Tuesday 26 April 2016

(15) கத்தோலிக்கம் அனேகர் செல்லும் விசாலமான வழிகளில் ஒன்று

#தனித்துவ செய்தி

கத்தோலிக்கம் அனேகர் செல்லும்
விசாலமான வழிகளில் ஒன்று

அந்தோனி: நண்பார்களே, கத்தோலிக்கம் இந்த உலகத்தில் எப்படி இவளவு விசாலமா பரவியது ? ஏன்னா உலகத்துலயே அனேகர்  கத்தோலிக்கர்களாக தான  இருக்கிறாங்க  ?

பீட்டர்: சொல்றேன் நண்பா,
எருசலேமை தலையிடமாக கொண்ட ஆதி திருச்சபை பல்வேறு உபத்திரத்தினால் துன்ப படுத்தப்பட்டது ஆனா உபத்திரம் எவ்வளவு தூரம்  பெருகினாலும் சபையோட வளர்ச்சி, கிறிஸ்தவர்களின் எழுச்சி  குறையவில்லை. ஆரம்பத்தில்
ரோம சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள்தொகை சுமார் 120 மில்லியன்
(12 கோடி) என்று கணக்கிடுகின்றனர். இதில் பாதிப்பேர், அதாவது 60 மில்லியன்(6கோடி) கிறிஸ்தவர்கள் என்று குறிப்பு கூறுகிறது.

ஜான்: ஆமா சாத்தான் திருச்சபையை உபத்திரவத்தினால் அழிக்கமுடியாது என்று கண்டுகொண்டான்.அதனால  கிறிஸ்தவர்களை காலிபண்ண பிசாசு அதிக நயவஞ்சனையான முறையைக் கையாண்டான்; கிறிஸ்தவர்களைக் கொண்டே கிறிஸ்தவத்தை அழிக்கத் திட்டமிட்டான். அதாவது போலி கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்துக்குள் இணைத்து கிறிஸ்தவ சத்திய உபதேசத்தை சீர்குலைக்கும் வேலையை தெடங்கினால்...

அத்தோனி: அதனாலதான் வேதத்தில் இல்லாத பற்பல உபதேசங்கள் கத்தோலிக்கத்தில் இருக்கிறதா ?

பீட்டர்: ஆமா ஆந்தோனி,ரோமப் பேரரசரான கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவர்களின் உறுதியையும், உண்மையையும் கண்டு பிரமித்தான். அவன்,கிறிஸ்தவனானான்
கி.பி.324 ல் அரசாங்கத்தையும், திருச்சபையையும் ஒன்றாக இணைத்தான். திருச்சபைக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஏராளமான சலுகைகளை அள்ளி வழங்கினான்; சபைப் போதகர்களுக்கு ஆலயங்களைக் கட்டுவதற்கு அரசாங்க கருவூலத்திலிருந்து ஏராளமான பணம் கொடுக்கப்பட்டது. கிறிஸ்து மார்க்கம் அரசாங்க மார்க்கமாயிற்று. சபைத் தலைவர்களுக்கு'பசிலிக்கா
'(BASCILICA) என்ற மிக ஆடம்பரக் கட்டிடங்கள் வழங்கப்பட்டன. இதிலே மதமாற்றங்களுக்கான சடங்குகள் நடைபெற்றன.

அந்தோனி: அப்படியா அப்ப அரசாங்க சலுகை பெற ஏராளமான மக்கள் கிறிஸ்தவர்களாக மாறிருப்பாங்களே !

ஜான்: ஆமா,கிறிஸ்தவர்களுக்கு இதுவரை இருந்த உபத்திரவம் நீங்கி, கிறிஸ்தவனாயிருப்பது பெரிய அதிஷ்டமாக ஆனது திரளான மக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினர்,ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்டு மனம் மாறவில்லை
அரசாங்க சலுகைகளைப் பெறவும், உயர் பதவி பெறவும்,அனேக மக்கள் கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி காட்ட  மாறினார்கள்.பணத்திற்காக, வசதியான வாழ்விற்காக ஏகப்பட்ட பேர்  சபைப்போதகர்களாக மாறினர்.

