Wednesday 15 April 2020

இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும்,
எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
(பிலிப்பியர் 2:10-11)

கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளே!
உங்களை துன்பப்படுத்துகிற,
உங்களை அடிமைப்படுத்துகிற
உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற,
எந்த காரியமாக இருத்தாலும்,சரி
அவைகளை என்னால் மேற்கொள்ள முடியலயே,கண்ட்ரோல் பண்ண
முடியலயே,என்று தவிக்கிறீர்களா?
கவலைப்பாடாதீர்கள்,பயப்படாதீர்கள் அவைகள் உங்களுக்கு கீழ்படியாமல் இருக்கலாம்,ஆனால் இயேசு என்னும்  நாமத்திற்கு முன்பாக அவைகள்
கீழ்படிந்து,மண்டியிட்டே ஆக,
வேண்டும்.

மதுபான போதை புகையிலை,
பழக்கம்,இயேசுவின் நாமத்திற்கு
முன்பாக மண்டியிட்டே ஆக
வேண்டும்,அந்த கிட்னி பிரச்சனை,
கேன்சர் வியாதி இயேசுவின் நாமத்திற்கு முன்பாக மண்டியிட்டே ஆக வேண்டும்,
இயேசுவின் நாமத்திற்கு முன்பாக,
வியாதி வறுமை வேதனை,மரணம்
பாவ பழக்கம்,சத்துருவின் சகல வல்லமைகளும் கீழ்படிந்து,
மண்டியிட்டே ஆக வேண்டும்
ஏனென்றால் பிதாவாகிய தேவன்,
எல்லா நாமத்திற்கும் மேலான
நாமத்தை இயேசுவுக்கு தந்தருளி இருக்கிறார்,எனவே இயேசுவின்
நாமத்திற்கு முன்பாக எல்லாம்
மண்டியிட்டுதான் ஆக வேண்டும்,
கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும்

ஏராளமான பிசாசுகள் பிடித்த
(லேகியோன்) மனிதன் இயேசுவை பார்த்தவுடன் அவருக்கு முன்பாக விழுந்து,கீழ்பணிந்து கெஞ்சுகிறான்,
அவனுக்குள் அனேக பிசாசுகள் குடியிருந்தன,இயேசு அவைகளை
துரத்தி அந்த மனிதனுக்கு மறுவாழ்வு அளித்தார்,அவன் புத்தி தெளித்தவானாக ஆனான் (லூக்:8:26-35)அதேபோல
தான் இயேசுவின் நாமத்திற்கு
முன்பாக பிசாசின் வல்லமைகள் விழும்,மண்டியிடும்,அவரின்
நாமத்தினால் நம்மால் சகல சத்துருவின் வல்லமைகளையும்,நமது கால்களுக்கு  கீழ்ப்படுத்தி அவைகளை மேற்கொள்ள முடியும்.(லூக்10:19)இயேசுவின் நாமத்தினால் பிசாசுகளை துரத்தவும்,வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கவும் முடியும்.
(மாற் 16:17-18) ஏனெனில்
பிதாவாகிய தேவன்,எல்லா
நாமத்திற்கும் மேலான நாமத்தை இயேசுவுக்கு தந்தருளி இருக்கிறார்,
எனவே இயேசுவின் நாமத்திற்கு
முன்பாக எல்லாம் மண்டியிட்டுதான்
ஆக வேண்டும்.

ஆம்,பிரியமானவர்களே! உங்கள்
குழந்தை வியாதியாக இருக்கிறதா?
 உங்கள் கைகளைகுழந்தையின்
மீதுவைத்து சொல்லுங்கள்,
இயேசுவின் நாமத்தினால் இந்த
காய்ச்சல் ஒடிப்போவதாக,இந்த
 இருமல் நின்று போவதாக என்று சொல்லுங்கள்,இயேசுவின்
 நாமத்தினால் வியாதி மறைந்து ஆரோக்கியம் பிறந்ததை நீங்கள் காண்பீர்கள்,உங்களை துன்பப்படுத்துகிற,
உங்களை அடிமைப்படுத்துகிற
உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற,
எந்த காரியமாக இருத்தாலும்,
அவைகளை இயேசுவின்
நாமத்தினால் கீழ்படுத்துங்கள்,
மதுபான போதை புகையிலை,
பழக்கம்இச்சையான எண்ணங்கள்,
பாவப்பழக்கங்கள் ஆகியவைகளுக்கு எதிராக இயேசுவின் நாமத்தை
சொல்லி அவைகள் உங்கள் வாழ்வை
விட்டு விலகி ஓடிப்போகும் படி கட்டளையிடுங்கள்,அவைகளை
மண்டியிட வையுங்கள்.

இயேசுவின் நாமத்தால் உங்கள்
மனதை நிறைத்து,தீய எண்ணங்கள்,
பாவ எண்ணங்கள் ஆகியவைகளை கீழ்படுத்தி மண்டியிட வையுங்கள். இயேசுவின் நாமத்திற்கு முன் எல்லாம் மண்டியிடும்.ஏனெனில் பிதாவாகிய தேவன்,எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை இயேசுவுக்கு தந்தருளி இருக்கிறார்.அவர் உங்களுக்காக மரித்து,உங்களுக்காக உயிர்த்து,உங்களுக்காக பிதாவின் வலதுபரிசத்தில் அமர்ந்திருக்கிறார்,
எனவே அவரின் நாமத்திற்கு முன்
முழங்கள் யாவும் மண்டியிடும்,
நாவுகள் யாவும் அவரை #கர்த்தர்
என்று அறிக்கையிடும்.

ஆமென்... அல்லேலூயா...

ஆதலால் #கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் #இரட்சிக்கப்படுவான்.(ரோமர் 10:13)

அவராலேயன்றி வேறொருவராலும் #இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.(அப்போஸ்தலர் 4:12)

அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப்பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.
(அப்போஸ்தலர் 3:16)

உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் #கர்த்தருடைய #நாமத்தினாலே
அவனுக்கு எண்ணெய்பூசி,
அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
(யாக்கோபு 5:14)


No comments:

Post a Comment