Saturday 25 February 2017

#ஜீவவழியின் நற்செய்தி

நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொள்
(உபாகமம் 30:19 )

பரத்: ஆண்டவர் நமக்கு மரணத்திற்கும் ஜீவனுக்கும் ஏதுவான ஒரு தெரிந்தெடுத்தலை நமக்குக் கொடுத்திருக்கிறார்.

பிரவீன்: ஆமா,அதோடு கூட  ஆசீர்வாதத்துக்கும் சாபத்திற்கும் ஏதுவான தெரிந்தெடுத்தலையும் நம்மிடமே தேவன் கொடுத்திருக்கிறார்.
 சரியான ஒன்றைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பு நமக்கே உள்ளது.

பரத்: நாம் எதைவைத்து ஜீவனை தெரிந்தெடுக்க வேண்டும் ?

பிரவீன்: மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும். அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள் (நீதி. 18:21).என்று எழுதியிருக்கிறது.

பரத்: ஆமா பிரவீன்,நாம் நேர்மறையான வார்த்தைகளைப் பேசுவதன் மூலமும், ஆண்டவருடைய வார்த்தையை அறிக்கையிடுவதன் மூலமே நாம் ஜீவனை தெரிந்தெடுக்க முடியும்

பிரவீன்: சரியாக சொன்னாய், வேதத்திலே ஆயிரக்கணக்கான வாக்குத்தத்தங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் எடுத்து, நாம் தினமும் அறிக்கை செய்ய வேண்டும்.

பரத்: அதுமட்டுமல்ல இருதயத்தையும், சிந்தையையும் வேத வசனத்தினாலே நிறைக்க வேண்டும், அப்போது நம் இருதயத்தின் நிறைவை, நம் வாய் பேச ஆரம்பிக்கும்.....

பிரவீன்: ஆமா பரத் நாம் நம் இருதயத்தை வேத வசனத்தால் நிறைக்கும் போது, நம் வாய் தேவனுடைய வார்த்தைகளை அதிகம் பேச ஆரம்பிக்கும், அது நமக்கும் நம்மை சுற்றி இருக்கிறவர்களுக்கும் மிகவும் பலனுள்ளதான இருக்கும். நிச்சயம் ஜீவன் இழந்த வாழ்வில் நாம் பேசும் தேவனுடைய வார்த்தைகள் ஜீவனை ஏற்படுத்தும்.

பரத்: அதோடு கூட நாம் நமது வாழ்வில் பிரச்சனைகள் எழும்பும்போது, ஆண்டவரின் சமூகத்திலே அந்த பிரச்சனைக்கு உரிய தீர்வைப் பேச  முற்படவேண்டும்,தீர்வானது, கர்த்தரிடமிருந்து தான் வருகிறது என்பதை நாம் நமது விசுவாச அறிக்கையில் மூலம் உறுதிசெய்ய வேண்டும்.

பிரவீன்: ஆமா பிரச்சனை என்ன என்பதை அறிக்கையிடவோ, அதை குறித்து விவாதிப்பதற்கு மாறாக, அந்த பிரச்சனைக்குரிய தீர்வை சொல்லி, அதை அறிக்கையிடுவோம் ஏனெனில், நம்மோடிருக்கும் நம் தேவன், பிரச்சனைகளைக் காட்டிலும்  பெரியவர்.

பரத்: ஆமென்

பிரவீன்: நம் இருதயமானது ஒரு நிலம். நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் விதை. நம் வாயிலிருந்து என்ன வார்த்தைளெல்லாம் வருகிறதோ, நாம் அவற்றை நம் இருதயமாகிய நிலத்திலே விதைக்கிறோம்.

பரத்: நாம் எவற்றையெல்லாம் விதைக்கிறோமோ அதற்கான பலனையே அறுப்போம்.

பிரவீன்: ஆமா நண்பா, நாம் நல்ல நேர்மறையான வார்த்தைளையும், ஆண்டவருடைய வார்த்தையையும்
நம் இருதயமாகிய நிலத்திலே விதைத்தால், ஜீவனுக்கேதுவான பலனைப் பெறுவோம்.

பரத்: மறுபுறம்,நாம் எதிர்மறையான வார்த்தைகளை விதைத்தால், அதற்கான பலனையும் அறுக்கத் தான் வேண்டும்.

பிரவீன்: ஆம் நண்பா, நாம் நம்  வார்த்தைகளில் கவனமாயிருக்க வேண்டும்...

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். (நீதிமொழிகள் 18:21)

ஆமென்... அல்லேலூயா...

======================
Revelation by spirit of God
======================

http
://facebook.com/LIVINGWAYMARVEL/


Sunday 19 February 2017

தேவனுடைய வார்த்தைகளை பேசு:

கர்த்தர் உன் சகாயராய் இருக்கிறார்,
மனிதர்கள் உனக்கு எதிராக என்ன
செய்ய முடியும் !
தேவனை தவிர யாருக்கும் நீ அஞ்சாதே...

தன்னை தொழுது கொள்கிற
அனைவருக்கும் அவர் ஐஸ்வர்ய சம்பூரணராய் இருக்கிறார்,
எனவே நீ யாரிடமும் போய் கடன்
கேட்டு கெஞ்ஜாதே...

உன் பெலவினங்களையும்,
உன் நோய்களையும்,
தேவன் முழுமையாக சுமந்து தீர்த்துவிட்டார்.உன் வியாதியை பற்றி யாரிடமும் சொல்லி புலம்பாதே...

இந்த வாக்குத்தத்தங்கள் எல்லாம் எப்போது எங்கள் வாழ்வில் நிறைவேறும்...

தேவனுடைய வசனத்தில் மூலம்,
எப்படி எங்கள் வாழ்கையின் நிலைமாறும்...
என்று சிந்தித்து,வருந்தி
கொண்டிருக்காதே...

கிறிஸ்துவுக்குள் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது. என்று எழுதியிருக்கிறதே...

அதை நீ உன் முழு இருதயத்துடன்
விசுவாசிக்கிறாயா?

நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை நிச்சயம் காண்பாய்...

உனக்கு எதிராக இருக்கும் எதிர்மறை சூழ்நிலையை பார்த்து, இது மாறாது இந்த பிரச்சினை என்றும் ஓயாது, என்று அவிசுவாசமாய் பேசாதே...

அந்த எதிர்மறை சூழ்நிலைக்கு எதிராக தேவனுடைய வார்த்தைகளை எடுத்து பேசு.

பிறகு பார் உன் எதிர்மறையான சூழல்
நேர்மறையாக மாறிவிடும்...

உனக்கு இருக்கிற எல்லா பிரச்சினைகளும்,உன்னைவிட்டு நீங்கி ஓடி விடும்...

உன் பயங்கள்,பிரச்சினைகள், வியாதிகளை,நோக்கி
பார்ப்பதையும் அதை பற்றி அடிக்கடி பேசுவதையும் முதலில் நிறுத்து...

அதை முற்றிலும் இல்லாமல் போக செய்ய ஒரே தீர்வாக இருக்கிற, தேவனுடைய வார்த்தைகளை நோக்கி உன் முழு பார்வையையும்
செலுத்து...

பிரச்சினையை பேசாதே தீர்வை பேசு...

தரித்திரத்தை பேசாதே,தேவனுடைய மகிமையின் ஐஸ்வரியத்தை பேசு...

வியாதியை பேசாதே,தேவன் உனக்காக ஏற்படுத்தி வைத்திருக்கும் ஆரோக்கியத்தை பேசு...

தேவனுடைய ஜீவன் நிறைந்த வாக்குத்தத்தங்கள்,
உன் வாழ்வில் நிறைவேறுவதும், நிறைவேறாமல்
போவதும்,உன்னுடைய நாவின் அதிகாரத்தில் தான் இருக்கிறது
இதை நீ மறந்துவிடாதே...

நீ எதை விதைக்கிறாயோ,
அதை தான் அறுப்பாய்...

ஆமென்... அல்லேலூயா...

******************************
https://facebook.com/LIVINGWAYMARVEL/

http://marveljerome.blogspot.in
#உன் மீது பெலவீனங்களையும் நோய்களையும் #சுமத்தியது,கர்த்தர் #அல்ல உனக்காக பெலவீனங்களையும் நோய்களையும் #சுமந்து தீர்தவரே #கர்த்தர்.

***********************************

வியாதி என்றும் இருளின் பிடியில் இருக்கும்,என் அன்பு சகோதரா,அன்பு சகோதரி நீ வியாதியின் இருப்பது,தேவனின் விருப்பமல்ல,அது சாத்தானின் விருப்பம்,நீ வாழ்ந்து சுகமாய் இருக்க வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார்..

இருளாகிய வியாதிக்கு காரணம்
ஒளி இல்லை..ஒளிக்கும்,இருளுக்கும் வித்தியாசத்தை நீ புரிந்து கொள்...

இயேசு ஒளியாகவே இருக்கிறார் அவரிடம் எவ்வளவேனும்,இருள் இல்லை,
இதை உள்ளத்தில் நீ உணர்ந்து கொள்...

நீ வியாதியால் கஷ்டப்படுகிறதுக்கு காரணர் கர்த்தர் அல்ல,உனக்காக கஷ்டங்களை கல்வாரியில் ஏற்றவரே  கர்த்தர்...

உன்னை காயப்படுத்துவது கர்த்தர் அல்ல,
உனக்காக காயப்பட்டவரே  கர்த்தர்..

உன் மீது பெலவீனங்களையும் நோய்களையும் சுமத்தியது,கர்த்தர் அல்ல
உனக்காக பெலவீனங்களையும் நோய்களையும் சுமந்து தீர்தவரே கர்த்தர்..

ஆம் என் அன்பு சகோரா! சகோதரி!

இதை நீ நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்..

நீ வியாதியாய் இருக்கும் போது உன் வியாதியை பற்றி நினைத்து நினைத்து கலங்காதே...

உன் பிரச்சினை யாரிடமும் சொல்லி சொல்லி புலம்பாதே...

மற்றவரின் ஆறுதலை தேடி அங்கும் இங்கும் அலையாதே...

உன் பிரச்சினைக்கு தீர்வு,ஆறுதல் நிறைந்த மனிதனுடைய அற்ப வார்த்தையில் இல்லை...

அது வல்லமை நிறைந்த தேவனுடைய ஜீவ வார்தையில் இருக்கிறது...

அந்த ஜீவ வார்த்தை சொல்கிறது:நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் நான் உனக்கு சவுக்கியமும், ஆரோக்கியமும் வரப்பண்ணி உன்னை குணமாக்கி உனக்கு பரிபூரண சமாதானத்தை வெளிப்படுத்துவேன். நான் எனது வசனத்தை அனுப்பி உங்களை குணமாக்கி அழிவுக்கு தப்பிவிப்பேன்

அந்த வசனம்(வார்த்தை)மனிதனாக வந்தார் அவர் ஆதியும் அந்தமுமானவர்

உன் பெலவினங்களை ஏற்றுக்கொண்டு உன் வியாதிகளை சுமந்து தீர்த்தவர்...

துவக்கமும் முடிவுமானவர்,
உன் துக்கங்களை சுமந்து தீர்த்தவர்...

