பாவம் இல்லாத உன்னதர் யாரும் இல்லை
ஆதலால் தான் கடவுளோடு கடவுளாக ஒரே ஐக்கியத்தில் இருந்த கடவுளின் மகன் இயேசு இவ்வுலகில் மனிதனாக வந்து மொத்த மனித இனத்தின் பாவங்களையும் சாபங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டு
மனிதன் மீது செலுத்தப்பட வேண்டிய கடவுளுடைய கோபத்தை இயேசு தன் மீது வாங்கிக்கொண்டு
தன்னையே கடவுளுக்கு முன்பாக பலியாக கொடுத்தார்
இப்படியாக கடவுள் தம்முடைய ஒரே மகனயே உலகத்திற்கு தந்தருளி தம்முடைய அன்பை உலகிற்கு வெளிப்படுத்தினார்
சுரேஷ் : கடவுள் மனிதனை இந்த அளவுக்கா நேசிக்கிறார் ஆச்சரியமா இருக்கு ?
குமார் : ஆமா தம்பி கடவுள் அன்பாகவே இருக்கிறார்.எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்றும்,
எல்லா மனிதர்களும் வேதனை நிறைந்த நிலையான
நரக தண்டனைக்கு தப்பி
முடிவில்லாத பரலோக(மோட்ச)
வாழ்வை பெறவேண்டும் என்பதே
கடவுளின் விருப்பம்.ஆனா அதற்கு மனிதனுடைய பாவம் தடையா இருக்கிறது.
இயேசு கிறிஸ்துவை
விசுவாசிப்பதன் வழியாக மட்டுமே
அந்த தடை விலகும்.
இயேசுவின் மூலமாய் மட்டுமே மனிதன் பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து, சமாதானம் நிறைந்த வெற்றிவாழ்வையும்,
நிலையான நரக தண்டனையிலிருந்து, முடிவில்லா பரலோக(மோட்ச) வாழ்வையும் பெற முடியும்.
இயேசுவே பரலோகத்திற்கு செல்ல ஒரே வழி அவர் அல்லாமல் யாரும் கடவுளிடம் சேர முடியாது.
பிரதாப்: சரிங்க பிரதர் இரட்சிப்புனா என்ன ?
குமார் : இரட்சிப்பு என்றால் பாவம்,வியாதி,தரித்திரம்,பயம்,சாபம்,
முடிவில்லா நரக தண்டனை ஆகிய இருளின் சக்திகளிடமிருந்து விடுதலை ஆகும்.
இவைகளை இயேசு
சிலுவையின் மேல் தமது சரீரத்தில் சுமந்து,இருளின் சக்திகளிடம் இருந்து நமக்கு விடுதலையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.
பிரதாப்: சரி ஓ.கே பிரதர் ஒரு மனிதன் இரட்சிப்பை பெறனுமுனா
அவன் என்ன செய்யனும் ?
குமார்: அவன் தன் பாவ நிலையை உணர்ந்து கடவுளுக்கு முன் தன்னை தாழ்த்தி மனம் வருந்தி இயேசுவை விசுவாசிக்க வேண்டும்.இயேசுவே என் ஆண்டவர் என்று ஒரு மனிதன் வாயினாலே அறிக்கையிட்டு,
அவரை தன் உள்ளத்திற்குள் வரும்படி அழைப்புக்கொடுக்க வேண்டும். அவர் உள்ளத்திற்குள் வருவார்
ஒளி வந்த உடன் இருள் இல்லாமல் போவது போல், இயேசு வந்த உடன் அந்த மனிதனிடம் இருந்த தீமையான இருளின் காரியங்கள் எல்லாம் மறைந்து அவன் இரட்சிக்கப்பட்டு புது வாழ்வைப்பெறுவான்.
சுரேஷ்: பிரதர் எனக்கு தெரிஞ்ச கிறிஸ்தவங்களே நீங்க சொன்ன அந்த இருளின் அடிமைதனத்திலிருந்து இரட்சிக்கப்படாம இருக்காங்களே !
குமார் : சகோதரரே ஒரு மனிதன் சும்மா கிறிஸ்தவ பெயரை வைத்தால் மட்டும் அவன் இரட்சிப்பை பெற முடியாது ...
