Friday 16 December 2016

எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்

#ஜீவ வழியின் நற்செய்தி

எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்
என்று தாவீது சொல்லியிருக்கிறான்.

(ரோமர் 4:7-8)

டேனியல்: தேவனுடைய வார்த்தையை சரியாக அறியாத அநேக கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய காரியங்களில் தெளிவற்றவர்களாய் வாழுகிறார்கள். அதில் ஒன்று பாவத்தை குறித்த  காரியம்.

ஜான்: தேவன் எந்த ஒரு மனிதனை இரட்சிக்கிறாரோ அந்த மனிதனின் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கிறார்.சில பாவங்களை
மட்டும் மன்னித்து,மற்ற பாவங்களை மன்னிக்காமல் விடுகிறவர் அல்ல. அல்லது சிலபாவங்களை மட்டும் நீக்கி, மற்ற பாவங்களை அவர் அவனுக்கு எதிராக நிறுத்துகிறவரும் அல்ல.

டேனியல்: ஆமா ஆனால் இன்று சில ஊழியக்காரர்கள்,ஜனங்களுக்கு சத்திய வசனத்தின்படி போதிக்காமல்,தங்கள் சுய அபிப்பிராயங்களை போதித்து,
இறைமக்களை  பயமுறுத்துவார்கள்..
"நீ இரட்சிக்கப்படுவதற்கு முன்னாடி
நீ செஞ்ச பாவம்தான் உன்னை இப்ப  போட்டு ஆட்டுதுனு நெனைக்கிறேன்... அந்த காலத்துல நீ செஞ்ச அந்த பாவத்தை தேவன் இன்னம் மன்னிக்கல...." அதனால தான்
உன் வாழ்க்கையில இப்படி நடக்குது அப்படி நடக்குதுனு சொல்லி... விசுவாசிகளை குற்ற உணர்வுள்ளவர்களாக்கி அதைரியப்படுத்தி.. அவர்களை இயேசுவை பற்றும் நம்பிக்கை அற்றவர்களாக்கி,அழிவை நோக்கி நடத்துகிறார்கள்.

ஜான்: ஆமா ஆனா அந்த பிரசங்கியார்கள் போதிப்பது வேதாகமத்திற்கு ஒத்திருக்கிறதா! இல்லையா ! என்று மக்கள் அலசிப்பார்க்காமல் அதை
அப்படியே நம்பி
ஏற்றுக்கொள்கிறார்கள்
அதனால தான் மக்கள்......
பழைய பாவ குற்ற உணர்வோடு,
பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெறாதாவர்களாய் பரிதாபமாக, இருளின் பிடியில் வாழ்கிறார்கள்.

டேனியல்: ஆம் நண்பா! அவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதன் நிமித்தம்,
அவரது  இரத்தத்தால் தாங்கள் முற்றிலும் கழுவபட்டதையும் தூய்மையாக்கப்பட்டதையும்
ஒரு சில மக்கள் உணராமல், அந்த
மாதி கள்ள உபதேசத்திற்கு செவிசாய்த்து,தாங்கள் பாவ சேற்றில் கறைபட்டவர்களாக இருப்பதாக தங்களை எண்ணிக்கொண்டு,
அந்த சேற்றிலே மீண்டும் மீண்டும் விழுகிறார்கள்,கடவுளை விட்டு
தூரம் போகிறார்கள்....

ஜான்: ஆமா நம் தேவன் எப்படிப்பட்டவர்,எந்த மாதிரி தன்மை கொண்டவர் என்கிற அறிவும்,அவரோடு சரியான ஐக்கியமும் இல்லாமையே அவைகளுக்கு காரணம்,ஆனால்
வேதம் இவ்வாறாக போதிக்கிறது

அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

(தீத்து 2:14)

"சகல"என்று சொல்லப்படும் போது அனைத்தும், எல்லா அக்கிரமங்களினின்று தேவன் நம்மை மீட்டுக்கொண்டார்.அதற்காகவே இயேசு ‘தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார்’ என்றும் இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

டேனியல்: ஆமா நண்பா......
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். (சங்கீதம் 103:12)

அவரை விசுவாசிக்கும் அவருக்கு பயப்படும்,நமக்கு தேவன் எப்படியாக பாவங்களை விலக்கிவிடுகிறார் என்று பாரு நண்பா! இவ்விதம் அவைகளை நீக்குகிற தேவன், மறுபடியுமாக அவைகளை எண்ணி நம்மை தண்டிப்பவர் அல்ல. ஆகவே தேவன் நம்மை மன்னிக்கும்பொழுது அது முழு நிறைவான மன்னிப்பே அதைத்தான் வேதம் போதிக்கிறது.....

ஜான்: ஆமா சரியாக சொன்ன டேனியல்.....

அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல
பாவங்களையும் நீக்கி,நம்மைச்
சுத்திகரிக்கும்.பாவங்களை நமக்கு
மன்னித்து எல்லா அநியாயத்தையும்
நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்
(1யோவான் 1:7,9) என்று வேதம் போதிக்கிறது...

இங்கு முக்கியமான இரண்டு வார்த்தைகளைக் கவனிக்கனும்
"சகல பாவங்களையும்" என்றும்
"எல்லா அநியாயத்தையும்" என்றும் சொல்லப்படிருக்கிறது,

எந்த ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டிருக்கானோ,
அந்த மனிதனின் பாவங்கள் அனைத்தையும் தேவன் மன்னிக்கிறார்.
சில பாவங்களை மட்டும் மன்னித்து, பழைய மற்ற பாவங்களை மன்னிக்காமல் விடுகிறவர் அவர் அல்ல. அவர் நமது சகல பாவங்களையும்,எல்லா அநியாயத்தையும்,அக்கிரமங்களையும் மன்னித்திருக்கிறார்.. எனவே மற்றவர்களின் பழைய பாவத்தை சொல்லி அவர்களை காயப்படுத்துவதை விட்டு விட்டு
அவர்களுக்கு தேவ அன்பை போதிக்க ஆரம்பிப்போம்,அன்பு திரளான பாவங்களை மூடும்.அன்பு
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,அநியாயத்தில் சந்தோஷப்படாமல்,சத்தியத்தில் சந்தோஷப்படும்...

ஆமென்... அல்லேலூயா...

என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள் (ஏசாயா 40:1)

*********************************
கர்த்தரே நம் அடைக்கமும் நம் கோட்டையும் தஞ்சமுமாய்
இருக்கிறார் அவரின் அளவற்ற அன்பையும்,கிருபையை சார்ந்து வாழுங்கள்...

உங்கள் பக்கதில் ஆயிரம் பேரும் உங்கள் வலது பக்கத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் நீங்கள்
விழ மாட்டீர்கள் எதுவும் உங்களை அணுகாது சேதப்படுத்தாது...

ஆனால் நீங்கள் பழைய பாவத்தில் மீண்டும் விழுந்து தீமையிடம் அணுகி சென்று உங்களை நீங்களே சேதப்படுத்தி கொள்ளாதீர்கள்...

கர்த்தர் உங்களை எல்லா தீங்கிற்கும் விலக்கி காக்கிறவராய் இருக்கிறார்...

நீங்கள் அவருடைய வார்த்தைகளை  உங்கள் வாழ்விலிருந்து விலக்கி விடாமல் காத்து கைகொள்ளுங்கள்...

உங்களுடைய வாழ்நாளில் எந்த ஒரு தருணத்திலும் சத்துரு உங்களை எதிர்த்து ஜெயிக்க தேவன் அனுமதிக்க மாட்டார்...

ஆனால் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு எதிராக பாவம் செய்து சத்துரு உங்களை ஜெயிக்கும் தருணத்தை  நீங்களே உண்டாக்கி விடாதீர்கள்...

======================
Revelation by spirit of God
======================

https://facebook.com/LIVINGWAYMARVEL/

http://marveljerome.blogspot.in


Wednesday 7 December 2016


இயேசு அவளை நோக்கி:
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவான் 11:25-26)

டேனியல்: நண்பா இந்த உலகத்தின்
பணம்,பதவி,அதிகாரம் எப்பொழுதும் மனிதனுக்கு உதவாது என்பதை நாம் ஞாபகம் வைத்து கொள்ளவேண்டும் இந்த உலகத்தில் நாம் பார்க்கும் எல்லா அதிகாரங்களும்  கண்ணிமைக்கும் நேரத்தில் இல்லாமல் போகலாம்,
ஒரு ஆதிகாரம் நிறைந்த நபர்  தன்னுடைய அதிகாரத்தால் அடைய முடியாத அனேக விலையேற பெற்ற  காரியங்கள் மனித வாழ்வில் உண்டு.

பால்ராஜ்: ஆமா,குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். (1 யோவான் 5:12)
என்று வேதம் நமக்கு போதிக்கிறது

டேனியல்: (யோவான்:8:51)..ல்
இயேசு கிறிஸ்து இவ்வாறு சொல்கிறார்...........
"ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால்,அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று கூறியுள்ளார்.

பால்ராஜ்:ஆம்... அதுமட்டுமல்ல.....
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;#உயிரோடிருந்து
என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" (யோவான்:11:26).. என்கிறார்....

டேனியல்: ஆமா நண்பா!
நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு தேவனோடு
கூட கொண்ட ஐக்கியத்தில்
வாழும் போது........
நித்திய ஜீவன் பூமியில்
ஆரம்பிக்கிறது.
அதாவது நம்முடைய ஆவி உயிர் பெறுகிறது.அதனால் தான்
நாம் #ஆவிக்குரிய மரணத்தை காணப்போவது இல்லை #சரீர மரணத்தை மட்டுமே காணப்போகிறோம்....

பால்ராஜ்: ஆமா, நம்முடைய ஆவி நித்திய நித்தியமாய் தேவனோடு உறவாடுவதாய் உயிரோடிருக்கும்..
ஆமென்.......
நாம் எப்படிப்பட்ட உன்னதமான சிலாக்கியத்தை தேவன் தம்முடைய குமாரன் இயேசு மூலமாய் நமக்கு ஏற்படுத்தி வைத்திருக்கிறார் பாரு நண்பா! ஆச்சரியமாக இருக்கு !

டேனியல்: உலகத்தை
ஆண்டவர்கள்,அதிகாரம் கொண்டவர்கள்,மாபெரும்
தலைவர்கள் என கோடிக்கணக்கான
நபர்களை இந்த பூமி கண்டிருக்கிறது
அவர்கள் பிறந்து,வளர்ந்து,ஆண்டு
பின் மறித்து போயிருக்கிறார்கள்,
அவர்களில் எத்தனை பேர் இயேசுவை பற்றும் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தவர்கள் என்பது எனக்கு தெரியாது... ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெரியும் இயேசுவின் வருகையின் போது நாம் மறுரூபமாக்கப்படுவோம்,
மகிமையான சரீரத்தை அடைவோம்..
ஏனெனில் நாம் இயேசுவை பற்றும் விசுவாச வாழ்க்கை வாழ்கிறோம்...
அவர் நம்மை உயிர்ப்பிக்க வல்லவராய் இருக்கிறார்...

பால்ராஜ்: ஆமா நண்பா அருமையாக சொன்னாய்..... மனுஷன்,உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தி கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபமென்ன? அவனுக்கு ஒரு
லாபமும்  கிடையாது....
ஆனால் இயேசுவை ஆதாயாமாக கொண்டு அவரை நம்பி வாழும்
நமக்கு நிச்சயமாக லாபம்
உண்டு,நிலையான சமாதானம்
உண்டு,நித்திய ஜீவன் உண்டு,

ஆமென்... அல்லேலூயா...

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

Sunday 13 November 2016

அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமாக்கும், அழியும் வாழ்வை அழியாமையாக்கும், கடவுள் வழங்கும் இலவச இரட்சிப்பு

அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமாக்கும்,
அழியும் வாழ்வை அழியாமையாக்கும்,
கடவுள் வழங்கும் இலவச இரட்சிப்பு
*************************************
நேற்று மதியம் Bank-ல் வரிசையில் நிற்கும் போது எங்களுக்கு முன்னாடி முதியவர்கள் சிலர் நின்றுகொண்டு இருந்தார்கள்... அவர்களில் ஒருவர்  இவ்வாறாக சொன்னார்...
"வாழத்தெரியாதவன் வாழும்
நாட்டில் ஆளத்தெரியாதவன் ஆட்சி செய்கிறான்" எல்லோரும் அவரை கவனித்தார்கள்,நாங்கள் அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தோம்..
எங்களோடு நன்றாக  பேசினார்...
அவருக்கு எப்படியாது இந்த இடத்தில் சுவிசேஷத்தை சொல்ல வேண்டுமே என்ற எண்ணம் எனக்குள் ஓடியது,
அதற்கான சந்தர்ப்பத்தை கர்த்தர் அமைத்து தந்தார்...அவர் பெயர்
பழனி... அவர் திடீரென எங்களிடம்
இவ்வாறாக பேச ஆரம்பித்தார்..
அது எனக்கு சத்தியத்தை போதிக்க வசதியாக அமைந்தது...


பழனி: “நாம் ஏன் இந்த பூமியில  இருக்கிறோம்”? எதுக்காக இப்படி பேங்க்குள கால் கடுக்க கலையில இருந்து நிக்கிறோம்? இந்தப் பூமியில்
நாம் மிக குறுகிய காலமே வாழப் போகிறோம்.என்றாவது ஒரு நாள்
நம் வாழ்வு முடியப் போகிறது அப்ப
நாம் எதற்காக வாழ்கிறோம்?
அர்த்த மற்ற வாழ்வு.. அர்த்த மற்ற
சாவு இதுதான் நமது வாழ்க்கையா ?

டேனியல்: ஏன் அண்ணே இவளவு சலிப்பு உங்க வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்ளவும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவும் வேண்டுமா அப்படினா நான் சொல்றத கொஞ்சம் கவனிங்க அதுக்கான
வழிய சொல்றேன்...
கவனிக்கிறீங்களா ?

பழனி: சொல்லுங்க தம்பி,எப்படியும்
நம்ம பேங்க்குள இருந்து வீட்டுக்குபோக சாயங்காலம் ஆகிடும்.. ஏதாவது பேசிக்கிட்டே இருந்தா பொழுது
போவது தெரியாது.. அதனால சொல்லுங்க..

டேனியல்: ஓ.கே ஐயா,சொல்றேன்,
ஆனா உங்க பொழுதுபோக்காக அல்ல,
உங்க நிலையில்லா வாழ்க்கையை,
நிலையான வாழ்க்கையாய்  மாற்றுவதுக்காய்....

பழனி: (ஆர்வத்துடன்) சரி சரி சொல்லுங்க தம்பி...

டேனியல்: ஆரம்பத்துல கடவுள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.கடவுள் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார்,அது மிகவும்
நன்றாயிருந்தது.என்று கண்டார்...
கடவுள்  இவ்வுலகில் உள்ள அனைத்தையும் உண்டாக்கினார். அவருடைய படைப்பில் மிக சிறந்த படைப்பு மனிதனே, ஏனென்றால் கடவுள் மனிதனை தம்முடைய சாயலில் படைத்தார்,அவர் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார்

கடவுள் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனிதன் ஜீவாத்துமாவானான்.கடவுள் மனிதனை நேசித்தார். கடவுள் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதித்தார். கடவுள் மனிதனுக்கு சுயமாக முடிவெடுக்கும் திறனை தந்தருளினார்,ஆனால் மனிதன் அதை தவறாக பயன்படுத்தி கடவுளுக்கு கீழ்ப்படியாமற் போனான்.
பாவம் நம்மை கடவுளிடத்திலிருந்துப் பிரித்தது.....

மனிதனின் கீழ்ப்படியாமை நிமித்தம் பாவம் இவ்வுலகில் தோன்றியது. மனிதனின் இருதயத்தின் யோசனைகள் எல்லாம் பொல்லாப்பு நிறைந்ததாய் இருந்தது.ஆகவே பாவம் மனிதனை கடவுளிடம் இருந்து பிரித்தது. பாவம் என்பது கடவுளால்  விலக்கப்பட்ட செயல் அல்லது சிந்தனை ஆகும். நாம் அனைவரும் வழி விலகி நம்மை நேசிக்கும் உண்மையான கடவுளை விட்டு பின்னோக்கி சென்றோம்.