அந்தோனி: அடப்பாவிகளா ?

பீட்டர்: இதானால சபையில
பரிசுத்த ஆவியின் வல்லமை விட
பண வல்லமையையே மக்கள் விரும்பினார்கள்,பிரசங்க முறைகள் சொற்பொழிவுகளாக மாறின;
வேத வசனம் மறக்கப்பட்டது.இதனால்
சபைகள் முழுவதும் மனந்திரும்பாத மக்களால் நிறைந்தது.சபையின் எல்லா பணத்தேவைகளும் அரசாங்கத்தால் பூர்த்தி செய்யப்பட்டன. அநேக பிற மத வழிபாட்டுத்தலங்கள் கிறிஸ்தவ ஆலயங்களாக்கப்பட்டன. பிற மதத்தினரை சபைக்குக் கொண்டுவர அவர்களின் பழக்கவழக்கங்களை சபைக்குள் கொண்டுவந்தனர். பிற மதத்திலிருந்த சகல மூடப்பழக்க வழக்கங்களும் சபையின் சடங்குகளாய் மாறின. இதனால உலகமெங்கும் இந்த கலப்பட உபதேசம் மக்களால் எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்தோனி: ஆமா,கண்டிப்ப ஏற்றுக்கொளுவாங்க, ஏன்னா,
தாங்கள் வழிபடுகிற விக்கிரகங்கள்,தாங்கள் வழிபடுகிற தேவதைகளை,பெயரை மற்றும் மாற்றி இதை வழிபடுங்கள்,இதுதான் கிறிஸ்தவம்,இதற்கு அரசாங்க சலுகைகளும் உண்டு அப்படினு சொன்னா, மெய் தேவனை அறியாத புற ஜாதி மக்கள்,கண்டிப்பா இந்த மார்க்கத்தை ஏத்துகிடுவாங்க..

ஜான்: பிறகு காலங்கள் செல்ல செல்ல, வேதத்தின் அடிப்படை சத்தியங்கள் போதிக்கப்படவில்லை; எனவே எவை அடிப்படை சத்தியங்கள், எவை கிறிஸ்தவ உபதேசத்திற்கு முரண்பட்டவை என்பதை மக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இயேசுவின் திருச்சபை என்ற பெயரில்,
எல்லா விதமான புற மத பழக்கத்தாலும், மூடப்பழக்க வழக்கங்களாலும் நிறைந்த விசாலமான கத்தோலிக்க மார்க்கத்தில்  அனேகர் இருக்கிறார்கள்,

அந்தோனி : ஓ... இதனாலதான் இயேசு கிறிஸ்து மத்தேயு 7: 13 இவ்வாறு சொன்னாரா ?
"கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்"

பீட்டர்: ஆமா அந்தோனி,உலகம் முழுவதும்,கத்தோலிக்க,இஸ்லாமிய,போட்ட மதத்து மக்களே அதிகம்,ஏனென்றால் கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்"

ஜான்: ஆனா,ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
(மத்தேயு 7: 14) இடுக்கமான,
நெருக்கமான, வாசல்வழியாய் பிரவேசித்தவர்கள் அதாவது, கண்களுக்கு முன் இருக்கிற  உலகத்துவ காரியங்கள்,மதங்கள்,
வழிபாட்டு முறைகள் என்னும் விசால வழியை விட்டுவிட்டு,கண்களால் காணமுடியாத ஆவிக்குரிய காரியங்களை பரிசுத்த வேதாகமம் வழியாய் பகுத்தறிந்து,ஜீவனுக்கு செல்லும் அந்த ஒரே வழி யார் என்பதை கண்டுபிடித்து நடப்பவர்கள்.
ஆவியில் புதிதாய் பிறந்து,வேதாகம வார்த்தைகளை மட்டும் பின்பற்றும் கிறிஸ்தவர்கள், இவர்களின் எண்ணிக்கை உலகில் குறைவாக தான் இருக்கும் இவர்களே நித்திய ஜீவனை அடைவார்கள்...

