Wednesday 18 November 2015

கர்த்தர் நல்லவர்

கிறிஸ்துவுக்குள் என்  சகோதர சகோதரிகளே !

கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் நல்லவராகவே இருக்கிறார்!
அவர் உங்களை அல்ல
உங்கள் பாவத்தையே வெறுக்கிறார்!

நாம் சில சமயம் தவறி போய் பாவம் செய்த போது அவர் நம்மை வெறுக்கவில்லை அடித்து நெறுக்கவில்லை
நாம் திரும்பிஅவரிடம் திருந்தி வருவோம் என்று ஆவலோடு எதிர்பார்த்தார்
அந்த நேரத்திலும் கூட
நம் ஜீவனை அழிவிலிருந்து பாதுகாத்தார்
அவர் நல்லவர்
அவர் மட்டுமே நல்லவர்
அவர் எவ்வளவு பெரியவர் !
வானாதி வனங்களும் கொள்ளாத
மாக பெரிய தேவன் !
அவர் நம்மீது கொண்டுள்ள அளவற்ற அன்பை நினைத்து பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது அழுகை வருகிறது
அவரின் நிகரில்லா அன்பை நம் இருதயத்தில் நினைத்து அதிலே நிலைத்து இருந்தால் எந்த பாவ எண்ணமும் நம்மை மேற்கொள்ள முடியாது

ஆம் என் அன்பு என்  சகோதர சகோதரிகளே !

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்...

அவரது அளவற்ற
அன்பைஅனுதினமும் ரசித்துப்பாடுங்கள்...

அவர் என்றும் நம்மை காக்கும் தேவனாகவே இருக்கிறார் அதை நினைத்துப்பாருங்கள்...

கர்த்தர் நம்மை பல வகை வேடர்களுடைய கண்ணிகளுக்கு தப்பிவித்துக்கொண்டு இருக்கிறார் அவரை வணங்கி வாழ்த்துங்கள்...

நம்மை எல்லா தீங்குக்கும் விலக்கி காக்கிறாரே
அவரை துதித்து போற்றுங்கள்...

கர்த்தரே நம் அடைக்கமும் நம் கோட்டையும் நம் தஞ்சமுமாய் இருக்கிறார் அவரை மட்டும் சார்ந்தவர்களாய் வாழுங்கள்...

உங்கள் பக்கதில் ஆயிரம் பேரும் உங்கள் வலது பக்கத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் நீங்கள்
விழ மாட்டீர்கள் எதுவும் உங்களை அனுகாது
சேதப்படுத்தாது...

ஆனால் நீங்கள் பழைய பாவத்தில் மீண்டும்
விழுந்து தீமையிடம் அனுகி சென்று உங்களை நீங்களே சேதப்படுத்தி கொள்ளாதீர்கள்...

கர்த்தர் உங்களை எல்லா தீங்கிற்கும் விலக்கி காக்கிறவராய் இருக்கிறார்...

நீங்கள் அவருடைய கட்டளைகளை உங்கள் வாழ்விலிருந்து விலக்கி  விடாமல் காத்து கைகொள்ளுங்கள்...

உங்களுடைய வாழ்நாளில் எந்த ஒரு தருணத்திலும் சத்துரு உங்களை எதிர்த்து ஜெயிக்க தேவன் அனுமதிக்க மாட்டார்...

ஆனால் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு எதிராக "பாவம் செய்து சத்துரு உங்களை ஜெயிக்கும் தருணத்தை  நீங்களே உண்டாக்கி விடாதீர்கள்...

ஆமென்

ஜீவ வழி-LIVING WAY

No comments:

Post a Comment