Monday 16 November 2015

(5) புனிதர்கள்"மரித்து போன பிறகு வந்து,மக்களை தேவனுடைய வார்த்தைகளைமீறி நடக்க சொல்வார்களா ?

"புனிதர்கள்"மரித்து போன பிறகு வந்து,மக்களை தேவனுடைய வார்த்தைகளைமீறி நடக்க சொல்வார்களா ?

அந்தோனி: கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் போலவும்,நமது அன்னை மரியாள்,செபஸ்தியார்,
என புனிதர்கள் போலவும் வேஷத்தை சாத்தான் தரித்துக்கொண்டுவந்து, தங்களை நோக்கி வேண்டவும்,தங்களுக்கு கோயில் கட்டி கும்பிடவும் சொல்லி மக்களை வேத வசனத்திற்கு விரேதமாக நடக்க செய்கிறான் என்பதை (2கொரிந்தியர்11:13-14)- படித்து புரிஞ்சுக்கிட்டேன்

பீட்டர்: ஆமா, அந்தோனி இதுபற்றி தான் அப்போஸ்தலனாகிய பவுல்(கலாத்தியர் 1: 8) ல் இவ்வாறு சொல்கிறார்"நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்துவருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால்,அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

அந்தோனி: புரியல கொஞ்சம் தெளிவா விளக்கி சொல்லு பீட்டர்

பீட்டர்: அப்போஸ்தலர்கள் வேதத்தில் நமக்கு பிரசங்கித்த சுவிசேஷத்திற்குமாறாக, மரியாளிடம் வேண்ட வேண்டும், புனிதர்கள் மற்றும் வானதூதர்களிடம் வேண்ட வேண்டும்,சிலைகளை நோக்கி வேண்ட வேண்டும் என்றும் இன்னும் பல வேதத்தில் இல்லாத உபதேசங்களை அதாவது அப்போஸ்தலர்கள் நமக்கு பிரசங்கிக்காத உபதேசங்களைஅப்போஸ்தலர்களோ
(அவர்கள் வேஷம் தரித்த சாத்தான்) அல்லது வானத்திலிருந்துவருகிற தூதனோ(அவர்கள் வேஷம் தரித்த சாத்தான்) உங்களுக்கு பிரசிங்கித்தால்அவன் சபிக்கப்பட்டவனாய் இருப்பான்.... சபிக்கப்பட்டு இருக்கிறவன் யாரு அந்தோனி?

அந்தோனி : வேற யாரு சாத்தான் தான்

பீட்டர் : இப்ப புரியுதா ? அப்போஸ்தலர்கள்
வேதத்தில் நமக்கு பிரசங்கிக்காத உபதேசங்களை,அப்போஸ்தலர்கள் போலவும் வானத்திலிருந்துவந்த தூதன் போலவும் வந்து நமக்கு பிரசங்கித்ததுயாருனு ?

அந்தோனி: எனக்கு இப்ப நல்லா புரிஞ்சிருச்சுப்பா

தொடரும்......

ஜீவ வழி-LIVING WAY

facebook.com/lwcomm

No comments:

Post a Comment