Sunday 30 September 2018

வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்;இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.(ஏசாயா 8:20)

ஜான்: மனித வாழ்வில் இருக்கும் இருள்களை அகற்ற,தேவன் மனுக்குலத்திற்கு கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் பரிசுத்த வேதாகமம்.

பீட்டர்: ஆமா,ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை உள்ள எல்லா
வேதவாக்கியங்கள் அனைத்தும் இயேசுவைக்குறித்து சாட்சி
அளிக்கிறது,(யோவான் 5:39)

ஜான்: ஆமா இருளின் பிடியில்
இருக்கும் மனுக்குலத்திற்கு ஒளி
கொடுத்து அவர்களை பிரகாசிப்பிக்கிற
மெய்யான ஒளி இயேசு கிறிஸ்துவே (யோவான் 1:9)இருள் நிறைந்த இந்த
உலக வாழ்வில்,நம்மை பிரகாசிக்க செய்கிறவர் இயேசு கிறிஸ்து மாத்தரமே..( எபேசியர்5:14)

பீட்டர்: ஆமா,நண்பா! இயேசு கிறிஸ்து நமக்குள் இருந்து நம்மை பிரகாசிக்க
செய்ய விரும்புகிறார்,அதற்கு நம் ஒத்துழைப்புக்கொடுக்க வேண்டும்,

ஜான்: இன்று அனேகர் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகும்,அந்த மெய்யான ஒளியை தன்னகத்தே பெற்ற பிறகும்,
இருளான வாழ்க்கையில் அவர்கள் இருப்பதற்கான காரணம்,அவர்கள்
ஒளியை சரியாக  பயன்படுத்தவில்லை...
கையிலே வெண்ணையை வைத்துக்கொண்டு,நெய் தேடி
அலைவது போல்,இன்வெட்டரை
புல் சார்ஜின் வைத்துக்கொண்டு,பவர்
கட் ஆனதும்,அதை பயன்படுத்தாமல்
இருட்டு வீட்டில் இருப்பதுபோல்,
அனேக விசுவாசிகள் இயேசுவை
தங்கள் உள்ளத்துக்குள் பெற்றுக்கொண்டும்,
அவரின் வசனத்திற்கு செவிகொடுக்காமல்,
அவரின் உபதேசத்தை கவனிக்காமல்,
கண்ட கண்ட உலக காரியங்களுக்கு செவிகொடுத்து,தங்கள் வாழ்க்கையை இருளாக தாங்களே ஆக்குகிறார்கள்.

பீட்டர்: ஆமா நண்பா! பெற்ற ஒளியை பிரகாசிக்க செய்ய எண்ணெய் ஊற்ற வேண்டும்,அதே போல கிறிஸ்தவ
வாழ்வை பிரகாசிக்க செய்ய வசனத்தை கேட்கவேண்டும்.

ஜான்: ஆமா,வேதத்தை கேட்க
கவனிக்க வேண்டும்,அதோடுகூட
அந்த வசனத்தின்படி பேசவும் வேண்டும்,அதைத்தான் வேதம்
நமக்கு போதிக்கிறது.......(ஏசாயா 8:20)
"வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்;இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை."

பீட்டர்: ஆமா,உலகத்தார்,இருளான காரியங்களிலிருந்தை விடுதலையாகி விடியற்காலத்து வெளிச்சத்தில்
பிரவேசிக்க வேண்டும் என்று,
விரும்புகிறார்கள்,அதேபோல் விசுவாசிகள்
விடியற்காலத்து வெளிச்சம் எப்போதுமே தங்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்,இவை இரண்டிற்கும் தேவன் தரும் தீர்வு
அவர்கள்,வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்
வார்த்தையின்படியே பேசவேண்டும்
அப்போது அவர்கள்,இருள் நீங்கி விடியற்காலத்து வெளிச்சத்தில்
நிலைத்து நிற்பார்கள்...

