Monday 16 November 2015

இறைமறுப்பாளர்களுக்கு தேவன் இருக்கிறார் என்பதை சொல்லும் கடிகாரமும் காலண்டரும்

இது தான் சத்தியம்
பகுதி-1

நார்திகர்களுக்கு தேவனைஇருக்கிறார் என்று சாட்சி கொடுக்கும் வாட்ச் &
காலண்டர்....

பரத் மற்றும் பிரவீன் இவர்கள் சிறு வயது முதல் நல்ல நண்பர்கள் விவரம் தெரிந்த நாள் முதல் இவருவரும் கடவுள் மறுப்பு கொள்கைகொண்டவர்களாக இருந்தார்கள்..

ஆனால் இடையில் பரத் தனது பகுத்தறிவாள் பகுத்து ஆராய்ந்து தேவன் இருக்கிறார் அவர்
பெயர் இயேசு என்பதை கண்டுபிடித்து
தன்னுடைய நர்த்திக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு
இயேசு கிறிஸ்துவை தனது
சொந்த இரட்சகராகவும்
ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டு
தேவனுக்காக வாழ்ந்து வருகிறார்..

இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம் பல முறை பரத் பிரவீனுக்கு தேவனை பற்றி
போதித்து வருகிறார்...

அதே போல் ஒரு நாள்..

நடந்த வாட்ச் காலண்டர் பற்றிய
உரையாடல்...இதோ...

காலை:11:30 இடம்:பரத் வீடு

பரத்: நீ இயேசு கிறிஸ்துவை பத்தி என்ன நெனக்கிற ?

பிரவீன்: இயேசுவா அவர் ஒரு மத
தலைவர்டா.....ஒவ்வொரு மதத்துக்கும்
ஒவ்வொரு தலைவர் இருக்கிறங்கள
அதே மாதிரி கிறிஸ்தவ மதத்துக்கு இயேசு தலைவரு...

பரத்:(சிரித்தபடி)
இயேசு ஒரு மத தலைவர் இல்ல நண்பா அவர் வானத்தையும் பூமியையும் சகலத்தையும் உன்னையும் என்னையும் படைத்தவர்டா...
நாம்ம கண்காளால் பார்க்கிற மற்றும்
கண்களால் பார்க்க முடியாமல் இருக்கிற எல்லா படைப்புகளும் அவரால் அவருடைய
வார்த்தையால்... உண்டாக்கப்பட்டது...

இயேசு மத தலைவரா ?!
அவர் மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்டா அவர் தான் உண்மையான தேவன்

பிரவீன்: என்னாது ? இயேசு வானத்தையும் பூமியையும் உன்னையும் என்னையும் படைத்த
தேவனா ?
நீ நல்லா எதுகை மோகனையா
எடுப்பா பேசுறடா...ஆனா அதல்லாம்
உண்மை இல்ல...இந்த கட்டுக்கதை
காம்மிக்ஸ்ல வர்ற கார்ட்டுன்
கதையெல்லாம் என்னாய மாதிரி
பகுத்தறிவாளர்கள் நம்பவே
மாட்டாங்க..பாஸ்...

இயேசு கிறிஸ்து தான்
தேவனா ? அப்ப மத்த மத கடவுள்கள்
எல்லாம் என்ன சாத்தானா ?

இங்க பாரு பரத் இந்த உலகத்துல பல
கடவுள் நம்பிக்கை கொள்கைகள் இருக்கு அவுங்கவங்க தன் மதத்தோட கடவுள்தான் உண்மையான கடவுள்னு
சொல்லுறாங்க அதே மாதிரி தான்
கிறிஸ்தவங்களும் இயேசு தான் உண்மையான கடவுள்னு சொல்றாங்க...

இப்ப நீயும் சொல்ல ஆரம்பிச்சுட்ட...
எப்படியோ கெட்டு நாசமா போடா...
ஆனா எனக்கு எந்த கடவுள் மேலயும் நம்பிக்கை வராது ஏன்னா கடவுள்னு ஒருத்தர் இல்லயே அப்பரம் எப்படி வரும்....

பரத்: பல கடவுள் எல்லாம் இல்ல பிரவீன் தேவன் ஒருவரே, அவரை அணுக அவரே ஏற்படுத்தி
வைத்திருக்கும் ஒரே வழி அவருடைய ஒரே குமாரன் இயேசு கிறிஸ்து,
இது மாற்றவே முடியாத ஒரே
வழி மறுக்கவே முடியாத ஒரே சத்தியம்...