அவன் கிறிஸ்துவின் மீது முழு விசுவாசம் வைத்தால் தான் இரட்சிப்பை அடைய முடியும்...
அவன் ஏதோ ஒரு கிறிஸ்தவ குடும்பத்துல பிறந்தால் மட்டும் அவனுக்கு தானா இரட்சிப்பு ஏற்படாது
கிறிஸ்துவுக்குள் புது மனிதனாக பிறந்தால் தான் அவனுக்கு இரட்சிப்பு ஏற்படும்
நீங்க உங்கள சுற்றி இருக்கிற பெயர் கிறிஸ்தவங்களோட வாழ்கையை பார்க்கிறத விட,இயேசு கிறிஸ்து மனிதர்களிடம் எப்படி வாழ்ந்தார்
அவர் நம்மை எப்படி வாழ சொன்னார்.
என்பதை வேதாகமத்தில் பாருங்கள்
வேதாகமே சத்தியம்
இந்த உலகத்துல இருக்கிற எல்லா மனிதர்களுக்கும் கடவுளால் நியமிக்கப்பட்ட ஒரே முன் மாதிரி இயேசு கிறிஸ்து மட்டும் தான் தம்பி
உண்மையிலே
இரட்சிக்கப்பட்டவங்க எதற்கும் அடிமையா இருக்க மாட்டாங்க
அவங்க உலகத்தில் கீழ்நிலையில் நிலையில் இருக்கவே மாட்டாங்க, சகல இருளின் சக்திகளையும் தங்களுக்கு கீழ்படுத்தி ஆண்டு கொள்கிறவர்களாவும்,
இந்த உலகத்தில் எல்லோரையும் நேசிக்கிறவர்களாகவும் எல்லோரிடமும் அன்பு செய்கிறவர்களாகவும்
தன்நலமற்ற தியாக மனம் கொண்டவர்களாகவும் இருப்பாங்க.
எல்லாருக்கும் பிரயோஜனமான ஒளியின் மக்களாக வாழ்வாங்க
பிரதாப் & சுரேஷ் :
இன்றே நாங்கள் இயேசுவே எங்கள் ஆண்டவர் என்று முழுமனதுடன் அறிக்கையிட்டப்போகிறோம்
நாங்களும் இரட்சிக்கப்படனும். எங்களுக்கும் இயேசு இந்த உலகத்தில் வெற்றி வாழ்கையும்,பரலோகத்தில்
(மோட்சம்) முடிவில்லா ஆனந்த வாழ்கையும் தனது கல்வாரி பாடுகள்
மூலம் சம்பாதித்து வைத்திருக்கிறார் அதை நாங்கள் விசுவாசித்து பெற போகிறோம்.
குமார்: தேவனுக்கே மகிமை
உங்கள் விசுவாசத்தின் படியே உங்களுக்கு நிச்சயமாக ஆகும்.
அமென்
@@@@@@@@@@@@@@@@@@
இந்த உரையாடலை வாசித்துக்கொண்டிருக்கிற என் அன்பு சகோதர சகோதரிகளே!
வாழ்வில் பல்வேறு பிரச்சினையால் சலிப்படைந்து விட்டீர்களா ?
பண நஷ்டத்தினால் வாழ்க்கையில் வெறுப்படைந்து விட்டதா ?
வேதனையால் வாடுகிறிங்களா?
பாசத்திற்குரியவர்கள் உங்களை ஏமாற்றிவிட்டார்களா ?
பேய் பிசாசு பில்லி சூனிய கோளாறுகளால் துன்படுகிறீர்களா ?
கடந்த காலத்தில் செய்த தவறுகள் உங்களை மிகவும் வருத்துகிறதா ?
உங்கள் வாழ்க்கையில் எங்கும் இருள் நிறைந்து இருக்கிறதா ?
மருத்துவர்களால் குணமாக்க முடியாத வியாதியின் பிடியில் இருக்கிறீர்களா ?
இனி நம்பிக்கையே இல்லை இது தான் என் தலை எழுத்து என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா ?
உங்களுடைய பிரச்சினைகள் எல்லாவற்றையும் இயேசு அறிந்திருக்கிறார்.