ஜான்: போராட்டம்,பிரச்சனை,என்கிற இருள் சூழ்ந்த நேரத்திலே,எனக்கு விடியற்காலத்து வெளிச்சம் வேண்டும் என்று விரும்புகிறவர்கள்,வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்
மற்றவைகளை கவனிக்க கூடாது..
தேளையும்,பாம்பையும் கண்டவுடன்,
உருட்டுகட்டையை நாம் தேடுவதுபோல்,
பிரச்சனை போரட்டம்,சோதனை,பாவ எண்ணம்,வியாதி,வறுமை,ஆகியவைகள் வந்தபோது,நாம் வேதத்தையும்,சாட்சி ஆகமத்தையும் தேட வேண்டும்.
அந்த இருளான காரியங்களுக்கு,
வேதத்தில் என்ன தீர்வு எழுதியிருக்கிறதோ அதை பேசும்போது,நமது வாழ்வில் விடியற்காலத்து வெளிச்சம் உண்டாகுகிறது.

பீட்டர்: ஆமென்... அல்லேலூயா...
ஆகவே.. நாம் வாரந்தோறும் சபையிலே கவனித்து  கேட்ட வேதாகம சத்தியங்களை,
அந்த வாரம் முழுவது நமது நடைமுறை வாழ்க்கையில் பேசுவோம்,அப்போது
நமது வாழ்விலும்,நமது வார்த்தைகளை கேட்கிறவர்கள் வாழ்விலும்,
விடியற்காலத்து வெளிச்சம் உண்டாகும் அது நிலையாக பிரகாசமாக இருந்து கொண்டே இருக்கும்..

ஆமென்... அல்லேலூயா...

முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.(எபேசியர் 5:8)


Saturday 29 September 2018

இருதயத்தில் விசுவாசித்து,
அதை வாயிலே அறிக்கை செய்

"கர்த்தராகிய இயேசுவை நீ உன்
வாயினாலே அறிக்கையிட்டு,
தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால்இரட்சிக்கப்படுவாய்.
நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்"

(ரோமர் 10: 9-10)

பரத்: கர்த்தராகிய இயேசுவை நம்  வாயினால் அறிக்கையிட்டு,தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று நாம் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்

பிரவீன்: ஆம் இயேசு கிறிஸ்து நமக்காக சிந்திய இரத்தத்தையும்,கல்வாரியில்
அவர் செய்த தியாகத்தையும், விசுவாசித்ததினாலும்,அதை அறிக்கையிட்டதாலும்,நாம்  நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.

பரத்: மனத்தில் நாம் விசுவாசிப்பதும்,அதை வாயினால் அறிக்கையிடுவதும் மிகவும் முக்கியமானதாக இருக்கு

பிரவீன்: ஆமா இந்த உலகத்துல ஏராளமானோர்,கிறிஸ்து நமக்காக கல்வாரியில் செய்துமுடித்த காரியங்களை  விசுவாசிக்காமல், அவைகளை நம்பி அறிக்கையிடாமல் அந்தகாரத்தில் இருக்கிறார்கள்,அவர்களில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர்களும் இருப்பார்கள்...இதுதான் வேதனை

பரத்: அவர்களுக்கும் நாம் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்..
அது நமது கடமை,இயேசு நமக்காக கொடுத்த விலைக்கிரயம் மிகவும் பெரியது, அளவிட முடியாதது. அவர் எல்லாவற்றையும் சிலுவையிலே செய்து முடித்துவிட்டார்.

பிரவீன்: ஆமா மனிதர்களை இறுகபிடித்து கொண்டிருக்கும் விடுபட முடியாத  பாவத்திலிருந்தும்,பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் சாபத்திலிருந்தும்,
வியாதியிலிருந்தும் எல்ல வகையான இருளின் ஆதிக்கத்திலிருந்தும்,
குறைபாட்டிலிருந்தும்,விடுவிப்பதற்கான தன் சொந்த இரத்தையே விலைக்கிரயமாக  செலுத்தி முடித்துவிட்டார்.
அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதை நம்பி,அதை அறிக்கையிடுவதே.

பரத்: ஆமா விசுவாசத்தின்
வெளிப்பாடு அதை அறிக்கை செய்வது,
இந்த செய்கைகள் ஒரு மனிதனை இரட்சிப்பை நோக்கி நடத்தும்,
அவனை நீதிமானாக ஆக்கும்