எற்றுக்கொண்டாலும்
ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இயேசு
இல்லாம இல்லை நித்திய ஜீவன்..
இது தான் மெய்யான நித்திய சத்தியம்..

பிரவீன்:ஏன்டா டேய்... நீ ஒருத்தன்
சொல்றதுனால இது எப்படிடா
உண்மையான சத்தியமுனு ஆகும் ?

பரத்: நான் ஒருத்தன் மட்டும் இல்ல பாஸ் இந்த உலகத்துல இருக்கிற
பெரும்பான்மையான மக்களின்
தொகுப்பு என்னோடு கூட சேர்ந்து இது
தான் சத்தியமுன்னு சொல்றாங்க
அது உனக்கு தெரியுமா ?

பிரவீன்: அது எப்புடிடா?

பரத்: இந்த உலகத்துலயே
பெரும்பான்மையான மக்கள்
கிறிஸ்தவங்க தாம்பா... நான்
சொல்றததான் அவங்களும்
சொல்றாங்க..

பிரவீன்: நெனச்சேன்டா நீ இந்த மாதிரி
தான் பேசுவேனு .. ஏன்டா இப்படி முட்டள்
மாதிரி பேசுற...அது எப்படிடா சகலமும்
தேவனோட வார்தையால உண்டாகும்? உன் பைபிள் கோட்பாடு கொஞ்ஜமாவது நம்புற மாதிரியா இருக்கா?

தம்பி பரத்து நீ இன்னும் வளரனும்...நீ ஒரு படிச்ச முட்டாள்னு நிரூபிச்சிட்ட
பார்த்தியா.....

*பல கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி சுழன்று கொண்டு இருந்த வாயு கோளத்துல இருந்து தான் எல்லா கிரகங்களும் வந்தது அதுல நம்ம பூமியும் ஒன்னு பிறகு உயிரினங்கள் தோன்றின..எல்லாம் பரிணாம
வளர்ச்சியின் மூலம் படிப்படியா..வந்தது..
யாரும் வந்து எவற்றையும் வார்த்தையாலயோ கீர்த்தயாலயோ... படைக்கல பாஸ் எல்லாமே
தானாக உண்டாக்கிடுச்சு....

இது தான் சரியான கோட்பாடு.. உனக்கு இதல்லாம் சொல்லி புரிய வைக்க வேண்டிய தேவை இல்ல ஏன்னா..உனக்கு..சார்புக் கோட்பாடு
(General Theory of Relativity) அண்டவியற் கொள்கை (Cosmological Principle)பெரு வெடிப்புக் கோட்பாடு
(Big-Bang Theory).. இதேல்லாம் என்னைய விட உனக்குத்தான் நல்லா தெரியும் அப்படி இருந்த நீ இப்ப ஏன் பைபிள் தியரியை தூக்கி
பிடிச்சுகிட்டு இருக்குறேனு எனக்கு புரியல...டா... ஏன்டா..?

(இவ்வாறு பிரவீன் பேசிக்கொண்டு
இருக்கையில் பரத் பிரவீனின் வாட்ச்சை உற்று பார்த்துக்கொண்டே)

பரத்: நண்பா பிரவீன் நீ படைப்புகளை வச்சு எது சரியான தியரினு பார்த்து
சொல்றதுக்கு முன்னாடி உன் கையில்
கட்டிருக்குற வாட்ச்ச பார்த்து இப்ப
சரியான டைம் என்னானு சொல்லு...

பிரவீன்: நீ தான் வாட்ச் கட்டிருக்கிரியே
அப்பரம் எதுக்கு என்னட்ட டைம் கேட்குற ?

பரத்: காரணம் இருக்கு நண்பா
மொதல டைம்ம சொல்லு...

பிரவீன்: இப்ப சரியா மதியம்12:05 ஆகுதுடா

பரத்:(தன் மெபைலை எடுத்து கூகுள் சர்ச்சில் பார்த்தபடி)

நீ சொன்ன டைம் தப்புடா இப்ப
சரியான இந்தியன் டைம் காலை
11:45...ஆனா நீ மதியம் 12:05
சொல்ற?
நீ சொல்றதுனால இப்ப இங்க
மதியம் 12:05னு ஆயிடுமா ?

