Monday 16 November 2015

சக மனிதர்களிடம் ஜாதி பார்ப்பவன் கிறிஸ்தவனா ? பாகம் 1

சக மனிதர்களிடம் ஜாதி பாகுபாடு பார்க்கும் ஒரு கிறிஸ்தவ (அ)விசுவாசியை நம்ம பீட்டர் சந்திக்கிறார்

பீட்டர் : சக மனிதர்களிடம் ஜாதிபாகுபாடு பார்க்கிறீங்க,
 ஆனா உங்களை கிறிஸ்தவ விசுவாசினு சொல்லிக்கிறீங்க  எப்படிங்க பிரதர் ?

ஜேம்ஸ்: தம்பி உங்களுக்கெல்லாம் என்னா தெரியும் ?
நாங்களாம் பிறக்கும் போதே பூர்வீக கிறிஸ்தவங்க.
விசிவாசிகளாகவே வளர்ந்தவங்க.

பீட்டர்: (சிரித்தபடி)
எதை விசுவாசித்து வளர்ந்தீங்க பிரதர் !
தேவனுடைய ஆவியானவரினால் எழுதப்பட்ட வேதாகமத்தையா ?
இல்ல ஆரியர்களால் எழுதப்பட்ட வர்ண மனுதரும சாஸ்திரத்தையா ?

ஜேம்ஸ்: என்ன தம்பி லூசு மாதிரி பேசுறீங்க?
மனுதருமத்துக்கும் நம்ம கிறிஸ்தவத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்கு ? நான் பரிசுத்த வேதாகமத்தை விசுவாசித்து வளர்ந்தேன்

பீட்டர்: என்னங்க அண்ணா !
வர்ண மனுதரும சாஸ்திரத்துக்கும்
கிறிஸ்தவத்துக்கும் சம்மந்தம் இல்லைனு சொல்றீங்க !

ஆனா அதுல சொல்லப்பட
ஜாதிய தான் உங்க பெயருக்கு பின்னாடி போட்டுருக்கீங்க...
உயர்ந்தவன் தாழ்ந்தவனு பேசுறீங்க...
ஒரு சில மக்களை தாழ்ந்த ஜாதினு சொல்லி ஒதுக்குறீங்க...
மனுதருமத்துல சொல்லப்பட்டது போலவே நடக்குறீங்க...

கேட்டா நாங்க தான் பூர்வீக கிறிஸ்தவங்க, கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்ந்தவங்கனு வெட்கமே இல்லாம பொய் சொல்றீங்க !

நான் கேட்குறேன்
இப்படி சக மனிதர்களிடம் ஜாதி பாகுபாடு பார்க்கும்
உங்களுக்கும் கிறிஸ்தவத்துக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா ?

ஜேம்ஸ்: ?????????


(தொடரும்)

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

Marvel Jerome

No comments:

Post a Comment