அந்தோனி: இப்ப எனக்கு நல்ல புரிஞ்சிருச்சுமா,ஏன் இந்த கத்தோலிக்கம் இப்படி விசாலமாக,
 உலகத்திலுள்ள,அனேக மக்களால் நிறைந்து இருக்குனு.... ஏன்னா
கேட்டுக்குப்போகிற வாசல்தான் விசாலமா இருக்கும்.

"ஜீவனுக்குப்"போகிற வாசல் இடுக்கமும்,வழி
நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
(மத்தேயு 7: 14)

 நானே வழியும் சத்தியமும் "ஜீவனுமாயிருக்கிறேன்" என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
(யோவான் 14: 6)

=======================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in








Friday 15 April 2016

(14) தள்ளுபடி ஆகமங்கள் தேவனுடைய ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டதா ?

#தனித்துவ பதிவு

தள்ளுபடி ஆகமங்கள்
( THE APOCRYPHAL BOOKS)

பீட்டர்: பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களுமே  மனிதகுலத்துக்கு தேவனால் அருளப்பட்ட சத்திய வார்த்தைகள்

அந்தோனி: அப்ப எங்க, திருவிவிலியத்தில் உள்ள 9  புத்தகங்களாகிய,தோபித்து,யூதித்து,
பாரூக்கு, சீராக்கின் ஞானம்,
சூசன்னாவின் வரலாறு, பாகாலும் வலுசர்ப்பமும்,1மக்கபேயர்
2மக்கபேயர்,etc.. etc..ஆகிய நூல்கள் தேவனால் அருளப்பட்ட சத்திய வார்த்தைகள் இல்லையா ?

பீட்டர்: ஆமா, அந்தோனி,
தள்ளுபடி ஆகமங்கள் தீர்கதரிசனம் இல்லாத இருண்ட காலத்தில் எழுதப்பட்டவைகள்,பழைய, புதிய ஏற்பாட்டு நூல்களுக்கு இடையில் சுமார் 300 ஆண்டு காலம் இருண்ட காலமாகவே கருதப்பட்டது,அப்போது இவைகள் எழுதப்பட்டிருக்கிறது, இந்த ஆகமங்கள் பரிசுத்தாவியின் ஏவுதலால் எழுதப்படவில்லை என்று ஆதிகால வேதபண்டிதர்களாகிய ஒரிஜன், ஜெரோம், டட்டுலியன், ஜெருசலேம் சிறில், தேர்ட்டுலியன் மற்றும் ஆத்ரசியஸ் போன்றவர்கள் இவைகளுக்கு எதிராக பேசி புறக்கணித்து இருந்தார்கள் ஆனால் அதையும் மீறி 1546 ல் டிரென்ட் ஆலோசனைக்கூட்டத்தில்,
 ரோமன் கத்தோலிக்க சபை இந்த ஆகமங்களை விவிலியத்திற்குள் இடைசொருகியது..

அந்தோனி: அப்படியா !!!

பீட்டர்: ஆமா அந்தோனி,தள்ளுபடி ஆகமங்களை எழுதிய ஆசிரியர்கள் எவரும் தெய்வீக ஏவுதலை தெரிவிக்கவில்லை, சிலர் இதனை மறுக்கின்றனர். (உதாரணமாக:
1 மக் 4 :46 ,11 மக் 2:23, 15 , 38 )

#கி.மு.2000ம் ஆண்டுவாக்கில் எழுதப்பட்ட இந்த தள்ளுபடி ஆகமங்கள் தேவ ஆவியானவரின் தூண்டுதலால்
எழுதப்படவில்லை என்பதற்கு இன்னும் பல சான்றுகள் உள்ளன