கடவுளோடு கடவுளாக இருந்தவர்,
உன் கஷ்டங்களை கல்வாரியில் சுமந்தவர்...

அவர்தான் இயேசு கிறிஸ்து,
அவர்தான் உனது பரிகாரி...

ஆம் அவரே! உன் பரிகாரி,
எனவே இந்த நெடியிலிருந்து
இயேசுவே என் பரிகாரியாகிய கர்த்தர் என்று அடிக்கடி உன் வாயினால் அறிக்கையிடு...

இயேசுவின் தழும்புகளால் நான் சுகமானேன்,என்று நீ சுகம் பெறும் வரைதேவனை நோக்கி துதியுடன் முறையிடு...

நிச்சயமாக நீ பெறுவாய் சுகம் ...
சத்தியமாக நீ பெறுவாய் விடுதலை...

உன் கஷ்டத்தை நினைத்து கண்ணீர் விடாதே...

கல்வாரியை நினைத்து கண்ணீர் விடு...

பிறகு பார் வியாதிகள் கஷ்டங்கள் கவலைகள் எல்லாம் காணாமல் போவதை நிச்சயம் நீ காண்பாய்...

ஆமென்... அல்லேலூயா....

*********************************
https://mobile.facebook.com/LIVINGWAYMARVEL/

http://marveljerome.blogspot.in

தடைகளை தகர்க்கும் துதி.... அலங்கத்தை அகற்றும் ஆர்ப்பரிப்பு

#தடைகளை தகர்க்கும் துதி....
#அலங்கத்தை அகற்றும் ஆர்ப்பரிப்பு

எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்தனர்

(யோசுவா 6:20)

டேனியல்: இஸ்ரவேலர்,கெம்பீரமாக காண்டா மிருகத்துக்கொத்த பெலனோடு, எரிகோவை நோக்கி, வெற்றி நடைபோட்டு வந்தார்கள்.
அதுதான், அவர்கள் முதலில்
சந்தித்த பட்டணமாகும்.

பீட்டர்: அவர்களை உள்ளே போக விடாதபடி,எரிகோ மதில்கள் தடுத்தன.
வெண்கல கதவுகள்,சவால் விட்டன. ஆனால் தடைகளை நீக்கிப்போடுகிற கர்த்தரோ,இஸ்ரவேலரோடு இருந்தார்.

டேனியல்: இஸ்ரவேலருக்கு அதாவது கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனங்களுக்கு.... முதல் தடை,பார்வோனாகிய ஒரு மனுஷனால் ஏற்பட்டது.இரண்டாம் தடை,
ஒரு சமுத்திரத்தினால் வந்தது.மூன்றாம் தடை, ஒரு நதியின் வெள்ளத்தினால்
வந்தது. நான்காம் தடை, ஒரு பட்டணத்தின் மதில் சுவராய் வந்தது. தடைகள் வித்தியாசப்படலாம். ஆனால் நமக்கு
எதிராக இருக்கிற எல்லா தடைகளைத் தகர்ப்பவர்,ஒருவர் நம்மோடு இருக்கிறார்,அவர் என்றைக்கும் மாறாதவராய்,ஜீவனுள்ளவராய்,
வல்லமையுள்ளவராய் நம்மோடு இருக்கிறார்... அவர் கூறும் வழிமுறைகள் வியப்பானதாக இருக்கும் ஆனால் அதுதான் வெற்றியை நமக்கு கொடுக்கும்.

பீ்ட்டர்: ஆமா எரிகோவாகிய தடையைத் தகர்க்க, கர்த்தர் கற்றுக்கொடுத்த வழி
முறை என்ன என்பது நமக்கு தெரியுமே!
"ஆசாரியர்கள் எக்காளங்களை
ஊத வேண்டும். ஜனங்களெல்லோரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்க வேண்டும். அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்து விழும்" (யோசு. 6:2,5).

எரிகோ தடையை உடைக்க,
கர்த்தர் கொடுத்த ஆயுதம்,துதியின் சத்தமாகும்.அவருக்கு ஈட்டியும், அம்பும், குதிரை வீரர்களும் தேவையில்லை. அவருக்கு தேவையெல்லாம்,
“கர்த்தரைத் துதிக்கும் துதி.”

டேனியல்: ஆமா பீட்டர்,கர்த்தரைத் துதித்து,அவரது வாக்குதத்தங்களை அறிக்கை செய்து,நாம் ஆர்ப்பரிக்கும் போது,துதிகளின் மத்தியிலே வாசம்பண்ணுகிற கர்த்தருடைய
பிரசன்னும் அவரின் மகிமையும்
நம்மை சூழ்ந்து கொள்கிறது..
அதனால் எரிகோவின் மதில்கள்,
போல் தடையாக இருக்கிற எல்லா பிரச்சனைகளும் முறிந்து,நொறுங்கி விழுகிறது.....

பீட்டர்: ஆமா நண்பா! கர்த்தருடைய வசனம் கன்மலையை நொறுக்கும் சம்மட்டியை போல இருக்கிறது என்று வேதம் போதிக்கிறது.. எனவே நாம் போகிற வழியின் குறுக்கே தடையாய் இருக்கிற மதிகளை,கர்த்தர் நமக்கு கொடுத்த வாக்குதத்தங்கள் என்னும் சம்மட்டியால் அடித்து தகர்த்து,அவரை
துதித்துக்கொண்டே இன்னும் முன்னேறி செல்வோம்...

ஆமென்... அல்லேலூயா...

என் வார்த்தை அக்கினியைப்போலும், #கன்மலையை நொறுக்கும் #சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(எரேமியா 23:29)

======================
Revelation by spirit of God
======================

https://facebook.com/LIVINGWAYMARVEL/
#கர்த்தரையும் அவர்
#வல்லமையையும் #நாடுங்கள்

கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்;அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.(சங்கீதம் 105:4)

பரத்: இன்று அனேக கிறிஸ்தவர்கள்,
கர்த்தருடைய வல்லமையை நாடுகிறார்கள்,அதாவது அவரிடம் இருந்து வல்லமையை பெற்று அனுபவிக்க வேண்டும்,குணமாக வேண்டும்,
பாதுகாக்கப்பட வேண்டும், ஆசீர்வாதமாய் இருக்க வேண்டும் அற்புதங்கள் செய்யும் வல்லமையை பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்..

பிரவீன்: ஆமா நல்லதுதான் ஆனால், அதற்கு நாம் கர்த்தரையும் அவரின் சமுகத்தையும் முதலில் நாட வேண்டும், தேட வேண்டும்,என்று வேதம் போதிக்கிறது...

பரத்: ஆமா நாம் கர்த்தரையும்
அவரின் சமுகத்தையும் ஆர்வமாய், வாஞ்சையோடு நாடித்தேடும் போது அவரின் வல்லமை நமது வாழ்வில் வேலை செய்ய ஆரம்பிக்கிறது..அந்த வல்லமை,ஆவிக்குரிய மற்றும்  உலகப்பிரகாரமான சகல ஆசீர்வாதங்களையும் நமக்கு கிடைக்க செய்கிறது...

பிரவீன்: ஆமா கர்தரின் வல்லமைகளை நம் வாழ்வில்,நாம் பெற்றுக்கொள்ள, அவரின் சமுகத்தை நித்தமும் நாம் தேட வேண்டும் என்று வேதம் போதிக்கிறது..

பரத்: ஆனால் இன்றைய அனேக கிறிஸ்தவர்கள் பிரச்சனைகள், போரட்டங்கள்,சஞ்சலங்கள்,
சங்கடங்கள் வரும்போது மட்டுமே கர்த்தருடைய சமுகத்தை தேடுகிறார்கள், ஆனால் நாம் நித்தமும் அவரின் சமுகத்தை தேட வேண்டும்,அவ்வாறு நாம் இருந்தால் மேற்சொன்ன அந்த இருளின் காரியங்கள் நமது வாழ்வில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது...ஏனென்றால் கர்தருடைய வல்லமை நமது வாழ்வில் பரிபூரணமாக வெளிப்பட்டுக்கொண்டு இருக்கும்.

பிரவீன்: ஆமா! நண்பா கர்த்தருடைய சமுகத்தில் (அதாவது) அவரோடு கொண்ட நெருங்கி ஐக்கியத்தில் நாம் என்றும் தரித்து அதிலே நிலைத்து, இருந்தால்,கர்த்தருடைய வல்லமை நம்மீது செயல்பட ஆரம்பிக்கிறது,
அது நமக்கு தெரியும் ஆனால் அதோடுகூட,
அவருடைய சமுகத்தில் ஒரு சில தனிதன்மை வாய்ந்த நன்மைகளும்।கொட்டிக்கிடக்கின்றன...அவைகளும்
நமக்கு வந்து கிடைக்கிறது...

(1) பரிபூரண ஆனந்தம்

(2) நித்திய பேரின்பம்

(3) மகிழ்ச்சி

ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்;உம்முடைய சமுகத்தில் #பரிபூரண #ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் #நித்தியபேரின்பமும் உண்டு.
(சங்கீதம்  16:11 )

அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் #மகிழ்ச்சியினால் #பூரிப்பாக்குகிறீர்.
(சங்கீதம்  21:6)

பரத்: சரியாக சொன்னாய் நண்பா!  கர்த்தரையும் அவருடைய சமுகத்தையும்
நாம் நித்தமும் தேடும் பொழுது,
அவரின் அபார வல்லமை,நமது மீது அபரிமிதமான வெளிப்படும்,
அதோடு அவருடைய சமுகத்தின்
ஆசீர்வாதங்களாகிய
பரிபூரண ஆனந்தத்தினாலும்,
நித்திய பேரின்பத்தாலும்,
மகிழ்ச்சியினாலும் அவர்
நம்மை நிரப்புவார்...

பிரவீன்: ஆமா நண்பா!
நாம் கர்த்தரோடு கொண்ட ஐக்கியத்தில் பலப்படும் போது,நாம் அவரின் சத்துவத்தின் வல்லமையால் பலப்படுத்தப்பட்டு கொண்டே இருப்போம்,எனவே அவரோடு நாம் கொண்ட ஐக்கியத்தை இன்னும் அதிகமாக்குவோம்,
நமது ஆவிக்குரிய ஜீவியத்தை இன்னும் வலிமையாக்குவோம்....

ஆமென்... அல்லேலூயா...