பாவத்தை விட்டு முற்றிலும் விலகி நன்மை செய்யும் நீதிமான் ஒருவராகிலும் இவ்வுலகில் இல்லை. பூமியிலே பாவம் பெருக மனிதன் தேவனை மறந்து போனான், மனிதனுக்கும் தேவனுக்கும் உள்ள இடைவெளியும் அதிகமாகி கொண்டே இருந்தது. பாவத்தின் சம்பளம் மரணம். நாம் எல்லோரும் பாவம் செய்து நரகத்தில் நித்திய மரண தண்டனை பெறுவதற்கு ஏதுவானோம்.

பாவம் நிறைந்த மனித இனத்தின் மீட்பிற்காக பாவ நிவாரண பலி தேவைப்பட்டது, ஆதலால் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனிதனாகப் பிறந்தார். இப்படியாக கடவுள் தம்முடைய ஒரே குமாரனை
தந்தருளி தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். அவரை நம்புகின்ற அனைவருக்கும் நித்திய வாழ்வு உண்டு. பாவத்தின் நிமித்தம் கடவுளுக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட இடைவெளியை நீக்க இயேசு கிறிஸ்து மத்தியஸ்தராக தோன்றினார்.கடவுள் ஒருவரே, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தர்  ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசு அவரே. அவர் நமது பாவங்களுக்காக பாவ நிவாரண பலியாக சிலுவையில் பலியாகி மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து,
விண்ணேற்றம் அடைந்து,நமது பரம தகப்பனாகிய கடவுளிடம் நமக்காக பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார்
 இவ்வாறு கடவுள் உலகத்தார் மீது தான் கொண்ட தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார்.

பழனி: தம்பி... நீங்க கிறிஸ்டீனா !
நான் கிறித்தவ பள்ளிகூடத்துல தான் படிச்சேன்.. எனக்கு நெறய கிறித்தவ பாட்டுகள் தெரியும்.. ஆனா நீங்க இப்ப சொன்ன விஷயங்கள் எனக்கு புதுசு,
இதுக்கு முன்னாடி யாரும் எனக்கு இத
சொன்னது இல்லை,எனக்கு ஜீசஸ்-னா பிடிக்கும்...

டேனியல்: ரொம்ப நல்லதுங்க ஐயா,
இயேசுவை உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் போதாது அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர் கட்டளை இட்டபடி நாம் நடக்க வேண்டும்...
அதுதான் கடவுளின் விருப்பம்
நாம் அனைவரும் நித்திய மரண தண்டனையில் இருந்து தப்புவதே கடவுளின் விருப்பமாகும். இயேசுவின் மரணத்தின் மூலமாய் நாம் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து இருந்து விடுதலை பெற்று அவருடைய உயிர்த்தெழுதலின் மூலமாய் நாம் புது வாழ்வு பெற்று இருக்கிறோம்.
இயேசு கிறிஸ்து மட்டுமே நித்திய மரணத்திலிருந்து மனிதனை விடுவிக்க கடவுள் கொடுத்த ஒரே வழியாகும். அவரே பரலோகத்திற்கு (மோட்சம்) செல்ல ஒரே வழி ஆவார். அவர் மூலமாய் அல்லாமல் யாரும் கடவுளிடம் சேர முடியாது.

பழனி: இயேசுவை ஏற்றுக்கொள்ள அவரை என் உள்ளத்தில் பெற்றுக்கொள்ள நான் என்ன செய்யனும் ஏதாவது பாதையாத்திரை? போகனுமா ? இல்ல பட்டினி கிடக்கனுமா வெள்ள ஜிப்பா போடனுமா ? செருப்பு போடாம நடக்கனுமா ? இல்ல இந்த போங்க்குக்கு முன்னாடி நிற்கிறமாதி ஏதாவது சர்ச்சுக்கு முன்னாடி போய் நிக்கனுமா ?
 எதாவது கிறித்தவ நிறுவனத்திற்கோ ஸ்தாபனத்துக்கோ நன்கொடை  கொடுக்கனுமா ?

டேனியல்: இயேசுவை உங்கள் வாழ்வில் பெற்று கொள்ள நீங்கள் எதையும் செய்ய வேண்டியது இல்லை.
இயேசுவை சொந்த இரட்ச்சகராக ஏற்றுக் கொள்ள, உங்கள் பாவ நிலையை உணர்ந்து, மனம் திரும்பி இயேசுவை விசுவாசித்தால் போதும். இயேசுவை நீங்கள் உங்கள் வாயினாலே அறிக்கையிட்டு,
தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உங்கள் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப் படுவீர்கள்.

************************************
இந்த உரையாடலை படித்துகொண்டிருக்கும் என் அன்பு சகோதரா,என் அன்பு சகோதரி
இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா ? இன்றே உங்கள் உள்ளத்தில் அவரை ஏற்றுக்கொளுங்கள், அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமாக்கி கொள்ளுங்கள்
அழிவுள்ள வாழ்வை அழியாமையாக்கி கொள்ளுங்கள்..

எல்லாம் இலவசம்

=======================
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

Monday 7 November 2016

மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது

#ஜீவ வழியின் நற்செய்தி

மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்த
து; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

(ரோமர் 5:20-21)

ஜான்: தேர்வு எழுதியிருக்கிற ஒரு மாணவன் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்சம் 35  மதிப்பெண்கள் எடுக்கனும் அப்படீனு வச்சுகிருவோம்...
அவன் எழுதியிருப்பதற்கு 30 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்க முடியும். திருத்துகின்ற ஆசிரியர் மதிப்பெண்களின் காரணமாக அவன் பெயில் ஆகி ஒரு ஆண்டை இழக்க வேண்டுமே என்று கருதி +5 என்று சேர்த்து அவனை தேர்ச்சிபெறச் செய்கிறார்.அந்த 5 மதிப்பெண்களைப் பெறுவதற்கு அவன் தகுதியில்லை. ஆனாலும் ஆசிரியரின் தயவினால் அவன் தேர்ச்சி பெறுகிறான்.
அவர் அவனுக்குக் கொடுத்த  மதிப்பெண்கள்தான்
"கிரேஸ் மார்க்".....அதாவது தகுதியற்றவனுக்கு கொடுக்கப்படும் ஈவு.அதைப்போல தகுதியற்றவர்களான நமக்கு தேவன் கொடுக்கும்
ஈவுதான் "கிருபை"

டேனியல்: ஆமா! கிருபை தேவனுடைய தன்மைகளில் ஒன்று.."கிருபை" என்றால் "தகுதியற்றவர்களுக்கு தேவனால் அருளப்படும் ஈவு"என்று பொருளாகும்.அந்த மாணவன் கூட
30 மதிப்பெண்கள் எடுத்திருந்தான்.
ஆனால் நமக்கோ எந்த தகுதியும் இல்லை. அப்படியிருந்தும் தேவன் அவருடைய மிகுந்த கிருபையினால் நாம் தேவனுடைய பிள்ளைகளாகும் சிலாக்கியத்தை பெற்றிருகிறோம். கிருபை என்ற வார்த்தையைப் பார்க்கும் போதெல்லாம் "தகுதியற்றவனுக்கு அருளப்பட்ட ஈவு" என்ற பொருள் நம்முடைய நினைவிற்கு வரவேண்டும்.

ஜான்: அநேகர் தங்களுடைய பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும்போது, ‘கிருபை’ என்றும், ‘கிரேஸ்’ என்றும் ‘தேவ கிருபை’ என்றும் பெயர் சூட்டுகிறார்கள். அநேகர்.... ஜெபிக்கும்போது, “கிருபையின் தேவனே, கிருபையில் ஐசுவரிய முள்ளவரே என்று தங்கள் ஜெபங்களை ஆரம்பிக்கிறார்கள்.

டேனியல்: ஏன் சிலர் தங்கள் வியாபார ஸ்தலத்திற்கு கிருபை,கிருபா...என்றும்
தங்களுடைய ஊழியங்களுக்கு ‘கிருபையின் ஊழியங்கள்’ என்றும்  பெயரை சூட்டுகிறார்கள்.
ஒவ்வொரு போதகர்களும் சபை
ஆராதனையை முடிக்கும் போது,
“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும், பிதாவாகிய தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக”
(2 கொரி. 13:14) என்று சோல்லி முடிக்கிறார்கள். இந்த ஆசீர்வாதத்தில் அவர்கள் முதலாவது வைப்பது இயேசுகிறிஸ்துவினுடைய "கிருபை".

ஜான்: ஆமா! தேவனுடைய கிருபையை நினைக்கும் போது உள்ளம் உருகி அழுகை வருகிறது நண்பா,

நாம் பாவிகளாயிருக்கையில்
அவர் நம்மைத் தேடி வந்தாரே!
அதுதான் அவருடைய கிருபை.
நம் பாவங்களையெல்லாம் கிருபையால் மன்னித்தாரே!
நம்மை தம்முடைய
சோந்தப் பிள்ளைகளாக அரவணைத்துக்கொண்டாரே!

டேனியல்: அதனாலதான்..... அப்போஸ்தலனாகிய பவுல்  இவ்வாறு சொல்லுகிறார்,

“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” (எபே. 2:8).

ஜான்: உலகில் மிகவும்
பிரபலமான போதகரிடம் அமெரிக்காவை சேர்ந்த ஒரு
வாலிபன் போய் இவ்வாறு
கேட்டான்.......,

பாஸ்டர் "என்னுடைய வாழ்க்கை ஓட்டத்தை பரிசுத்ததோடும் வெற்றியோடும்,ஓடி முடிப்பதற்கு
நான் என்ன செய்ய வேண்டும் ?
நான் பாவியாக இருக்கிறேன்,
பலவிதமான பாவ சோதனைகள் என் மேல் வந்து மோதுகின்றன.
விழுந்துவிடுவேனோ என்று
பயமா இருக்கிறது இதற்கு நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன?” என்றான்.....

அதற்கு அந்த போதகர் இவ்வாறு
பதில் சொன்னார்......

அன்பு சகோதரனே ! நீ இயேசு
கிறிஸ்து உனக்காக கல்வாரி சிலுவையில் செய்து முடித்தவைகளே,உன் முழு உள்ளத்தோடு விசுவாசிப்பாய் என்றால்...நீ நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டு இருக்காமல்,கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறவனாய் இருப்பாய்,அப்படி நீ கிருபைக்கு கீழ்ப்பட்டிருந்தால்,பாவம் உன்னை  மேற்கொள்ள மாட்டாது என்று
வேதம் போதிக்கிறது...

"நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல்,கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிற படியால்,பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது"(ரோமர் 6:14).
இதை நீ விசுவாசிக்கிறாயா ?

"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன்
தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்".
(1 யோவான் 3:9) இதை நீ விசுவாசிக்கிறாயா ? என்றார்

அந்த வாலிபன் அமைதியாக இருந்தான்...

பிறகு அந்த போதகர்...
மறுமொழியாக.....
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்,இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் நாம் நீதிமான்கள்
என்று வேதம் போதிக்கிறது.....
அது மட்டுமல்ல,இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம் இயேசுவின் நாமத்தினாலும், தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்

(1கொரி 6: 11)என்றும் இயேசுவே நமது பரிசுத்தமாக இருக்கிறார் (1கொரி 1:31) என்றும் நம்முடைய சரீரம் தேவன் வாசம் செய்யும் பரிசுத்த ஆலயம் (1கொரி 3:17) என்றும் தேவனுடைய வார்த்தைகளுக்குள்ளான அதாவது கிறிஸ்து இயேசுவுக்குள்ளான விசுவாசிகளாகிய நாம் யாவரும் பரிசுத்தவான்கள்,(பிலி 4: 21)
(எபே 4:12) என்றும் கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தொழுதுகொள்கிற அனைவரும் பரிசுத்தவான்கள்(1கொரி1:2 )
என்றும் நாம் மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய
சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷன் என்றும் அந்த புதிய பரிசுத்த மனுஷனை தரித்துக்கொள்ளுங்கள்
(எபே 4: 24) என்றும் தேவனுடைய வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நம்மை பரிசுத்தவான் என்று அங்கீகாரப்படுத்துகிறது

எனவே புதிய உடன்படிக்கையின் அடிப்படையில் வேதாகமம் (விசுவாசியை) உன்னை குறித்து
என்ன சொல்கிறதோ அவ்வாறாக உன்னை #எண்ணிக்கொள்..
ஏனென்றால்..."அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே
அவன் இருக்கிறான்"(நீதி23:7)

"அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் #எண்ணிக்கொள்ளுங்கள்"
(ரோமர் 6:11)

அவ்வாறு நீ #எண்ணிக்கொள்ளும் போது.. உனக்கு விசுவாசம் வளர ஆரம்பிக்கும்...தேவ கிருபை
உனக்குள் செயல்பட ஆரம்பிக்கும்..
உன் வேத அடிப்படையிலான
உன் பரிசுத்த எண்ணங்கள்
செயல் வடிவம் பெற
ஆரம்பிக்கும்...

பிறகு பலவிதமான பாவ சோதனைகள்
உன் மேல் வந்து மோதினாலும்
நீ விழ மாட்டாய்,பாவம் உன்னை மேற்கொள்ளாது நீ பாவத்தை மேற்கொண்டு கிறிஸ்துவுக்குள்
வெற்றி சிறப்பாய்...

நான் அல்ல கிறிஸ்துவே!
என் கிரியை அல்ல கர்த்தருடைய
கிருபை..கிருபை என்று உன்னை கர்த்தருக்கு முன் எப்போதும் தாழ்த்தி
தேவகிருபைக்கு உன் வாழ்க்கை வழிகளை ஒப்புக்கொடுப்பாயானால், கிருபையினாலே உன்னுடைய
வாழ்க்கை ஓட்டம் பரிசுத்தத்தோடும் வெற்றியோடும் முடியும்.”என்றாரம்.....

டேனியல்: ஆமென்... அல்லேலூயா....

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

(எபேசியர் 2:8-9)

======================
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்

#ஜீவ வழியின் நற்செய்தி

டேனியல்: பாவத்தினால் மரித்து
தேவனைவிட்டு பிரிந்து அவரை
கிட்டி சேரமுடியாத ஒரு மோசமான
நிலையில் இருந்த நமக்காகாக
நம் இரட்சகராகிய இயேசு பரிகார பலியாகி, நம்முடைய பாவங்கள் துக்கங்கள் எல்லாவற்றையும் சிலுவையில் சுமந்து தீர்த்தார்.

ஜான்: இந்த சிலுவை பலியின்
மூலம் அவர் நம்மை தேவனோடு ஒப்புரவாக்கினார். இந்த நற்செய்தியை விசுவாசிப்பன் மூலம்  நாம்
"தேவனுடைய பிள்ளைகள்"
என்ற அந்தஸ்தையும் பாவமன்னிப்பையும்,நித்திய ஜீவனையும்,பரலோக வாழ்வின் நிச்சயத்தையும் பெறுகிறோம்..

"அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்."

(கொலோசெயர் 1:20-21)

டேனியல்: நாம் தேவனோடு
கிட்டி சேர முடியாதபடிக்கு
அவருக்கும் நமக்கும் இடையில்
இருந்த கட்டளைகளாகிய
நியாயப்பிரமாணத்தை
சிலுவையில் ஆணியடித்து
குலைத்தார் ...

"நமக்கு எதிரிடையாகவும் #கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து,
அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது,பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது"

(கொலோசெயர் 2:14-17)

ஜான்: நியப்பிரமாண உபதேசம்
அல்ல, சிலுவையை பற்றிய உபதேசமே
பாவ மனிதனை பாவத்திலிருந்து வெளிவர செய்கிறது, ஆனால் நியப்பிரமாணவாதிகளுக்கு சிலுவையை பற்றிய உபதேசம் பைத்தியகாரத்தனமாக
தோன்றும்..ஆனால் சிலுவையை பற்றிய உபதேசமே பாவ
மன்னிப்பை,பரலோக வாழ்வை தருகிறது.. இது விசுவாசத்தினால் வேலை செய்கிறது...