#வேதத்தில் சொல்லப்பட்ட தரமான உபதேசங்களுக்கு மாறாக சில பொய்யான உபதேசங்களை இந்த தள்ளுபடி ஆகமங்கள் உபதேசிக்கின்றது ( தற்கொலை, தாக்குதல், மரித்தோருக்கான ஜெபம் போன்ற காரியங்களை இது  நியாயப்படுத்துகின்றது)
தேவனுடைய வார்த்தையின் ஆதாரம்
இல்லாத,சில கத்தோலிக்க  உபதேசங்களை இந்த இடைசொருகல்
ஆகமங்கள் ஆதரிப்பதால்
இவைகளை விவிலியத்தோடு இணைத்திருக்கிறார்கள்

#புதிய ஏற்பாட்டு நூல்களில் எந்த நூல்களிலும்,இந்த தள்ளுபடி ஆகமங்களிலிருந்து எந்த ஒரு குறிப்பும்
எடுத்துச் சொல்லப்படவில்லை

#குறிப்பாக இயேசு கிறிஸ்துவோ,ஆதி அப்போஸ்தலர்களோ,எந்த ஒரு இடத்திலும் இந்த ஆகமங்கள் அடங்கிய நூல்களிலிருந்து ஒன்றையும் மேற்கோள் காட்டவே இல்லை

#பழைய எபிரேய வேதாகமத்தில் ஆதியாகமம் முதல்நூலாக  வரிசைப்பட்டிருந்தது ஆபேலின் இரத்தம் முதல்..... சகரியாவின் இரத்தம் வரை (மத் 23:34,35)  என்ற இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆபேல் ஆதி நூலில் இருந்து எடுக்கப்பட்ட கதாப்பாத்திரம். அப்படியே சகரியா
2 நாளாகமத்தில் இருந்து எடுக்கப்பட்ட நபர். (இயேசுவும் இந்த வரிசையை அங்கீகரித்தக் காரணத்தால்)
இந்த வசனத்தின்படி பார்த்தால்
மக்கபேயர், பாரூக்கு,யூதித்து,.. etc...etc..
ஆகிய தள்ளுபடி ஆகமங்கள் இயேசு கிறிஸ்துவால் ஏற்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது..

அந்தோனி: ஓகே.. இயேசு ஏற்கவில்லை அப்ப இந்த தள்ளுபடி ஆகமங்களை யூதர்களாவது ஏற்றுக்கொண்டு இருக்கிறார்களா ?

பீட்டர்: அதுவும் இல்லை, யூதர்கள்,ஏற்றுக்கொண்டது,பழைய ஏற்பாடாகிய 39 புத்தகங்களையே... தள்ளுபடி ஆகமங்களை அவர்கள் நிராகரித்தார்கள்... எல்லா யூதரும் 39 நூல்களை மட்டுமே ஏற்றுள்ளனர்.
அவைகள்.....

#சட்டநூல்கள்: தொடக்கநூல்கள், விடுதலைப்பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச்சட்டம் (5)

#இறைவாக்கு நூல்கள்: முன்னைய இறைவாக்கினர் (6), யோசுவா,நீதித்தலைவர்கள், 1,2 சாமுவேல், 1,2 அரசர்கள் பின்னைய இறைவாக்கினர் (15):

பெரிய இறைவாக்கினர்: எசாயா, எரேமியா, எசேக்கியேல்.*பன்னிரு சிறிய இறைவாக்கினர்: ஓசியா முதல் மல்கியா வரை.

இலக்கியம் (அறிவுரை நூல்கள் (13)
திருப்பாடல்கள், நீதிமொழிகள், யோபு, இனிமைமிகு பாடல், ரூத்து, புலம்பல், சபை உரையாளர், எஸ்தர், தானியேல், எஸ்ரா,நெகேமியா, 1,2 குறிப்பேடு.
ஆக மொத்தம் 39

#ஜெமினியாவில் 90 கி.பி யில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் யூதர்கள் தள்ளுபடி ஆகமங்களை, ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த புத்தகங்களில் பொய்யான வரலாறும், இடங்களும், தவறான வருடங்களும், உண்மையற்ற கட்டுகதைகளும் காணப்படுகின்றதாக அவர்கள் அவைகளை நிராகரித்தார்கள்...

