Wednesday 18 November 2015

கிறிஸ்துவுக்குள் உங்கள் வாழ்வு என்றும் ஒளிமயமே

கிறிஸ்துவுக்காய் வாழ்ந்து கொண்டிருக்கும் தேவனுக்கு பிரியமாய் இருக்கிற தேவ பிள்ளையே!
 நீ எதற்காக உன் எதிர்காலத்தை குறித்து கவலைப்படுகிறாய் ?

நீ ஒரு சாதாரண மனிதன் போல் என்னைக்குறித்த தேவனுடைய சித்தம் எப்படி இருக்கப்போகுதோ ?
 என் எதிர்காலம் எப்படி அமையப்போகிறதோ?என்று உன் இருதயத்தில் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்காதே

கிறிஸ்துவை விசுவாசிக்கிற நீ சாதாரண மனிதன் இல்லை
வனத்துக்கும் பூமிக்கும் செந்தக்காரராகிய கர்த்தர் உன்னுடைய தகப்பன்
உன்னுடைய காலங்கள் அவருடைய கையிலிருக்கிறது என்பதை நன்கு புரிந்துகொள்!

ஆபிரகாமின் ஆசிர்வாதங்கள் கிறிஸ்து இயேசுவினால் உனக்கு செந்தமாய் இருக்கிறது
இதை உன் உள்ளத்தில் உணர்ந்துகொள்!

அதனால் நீ ஈசாக்கை போல வர வர விருத்தியடைந்து மாக பெரியவனாவாய் இதை உன் இருதயத்தில் வைத்து நன்றாக பிணைத்துக்கொள்!

நீ போகையிலும் ஆசிர்வதிக்கப்பட்டவன்...
நீ வருகையிலும் ஆசிர்வதிக்கப்பட்டவன்...
இதை நீ கடக்கும் வழிகளில் எல்லாம்  நினைத்துக்கொள்!

நீதிமானுடைய பாதை நடுபகல்  வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கும் சூரிய பிரகாசம்
நீதிமானுடைய பாதை ராஜ பாதை  என்று எழுதியிருக்கிறதே!

எதிர்காலத்தில் என் வாழ்வு அப்படி ஆகிவிடுமோ இப்படி போய்விடுமோ என்று கவலையுடன் வாழ்கிறவனாய் இருக்காதே...

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் நான் எதிர்காலம்  ஒருபோதும் தாழ்ச்சியடைந்த நிலையில்  இருக்கமாட்டேன் என்ற வைராக்கியத்தில்  வாழ்கிறவனாய் இரு...

கிறிஸ்துவுக்காய் வைராக்கியம் கொள்கிற உன் நீதியை தேவன் ஊரறிய உலகறிய நிச்சயம் விளங்கப்பண்ணுவார்

கிறிஸ்துவுக்குள் உன் எதிர்காலம் கண்டிப்பாக  ஒளிமயம் தான் அதையே எதிர் நோக்கிப்பார்த்திரு !

அது அமையும் காலம் வரை  யோசேப்பை போல் தாவீதை போல் பொறுமையோடு காத்திரு!

ஆமென்

ஜீவ வழி-LIVING WAY

No comments:

Post a Comment