Tuesday 17 November 2015

பாவத்திற்கு மரித்து, நீதிக்கு எங்களை பிழைக்கவைத்தவரே !

தேவாதி தேவனே ராஜாதி ராஜனே !

பாவத்திற்கு மரித்து, நீதிக்கு
எங்களை பிழைக்கவைத்தவரே !

மாம்சிக காரியங்களுக்கு எங்களை மரிக்க செய்து......
 கிறிஸ்துவுக்குள் எங்களை மறுபடியும் பிறக்க செய்தவரே !

பழைய மனித சுபாவத்தை விட்டு "பிரித்து"
புதிய பரிசுத்த மனிதனை எங்களுக்குள் "தரித்து"
மகிமையின் மேல் மகிமை பெற்று...... எங்களை மறுரூபமாக நிற்க செய்பவரே !

நாங்கள் எப்படி மறப்போம் ? தேவனே உந்தன் அளவற்ற அன்பை......
இரத்தம் சிந்தி இரட்சிப்பை எங்களுக்கு  தந்திருக்கிறீரே !

நாங்கள் எப்படி இருப்போம் ? தாழ்த்தப்பட்ட நிலையில்......
கர்த்தாவை நீரே எங்கள் மேய்பராய் இருக்கிறீரே !

நாங்கள் எப்படி வெறுப்போம் ?
மற்ற மனிதர்களை......
உன்னை போல் பிறரையும் நேசி என்று உமது தேவ ரக அன்பையே எங்கள் உள்ளத்தில் ஊற்றியிருக்கிறீரே !

எப்படி அழைக்காமல் இருப்போம் ? உம்மை அப்பா பிதாவே என்று......
எங்களுக்குள் அடிமைத்தனத்தின் ஆவியை அகற்றி பரிசுத்த ஆவியை அளித்திருக்கிறீரே !

அப்பா பிதாவே!
நீர் எங்களை முன் குறித்து,அழைத்து,
நீதிமானாக்கியிருக்கிறார்
எங்களை மகிமைப்படுத்திக்கொண்டும் இருக்கிறீ்ர். இன்னும் மகிப்படுத்துவீர்

எங்களை அழைத்த நீர்  உண்மையுள்ளவர்.........

வெறும் சாதாரணமான காரியங்களை செய்யும் படி நீர் எங்களை அழைக்கவில்லை
"அசாதாரணமான" காரியங்களை
சாதாரணமான எங்களை கொண்டு
செய்யும்படி தேவாதி தேவனே !
நீர் எங்களை அழைத்திருக்கிறார்

இனி நாங்கள் உமக்கு என்றும் உண்மையுள்ளவர்களாக இருப்போம் !

உமது ஆலோசனையின் படிதான் நடப்போம் !

எல்லா இடங்களிலும் உமது நாமத்தின் மகிமைக்காக மட்டுமே உழைப்போம் !

உமது இரத்தினாலும்,வசனத்தினாலும் நாங்கள் எங்கும்
வெற்றி சிறப்போம் !

ஆமென்


ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm


No comments:

Post a Comment