உங்களுக்கு உதவி செய்யும்படி இயேசு உங்கள் அருகிலேயே இருக்கிறார்.
ஆம் அவர் உங்கள் கண்ணீரை நிச்சயமாகவே துடைப்பார்.
அவரால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை.அவர் உங்கள் வாழ்விலும் பெரிய அற்புதங்கள் செய்வார்......
ஆனால் இயேசுவை நீங்கள் ஆண்டவராக உள்ளத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.
ஆம் என் அன்பு சகோதர சகோதரிகளே!
இயேசு உங்களை தன் சாயலாக படைத்திருக்கிறார்,அவரின் படைபிலேயே உயர்தரமான படைப்பு நீங்கள் தான்.ஆகவே அவர் உங்கள் மேல் மதிப்புவைத்திருக்கிறார்
அவர் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் உள்ளத்திற்குள் வர மாட்டார்..
இதோ உள்ளத்தின் வாசற்படியில் நின்று கதவை தட்டிக்கொண்டிருக்கிறேன்.
ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு கதவை திறந்தால் உள்ளே வருவேன் என்று இயேசு வேதாகமத்தில் கூறுகிறார். உலகத்தின் ஒளியாம் இயேசு உங்கள் உள்ளத்திற்குள் வரும்போது, உங்கள் வாழ்வு நிச்சயம் ஒளிமயமாகும்.
இயேசு ஒளியாகவே இருக்கிறார்.அவரிடத்தில் சிறிதளவேனும் இருள் இல்லை.
அவர் மனிதனாக அவதரித்தார்
உங்களுக்கு சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் தரும்படிக்கு அவர் உங்களுக்காக பாவமானார்.
நீங்கள் ஐஸ்வரியவானாகும் படிக்கு அவர் தரித்திரரானார்.
நீங்கள் ஆரோக்கியமடையும்படிக்கு அவர் உங்கள் வியாதிகளை ஏற்றுக்கொண்டார்.அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமடைந்திருக்கிறீர்கள் உங்களுக்காக மரித்து அவர் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்.
அவர் அநாதி காலமாய் உயிரோடு இருக்கிறவர்,ஆரம்பமும் முடிவும் இல்லாதவர்.அவரை உள்ளத்தில் முழுமனதோடு இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களானால் இன்றே நிலையான சமாதானத்தையும் சந்தோஷத்தையும்,ஆரோக்கியத்தையும் ஆசீர்வாதத்தையும்,
இந்த பூலோகத்தில் பரிபூரண ஜீவன் நிறைந்த புது வாழ்வையும்,
பரலோகத்தில் முடிவில்லா நித்திய ஜீவ வாழ்வையும்,இலவசமாக உங்களுக்குத் தருவார்.
ஒளியாகிய இயேசு இயேசு உங்களுடைய வாழ்வில் வரும்போது இருள் யாவும் மறைந்து ஓடிப்போகும். ஒளிமயமான எதிர்காலம் உங்களுடையதாகும். இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமென்
என் அன்புக்குரிய இரட்சிக்கப்பட்ட சகோதர சகோதரிகளே !
இந்த உரையாடல் வடிவ சுவிசேஷ செய்தியை கைப்பிரதியாக (நோட்டீஸ்)
பிரின்ட் செய்து மக்கள் மத்தியில் வினியோகியுங்கள்
இது புது முயற்சியாக இருக்கும்
அனேகர் இரட்சிக்கப்படுவார்கள்
நன்றி
ஜீவ வழி-LIVING WAY
www.facebook.com/lwcomm
Marvel Jerome
ஒரு ஊரில் ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள ஒரு தெருவில் ஒரு டீக்கடை இருக்கிறது பலர் அந்த டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்
அதில் சுரேஷ் மற்றும் பிரதாப்
பேப்பர் படித்துகொண்டு இருக்கிறார்கள்.அந்த டீக்கடை வாசலுக்கு முன் ஒரு கார் வந்து நின்றது.காருக்குள்ளே இருந்து குமார் என்னும் நபர் கைபிரதிகளுடன்(நோட்டீஸ்)
இறங்கி அங்கே இருந்த எல்லோரிடமும் அந்த நோட்டிஸை வினியோகித்தார் .