நீ ஏதோ தவறான டைம் ஓடுன கிலாக்க
பார்த்து அது தான் சரியான டைம்முனு
அப்படியே நம்பி உன் வாட்ச்சுல அந்த
தவறான டைம்ம செட் பண்ணி இருக்குற...

பிரவீன்: அப்படியா! அட ஆமா.. !

பரத்: இங்க பாரு பிரவீன் சரியான டைம்
தெரிஞ்ஜதும் தான் உன் வாட்சுல
செட் பண்ணி இருக்குறது தப்பான
டைம்முனு உனக்கு தெரியவந்தது .. அதே மாதிரி தான் நானும் உண்மையான படைப்பு
கோட்பாட்டை என் அறிவாலும் சிந்தனையாலும் நன்றாக பகுத்தறிந்து கண்டுபிடிச்சுடேன்

அப்பரம் எது போலியினு தெரிஞ்சிருச்சு
பொய்யான கோட்பாடுகளை தூக்கி
எறிந்து விட்டு உண்மையான பைபிள் கோட்பாட்டை தூக்கி பிடித்து கிட்டு
உன் கூட மெய்யான சத்தியத்தை பேசிக்கிட்டு இருக்கிறேன்

பிரவீன்: (சிரித்தபடி)ஆமா இவரு பெரிய
சந்திராயன் சயன்டிஸ்டிடு... அப்புடியே
உண்மைய கண்டுபிடிச்சு அதை செயற்கை கோள்ள வச்சு பரலோகத்துக்கு அனுப்ப போறாரு....
எதுவும் பேசாத பைபிள்ள இருந்து நான்
தெரிஞ்சுகிற வேண்டியது ஒன்னும் இல்ல...

பரத்: இல்ல பிரவீன் நீயும் நானும் ஏன் இந்த உலகத்தில் உள்ள எல்லாரும் கண்டிப்பாக தெரிஞ்சிக்க வேண்டிய எல்ல விசயங்களும் பைபிள்ள மட்டும் தான் இருக்குது... சரி இப்ப கதைக்கு
வர்றேன்.. பிரவீன்..

உன் வாட்சுல செட் பண்ணி இருக்குற
டைம் சரியா? தவறான்னு?
தெரிஞ்சிக்கிடாம இவளவு நாளா நீ இது தான் சரியான டைம்முனு நம்பி இருந்துறுக்க..

அது மட்டுமா..

நிச்சயமாக எங்கயாவது யாராவது
அவசரமா வந்து உன்கிட்ட டைம் என்னானு கேட்டுருப்பாங்க ரைட்டா ?

பிரவீன்:ம்ம்ம்.....

பரத்: ஆனா நீ உன் வாட்சுல காட்டுற
தப்பான டைம்ம சொல்லி அவங்கள
நம்ப வச்சி பலரை குழப்பிருப்ப... சிலரை இடறல் அடைய வச்சுருப்ப..
 இது கண்டிப்பா நடந்துருக்கும்

தேவன் இல்லைனு எவனோ ஒருத்தேன் ஆரம்பிச்சு விட்ட கட்டு கதைய அப்படியே நம்பி... அவர் இருக்கிறாரா ? இல்லையானு?

கண்டுபிடிக்கிற முயற்சியில இறங்காம நீ எப்படி தேவன் இல்லைன்னு தீர்கமான முடிவுக்கு வந்தேனு எனக்கு தெரியல...

நீ எதையும் முழுசா தெரிஞ்சுக்கிடாம..அறைகுறைய
அறிஞ்சுகிட்டு...தவறானதை சரினு முடிவு செஞ்சு மத்தவங்களையும் இடறல் அடைய வச்சுக்கிட்டு இருக்குற..

தவறான வழியை சரியான வழின்னு நம்பிக்கிட்டு நடந்துகிட்டு
இருக்குற..

உண்மையானதை
கண்டுகொள்ளும் போது
பொய்கள் எல்லாம் ஒடிவிடும்..

பகுத்தறிவை பத்தி பரவசாமா பேசும் நீ எது உண்மையான சத்தியமுனு கொஞ்ஜம் பகுத்து ஆராய்ந்து கண்டுபிடி..