டேனியல்: ஆமா இயேசுவே நமது விசுவாசத்தின் துவக்கமும் முடிவுமாய் இருக்கிறார், அவரே ஆதியும் அந்தமுமாக,வழியும் சத்தியமும், ஜீவனுமாக இருக்கிறார். அவரே நமது இரட்சிப்பின் தலைவராக, உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கும் ஒளியாக, உலகத்தில் வந்த எந்த மனிதனையும் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவி சுத்திகரிப்பவராக,அவரே நமது சமாதான கர்த்தராக, தேவனுடைய ஒரே பேறான குமாரனாக, இருப்பவராகவே இருக்கிறவர்....

ஜான்: சரியாக சொன்ன
அவருடைய நாமமே அன்றி இரட்சிக்கப்படவதற்கு வேறொரு
நாமம் கொடுக்கப்படவில்லை.
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ,அத்தனை
பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி,அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
- (யோவான் 1:12).

ஆமா நம் பரலோக தகப்பனை
போல் அன்புள்ளவர் யாருமில்லை,
நமது பாவங்களை கழுவி நம்மை
இரட்சித்து, நம்மை பரலோக ராஜ்ஜியத்திற்கு பங்குள்ளவர்களாய் மாற்றும் இவரை விசுவாசிக்கிறவர்கள் யாரும் வெட்கப்பட்டு போவதில்லை. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ,தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று என்று
வேதம் சொல்கிறது....
எனவே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம்
பாக்கியவான்கள்...

ஆமென்... அல்லேலூயா...

அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்
; விசுவாசியாதவனோ,தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

(யோவான் 3:18)

=======================
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome


Friday 28 October 2016

நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.

#ஜீவ வழியின் நற்செய்தி

இவ்விதமாக,நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.

(கலாத்தியர் 3:24)

டேனியல்: “எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்;
நன்மை செய்கிறவன் இல்லை,ஒருவனாகிலும் இல்லை” (சங்கீதம் 14:3) என்று சொல்லுகிறது.

ஜான்: ஆமா தேவனுடைய பார்வையில் எல்லாரும் சமமாக இருக்கிறார்கள். அவருக்கு முன் சிறிய பாவி, பெரிய பாவி, மோசமான பாவி,கொடூரமான பாவி, நல்ல பாவி, கெட்ட பாவி என்று எந்த வித்தியாசமும் இல்லை.

டேனியல்: சரிதான், தேவனுடைய பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டா தான் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.......

ஜான்: ஆமா டேனி.... தேவனுடைய பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை நமக்கு காண்பித்து உணர்த்துவதற்காகத்தான்
#பழைய ஏற்பாட்டுக் காலத்தில் #நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.

டேனியல்: இதில் தான் பரிசேயர்கள் தவறு செய்து விட்டார்கள்.
அவர்கள், நாம்....... நியாயப்பிரமாணத்தின்படி செய்து காண்பிக்க வேண்டும், அப்போது தேவன் நம்மை நீதிமான் என்று சொல்லுவார்,அதற்காகத்தான் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது என்று எண்ணினார்கள்.இன்னும்
அந்த பரிசேய கூட்டம் இருக்கிறது

ஜான்: ஆமா அவர்தான் கிறித்தவ வேடமிட்ட பரிசேயர்கள்,ஆனால் நியாயப்பிரமாணத்தின்படி எவருமே செய்ய முடியாது என்பதுதான் உண்மை. தேவன், எல்லாரும் செய்ய முடியாமல் தோற்று,தவிக்கிறது போன்ற பிரமாணத்தைத்தான் கொடுத்தார்.

டேனியல்: எந்த ஒரு மனுஷனும்
இந்த பிரமாணத்தின்படி வாழ
முடியாது;அதை முற்றிலும் பூரணமாய் நிறைவேற்ற முடியாது.ஏனென்றால் அவன் ஒன்றில் தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாக இருப்பான்....

ஜான்: தேவன் பிரமாணத்தைக் கொடுத்ததற்கான காரணம் என்னவென்றால்,மனுஷன் #பிரமாணத்தின்படி செய்து
பார்த்து,அதை தன்னால் செய்ய முடியவில்லையே என்கிற தவிப்பு அவனுக்குள் உண்டாக வேண்டும் என்றும், தன்னுடைய #பாவத்தையும், குறைவையும், இயலாமையையும், பாவம் தனக்கு என்ன செய்திருக்கிறது என்பதையும் அவன் பார்க்க வேண்டும் வேண்டும் என்றும், இதையெல்லாம் பார்த்து அதை உணர்வதற்காகத்தான் தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார்.....

டேனியல்: மனுஷனிலிருக்கிற
பாவ சுபாவத்தையும்,அவனுடைய இயலாமையையும், அவனால் பாவத்தை ஜெயித்து வாழ முடியாது என்பதையும் காண்பிப்பதற்காகவும், அவன் பாவி என்பதை உணர்த்துவதற்காகவும்தான் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதே ஒழிய,அவனை #இரட்சிக்கிறதற்காக கொடுக்கப்படவில்லை.

ஜான்: நியாயப்பிரமாணம் மனுஷனை இரட்சிக்க முடியுமென்றால் எல்லாருமே அதன் மூலம் இரட்சிக்கப்படலாமே! இயேசு வரவேண்டியதில்லையே! இரட்சகர் ஒருவர் தேவையில்லையே! மனுஷன் நியாயப்பிரமாணத்திற்கு முன்பாக வந்து நிற்கும்போது அது அவன் யார் என்பதை அவனுக்குக் காட்டுகிறது. இந்த விதத்தில் நியாயப்பிரமாணம் ஒரு உபாத்தியாய் இருந்தது என்று வேதம் சொல்லுகிறது.

“இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய்இருந்தது”
(கலாத்தியர் 3:24).

டேனியல்: ஆமா ஜான்.... இயேசு சிலுவையில் மரித்து,
உயிரோடெழுந்த பிறகு,அவரை
விசுவாசித்து அதன்மூலமாக நாம் நீதிமானாக்கப்படுவதற்காக
நியாயப்பிரமாணம் நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தது.

ஜான்: சரியாக சொன்னாய்...... நியாயப்பிரமாணத்தை செய்கிறதின்
மூலமாக அல்ல,விசுவாசத்தின்
மூலமாகத்தான் நாம் நீதிமானாக்கப்படமுடியும். இயேசு தான் நமக்கு இரட்சகர்,
இயேசு நமக்கு அவசியம்,
அவரில்லாமல் நமக்கு இரட்சிப்பு இல்லை என்பதை காண்பித்து,
அவரிடத்திலே நம்மைகொண்டு
வருவதற்காகவும்,நாம் இரட்சகரை நாடுவதற்காகவும் தான் நியாயப்பிரமாணம்கொடுக்கப்பட்டது.

டேனியல்: நியாயப்பிரமாணம்
நம்மை நீதிமானாக்குவதில்லை.
அது நம்மைகிறிஸ்துவண்டை
கொண்டுவருகிறது.கிறிஸ்து நம்மை
நீதிமானாக்குகிறார்.அவர்பேரில்
வைக்கிறவிசுவாசத்தினால்
நாம் நீதிமானாகிறோம்.

ஜான்:ஆமா,நாம் எப்படி
நியாயப்பிரமாணத்தை
பார்க்கிறோம் என்பது மிகவும்
முக்கியம்.

டேனியல்: இன்று ஒரு சிலர்.....
"நான் பத்து கற்பனையின்படி
செய்துவிட்டால் நான் நீதிமான்"
என்று அப்படி தங்களைபார்க்கிறார்கள்.
ஆனால் பத்துகற்பனையின்படி
எவருமே முழு நிறைவாக செய்ய முடியாது.....

ஜான்: செய்ய முடியாத ஒன்றை
தேவன்எதற்காககொடுத்தார்? என்று அனேகர் கேட்கலாம்..... !
செய்ய முடியாத ஒன்றைக்கொடுத்தால்தான் நான் பாவி என்கிற உணர்வு நமக்குள் உண்டாகும். அந்த உணர்வு
உண்டானால் தான் எனக்கு ஒரு இரட்சகர்அவசியம் என்கிற
அவசியத்தையும் நாம்மால் உணர முடியும்......அதனால் தான்
தேவன் பழைய ஏற்பாட்டுக்காலம்
முழுவதும் போதிக்கிறார்.
கிறிஸ்துவண்டை நடத்துவதற்கு நியாயப்பிரமாணத்தைதருகிறார்.
கிறிஸ்து நம்மை இரட்சிப்புக்குள்
நடத்துகிறார்.நியாயப்பிரமாணம்
கிறிஸ்துவண்டைநடத்துகிற
உபாத்தியாய் இருந்தது.

டேனியல்: ஆமா ஜான்....... ‘உபாத்தி’ என்றால் ‘teacher’ என்று
அர்த்தம்.இதை KJVஎன்கிற ஆங்கில மொழிபெயர்ப்பு வேதாகமம்
‘school master’ என்று
மொழிபெயர்க்கிறது. NKJV
என்கிற ஆங்கில மொழிபெயர்ப்பு
வேதாகமம் ‘tutor’ என்று மொழிபெயர்க்கிறது.
நியாயப்பிரமாணம் நாம் பாவி என்பதை காண்பிப்பதின் மூலமாக
கிறிஸ்துவும் அவருடையசிலுவை
மரணமும் அவசியம் என்பதையும்,
அதன் மூலமாகத்தான்
நாம் இரட்சிக்கப்பட முடியும் என்பதையும் காண்பிக்கிறது.
இதற்காகத்தான் நியாயப்பிரமாணம்கொடுக்கப்பட்டது.....

விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
(ரோமர் 10:4)

கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

(ரோமர் 8:2)

ஏனெனில்,#நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்;
அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
(எபேசியர் 2:10)

ஆமென்.. அல்லேலூயா....

=======================
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

#ஜீவ வழியின் நற்செய்தி

ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

(ரோமர் 13:8-10 )

ஜான்: தேவன் அன்பாக இருக்கிறார்.
நாம் உண்மையிலே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று சொன்னால் அந்த தேவ  அன்பின் சாயல் நம்மிலும் இருக்க
வேண்டும்

டேனியல்: அப்போஸ்தலனாகிய
பவுலும் அன்பைக் குறித்துதான் இங்கே பேசுகிறார் "ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்"

ஜான்: இந்த இடத்தை நாம் சற்று நிதானித்து  கவனிக்க வேண்டும். நமக்கு அநேக கடன்கள் இருக்கிறது, அவை எல்லாவற்றையும் தவறாமல் செலுத்துகிறோம்.ஆனால் அன்பு செலுத்துகிற கடனோ முடிவுக்கு வருவதே கிடையாது. அது நாம் நித்தியத்திற்கும் செலுத்த வேண்டிய தீராத கடனாய் இருக்கிறது. பவுல், அன்பு என்கிற ஒரு கடனை மட்டும் வைத்திருங்கள், மற்ற கடன்களையெல்லாம் செலுத்தி விடுங்கள் என்கிறார்.

டேனியல்: இப்படி அருமையான விதத்தில் சொல்லிவிட்டு,
#பத்து கற்பனைகளிலுள்ள சில கற்பனைகளை பட்டியலிட்டு, இவையெல்லாம் நீ உன்னில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூருவாயாக என்கிற
#ஒரு வார்த்தையிலே #தொகையாய் அடங்கியிருக்கிறது என்கிறார்.

ஜான்: "உன்னில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூருவாயாக"
என்ற கற்பனை பழைய ஏற்பாட்டிலேயே சொல்லப்பட்டுள்ளது
(லேவியராகமம் 19:18).
ஆக,பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை
ஒரே வரியில் சுருக்கமாகச் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது,
உன்னில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூருவாயாக என்பது அதுதான்.அதைச் சொன்னாலே பழைய ஏற்பாட்டு கற்பனைகள் அதில் வந்து விட்டதென்று அர்த்தமாகி விட்டது......

டேனியல்: ஆமா!!
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். (கலாத்தியர் 5:14)

இயேசுவும் அதையே பயன்படுத்துகிறார்.ஒருமுறை ஐசுவரியவான் வாலிபனும், மற்றொரு முறை வேதபாரகரில் ஒருவனும் அவரிடம் வந்து, கற்பனைகளிலே பிரதான கற்பனை எதுவென்று கேட்டதற்கு,

“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில்
உன் முழு இருதயத்தோடும்,உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும்,உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை என்று சொல்லிவிட்டு,
இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” (மத்தேயு 22:37-39) என்று சொல்லுகிறார்.
அப்போஸ்தலனாகிய பவுலும்
இதையே ரோமர் 13 ஆம் அதிகாரத்திலும், கலாத்தியர் 4 ஆம் அதிகாரத்திலும் சொல்லுகிறார். அதுமட்டுமல்லாமல், யாக்கோபும் இதைச் சொல்லிவிட்டு, இந்த பிரமாணத்திற்கு ‘ராஜரீக பிரமாணம்’ என்று பெயரிடுகிறார்.

ஜான்: இந்த இடத்தில் தான்
அனேகருக்கு குழப்பம்
வருகிறது "நீ உன்னில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூருவாயாக என்கிற
#ஒரு வார்த்தையிலே
#தொகையாய் தேவனுடைய கற்பனைகள் எல்லாம் அடங்கியிருக்கிறது
என்றால்... நாம் தேவனை
அன்புகூர கூடாதா என்பார்கள் ?
ஆனால் உண்மை என்னவென்றால்
தேவனிடத்தில் அன்புகூராமல்,
தன்னை போல்  பிறரை
நம்மால் நேசிக்கவே முடியாது....
தேவ அன்பு நமக்குள் இருந்தால்
தான் நாம் பிறரை அவ்வாறு
நேசிக்க முடியும்...இது இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக,
இரட்சகராக ஏற்றுக்கொண்ட
தேவ பிள்ளைகளின் தனி சுபாவம்...

டேனியல்: சரியாக சொன்ன
நண்பா!! அநேகர் இந்த
பிரமாணத்தை தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.அவர்கள்,
நான் என்னில் அன்புகூருவதுபோல பிறனிலும் அன்புகூர வேண்டும்
என்பது மிகவும் எளிதானது,நான் அதைச் செய்து விடுவேன் என்கிறார்கள்.ஆனால் அப்படிச் செய்ய முடியாது என்பதுதான் வேத வசனத்தின் சத்தியம். ஏனென்றால், பாவம் மனுஷனை சுயநலவாதியாக மாற்றிவிட்டது. ஆகவே அவன் தன்னை அன்புகூருவதுபோல பிறனையும் அன்புகூர முடியாது.அப்படிச் செய்ய வேண்டுமென்றால் இயேசுவோடு  அவனுக்கு தொடர்பு உண்டாக வேண்டும்... வேறு எந்த வழியும் கிடையாது...

ஜான்: ஆமா நண்பா,பிறரை
அன்புகூர முடியாத நிலையில் சுயநலவாதிகளாயிருந்த நம்மை தேவன் பாவத்திலிருந்து மீட்டு,மற்றவர்களை  அன்புகூரக்கூடியவர்களாக மாற்றுகிறார்... தேவரக அன்பை
நமது இருதயத்திலே ஊற்றியிருக்கிறார்..அது
இயேசுவாலே ஆயிற்று,
அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.

ஆமென்.. அல்லேலூயா....

=======================
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome


Saturday 22 October 2016

திரித்துவம்

#திரித்துவம்

முருகன்: ஜான் எப்படி இருக்கிறீங்க ?

ஜான்: நல்ல தேவ கிருபையால் நலமா இருக்கேன்...அப்பரம் உங்க கிறித்தவ வாழ்க்கை எப்படி போய்கிட்டு இருக்கு ?
தினமும் பைபிளில் படிக்கிறீங்களா ? ஜெபம் பண்றீங்களா ?

முருகன்: நல்லா போய்கிட்டு இருக்குங்க ஜான்,நீங்க போன வாரம் சொன்ன இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை நான் முழுசா நம்புரேன்... அவரே கடவுளிடம் நம்மை கொண்டு போய் சேர்க்கிற ஒரே வழி என்று விசுவாசிக்கிறேன்... அப்பரம் நீங்க வாங்கி கொடுத்த பைபிளையும்  கொஞ்சம் கொஞ்சம் படிக்க ஆரம்பிச்சுருக்கேன்....அடுத்த வாரம் உங்க சர்ச்சுல ஞானஸ்நானம் எடுக்கலாமுனு முடிவும் பண்ணிருக்கேன்....