அந்த நோட்டீஸ் சுரேஷ் மற்றும் பிரதாப் கையுக்கும் வந்து சேர்ந்தது. அந்த நோட்டீஸின் தலைப்பு "நற்செய்தி" என்று எழுதியிருந்தது. அதை அவர்கள் ஆர்வத்தோடு படிக்க தொடங்கினார்கள்.பிறகு குமார் நோட்டீஸை எல்லாம் கொடுத்துவிட்டு தன் காரை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது
சுரேஷ் மற்றும் பிரதாப் நோட்டீஸை சுருட்டி தங்கள் சட்டை பையில் வைத்துக்கொண்டே அவரை பின் தொடர்ந்து சென்று அவரை அழைக்கிறார்கள் .
பிறகு.........
சுரேஷ் :ஹலோ பிரதர் கொஞ்சம் நில்லுங்க
குமார்: சொல்லுங்க தம்பி!
சுரேஷ்&பிரதாப்: பிரதர் உங்க நோட்டீஸ்ல மனுசனுக்கு எற்படுற பிரச்சனைகளை பற்றி எழுதியிருக்கு, இதுல பாதிக்கு மேல எங்க வாழ்கையில நடந்துக்கிட்டு இருக்கு .எங்க எதிர்காலம் இருள் நிறைந்ததா ஆகிடுமோனு கவலையா இருக்கு
குமார் :சகோதரர்களே!
கவலப்படாதிங்க, உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கு. ஆண்டவராகிய இயேசு உங்கள் வாழ்வை ஒளிமயமாக்குவார்.
சுரேஷ்: எப்படி சொல்றீங்க பிரதர் ?
குமார்: கடவுளுடைய குமாரன் இயேசுவை ,நோக்கிப்பார்த்தவர்கள் பிரகாசமடைந்தார்கள். அவர்களுடைய முகங்கள் வெட்கப்படவில்லை என்று வேதம் கூறுகிறது..
சுரேஷ்: இயேசுவா! அவரு கிறிஸ்தவ மதத்தோட தலைவர் தானே?
பிரதாப்: கிறிஸ்தவ மதத்துக்கு உரியவர் தானே ?
குமார்:இயேசு மதத்தலைவர் இல்ல சகோதரா !அவர் மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்
அவர் எல்லா மனிதர்களுக்கும் உரியவர்.
சுரேஷ் :அப்படியா ?
குமார்:ஆமா,ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வானத்தையும்,பூமியையும் படைத்தவர்.வானத்திற்கும் பூமிக்கும் சொந்தக்காரர். வானத்திலும் பூமியிலும் பெரியவர், மிகவும் நல்லவர், மகா வல்லவர், இவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. இவர் அன்பாகவே இருக்கிறார். அவர் உங்களை அன்போடு நேசிக்கிறார்.
பிரதாப் :எனக்கு இயேசுவை பற்றி ஒன்னுமே தெரியாது அவர் என்னையுமா நேசிப்பார் ?
குமார் : உங்களை படைத்த கடவுளே அவர்தாங்க தம்பி.உங்களுக்காக தன் உயிரயே கொடுக்கும் அளவுக்கு உங்களை நேசிக்கிறார். அந்த அளவில்லா அன்பை கல்வாரி சிலுவையில் காட்டியும் இருக்கிறார் .
தன் கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி உங்களுக்கு இரட்சிப்பையும் விடுதலையையும் ஏற்படுத்தி வச்சிருக்காருப்பா
பிரதாப்: (சிரித்தபடி)
அப்படியா ! நான் ஒரு ஆஸ்துமா நோயாளி ...என்னை எங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கே பிடிக்காது... எல்லாரும் என்ன வெறுக்கிறாங்க .
இதுவரைக்கும் நான் நம்பியிருந்த தெய்வங்கள் எல்லாம் என்னை கைவிட்டுருச்சு ....
இயேசுவுக்கு மட்டும் என்ன எப்படி பிடிக்கும்?
குமார்: தகப்பனும் தாயும் உங்களைத் தள்ளியிருக்கலாம். இயேசு உங்களைத் தள்ளமாட்டார்.
