Tuesday 17 November 2015

சாத்தானின் தாக்குதலுக்கு நீ ஆளாக கூடாது... சாத்தான் தான் உன்னுடைய தாக்குதலுக்கு ஆளாகவேண்டும்...

உன்னை பாவ படுகுழிக்குள் இழுக்கும் இச்சையை விரும்பி இனிமேலும் பாவம் செய்யாதே...

ஈடு இணையற்ற தேவ அன்பை விட்டு மீண்டும் தடம் புரளாதே...

பிசாசுக்கு உன் வழியில் திரும்பவும் இடம் கொடாதே...

அவன் கொலைபாதகன் உனக்கு பாவ ஆசை காட்டி,உலக இச்சையை  உன் இருதயத்தில் கூட்டி மோசமான வழியில் உன்னை மிகவும் மோசமாக நடத்துவான்...அது உனக்கு ஏற்கனவே நன்றாக தெரியும்...

மறுபடியும் மோசம் போய்விடாதே...

சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டு நீ
அனுபவித்துக்கெண்டு இருக்கிற பேரின்ப சமாதானத்தை அடிக்கடி இழந்து விடாதே...

பயம்,படபடப்பு,அவிசுவாசம், நிம்மதி இன்மை,கெட்ட கனவு,நோய்கள்,விபத்து,பணகஷ்டம்,என பல வழிகளில் சாத்தான் உன்னை தாக்க வருவான்

அவைகளை கண்டு என்று அலறி திக்கி
திணறி நின்று விடாதே...

சாத்தானின் தாக்குதலுக்கு நீ
ஆளாக கூடாது...

சாத்தான் தான் உன்னுடைய
தாக்குதலுக்கு ஆளாகவேண்டும்...

சாத்தானின் சகல அதிகாரங்களையும் உன் காலுக்கு கீழே போட்டு மிதி...

அந்த அதிகாரத்தை உனக்கு
கொடுத்த இயேசுவின் அன்பை நினைத்து என்றென்றும் அவரை துதி...

ஜீவ வழி-LIVING WAY

No comments:

Post a Comment