ஜான்: ரொம்ப நல்லது,இன்னும்
நெறய காரியங்களை குறித்து உங்களுக்கு வேத வசனம் மூலம் விளக்குகிறேன்

முருகன்: ஓகே ஜான் அதுக்கு முன்னாடி எனது இந்த சந்தேகத்தை போக்குங்க,
நான் கடந்த வாரம்தான் இயேசு கிறித்துவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டேன்... எனக்கு அந்த அளவுக்கு பெரிதாக தேவனை பற்றி தெரியாது... ஏதோ நீங்கள் போதித்ததை வச்சு கொஞ்சம் கொஞ்சம் அறிந்திருக்கேன்... திரித்துவம்
என்றால் என்ன? தேவன் ஒருவரா ?
மூவரா ? இதுபற்றி விளக்கம் கொடுங்க
ஜான்...

ஜான்: அருமையான கேள்வி முருகா!
இந்த கேள்விக்கான சரியான விடையை வேத அடிப்படையில்,
அறிந்துகொள்ளாமல் சத்தியத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அனேக கிறிஸ்தவர்களே சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு கள்ள உபதேச கூட்டத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்,
ஆகவே தேவனை அறிகிற அறிவை நோக்கிய ஆரம்ப நிலையில் இருக்கிற நீங்கள் இந்த கேள்விக்கான பதிலை கட்டாயம் அறிந்தவராக இருக்க வேண்டும்...இந்த கேள்விக்கான பதிலை நான் வேதாகம அடிப்படையில் தருகிறேன்..

முருகன்: சரிங்க ஜான் சொல்லுங்க

ஜான்: முருகா,திரித்துவத்தை குறித்து
வேதாகமம்  தெளிவாக போதிக்கிறது, நமக்கு மூன்று தேவன் அல்ல.
ஒரே தேவன் ஆனால் அவர்
மூன்று ஆள்தத்துவங்களில் வெளிப்படுகிறார் ஆனால்
தேவன் ஒருவரே.....

முருகன்: அது எப்படிங்க ஜான் ?

ஜான்: பின்வரும் வசனங்களை  கவனிங்க முருகா...

இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
(உபாகமம் 6:4)

ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

(1 கொரிந்தியர் 8:4)

தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய்,அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும்
விசுவாசித்து, நடுங்குகின்றன. (யாக்கோபு 2:19)

முருகன்: அப்படியென்றால் தேவன் ஒருவர்தானே ?

ஜான்: ஆமா தேவன் ஒருவர்தான் ஆனால் அவர் ஒருமைத்தன்மை கொண்டவர் அல்ல...

முருகன்: என்னாது தேவன் ஒருவர் தான் ஆனா அவர்  ஒருமைத்தன்மை கொண்டவர் கிடையாதா ? எப்படி ?

ஜான்: எபிரேய மொழியில் கடவுள் என்ற வார்த்தைக்கு Elohim,
என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது இது ஒரு பன்மை தன்மை சொல் ஆனால் ஒருமையில் "தேவன்"  அழைக்கப்படுகிறது.

முருகன்: அப்படியா !!

ஜான்: ஆமா முருகா ! வேதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது...

பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே,#இம்மூவரும் #ஒன்றாயிருக்கிறார்கள்.
(1 யோவான் 5:7)

முருகன்: இதை எப்படி நான் விளங்கி கொள்வது ஜான் ?

ஜான்: புரிகிற மாதி சொல்றேன்
முருகா.......
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக.உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
(1 தெசலோனிக்கேயர் 5:23)

மனிதன் என்கிற பதம்
ஒருமைத்தன்மை கொண்டது,
மனிதன் என்பவனும் ஒருவனே,
ஆனால் மனிதன் என்கிற
பதத்திற்குள்,ஆவி, ஆத்மா,சரிரம்
என்று மூன்று பகுதிகள் சேர்ந்திருக்கிறது.

ஆகவே மனிதன் என்றால்
மூன்றுப்பகுதிகள் ஒருங்கி இணைந்திருப்பது என்பது
நமக்கு தெரிகிறது இவைகளை
யாரும் பிரித்துப் பார்க்க முடியாது.
மனிதானால் தனித்தனியாக
செயல்பட முடியாது,
ஆனால் தேவனால் தனித்தனியாக,
ஏக சிந்தனையுடன் செயல்பட முடியும்..ஏனென்றால் அவர் தேவன் அவர்தான் சிருஷ்டி கர்த்தர்...
அவராலே எல்லாம் உண்டாக்கப்பட்டது.....

அவர் பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன்,பரிசுத்த ஆவியாகிய தேவன் என்று மூன்று பேரும் சேர்ந்து,ஒரே தேவனாக இருக்கிறார்.

✞ பிதாவாகிய தேவன்
1 பேதுரு1:2 2,பேதுரு1:17

✞ குமாரனாகிய தேவன்
எபி 1:8, தீத்து 2:13, ரோ 9:5

✞ பரிசுத்த ஆவியாகிய தேவன்
அப் 5:3-4, 1கொரி 6:19, 2கொரி 6:16

உதாரணமாக இயேசு தம் சீஷர்களுக்கு கொடுத்த கட்டளையின்படி.....
சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,என்ற வசனத்தின் படி ஒரே நாமத்தில்
மூன்று ஆள்தத்துவத்தை பார்க்க முடியும். என்ன முருகா திருத்துவம் பற்றி நான் சொல்றது புரிகிறதா ?

முருகன்: புரிகிறது ஜான் மேலும் சொல்லுங்க.....

ஜான்: படைப்பிலேயே திருத்துவம் இருக்கிறது ஜான்,

ஆதி 1:1 ஆதியில் தேவன் உலகத்தை
சிருஷ்டித்தார்.(பிதாவாகிய தேவன்)

ஆதி 1: 2 தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். (பரிசுத்த ஆவியாகிய தேவன்)

ஆதி 1:3 வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். (வார்த்தை - குமாரனாகிய தேவன்)

முருகன்: வார்த்தையா ! அதை எப்படி குமாரனாகிய தேவன் என்று எப்படிச் செல்ல முடியும் அதற்கு வசனம் இருக்கா தெரியாமதான் கேட்கிறேன் ஜான் ?

ஜான்: யோவான் 1:1 முதல் 1:14 வரை வாசித்துப்பார்த்தால் புரியும் முருகா, மனிதனை தேவன் உருவாக்கும்
போதும் அவரின் திருத்துவ தன்மை வெளிப்பட்டது...

பின்பு தேவன்: நமது சாயலாகவும்
நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; (ஆதியாகமம்1:26)

நமது சாயல் என்றுச் சொல்லும்போது பன்மையைக் குறிக்கிறது.ஆகவே மனிதனைப் படைக்கும் போதும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் செயல் படுவதைப் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது....

முருகன்: ஓ.... !! அப்படியா!

ஜான்: அதுமட்டுமல்ல நமக்கு  இரட்சிப்பை ஏற்படுத்துவதிலும்  தேவனின் திருத்துவ தன்மைகள் வெளிப்படுகிறது....

பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே,
ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே,
கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப் படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது:கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.
(1பேதுரு1:21)

1)பிதாவாகிய தேவன் நம்மைத் தெரிந்து கொள்கிறார்.

2)ஆவியான தேவனால் பரிசுத்தமாக்கப்படுகிறது.

3)குமாரனாகிய தேவனின் இரத்தம் தெளிக்கப்படுகிறது.(நம்முடைய பாவங்களைக் கழுவுவதற்க்கு)

இப்பொழுது உங்களுக்கு திரித்துவத்தை பற்றி புரிந்திருக்கும்,என்று நான்
நம்புகிறேன்... என்ன முருகா ?

முருகன்: ஆமா ஜான்,
எனக்கு நன்றாக புரிந்துவிட்டது,
நமக்கு மூன்று தேவன் அல்ல.
ஒரே தேவன் தான் ஆனால்
அவர் மூன்று (பிதா,குமாரன்,
பரிசுத்த ஆவி) ஆள்தத்துவங்களில்
வெளிப்படுகிறார் ஆனால்
தேவன் ஒருவரே.....

ஆமென்... அல்லேலூயா...

பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;.
(1 யோவான் 5:7)

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

Wednesday 19 October 2016

கிறிஸ்தவர்கள் ‎‎שַׁבָּת (Shabbat) சாபத் நாளை அனுசரிக்க வேண்டுமா? அந்த நாளில் தான் சபையாக கூட வேண்டுமா ? ஆதி திருச்சபை விசுவாசிகள் வாரத்தின் முதல் நாள் சபையாக கூடினார்கள் என்று வேதத்தில் இருக்கிறதே ! கிறிஸ்தவர்கள் கர்த்தருக்கென்று வாரத்தில் ஒருநாளை மட்டும் அர்பணிக்க வேண்டுமா ? இல்லை தன் வாழ்நாளையே கர்த்தருக்கென்று அர்பணமாக்க வேண்டுமா ?

கிறிஸ்தவர்கள் ‎‎שַׁבָּת (Shabbat) சாபத் நாளை அனுசரிக்க வேண்டுமா?
அந்த நாளில் தான் சபையாக கூட வேண்டுமா ? ஆதி திருச்சபை விசுவாசிகள் வாரத்தின் முதல் நாள் சபையாக கூடினார்கள் என்று வேதத்தில் இருக்கிறதே ! கிறிஸ்தவர்கள் கர்த்தருக்கென்று  வாரத்தில் ஒருநாளை மட்டும் அர்பணிக்க வேண்டுமா ? இல்லை
தன் வாழ்நாளையே கர்த்தருக்கென்று அர்பணமாக்க வேண்டுமா ?

இதுபற்றி கொஞ்சம் விரிவாக பேசுவோம்.......

ஜான்: ‘‘தேவன் ஏதேனில் Shabbat ஏற்படுத்தினார்’’ என்றும்,யாத்திராகமம் 20-:11-இல் படி ஓய்வு நாள் மற்றும் சிருஷ்டிப்புக்கு இருக்கும் தொடர்பை வைத்து சிலர் கூறுகிறார்களே?
இவைகள் சரியா நண்பா ???

பீட்டர்: நானும் கேட்டுருக்கிறேன் ஆனா
தேவன் ஏழாவது நாள் ஓய்ந்திருந்தார்  (ஆதியாகமம் 2:3) ஓய்வு நாள் அனுசரிப்புக்கு நிழலாட்டமாய் இருந்தாலும், இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வெளியேறின
வரைக்கும் Shabbat ஓய்வு நாளை  குறித்து வேதாகமத்தில் எழுதப்படவில்லை.

சவரிமுத்து: ஆமா நண்பா!!!
ஆதாம் முதல் மோசே
வரை  Shabbat ஓய்வு நாள்
அனுசரித்தற்கான ஒரு சிறிய ஆதாரம் கூட வேதவாக்கியங்களில் இல்லை.

ஜான்: சரிதான் சவரி,
தேவனுடைய வார்த்தையில்..... தேவனுக்கும் #இஸ்ரவேலுக்கும் இடையே ஒரு விசேஷித்த அடையாளமாக ஓய்வு
நாள்  அனுசரித்தல் இருந்தது
என்று தெளிவாகக் கூறுகின்றது .

‘‘ஆகையால்,இஸ்ரவேல்
புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக அனுசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவார்கள். அது என்றைக்கும்,எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும். ஆறுநாட்களுக்குள்ளே கர்த்தர் வானத்தையும், பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார். என்றார் (யாத்திராமம் 31:16,17) என்கிறாரே !!!!!

சவரிமுத்து: ஆமா ஆனால்......
உபவாகமம் 5-ல் மோசே பத்து கட்டளைகளை இஸ்ரவேலரின் அடுத்த தலைமுறைக்கு மறுபடியும் கூறுகிறார். இங்கு, சாபத் அனுசரித்தல் குறித்து 12-14 வசனம் வரைக் கூறி, பின்பு சாபத் இஸ்ரவேலின் தேசத்துக்கு கொடுக்கப்பட்ட காரணத்தையும்  கூறுகிறார்.......

‘‘ நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும்,
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக, ஆகையால் ஓய்வு நாளை அனுசரிக்க உன்
தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்’’ (உபாகமம் 5:15).

பீட்டர்: இஸ்ரவேல் மக்களுக்கு
ஓய்வுநாள் ஆசாரிப்பை தேவன் கொடுத்ததன் நோக்கம் அவர்கள் சிருஷ்டிப்பை நினைவுகூற அல்ல, எகிப்தின் அடிமைத்தனத்தையும் தேவன் அவர்களை  விடுதலையாக்கியதை  நினைவுக்கூறவே சாபத் அனுசரிப்பதற்கான முறைகள் ஏற்படுத்தப்பட்டது......

சவரிமுத்து: ஆமா,சாபத் ஓய்வுநாள் கட்டளையின் கீழிருக்கிற மனிதன்,
அந்த நாளில்....

1)தன் வீட்டைவிட்டு கிளம்பக்கூடாது. (யாத்திராகமம் 16:29)

2)நெருப்பு மூட்டக்கூடாது (யாத்திராகமம் 35:3)

3)வேறு யாரையும் வேலை செய்யவும் சொல்லக்கூடாது (உபாகமம் 5:14)

 4)இந்த சாபத் கட்டளையை
மீறுகிறவன் கொலை செய்யப்பட்டான் (யாத்திராகமம்31:15,
எண்ணாகமம் 15:32-35)

இன்று சாபத் ஓய்வு நாளை குறித்து உபதேசிக்கும் உபதேசிகள் இவைகளை கடைபிடிப்பார்களா ?

பீட்டர்: ஏழாம் நாள் ஓய்வுக்கார கூட்டத்தினர்கள்,கண்டிப்பாக இவைகளை கடைபிடிக்க மாட்டார்கள்
அவர்கள் ஓய்வு நாளை
சரியாக ஆசரிக்கிறார்கள் என்றால் ஓய்வுநாளில் நெருப்புகூட மூட்டக்கூடாது என்ற கட்டளையை பின்பற்றுகிறார்களா? ஒரு அடுப்பாயிருந்தாலும், ஒரு காரை ஸ்டார்ட் (car start) பண்ணுவதாக இருந்தாலும், ஒரு மின் சாதன பொருளை (electricity switch on/off) இயக்கினாலும் நெருப்பு வரும். இவர்கள் இவைகளை செய்வதால் ஓய்வுநாள் ஆசரிப்பை மீறுகிறார்களே !!!!

சவரிமுத்து: எப்பொழுது இயேசு ஓய்வுநாளிலே வியாதியஸ்தரை சுகமாக்கி, உங்களில் எவனாகிலும் ஆடாவது, மாடாவது, கழுதையாவது குழியில் விழுந்தால் தூக்கிவிடாமல் இருப்பானோ? (லூக்கா14:16-)
ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயந்தான் என்று சொன்னாரோ அதிலிருந்தே நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
ஒரு காரியத்தை செய் என்றும் இனி செய்யதேவையில்லை என்றும்
சொல்வதற்கு தேவனுக்கு ஞானம் உண்டு, அந்த தேவ ஞானத்தை புரித்துகொள்ளும் அளவுக்கு ஓய்வு நாள் காரர்களுக்கு வெளிப்பாடு இல்லை....

பீட்டர்: ஆமா நண்பா!!!  ஐந்து
நாள் தேவன் எல்லாவற்றையும் உண்டாக்கியபின் ஆறாம் நாளும்
ஏழாம் நாளும் உள்ளதே என்ன செய்யலாம்....ஒரே குழப்பாயிருக்கே....சரி... ஏழாம் நாளுக்காக மனுஷனை ஆறாம் நாளில் உண்டாக்கி அவனை ஏழாம் நாள் ஓய்ந்திருக்கும்படி செய்வோம் என்றா செய்தார்? இல்லவே இல்லை
மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது.