இயேசுவே உண்மையான தெய்வம் அவர் ஒரு போதும் உங்களை கைவிடமாட்டார் தம்பி !
பிரதாப்: என் வியாதிக்கு நான் வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரை எடுத்துக்கனும் வேறு வழியே இல்லைனு எங்க டாக்டர் சொல்றாரு.
இயேசு என்னை குணமாக்கி எனக்கு விடுதலைக்கொடுப்பாரா ?
குமார்: நீங்க இயேசு கிறிஸ்துவை முழு மனதோடு விசுவாசித்தால் தேவனுடைய குணமாக்கும் மகிமையை உடனே பார்ப்பீங்க. இயேசு உங்களை விடுதலையாக்கினால் நீங்க 100% பூரண விடுதலை அடைந்து விடுவீங்க தம்பி !
சுரேஷ்:இயேசு கடவுளின் மகன்னு நீங்க சொல்றீங்க, அவர் எதுக்கு
இரத்தம் சிந்தனும் ? எதுக்காக சிலுவைக்கு வந்து மரிக்கனும் ?
குமார் : சொல்றேன் கேளுங்க தெடக்கத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார். பிறகு கடவுள் பூமியில் உள்ள அனைத்தையும் உண்டாக்கி கடைசியாக மனிதனை உண்டாக்கினார். உலகத்துல உள்ள அனைத்தையும் கடவுள் மனிதனுக்காக படைத்தார்.
அவருடைய படைப்பில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் தான், ஏனென்றால் கடவுள் மனிதனை தம்முடைய சாயலில் படைத்தார்
அவர் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார் கடவுள் மனிதனை மிகவும் நேசித்தார்.
கடவுள் அவர்களை நோக்கி:
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் வானத்து பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற எல்லா உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதித்தார். பிள்ளைகளின் கீழ்ப்படிதலைப் பெற்றோர்கள் விரும்புவது போல கடவுளும் மனிதனிடமிருந்து கீழ்ப்படிதலை எதிர்பார்த்தார். கடவுள் மனிதனுக்கு சுயமாக முடிவெடுக்கும் திறனையும் தந்தருளினார், ஆனால் மனிதன் அதை தவறாக பயன்படுத்தி கடவுளுக்கு கீழ்ப்படியாமற் போனான்.
சுரேஷ்:அதனால் என்ன நடந்தது ?
குமார் : மனிதனின் கீழ்ப்படியாமை நிமித்தம் பாவம் இவ்வுலகில் தோன்றியது. இந்த பாவம் மனிதனை கடவுளிடமிருந்துப் பிரித்தது.
சுரேஷ்: அது எப்படி ?
குமார்: கடவுள் மனிதனை மிகவும் நேசிக்கிறார் ஆனால்
பாவத்தை வெறுக்கிறவராக இருக்கின்றார்.
சுரேஷ்: அப்படியா பிரதர் ?
குமார்: ஆமாங்க தம்பி,
பாவத்தின் சம்பளம் மரணம். எல்லோரும் பாவம் செய்து நரகத்தில் முடிவில்லாத மரண தண்டனை பெறுவதற்கு ஏதுவானார்கள்.
நன்மைகள் செய்வதின் மூலமாக இந்த பாவ சாபத்திலிருந்து மனிதனால் விடுதலை பெற முடியவில்லை.
மனிதர்கள் இருளின் சக்திகளுக்கு செவிகொடுத்து அக்கிரமத்தையும், அநியாயத்தையும் செய்தான்.
கடவுள் மனிதனுக்கு நன்மை தீமையை பகுத்துஅறியும் அறிவை கொடுத்திருந்தும் அவன் தீமையே விரும்பி செய்து தனது ஆன்மாவை அழிவுக்கு உட்படுத்திக்கொண்டிருந்தான்
பிரதாப்: இந்த நிலையிலிருந்து மனிதனை மீட்டு காப்பாத தான் இயேசு பூமிக்கு வந்தாரா ?
குமார்:ஆமாங்க தம்பி
மனிதனின் பாவ கட்டுகளை சிலுவையாலே இயேசு உடைத்தார்
பிரதாப்: அதற்க்கு எதுக்கு இயேசு சிலுவையில் பலியாகனும் ?
