Monday 16 November 2015

(4) தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாக மக்களை செய்ய சொல்லி புனிதர்களா வந்து காட்சி கொடுப்பார்கள் ?

தேவனுடைய
வார்த்தைகளுக்கு விரோதமாக
மக்களை  செய்ய சொல்லி
புனிதர்களா வந்து காட்சி  கொடுப்பார்கள்  ?

பீட்டர்: தேவன் ஒருவரை மட்டும் வணங்கி, தேவனுடைய
கட்டளைகளின் படி நடந்து,
தேவனுடைய வசனத்தை போதித்து,தேவனுடைய வார்த்தையின் வழியில் நடந்த "புனிதர்கள்"மரித்து போன பிறகு வந்து, நம்மல தேவனுடைய கட்டளைகளை
மீறி நடக்க  வைக்க,அவர்கள் தங்களை நோக்கி வேண்ட  சொல்லியும், தங்களுக்கு கோயில் கட்ட சொல்லியும்  காட்சிக்கொடுப்பாங்களா ?

அந்தோனி: புரியல, கொஞ்சம் தெளிவா சொல்லு

பீட்டர்: சொல்றேன் அந்தோனி,  அன்னை மரியாள் அவர்கள்
தேவனுடைய கட்டளைகளின் படி பரிசுத்தமாக வாழ்ந்து வந்த
ஓர் இஸ்ரவேல் மங்கை அப்படிப்பட்டவர்,தேவன் கொடுத்த முதல் இரு கட்டளைகளை மீறி, அவர் தன்னை நோக்கி வேண்ட சொல்லியும், இயேசு நமக்கு சொல்லித்தராத ஜெப மாலை ஜெபத்தை செய்ய சொல்லியும், தனக்கு சிலை வைத்து கோயில் கட்ட சொல்லியும் வந்து காட்சி கொடுப்பாங்களா ?

அந்தோனி: நிச்சயமா  கொடுத்திருக்கவே மாட்டாங்க

பீட்டர் : அப்ப அன்னை மரியாள் வேஷத்தை தரித்துக்கொண்டு வந்து நம்மை தேவனுடைய  கட்டளைகளை மீற செய்கிறது யாரு ?

அந்தோனி: இதுக்குதான் பதில் (2கொரிந்தியர் 11:13-14)-ல் இருக்கே

தொடரும்.......

ஜீவ வழி-LIVING WAY

facebook.com/lwcomm

No comments:

Post a Comment