பிரவீன்: (கோபமாக)
டேய் ஒரு வேளை நான் உன்ன மாதிரி பைபிள் படிக்கிற..வெட்டி பயளா இருந்தா நீ சொன்ன மாதிரி உண்மையான சத்தியத்தை கண்டுபிடிக்க போகலாம் ஆனா
அத விட எனக்கு இங்க நெறய வேலை
இருக்குடா கிறுக்கு.. மங்கூஸ் மண்டயா
நீ என்ன தான் கடிகார முள்ளு மாதிரி சுத்தி சுத்தி வந்து பேசுனாலும் நான் கடவுள் மறுப்பு கொள்கையில இருந்து பின் வாங்க போறது இல்ல..

பரத்: (சிரித்த படி)

நீயும் என்ன எவ்வளவு கேவலமா திட்டி
பேசுனாலும் உனக்கு சுவிசேசம்
சொல்ற வேலையில் இருந்து நான் பின்
வாங்கப்போறது இல்ல நண்பா... சரி இங்க பாரு இப்ப எனனோட வாட்சுல சரியா செட் பண்ணியிருக்கிற நேரம் 12:00Pm, தேதி 16 ,மாதம் Jan அப்படினு காட்டுது சரியா ?

பிரவீன்: டேய் இன்னம் நீ இந்த வாட்சு கதைய விடலயா.. போதும்டா.. மண்டயகாய வைக்காதா...

பரத்: டேய் ஜஸ்ட் சிம்ப்புலானா விசயத்தை சொல்றதுக்கு உனக்கு என்னா? சொல்லுடா

பிரவீன்: (சலிப்புடன்) உன் வாட்சுல
எல்லாம் சரியா தான்டா கட்டுது...

பரத்:(சிரித்தபடி)
சரி ஓகே.. இப்ப என் வாட்சுல மாதம் ,தேதி,நேரத்தை...
 Dec 18.. 3:45 Am னு செட்
பண்ணிட்டேன்..

உன் வாட்சுலையும் அதே
மாதிரி செட் பண்ணிடு அப்பரம் இந்த
ரூம்ள இருக்கிற கடிகரம் மற்றும் காலண்டர் என எல்லாத்தையும் இதே மாதிரி கால வரிசையில் மாத்தி வைச்சுடுவோம் அப்படி நம்ம
எல்லாத்தையும் மாத்தி வச்சுட்டா...இப்ப
இங்க.. டிசம்பர் 18 , 3:45 Am,னு சூழ்நிலை மாறிடுமா ?

பிரவீன்: டேய் இது என்ன Iq டேஸ்டு
கொஸ்டீனா? இந்த மாதி
சின்னபுள்ளத்தானமான
கேள்வியெல்லாம் எதாவது Lkg ukg
படிக்கிற சின்னப்புள்ளைங்கட்ட போய் கேளு..அவங்க உன்னய விட அறிவா பேசுவாங்க தெளிவாவும் பதிலும்
சொல்லுவாங்க....

அப்பரம் நீ என்னோட பகுத்தறிவுக்கு ஏத்த மாதிரி நல்லா பதமான
கொஸ்டீன் ஏதாவது இருந்த மட்டும்
கேளு நான் பதில் சொல்றேன்....

இந்த சில்லித்தன கொஸ்டீனுக்கு நான்
பதில் சொல்ல மாட்டேன்..

பரத்:(சிரித்தபடி)

ஹலோ... மிஸ்டர்.பகுத்தறிவு பக்கோடா..இது உனக்கு ஏத்த பதமான
கொஸ்டீன் தான் இதுக்கு மோதல
பதில் சொல்லு.. இதோட பதம் போகப்போக உனக்கே புரியும்

பிரவீன்: சரி சரி சொல்றேன் நீ
சொல்ற மாதிரி கடிகாரத்தையும்
காலண்டரையும் மாத்தி வெச்சா
ஒன்னும் ஆக போறது இல்ல சரியான
நேரத்தையும், காலத்தையும் ,
கடிகாரத்தை நம்பியோ காலண்டரை நம்பியோ துள்ளியமாக சொல்ல முடியாது..

தெளிவா சொல்லனும்னா
காலநிலையை வச்சுதான் சொல்ல
முடியும்..

பரத்: எப்படி ?

பிரவீன்:
*அதாவது நேரம் என்பது கடிகாரத்தை
அடிப்படையா வைச்சு செயல்படுவது
கிடையாது அது பூமி தன்னை தானே சுற்றி வரும் காலத்தை வைச்சு செயல்படுகிறது...

