Wednesday 15 April 2020

இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி
ஒரு குமாரனைப் பெறுவாள்;அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்
என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.(மத்தேயு 1:23)

கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டிகளே!
வேதம் சொல்கிறது,இம்மானுவேல்
என்றால் தேவன் நம்மோடு இருக்கிறார்
என்று அர்த்தமாம்,இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக,இரட்சகராக ஏற்றுக்கொண்ட அனைவரோடும்,தேவனாகிய இயேசு கூடவே இருக்கிறார்,அவர் நம்மைவிட்டு
விலகுவதும் இல்லை,நம்மை கைவிடுவதும் இல்லை என்று அவர் வாக்கு கொடுத்திருக்கிறார்.(எபிரெயர் 13:5)
இது சத்தியம்.

ஆம் பிரியமானவர்களே!
ஆனால் அவர் நம்மோடு இருக்கிறதை
நாம்அனுதினமும் உணர்கிறோமா?
அவரின் வல்லமையான பிரசனத்தை எந்நேரமும் அனுபவிக்கிறோமா?
என்றால் நம்மில் அனேகர் இல்லை என்போம்,ஆனால் உண்மையில் நாம்
அவர் நம்மோடு இருக்கிறதையும்
அவரின் வல்லமையான பிரசனத்தையும் எந்நேரமும் நம்மால், உணரவும் அனுபவிக்கவும் முடியும்.ஆம்
அவ்வாறு இருந்தால்,நம்மால் சமாதானத்தோடும்,இளைப்பாறுதலோடும்,
மிகுந்த மனமகிழ்ச்சியோடும் 24 மணிநேரமும் இருக்க முடியும்,அத்தோடு,
பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷத்தையும்,தேவனின் வல்லமையையும் எப்பொழுதும்
பெறவும் முடியும்.

தேவனாகிய இயேசு நம்மோடு கூடவே இருப்பதை, எப்படி நாம் உணர்வது,
எப்படி அவரின் பிரசனத்தின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டே இருப்பது? ஒன்றுமில்லை,சகோதர சகோதரிகளே! அவர் நம்மோடு இருக்கிறதை நமது மனக்கண்ணில் காண வேண்டும்,சரீர கண்ணில் அவரை நாம் காணவில்லை,என்பதால் அவர் நம்மோடு இல்லை என்று ஆகிவிட முடியாது,அவர் நம்மோடு தான் இருக்கிறார்,இதை நாம் விசுவாசித்து அவரோடு நடக்க வேண்டும்.
அதாவது நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிற (2 கொரி5:6)
அனுபவத்திற்கு நேராக வரும் போது,அவரின் பிரசனத்தின் ஆசீர்வாதங்களை வல்லமைகளை
நம்மால் பெற்றுக்கொண்டே இருக்க முடியும்.

உதாரத்திற்கு,நீங்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்கிறீர்கள்,என்றால் இயேசு என்னோடு அருகில் இருக்கிறார் என்று விசுவாசித்து உணர்ந்துகொண்டே இருங்கள்,உள்ளத்தில் அவரோடு பேசுங்கள்,அப்போது அவரின் பிரசனத்தின் வல்லமையை உங்களால் பெற முடியும்,
உங்கள் வேலையில் உண்மை,நேர்மை,
இருக்கும்,உங்கள் கடமையை சரியாக நீங்கள் செய்வீர்கள்,அவரின் பிரசனத்தின் வல்லமையிலிருந்து,உங்களுக்கு,ஞானம் அறிவு,விவேகம்,சாமர்த்தியம்,சுறுசுறுப்பு,
உற்சாகம் வந்துகொண்டே,இருக்கும்.
பதவி உயர்வுகள் உங்களை தேடி ஓடி வரும்.

நீங்கள் தனியாகவோ அல்லது உங்கள் இரட்ச்சிக்கப்படாத உலக நண்பர்களோடு இருக்கிறீர்கள் என்றால்,இயேசு என்னோடு அருகில் இருக்கிறார்,என்று விசுவாசித்து உணர்ந்துகொண்டே இருங்கள்,உங்களால் பரிசுத்தமில்லாத காரியங்களை,பார்க்கவோ,
பேசவோ,கேட்க்கவோ,செய்யவோ முடியாது.அவரின் பிரசனத்தின்
வல்லமை உங்களுக்கு தேவ பயத்தையும்,
பரிசுத்தத்தை கொடுக்கும்.

நீங்கள் பயணம் செய்கிறீர்கள்,என்றால்
இயேசு என்னோடு அருகில் இருக்கிறார் என்று விசுவாசித்து உணர்ந்துகொண்டே இருங்கள்,அவரின் பிரசனத்தின் வல்லமை உங்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும்,
உங்கள் பயணம் ஆசீர்வாதமாக அமையும்.

நீங்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்கிறீர்கள் என்றால்,இயேசு என்னோடு அருகில் இருக்கிறார்,என்னோடு கூடவே வருகிறர்,அவரே மருத்துவரின் கரம்பிடித்து,எனக்கு சிகிச்சை அளிக்கிறார்,என்று விசுவாசித்து
அவ்விதம்  உணர்ந்துகொண்டே இருங்கள்
அப்போது அவரின் பிரசனத்தின் வல்லமையை உங்களால் பெற முடியும்,
உங்களுக்கு தைரியம் உண்டாகும்,
திட நம்பிக்கை உண்டாகும்,விசுவாசம் அதிகமாகும்,நீங்கள் முற்றிலுமாக குணம் அடைவீர்கள்.

ஆம் என் அன்பு சகோதர சகோதரிகளே!
அவர் நம்மோடு இருக்கிறதையும்
அவரின் பிரசனத்தின் வல்லமையும்,
நாம்  விசுவாசித்து அவரோடு நடந்து பயிற்சி செய்ய வேண்டும்
அதாவது நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிற (2 கொரி5:6)
அனுபவத்திற்கு நேராக கடந்து வரும் போது,அவர் இம்மானுவேலாய் நம்மோடு இருக்கிறதை நம்மால் 24மணி நேரமும் உணரமுடியும்,அதேடு அவரின் பிரசனத்தின் ஆசீர்வாதங்களை, வல்லமைகளை நம்மால் எப்போதும் பெற்றுக்கொண்டே இருக்க முடியும்.

ஆமென்... அல்லேலூயா...

No comments:

Post a Comment