குமார்: பாவம் நிறைந்த மனித இனத்தின் மீட்பிற்காக,பாவ நிவாரணமாக பாவமே இல்லாத ஒரு உன்னதமான பலி தேவை என்று கடவுள் சொல்லியிருக்கிறார்.
கடவுளைத்தவிர பாவம் இல்லாத உன்னதர் யாரும் இல்லை
ஆதலால் தான் கடவுளோடு கடவுளாக ஒரே ஐக்கியத்தில் இருந்த கடவுளின் மகன் இயேசு இவ்வுலகில் மனிதனாக வந்து மொத்த மனித இனத்தின் பாவங்களையும் சாபங்களையும் தன் மீது ஏற்றுக்கொண்டு
மனிதன் மீது செலுத்தப்பட வேண்டிய கடவுளுடைய கோபத்தை இயேசு தன் மீது வாங்கிக்கொண்டு
தன்னையே கடவுளுக்கு முன்பாக பலியாக கொடுத்தார்
இப்படியாக கடவுள் தம்முடைய ஒரே மகனயே உலகத்திற்கு தந்தருளி தம்முடைய அன்பை உலகிற்கு வெளிப்படுத்தினார்
சுரேஷ் : கடவுள் மனிதனை இந்த அளவுக்கா நேசிக்கிறார் ஆச்சரியமா இருக்கு ?
குமார் : ஆமா தம்பி கடவுள் அன்பாகவே இருக்கிறார்.எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்றும்,
எல்லா மனிதர்களும் வேதனை நிறைந்த நிலையான
நரக தண்டனைக்கு தப்பி
முடிவில்லாத பரலோக(மோட்ச)
வாழ்வை பெறவேண்டும் என்பதே
கடவுளின் விருப்பம்.ஆனா அதற்கு மனிதனுடைய பாவம் தடையா இருக்கிறது.
இயேசு கிறிஸ்துவை
விசுவாசிப்பதன் வழியாக மட்டுமே
அந்த தடை விலகும்.
இயேசுவின் மூலமாய் மட்டுமே மனிதன் பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து, சமாதானம் நிறைந்த வெற்றிவாழ்வையும்,
நிலையான நரக தண்டனையிலிருந்து, முடிவில்லா பரலோக(மோட்ச) வாழ்வையும் பெற முடியும்.
இயேசுவே பரலோகத்திற்கு செல்ல ஒரே வழி அவர் அல்லாமல் யாரும் கடவுளிடம் சேர முடியாது.
பிரதாப்: சரிங்க பிரதர் இரட்சிப்புனா என்ன ?
குமார் : இரட்சிப்பு என்றால் பாவம்,வியாதி,தரித்திரம்,பயம்,சாபம்,
முடிவில்லா நரக தண்டனை ஆகிய இருளின் சக்திகளிடமிருந்து விடுதலை ஆகும்.
இவைகளை இயேசு
சிலுவையின் மேல் தமது சரீரத்தில் சுமந்து,இருளின் சக்திகளிடம் இருந்து நமக்கு விடுதலையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.
பிரதாப்: சரி ஓ.கே பிரதர் ஒரு மனிதன் இரட்சிப்பை பெறனுமுனா
அவன் என்ன செய்யனும் ?
குமார்: அவன் தன் பாவ நிலையை உணர்ந்து கடவுளுக்கு முன் தன்னை தாழ்த்தி மனம் வருந்தி இயேசுவை விசுவாசிக்க வேண்டும்.இயேசுவே என் ஆண்டவர் என்று ஒரு மனிதன் வாயினாலே அறிக்கையிட்டு,
அவரை தன் உள்ளத்திற்குள் வரும்படி அழைப்புக்கொடுக்க வேண்டும். அவர் உள்ளத்திற்குள் வருவார்
ஒளி வந்த உடன் இருள் இல்லாமல் போவது போல், இயேசு வந்த உடன் அந்த மனிதனிடம் இருந்த தீமையான இருளின் காரியங்கள் எல்லாம் மறைந்து அவன் இரட்சிக்கப்பட்டு புது வாழ்வைப்பெறுவான்.
