உங்கள் பக்கத்தில் ஆயிரம் பேரும் உங்கள் வலது பக்கத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் நீங்கள் விழ மாட்டீர்கள்.எதுவும் உங்களை அணுகாது,சேதப்படுத்தாது...ஆனால் நீங்கள் பழைய பாவத்தில் மீண்டும் விழுந்து தீமையிடம் அணுகி சென்று உங்களை நீங்களே சேதப்படுத்தி கொள்ளாதீர்கள்...
கர்த்தர் உங்களை எல்லா தீங்கிற்கும் விலக்கி காக்கிறவராய் இருக்கிறார்...நீங்கள் அவருடைய கட்டளைகளை உங்கள் வாழ்விலிருந்து விலக்கி விடாமல் காத்து கைக்கொள்ளுங்கள்...
உங்களுடைய வாழ்நாளில் எந்த ஒரு தருணத்திலும் சாத்தான் உங்களை எதிர்த்து ஜெயிக்க தேவன் அனுமதிக்க மாட்டார்...
ஆனால் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு எதிராக "பாவம்"செய்து சாத்தான் உங்களை ஜெயிக்கும் தருணத்தை நீங்களே உண்டாக்கி விடாதீர்கள்..
உங்கள் வாழ்வில் நடந்த எல்லாத்தீமைக்கும் காரணம்,
தீமைக்கு இடம்கொடுத்த நீங்களும், அதை கொண்டுவந்த சாத்தானும் தான்.
கர்த்தர் நல்லவர்.உங்கள் வாழ்வில் நடந்த,இனி நடக்கப்போகிற எல்லா நன்மைகளுக்கும் காரணர் கர்த்தர் மாத்திரமே.
கர்த்தர் நல்லவர், அவரையே சார்ந்திருங்கள்.
ஜீவ வழி-LIVING WAY
www.facebook.com/lwcomm
Marvel jerome
No comments:
Post a Comment