Wednesday 15 April 2020

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்
(எபிரெயர் 10:38)

கிறிஸ்துவுக்குள் தேவனுடைய
சொந்த வித்துக்களே!
கிறிஸ்து இயேசுவினால் நீதிமானாக
ஆக்கப்பட்ட நாம்(ரோம4:5)
விசுவாசத்தினால் பிழைக்கும்
படி தேவனால் அழைக்கப்பட்டு
இருக்கிறோம்,உலகம் நம்மை
பார்த்து சொல்கிறது,பணம்,
பதவி,பட்டம்,செல்வாக்கு
இருந்தால் தான் இந்த பூமியில்
பிழைக்க முடியும்,இந்த
சமுதாயத்தில் நல்லா வாழ
முடியும் என்று,ஆனால்
கர்த்தர் சொல்கிறார்,உங்களுக்கு
எது இல்லவிட்டாலும்,விசுவாசம்
இருந்தால் போதும் நீங்கள்
பிழைப்பீர்கள்(ஆப2:4,கலா3:11,
ரோம1:17,எபி10:38,யோ11:25-26)
இம்மையிலும்,மறுமையிலும்
வாழ்ந்து இருப்பீர்கள்.

உங்களுக்கு இப்போது இல்லாத
நன்மைகள் ஆசீர்வாதங்கள்
எல்லாம்,ஒரு நாள் இருக்கிறதாக
மாறும்( உப 28:2) ஏனெனில்
நம் தேவன் இல்லாதவைகளை
இருக்கிறது போல் அழைக்கிற
தேவன்(ரோம4:17)அவர்
நம்முடைய தகப்பன்
அவருடைய வித்தினாலே
 நாம் மறுபடியும் (1யோ3:9) சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்
புதுசிருஷ்டிகளாகிய நாம்,
அவரின் வார்த்தைகளை
விசுவாசித்து பிழைக்கும் படி
அவரால் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இயேசுவை பற்றும் விசுவாசத்தினால்
தேவன் நம் இருதயத்தை சுத்தமாக்கி
இருக்கிறார்,நம்மை இஸ்ரவேலர்களாக ஆக்கியிருக்கிறார்(அப்15:9 எபே: 2:15)
இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட
வாக்குத்தத்தங்கள் அனைத்திலும்
விசுவாசித்து பிழைக்கிற நமக்கு
இன்று நமக்கும் பங்கு உண்டு
(2கொரி 1:20)இன்று நாம்
விசுவாசத்தோடு ஜெபிக்கும்
போது நாம் பெற்றுக்கொள்வோம்,
அவைகள் நமக்கு உண்டாகும்
(மாற்11:24) விசுவாசத்தினாலே
அவர் தமது ஆவியை நமக்கு
ஈவாக அளித்திருக்கிறார்,
ஆகையால் இன்று நாம்
கர்த்தரோடே ஒரே ஆவியாக
இசைந்து இருக்கிறோம்.
(1கொரி6:16) விசுவாசத்தினாலே
நாம் உலகம்,மாம்சம்,பிசாசு
ஆகியவைகளின் மீது
ஜெயிக்கிற ஜெயத்தை
பெற்றிருக்கிறோம்,
நாம்முற்றும் ஜெயம்
கொள்கிறவர்களாக 
இருக்கிறோம்.
(1யோ5:4)(ரோம8:37)

ஆம் பிரியமானவர்களே!
நாம் விசுவாசத்தினால்
தேவனிடத்திலிருந்து
எவ்வளவு பெரிய பாக்கியங்களை
பெற்றிருக்கிறோம்,பாருங்கள்!!!!
நிலவாழ் உயிரினங்கள் சுவாசித்து பிழைக்கும் படி தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது..
கிறிஸ்து இயேசுவுக்குள் நீதிமானக
இருக்கிற நீங்களும் நானும்,
 விசுவாசித்து பிழைக்கும்படி
தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்.
உங்களை சுற்றி இப்போது நீங்கள் எதிர்பார்க்கிற ஆசீர்வாதங்கள்
இல்லாமல் இருக்கலாம்,பிழைக்க வழி இல்லாதது போல் தோன்றலாம்,
ஆனால் விசுவாசம் இருந்தால்
போதும் அதை மூலதனமாக வைத்து
நீங்கள் ஜீவனுக்கு தேவபக்திக்கும்,
இம்மைக்கும் மறுமைக்கும்
தேவையான சகல ஆசீர்வாதங்களையும்,
நன்மைகளையும் பெற்றுக்கொள்ளளாம்

ஆமென்... அல்லேலூயா....

ஆதலால் விசுவாசம் கேட்கிறதினால்
வரும்,கேட்பது தேவனுடைய வசனத்தினாலே வரும் (ரோமர் 10:17)


No comments:

Post a Comment