அந்தோனி: அடப்பாவிகளா ! யூதர்களை விடு, இயேசுவும்,அப்போஸ்தலர்களும், அங்கிகரிக்காத  இப்படிப்பட்ட இந்த தள்ளுபடி ஆகமங்களை எப்போது, விவிலியத்தில் ரோமானிய சபையினர் இணைத்தார்கள் பீட்டர் ?

பீட்டர்: கிபி1512- மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்க சபையை விட்டு வெளியே வந்தார்... அக்கலத்தின் சபை பாதரியார்கள் மட்டுமே வாசிக்க அனுமதி பெற்ற,பரிசுத்த வேதாகத்தை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து.. மக்கள் மத்தியில் வினயோகித்தார்... இதனால் மிகப்பெரிய எழுப்புதல் ஏற்பட்டது...
பிறகு வேதாகமம் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு... அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் சென்றடைந்தது... அதுவரை விவிலியத்தில் இந்த 9 ஆகமங்கள் சேர்க்கப்படவில்லை

அந்தோனி: அப்ப ஆரம்பத்திலிருந்த விவிலியம் 66 புத்தங்களை மட்டும்தான் கொண்டிருந்ததா ? இடையில தான் இந்த 9 ஆகமங்களை ரோமன் கத்தோலிக்கர்கள் உள்ளே இணைத்தார்களா ? என்ன கொடுமை இது ?

பீட்டர்: ஆமா நண்பா ஆதிகாலத்திலிருந்து விவிலியம்
66 புத்தங்களை மட்டும்தான் கொண்டிருந்து, கிபி 1546 ம் ஆண்டுதான் இந்த தள்ளுபடி  ஆகமங்களை ரோமன் கத்தோலிக்க சபை விவிலியத்திற்குள் இணைத்து
மொத்தம் 75 புத்தகமாக ஆக்கியது.

அந்தோனி: அடப்பாவமே!

பீட்டர்: அந்தோனி,சீர்திருத்த சபைகள்
மட்டுமே,ஆதி திருச்சபையிலிருந்த அந்த 66 ஆகமங்களை பரிசுத்த வேதாகமாக கொண்டுள்ளது...
அதுமட்டுமே மனிதகுலத்துக்கு தேவனால் அருளப்பட்ட சத்திய வார்த்தைகள், மற்ற 9 ஆகமங்களும் தேவ ஆவியானவரின் தூண்டுதலில் எழுதப்படவில்லை, இயேசு கிறிஸ்துவும்,அப்போஸ்தலர்களும்
அங்கீகரிக்காத இந்த தள்ளுபடி ஆகம நூல்கள் நமக்கும் தேவைதானா?

அந்தோனி: நிச்சயம் தேவையில்லை
தேவ வார்த்தையோடு ஒன்றை கூட்டவோ, குறைக்கவோ நமக்கு அதிகாரம் இல்லையே.(வெளி 22:18,19) அப்படிச் செய்தால் நித்திய வாழ்வும் நமக்குப் பறிபோகுமே.

பீட்டர்: அதுமட்டுமல்ல தேவன் மனுகுலத்துக்கு அருளியதே 66
நூல்கள் தான்,அதற்கு மிஞ்சி நாம்ம இஷ்டத்துக்கு எதையும் கூட்டவோ, குறைக்கவோ கூடாது, அவைகள் நம்மை நிச்சயம் நரகத்தை நோக்கி நடத்திவிடும்... தற்கொலை, தாக்குதல், நற்கிரியை மட்டும் செய்தால் போதும் மீட்படையலாம், மரித்தோருக்கான ஜெபம், போன்ற காரியங்கள் கிறிஸ்தவ உபதேசமா ? பல ஆயிர ஆண்டுகளாக வேதாகமத்தில் இல்லாதததை இடையில் வந்து சொருகி மக்களை சாத்தான் வஞ்சித்து கொண்டிருக்கிறான்..
எச்சரிக்கை !!!