கடைசியாக,என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

(எபேசியர் 6:10)

======================
Revelation by spirit of God
======================

கர்த்தரை குறித்தே நாம் #மேன்மைபாராட்டுவோம்

#கர்த்தரை குறித்தே நாம்  #மேன்மைபாராட்டுவோம்

சிலர் இரதங்களைக்குறித்தும்,
சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
(சங்கீதம் 20: 7)

பரத்: அக்காலத்தில் போர்களத்தில் ராஜாக்கள் தங்கள் படை பலத்தின் வலிமையை குறித்து காட்ட குதிரைகளைக் குறித்து  இரதங்களைக்குறித்து,அதாவது
தங்கள் சேனைகளின் வலிமை குறித்து,தாங்கள் மிகவும் பராக்கிரமசாலிகள் என்று மேன்மைபாராட்டினார்கள்,ஆனால் தேவனுடைய ஜனங்களின் மேன்மைபாரட்டுதல் மிகவும் வித்தியாசமாக இருந்தது

பிரவீன்: ஆமா,நண்பா தேவனுடைய ஜனங்களிடமும் குதிரைகளும்,
இரதங்களும் இருந்திருக்கும் ஆனால் அவர்களின் மேன்மைபாராட்டுதல்,
தங்கள் சேனைகளை குறித்து அல்ல,
வானக சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தைக்குறித்து மட்டுமே இருந்தது... அதனால் தான் மற்றவர்கள்
முறிந்து விழுந்தார்கள்; தேவனுடைய ஜனங்கள் எழுந்து நிமிர்ந்து நிற்கிறார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது (சங் 20: 8)

பரத்: இன்றும் கூட இயேசுவை ஏற்றுக்கொண்ட அனேக மக்கள் தனது அழகைக்குறித்தது, அந்தஸ்தை குறித்து படிப்பைக்குறித்து, பணத்தைக் குறித்து, நிலங்களைக் குறித்து, ஏன் கேவலம்  ஜாதியை குறித்து கூட மேன்மைபாராட்டுகிறார்கள்,
ஆனால் ஒரு உண்மையான ஆவிக்குரிய கிறிஸ்தவன் இவைகளை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டான்,அவனின் மேன்மை கர்த்தரை,அவரின் வார்த்தையை குறித்து பற்றி மட்டுமே இருக்கும்...

பிரவீன்: ஆமா,ஆவிக்குரிய கிறிஸ்தவனின் மேன்மைப்பாரட்டுதல்
அவ்வாறு தான் இருக்கும்... அவன்
தேவனுடைய அன்பைக்குறித்து, அவருடைய வல்லமையைக் குறித்து, அவருடைய தன்மைகளைக்குறித்து, அவருடைய இரட்சிக்கும் கிருபையைக் குறித்து, இரக்கத்தைக் குறித்து, நீடிய பொறுமையைக் குறித்து,அவர் என்றும்   நல்லவராகவே இருக்கிறார் என்பதை குறித்தே அவன் மேன்மைபாராட்டுவான்...

பரத்: ஆமா நண்பா, நாமும் அவ்வாறுதான் செய்யவேண்டும் ஏனெனில் பாவிகளில்
பிரதான பாவியாகிய நம்மை இயேசு  இரட்சித்திருக்கிறாரே!

நாம் பாவிகளாய் இருக்கும் போதே  நமக்காக சிலுவையில் தொங்கி மரித்து நம்மீது அவர் வைத்திருக்கும் நித்திய அன்பை விளங்கப்பண்ணினாரே !

 நம்முடைய குருட்டாட்டத்தில் நாம்  அழிந்துப்போகாமல் நம்மை தடுத்து நித்திய வாழ்வுக்கு ஏற்புடையவர்களாக நம்மை ஆக்கியிருக்கிறாரே !

 இன்றைக்கும் பிதாவின் வலதுபாரிசத்தில் நமக்காக பரிந்துப் பேசிக்கொண்டிருக்கிறாரே!

இப்படி யாராலும் செய்ய முடியாத காரியங்களை கர்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக செய்திருக்க அவரை  அல்லாமால் இந்த உலகத்தில் நாம்  எதைக்குறித்து,யாரைக்குறித்து,
மேன்மைபாராட்டுவோம் ???

பிரவீன்: சூப்பரா சொன்ன பரத்,
 நாம் இயேசு கிறிஸ்துவை உண்மையாகவே ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்றால், அவரை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிக்கிறோம் என்றால்,நாம் உலகத்து  காரியங்களாகிய,அழகு,அந்தஸ்து,
ஜாதி,படிப்பு,பணம்,சொத்து,என எவைகளை குறித்தும் மேன்மைபாராட்ட மாட்டோம் இவைகளை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டோம்..

பரத்: ஆமா பிரவீன், உலகுக்கு அடுத்த காரியங்கள் எவ்வளவு நமக்கு இருந்திருந்தாலும்,இயேசு கிறிஸ்து மட்டும் நம்மை இரட்சிக்காமல் இருந்திருந்தால்,எல்லாம் Waste
நாம் இந்த நேரம் சமாதானம்,விடுதலை இல்லாமல் உளையான சேற்றில் ஊறிக்கிடந்திருப்போம்.. நமது நித்தியமும் நரகமாக இருந்திருக்கும்.
ஆனால் இயேசு நம்மை தேடிவந்து தூக்கினார்.. பரலோக குடிமகனாக இந்த பூமியில் நம்மை ஆக்கினார்..
எனவே அவரை தவிர நமக்கு இந்த உலகில் எதுவும் மேன்மையாக இருக்கவே கூடாது

ஆமென்... அல்லேலூயா...

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக;
அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.

(கலாத்தியர் 6: 14)

======================
Revelation by spirit of God
======================

ஜெயம் தரும் இயேசுவின் #இரத்தம்


#ஜெயம் தரும் இயேசுவின் #இரத்தம்

ஆட்டுக்குட்டியின் (இயேசுவின்)
#இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை (சாத்தானை) #ஜெயித்தார்கள்.

(வெளி 12:11)

டேனியல்: இயேசு கிறிஸ்துவின் இரத்தம்,மனுக்குலத்திற்கு தேவனால் கொடுக்கப்பட்ட, பெரிய ஈவாகும். இயேசுவின் இரத்தம் இல்லாவிட்டால், சுவிசேஷம் இல்லை,பாவ மன்னிப்பு இல்லை, இரட்சிப்பு இல்லை. சாத்தானிடமிருந்தும்,அந்தகார வல்லமையிலிருந்தும், நித்திய அக்கினியிலிருந்தும் நாம்
மீட்கப்பட வேறு வழியில்லை.

பீட்டர்: இயேசுவின் இரத்தத்தை,
நாம் இன்று தியானிக்கும்போது,
அந்த இரத்தம், எவ்வளவு வேதனைகள், நிந்தைகள்,அவமானங்கள்,
தியாகங்கள் வழியாக வழிந்து வந்திருக்கிறது என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்

டேனியல்: உலகத்தில்,எந்த மனிதரும் பட்டிராத அளவு, அத்தனைப் பாடுகளையும்,இயேசு அனுபவித்தார். வானத்துக்கும், பூமிக்கும் நடுவே, சிலுவை மரத்திலே தொங்கி சாபமானார். சரீரப் பாடுகளைப் பார்க்கிலும்,ஆத்தும வியாகுலம், எவ்வளவு வேதனையானது,
மனுகுலத்தின் மீது செலுத்தப்பட வேண்டிய தேவனுடைய  கோப ஆக்கினை இயேசுவின் மீது முழுவதுமாய் ஊற்றப்பட்டது..
தேவ குமாரனால் மட்டுமே அவற்றை தாங்கிக்கொள்ள முடியும்.

பீட்டர்: என்றைக்கு நாம் இயேசுவை ஏற்றுக்கொண்டு,இரட்சிக்கப்பட்டோமோ,
அன்றைக்கு இருளின் ஆதிக்கத்திலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும், மீட்டெடுக்கப்பட்டு, அன்பின் குமாரனாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்துக்குள் வந்து விட்டோம்

டேனியல்: இதனால் சாத்தான்,
நமக்கு எதிராளியாக மாறி,
கொடூரமாய் நம்மை தாக்க முயற்சிக்கிறான்,உலகம்,மாம்சம்,
பிசாசு என்னும்,அந்தகார லோகாதிபதிகள்,வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள் நம்மோடு போராட ஆரம்பிக்கிறது,ஆனாலும்
நாம் பயப்படக்கூடாது,கிறிஸ்துவின் இரத்தத்தோடு பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும் அப்போது அவன் ஓடிப்போவான்... தோற்றுப்போவான்..

பீட்டர்: சாத்தான் ஒரு கர்ஜிக்கிற சிங்கம்
யாரை விழுங்கலாமோ என்று வகைத் தேடி, சுற்றித்திரிகிறான் (1 பேது. 5:8-9). அதே நேரம், நாம் கர்த்தர் யூத ராஜ சிங்கமாய்,நம்முடைய அருகிலே நிற்கிறார் (வெளி. 5:5). சிங்கத்தின்மேலும், வலுசர்ப்பத்தின் மேலும், கர்த்தர் நமக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். சிங்கத்தின்மேலும்,விரியன் பாம்பின்மேலும் நடந்து,பால சிங்கத்தையும், வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போட கிறிஸ்துவுக்குள் நம்மால் முடியும்....

டேனியல்: கிறிஸ்துவின் இரத்தத்தால் மாத்திரமே நாம் சாத்தானுடைய தந்திரங்களையும்,சதி ஆலோசனைகளையும் முறியடிக்க முடியும்... இயேசுவின் இரத்தத்தை நாம் பேசும் போது சாத்தானின் கிரியைகள் இல்லாமல் போகிறது.
சாத்தான் இயேசுவின் இரத்தத்திற்கு முன்னால் செயலற்றவனாய் ஆகிறான்

பீட்டர்: ஆமா டேனியல்! தேளின் கொடுக்கு,கூரிய கத்தியினால் நறுக்கப்பட்டுவிட்டால், அதனுடைய விஷம் நம்மேல் இறக்க முடியாது. அதுபோல கரு நாகப்பாம்பின் விஷப்பற்களைப் பிடுங்கி விட்டால், அது என்ன தான் சீறினாலும்,நம்மை அது சேதப்படுத்த முடியாது. அதுபோல, பால சிங்கம், பலமாக இரும்பு சங்கிலியினால் கட்டப்பட்டிருக்குமேயானால்,
நம்மேல் பாய முடியாது,அதே போல் நாம் இயேசுவின் இரத்தத்தை சாட்சியாக வைத்து வசனத்தை பிரயோகித்து நாம் சாத்தானை எதிர்க்கும் போது அவன் நிலைகுலைந்து போய் செயலிழந்து போய்விடுவான்.... அவனின் அழிவின் சக்திகள் நம்மேல் பலிக்காது..

டேனியல்: எனவே நம்முடைய வாழ்க்கையிலே,கர்த்தர் கல்வாரிச் சிலுவையிலே பெற்ற ஜெயத்தை செயல்படுத்துவோம்,அவரின் இரத்தத்தை பயன்படுத்துவோம்,
தேவனுடைய வார்த்தையினாலும்,
இயேசுவின் இரத்தத்தாலும்,
நாம் எதிர்கொள்ளும்  போராட்டங்களையும்,
பிரச்சனைகளையும்  மேற்கொள்ளுவோம்,
கிறிஸ்துவுக்குள் வெற்றியும்
வாழ்வும் என்றும் நமதே...

ஆமென்... அல்லேலூயா...

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

(2 கொரிந்தியர் 2:14)

======================
Revelation by spirit of God
======================

கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை


கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை என்றார்கள். (எண்ணாகமம் 1
4:9)

ஜான்: வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கும் முன்பு, மோசே 12 வேவுகாரர்களை அந்த தேசத்தை வேவு பார்க்க அனுப்பினான்.

