Wednesday 15 April 2020

கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டிகளே!
இந்த உலகத்தின் மக்ககள்
சொல்லுவார்கள்,நான் கண்டால்தான்
விசுவாசிப்பேன்,பெற்றுக்கொண்டால்
தான் நம்புவேன்,என்று ஆனால்
கர்த்தர்,சொல்கிறார்,நீ முதலில் நம்பு
பிறகு பெற்றுக்கொள்வாய்,முதலில் விசுவாசி பிறகு மகிமையை காண்பாய் என்று,ஆம் நாம் ஆண்டவரின் அற்புதத்தை,பார்ப்பதற்கு,உணர்வதற்கு
முன் அவைகளை பெற்றுக்கொள்ள
போகிறோம் என்று விசுவாசிக்க வேண்டும்,அப்போது நாம்
அற்புதங்களை பெற்றுக்கொள்ள
முடியும்.

நாம் எந்தவிதமான நல்ல
அறிகுறிகளை,பார்ப்பதற்கு
முன்பாக அந்த அறிகுறிகளை
 நாம் சரீரத்தில்,அடைந்து
விட்டோம் என்று விசுவாசிக்க
 வேண்டும்,பெட்ரோலில் நனைந்த துணியை,எப்படி நெருப்புக்கு பக்கம் கொண்டு,போனால்,நெருப்பு
சடாரென துணியில் பற்றுவது போல்,விசுவாசத்தோடு நாம்
தேவனிடம் அணுகும் போது
அவரிடம் இருந்து வல்லமை
 சடாரென புறப்பட்டு வந்து,
அற்புதங்களை செய்கிறது.
(மாற்கு5:25-34) வேதத்தில்
பெரும்பாடுள்ள ஸ்திரீயின்
சம்பவத்தை நாம் அறிந்திருக்கிறோம்,

இயேசுவை அனேக மக்கள் நெருக்கி கொண்டும்,(மாற்5:31) வஸ்திரத்தை கூட்டத்தில்,எதார்த்தமாக  தொட்டுக்கொண்டும் இருந்தார்கள்,
ஆனால் அவர்கள் யாருக்கும்,
அற்புதம்நடக்கவில்லை,ஆனால்
அந்த 12 வருடமாக  பெரும்பாடுள்ள
ஸ்திரீ தொட்டதும்,அவளுக்கு
அற்புதம் நடந்தது,ஏனென்றால்
அவள் விசுவாசத்தோடு தொட்டால்.

நான் இயேசுவின் வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று
சொல்லி விசுவாசத்தோடு தொட்டால்,
அவளின் தொடுதலில்,விசுவாசம் இருந்தது,
உடனே இயேசுவினிடம் இருந்து,வல்லமை புறப்பட்டு வந்து அவளின் வியாதியை குணமாக்கியது,(மாற்:5:30)அவள் இதற்கு முன் இதுபோல் செய்தவள் இல்லை,
அவள் முதல் முறையாக, செய்தவள்,
இயேசுவின் அன்பையும்,அவரின்
குணமாக்கும் வல்லமையையும்,
அறிந்து விசுவாசத்தோடு தொட்டால் எனவே அவள் வேதனை நீங்கி சுகமானாள்.

ஆம் என் அன்பு சகோதர சகோதரிகளே!
நீங்கள் எப்படிப்பட்ட வியாதியின் நிலையில் இருந்தாலும்,எத்தனை
வருடமாக அந்த பிரச்சனை
இருந்தாலும்,பரவாயில்லை ஒன்றை
மனதில் வைத்துக்கொள்ளுங்கள்,
இயேசு என்னை சுகமாக போகிறார் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
இயேசுவை நான் விசுவாசிக்கிறேன் அதனால் நான் சொஸ்தமாவேன்,
பூரண குணமாவேன்,என்று விசுவாசித்துக்கொண்டே இருங்கள்
வியாதியோடு இருக்கிறவர்கள்,
பரிகாரியாக இயேசுவை
வைத்துக்கொண்டு எதார்த்தமாக இருக்காதீர்கள்,இயேசுவால் அவரின் வார்த்தையால்,அவரின் தழும்புகளால்,
அவரின் வல்லமையினால் நான் சொஸ்தமாவேன்,பூரண குணமாவேன்,
என்று விசுவாசித்துக்கொண்டே இருங்கள்
நிச்சயம் சுகத்தை பெற்றுக்கொள்வீர்கள்,

ஆமென்... அல்லேலூயா...

அவர் உன் #அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் #நோய்களையெல்லாம் #குணமாக்கி,உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது. (சங்கீதம் 103:3-5)

நம்முடைய #பாவங்களை நாம் #அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு #மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
(1 யோவான் 1:9)


No comments:

Post a Comment