430 ஆண்டுகள் இஸ்ரவேலர்கள் எகிப்திலே இருந்தார்கள்.அங்கே
ஓய்வு இன்றி அடிமையாய் வேலை செய்து வந்தார்கள்,மனுஷன் ஓய்ந்திருக்கவேண்டும் அப்படி ஓய்ந்திராமல் வேலை செய்துகொண்டே இருந்தால்,அவன் சீக்கிரத்திலே செத்துபோவன். அவனுக்கு இளைப்பாறுதல் தேவை. அது #மனுஷனுடைய நலனுக்காகத்தான், தேவனுடைய நலனுக்கு அல்ல.

ஓய்வுநாளை மனுஷன் பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும் என்னும் கட்டளையை தேவன் சீனாய் மலையில்தான் கொடுத்தார்.
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்கள் ஓய்வு நாளைக் கைகொள்ளவில்லையே!
ஆனாலும் அவர்கள் பரலோகத்திலே இருக்கிறார்கள். ஓய்வுநாளை கைக்கொள்ளாத
ஏனோக்கை தேவன் உயிரோடே எடுத்துக்கொண்டாரே!
நான் ஆபிரகாமின் தேவனும்
ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவன் அநேக இடங்களில் கூறுகிறார்......

"ஓய்வுநாள் மனுஷனுக்காகவா" அல்லது "மனுஷன் ஓய்வுநாளுக்காகவா"? இதை ஓய்வுநாள் போதகர்கள்
கொஞ்சம் யோசிச்சி பார்க்க வேண்டும்....

சவரிமுத்து: (அப்போஸ்தலர் 15:8-20)..ல்
பேதுரு சொல்கிறார்:
"பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்? இயேசுகிறிஸ்துவின் கிருபையிலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே ... விக்கிரகங்களுக்குப்
படைத்தவைகளுக்கும்,
இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டும் என்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும்." என்று கூறி முடிக்கிறார்........

ஜான்: ஆனா ! அப்போஸ்தலர் நடபடிகளில் பவுல் ஓய்வு நாள்தோறும் யூதர்களோடும்,கிரேக்கர்களோடும்
வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
அவர்களுக்கு புத்தி சொன்னான்
என்று.... பார்க்கிறோமோ !

சவரிமுத்து: ஆமா தேவ பக்தியுள்ளவர்கள் கூடம் இடம், பொழுதுபோக்கு ஸ்தலமோ,
கோலிக்கை கூடமோ அல்ல,
அது தேவாலயம் அதுவும்
யூதர்களின் ஓய்வு நாளில்(விடுமுறை)
அதிகமாக பக்தியுள்ளவர்கள் கூடுவார்கள்... பவுல் அங்கே
அந்த பக்திமான்களோடு பங்கு கொண்டு,ஓய்வுநாளை அனுசரிக்க வரவில்லை... அவர்களுக்கு புத்தி சொல்லி சுவிசேஷத்தை பிரசங்கிங்க வந்தார்.... பவுல் ‘‘ யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும் ஆனேன்’’ என்று எழுதியிருக்கிறார்.
(1 கொரிந்தியர்9:20) பவுல் ஜெப ஆலயத்திற்கு வந்தது அவர்களுக்கு
யூத பக்தி விருத்தியை உண்டு
பண்ண அல்ல, அவர்களுக்கு வேதவாக்கியங்களில் கிறிஸ்துவை பற்றிய சத்தியங்களை உணர்த்த....
பவுல் வந்தது ஓய்வுநாளை அனுசரிக்க... அல்ல அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தை அறிவிக்க.....

பீட்டர்: ஆமா யூதருடைய கட்டளைகள் என்பதை கிறிஸ்து சிலுவையிலேயே அழித்தார். ‘‘நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து’’ (கொலேசியா 2:14).
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது அவைகளின் #பொருள் #கிறிஸ்துவைப் பற்றினது..... (கொலேசியர் 2:14-17)...

ஜான்: ஓ.... !!!

சவரிமுத்து: அதுமட்டுமல்ல ஜான்....
(ரோமர் 14:5)ல்.... இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.....

"அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே
முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்"

ஏழாம் ஓய்வுக்காரர்கள் ஒரு நாளை மட்டும் விசேஷமாக எண்ணுகிறார்கள். புதிய உடன்படிக்கையின் விசுவாசியாகிய நம்மை பொறுத்தமட்டில்  ஒவ்வொரு நாளும் விசேஷமான நாள்தான். சமயம் வாய்தாலும் வாய்க்காவிட்டாலும் நாம்
சுவிசேஷத்தை போதிக்க வேண்டும்.
நாம் எல்லா நாளுமே பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும்...

ஜான்: அருமையான விளக்கங்கள் நண்பா... ஓய்வுநாள் பற்றிய என்னுடைய சந்தேகங்கள்... நிவர்த்தியாகிவிட்டது..... ஆனா
கிறிஸ்து உயிர்தெழுந்தவராய் வெளிப்பட்டார் என்று குறிப்பிடப்பட்ட நாளெல்லாம் வாரத்தின் #முதல் நாளாக இருக்கிறது. மத்தேயு 28:1,9,10, மாற்கு16:9, லூக்கா24:1,1,13,15, யோவான்20:19,26) அதுமட்டுமல்ல

வாரத்தின் #முதல்நாளிலே,
அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில்,
பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
(அப்போஸ்தலர் 20:7)......
ஆதித்திருச்சபை வாரத்தின் முதல்நாளென்று கூடியிருந்தனர்
என்று தெளிவாக வேதவாக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

சவரிமுத்து: ஆமா ஜான்....

ஜான்: அதோடுகூட.....
I கொரிந்தியர்16:2 – அல் பவுல் கொரிந்து சபையின் விசுவாசிகளிடம் ‘‘ நான் உங்களில் அவனவன் வாரத்தின் #முதல்நாள் தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக’’ என்று துரிதப்படுத்துகிறார்.
வேதத்தின்படி பார்த்தால் சனிக்கிழமை அல்ல ஞாயிற்றுக்கிழமைதான் கிறிஸ்தவர்கள் சபையில் கூடுகிற நாளாக இருந்தது. இது முதலாம் நூற்றாண்டிலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது......
எனவே வாரத்தின் முதல் நாளை நாம் ஏன் சாபத் நாளாக அனுசரிக்க கூடாது இதுதான் என்னுடைய அடுத்த கேள்வி ?

பீட்டர்: இந்த விசயத்தில் எனக்கும் சரியான புரிதல் இல்லை,நண்பா
 சவரி முத்து இதுபற்றி எங்களுக்கு தெளிவூட்ட முடியுமா ?

சவரிமுத்து: ஓ.... நிச்சயமாக
சாபத் என்பது கிறிஸ்தவ சபைக்கு அல்ல, இஸ்ரேலுக்காக கொடுக்கப்பட்ட
ஒன்று.சாபத் என்பது இன்றும் சனிக்கிழமைகளில்தான் யூதர்களால்  அனுசரிக்கப்படுகின்றது.....

ஒரு புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் சாபத்  அனுசரிக்க வேண்டும் என்ற கட்டளை  கிடையாது. ஞாயிற்றுக்கிழமைகளில் ‘‘ "கிறிஸ்தவ சாபத்’’ என்று கி.பி. 321-இல் ரோம அரசன் கான்ஸ்டான்டைன் ஆணை பிறப்பித்தார் இது வேதத்தின் படி தவறு.... ஏனென்றால் சாபத்
என்பது பழைய ஏற்பாட்டிற்கான கட்டளையாகவுள்ளது. கிறிஸ்தவர்கள் இந்த பிரமாணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டுவிட்டார்கள். (கலாத்தியர் 4:1-26, ரோமர் 6:14). #கிறிஸ்தவர்கள் சனிக்கிழமையோ அல்லது ஞாயிற்றுக்கிழமையோ
சாபத் என்று அனுசரிக்க வேண்டிய அவசியம் இல்லை.........

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிகிற
நமக்கு எல்லா நாளுமே பரிசுத்த நாள்தான்,நாம் எப்போதுமே பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும்,அப்பரம் சபை கூடி ஆராதிப்பதில் மண்டையை போட்டு குழப்பி கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை, அரேபிய நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளது.. அங்கே வெள்ளிக்கிழமைதான் சபை ஆராதனைகள் எல்லாம் நடைபெறுகிறது.... நமக்கு வாரத்தின் முதல் நாள் விடுமுறை நாளாக உள்ளது.. ஆகவே எது நல்ல நாள் என்று, நேரம் காலம் பாத்துக்கிட்டு இருக்காம எந்த நாளிலே எல்லோரும் ஒன்று கூடி ஆராதிக்க வசதியாக அமைகிறதோ அது வெள்ளியோ,
சனியோ,ஞாயிறோ,திங்களோ
அந்த நாளில் கிறித்தவ விசுவாசிகள் ஒன்றாக சேர்ந்து... தேவனை ஆராதிப்போம், துதிப்போம்,அவரை மகிமைப்படுத்துவோம், வேத வசனங்களை தியானிப்போம்...

புதிய உடன்படிக்கையின்
மக்களாகிய,நாம் ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருக்க வேண்டும் என்று
தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார் (அப்போஸ்தலர் 6:4) எனவே காலம் நேரம் பார்த்துக்கொண்டு ஓய்ந்திராமல் எல்லா நாட்களிலும் கர்த்தருடைய  ஊழியத்தை செய்வோம், நாம் இப்போது கடைசி காலத்தில் இருப்பதாலும்,கர்த்தருடைய
இரண்டாம் வருகை மிகவும்
சமீபமாக இருப்பதாலும்,
சுவிசேஷம் அறிவிக்கும் பணியை துரிதப்படுத்துவோம், தீவிரமாக செயல்படுவோம்....

ஆமென்... அல்லேலூயா...

"அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே
முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்"

(ரோமர் 14:5)

ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

(கொலோசெயர் 2:16-17)

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in





கள்ள போதகர்கள் மற்றும்
கள்ள தீர்க்கதரிசிகளின்,பொய் உபதேசத்திலிருந்து கிறிஸ்தவர்கள் தங்களை எப்படி காத்துக்கொள்வது ?

பால்ராஜ்: இன்றய காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள்,கள்ள போதகர்கள், மற்றும் கள்ள தீர்க்கதரிசிகளை அடையாளம் கண்டுகொண்டு, சாத்தானின் வஞ்ஜக கள்ள உபதேசத்தில் சிக்கிகொள்ளாமல், தங்களை காத்துகொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது...

டேனியல்: ஆமா கள்ள உபதேசங்கள் ஆவிக்குரிய பெலனில்லாத  கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை கெடுத்து அவர்களின்
வாழ்க்கையை சீரழித்துவிடும்..
ஆரம்பத்தில் விசுவாசிகளாக இருந்தவர்கள் கள்ள உபதேசத்திற்கு செவிகொடுத்ததால்,இயேசுவைவிட்டு
தூரம் போய் நரக ஆக்கினைக்குள் செல்லும் நிலையும் நேரிடும்...

பால்ராஜ்: ஆமா கள்ள போதகர்கள்  கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று தேவனுடைய வார்த்தைகள் எச்சரிக்கின்றன.....
(மத்தேயு 24:23-27; 2பேதுரு 3:3;
  மற்றும் யூதா 1:17-18).

டேனியல் : பொய் உபதேசங்கள் மற்றும் கள்ள போதனைகளுக்கு எதிராக நம்மை காத்துக்கொள்ள நாம்  சத்தியத்தை நன்கு அறிந்து
கொள்வதே சிறந்த வழியாகும்.

பால்ராஜ்: ஆமா பொய்யை,போலியை  எதுவென்று கண்டுபிடிக்க,சத்தியத்தை உண்மையை நல்ல முறையில் கற்றுக்கொள்ள வேண்டும்.

டேனியல் : ஆமா எந்த ஒரு விசுவாசி சரியாக சத்திய #வசனத்தை கையாளுகிறானோ (2தீமத்தேயு 2:15) மற்றும் வேதத்தை கருத்தாக தியானிக்கிறானோ அவனால் தவறான உபதேசத்தை எளிதாக கண்டுகொள்ள முடியும்..... ஒரு சின்ன உதாரணம் சொல்றேன்.... மத்தேயு 3:16-17ல் சொல்லப்பட்ட பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டை வாசித்திருக்கும் ஒரு விசுவாசி திரித்துவத்தை மறுக்கும் எந்த கள்ள  போதனையையும் உடனடியாக கேள்வி கேட்பான்...

எனவே முதலாவது நாம் வேதத்தை தியானிக்க வேண்டும் மற்றும் வேத வசனத்தின் படி நாம் கேட்க்க கூடிய எல்லா போதனைகளையும் நிதானிக்க வேண்டும்.

பால்ராஜ் : “மரமானது அதன் கனியினால் அறியப்படும்” என்று இயேசு சொன்னார் (மத்தேயு 12:33). கனியை பார்க்கிற போதே அவர்களுடைய போதனைகள்  சரியானதா? அல்லது தவறானதா?  என்பதை நாம் பகுத்தாய்வு செய்ய முடியும்.........

டேனியல் : ஆமா அவர்களின் உபதேசங்கள் கள்ள போதனையா ? இல்லை நல்ல போதனையா ?
என்பதை அறிந்து கொள்ள..
 எனக்கு தெரிந்த சில வழிமுறைகளை சொல்கிறேன்....

1) அவர்கள் இயேசுவை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்....

2) அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை போதிக்கிறாரா?

3) அவர்கள் வெளிப்படுத்தும் குணாதிசயங்கள்  தன்மைகள் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனை  மகிமைபடுத்துகிறதா?

***********************************
1) அவர்கள் இயேசுவை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்....

மத்தேயு 16:15-16 இயேசு கேட்கிறார், நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்? பேதுரு பிரதியுத்தரமாக, ஒரே ஒரு பதில்தான் சொல்கிறார்..........
“நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்,”

ஆனால் கள்ள உபதேசிகள் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அழைத்து அடையாளப்படுத்த மாட்டார்கள்... அவர்கள்  இயேசு மரியாளின் குமாரன் என்று அடையாளப்படுத்துவார்கள்...

பால்ராஜ்: ஆமா பேதுருவுக்கு நன்றாக தெரியும் இயேசு,மரியாளின் வயிற்றில் பிறந்தவர் என்று ஆனால் அவர் இயேசுவை மரியாளின் குமாரன் என்று அடையாளப்படுத்தவில்லை.. அவரை தேவனுடைய குமாரன் என்று அடையாளப்படுத்துகிறார். அதனால் தான் மத்தேயு 16:17-ல் இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்;
மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். என்று கூறினார்.....

மேலும் பலர் இயேசுவை ஒரு சாதாரண தீர்க்கதரிசி என்றும் அடையாளப்படுத்துவார்கள்,அவர் சிலுவையில் மரிக்கவில்லை என்றும் கிறிஸ்துவின் உபதேசத்திற்கு மாறுபாடானவைகளை போதிப்பார்கள்
இவர்கள் எல்லோரும் கள்ள உபதேசிகளின் கூட்டதின் அங்கத்தினர்கள் ஆவார்கள்.....

டேனியல் : ஆமா! 2 யோவான் 9ல் வாசிக்கிறோமே.....

“கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற
எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.”

பால்ராஜ்: மேலும் இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய மீட்பின் செயல் இந்த இரண்டும் எல்லாவற்றை பார்க்கிலும் மிக முக்கியமானது,
இயேசு கிறிஸ்து தேவனுக்கு சமமானவர் என்பதை கள்ள உபதேசிகள் மறுக்கிறவர்களாக இருப்பார்கள்.அவருடைய தியாக மரணத்தை குறைத்து மதிப்பிடுபவர்கள், அல்லது கிறிஸ்துவினுடைய  தன்மையை மறுப்பவர்களுக்கு கவனமாக இருக்க வேண்டும்.

***********************************

டேனியல் : அடுத்து......

2) அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை போதிக்கிறாரா?

சுவிசேஷம் என்பது 2 கொரிந்தியர் 15:1-4ன் படி இயேசு கிறிஸ்துவின் மரணம்,அடக்கம், மற்றும் உயிர்த்தெழுதல் பற்றிய நற்செய்தி
என வரையறுக்கப்படுகிறது. இவைகளை அவர்களின் போதனைகள் வெளிப்படுத்துகிறாதா என்று நாம் நிதானிக வேண்டும்...