பீட்டர்: ஆம், அவர்கள் அனைவரும் மிகவும் அழகான அந்த தேசத்தை சுற்றிப்பார்த்தார்கள். ஆனால் அவர்களில் 10 பேர் அங்கிருந்த தடைகளையே அதிகமாக பார்த்து, இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் அதைரியப்படுத்தினார்கள்(எண் 13:27-33). அவர்கள் கூறியதைக் கேட்ட அனைத்து மக்களும் திகில் அடைந்தார்கள்(எண் 14:1-4).

ஜான்: ஆனால் காலேபும்,யோசுவாவும், அதற்கு பயப்படாமலும், மற்றவர்களது பய உணர்ச்சியினால் பாதிக்கப்படாமல் தனித்துநின்றார்கள்.

பீட்டர்: ஆமா நண்பா,காலேபும், யோசுவாவும் மட்டும் அந்த சூழ்நிலையை சரியான கண்ணோட்டத்துடன் பார்த்தார்கள்(எண்14:6,9) அதாவது தேவன் வாக்குத்ததம் பண்ணினபடியே அதை பாலும் தேனும் ஓடுகிற தேசமாக மட்டுமே  பார்த்தார்கள்,மற்ற10 பேரும் அதை பராக்கிரமசாலிகள் நிறைந்த மோசமான தேசமாகவும்,ராட்சசர்கள் நிறைந்த பயங்கரமான தேசமாக பார்த்தார்கள்...

பீட்டர்: ஆமா,அந்த எதிர்மறை கண்ணோட்டக்காரர்கள்,
தேவனுடைய ஜனங்களிடம்,
அவிசுவாசமாய் பேசி,அவர்களை
அதைரிய படுத்தி,பயமுறுத்தி கலங்க வைத்தார்கள்...அதனால் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு எதிராக முறுமுறுத்த அவர்களில் ஒருவர் கூட போய் சேர வேண்டிய இடத்துக்கு போய் சேரவில்லை, அவர்கள் எதை பேசினார்களோ அது அவர்களுக்கு சம்பவித்தது..வனாந்திரத்திலே
அழிந்து போனார்கள்...

ஜான்: ஆனால், காலேபும், யோசுவாவும்,இம்மட்டும் தேவன் அவர்களை நடத்தி வந்ததைப்பற்றி நன்கு அறிந்திருந்ததினால் நிச்சயமாக தேவன் நமக்கு வெற்றியைத் தந்து தான் வாக்குத்தத்தம் பண்ணியதை நிறைவேற்றுவார்,என்ற நம்பிக்கை எண்ணத்தோடு இருந்தார்கள்,அந்த கண்ணோட்டத்தோடு அந்த தேசத்தை பார்தார்கள்,அதையே பேசினார்கள்
அதன்விளைவு,வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அவர்கள் சுதந்தரித்தார்கள்...

பீட்டர்: எனவே நாம், கண்களால் காண்கிறவைகளை நோக்கிப்பார்த்து சிந்திக்காமல்,கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை நோக்கிப்பார்த்து சிந்திப்போம்,சூழ்நிலையை பார்த்து அவிசுவாசமாய் பேசாமல், எந்த சூழ்நிலையிலும் கர்த்தர் நம்மோடு
இருந்து அவர் வாக்குப்பண்ணியதை
நமக்கு கொடுக்கிறவராய் இருக்கிறார்
என்று விசுவாசமாய் #பேசுவோம்...
அதை நம் தேவன் #கேட்பார்..
அவர் செவிகள் கேட்க நாம் சொன்ன #பிரகாரமே அவர் நமக்கு செய்வார்..

ஆமென்...அல்லேலூயா...

நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்:நீங்கள் #என்செவிகள் #கேட்கச் சொன்ன பிரகாரம் உங்களுக்குச் #செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
எப்புன்னேயின் குமாரன் காலேபும்,
நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.

(எண்ணாகமம் 14:28,30)

======================
Revelation by spirit of God
======================

நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.

(2கொரிந்தியர் 4: 16)

பரத்: கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வெறும் மேலோட்டமான வெளிபிறகாரமான மனிதனுக்குரியது மாத்திரம் அல்ல அது ஆவிக்குரிய உள்ளான மனிதனின் வளர்ச்சியை சார்ந்தது....

பிரவீன்: பெயரை மாற்றிக்கொள்ளுதல்,  ஆடைகளில் மாற்றம் செய்தல்,காலனி அணியாதிருத்தல், இவைகள் எல்லாம் மிகவும் முக்கியமானதே அல்ல... இவைகளை வைத்து ஒருவரை ஆவிக்குரியவராக கருத முடியாது

பரத்: ஆமா நம்முடைய தனிப்பட்ட  வாழ்க்கை தேவனுடைய வார்த்தைகளை பிரதிபலிக்ககூடியாதாக இருக்க வேண்டும், நம் பேச்சு, நடத்தை என எல்லாம் வேதத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும்...

பிரவீன்: சரியாக சொன்னாய்
நண்பா ! வெளிபிரகாமான மாற்றத்தைவைத்து நாம் எதையும் தீர்மானிக்க முடியாது.. பலருடைய வாழ்க்கை சில நேரங்களில் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை பேல இருக்கவும் வாய்ப்புள்ளது,எனவே
கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை, இவைகளை நாம் விட்டுவிடவேண்டும்...
அதோடுகூட மனித உறவுகளில் பிளவு, விரிசல், வெறுப்பு, பகை, கசப்பு, கோபம், பொறாமை ஆகிய பழைய மனிதனின் சுபாவத்தை களைந்து விட்டு
கிறிஸ்துவுக்குள் புதிதாய் பிறந்த,
நமது புதிய உள்ளான மனுஷனில் நாளுக்கு நாள் புதிதாக்கப்பட்டு கொண்டே இருக்க வேண்டும்....

ஆமென்... அல்லேலூயா...

அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

(எபேசியர் 4: 22-24)

======================
Revelation by spirit of God
======================

இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு,
மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

(2 பேதுரு 1:4)

ஜேம்ஸ்: தேவன் நமக்கு அருளின வாக்குத்தத்தங்களில் பெரும்பாலான வாக்குதத்தங்கள் நம்முடைய குணங்களை தேவன் மாற்றுவார் என்பதைப்பற்றியே இருக்கிறது..அதைத்தான் 2 பேதுரு 1:4 ல் வசனம் சொல்கிறது.

பீட்டர் : ஆமா நண்பா! இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, அவருடைய திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவரின் காருணியத்தினால் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது,தேவனை
அறிகிற அறிவின் மூலமாய் வருகிற, விசுவாசத்தினால் நாம் இந்த வாக்குதத்தங்களை சுதந்தரித்து கொள்ளலாம்...

ஜேம்ஸ் : ஆமா! வாக்குத்தத்தம் பண்ணினவரே அதை நிறைவேற்றியும் முடிப்பார்.. என்கிற விசுவாசத்தில் வாழ்கிற வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்

பீட்டர் : ஆமா நண்பா! நாம் செய்கிற செய்கைகளை நம்பி அல்ல! அவர் நமக்காக செய்தவைகளை நம்பி,விசுவாசித்து வாழ்கிற வாழ்க்கையே,புதிய ஏற்பாட்டு
விசுவாச வாழ்க்கை...

ஜேம்ஸ் : சரியாக சொன்ன!
நண்பா !

இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்ப தங்கள் கிரியைகளை
சார்ந்து பரிசுத்ததை பெற #முயற்சி செய்கிற வாழ்க்கை #பழைய ஏற்பாட்டு வாழ்க்கை....

கிருபையை சார்ந்து,கிறிஸ்துவுக்குள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை
விசுவாசித்து,தேவனோடு நெருங்கிய தொடர்பு வைத்து,அவருடைய
திவ்விய பரிசுத்த சுபாவத்துக்கு
நம்மை பங்குதாரர்களாக ஆக
செய்கிற வாழ்க்கை #புதிய ஏற்பாட்டு வாழ்க்கை....

இந்த வாழ்க்கை விசுவாசத்தினால் வேலை செய்கிறது,எனவே நாம் எளிதாக இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பிக்க முடியும்,ஏனென்றால் விசுவாசம் உள்ள இடத்தில் தேவனுடைய வல்லமை,அவரின் மகிமை செயல்படுகிறது...

பீட்டர் : ஆமா! ஜேம்ஸ் பாவத்தினால்
தேவ மகிமை போனது (ரோமர் 3:23)
ஆனால் போன தேவ மகிமை மறுபடியும் எப்படி வருகிறது என்று இயேசு சொல்லுகிறார் நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்
(யோவான் 11:40)

ஜேம்ஸ்: பழைய ஏற்பாட்டின் வாழ்க்கை
சுய முயற்சியிலே நீதிமானாக பரிசுத்தவானாக ஆக விரும்புகிற வாழ்க்கை.... ஆனா புதிய ஏற்பாட்டில் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்பி விசுவாசித்து,அவருடைய மகிமையினாலே நாம் நீதிமானாக,பரிசுத்தவானாக மாற்றப்பட்டு அவரோடு இணைந்து  நடைபோடுகிற வாழ்க்கை...

பீட்டர் : ஆமா நண்பா! இயேசு
கிறிஸ்து சொல்கிறார்
நீ விசுவாசித்தால் தேவனுடைய
மகிமையை காண்பாய்
தேவன் நமக்கு அருளின வாக்குத்தத்தங்களில் பெரும்பாலான வாக்குதத்தங்கள்  உன்னை மாற்றுவேன் என்பதே,எனவே நம்முடைய குணத்தில்,சுபாவத்தில்
தேவனுக்கு ஏற்புடைய மாற்றத்தை
நாம் அடைய,அவரது கிருபையை இரக்கத்தை சார்ந்து,அவரின் வாக்குதத்தங்களை விசுவாசித்து
வாழ்வோம்...நிச்சயம் நாம் அவரின்
அன்பின் சுபாவத்திற்கும்,திவ்விய
 பரிசுத்த சுபாவத்துக்கும்
 பங்குதாரர்களாக மாறுவோம்

ஆமென்... அல்லேலூயா...

======================
Revelation by spirit of God
======================

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

(எபிரெயர் 4:12)

டேனியல் : பிரச்சனைகளும் போராட்டங்களும் நிறைந்த இந்த உலகத்தின், பிரச்சனைகள் போராட்டங்கள் பற்றி அல்ல அவைகளின் மத்தியில் தேவனுடைய ஜீவன் நிறைந்த வார்த்தைகளை நாம் பேச வேண்டும்...

லாரன்ஸ் : அப்படீனா பிரச்சனைகளைகளை பற்றி பேசக்கூடாதா?

டேனியல் : ஆமா! லாரன்ஸ்!  பிரச்சனைகளை பற்றி பேசக்கூடாது  பிரச்சனைகளுக்கு தீர்வு வேதாகமத்தில் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த தீர்வை நீ பேச வேண்டும்..

லாரன்ஸ் : எப்படி சார்?

டேனியல் : ஒரு விசுவாசின் உடலில் ஏதாவது பெலவீனம் இருக்கலாம்,
ஆனால் அந்த விசுவாசி பெலவீனத்தை பேசக்கூடாது, ஏனென்றால்
இயேசு நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் (மத் 8:17)
பலவீனனும் தன்னைப் பலவான்
என்று சொல்வானாக. (யோவேல் 3:10) என்று வேதம் போதிக்கிறது....
எனவே கண்களுக்கு  முன்பாக இருக்கிற பெலவீனத்தை பேசுவதை
விட்டுவிட்டு,காணப்படாத ரூபத்தில் இருக்கிற பெலத்தை பேச வேண்டும்
பிறகு கிறிஸ்து இயேசுவுக்குள்,
பெலன் நமது பங்காக மாறும் பெலவீனம் தெறித்து ஓடும்..