சுரேஷ்: பிரதர் எனக்கு தெரிஞ்ச கிறிஸ்தவங்களே நீங்க சொன்ன அந்த இருளின் அடிமைதனத்திலிருந்து இரட்சிக்கப்படாம இருக்காங்களே !
குமார் : சகோதரரே ஒரு மனிதன் சும்மா கிறிஸ்தவ பெயரை வைத்தால் மட்டும் அவன் இரட்சிப்பை பெற முடியாது ...
அவன் கிறிஸ்துவின் மீது முழு விசுவாசம் வைத்தால் தான் இரட்சிப்பை அடைய முடியும்...
அவன் ஏதோ ஒரு கிறிஸ்தவ குடும்பத்துல பிறந்தால் மட்டும் அவனுக்கு தானா இரட்சிப்பு ஏற்படாது
கிறிஸ்துவுக்குள் புது மனிதனாக பிறந்தால் தான் அவனுக்கு இரட்சிப்பு ஏற்படும்
நீங்க உங்கள சுற்றி இருக்கிற பெயர் கிறிஸ்தவங்களோட வாழ்கையை பார்க்கிறத விட,இயேசு கிறிஸ்து மனிதர்களிடம் எப்படி வாழ்ந்தார்
அவர் நம்மை எப்படி வாழ சொன்னார்.
என்பதை வேதாகமத்தில் பாருங்கள்
வேதாகமே சத்தியம்
இந்த உலகத்துல இருக்கிற எல்லா மனிதர்களுக்கும் கடவுளால் நியமிக்கப்பட்ட ஒரே முன் மாதிரி இயேசு கிறிஸ்து மட்டும் தான் தம்பி
உண்மையிலே
இரட்சிக்கப்பட்டவங்க எதற்கும் அடிமையா இருக்க மாட்டாங்க
அவங்க உலகத்தில் கீழ்நிலையில் நிலையில் இருக்கவே மாட்டாங்க, சகல இருளின் சக்திகளையும் தங்களுக்கு கீழ்படுத்தி ஆண்டு கொள்கிறவர்களாவும்,
இந்த உலகத்தில் எல்லோரையும் நேசிக்கிறவர்களாகவும் எல்லோரிடமும் அன்பு செய்கிறவர்களாகவும்
தன்நலமற்ற தியாக மனம் கொண்டவர்களாகவும் இருப்பாங்க.
எல்லாருக்கும் பிரயோஜனமான ஒளியின் மக்களாக வாழ்வாங்க
பிரதாப் & சுரேஷ் :
இன்றே நாங்கள் இயேசுவே எங்கள் ஆண்டவர் என்று முழுமனதுடன் அறிக்கையிட்டப்போகிறோம்
நாங்களும் இரட்சிக்கப்படனும். எங்களுக்கும் இயேசு இந்த உலகத்தில் வெற்றி வாழ்கையும்,பரலோகத்தில்
(மோட்சம்) முடிவில்லா ஆனந்த வாழ்கையும் தனது கல்வாரி பாடுகள்
மூலம் சம்பாதித்து வைத்திருக்கிறார் அதை நாங்கள் விசுவாசித்து பெற போகிறோம்.
குமார்: தேவனுக்கே மகிமை
உங்கள் விசுவாசத்தின் படியே உங்களுக்கு நிச்சயமாக ஆகும்.
அமென்
@@@@@@@@@@@@@@@@@@
இந்த உரையாடலை வாசித்துக்கொண்டிருக்கிற என் அன்பு சகோதர சகோதரிகளே!
வாழ்வில் பல்வேறு பிரச்சினையால் சலிப்படைந்து விட்டீர்களா ?
பண நஷ்டத்தினால் வாழ்க்கையில் வெறுப்படைந்து விட்டதா ?
வேதனையால் வாடுகிறிங்களா?
பாசத்திற்குரியவர்கள் உங்களை ஏமாற்றிவிட்டார்களா ?
பேய் பிசாசு பில்லி சூனிய கோளாறுகளால் துன்படுகிறீர்களா ?
கடந்த காலத்தில் செய்த தவறுகள் உங்களை மிகவும் வருத்துகிறதா ?
உங்கள் வாழ்க்கையில் எங்கும் இருள் நிறைந்து இருக்கிறதா ?