பவுல் கலாத்தியர் 1:7ல் எச்சரிப்பது போல “சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்கள்.”

தேவன் நமக்கு கொடுத்த செய்தியை மாற்ற போப்பாண்டவருக்கோ அல்லது பெரிய பாஸ்டருக்கோ, புனிதருக்கோ
தேவ தூதருக்கோ அல்லது வேறு எந்த சிருஷ்டிகளுக்கோ அதிகாரம் கிடையாது..... இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்... இக்காலகட்டத்தில் அனேகர்கள் தேவனுடைய வசனத்தைவிட  தரிசனங்களுயும்,சொப்பனங்களையும்
காட்சி கொடுக்கிற நிகழ்வுகளையும் நம்புகிறார்கள்..

தேவனுடைய வசனத்திற்கு ஒத்துப்போகாத எந்த  தரிசனங்களும் சொப்பனங்களும்,காட்சி கொடுத்தலும் புதிய உபதேசங்களும்,
தேவனிடத்திலிருந்து வந்தது அல்ல

"நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்"
(கலாத்தியர் 1:8-9)

பால்ராஜ்: ஆமா.....

***********************************

டேனியல் : 3)அவர்கள் வெளிப்படுத்தும் குணாதிசயங்கள்  தன்மைகள் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனை  மகிமைபடுத்துகிறதா?

கள்ள போதகர்களை குறித்து யூதா 11 சொல்கிறது, இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.” இந்த வசனத்தின் படி கள்ள போதகர்கள் அவர்களுடைய பெருமையினால் (காயினை தேவன் தவிர்ப்பதற்கான காரணம்), பேராசையினால் (பிலேயாம் காசுக்காக தீர்க்கதரிசனம் சொன்னான்) மற்றும்  மீறுதலினால் (கோரா தன்னை மோசேக்கு மேலாக உயர்த்தினான்) அறியப்படுவார்கள். இயேசு இப்படிப்பட்டவர்களுக்கு கவனமாக இருக்கும் படி சொன்னார் மற்றும் இவர்களுடைய கனியின் படி இவர்களை நாம் அறியலாம்
 (மத்தேயு 7:20).

இப்படிபட்டவர்கள் தங்களுக்கு தாங்களே தீர்க்கதரிசி,அப்போஸ்தலன்,
என்று பட்டம் வைத்துக்கொண்டு,
கள்ள தீர்க்கதரிசனம் சொல்லி மக்களை வஞ்சிப்பார்கள், அவர்கள் தேவனுடைய நாமத்தின் மகிமைக்காய் காரியங்களை செய்ய மாட்டார்கள்,
சுய பெருமை, சுய விளப்பரம், பேசுவார்கள் தங்களை அவர்கள்
சூப்பர் பரிசுத்தவான் போல் காட்டுவார்கள்...

நான் பரலோகம் சென்று பக்கோடா சாப்பிட்டேன்,நரகம் சென்று நாஸ்தா  சாப்பிப்டேன்.... கதைவிடுவார்கள்...

வேதம் போதிக்கும் ஆவியின் வரங்கள்
கனிகள் இவைகளுக்கு மாறாக,
கண்டபடி உருலுதல்,குதித்தல் ,
புரளுதல்,தாவுதல்,குதித்தல்
குத்தாட்டம் போடுதல்,மிருகங்கள் போல் ஊளையிடுதல்... இவைகள் பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள்...

கள்ள உபதேசிகளை அடையாளம் கண்டுகொள்ளுதல் குறித்து  நாம் மேலும் அறிந்து கொள்ள ஆதி திருச்சபைசபைகளில் காணப்பட்ட தவறான உபதேசத்தை குறிப்பாக எதிர்க்க எழுதப்பட்ட வேதாகமத்தில் உள்ள புத்தகங்களை ஆய்வு செய்யலாம். குறிப்பாக கலாத்தியர், 2பேதுரு, 1யோவான், 2 யோவான் மற்றும் யூதா.

பால்ராஜ்: எல்லாம் இப்படி வெளிப்படையாக இருந்தும்
கள்ள போதகர்கள் மற்றும் கள்ள தீர்க்கதரிசிகளை இனங்கண்டு கொள்வது அனேக நேரங்களில் கிறிஸ்தவர்களுக்கு கடினமாக இருக்கிறது....

சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வான் (2கொரிந்தியர் 11:14), மற்றும் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வார்கள்
(2கொரிந்தியர் 11:15). என்று வேதம் போதிக்கிறது....

ஆகவே வேதாகம சத்தியத்தை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நம்மால் போலியையும் பொய்களையும்  இனங்கண்டு கொள்ள முடியும்,அதுவே கள்ள உபதேசங்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி பரிசுத்த வேதாகமம் மட்டுமே
 வேறு மாற்று வழி இல்லை....

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

Friday 30 September 2016

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இரட்சிக்கப்படாத நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நாம் எப்படி சுவிசேஷத்தை சொல்வது ? அதற்கான வழிமுறைகள் என்ன ?

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இரட்சிக்கப்படாத நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு  நாம் எப்படி சுவிசேஷத்தை சொல்வது ?
அதற்கான வழிமுறைகள் என்ன ?

டேனியல்: ஒரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவனுக்கு,கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் உடன் பணிபுரிகிறார்கள் அல்லது தெரிந்தவர்கள் நிச்சயம் இருப்பாங்க....

பால்ராஜ்: நமக்கு தெரியாதவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பது நமக்கு எளிதாக உள்ளது ஆனா நமக்கு தெரிந்தவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பது சிறிது கஷ்டமான காரியமாக அதுவும் உறவினருக்கு
நாம் சுவிசேஷத்தை அறிவிப்பது இன்னும் கொஞ்சம் கடினமான காரியமா இருக்கு... சிலர் சுவிசேஷத்தின் நிமித்தம் இடறல் அடைவார்கள் என்று வேதம் சொல்லுகிறது (லூக்கா 12:51–53). ஆனாலும், சுவிசேஷத்தை அறிவிக்க நமக்கு கட்டளை இடப்பட்டிருக்கிறது, மற்றும் சாக்கு போக்கு சொல்ல நமக்கு இடமில்லை (மத்தேயு 28:19–20; அப்போஸ்தலர் 1:8; 1 பேதுரு 3:15).

டேனியல்: ஆமா ! பால்ராஜ் ! கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத,
நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடன் பணிபுரிகிறார்கள் ஆகியவர்களுக்கு நாம் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு முன் நாம் அவர்களுக்காக ஜெபிப்பதே நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் ஆகும்.

பால்ராஜ்: சரியாக சொன்ன நண்பா!
தேவன் அவர்கள் இருதயங்களை மாற்றவும் அவர்கள் கண்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கு திறக்கப்படுவும் முதலில் நாம்
ஜெபிக்க வேண்டும்.....
(2 கொரிந்தியர் 4:4). தேவனின் அன்பை அவர்கள் அறிந்து கொள்ளவும் இயேசு கிறிஸ்து மூலமாக அவர்கள் இரட்சிப்படையவும் வேண்டும் என்று அவர்களுக்கு தேவன் உணர்த்தும்படி ஜெபிக்க வேண்டும் (யோவான் 3:16).

டேனியல்: அதுமட்டுமல்ல நாம்
அவர்கள் மத்தியில் ஞானத்தோடு செயல்பட வேண்டும்,சுவிசேஷம் சொல்ல நாம் வாஞ்சை உள்ளவர்களாக மற்றும் தைரியமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.....

பால்ராஜ்: “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே(கேட்கிறதுனாலே)
வரும்,கேள்வி (கேட்கிறது)
தேவனுடைய வசனத்தினாலே வரும்”
(ரோமர் 10:17).#faith comes by #hearing
தேவனுடைய வசனங்களை எவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்களோ,
அவர்களுக்கு விசுவாசம் வந்துவிடும்,
அவர்களும் நம்மைபோல் விசுவாசிகளாக மாறிவிடுவார்கள்...
எனவே நமது #வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் #தேவனுடைய வசனத்தின் #பிரதிபலிப்பாக இருக்க வேண்டும்

டேனியல்: ஆமா,இயேசு கிறிஸ்துவின் மூலமாகத்தான் இரட்சிப்பு கிடைக்கிறது  எனவே அதற்கு வேதம் போதிக்கும் முறையை நாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்
(ரோமர் 10:9–10).

பால்ராஜ்: அதோடு கூட நமது கிறிஸ்தவ விசுவாசத்தை அவர்களிடம் தன்மையாகவும்,மரியாதையோடும் பேச நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.....(1 பேதுரு 3:15).

டேனியல்: அவர்களுக்காக ஜெபிப்பதும் மற்றும் சுவிசேஷம் அறிவிப்பதோடு மட்டுமல்ல நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்பதாக நாம் தேவ அன்போடு,சமாதானத்தோடு,
நீதியோடு,நேர்மையோடு,
பரிசுத்தோடு நடப்பதும் மிக முக்கியம், ஏனென்றால், தேவன் நமது வாழ்கையில் செய்த மாற்றங்களை அவர்கள் பார்ப்பார்கள்.....

பால்ராஜ்: ஆம் அவைகள் மிகவும், முக்கியம்,நமது வாயில் வசனத்தை பேசுவது மட்டுமல்ல,நமது செயல்பாடுகளும் வசனத்தின் பிரதியாக கட்டாயம் இருந்தே ஆக வேண்டும்... முடிவாக,நாம் நேசிப்பவர்களின் இரட்சிப்பை தேவனின் கரத்தில் நாம் அர்ப்பணிப்போம், நமது பிரயாசங்களோ நமது முயற்சிகளோ அல்ல, தேவனின் அன்பு, வல்லமை மற்றும் கிருபை மட்டுமே ஜனங்களை இரட்சிக்கும்,நாம் அவர்களுக்காக செய்யும் சிறந்த காரியமாய் இருப்பது என்னவென்றால் அவர்களின் இரட்சிப்புக்காக ஜெபிப்பது,
திருவசனத்தை சரியாக போதிப்பது, சாட்சியாய் வாழ்வது மட்டும்தான்....
மற்றவைகளை தேவ ஆவியானவர் பார்த்துக்கொள்வார்.... விரைவில் அவர்களும் நம்மை போல் இரட்சிப்பை அடைவார்கள்...... என்பது நிச்சயம்...

ஆமென்... அல்லேலூயா....

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

Tuesday 20 September 2016

பரமண்டல ஜெபம் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கான இயேசு கற்றுக்கொடுத்த ஒரு மாதிரி முறையா ? இல்லை மந்திரம் போல் நாம் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டிய மனப்பாட முறையா ?

#பரமண்டல ஜெபம் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கான இயேசு கற்றுக்கொடுத்த ஒரு மாதிரி முறையா ? இல்லை மந்திரம் போல் நாம் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டிய மனப்பாட முறையா ?

டேனியல்: பரமண்டல ஜெபம் என்பது இயேசு தமது சீஷர்களுக்கு (நமக்கு) கற்றுகொடுத்த ஜெபமாகும்
(மத்தேயு 6:9-13 மற்றும் லூக்கா 11:2-4).

மத்தேயு 6:9-13 சொல்லுகிறது......

“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.”

பீட்டர்: அநேகர் இந்த ஜெபத்தை நாம் மனப்பாடம் செஞ்சு அத அப்படியே சொல்லி ஜெபிக்கனும் என்று தவறாக புரிஞ்சுகிட்டு இருக்காங்க....
அதனால பலர் பரமண்டல ஜெபத்தை ஒரு மந்திரம்  போல நினைத்து அதை திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டே இருக்கிறாங்க... இப்படி செஞ்சா அவங்க ஜெபம் நிறைவாகிடுமுனு நெனைக்கிறாங்க....

டேனியல்: ஆமா ஆனா அவங்க நெனப்புக்கு  எதிர் மாறாக வேதம் நமக்கு இவ்வாறு கற்றுக்கொடுக்கின்றது.....
அதாவது நாம் ஜெபம் செய்யும்போது, தேவன் நமது வார்த்தைகளில் கவனம் செலுத்துவதைவிட, நாம் இருதயத்தையே கவனிக்கிறார் (மத்தேயு 6:6-7).ஜெபிக்கும்போது,
நமது இருதயத்தை தேவனிடம் ஊற்ற வேண்டும் (பிலிப்பியர் 4:6-7),
மனதில் ஏதாவதை நினைத்து கொண்டு வெறுமனே  மனப்பாடம் செய்து தேவனிடம் ஒப்பிக்கப்படுர  வார்த்தைகள் பிரயோஜனமற்றது..
அது ஒன்றுக்கும் உதவாது....

பீட்டர்: அதனால குழந்தைகளுக்கு
பரமண்டல ஜெபத்தை மனப்பாடம் செய்ய சொல்லி கொடுக்க வேண்டாமுனு,நாம் சொல்ல கூடாது
தேவனுடைய வார்த்தைகளை அவர்களது மனதில் விதைக்க வேண்டும்.. அது மிக அவசியமே ஆனால் மனப்பாடம் செய்து சொல்வது,
வாசிப்பது இவைகள் ஜெபம் என்று வேதம் போதிக்கவில்லை.....

பரமண்டல ஜெபம் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்க்கான ஒரு மாதிரி வடிவம்... நமது ஜெபத்தில் இருக்க வேண்டிய “பொருட்களை” அது காட்டுகிறது.

டேனியல்: சரியான சொன்ன நண்பா! இதை பற்றி நான் கொஞ்சம் விரிவாக சொல்றேன்.....கவனி....

1)“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்பது நாம் யாரிடம் ஜெபம் செய்யவேண்டும் என்று சொல்லுகிறது—பிதாவானவரிடம்.

2)“உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக”—இது நாம் தேவனை துதித்து ஆராதிக்க வேண்டும் என்று சொல்லுகிறது.

3)“உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்ற வார்த்தைகள் நாம் நமது வாழ்கையில் மற்றும் உலகத்தின் மேல், நம் திட்டங்கள் அல்ல, தேவன் வைத்துள்ள திட்டங்கள் நடக்கும்படி ஜெபிக்க வேண்டும் என்று நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

4)“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” நமது தேவைக்கு தேவனிடம் கேட்க வேண்டும் என்று உணர்த்துகிறது

5)“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்ற வார்த்தைகள் நமது பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்ய வேண்டும் என்றும் நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்றும் சொல்லுகிறது.

6) ஜெபத்தின் முடிவில் இருக்கும்
இந்த வார்த்தைகள் “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,” நாம் பாவத்தின் மேல் வெற்றி அடையும்படி தேவனின் உதவிக்காக மற்றும் பிசாசின் தாக்குதல்கள் அனுகாமல் பாதுகாப்பிற்காக தேவனிடம்  வேண்டுதல் செய்ய வேண்டும் என்று சொல்கிறது..

இப்படியாக, பரமண்டல ஜெபம் என்பது ஏதோ மனப்பாடம் செய்து தேவனிடம் ஒப்புவிக்கின்ற ஒன்று அல்ல. அது நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கு இயேசு கற்றுக்கொடுத்த மாதிரி முறை  ஆகும்...

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

facebook.com/LIVINGWAYMARVEL



Sunday 18 September 2016

கிறித்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டுமா ? இல்லை புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டுமா ?

#கிறித்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டுமா ?
இல்லை புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டுமா ?

ஜான்: பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் இஸ்ரவேல் தேசத்தாருக்கு அளிக்கப்பட்டதேயன்றி கிறிஸ்தவர்களுக்கல்ல என்பதை அறிந்து நாம் கொள்ளவேண்டும்.
அதுமட்டுமல்ல நியாயப்பிரமாணம் கிறித்தவர்களுக்கு பிரயோஜனமற்றது
என்று சொல்வது தவறு....