=======================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

Tuesday 12 April 2016

(13) மரியாள் இயேசுவின் மனுஷத்துவத்துக்கு தாயா ? தேவத்துவத்துக்கு தாயா !

தனித்துவ பதிவு

# மரியாள் இயேசுவின்
மனுஷத்துவத்துக்கு தாயா ?
தேவத்துவத்துக்கு தாயா !

அந்தோனி : மரியாள் தேவ தாய்....
தேவ குமாரன் இயேசுவுக்கே தாயாக இருந்தவர் தேவதாயாக தான இருக்கனும் !

பீட்டர்: இல்ல, நீ சொல்றது தவறு, மரியாள் இயேசுவின் தேவத்துவத்துக்கு தாய் அல்ல, அவள் இயேசுவின் மனுஷத்துவத்துக்கு தாய்...

அந்தோனி: எப்படி சொல்ற ? கொஞ்ஜம் விளக்கமா சொல்லு...

பீட்டர் : ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த காலங்களில் 100%மனுஷகுமாரனாகவும்,100% தேவ குமாரனாகவும் வாழ்ந்தார்.... இதை சரியாக புரிந்து கொள்ளாமல் பிற மத சகோதரர்களும் பற்பல விமர்சனங்களை வைக்கிறார்கள்...

அந்தோனி: 100%மனுஷகுமாரன்,100% தேவ குமாரனா வாழ்ந்தாரா!!  இதைஎப்படி சொல்ற?

பீட்டர்: வேதாகமத்தில் பல வசனங்கள் அதை நமக்கு எடுத்துரைக்கிறது...
உனக்கு புரியும்படி தேவகுமாரனுக்கும்,மனுஷகுமாரனுக்குமான தன்மைகளை சில வசனங்களை  வேதாகமத்திலிருந்து காண்பிக்கிறேன் கவனி.....

அந்தோனி: சொல்லு....நண்பா கவனிக்கிறேன்

பீட்டர்: #இயேசுவின் சினேகிதனான லாசரு மரித்ததை உணர்ந்த இயேசு தம் சீஷர்களோடு,பெத்தானியாவிற்கு சென்றார்... அவனை கல்லறையில் வைத்து நான்கு நாள் ஆகிவிட்டது
லாசருவின் சகோதரி மரியாள் மற்றும் யூதர்கள் அழுகிறதையும்,கண்டு,
இயேசு கண்ணீர் விட்டார்...(யோ 11: 35)
என்று எழுதியிருக்கிறது...
தேவனால் எப்படி கலங்கி
கண்ணீர்விட  முடியும்?
#அது இயேசுவின் மனுஷத்துவத்தின் தன்மை,அதனால் தான் அவர் கண்ணீர்விட்டார்...

#அதே இயேசு கல்லரையை நோக்கி
 லாசருவே, வெளியே வா என்று,உரத்த சத்தமாய்க் கூப்பிட்டவுடன்(யோ 11: 43)
மரித்து நான்குநாள் ஆகி நாறிப்போயிருந்தவன்,நலமாகி  உயிரோடு எழுந்து வந்தான்

#இது இயேசுவின் தேவத்துவத்துவ தன்மை

இயேசு தமது சீஷர்களோடு படவில் ஏறி, கடலின் அக்கரை நோக்கி செல்வோம் என்று சொல்லி, படகு  ஓடிக்கொண்டிருக்கையில்
#இயேசு நித்திரையாயிருந்தார் (லூக்கா 8: 22-33) என்று எழுதியிருக்கிறது....

இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.(சங் 121: 3-4)
வேதம் சொல்கிறதே...
ஆனால் இயேசு உறங்கினாரே ?
தேவனால் எப்படி உறங்க முடியும் சொல்லு அந்தோனி ?

அந்தோனி: அதான் எனக்கு புரியல !!!

பீட்டர்:(சிரித்தபடி)அங்கே இயேசுவின் மனுஷத்துவ தன்மை வெளிப்பட்டது

அந்தோனி: ஓ.. அப்படியா ?

பீட்டர்: சுழல் காற்று உண்டாகி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு படகு மூழ்கும் நிலை ஏற்பட்டபோது... நித்திரையிலிருந்த அதே இயேசுவை சீஷர்கள் எழுப்பினார்கள்...
அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய்,, அமைதலுண்டாயிற்று.....(லூக் 8: 24) காற்றும்,ஜலமும் இவருக்கு கீழ்படிகிறதே என்று சீஷர்கள் ஆச்சரிப்பட்டார்கள்...

#இது இயேசுவின் தேவத்துவ தன்மை,
இன்னும் என்னால் பல உதாரணங்களை வேதத்திலிருந்து கொடுக்க முடியும்... அந்தோனி...

அந்தோனி: இந்த வசன விளக்கமே எனக்கு தெளிவா புரிஞ்சிருச்சு பீட்டர்...
அப்ப, மரியாள் இயேசுவின் மனுஷத்துவத்துக்கு தான் தாய்... தேவத்துவத்துக்கு தாய் அல்ல... சரிதானே ?

பீட்டர்: ஆமா நண்பா சரிதான்..

#இயேசுவின் மனுஷத்துவத்துக்கு
தாய் உண்டு,தந்தை இல்லை

#இயேசுவின் தேவத்துவத்துக்கு
தந்தை உண்டு தாய் இல்லை...

இயேசுவின் மனுஷத்துவத்தையும்,
தேவத்துவத்தையும்... குழப்பிக்கொள்ள கூடாது... பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வேதாகமத்தை படித்து புரிந்தது கொள்ளவேண்டும்

=======================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

Friday 8 April 2016

தனித்துவ செய்தி

#எண்ணங்களை சீர்படுத்துவோம்

நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாய் இருக்கிறோம்.
(2கொரிந்தியர் 10: 5)

பரத்: அப்போஸ்தலனாகிய பவுல் இங்கே இவ்வாறு எழுதுகிறார், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும்....
என்று அதாவது தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் இருப்பது மனிதனின் மேட்டிமை தான்
மேட்டிமை எண்ணம் கொண்ட
ஒருவன் தேவனை அறிகிற அறிவில் வளர முடியாது...

பிரவீன்: ஒரு மனிதன்,தேவனுடைய வசனத்திற்கு தன்னை தாழ்த்தி, கீழ்படிந்து அவற்றை சந்தேகம் இல்லாமல் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் போதுதான் அவன் இரட்சிப்பை பெற முடியும்,அதேபோல்
அவன் தேவனை அறிகிற அறிவில் வளரவும்,தேவ வசனத்திற்கு கீழ்படிதல்,
முக்கியம் அவசியம், வசனத்தை ஏற்க மறுப்பவன் இரட்சிப்படையவோ, தேவ ஞான அறிவில் வளரவோ முடியவே முடியாது...

பரத்: ஆமா நண்பா! தாழ்மை இல்லாத இடத்தில் மேட்டிமை நிச்சயம் இருக்கும்,
 அப்:பவுல் அடுத்ததாக இவ்வாறு சொல்கிறார்....
"எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாய் இருக்கிறோம்"..... என்று....

