Wednesday 18 November 2015

பெயரில் மட்டும் கிறிஸ்தவர்களாய் அல்ல செயலில் கிறிஸ்தவர்களாய் வாழவேண்டும்

சர்வ வல்லமையுள்ள தேவன் நமது சொந்த பிதாவாய் இருக்கிறார்...

நம் அவரின் பிள்ளைகளாய் இருக்கிறோம்...

அவர் கருணை நிறைந்த அப்பா என்பதை கல்வாரியில் நமக்கு வெளிப்படுத்தி காட்டி விட்டார்...

தன் கடைசி செட்டு இரத்தம் வரை சிந்தி நம்மை மீட்டு விட்டார்...

அவர் சாவாமை உள்ளவராய் இருப்பது போல் நம்மையும் சாவாமை உள்ள மக்களாக தனது மரணத்தாலே மாற்றி விட்டார்...

நமது பாவத்தையும் சாபத்தையும் அவர் சிலுவையில் சுமத்து தீர்த்து
பூமியில் பரிபூண வெற்றி வாழ்வையும்
பரலோகத்தில் நிகரில்லா நித்திய ஜீவ வாழ்வையும்.  நமக்கு எற்கனவே எற்படுத்தி வைத்து விட்டார்...

நம் சத்தியத்தை அறிந்து கொள்ள நன்றாக புரிந்து கொள்ள சத்திய ஆவியானவரையும் நமக்குள் அனுப்பிவிட்டார்...

இப்படி அவர்தான் நம்முடைய நிலையான அன்பான ஒரே அப்பா என்பதை முழுமையாக நமக்கு நிரூபித்து காட்டி விட்டார்...

நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய பிள்ளைகாளாய் இருக்கிறோம் அந்த பிள்ளைகளுக்குரிய பண்பு நமக்குள் முழுமையாக இருக்கிறதா ?

நம்முடைய ,சொல், செயல்,வாழ்க்கை முறை,
என எல்லாம்,தேவன் நம்மீது காட்டிய தெய்வீக சுபாவத்தை இந்த உலகுக்கு எடுத்துக்காட்டுகிறதா ?

இல்லை மாம்சீக எண்ணம் கொண்ட நம் சுய சுபாவத்தை எடுத்துக்காட்டுகிறதா?

நம்முடைய,சிந்தனை,சொல், செயல்,வாழ்க்கை முறை,
என எல்லாம் தேவ அன்பையும்,ஞானத்தையும் பரிசுத்தத்தையும், சமாதானத்தையும், நீதியையும் இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும்...

நம்மடைய வாயிலிருந்து புறப்படும் எல்லா சொற்களும்   தேவனுடைய வார்த்தைகளை எடுத்துரைக்க வேண்டும்...

நம்முடைய வாழ்வில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படிகளும் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பிரதிபலிக்க வேண்டும்...

மொத்தத்தில்.........
நாங்கள் தான் பாரம்பரிய உண்மையான கிறிஸ்தவர்கள்...
கிறிஸ்தவ குடும்பத்திலேயே  பிறந்தவர்கள் கிறிஸ்தவ சூழ்நிலையில் வளர்ந்தவர்கள்  என்று தங்களை தங்களாகவே பெருமையாக பேசிக்கொண்டு இருக்கும் "பெயர்" கிறிஸ்தவர்களாய் வாழாமல்

வாழ்வது நான் அல்ல என்னில் வாழ்வது கிறிஸ்துவே என்ற உண்மையை மற்றவர்களிடம் வெளிப்படுத்திக்காட்டி இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவர் என்பதை நம் செயல்கள் மூலம் அறிவிக்கும் "செயல்" கிறிஸ்தவர்களாய் வாழ வேண்டும்

ஆமென்

ஜீவ வழி-LIVING WAY

www.facebook.com/lwcomm

No comments:

Post a Comment