பீட்டர்: ஆமா ! கிறிஸ்துவுக்குள் நாம் இன்று நியாயப்பிமாணத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல...என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்....
நியாயப்பிராமாணம் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பிரமாணம்.சில சட்டங்கள் இஸ்ரவேல் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிந்து பிரியப்படுத்த வேண்டுமென்பதை விளக்குவதாயும் சில சட்டங்கள் இஸ்ரவேல் எவ்வாறு தேவனை ஆராதிக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாகவும்,பாவ நிவர்த்திக்கான வழியை விளக்குவதாகவும் இருக்கின்றன (பலிகள் பற்றிய ஒழுங்கு).மேலும், சில சட்டங்கள் இஸ்ரவேலரை மற்ற நாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்க ஏற்படுத்தப்பட்டன (உணவு மற்றும் உடைகள் சார்ந்த சட்டங்கள்). ஆனால் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம்  இன்று கிறித்தவர்களாய் இருக்கிற நம்மைக் கட்டுப்படுத்துகிறதில்லை.

ஜான்: ஆமா! இயேசு சிலுவையில் மரித்த போது, பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். (ரோமர் 10:4; கலாத்தியர் 3:23-25; எபேசியர் 2:15).

பீட்டர்:ஆம், நாம் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு பதிலாக,
கிறிஸ்துவின் பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்கிறோம் (கலாத்தியர் 6:2),
அதாவது

1)#உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக...

2)#உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” (மத்தேயு 22:37-39).
நாம் இந்த இரண்டு கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்தால், கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்க்கும் அனைத்தையும் நிறைவேற்றி விடுகிறோம்......

ஜான்:ஆமா சரிதான்,
“இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது” (மத்தேயு 22:40).

பீட்டர்: ஆமா நண்பா,இருப்பினும் இன்றைய காலகட்டத்துல பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் பிரயோஜனமற்றது என்று சிலர் எண்ணுகிறார்கள்,அவங்கல போல நாமும் எண்ணிவிடக் கூடாது.

ஜான்: ஆமா பீட்டர்,ஒரு
சிலர் அவ்வாறு தான் நெனைக்கிறாங்க,ஆனால் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் பெரும்பாலான கட்டளைகள் “தேவனிடத்தில் அன்புகூருவாயாக” மற்றும் “பிறனிடத்தில் அன்புகூருவாயாக” என்ற இரண்டு கட்டளைகளில் அடங்கி விடுகின்றன,இது அவர்களுக்கு விளங்கவில்லை....அதுனால தான் அவங்க பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் பிரயோஜனமற்றதுனு நெனைக்கிறாங்க.....

பீட்டர்: நாம் தேவனிடத்திலும் பிறரிடத்திலும் எவ்வாறு அன்புகூர வேண்டுமென்பதை நன்கு விளக்குகிற ஒரு #வழிகாட்டியே #பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம்.ஆனால் இன்றைய கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவர்கள் என்று சொன்னால் அது தவறு. நியாயப்பிரமாணத்தின் ஒரு சில சட்டங்கள் இன்று நமக்குப் பொருந்தும் என்று சொல்வதும் தவறு. ஏனென்றால் கிறிஸ்துவானவர் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணமத்தின் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றினார்......

ஜான்: ஆமா நண்பா! நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் #பாரமானவைகளுமல்ல
(1 யோவான் 5:3).பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணமத்தின் இரத்தினச்சுருக்கமே பத்துக் கட்டளைகள்.

#பத்துக் கட்டளைகள் #புதிய ஏற்பாட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

நாம் தேவனில் அன்புகூருவோமானால் நிச்சயமாகவே நாம் அன்னிய தேவர்களை வணங்கவோ விக்கிரங்களுக்கு முன்பாக தலை வணங்கி நிற்கவோ மாட்டோம். இதே போல, நாம் பிறரை நேசிப்போமானால் சக மனிதர்களுக்கு விரோதமாக கொலை, பொய், விபச்சாரம், பொருள் அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம்.

பீட்டர்: 100% கரைக்ட் ஜான்.....
பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின் பிரதான நோக்கமாவது நம்மால் நியாயப்பிரமாணத்தை கடைபிடிக்க முடியாதென்பதை உணர்த்தி நமக்கு இயேசு கிறிஸ்து என்ற இரட்சகர் தேவை என்பதை விளக்குவதேயாகும்
(ரோமர் 7:7-9; கலாத்தியர் 3:24).

ஜான்: பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் ஒருபோதும் உலகாளவிய அளவில் எல்லா மக்களுக்கும் எல்லா கால கட்டத்திற்கும் உகந்த ஒரு சட்டமாக தேவனால் நியமிக்கப்படவில்லை......
 நாம் தேவனையும் பிறரையும் நேசிக்கவேண்டும். இவ்விரண்டு கட்டளைகளையும் உண்மையாகக் கடைபிடிப்போமானால் நிச்சயமாகவே தேவன் நம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கிற அனைத்தையும் நாம் நிறைவேற்றிவிடுவோம்.... எனவே புதிய உடன்படிக்கையின் கீழ் புது சிருஷ்டியாக ஆக்கப்பட்ட நாம் கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்பதே புதிய ஏற்பாட்டின் சாராம்சம்....

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

facebook.com/LIVINGWAYMARVEL

Tuesday 13 September 2016

மரணத்திற்குப்பின் மனிதனுக்கு நடப்பது என்ன?

மரணத்திற்குப்பின் மனிதனுக்கு
நடப்பது என்ன?

டேனியல்: மரணத்திற்குப்பின்
மனிதனுக்கு நடப்பது என்ன என்பது குறித்து கிறிஸ்தவ மக்களிடையே கொஞ்சம் குழப்பமே நிலவி வருது,இது பத்தி கிறித்தவ விசுவாச அடிப்படையில வேதாகம ஆதாரத்தோட இன்று  பார்ப்போம்மா ?

பீட்டர்: கண்டிப்பா நண்பா,அதுக்கு முன்னாடி, மரணத்திற்குப்பின்
நடப்பது குறித்து கிறித்தவர்கள்
எந்தந்த மாதிரியான நம்பிக்கை வச்சுருக்காங்கனு பார்ப்போம்....

டேனியல்: ஆமா,முதலில் அதை பாத்துட்டு அது கிறித்தவ விசுவாச அடிப்படையில் ஒத்துப்போகிறதானு நிதானிச்சுட்டு,இயேசு கிறிஸ்து மற்றும் அப்போஸ்தர்களின் உபதேசங்களின் அடிப்படையில் முடிவு எடுப்போம்.

பீட்டர்: ஓகே.. நண்பா!

1)சில கிறித்தவர்கள் மரணத்திற்குப்பின் கடைசி நியாயத்தீர்ப்பு வரை எல்லோரும் "நித்திரையடைகிறார்கள்" அதன்பின்பு பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனைவரும் அனுப்படுவார்கள் என்று கருதுகிறார்கள்

2)வேறு சில கிறித்தவர்கள்
மரிக்கும் தருணத்தில்தானே மனிதர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு தங்களது நித்திய குடியிருப்புக்கு அனுப்பப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள்.

3)இன்னும் சில கிறித்தவர்கள், மனிதர்கள் இறக்கும்போது கடைசி உயிர்த்தெழுதலுக்கும் கடைசி நியாயத்தீர்ப்பிற்கும்,இறுதியாக, தங்கள் நித்திய குடியிருப்புக்கும் காத்திருக்கும்படி ஒரு"தற்காலிகமான" பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனுப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள்,

4) மேலும் சிலர்,மனிதர்கள் மரணத்திற்குப் பின்
பரலோக சந்தோஷத்துக்குள்
நுழையும்படியான பரிசுத்தம்
அடையும்படியாக,கடைசி
நேர சுத்திகரிப்புக்காக
உத்தரிக்கும் ஸ்தலம் என்னும்
இடத்தில் காத்திருப்பதாகவும்,
அவர்களுக்காக அவர்களின் உறவினர்கள்,நண்பர்கள்
பிரத்தனை செய்தால் அவர்கள் பரலோகம் அடைவார்கள் என்று நம்புகிறார்கள்.

டேனியல்: சரி,இப்ப கிறித்தவ விசுவாச அடிப்படையில் மரணத்திற்குப்பின் மனிதனுக்கு நடப்பது என்ன
என்பதைக் குறித்து பார்ப்போமா ?

பீட்டர்: கண்டிப்பா முதலாவது,
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது (யோவான் 3:16,18,36) மரணத்திற்குப்பின் விசுவாசிகளுடைய ஆத்துமா/ஆவி பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஏனென்றால்,கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டிருப்பதினால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன.

டேனியல்: ஆமா இதுபற்றித்தான் நாம் (2கொரிந்தியர் 5:6-8 பிலிப்பியர் 1:23)
வாசிகிறோமே ! "இந்த தேகத்திவிட்டு  குடிபோகவும், கர்த்தரிடத்தில் குடியிருக்கவும்"என்றுள்ளதே " அதுமட்டுமல்ல அப்போஸ்தலனாகிய பவுலும் இதை பிலிப்பியர் 1:23-24 ல்
சற்று தெளிவாக எழுதுகிறார்

"ஏனெனில் இவ்விரண்டினாலும்
நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, #கிறிஸ்துவுடனேகூட #இருக்க
எனக்கு ஆசையுண்டு, அது
அதிக நன்மையாயிருக்கும்;
அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்." என்று பிலிப்பிய விசுவாசிகளுக்கு எழுதுகிறார்.
இதிலிருந்து மரணத்திற்குப்பின் விசுவாசிகளுடைய ஆத்துமா/ஆவி பரலோகத்தின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவிடம் செல்கிறது என்று நாம் பார்க்கிறோம்.....

பீட்டர்: ஆனால்,1கொரிந்தியர் 15:50-54
மற்றும் 1தெசலோனேக்கியர் 4:13-17 போன்ற வேதபகுதிகள் விசுவாசிகள் மறுபடி எழுந்திருப்பதையும் மகிமையின் தேகம் அவர்களுக்கு  கொடுக்கப்படுவதையும் பற்றி விவரிக்கிறதே ? விசுவாசிகள் மரித்தவுடனே கிறிஸ்துவோடுகூட இருக்கச் செல்வார்கள் என்றால், இந்த எழுந்திருக்குதலின் நோக்கம் என்ன?

டேனியல்: சொல்கிறேன் நண்பா, மரித்தவுடன் விசுவாசிகளின்
ஆத்துமா/ஆவி கிறிஸ்துவுடனே இருக்கச் செல்லுகிறது,மாம்சசரீரம் கல்லறையில் "நித்திரையில்"
இருக்கும்,விசுவாசிகளின் எழுந்திருக்குதலின்போது மாம்சசரீரமானது உயிர்த்தெழப்பட்டு, மகிமையடைந்து பின்பு
ஆத்துமா/ஆவியுடன் மறுபடி இணைக்கப்படுகிறது.மீண்டுமாய் இணைக்கப்பட்ட இந்த மகிமையின் ஆவி ஆத்துமா சரீரமே புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகும்பொழுது விசுவாசிகள் சுதந்தரித்துக்கொள்ளும் நித்திய சொத்தாயிருக்கும் (வெளிப்படுத்தின விசேஷம் 21-22).

பீட்டர்: நன்றாக புரிகிறது
டேனியல்,இது இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு மரணத்திற்குப்பின் நடக்கப்போகிற காரியம் சரி ஆனால் இயேசுவை நம்பாத விசுவாசிக்காத,அவரை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்கு மரணத்திற்குப்பின் என்ன நடக்கும் ?

டேனியல்: சொல்கிறேன் நண்பா!இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காத அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு
மரணம் என்பதன் பொருள் நித்திய ஆக்கினை.ஆனாலும்,விசுவாசிகளுக்கு நடப்பதைப்போலவே,அவிசுவாசிகளும் தங்களுடைய கடைசி உயிர்த்தெழுதலுக்கும், நியாயத்தீர்ப்பிற்கும்,நித்தியமாக வாழும்நிலைக்கும் காத்திரும்படி ஒரு தற்காலிகமான ஒரு குடியிருப்புக்கே அனுப்பப்படுகிறார்கள் என்று
லூக்கா 16:22-23ன் படி நாம்
பார்க்க முடியும்....

பீட்டர்: ஓ... இப்போ எனக்கு நன்றாக புரிகிறது ! ஐசுவரியமுள்ள மனுஷன் மரித்தவுடனே வேதனைக்குள்ளாகிறதாக வசனம்  கூறுகிறது. ஆனால் வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15 மரித்த #அவிசுவாசிகள் அனைவரும் #உயிர்தெழப்பட்டு,வெள்ளைச் சிங்காசனத்தின் முன் நியாயந்தீர்க்கப்பட்டு பின்பு #அக்கினிக்கடலிலே தள்ளப்படுவதாக வேதம் விவரிக்கிறது.

டேனியல்: ஆமா நண்பா! அவிசுவாசிகள் மரித்தவுடனேயே நரகத்திற்கு (அக்கினிக்கடல்) அனுப்பப்படுவதில்லை பதிலாக நியாயத்தீர்ப்பிற்கும் தண்டனைக்குமெனெ ஒரு தற்காலிகமான இடத்தில் இருக்கிறார்கள்.அவிசுவாசிகள் உடனடியாக அக்கினிக்கடலுக்கு அனுப்பப்படவில்லை என்றாலும் அவர்களின் மரணத்திற்கு அடுத்த நிலை இன்பமாக இருக்கப்போவது இல்லை.....

"இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே"(லூக்கா 16:24) என்றுதான் அந்த ஐசுவரியமுள்ள மனுஷனும் கூப்பிட்டான்.

பீட்டர்: மரணத்திற்குப் பின்பு,
ஒரு மனிதர் ஒரு "தற்காலிகமான" பரலோகத்திலோ, நரகத்திலோ வசிக்கிறார். இந்த தற்காலிகமான இடத்திற்குப்பின் கடைசி உயிர்தெழுதலின்போது அவருடைய நித்தியமாக வாழும் நிலையில் மாற்றம் இருக்காது. நித்தியமாக வாழும்படி குறிப்பிடப்படும் "இடத்தில்" மட்டுமே மாற்றம் இருக்கும்.

டேனியல்: ஆமா,விசுவாசிகள்
புதிய வானத்திலும் புதிய பூமியிலும் நுழையும்படி இறுதியாக அனுமதி பெறுவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 21:1). அவிசுவாசிகள் அக்கினிக்கடலுக்கு இறுதியாக அனுப்பப்படுவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15).இதுவே மனிதர்களின் இறுதியான, நித்தியமான குடியிருப்பு....

பீட்டர்: இவைகள் அவர்கள் இரட்சிப்பிற்காக இயேசு கிறிஸ்துவில் மீது மாத்திரம் நம்பிக்கை கொண்டிருந்தார்களா என்பதை மட்டுமே பொறுத்து அமைகிறது....

*********************************

நன்றி மீண்டும் சந்திப்போம்.....

"இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; இயேசுவை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்"
(யோவான் 3:36)

*********************************
(Living Way Evangelic Mission)

Bro:Marvel Jerome

marveljerome.blogspot.in

facebook.com/LIVINGWAYMARVEL





Wednesday 10 August 2016

#இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை என்று இயேசு சொன்ன அந்த கல் யார் ?

பீட்டர்: அப்போஸ்தலர்களுக்கு வாரிசுகள் இருக்கிறார்கள் மற்றும் தெய்வீக நியமிப்பினால் அவர்களுக்கு அதிகாரம் கடத்தப்படுகிறது என்ற கொள்கை,ரோமன் கத்தோலிக்க மதத்தில் உள்ளது....

அந்தோனி: ஆமா இப்ப யாரு அத இல்லைனு சொன்னா !

பீட்டர்: திருச்சபையின் உள்ள
ஆயர்கள், பேராயர்கள் அப்போஸ்தலரின் வாரிசுகள் என்றும் #போப் #பேதுருவின் வழிவந்தவர் என்றும் கத்தோலிக்க மக்கள் மத்தியில் போதிக்கப்படுகிறது,எல்லா கத்தோலிக்கர்களும் இவைகளை நம்புகிறார்கள்

அந்தோனி:ஆமாப்பா,நானும் அவைகளை நம்புறேன்...

பீட்டர்: ஆனால் நீ நம்புவது வேதாகம உபதேசம் அல்ல

அந்தோனி: நீ என்ன சொல்ற பீட்டர் ?
மத்தேயு 16:18 வசனத்தை வாசித்து
பார்.......
"மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை"
அந்த கல் பேதுருதான்,அவரே ரோமன் கத்தோலிக்க தாய் திருச்சபைக்கு மூலைகல்லாகவும்,அவரின் வழிவந்த போப்பாண்டவரே தலைக்கல்லாகவும் இருக்கிறார்..இது கூட உனக்கு தெரியாதா ?