*எப்படினா... பூமி தன்னை தானே சுற்றி வர சாராசரி 24 மணி நேரம் ஆகும்.. அதுல பகல் 12 மணி நேரம் இரவு 12 மணி நேரம்..

* இதை வச்சு தான் உலகத்தில் நேரத்தை கணக்கிடப்படுகிறோம்

*அது மட்டுமல்ல சரியான மாதமும்
பருவகாலமும் காலண்டரை அடிப்படையா வச்சு செயல்படுவது இல்ல... அது பூமி சூரியனை சுற்றி வரும் காலத்தை அடிப்படையா
வச்சு செயல்படுகிறது..

*அதாவது பூமி சூரியனை சுற்றி வர
சாராசரியாக 365 நாட்கள் ஆகும்
அதைத்தான் நாம் ஒரு வருடம் என்றும்
பருவகால மாற்றங்களை குறிக்க மாதங்கள் என்றும் கணக்கிடுகிறோம்..

பரத்: ஓகே.. அப்படினா பூமி தன்னை தானே சுற்றி கொள்ளும் காலத்தை( 24hours) அடிப்படையாக வச்சுத்தான் உலகத்தில்
கடிகாரமே உருவாக்கப்பட்டிருக்கு சரியா ?

பிரவீன்: ஆமா சரி தான்

பரத்: அப்பரம் பூமி சூரியனை சுற்றி வர ஆகும் காலத்தை (365Days) அடிப்படையா வச்சுத்தான் இந்த உலகத்தில் காலண்டரே
உருவாக்கப்பட்டிருக்கு சரியா ?

பிரவீன்: ஆமாடா சரி தான்

பரத் :சரி இப்ப நல்லா யோசித்து பதில்
சொல்லு பிரவீன் இந்த உலகத்துல
மனித இனம் பயன்படுத்தும் கடிகாரங்களும் காலண்டர்களும் தன்னைத்தானே உருவாக்கி
கொண்டதா ?

பிரவீன்: தன்னைத்தானேவா? லூசு மாதிரி கேட்கிறேயேடா...அது எப்படிடா தன்னைதான் உருவாக்கி கொள்ள முடியும் ?
அது மனிதானால் உருவாக்கப்பட்டது

பரத்: சரி.. அப்படினா அந்த
கடிகாரங்களையும், காலண்டர்களையும்
வடிவமைத்து உருவாக்கிய ஒருவர் இருக்கிறார் என்பதை நீ ஒத்துக்கிறியா ?

பிரவீன்: ஒத்துக்கிறேன் யாருமே இல்லாம கடிகாரமும் காலண்டரும் எப்படி தானாக உருவாக்கி கொள்ள முடியும் அதை ஒருவர் வடிவமைத்து உருவாக்கி இருக்கிறார்

பரத்: குட்.. இப்ப நான் கேட்கிறதுக்கு
கொஞ்ஜம் உன் பகுதாதறிவால்
நல்ல பகுத்து ஆராய்ந்து பார்த்து பதில்
சொல்லு......

*இந்த உலகத்திலுள்ள எல்லா
கடிகாரங்களையும் நிர்வாகிக்கிற பூமி
எவ்வளவு பெரிய கடிகாரம்? அது
தன்னைத்தான் சுழல்வதை வச்சுத்தான் நேரமே கணக்கிடப்படுது..
என்னா ?

பிரவீம்: ஆமா..

பரத்: கொஞ்ஜம் ஆழ்ந்து
சிந்தித்துப்பார்... பிரவீன்..

*இந்த உலகத்தின் காலநிலை மற்றும் பருவநிலை।மாற்றங்களை நிர்வாகிக்கிற இந்த சூரிய
குடும்பம் எவ்வளவு பெரிய காலண்டர்?
என்னா ?

பிரவீன்: ஆமா...

பரத்:
* இந்த உலகத்துல இருக்கிற தம்மாத்துண்டு கடிகாரமும் காலண்டரும் யாருடைய ஆளுகையும் உருவாக்கமும் இல்லாமா
தன்னைத்தான் உருவாக்கி கொள்ள
முடியாத போது..

*இந்த உலகத்தின் எல்லா கடிகாரங்களின் நேரத்தை நிர்வாகிக்கிற நம்ம பூமி.....
எவ்வளவு பெரிய கடிகாரம் ?

*இந்த உலகத்தின் காலநிலை மற்றும்
பருவநிலைகளை நிர்வாகிக்கிற சூரிய குடும்பம்.....
எவ்வளவு பெரிய காலண்டர் ?

