இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மக்களுக்கு அறிவிக்கும் ஊழியர்களே !
உனது ஊழியத்தில் மதவாத மரண சக்தியின் கூட்டத்தால் எதிர்ப்பு எழும்போது தைரியத்தோடும்
திடனோடும் இரு.....
நீ ஜீவ(இயேசு) சக்தியை அறிவிக்கிற கூட்டம், ஜீவனை மரணம் எப்படி ஜெயிக்க முடியும் ?
ஒளியை இருள் எப்படி வெல்ல முடியும் ?
அஞ்சாதே பயப்படாமல் தைரியமாக சத்தியத்தை எடுத்து மக்களுக்கு போதி
கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் பலரால் பகைக்கப்படும் போது,
சுவிசேஷத்தை எதிர்க்கிறவர்களால்,
நீ எல்லா பக்கங்களிலும், நெருக்கப்பட்டும் போது,
நீ மனமுடைந்து பெலன் இழந்து உன் சுவிசேஷ வேலையை மட்டும் நிறுத்திவிடாதே...
ஏற்கனவே தோன்றுப்போன பிசாசிடம் வம்படியாக போய் உன் வெற்றியை அவனிடம் விற்று விடாதே...
அற்ப பிசாசை ஆண்டவனாக கொண்ட, அந்த சொற்ப மாமிச பலம் கொண்ட, மதவாத மனிதர்களிடத்தில் போய்,
தேவனுடைய ஆவியின்
பலம் பெற்ற நீ போய் பயந்து பின்வாங்கலாமா !?
நீ வேதத்தை பிரசங்கிக்கும் போது உலகமே உன்னை எதிர்த்து நின்றால் கூட நீ யாருக்கும் அஞ்ஜக்கூடாது...
வெறும் உடலை மட்டும் அழிக்க கூடிய மதவாத மனிதர்களின் மிரட்டலுக்கு பயந்து உன் ஊழியத்தின் வேகத்தை நீ குறைக்ககூடாது...
சரிர மரணம் ஒன்றும் நித்திய மரணம் அல்ல...கிறிஸ்துவின் மரணத்தை நீ உன் சரிரத்தில் சுமப்பதனால்
மரணம் உனது வாழ்வின் முடிவல்ல...
நீ தைரியத்தோடு நிற்க வேண்டும்...
என் அன்பு சகோதர சகோதரியே,
தேவனுடைய அனுமதி இல்லாமல் ஒருவனும் உன்னை தொடக்கூட முடியாது
உலகத்தில் இருக்கிறவனை காட்டிலும் உனக்குள் இருக்கிறவர் மிகவும் பெரியவர் என்பதை உன் இருதயத்தில் என்றும் நினை....
அண்ட சராசரத்தையே தன் வல்லமையான வார்த்தையால் தாங்குகிற தேவாதி தேவனாகிய நம்முடைய கர்த்தருக்கு யார் இணை?...
இடுக்கமான நேரத்தில் உன்னை எல்லா தீங்கிற்கும் விலக்கி காக்கும் ராஜாதி ராஜாவாகிய அவரே உனக்கு என்றும் துணை...
கிறிஸ்துவின் நிமித்தம்
உன்னை எதிர்ப்பவர்கள் எண்ணிக்கையில் எத்தனை பேர் இருந்தாலும் பரவாயில்லை....
அவர்களை விட உனக்குள் வாசமாய் இருக்கிற வானத்தையும் பூமியையும் படைத்த தேவன் இலக்கங்களின் எண்ணிக்கையில் அடங்கா ∞ மடங்கு பெரியவர்
அவருக்கு மேல் ஒருவரும் இல்லை அவர்தான் எல்லாம்,வானத்திலும் பூமியிலும் அவருக்கு அஞ்சாத ஒருவரும் இல்லை அப்பேர்பட்ட தேவனுடை ஐனமாகிய நீ அற்ப பிசாசின் மதமாத போக்கிற்கு
போய் பயப்படலாமா !?
மனிதனை தந்திரமாக ஏமாற்றி
இந்த பூமிக்கு அதிபதியாகிய
திருட்டன் பிசாசு
அக்கினி கடலில் தள்ளப்பட்டு அழிக்கப்பட போகிறான்
அந்த பெய் சொல்லி புளுகுன்னிகாரனின் போலியான அநித்திய வல்லமையைக்கண்டு...
தாமாய் தெடக்கமும் முடிவும் இன்றி அநாதி காலமாய் அண்ட சராசரங்களுக்கு ஆண்டவராய் இருக்கிற ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா வானத்திற்கும் பூமிக்கும் சொந்தக்காரராகிய ஜீவனுள்ள தேவனுடைய மக்களாகிய நீ எப்படி பயப்படலாம் !?
அண்ட சராசரத்தை ஒப்பிட்டும் போது இந்த பூமி கண்ணுத்தெரியாத தூசி....
நீ ஆரதிக்கிற தேவன் எப்படிப்பட்டவர் என்பதை மறுபடியும் நல்ல உட்கார்ந்து யோசி...
நீ எதற்கும் பயப்படாமல் துணிச்சலோடு போய் இயேசுவே ண்டவர் என்று எல்லா இடங்களிலும் அறிவி...
தேவன் யார் என்பதை அறியாமல் இருக்கிற எல்லோருக்கும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தைரியத்தோடு சென்று தெரிவி...
ஆமென்
ஜீவ வழி-LIVING WAY
www.facebook.com/lwcomm
No comments:
Post a Comment