மருத்துவர்களால் குணமாக்க முடியாத வியாதியின் பிடியில் இருக்கிறீர்களா ?
இனி நம்பிக்கையே இல்லை இது தான் என் தலை எழுத்து என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா ?
உங்களுடைய பிரச்சினைகள் எல்லாவற்றையும் இயேசு அறிந்திருக்கிறார்.
உங்களுக்கு உதவி செய்யும்படி இயேசு உங்கள் அருகிலேயே இருக்கிறார்.
ஆம் அவர் உங்கள் கண்ணீரை நிச்சயமாகவே துடைப்பார்.
அவரால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை.அவர் உங்கள் வாழ்விலும் பெரிய அற்புதங்கள் செய்வார்......
ஆனால் இயேசுவை நீங்கள் ஆண்டவராக உள்ளத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.
ஆம் என் அன்பு சகோதர சகோதரிகளே!
இயேசு உங்களை தன் சாயலாக படைத்திருக்கிறார்,அவரின் படைபிலேயே உயர்தரமான படைப்பு நீங்கள் தான்.ஆகவே அவர் உங்கள் மேல் மதிப்புவைத்திருக்கிறார்
அவர் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் உள்ளத்திற்குள் வர மாட்டார்..
இதோ உள்ளத்தின் வாசற்படியில் நின்று கதவை தட்டிக்கொண்டிருக்கிறேன்.
ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு கதவை திறந்தால் உள்ளே வருவேன் என்று இயேசு வேதாகமத்தில் கூறுகிறார். உலகத்தின் ஒளியாம் இயேசு உங்கள் உள்ளத்திற்குள் வரும்போது, உங்கள் வாழ்வு நிச்சயம் ஒளிமயமாகும்.
இயேசு ஒளியாகவே இருக்கிறார்.அவரிடத்தில் சிறிதளவேனும் இருள் இல்லை.
அவர் மனிதனாக அவதரித்தார்
உங்களுக்கு சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் தரும்படிக்கு அவர் உங்களுக்காக பாவமானார்.
நீங்கள் ஐஸ்வரியவானாகும் படிக்கு அவர் தரித்திரரானார்.
நீங்கள் ஆரோக்கியமடையும்படிக்கு அவர் உங்கள் வியாதிகளை ஏற்றுக்கொண்டார்.அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமடைந்திருக்கிறீர்கள் உங்களுக்காக மரித்து அவர் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்.
அவர் அநாதி காலமாய் உயிரோடு இருக்கிறவர்,ஆரம்பமும் முடிவும் இல்லாதவர்.அவரை உள்ளத்தில் முழுமனதோடு இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களானால் இன்றே நிலையான சமாதானத்தையும் சந்தோஷத்தையும்,ஆரோக்கியத்தையும் ஆசீர்வாதத்தையும்,
இந்த பூலோகத்தில் பரிபூரண ஜீவன் நிறைந்த புது வாழ்வையும்,
பரலோகத்தில் முடிவில்லா நித்திய ஜீவ வாழ்வையும்,இலவசமாக உங்களுக்குத் தருவார்.
ஒளியாகிய இயேசு இயேசு உங்களுடைய வாழ்வில் வரும்போது இருள் யாவும் மறைந்து ஓடிப்போகும். ஒளிமயமான எதிர்காலம் உங்களுடையதாகும். இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமென்
என் அன்புக்குரிய இரட்சிக்கப்பட்ட சகோதர சகோதரிகளே !
இந்த உரையாடல் வடிவ சுவிசேஷ செய்தியை கைப்பிரதியாக (நோட்டீஸ்)
பிரின்ட் செய்து மக்கள் மத்தியில் வினியோகியுங்கள்
இது புது முயற்சியாக இருக்கும்
அனேகர் இரட்சிக்கப்படுவார்கள்
நன்றி
ஜீவ வழி-LIVING WAY
www.facebook.com/lwcomm
Marvel Jerome
நன்றி என் முதல் முயற்சி ! ஏசுவுக்கே புகழ் ! நோட்டீஸ் பிரிண்ட் எடுக்க தேடினேன் ஆண்டவர் உங்களைக்கொண்டு எனக்கு உதவியது அற்புதம்.
ReplyDelete