*இவைகள் மட்டும் யாருடைய ஆளுகையும் உருவாக்கமும் இல்லாமா எப்படி தன்னைதான் உருவாக்கி கொள்ள முடியும் ? பதில் சொல்லு நண்பா எப்படி முடியும் ?

பிரவீன் : (சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் மௌனமாக யோசித்து பார்த்த பிறகு)

ஆமா பரத் எதுவும் தானாக
தன்னைத்தான் உருவாக்கி கொள்ள
முடியாது ஏன்னா எல்லாத்துக்கும் ஓரு
ஆரம்பம் இருக்கும்..

பரத்: நீ சொன்னது நூற்றுக்குநூறு
உண்மை பிரவீன் எல்லாப்படைப்புகளுக்கும் ஒரு
ஆரம்பம் இருக்கு

*பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சுழன்று கொண்டிருந்த வாயுக்கோளத்திலிருந்து
தான் எல்லா கோள்களும் வந்ததுனா அந்த வாயுக்கோளம் எங்கிருந்து வந்தது ?
பதில் சொல்லு

பிரவீன்: தெரியலப்பா..

பரத்:
*ஆரம்பம் என்று ஒன்று இருந்தா அதை
ஆரம்பித்தவர் நிச்சயமாக இருந்தே ஆக
வேண்டும்.. நண்பா...என்ன
சொல்ற?

பிரவீன்:(ஒன்றும் பேசாமல் அமைதியாக)ம்ம்ம்..

பரத்:
*24 மணி நேரத்திற்கு ஒருமுறை தன்னைத்தான் சுற்றும் பூமி...

*இரவு,பகல்,பருவகாலங்கள், பாதை
மாறாமல் குறிப்பிட்ட பாதையில் ஓடும்
கோள்கள் என எல்லாம் ஒரு திட்டத்தை
காட்டுகிறது...

*இப்படி ஒரு திட்டம் இருந்தாதுனா இவைகளை திட்டமிட்டவர் நிச்சயமாக இருந்தே ஆக வேண்டும்...
என்ன சொல்ற பிரவீன்?

பிரவீன்:(ஒன்றும் பேசாமல் அமைதியாக) ம்ம்ம்ம்...

பரத்: கொஞ்ஜம் சிந்தித்து பார்
நண்பா..

*மேலே எறிந்தால் பூமியை நோக்கி விழும் பொருள், நிறமில்லாவாயுக்கள்,
விதைக்கப்படும் விதை மாறாமல் முளைத்தல், மரங்கள் வெளியிடும் பிராண வாயு ,நீரில் மட்டும் வாழ்வன, நிலத்தில் மட்டும் வாழ்வன என எல்லாம் ஒரு சட்டத்தை
காட்டுகிறது..

*இப்படி ஒரு சட்டம் இருக்குதுனா அந்த
சட்டத்தை உருவாக்கியவர் நிச்சயம்
நிச்சயமாக இருந்தே ஆக வேண்டும்...

தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லி
கொள்கிறான்(சங்கீதம்14:1)
பரிசுத்த வேதாகமம்

*இந்த அண்ட சாராசரத்தில்
காணப்படுகிறவைகள், காணப்படாதவைகள் என எல்லாம் தேவனுடைய வார்த்தையால்
உண்டாக்கப்பட்டது

*சகலமும் அவருடைய வல்லமையுள்ள
வார்த்தையால் நிலைபெற்று நிற்கிறது...

*அவர் சொல்ல ஆகும் அவர்
கட்டளையிட நிற்கும் அவருடைய மாக பெரிய ஞானத்தையும்,வல்லமையும்,
அளவிடவே முடியாது...

*தேவனை பற்றி சிந்தனையின் முடிவில் மனிதன் அறிவுப்பூர்வமான அதிர்ச்சி அடைகிறான்...