லாரன்ஸ் : அப்படியா!!!

டேனியல் : ஆமா லாரான்ஸ்,
ஒரு விசுவாசின் வாழ்வில் ஏதாவது குறைவுகள் இருக்கலாம்,ஆனால்
அந்த விசுவாசி குறைவுகளை பேசக்கூடாது,ஏனென்றால்
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.(பிலி 4:19)
எனவே குறைவுகளை அல்ல  தேவனுடைய மகிமையின் ஐஸ்வரியத்தை பேச வேண்டும்,
பெலவீனத்தை அல்ல தேவன்
நமக்காக ஏற்படுத்தி வைத்திருக்கும் ஆரோக்கியத்தை பேச வேண்டும்

மொத்தத்தில் எதிர்மறை சூழ்நிலைகளை பார்த்து பேசுவதை விட்டுவிட்டு,அந்த எதிர்மறையான சூழ்நிலைக்கு எதிராக தேவனுடைய ஜீவன் நிறைந்த வார்த்தைகளை எடுத்து பேச வேண்டும்
அப்போது எதிர்மறையான சூழல்
நேர்மறையாக மாறும்....

லாரன்ஸ் : அப்படீனா! காண்கிறதை,உணர்கிறதை
அல்ல காணாததை,உணராததை
விசுவாசித்து பேச வேண்டும் என்கிறீர்களா பிரதர்?

டேனியல் : ஆமா! லாரன்ஸ்! நாம் இருக்கிறதை பேசுவதற்கு அழைக்கப்படவில்லை,வேதத்தில் எழுதியிருக்கிறதை பேசவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.....

லாரன்ஸ் : புரியல,கொஞ்ஜம் ஈசியா புரியிரமாதி சொல்லுங்க..பிரதர்...

டேனியல் : ஓகே லாரன்ஸ்....
இயேசு கிறிஸ்து இந்த பூமியில்
உபவாசம் இருந்தபோது,அவருக்கு
பசி இருந்தது. ஆனால் அவர்
 #பசி #இருக்கிறது என்று
 இருக்கிறதை பேசவில்லை,அதற்கு
மாறாக மனுஷன் அப்பத்தினாலே
மாத்திரமல்ல #தேவனுடைய #வார்தையினாலே #பிழைப்பான்
என்று எழுதியிருக்கிறதே என்று #எழுதியிருக்கிறதை பேசினார்...

எனவே பிரச்சனைகள் நிறைந்த இந்த உலகத்தில்,பிரச்சனைகளை அல்ல
பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிற
தேவனுடைய ஜீவன் நிறைந்த வார்த்தைகளை பேச வேண்டும்.

குறைவுகளும் பற்றாக்குறையும் நிறைந்த இந்த உலகத்திலே,
குறைவுகளையும்,பற்றாக்குறையையும் அல்ல,தன்னை தொழுது கொள்கிற
அனைவருக்கும் தேவன் ஐஸ்வர்ய சம்பூரணராய் இருக்கிறார்,
நம் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் என்று தேவனுடைய வல்லமை நிறைந்த வார்த்தைகளை பேச வேண்டும்..

வியாதிகள் நிறைந்த இந்த உலகத்தில்,வியாதிகளை அல்ல,
தேவன் தனது வசனத்தை அனுப்பி என்னை குணமாக்கினார்,இயேசுவின் தழும்புகளால் நான் குணமானேன் என்று ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாய் இருக்கிற தேவனுடைய வார்த்தைகளை பேச வேண்டும்..

லாரன்ஸ் : அப்படீனா தேவனுடைய
ஜீவன் நிறைந்த வாக்குதத்தங்கள்
நம் வாழ்வில் நிறைவேறுவதும், நிறைவேறாமல் போவதும்,
நம்முடைய நாவின் அதிகாரத்தில்
தான் இருக்கிறது அப்படீனு நீங்க சொல்லவர்றீங்களா பிரதர் ?

டேனியல் : ஆமா ஆனா அதை
நான் சொல்லல அதை சொன்னது கர்த்தர்.....

"மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின்
கனியைப் புசிப்பார்கள்"(நீதி 18:21)

நாம் நல்ல ஒரு கிறிஸ்தவ விசுவாசியாக இருந்தால் மட்டும் போதாது.. நாம் பேசுகிற வார்த்தைகள் தேவனுடைய வார்த்தைகளுக்கு ஒத்திருக்கிறாதா என்பதை பொருத்தே நாம் மாரணத்தின் கனிகளையா? அல்லது ஜீவனின் கனிகளையா?
எதை புசிக்கபோகிறோம் என்பது தீர்மானிக்கப்படுகிறது...
நாம் ஜீவன் நிறைந்த தேவனுடைய வார்த்தைகளையே என்றும் பேசி
ஜீவன் நிறைந்த வாழ்க்கையையும்,
சூழ்நிலையையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்பார்கிறார்.. எனவே அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வேதத்தில்  எழுதியிருக்கிறதை பேசுவாம்..

ஆமென்... அல்லேலூயா...

======================
Revelation by spirit of God
======================

https://facebook.com/LIVINGWAYMARVEL/

#2017ஜீவவழியின்நற்செய்தி

#2017ஜீவவழியின்நற்செய்தி

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி,
மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்;
நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

(ஏசாயா 58:11)

பரத்: கடந்த வருடத்தில்,கர்த்தர்
நம்மை நடத்திவந்த பாதைகளை
திரும்பி பார்த்தால் ஆச்சரியமாக இருக்குது நண்பா! யாரும் எளிதாக,கடக்க முடியாத கடுமையான பாதைகளை,கர்த்தர் நம்மை
எளிதாக கடக்க வைத்திருக்கிறார்...

பிரவீன்: அதுமட்டுமல்ல பிரவீன், எவராலும்,விரைவில் முடிக்க முடியாத, அனேக காரியங்களை, கர்த்தர் நம்மை வைத்து முடித்திருக்கிறார்...

பரத்: ஆமா! நம்மால் முடியாததை,நமக்காக நமக்குள் இருந்து,முடித்தவர் கர்த்தர்
கடந்த வருடத்தில்,நமக்கு கிடைத்த எல்லா வெற்றிகளும் கர்தருடையது...
நிகழ்காலத்திலும்,வருங்காலத்திலும்
வரப்போகிற எல்லா வெற்றிகளும் கர்த்தருடையது தான்,ஏனென்றால் நாம்,அவருடையவர்கள்,
அவருக்கு சொந்தமானவர்கள்,
அவரது சொந்த இரத்த கிரயத்தால்,
விலைக்கு வாங்கப்பட்டவர்கள்,
அவர் இல்லாமல்,நம்மால் ஒன்றும் செய்ய முடியாது...

பிரவீன் : ஆமா! கர்த்தராகிய இயேசுவை பிரிந்தது  நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது...கடந்த வருடம் நமக்கு கிடைத்த வெற்றிகள்,
நம் அறிவாலும்,திறமையாலும்,
வந்ததல்ல,அது ஆண்டவருடைய வார்த்தையாலும்,அவர் கொடுத்த
வாக்குத்தத்தங்களினாலும்
வந்தது..

பரத்: ஆமா! தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறது (2 கொரி1:20) என்று எழுதியிருக்கிறது..

பிரவீன்: ஆமா தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நமது அறிவின் அடிப்படையில்,திறமையின், அடிப்படையில்,செல்வாக்கின்  அடிப்படையில் நமக்கு  வந்து கிடைக்கிறது  இல்லை,அவைகள் தேவன் நம்மீது வைத்த அன்பின் வெளிப்பாடாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம்,நமக்கு கிடைத்திருக்கிறது,
விசுவாசத்தினால் அவைகள் நமக்கு சொந்தமும் ஆகிறது.

பரத்: (ஏசாயா 58:11)-ல் இவ்வாறாக தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்...

"கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்;
நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும்,வற்றாத
நீரூற்றைப்போலவும் இருப்பாய்"

பிரவீன்: ஆம்,நிச்சயமாகவே!
கர்த்தர் நித்தமும் நம்மை நடத்தி,
மகா வறட்சியான காலங்களில்
நம் ஆத்துமாவைத் திருப்தியாக்குவார்.

பரத்: ஆமா பிரவீன் நமது வாழ்வில் வறட்சியான சூழ்நிலையை வரப்போவது கிடையாது,
ஏனென்றால் கர்த்தர் நமது
மேய்ப்பராய் இருக்கிறார்,
நாம் அவரின் மேய்ச்சலின்
ஆடுகளாய் இருக்கிறோம்,
எனவே நமது வாழ்வில் வறட்சி
என்ற பேச்சுக்கே இடம் கிடையாது...
ஆனால் இந்த உலகத்தில் வறட்சி உள்ளது... நாம் கர்த்தர்  நல்லவர்
என்ற சத்தியத்தில் வேரூன்டப்பட்டவர்களாய்,
அவர் நம்மை நலமும் விசாலமுமான,
திருப்திகரமாக பாதைகளில் நடத்த வல்லவர் என்கிற விசுவாசத்திலே உறுதியாக இருந்தால், உலகத்தின் வறட்சி நம்மை அனுகாது...

பிரவீன்: ஆமா நண்பா! இந்த உலகத்தில் வறட்சி இருந்தாலும்,
இனி மகா வறட்சியான காலம் வந்தாலும்,கர்த்தர் நம்மை நடத்துகிறபடியால்,நம்முடைய
பாதை என்றுமே பாலும் தேனும்
ஓடுகிற நலமும் விசாலமுமான பாதைதான்

பரத்: ஆமா! அவர் நம்முடைய ஆத்துமாவைத் திருப்தியாக்கி,
நம் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்;
நாம் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும்,வற்றாத
நீரூற்றைப்போலவும் நாம் நிச்சயம்  இருப்போம்,அதில் எனக்கு எந்த சந்தேகமும்  இல்லை...
ஏனென்றால் நம்மை நடத்துகிறவர் வானத்திற்கும்,பூமிக்கும்
சொந்தக்காரர் அல்லவா!

பிரவீன்: ஆமா! நம்மை விட அறிவாலிகளும்,திறமைசாலிகளும் நம்மை சுற்றி நெறய பேர் இருக்காங்க ஆனா அவங்க அவிசுவாசிகளாய் இருப்பதால்,கர்த்தருடைய நடத்துதல் இல்லாதவர்களாய்,பாவத்திற்கும்,
சாபத்திற்கும்,வியாதிக்கும்,
தரித்திரத்திற்கும் அடிமைப்படுத்தப்பட்டு
அடிமட்டத்தில் இருக்கிறார்கள்,
அவர்களுக்கு எட்டாத உயரத்தில், நம்மை தூக்கி வைத்தவர் 'கர்த்தர்', இதை நம் வாழ்நாளில் என்றும், மறக்கவே கூடாது...