பிரவீன்: நாம் வெறுமனே விசுவாசிப்பது மாத்திரம் போதுமானதாக இருக்காது.
அதை அறிக்கையிடுவது மிகவும் அவசியமாயிருக்கிறது.நமது வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் வல்லமை வாய்ந்தது.
ஏனென்றால் நாம் தேவசாயலாக படைக்கப்பட்டிருக்கிறோம்..நமது
வாயின் வார்த்தைகளை குறித்து நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பரத்: ஆகவே, தேவன் கிறிஸ்துவுக்கள் நமக்கு தந்துள்ள எல்லா ஜீவனுள்ள வாக்குத்தத்தங்களையும் பெற்றுக் கொள்ள, நாம் அதை விசுவாசித்து, அவற்றை அறிக்கையிடுவது அவசியமாயிருக்கிறது. அவரது வார்த்தைகளும், வாக்குத்தத்தங்களும்,ஜீவனும்,
வல்லமையுள்ளது. மாறாதது.
எனவே, சூழ்நிலையை பார்க்காமல்,
அவர் கொடுத்த வாக்குத்தத்தை முழு நிச்சயமாய் நம்புவோம், அறிக்கையிடுவோம்.

ஆமென்... அல்லேலூயா...

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின்
கனியைப் புசிப்பார்கள்.
(நீதிமொழிகள் 18: 21)


என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.
(சங்கீதம் 71:21)

பீட்டர்: கர்த்தர் நம் மேன்மையை பெருகப்பண்ணி நம்மை தேற்ற சித்தம் கொண்டு இருக்கிறார்...

ஜான்: ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவை விசுவாசிக்கும் நம்மை,நிச்சயமாக மேன்மைப்படுத்துவார்,இன்று உலகம் நம்மை மேன்மை அற்றவர்களாக கருதலாம்,
ஆனால் எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் கூடிய கர்த்தருடைய கரம் நம்மீது இருப்பதால்,(1 நாளா29:12)
ஒரு நாள் நாம் இந்த உலகத்திலும் மேன்மையான,ஒரு நிலையில் இருப்போம்,கர்த்தரே நம்மை
அவ்வாறு ஆக்குவார்.எனவே நமது மேன்மைப்பாராட்டுதல்,கர்த்தரை
குறித்து மாத்திரமே இருக்க வேண்டும்,
(2 கொரி10:17)நாம் நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருக்க
வேண்டும் (கலா 6:14)

பீட்டர்: ஆமென் அல்லேலூயா.. நம்
தேவன் நம்மை மேன்மைப்படுத்துகிற தேவன் மாத்திரம் அல்ல, நம் தேவன்,
நமது மேன்மையை பெருகப்பண்ணுகிற தேவன்..(சங் 71:21)  நமது வாழ்வில்
நாம் எந்தந்த இடத்தில் மேன்மை இழந்து இருக்கிறோமோ!! அந்தந்த இடத்தில் எல்லாம் இழந்த மேன்மையை கர்த்தர் திருப்பி கொடுத்து அதை பெருகப்பண்ணுவார்..

ஜான்: ஆமா நாம் ஒரு சில நேரங்களில்,ஆவியானவரின் ஆலோசனைகளை கேட்காமல்,
மாம்சத்தில் நடந்து விழுந்துபோய்,
நம் மேன்மையை இழந்து போயிருக்கலாம்,
அல்லது,ஆவிக்குரிய மனநிலையோடு செயல்படாமல்,சுய விருப்பத்திற்கும்,
சுய சித்தத்திற்கும் இடம் கொடுத்து,
தவறிப்போய் நம் மேன்மையை இழந்திருக்கலாம்,கர்த்தர் நம்மை மேன்மையான ஸ்தானத்தில் வைத்திருக்க,நமக்கு தகுதி இல்லாத,
அற்ப காரியங்களுக்காக,மேன்மையை இழந்திருக்கலாம்,நாம் இப்போது எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் பரவாயில்லை,நாம் மனம் வருந்தி கர்த்தரிடத்தில் மறுபடியும் திரும்பி வருவோம் என்றால்,அவர் நம்மை மேன்மைப்படுத்தி பெருகப்பண்ணுவார்,

பீட்டர்: ஆமா! நாம் கர்த்தரிடத்தில் மறுபடியும் திரும்பி வரும்போது,இடிந்த வீட்டை மீண்டும்,திருப்பி எடுத்து கட்டுவது போல்,நமது இடிந்த மேன்மையை மீண்டும் அவர் எடுத்துக்கட்டி மேன்மை படுத்துவார்,நமது மேன்மையை பெருகப்பண்ணி நம்மை மறுபடியும் தேற்றுவார்.

ஆமென்... அல்லேலூயா...

கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. (நீதிமொழிகள் 15:33)


தேவனுடைய வார்த்தைகளின்
மீது,நாம் வைக்கும்,விசுவாசம்
நம்மால் பார்க்க முடியாதவைகளை,
பார்க்க வைக்கும்,இல்லாதவைகளை
இருக்கிறவைகளை போல
அழைக்கவைக்கும், அதரிசனமானவைகளை
நம்மை தரிசிக்க வைக்கும்..

இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு
(லூக்கா 8:50)

பீட்டர்: பயமும்,திகிலும்,கலக்கமும்,
ஒரு மனிதனை அவிசுவாசியாக்கும்.
அது அவனுக்கு தோல்வியையும்,
அழிவையும் கொடுக்கும்..

ஜான்: ஆமா ஆனா அந்த மனிதன்,
தேவனுடைய  வார்த்தைகளையும் வாக்குத்தத்தங்களையும்,முழு
நிச்சயமா நம்பி வாழும்போதும்
சூழ்நிலையை பார்க்காம,
வசனங்களை பார்த்து.. அவன்
அடிகளை,முன் எடுத்து வைக்கும்
போதும்,அவைகள் அவனை
விசுவாச வீரனாய் மாற்றும்.....
அது அவனுக்கு வெற்றியையும்,
வாழ்வையும் கொடுக்கும்..
அவன் இழந்ததையும் திரும்ப பெற்றுக்கொள்வான்..

பீட்டர்: ஆமா நண்பா! நாம் லூக்கா 8ம் அதிகாரத்திலே ஒரு சம்பவத்தை நாம் பார்கிறோமே!!!!யவீரு,என்கிற ஜெப
ஆலய தலைவன்,சுகவீனமாயிருக்கிற
தன் மகளை குணமாக்கும்படி,இயேசுவை வேண்டிக்கொண்டான். அவள் மரண அவஸ்தையால், வேதனைப்பட்டு
கொண்டு இருந்தாள்,இயேசுவோ, மனதுருகி, அவனுடைய வேண்டுகோளை ஏற்று,அவனுடைய வீட்டுக்குச் சென்றார்.
போகிற வழியிலே, திரள் கூட்டம் அவர்களுக்குப் பின் சென்றது.

ஜான்: ஆமா போற வழில...ஒரு பெரும்பாடுள்ள ஸ்திரீ,அவருக்கு
பின் வந்து,வஸ்திரத்தின் தொங்கலைத் தொட்டாள்.அவள் குணமானாள்.ஆனால், வீட்டுக்கு போவதற்கு நேரம் அதிகமாகி  கொண்டிருந்தபடியால்,யவீருக்குள்,
பதட்டத்தைக் கொண்டு வந்திருக்கும்,
இன்னும் தூரமிருக்கிறது.என் மகள் நிலை என்னவாகுமோ?எப்படியிருக்குமோ? தெரியவில்லை.என்று எண்ணியிருப்பார்.
ஆனால் அவர் அவைகளைப்பற்றி
கவலை பட்டதுபோல் தெரியல.. இயேசு
என் மகளை வியாதியிலிருந்து,சுகமாக்க போகிறார் என்ற நம்பிக்கையின்,
இயேசுவோடு நடைபோட்டு கொண்டிருந்தார்...

பீட்டர்: ஆமாப்பா யவீருக்கு,
இயேசுவின் மீதும் அவரின்
வார்த்தையின் மீதும்,விசுவாசம்
இருந்தது..அதனால் நேரம் ஆகிறதை குறித்து அவன் கலவைப்படல...
ஆனா அந்த நேரத்துல.. சற்றும் எதிர்பார்கமல்  ஒருவன் வந்து,
யவீரை நோக்கி“உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை, வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்”
(லூக். 8:49).இந்த வார்த்தையைக்
கேட்டதும்  யவீருக்கு எப்படி இருந்திருக்கும்,நிச்சயம் அவன்
முகம் செத்துப்போயிருக்கும்,
அவிசுவாசம் என்னும் காரிருள்
அவனை சூழ்ந்து கொண்டிருக்கும்,
அவன் கூட இயேசு இருந்தும்,அவன் பயப்பட தொடங்கிவிட்டன்,

ஜான்: ஆமா அந்த நேரத்துல,
இயேசு அவனைப் பார்த்து,
3 முக்கியமான காரியங்களைச்
சொன்னார்................
1)பயப்படாதே,
2) விசுவாசமுள்ளவனாயிரு,
3)அவள் இரட்சிக்கப்படுவாள்
என்றார். கிறிஸ்துவினுடைய இந்த வார்த்தைகள்,அவனின் விசுவாசத்தை
தட்டி எழுப்பிருக்கும்,இயேசு ஒரு
அற்புதம் செய்வார் என்கிற விசுவாசத்தின் எதிர்பார்ப்பு,அவனுக்குள் துளிர் விட்டிருக்கும்....