பிரவீன்: ஆமா எண்ணத்திலிருந்து தான் செயல் பிறக்கிறது.. அதாவது நல்ல எண்ணங்களிலிருந்து நல்ல செயல்களும்,தீய எண்ணங்களிலிருந்து தீய செயல்களும் பிறக்கிறது...
ஒரு மனிதன் பாவ செயல் செய்வதற்கு முன்,அவன் மனதில் முதலில் பாவ எண்ணங்கள் ஓடியிருந்திருக்கும்....
அந்த எண்ணங்களின் கட்டுப்பாட்டு மீறலே பாவ செயலாக வடிவம் பெறுகிறது....

பரத்: சரியாக சொன்ன பிரவீன்,
 இந்த உலகத்தில்,முதன்முதல் பாவம்
பிரவேசித்த சம்பவத்தை,சற்று பகுத்து ஆராய்ந்து பார்த்தால் நமக்கு நன்றாக புரியும்...நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை, ஏவாளுக்கு சாத்தான் காண்பித்தான்.அவளை சிந்திக்க வைத்தான். அந்த சிந்தையிலே ஒரு இச்சையை கொண்டு வந்தான். அதுதான் பாவ எண்ணம். அந்த விருட்சம், புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமாயிருக்கிறது என்று அவள் கண்டாள். பாவம், சிந்தையில்தான் உருவாகிறது. அதை ஒருவன் சிந்தித்து சிந்தித்து, யோசிக்க யோசிக்க பாவம் செய்ய தூண்டப்படுகிறான்..

பிரவீன்: ஆமா நண்பா, தேவனுடைய வார்த்தைகளை மீறி,அவரின் வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் போவதே பாவ செயலாகும்.. இதை செய்ய வைக்க தான் சாத்தான் ஆர்வமாய் சுற்றித்திரிகிறான்..
அதற்கு முதலின் பாவ,சாப,அவிசுவாச,
வியாதியின் எண்ணங்கள் போன்ற இருளின் எண்ணங்களை மனிதனின் உள்ளத்தில் உள்ளிடாக கொடுத்து,
அது பாவ செயலாக வெளியீடாக வர எதிர்பார்க்கிறான்....

பரத்: ஆமா, உலகத்தனமான மனிதர்கள் சாத்தானின் தந்திரங்களை அறியாமல் அவனின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட்டு பாவத்திற்கு, அடிமையாக தங்கள் ஆத்துமாக்களை சேதப்படுத்துகிறார்கள்,அவர்களால் அந்த பாவ எண்ணத்தின் ஆளுகையிலிருந்து மீண்டு வர முடியவில்லை...ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்ட  ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள்,சாத்தான் கொண்டுவரும் எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படித்தி  சிறைப்படுத்துகிறவனாய் இருக்கின்றார்கள்... அவர்கள் எப்படிப்பட்ட மோசமான எண்ணத்திற்கும்,சூழ்நிலைக்கும் அடிமைபடாமல் கிறிஸ்து இயேசுவுக்குள் மிகவும் இலகுவாக அதிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள்....

பிரவீன்: நாம் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம்... நம் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாத உலகத்தனமான நிலையிலா ? இல்லை எந்த எண்ணமாக இருந்தாலும் அதை கிறிஸ்துவுக்குள் சிறைப்படுத்தி கட்டுப்படுத்துகிற ஆவிக்குரிய நிலையிலா ?  நாம் இதுவரை எந்த நிலையில் இருந்தாலும் சரி இனிமேல்
தேவனுடைய வசனங்களுக்கு ஏற்ப
நம் எண்ணங்களை சீர்ப்படுத்துவோம்,
வேண்டாத எண்ணங்களை கிறிஸ்துவுக்குள் சிறைப்படுத்துவோம்

ஆமென்... அல்லேலூயா....

=======================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in

நமது அனுதின நற்செய்திகளை எல்லோருக்கும் அறிமுகம் செய்யுங்கள். வாட்ஸ்அப் செய்திகளுக்கு
உங்கள் WhatsApp-லிருந்து  +919025385098 என்ற எண்ணுக்கு
“Need Daily Good News  ”
என்று Message அனுப்பவும்