பரத்: ஆமா மறக்கவே கூடாது,
இதுவரைக்கும் நம் வாழ்வில் நடந்த எல்லா நன்மைகளுக்கு காரணர் கர்த்தர் மாத்திரம் தான்,
எந்த தீமைக்கும் கர்த்தர் காரணர் அல்லவே அல்ல.. இதையும் நாம் மறக்கவே கூடாது...

பிரவீன்: ஆமா! கர்த்தர் நல்லவர்
நன்மை மட்டுமே செய்கிறவர்...
நம் வாழ்வில் பெற்ற நன்மையான ஈவுகளுக்கு அவர்தான் காரணர்,
எந்த தீமைக்கும் அவர் காரணர்
அல்ல..

பரத்: ஆமா நண்பா கடந்த வருடத்தில்  அவர் நமக்கு போதித்து,நடத்திவந்த பாதைகளுக்காகவும்..நம்
வாழ்நாள் முழுவதும் அவர்
நடத்த போகிற பாலும் தேனும்
ஓடுகிற நலமும் விசாலமுமான பாதைகளுக்காகவும்,கர்த்தரை,
 நன்றி நிறைந்த உள்ளத்தோடு
என்றும் துதிப்போம்..அவரின்
நாமத்தின் மகிமைக்காக மாத்திரமே என்றும் உழைப்போம்...

பிரவீன்: ஆமா,இந்த வருடத்தின்,
ஆரம்ப நாள்முதல்,நாம் இந்த
பூமியில் வாழ்கிற கடைசி நாள்
வரை..நாம் பெறப்போகிற எல்லா
வெற்றிகள்,உயர்வுகள் என அனைத்திலும்,நமது சுய
பெருமையை முற்றிலும் தவிர்ப்போம், நான் அல்ல,கிறிஸ்துவே,என்று நமது எல்ல உயர்விலும்,கர்த்தரின்
நாமத்தை மாத்திரம் உயர்த்துவோம்.
வருகிற வருடத்திலும் அவர்
நிச்சம் நமக்கு போதிப்பார்,
நாம்  நடக்கவேண்டிய வழியை காட்டுவார்,நம்மேல் அவர் கண்ணை வைத்து, நமக்கு என்றும்
ஆலோசனை சொல்லுவார்....

ஆமென்... அல்லேலூயா...

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
(சங்கீதம் 32:8)

======================
Revelation by spirit of God
======================

விழித்திருங்கள்,விசுவாசத்திலே நிலைத்திருங்கள்,புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.

(1 கொரிந்தியர் 16:13)

பரத்: நாம் விழிப்போடு,
திடன் கொண்டு தைரியமாயிருக்க
வேண்டும் விசுவாசத்திலே நிலைத்திருக்க வேண்டும்,நம்மை சுற்றியிருக்கிற,நம்மை நெருக்குகிற சூழ்நிலையை பார்த்து, நம் இருதயத்தை தளர விடக்கூடாது

பிரவீன்: ஆமா நம் இருதயத்தை
தளர விடக்கூடாது,ஒரு மனிதனால் எப்பொழுது விழிப்பாய்,தைரியமாய்,
திடமாய் இருக்க முடியும்? என்ற கேள்விக்கு பதில் அவன்,தேவனோடு கொண்டுள்ள ஆழமான உறவே, அவனை  விழிப்பானவனாய், திடமுள்ளவனாய், தைரியமுள்ளவனாய் விசுவாசமுள்ளவனாய், மாற்றும். தேவனோடு ஒரு மனிதன் கொண்டுள்ள ஆழமான உறவு,
அவனது எதிர்மறையான சூழ்நிலையை,நேர்மறையாக
மாற்ற செய்யும்.

பரத்: ஆம்,தேவனோடு ஆழமான ஐக்கியம் கொள்ளும்போது,மனிதன் தேவனிடம்  இருந்து வருகிற சமாதானத்தையும்,
சத்துவத்தையும், செழிப்பையும்,
பலத்தையும், பெறுகிறான்...

பிரவீன் :ஆமா,ஆனால் ஒரு மனிதன் தனது சூழ்நிலையைப் பார்த்து,தனது நிகழ்காலத்தையும்,எதிர்காலத்தையும் குறித்து பயந்து கலங்கும்போது,
அதை சந்திப்பதற்கான தைரியத்தையும் உறுதியையும் இழக்கிறான்,கடைசியில் தோல்வி அடைகிறான்.ஆனால் தேவனோடு நல்ல ஐக்கியம் கொண்டிருக்கிற
மனிதன் சூழ்நிலைகளை பார்த்து பயப்படாமல்,அந்த இக்கட்டான  சூழ்நிலைகளை மாற்ற வல்ல, தேவனுடைய வார்த்தைகளையும்,வாக்குத்தங்களையும் நோக்கி பார்த்து அதையே விசுவாசித்து சூழ்நிலைகளை ஜெயம் கொள்கிறான்
நாம் இப்படிப்பட்ட ஜெயம் கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்
என்று தேவன் விரும்புகிறார்.

பரத்: ஆமா,எனவே இக்கட்டான
சூழ்நிலை வரும் போது அதை
பார்த்து பயந்து கர்த்தருடைய வாக்குத்தங்களின்  பேரில் உள்ள விசுவாசத்தை,தளர்த்திவிடாமல்,
தீவிரமாகவும் உறுதியாகவும்
வசனங்களை இருதயத்தில்
வைத்து  பற்றி கொள்ளுவோம்..
தேவனோடு நமக்குள்ள ஆழமான ஐக்கியத்தை இன்னும் அதிகமாக்குவோம். நாம் எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் இப்போது இருந்தாலும் அந்த சூழ்நிலையை மேற்கொண்டது நிச்சயமாகவே நாம் ஜெயம் எடுப்போம்.. கர்த்தர் நம்மோடு இருக்கிறார்,நாம் கர்த்தரோடு பழகும் நேரத்தை அதிகமாக்குவோம்..
அதனால் நமக்கு நன்மை தான் வரும்.

ஆமென்... அல்லேலூயா...

நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.
அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

(யோபு 22:21-22)

======================
Revelation by spirit of God
======================

#பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார், (1 தீமோத்தேயு 1:15)

#பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து
இயேசு உலகத்தில் வந்தார்,
(1 தீமோத்தேயு 1:15)

ராணி: இயேசு கிறிஸ்து வந்தாரா ? எல்லாரும் பிறந்தார்னுதான சொல்லுவாங்க நீங்க வந்தார்னு சொல்றீங்க பிரதர் ?

பரத்: ஆமா சிஸ்டர் ஆனா,வேதாகமம் இந்த இடத்தில்,இயேசு உலகத்தில் 'பிறந்தார்' என்று கூறாமல்'வந்தார்' என்று கூறுகிறது,இயேசு கிறிஸ்து 'வந்தார்' என்று கூறுவதை கவனித்தாலே இயேசுவின் முக்கியத்துவத்தை நாம் தெரிஞ்சுகிடலாம்...

ராணி: எப்படி தெரிஞ்சுகிடலாம் ?

பரத்: ஒவ்வொரு நாளும் இந்த உலகத்துல  ஏராளமானோர் பிறக்கிறாங்க,ஆனால் இயேசுவோ வெறும் 'பிறந்தவரல்ல'வந்தவர்'

ராணி: அதான் எப்படினு கேக்குறேன் ?

பரத்: சொல்றேன்,சிஸ்டர் உலகத்தில் பிறக்கிறவர்கள் அவர்கள்
பிறந்ததில் இருந்துதான் வாழ
ஆரம்பிக்கிறார்கள்.(அல்லது) தாயின்
கருவில் இருந்தே அவங்க வாழ்க்கை
துவங்கிருச்சுனு கூடசொல்லலாம்.
ஆனால் இயேசுவின்  பிறப்பு
அவருடைய வாழ்க்கையின்
துவக்கம் இல்ல

ராணி: அப்பரம் !!! ???

பரத்: இயேசு ஏற்கனவே இருந்தவர்.
 பிறப்பின் மூலமாக அவர் இந்த
உலகத்துக்கு வந்தவர்.பரிசுத்த
வேதாகமத்தில்"இவர் ஆதியிலே
இருந்தவர், ஆதியும் அந்தமுமானவர், துவக்கமும் முடிவுமானவர்,
கடவுளோடு கடவுளாக இருந்தவர்,
மனுஷனைப்பிரகாசிப்பிக்கிற
ஒளியாய் இருக்கிறவர்”
என்றும், “அவர் மாம்ச சரீரத்திலே
உலகத்தில் வந்தார் என்றும் கூறுகிறது

ராணி: ஓ... அப்படியா !

பரத்: ஆமா சிஸ்டர் ராணி !
இயேசுவுக்கும், உலகத்துல
பிறக்கிற மத்தவங்களுக்கும்,
எவ்வளவு பெரிய வித்தியாசம்
என்பதைப் பாருங்க,இயேசுவின் பிறப்பு
ஒரு சாதாரண மனிதனின் பிறப்பு  இல்ல
அது கடவுளே மனிதனாக இந்த
உலகத்திற்கு 'வந்ததை' குறிக்கிறது
அவரின் பிறப்பு நமக்கு ஒரு சாதாரண மனுஷனின் பிறப்பைப் போலத் தோன்றினாலும், அது உண்மையில்
எல்லாம் வல்ல கடவுளின் உலகப் பிரவேசம் !

ராணி: சரி அது கடவுளின் உலக பிரவேசம்னா ? அது எப்படி எந்த முன்னறிவிப்பும்,எதிர்பார்ப்பும்
இல்லாம திடீர்னு நடந்துருக்கும் ?

பரத்: இயேசு கிறிஸ்துவின் பிறப்பு
ஏதோ எதிர்பாராம திடீர்னு நடந்த
 காரியம் இல்ல சிஸ்டர்,வேதாகமம் பல
நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே
இயேசுவின் பிறப்பையும், அதன்
தொடர்பான பல விவரங்களையும் முன்னறிவித்திருக்கிறது.

ராணி: முன்னறிவித்திருக்கிறதா ! எப்படி ?

பரத்: இயேசு கிறிஸ்து எந்த ஊரில்
பிறப்பார் என்கிறதை அவர் பிறப்பதற்கு
500 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த
மீகா என்ற தீர்க்கதரிசி
முன்னறிவித்தார்.அதுமட்டுமல்ல
ஏசாயா என்ற ஒரு தீர்க்கதரிசி,
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே,
"இதோ,ஒரு கன்னி கர்ப்பவதியாகி
ஒரு குமாரனைப் பெறுவாள்,என்று
இவரின் பிறப்பை முன்னறிவித்தார்.
அது மட்டுமல்ல சிஸ்டர், இயேசு
பிறப்பதற்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட
பழைய ஏற்பாட்டில் இவரின் பிறப்பு,
வாழ்க்கை முறை,சுபாவம்,
பாடுகள்,இறப்பு,உயிர்ப்பு
விண்ணேற்றம் என அவரைப்பற்றிய
 எல்லா  காரியங்களும் முன்கூட்டியே  வேதாகமத்தில் எழுதப்பட்டுவிட்டது

ராணி: அப்படியா ? ஆச்சரியமா இருக்கு!