பீட்டர்: ஆமா நண்பா,விசுவாசத்தின் எதிர்பார்ப்பு,நிச்சயமாக அவனுக்குள்
துளிர் விட்டிருக்கும்!!
இன்றைக்கு இயேசு கிறிஸ்து
என்னோடு கூடவே இருக்கிறார்,
என்று நம்பி வாழ்கிற நல்ல விசுவாசிகள் கூட ஒரு கடினமான ஒரு சூழ்நிலையை தங்கள் வாழ்கையில் கடந்து போகிற நிலை வந்ததும்,இயேசு நம்மோடு கூடவே இருக்கிறார்,என்கிற சத்தியத்தை மறந்து.. பயந்துகொண்டும்,கலங்கி கொண்டும் இருக்கிறார்கள்.நாம் அவ்வாறு இருக்க கூடாது...

ஜான்: ஆமா நண்பா! கர்த்தருடைய வார்த்தைகளையும்,கிறிஸ்துவுக்குள்
அவர் அருளின வாக்குத்தத்தங்களையும்
விசுவாசிக்கிற கிறிஸ்தவர்கள் கூட ஒரு
சில இக்காட்டான வேளைகளில்,
டாக்டர்கள் சொல்கிற காரியத்தையும்,
ரிப்போர்ட்டையும்,கேட்டவுடனே,
பார்த்தவுடனே,பயமும் மனக்கலக்கம் அடைகிறார்கள்,சாத்தான் அதைப் பற்றிப்பிடித்து பெரிதாக்கி,பயத்தைக் கொண்டுவந்துவிடுவான்.பயம்,
அவிசுவாசத்தை அதிகமாக்கி
அவர்கள் வாழ்வில்,அற்புதங்கள் நடைபெறவிடாமல் தடுத்துவிடும்..

பீட்டர்: ஆமா!! சந்தேகப்படுகிறவர்களுக்கு கர்த்தர் அற்புதம் செய்ய முடியாது என்று.அப். யாக்கோபு சொல்லுகிறார், “சந்தேகப்படுகிறவன், காற்றினால் அடிபட்டு, அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்”(யாக். 1:6).
இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள், யவீருவைத் திடப்படுத்தின.அவன் பயத்தைவிட்டான்,விசுவாசம்
அடைந்தான்,அற்புதமும் நடந்தது.
இயேசு அந்த மரித்துப்போன பிள்ளையின் கையைப் பிடித்து“பிள்ளையே
எழுந்திரு என்றார்.அப்பொழுது
அவள் உயிர் திரும்ப வந்தது,
உடனே அவள் எழுந்திருந்தாள்”
(லூக். 8:55,55) என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம்..

ஜான்: ஆமா நாம் எந்த சூழ்நிலையிலும், மனம் சோர்ந்துபோக கூடாது,
எந்த பிரச்சனைகளையும், தேவனுடையவார்த்தையின் மீது
உள்ள  விசுவாசத்தோடும்,அணுகுவோம், நம் மீட்பர் உயிரோடிருக்கிறார். அவர் நிச்சயமாக எல்ல பிரச்சனையிலிருந்தும் நமக்கு விடுதலை தருவார்.இதை நாம் என்றும் விசுவாசிப்போம்,

பீட்டர்: தேவனுடையவார்த்தையின்
மீது நாம் வைக்கும்,விசுவாசம் நம்மால்  பார்க்க முடியாதவைகளை பார்க்க வைக்கும், இல்லாதவைகளை
இருக்கிறவைகளை போல
அழைக்கவைக்கும், அதரிசனமானவைகளை நம்மை
தரிசிக்க செய்யும், முடிவில் நமக்கு வெற்றியும் வாழ்வையும்,சுகத்தையும் ஆரோக்கியத்தையும்,சகல ஆசீர்வாதங்களையும்,பலன்களையும்
கொண்டு வரச்செய்யும்.விசுவாசத்தோடு இருப்போம்...

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
(எபிரெயர் 11:6)