பீட்டர்: நீ சொல்வது தவறு அந்தோனி
நீ வசனத்திற்கு தவறான விளக்கம் கொடுக்கிறாய்...

ஏனென்றால் அதற்கு அடுத்ததாக வரும் வசனத்தில் அதாவது மத்தேயு 16:23-ல் இயேசு இவ்வாறு சொல்கிறார்......

"இயேசுவோ திரும்பிப்"பேதுருவைப் பார்த்து":எனக்குப் பின்னாகப்போ, "சாத்தானே", நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்."

அப்ப இந்த இடத்தில் பேதுருவை இயேசு,சாத்தான் என்று சொன்னதால்,
பேதுருதான் "சாத்தான்"என்று நீ சொல்லுவாயா ?

அந்தோனி :சொல்ல மாட்டேன்

பீட்டர்: ஏன் அந்தோனி மத்தேயு 16:18யை பற்றி பேசும் நீ ஏன் மத்தேயு 16:23 யை பற்றி பேச மறுக்கிறாய் ?

மத்16:23 ல் தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்தித்து, இயேசுவுக்கே இடறலாயிருந்த பேதுரு தான்,ரோமன் கத்தோலிக்க தாய் திருச்சபைக்கு தலைவர்,
அவரின் வாரிசுகள் தான்
எங்கள் ஆயர்களும்,குருக்களும்
என்று உன்னால் சொல்ல முடியுமா ?
இயேசுவே நேரடியாக "சாத்தானே" என்று சொன்ன பேதுருவின் வழிவந்த போப்பாண்டவர் தான் எனது
சபையின் தலைவர் என்று நீ சொல்வாயா ? பதில் சொல் அந்தோனி

அந்தோனி:(ஒன்றும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்)

பீட்டர்: உண்மையில் இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் என்று இயேசு சொன்ன அந்த "கல்லும்" பேதுரு இல்லை  எனக்குப் பின்னாகப்போ, "சாத்தானே"
இயேசு சொன்ன அந்த சாத்தனும் பேதுரு இல்லை.....வேதாகமத்தை சரியாக படித்து, தேவ ஆவியின் துணைகொண்டு வாசித்து
இயேசு கிறிஸ்து யாரை கல் என்றும்,எந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் என்று கூறினார் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்..

அந்தோனி: சரி பீட்டர் நான் அறிந்து கொள்கிறேன்,எனக்கு வசனத்தின் படி விளக்கம் கொடு... யார் அந்த கல் ?
எந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன் என்று இயேசு கூறினார்.

பீட்டர்: சரி விளக்குகிறேன்,
சத்தியத்தை கவனி.....

(மத்தேயு 16ம் அதிகார சூழலை கவனிக்கையில் [வசனங்கள் 13-16,20] இந்த உரையாடல் இயேசுவை யார் என்று அடையாளங்கண்டு கொள்வதை மையமாகக் கொண்டிருக்கிறது.)

பரிசேயரும்,சதுசேயரும் இயேசுவை வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும்,
என்கிறார்கள்,இயேசும் அவர்களுக்கு தக்க பதில் அளித்துவிட்டு,அக்கரை சென்று தம் சீஷர்களுக்கு உபதேசித்துவிட்டு,அவர்களை நோக்கி ஜனங்கள் என்னை  யார்? என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன்,எலியா என்றும் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்...பேதுருவோ "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து"என்றான், பிதா உனக்கு இதை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று கூறிவிட்டு அதற்கு பின் மத்தேயு 16:18 வசனத்தில்..................
"நான் உனக்குச் சொல்லுகிறேன்,
நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்;பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை

இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் என்று இயேசு தன்னை குறித்தே சொன்னார்....

அந்தோனி:அப்ப, பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை,
என்கிறாரே அதற்கு அர்த்தம் என்ன ?

பீட்டர்: இயேசுவை பாதாள வாசல்  மேற்கொள்ள முடியவில்லை ,
அவர் பாதாளத்திலிருந்து உயிர்த்து எழுந்தார்.

அந்தோனி: அப்ப மத்தேயு 16:18 வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும்
அந்த கல் அப்போஸ்தலராகிய
பேதுரு இல்லயா ?

பீட்டர்: ஆமா,அப்போஸ்தலராகிய பேதுருவும் பவுலும் யாரைக் “கல்” எனவும் “மூலைக்கல்” எனவும் புரிந்துகொண்டார்கள்,போதித்தார்கள் என்று வசனத்தின் படி பார்ப்போமா அந்தோனி ?

அந்தோனி: பார்ப்போம் நண்பா !  சத்தியத்தை அறிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன் சொல்....

பீட்டர்: கத்தோலிக்கமே! கர்த்தருடைய வசனத்திற்கு செவிகொடு !

"உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும்,தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்கு #தலைக்கல்லானவர்.
(அப்போஸ்தலர் 4:10-11)

மனுஷரால் தள்ளப்பட்டதாயினும்,
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற #ஜீவனுள்ள #கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
அந்தப்படியே: இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற #மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான #மூலைக்கல்லாகிய #அந்தக்கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று;
(1 பேதுரு 2:4-7)

என்று அப்போஸ்தலராகிய பேதுரு
இயேசு தான் அந்த கல் என்று வெளிப்படையாக போதிக்கிறார்

அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே #மூலைக்கல்லாயிருக்கிறார்;
(எபேசியர் 2:20 )

என்று அப்போஸ்தலராகிய பவுல்
இயேசு தான் அந்த கல் என்று வெளிப்படையாக போதிக்கிறார்.

அந்தோனி: அடப்பாவிகளா ?
இவ்வளவு வசனங்களும் பைபிளில் தான் இருக்கா ?

பீட்டர்: ஆமா,அந்தோனி,

இயேசுவே சபையாகிய கல்,
கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நம்மை ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாக்கி,
தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாக கட்டியிருக்கிறார்.
பாதளத்தின் வாசல்கலால் மேற்கொள்ள முடியாத, சீயோனின் ஜீவ கல்,
அவரே மூலைக்கல்,அவரே தலைக்கல்....

அந்தோனி: அப்ப போப்பாண்டவர் ?

பீட்டர்:(சிரித்துக்கொண்டே)
 போ அந்தோனி கமெடி பண்ணாத
போய் வேதாகமத்தை எடுத்து படி,
தேவ ஆவியானவர் உதவியை நாடு,
அவர் உனக்கு எது சத்தியம் என்பதை தனது வசனத்தினால் போதிப்பார்..

அந்தோனி: சரி நண்பா, நீ சொன்ன
படி செய்கிறேன், அப்பரம் இன்னோரு சந்தேகம்,

மத்தேயு 16:19-ல் இயேசு பேதுருவை பார்த்து.......
"பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்;பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

பரலோகராஜ்யத்தின் திறவுகோல் என்றால் என்ன ? அது பேதுருவுக்கு எப்படி கொடுக்கப்பட்டது ? பூலோகத்தில்,பரலோகத்தில்
கட்டுவது, கட்டவிழ்ப்பது இதல்லாம் என்ன இதற்கு வேதாகம சத்திய விளக்கங்களை எனக்கு நாளை போதிக்கிறாயா நண்பா ?

பீட்டர்: நிச்சயம் நாளை உனக்கு போதிக்கிறேன்,அந்தோனி..
சரி மீண்டும் சந்திப்போம்.

marveljerome.blogspot.in

Tuesday 26 April 2016

(15) கத்தோலிக்கம் அனேகர் செல்லும் விசாலமான வழிகளில் ஒன்று

#தனித்துவ செய்தி

கத்தோலிக்கம் அனேகர் செல்லும்
விசாலமான வழிகளில் ஒன்று

அந்தோனி: நண்பார்களே, கத்தோலிக்கம் இந்த உலகத்தில் எப்படி இவளவு விசாலமா பரவியது ? ஏன்னா உலகத்துலயே அனேகர்  கத்தோலிக்கர்களாக தான  இருக்கிறாங்க  ?

பீட்டர்: சொல்றேன் நண்பா,
எருசலேமை தலையிடமாக கொண்ட ஆதி திருச்சபை பல்வேறு உபத்திரத்தினால் துன்ப படுத்தப்பட்டது ஆனா உபத்திரம் எவ்வளவு தூரம்  பெருகினாலும் சபையோட வளர்ச்சி, கிறிஸ்தவர்களின் எழுச்சி  குறையவில்லை. ஆரம்பத்தில்
ரோம சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள்தொகை சுமார் 120 மில்லியன்
(12 கோடி) என்று கணக்கிடுகின்றனர். இதில் பாதிப்பேர், அதாவது 60 மில்லியன்(6கோடி) கிறிஸ்தவர்கள் என்று குறிப்பு கூறுகிறது.

ஜான்: ஆமா சாத்தான் திருச்சபையை உபத்திரவத்தினால் அழிக்கமுடியாது என்று கண்டுகொண்டான்.அதனால  கிறிஸ்தவர்களை காலிபண்ண பிசாசு அதிக நயவஞ்சனையான முறையைக் கையாண்டான்; கிறிஸ்தவர்களைக் கொண்டே கிறிஸ்தவத்தை அழிக்கத் திட்டமிட்டான். அதாவது போலி கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்துக்குள் இணைத்து கிறிஸ்தவ சத்திய உபதேசத்தை சீர்குலைக்கும் வேலையை தெடங்கினால்...

அத்தோனி: அதனாலதான் வேதத்தில் இல்லாத பற்பல உபதேசங்கள் கத்தோலிக்கத்தில் இருக்கிறதா ?

பீட்டர்: ஆமா ஆந்தோனி,ரோமப் பேரரசரான கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவர்களின் உறுதியையும், உண்மையையும் கண்டு பிரமித்தான். அவன்,கிறிஸ்தவனானான்
கி.பி.324 ல் அரசாங்கத்தையும், திருச்சபையையும் ஒன்றாக இணைத்தான். திருச்சபைக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஏராளமான சலுகைகளை அள்ளி வழங்கினான்; சபைப் போதகர்களுக்கு ஆலயங்களைக் கட்டுவதற்கு அரசாங்க கருவூலத்திலிருந்து ஏராளமான பணம் கொடுக்கப்பட்டது. கிறிஸ்து மார்க்கம் அரசாங்க மார்க்கமாயிற்று. சபைத் தலைவர்களுக்கு'பசிலிக்கா
'(BASCILICA) என்ற மிக ஆடம்பரக் கட்டிடங்கள் வழங்கப்பட்டன. இதிலே மதமாற்றங்களுக்கான சடங்குகள் நடைபெற்றன.

அந்தோனி: அப்படியா அப்ப அரசாங்க சலுகை பெற ஏராளமான மக்கள் கிறிஸ்தவர்களாக மாறிருப்பாங்களே !

ஜான்: ஆமா,கிறிஸ்தவர்களுக்கு இதுவரை இருந்த உபத்திரவம் நீங்கி, கிறிஸ்தவனாயிருப்பது பெரிய அதிஷ்டமாக ஆனது திரளான மக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினர்,ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்டு மனம் மாறவில்லை
அரசாங்க சலுகைகளைப் பெறவும், உயர் பதவி பெறவும்,அனேக மக்கள் கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி காட்ட  மாறினார்கள்.பணத்திற்காக, வசதியான வாழ்விற்காக ஏகப்பட்ட பேர்  சபைப்போதகர்களாக மாறினர்.

அந்தோனி: அடப்பாவிகளா ?

பீட்டர்: இதானால சபையில
பரிசுத்த ஆவியின் வல்லமை விட
பண வல்லமையையே மக்கள் விரும்பினார்கள்,பிரசங்க முறைகள் சொற்பொழிவுகளாக மாறின;
வேத வசனம் மறக்கப்பட்டது.இதனால்
சபைகள் முழுவதும் மனந்திரும்பாத மக்களால் நிறைந்தது.சபையின் எல்லா பணத்தேவைகளும் அரசாங்கத்தால் பூர்த்தி செய்யப்பட்டன. அநேக பிற மத வழிபாட்டுத்தலங்கள் கிறிஸ்தவ ஆலயங்களாக்கப்பட்டன. பிற மதத்தினரை சபைக்குக் கொண்டுவர அவர்களின் பழக்கவழக்கங்களை சபைக்குள் கொண்டுவந்தனர். பிற மதத்திலிருந்த சகல மூடப்பழக்க வழக்கங்களும் சபையின் சடங்குகளாய் மாறின. இதனால உலகமெங்கும் இந்த கலப்பட உபதேசம் மக்களால் எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்தோனி: ஆமா,கண்டிப்ப ஏற்றுக்கொளுவாங்க, ஏன்னா,
தாங்கள் வழிபடுகிற விக்கிரகங்கள்,தாங்கள் வழிபடுகிற தேவதைகளை,பெயரை மற்றும் மாற்றி இதை வழிபடுங்கள்,இதுதான் கிறிஸ்தவம்,இதற்கு அரசாங்க சலுகைகளும் உண்டு அப்படினு சொன்னா, மெய் தேவனை அறியாத புற ஜாதி மக்கள்,கண்டிப்பா இந்த மார்க்கத்தை ஏத்துகிடுவாங்க..

ஜான்: பிறகு காலங்கள் செல்ல செல்ல, வேதத்தின் அடிப்படை சத்தியங்கள் போதிக்கப்படவில்லை; எனவே எவை அடிப்படை சத்தியங்கள், எவை கிறிஸ்தவ உபதேசத்திற்கு முரண்பட்டவை என்பதை மக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இயேசுவின் திருச்சபை என்ற பெயரில்,
எல்லா விதமான புற மத பழக்கத்தாலும், மூடப்பழக்க வழக்கங்களாலும் நிறைந்த விசாலமான கத்தோலிக்க மார்க்கத்தில்  அனேகர் இருக்கிறார்கள்,

அந்தோனி : ஓ... இதனாலதான் இயேசு கிறிஸ்து மத்தேயு 7: 13 இவ்வாறு சொன்னாரா ?
"கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்"

பீட்டர்: ஆமா அந்தோனி,உலகம் முழுவதும்,கத்தோலிக்க,இஸ்லாமிய,போட்ட மதத்து மக்களே அதிகம்,ஏனென்றால் கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்"

ஜான்: ஆனா,ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
(மத்தேயு 7: 14) இடுக்கமான,
நெருக்கமான, வாசல்வழியாய் பிரவேசித்தவர்கள் அதாவது, கண்களுக்கு முன் இருக்கிற  உலகத்துவ காரியங்கள்,மதங்கள்,
வழிபாட்டு முறைகள் என்னும் விசால வழியை விட்டுவிட்டு,கண்களால் காணமுடியாத ஆவிக்குரிய காரியங்களை பரிசுத்த வேதாகமம் வழியாய் பகுத்தறிந்து,ஜீவனுக்கு செல்லும் அந்த ஒரே வழி யார் என்பதை கண்டுபிடித்து நடப்பவர்கள்.
ஆவியில் புதிதாய் பிறந்து,வேதாகம வார்த்தைகளை மட்டும் பின்பற்றும் கிறிஸ்தவர்கள், இவர்களின் எண்ணிக்கை உலகில் குறைவாக தான் இருக்கும் இவர்களே நித்திய ஜீவனை அடைவார்கள்...

அந்தோனி: இப்ப எனக்கு நல்ல புரிஞ்சிருச்சுமா,ஏன் இந்த கத்தோலிக்கம் இப்படி விசாலமாக,
 உலகத்திலுள்ள,அனேக மக்களால் நிறைந்து இருக்குனு.... ஏன்னா
கேட்டுக்குப்போகிற வாசல்தான் விசாலமா இருக்கும்.

"ஜீவனுக்குப்"போகிற வாசல் இடுக்கமும்,வழி
நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
(மத்தேயு 7: 14)

 நானே வழியும் சத்தியமும் "ஜீவனுமாயிருக்கிறேன்" என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
(யோவான் 14: 6)

=======================

ஜீவ வழி -LIVING WAY

www.facebook.com/lwcomm

marveljerome.blogspot.in