பரத்: இயேசு,ஒரு கன்னி பெண்ணின் மூலமாக பிறந்தார் என்றும் வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்து
மாம்ச ரூபம் எடுத்து, மனிதராய்
பிறந்தாலும்,மனிதனுடைய பாவ
சுபாவத்தின் கறைப்படாதவராய் பிறந்தார்.பிறப்பில்,வித்தைக்
கொடுக்கிறவன் ஆண்.
பாவக்கறை ஆதாமின் மூலம்
உலகத்திற்குள் பிரவேசித்து,
எல்லார் மீதும் அது வந்தது என்று
வேதம் கூறுகிறது (ரோமர் 5:12).
ஆனால் இயேசுவின் பிறப்பில்
ஆணுக்கு பங்கில்லை.

ராணி: அப்பரம் !!!???

பரத்: அவர் தேவனுடைய
ஆவியானவரின் உதவியால் கன்னிப்பெண்ணாகிய
மரியாள் கர்ப்பந்தரித்தாள்.இப்படி
 ஒரு கன்னிப்பெண் வயிற்றில்
மாம்சத்தில் உருவாகி இயேசு
பிறப்பார் என்பதை ஆதியிலே
"இவர் ஒரு ஸ்திரீயின் வித்தாக பிறப்பார்"(ஆதியாகமம் 3:15).
என்று இவர் பிறப்பதற்கு பல
ஆயிர ஆண்டுகளுக்கு முன்பாகவே
கடவுள் அறிவித்துவிட்டார்.

ராணி: அடேங்கப்பா !! நான்
இதுவரைக்கு இயேசுவின் பிறப்பை
ஒரு சாதாரண பிறப்பாக தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்,ஆனா
இதுல எவளோ விஷயம் இருக்கா ?
இதனால தான்,இயேசு கிறிஸ்துவின்
பூலோக வருகையை ஆதாரமாக வைத்து கி.மு(கிறிஸ்துவுக்கு முன்) கி.பி(கிறிஸ்துவுக்கு பின்) என்று உலக வரலாறுகள் பிரிக்கப்படுகிறதா பிரதர் ?

பரத்: ஆமாங்க சிஸ்டர்,
இந்த உலகத்தில் பிறக்கும் யாராக இருந்தாலும் அவர்களின் காலங்கள் கிறிஸ்துவின் உலக வருகையை பிரதிபலிக்கும்

ராணி: எப்படி பிரதிபலிக்கும் ?

பரத்: சொல்றேன் கேளுங்க
31-10-1987 இது என்னுடைய பிறந்த நாள் இதை முறையான காலவரிசைப்படி சொல்ல வேண்டுமென்றால் இப்படிதான் சொல்லனும் கி.பி 31-10-1987 அதாவது கிறிஸ்து பிறந்து 1987 வருடங்களுக்கு பிறகு அக்டோபர் மாதம் 31-ம் தேதி நான் பிறந்திருக்கிறேன் என்னுடைய பிறப்பு மட்டுமல்ல என் வாழ்வில் ஒவ்வொரு தருணங்களும் ஏன் எனது வாழ்வின் முடிவு நாளும் இயேசு கிறிஸ்துவின் பூலோக வருகையை ஆணித்தரமாக அங்கிகரிக்கிறது.. இந்த உலகத்துல பிறந்த(அல்லது)  இனி பிறக்கப்போகிற யாராக இருந்தாலும் சரி அல்லது வரலாற்றில் நடந்த (அல்லது)இனி நடக்கப்போகிற எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் சரி அவைகள் கி. மு, கி.பி என்று இயேசு கிறிஸ்துவின் உலக  வருகையை உலக மக்களுக்கு எடுத்துக்காட்டிக்கொண்டு இருக்கிறது  இதை யாராலும் மறுக்கும் மறைக்கவும் முடியாது  

ராணி: ஆமா

பரத்: உலக வரலாற்றில் பல கோடிக்கணக்கான அரசர்கள்,
தலைவர்கள்,மதவாதிகள், அறிஞர்கள்,ஞானிகள், மகான்கள்
மேதைகள் என பலர் பிறந்திருக்கிறார்கள் ஆனால் உலக சரித்திரமே இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வைத்து தான் கி.மு (கிறிஸ்துவுக்கு முன்) கி.பி(கிறிஸ்துவுக்கு பின்) பிரிக்கப்படுகிறது, எனென்றால்

#இயேசு கிறிஸ்து இந்த பூமியில் பிறந்து வந்த  மனிதர்களில் ஒருவர் அல்ல, இந்த பூமியில் மனிதனாக வந்து பிறந்த ஒரே தேவன்

ராணி: பிரதர் பரத் நீங்க சொன்ன காரிங்களை எல்லாம் வச்சு பார்க்கும் போது இயேசுவின் பிறப்பு மற்ற எல்லா
பிறப்புகளைக் காட்டிலும் மிகவும்
விசேஷமானது, முக்கியமானது என்ற உண்மை எனக்கு புரியுது...

பரத்: சிஸ்டர் ராணி, நான் இயேசுவைப் பற்றி உங்களுக்கு சொன்னது ஒரு துளியளவு தான் இன்னும் நாம் அறிய வேண்டிய ஏகப்பட்ட காரியங்கள் இருக்கிறது.

ராணி: அப்படியா ! சரி ஓகே இருந்தாலும் அதிலிருந்து சில கரியங்களை இன்று எனக்கு தெரிவிக்கலாமே பிரதர் நான்
உண்மை கடவுளை அறிந்து
கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்

பரத்: கண்டிப்பா சொல்றேன் சிஸ்டர்,
கவனிங்க !

#ஆரம்பத்துல கடவுள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.கடவுள்
தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார்,அது மிகவும்
நன்றாயிருந்தது.என்று கண்டார்...
கடவுள்  இவ்வுலகில் உள்ள அனைத்தையும் உண்டாக்கினார். அவருடைய படைப்பில் மிக சிறந்த படைப்பு மனிதனே, ஏனென்றால் கடவுள் மனிதனை தம்முடைய சாயலில் படைத்தார்,அவர் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார்

#கடவுள் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனிதன் ஜீவாத்துமாவானான்.கடவுள் மனிதனை நேசித்தார். கடவுள் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதித்தார். கடவுள் மனிதனுக்கு சுயமாக முடிவெடுக்கும் திறனை தந்தருளினார்,ஆனால் மனிதன் அதை தவறாக பயன்படுத்தி கடவுளுக்கு கீழ்ப்படியாமற் போனான்.
பாவம் நம்மை கடவுளிடத்திலிருந்துப் பிரித்தது.....

#மனிதனின் கீழ்ப்படியாமை நிமித்தம் பாவம் இவ்வுலகில் தோன்றியது. மனிதனின் இருதயத்தின் யோசனைகள் எல்லாம் பொல்லாப்பு நிறைந்ததாய் இருந்தது.ஆகவே பாவம் மனிதனை கடவுளிடம் இருந்து பிரித்தது. பாவம் என்பது கடவுளால்  விலக்கப்பட்ட செயல் அல்லது சிந்தனை ஆகும். நாம் அனைவரும் வழி விலகி நம்மை நேசிக்கும் உண்மையான கடவுளை விட்டு பின்னோக்கி சென்றோம்.

#பாவத்தை விட்டு முற்றிலும் விலகி நன்மை செய்யும் நீதிமான் ஒருவராகிலும் இவ்வுலகில் இல்லை. பூமியிலே பாவம் பெருக மனிதன் கடவுளை மறந்து போனான், மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள இடைவெளியும் அதிகமாகி கொண்டே இருந்தது. பாவத்தின் சம்பளம் மரணம். நாம் எல்லோரும் பாவம் செய்து நரகத்தில் நித்திய மரண தண்டனை பெறுவதற்கு ஏதுவானோம்.

#பாவம் நிறைந்த மனித இனத்தின் மீட்பிற்காக பாவ நிவாரண பலி தேவைப்பட்டது, ஆதலால் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனிதனாகப் வந்தார்,இப்படியாக கடவுள் தம்முடைய ஒரே குமாரனை தந்தருளி தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். அவரை நம்புகின்ற அனைவருக்கும் நித்திய வாழ்வு உண்டு. பாவத்தின் நிமித்தம் கடவுளுக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட இடைவெளியை நீக்க இயேசு கிறிஸ்து மத்தியஸ்தராக தோன்றினார்.கடவுள் ஒருவரே, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தர்  ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசு அவரே. அவர் நமது பாவங்களுக்காக பாவ நிவாரண பலியாக சிலுவையில் பலியாகி மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, விண்ணேற்றம் அடைந்து,நமது பரம தகப்பனாகிய
கடவுளிடம் நமக்காக பரிந்து
பேசிக்கொண்டு இருக்கிறார்
 இவ்வாறு கடவுள் உலகத்தார் மீது
தான் கொண்ட தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார்.

அதனாலதான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு,உலகம் தரமுடியாத
இரட்சிப்பை பெற்றுக்கொண்டவர்கள்,
தான் பெற்ற இந்த இரட்சிப்பை எல்லா மனிதர்களும் பேற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு உலகமெங்கும்
இயேசுவின் நற்செய்தியை கடந்த
2000 ஆண்டுகளாக அறிவித்தது கொண்டிருக்கிறார்கள்.. அந்த நோக்கத்திற்காக தான் நானும் இப்ப உங்களுக்கு நற்செய்தி அறிவித்து கொண்டிருக்கிறேன் சிஸ்டர்.....

ராணி: ஓ... அதுல ஒரு பகுதியாக
தான் இந்த கிறிஸ்மஸ் காலத்துல
கிறிஸ்தவ மக்கள் பாடல்களைப் பாடி,
கடவுளுக்கு நன்றி செலுத்தி,
ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைத் தெரிவித்து, இயேசு கிறிஸ்து மூலமாய் மனிதனுக்காக கடவுள் ஏற்படுத்தின இரட்சிப்பை உலகெங்கும் உள்ள
மக்கள் விமரிசையாகக்
கொண்டாடுகிறார்களா ?

பரத் : ஆமா சிஸ்டர், இந்த
 கொண்டாத்தில் உங்களுக்கும்
பங்கு இருங்கிறது ஏனென்றால்
இயேசு கிறிஸ்து உங்களுக்கும்,
சேர்த்து தான் இந்த உலகத்திற்கு வந்தார்,இயேசு கிறிஸ்து ஒரு
மதத்தலைவர் அல்ல அவர்
வானத்தையும் பூமியையும்
உங்களையும் என்னையும்
உண்டாக்கின தேவன்.

ராணி: இயேசு கிறிஸ்து எவ்வளவு
பெரிய கடவுள்,வானத்தையும்
பூமியையும் படைத்தவர், இதுக்கு
முன்னாடி அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது,இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்,
அதுமட்டுமல்ல நான் வேற்று மதத்தை சார்ந்தவன்,அவர் எனக்கும் சேர்த்தா ? பூமிக்கு வந்தார் ! இதை நினைத்தால்
 எனக்கு ஆனத்த கண்ணீர் வருகிறது

பரத்: டியர் சிஸ்டர் ராணி,
மதங்கள் எல்லாம் மனிதனால் உண்டாக்கப்பட்டது,தேவன் எந்த
மதத்தையும் உருவாக்கவில்லை
'கிறிஸ்தவம்' என்பது ஒரு மதம் அல்ல,
பலர் அதை மதமாக ஆக்கிக்கொண்டார்கள் ஆனால் இயேசு கிறிஸ்து எல்லா மதத்தினருக்கும் எல்லா மக்களுக்கும் உரியவர். அவர் பாரபட்சம் இன்றி எல்லோரையும் நேசிக்கிறார்,இந்த உலகத்தில் உள்ள எல்லோரையும்
இரட்சிக்க இயேசு பூலோகம் வந்தார்.

