Tuesday 17 November 2015

எந்த மதமும் மனிதனை இரட்சிக்க முடியாது

இயேசுவே மெய்யான தேவன் அவரே நித்திய ஜீவன்

எந்த மதமும் மனிதனை இரட்சிக்க முடியாது...இயேசுவால் மட்டுமே மனிதனை இரட்சிக்க முடியும்...

எந்த ஆன்மீக முயற்சியும் மனிதனின் ஆன்ம அழிவை தடுக்க முடியாது...
இயேசுவால் மட்டுமே தடுத்து மனிதனை மீட்க முடியும்...

எந்த பரிகாரமும் மனிதனின் பாவத்தை போக்க முடியாது...
இயேசுவால் மட்டுமே மனிதனின் பாவத்தை போக்கி அவனை பரலோகத்தில் சேர்க்க முடியும்...

இயேசு கிறிஸ்து ஒரு மதத்திற்கு உரியவர் அல்லஅவர் எல்லா மனிதர்களுக்கும் உரியவர்...

இயேசு கிறிஸ்து மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மெய்யான தேவனுடைய மகன்...

இயேசு கிறிஸ்து ஒரு ஆன்மீக தலைவர் அல்ல...
இந்த அண்ட சராசரத்தை படைத்து ஆண்டு கொண்டிருக்கும் உண்மையான ஆண்டவர்...

இந்த பூமிக்கு வந்ததாக சொல்லப்படும், பொய்யான அவதாரங்களில் இயேசு கிறிஸ்து ஒருவர் இல்லை...

மெய்யாகவே மெய்யாகவே இந்த பூமிக்கு வந்த ஒரே அவதாரம் இயேசு கிறிஸ்து மட்டும் தான்

இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் வந்து பிறந்த மனிதர்களில் ஒருவர் இல்லை, இந்த மண்ணுலகிற்கு மாம்சத்தில் வந்த ஒரே தேவன்...

என் அன்பு சகோதர சகோதரிகளே !இயேசு கிறிஸ்துவை உங்கள் ஆண்டவராக, இரட்சகராக ஏற்றுக்கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு உண்டாகும் நித்திய நன்மை.இது தான் உண்மை...இயேசுவை கடைசி வரைக்கும் ஏற்றுக்கொள்ளாத மனிதர்கள்,இந்த உலகைவிட்டு பிரிந்த பிறகு இயேசு தான் உண்மையான தேவன் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அதனால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை..அவர்கள் பூமியில் இருக்கும் காலத்தில் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காததால்அவர்களின் முடிவு கொடூரமான அக்கினி கடலும் முடிவில்லா நித்திய வேதனையும் தான்.எனவே உலகில் இருக்கும் போதே இயேசுவே மெய்யான தேவன் என்பதை நாங்கள் அறிவித்துக்கொண்டிருக்கிறோம்........................
இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுங்கள்...
இந்த பூலோகத்தில் பரிபூரண ஜீவன் நிறைந்த வெற்றி வாழ்வையும், முடிவில்லா பரலோக நித்திய வாழ்வையும் இலவசமாய் பெற்றுக்கொள்ளுங்கள்...

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

No comments:

Post a Comment