Monday 16 November 2015

கர்த்தரே கடவுள்

கர்த்தரே கடவுள்

நீ வார்ப்பித்து உண்டாக்கிய வெள்ளியும் பொன்னும் கடவுள் இல்லை
வானத்தையும் பூமியையும் தன் வார்த்தையால் உண்டாக்கிய கர்த்தரே கடவுள்

உனக்கு நீயாகவே ஏதோ ஒரு சாயலாக உண்டாக்கின கல்லும் மண்ணும் கடவுள் இல்லை
உன்னையும் என்னையும் தன் சாயலாக உண்டாக்கின கர்த்தரே கடவுள்

நீ பல்லாகில் தூக்கி சுமந்து கொண்டிருக்கும்  சிலைகள் எதுவும்  கடவுள் இல்லை
உன் பாவங்களையும் சாபங்களையும் சிலுவையில் சுமந்து தீர்த்த கர்த்தரே கடவுள்

 பாலாலும் நெய்யாலும் நீ  அபிஷேகம் செய்வதெல்லாம் கடவுள் இல்லை
 தன்னுடைய பரிசுத்த ஆவியினால் உன்னை  அபிஷேகம் செய்கிற கர்த்தரே கடவுள்

உயிரை காவு வாங்குவதெல்லாம் கடவுள் இல்லை
உனக்காக தன் உயிரையே கொடுத்த கர்த்தரே கடவுள்

இறந்து அழிந்துபோன உன் மூதாதயர், முன்னோர்கள் யாரும் கடவுள் இல்லை
இந்த அண்ட சராசரத்தை படைத்து அதை நித்திய நித்தியமாக  ஆண்டுகொண்டிருக்கும்  ஆரம்பமும் முடிவும் இல்லாதவராய்   இருக்கின்றவராய் இருக்கிற கர்த்தர் ஒருவரே கடவுள்

ஆமென்

ஜீவ வழி-LIVING WAY

facebook.com/lwcomm

No comments:

Post a Comment