உலகில் உள்ள அனைவரும் இயேசுவை  இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர்
கட்டளை இட்டபடி,எல்லோரும் நடக்க வேண்டும்...என்றும்,பாவம்,சாபம்,
தரித்திரம்,வியாதி,அடிமைத்தனம்,
நித்திய மரணம் ஆகிய இருளின் பிடியிலிருந்து எல்லா மக்களும் மீட்படைய வேண்டும் என்றும் கடவுள் விரும்புகிறார்...

ராணி: அப்படியா !!

பரத்: ஆமா சிஸ்டர் ! இயேசுவின் மரணத்தின் மூலமாய் நாம் இருளின் ஆதிக்க அடிமைத்தனத்திலிருந்து இருந்து விடுதலை பெற்று அவருடைய உயிர்த்தெழுதலின் மூலமாய் நாம் புதிய ஒளி நிறைந்த வாழ்வு பெற்று இருக்கிறோம். இயேசுவை விசுவாசித்து அவரை ஆண்டவராக இரட்சகராக ஏற்றுக்கொண்ட யாராக இருந்தாலும் இருளின் பிடியிலிருந்து மீட்பை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.....

ராணி: சரி பிரதர்....

பரத்: அதுமட்டுமல்ல சிஸ்டர்
இயேசு கிறிஸ்து மட்டுமே நித்திய மரணத்திலிருந்து மனிதனை விடுவிக்க கடவுள் கொடுத்த ஒரே வழியாகும். அவரே பரலோகத்திற்கு (மோட்சம்) செல்ல ஒரே வழி ஆவார். அவர் மூலமாய் அல்லாமல் யாரும் கடவுளிடம் சேர முடியாது.

ராணி; இயேசுவை ஏற்றுக்கொள்ள அவரை என் வாழ்வில் பெற்றுக்கொள்ள நான் என்ன செய்யனும் பிரதர் ?

பரத்: இயேசுவை உங்கள் வாழ்வில் பெற்று கொள்ள நீங்கள் எதையும் செய்ய வேண்டியது இல்லை.
இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள,உங்கள் பாவ நிலையை உணர்ந்து, மனம் திரும்பி இயேசுவை விசுவாசித்தால் போதும். இயேசுவை நீங்கள் உங்கள் வாயினாலே அறிக்கையிட்டு,தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உங்கள் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப் படுவீர்கள், ராணி சிஸ்டர் நீங்கள் இயேசுவை உங்கள் இருதயத்தில் விசுவாசிக்கிறீகளா ?
உங்கள் வாயினாலே உங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுவீர்களா ?

ராணி: நிச்சயமாக,உறுதியாக
நான் என் முழு இருதயத்தோடு இயேசுவை விசுவாசிக்கிறேன்,
அவரின் மீது நான் கொண்ட விசுவாசத்தை இப்போதே என் வாயினாலே அறிக்கையிடுகிறேன்.

பரத்: ஆமென்... அல்லேலூயா...

*****************************************

என் அன்பு சகோதர! சகோதரிகளே!  பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேததாகமத்தில்  கடவுளுடைய  வார்த்தை சொல்கிறது..கடவுளுடைய வார்த்தைகளை மீறுவதே பாவமாகும்...
பாவத்தை போக்க பாவமில்லாத மாசற்ற இரத்தம் சிந்தப்பட வேண்டும் இது கடவுளின் சட்டம்...ஆதாமின் பாவ சந்ததி வழியாய் பிறந்த மனுக்குலத்தில் பாவமில்லாத பரிசுத்த மாசற்ற பிறவி யாருமே இருக்க முடியாது ஏனவே ஆதமின் வித்து இல்லாத ஆரம்பமும் முடிவும் அற்ற ஆவியாய்  கடவுளோடு  கடவுளாக இருந்த அவரின்  ஒரே குமாரானை கடவுள் இந்த பூமிக்கு அனுப்பினார்.. மனுகுலத்தின் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் பரிசுத்த இரத்தம் கடவுளுக்கு முன் சிந்தப்பட வேண்டும் எனவே தான் கடவுளுடைய குமாரன் பரிசுத்த ஆவியின் உதவியால்  ஸ்திரியின் வித்தாக மாமிச உருவம் எடுத்து மண்ணகத்திற்கு வந்தார் பாவமில்லாத தன் பரிசுத்த இரத்தத்தை சிந்தி மரணத்தின் சக்தியை தனது மரணத்தினால் அழித்து மனுக்குலத்தை மீட்க மனிதனாக வந்தார் இந்த உலகத்தில் ஆதாம் முதல் பிறந்த இனி உலகில் பிறக்கப்போகிற கடைசி மனிதனின் பாவம் வரை எல்லா மனிதர்களின் பாவங்களும் அதற்கான தண்டனையையும் இயேசு கிறிஸ்து தன் மீது ஏற்றக்கொண்டு நமக்கு விடுதலை கொடுத்து நமது  மனுகுலத்திற்கு இரட்சிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்

உதாரணத்துடன் சொல்ல போனால் நாம் செய்த குற்றத்திற்காக சிறையில் இருக்கும் நம்மை சிறையிலிருந்து மீட்க குற்றமே செய்யாத ஒரு நிரபராதி நமக்காக ஜாமீன் கொடுத்து நம்மை விடுவிப்பது போல்..

சேறு நிறைந்த ஒரு பள்ளத்துக்குள் மூழ்கி கிடக்கும் நம்மை சேற்றிலிருந்து தூக்கி மீட்டேடுக்க அந்த சேற்றிலும் பள்ளத்திலும் இல்லாத ஒருவர் வெளியிலிருந்து வரவேண்டும்

அதே போல தான் பாவத்திலும் சாபத்திலும் சிக்கி கிடந்த மனிதனை அந்த பாவத்திலும் சாபத்திலும் இருக்கிற எந்த மனிதனாலும் அதிலிருந்து மீட்க முடியாது எனவேதான் பாவமே இல்லாத பரிசுத்த தேவனுடைய குமாரன் இயேசு இந்த பூமிக்கு மனிதனாக வந்தார். உலகத்தில் உள்ள எல்லா மனிதனுக்கும் இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய இரட்சிப்பில் பங்கு உண்டு ஆனால் அவரை விசுவாசித்தால் மட்டுமே அந்த இரட்சிப்பாகிய மீட்பு நமது சொந்த பங்காகும்

என் அன்பு சகோதர,சகோதரிகளே இப்படிப்பட்ட உண்மை சத்தியங்களை, உங்களுக்கு அறிவிக்கவும் உண்மையான தேவனாகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள்,உங்கள் முழு உள்ளத்தோடு ஏற்றுக்கொண்டு அவர் உங்களுக்காக ஏற்படுத்தி இருக்கிற பரிபூரண வெற்றி வாழ்வையும் முடிவில்லா நித்திய வாழ்வையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த  செய்திகளை உங்களுக்கு வெளிப்படுத்திக்காட்டி எனது  இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்

கிறிஸ்துவுக்குள் தேவன் சகல ஆசீர்வாதங்களினாலும் உங்களை ஆசிர்வதிப்பாராக
       
ஆமென், அல்லேலூயா.......

======================
Revelation by spirit of God
======================

அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்;ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
(ரோமர் 12: 11)

பரத்: ஒவ்வொரு தேவப்பிள்ளைகளும் எப்பொழுதும் ஆவியில் அனலாயிருக்க வேண்டும், அப்போதுதான் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை எப்பொழுதும் ஜெயமுள்ளதாக  இருக்கும்.

பிரவீன்:நீ சொன்னது சரிதான் பரத், அப்போஸ்தலனாகிய
 பவுல் அத்தேனே பட்டணத்தில் சீலாவுக்காகவும், தீமோத்தேயுவுக்காகவும் காத்துக் கொண்டிருந்த வேளையில் அவன்
ஆவியில் அனலாயிருந்ததால், காத்திருந்த நேரத்தையும் அவன் பிரயோஜனப்படுத்திக் கொண்டான்.(அப்.17:16,17)

பரத்:ஆமா பிரவீன்,
அந்த பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதை பவுல் கண்டு
தன் ஆவியில் வைராக்கிமடைந்து யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணை பண்ணினான்.

பிரவீன்:ஆவியில் அனலாயிருக்கிற  மனிதர்களால் சும்மாயிருக்க முடியாது. அவன் இயேசுவுக்காக ஏதாவது செய்ய, தன் ஆவியில் தூண்டப்பட்டு கொண்டே இருப்பார்கள்

பரத்:ஆமா பரத், அவர்கள் இருக்கும் இடம் மற்றும் செல்லும் இடங்களில் தேவனுடைய வார்த்தைகளுக்கு எதிராக செய்யப்பட்டு வரும் கரியங்களை கண்டால்; அவர்களால் நமக்கேன் வம்பு என்று அதை  பார்த்துக்கொண்டு சும்மா
இருக்க முடியாது.ஏனென்றால் அவர்களுடைய ஆவி அனலாயிருக்கிறபடியில், அவர்கள்
 தைரியத்தோடு, வைராக்கியத்தோடு அவைகளை எதிர்த்து நிற்பார்கள்.

பிரவீன்: அதுமட்டுமல்ல அவர்களால்  இயேசுகிறிஸ்துவை பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்காமல்  இருக்கவே முடியாது...
 அப்.18:5ல் சீலாவும், தீமோத்தேயுவும் வந்தபோது அவர்களுக்குள் ஆவியில் அனல் இருந்தபடியினால் இன்னும் வைராக்கியமடைந்த பவுல்,
இயேசுவே கிறிஸ்து என்று உறுதியாக திட்டவட்டமாக அறிவிக்கத் தொடங்கினான்.

பரத்: ஆமா பிரவீன் நாமும் நமது  ஆவியை  ஒவ்வொரு நாளும் அனல்மூட்ட வேண்டும்,
ஆண்டவருக்காக வைராக்கியம் பாராட்ட வேண்டும், கர்த்தருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு
அசதியாக சும்மா இருக்காமல்
ஆண்டவருக்காக எதையாவது நாம்
செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஆம் என் சகோதர சகோதரிகளே !
நாம் ஆவியில் அனல் கொண்டு இயேசுவே ஆண்டவர் என்று,எல்லா இடங்களிலும் அறிவிக்க வேண்டும் !

கிறிஸ்துவுக்குள் வைராக்கியம் கொண்டு,பொய் உபதேசத்திற்கு எதிராக,தேவனுடைய வார்த்தையே !  சத்தியம் என்று தைரியத்தோடு தெரிவிக்க வேண்டும் !

ஆமென்..... அல்லேலூயா.....