+++++++++++++++++++++++++++
சத்துருவின் சகல வல்லமைகளையும்,
நீங்கள் மேற்கொள்வீர்கள்,அவனால் உங்களை மேற்கொள்ள முடியாது,
அவனுக்கு,உங்களால் சேதம் உண்டாகும்,
ஆனால்,உங்களை எதுவும் சேதப்படுத்த முடியாது.ஏனென்றால் நீங்கள் அல்ல,
கிறிஸ்துவே உங்களுக்குள் வாழ்கின்றார்.
++++++++++++++++++++++++++++
பீட்டர்: பிள்ளைகளாகிய நாம்,மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, கர்த்தராகிய இயேசுவும் நம்மைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராக இந்த பூமிக்கு வந்து மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனையும் அவனின் கிரியைகளையும்,தமது கல்வாரி சிலுவை,மரணத்தினாலே அழித்து செயலற்று போக செய்து,பிசாசானவனை
இல்பொருள் ஆக்கி அவனின்
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு,வெளியரங்கமான கோலமாக்கி,அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
(எபி:2:14) (கொலோ2:15)
ஜான்: அவர் பெற்ற வெற்றி நாம் பெற்ற வெற்றியாகும்... இயேசுவின் நாமத்தை
நாம் பிரயோகிக்கும் போது பிசாசின் வல்லமைகள் நமக்கு கிழ்படிகிறது,அவர் நமக்கு சாத்தானின் சகல வல்லமையின் மீதும் அதிகாரம் கொடுத்து இருக்கிறார்...
அந்த இருளில் வல்லமைகள் நம்மை
சேதப்படுத்தமாட்டாது (லூக்கா 10:17,19)
ஜோசப்: ஏன் நம்மை சாத்தானின் வல்லமைகள் சேதப்படுத்த முடியாது?
பீட்டர்: ஏனென்றால்,இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக இரட்சகராக ஏற்றுக்கொண்ட நமக்குள் அவரே வாசமாயிருக்கிறார் அதனால்,எந்த சத்துருவின் வல்லமைகளும் நம்மை சேதப்படுத்த முடியாது.. இந்த சத்தியத்தை ஒரு விசுவாசி நம்பும்போது அது அவனுக்கு பலிக்கிறது...."கர்த்தரோடு இசைந்து இருக்கிறவன்,அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்"(1 கொரி 6:17)
ஜான்: அதோடுகூட நாம் இயேசுவினுடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.(எபே 5:30)
ஜோசப்: மொத்ததில் நாம் கிறிஸ்துவிலும்,கிறிஸ்து நம்மிலும் இருக்கிறார்.. இனி நாம் அல்ல, கிறிஸ்துவே நமக்குள் பிழைத்திருக்கிறார் (கலா 2:20)
எனவே தான்,இயேசுவின் நாமத்தை
நாம் பிரயோகிக்கும் போது பிசாசின் வல்லமைகள் நமக்கு கிழ்படிகிறது,
சாத்தானின் சகல வல்லமைகளை நம்மால் மேற்கொள்ள முடிகிறது, பிசாசின் வல்லமைகள் நம்மை
சேதப்படுத்த முடியவில்லை...
ஏனென்றால் வாழ்வது நமக்குள்,நாம்
அல்ல,இயேசுவே, நமக்குள் வாழ்கின்றார்
நான் சொல்வது சரியா?
பீட்டர்: 100% சரி ஜோசப்... நாம் கிறிஸ்துவோடும்,அவர் நம்மோடும் இசைந்து இருப்பதனால்,அவரின் அன்பை விட்டு நம்மை எந்த சக்தியாலும் பிரிக்கவே முடியாது... இயேசு கிறிஸ்து நம்மில் அன்புகூருகிறதுனாலே நாம் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய், இருக்கிறோம்(ரோமர் 8:36-37)
ஆமென்... அல்லேலூயா...
நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.(ரோமர் 5:10)
Bro:Marvel Jerome
Madudai - south India