*விண்வெளிக்கு சென்ற முதல்
மனிதர்கள் சந்திரனில் தரை இறங்கியவுடன்...விண்வெளி மண்டலத்தையும்,
நட்சத்திரக்கூட்ங்களையும்
உற்று நோக்கியபடி பரிசுத்த வேதாகமத்தை எடுத்து
சங்கீதம்8:3-4 வசனங்களை வாசித்தார்கள்
உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும்,
நீர் ஸ்தாபித்த சந்திரனையும்
நட்சத்திரங்களையும் நான் பார்க்கும் போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும்,மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
சங்கீதம் 8 :3-4
என்று தேவனை புகழந்தார்கள்

பிரவீன்: நண்பா நீ சொன்ன
அறிவுப்பூர்வமான எல்லா கருத்துக்களையும் நான் ஏத்துக்குறேன் ஆனா... என்னால தேவன் இருக்கிறார் என்பதையும் அவரால் தான் எல்லாம் படைக்கப்பட்டது என்பதையும்
இன்னும் என்னால முழுசா
ஏத்துக்கொள்ள முடியல...

பரத்: சரி இப்ப இந்த கொஸ்டீனுக்கு
பதில் சொல்லு

* உன் கண்ணுக்கு முன்னாடி இந்த
உலகத்துல இதுக்கு முன்னாடி யாருமே
அறியாத... யாருமே பார்த்திடாத...
யாருமே உபயோகித்திடாத.. ஒரு இயந்திரம்(மெசின்) இருக்குதுனு வச்சுக்க

பிரவீன்:சரி

பரத்: உனக்கு அந்த இயந்திரத்தை பத்தி ஒன்னும் தெரியாது

பிரவீன்: ஆமா அதை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது

பரத்: ஆனா அந்த இயந்திரத்தை நீ தான் இயக்கி செயல்பட வைக்கனும்...
அப்படி இருக்கும் போது..

அந்த இயந்திரத்தை இயக்கும் முறையை நீ யாருட்ட கேட்டு தெரிஞ்சுகிடுவ ?

பிரவீன்: (சிறிது நேர யோசனைக்கு பிறகு)
அந்த இயந்திரத்தை உருவாக்கியவரிடம் இருந்து தான் தெரிஞ்சிக்கிடனும்...

பரத்: அது எப்படிப்பா பிரவீனு இந்த
உலகத்துல யாருமே அந்த இயந்திரத்தை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்ல யாருக்குமே அதை பற்றி ஒன்னும் தெரியாது...

யாருமே அதை உபயோகித்ததும்
இல்ல அப்படிப்பட்ட ஒரு இயந்திரம் முதல் முறையா உனக்கு முன்னாடி இருக்கு..

நீதான் அதை மொதல பர்க்குற.. அப்பரம் எப்படி அந்த இயந்திரத்தை ஒருவர் உருவாக்கிஇருக்க முடியும்?

அது தானாக உருவாகி
இருக்ககூடாதா ?

பிரவீன்: (அமைதியாக)
இல்ல பரத்து தானாக அது எப்படி
உருவாக்கி கொள்ள முடியும்?

அது என் கண்ணுக்கு முன்னாடி ஒரு
இயந்திரமா இருக்குதுன்னா அதை
இயந்திரமா வடிவமைத்து உருவாக்கியவர் நிச்சயம் இருந்து தான் ஆக வேண்டும்..

பரத்:(சிரித்தபடி) இப்ப புரியுதா பிரவீன் எந்த ஒரு படைப்புக்கு பின்னும் அதை வடிவமைத்து உருவாக்கியவர் நிச்சயம் இருந்தே ஆக வேண்டும் இதை நீ உன் முழு மனதுடன் ஒத்தக்கிறியா?

பிரவீன்: ஒத்துக்கிறேன் நண்பா தேவன்
இருக்கிறார் அவராலே எல்லாம்
படைக்கப்பட்டது இதை என் முழு மனதுடன் ஏத்துக்கிறேன்...

பரத்: தேவனுக்கே மகிமை இயேசுவுக்கே புகழ்...

பிரவீன்: பரத் எனக்கு இப்ப இயேசு கிறிஸ்துவை பற்றி நெறய தெரிஞ்சிகிடனும்னு ஆர்வமா இருக்குடா...ஆனா இப்ப டைம்
ஆகிடுச்சு நான் வீட்டுக்கு கிழம்புறேன்..

நாளைக்கு ஈவினிங் மீட் பண்ணுவோம் ஓ.கே வா ?

பரத்: கண்டிப்பா மீட் பண்ணுவோம்.. டா..
நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு
கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியை உனக்கு அறிவிக்க நானும் அதிக ஆர்வமா இருக்கேன்..
மீண்டும் சந்திப்போம்


ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

Marvel Jerome

No comments:

Post a Comment