Thursday 12 July 2018



சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுங்கள்
(எபேசியர் 5:19)

டேனியல்: இசை என்பது, மனிதனின் இருதயத்தை தொடக்கூடிய ஒன்றாகும். இசையை வெறுக்கிறவர்கள் ஒருவரும் இல்லை,சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இசையை ரசிக்கிறார்கள்....

பால்ராஜ்: ஆமா!!! வசனம் சொல்கிறது,
"துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுங்கள்"(எபே 5:18-19)

டேனியல்: ஆம் நண்பா நம் இருதயத்தில் எப்போதும் கர்த்தரை துதிக்கிற கீதம் தொனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.......

"நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்" (சங்118:15) - ல் வாசிக்கிறோம். நம் இருதயத்தில் இரட்சிப்பின் கெம்பீர சத்தமாகிய தேவனின் கீதங்கள் இருக்கும் போது,கர்த்தரின் வலதுகரம் நமது சார்பாக  பராக்கிரமஞ்செய்யும்,சத்துரு அதற்குள் வர இடமிருக்காது,அவன் தெறித்து ஓடிவிடுவான்,இப்படிப்பட்ட மேன்மையான,வல்லமையான காரியங்களலாம் கர்த்தரை துதிக்கும்
துதியின் கீதத்தில் இருக்க,ஒரு சில கிறிஸ்தவர்கள் சினிமா  இசையில் மூழ்கி இருக்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது....

பால்ராஜ்: ஆமா ஒரு முறை கலப்பையில் கை வைத்து விட்டால் நாம் ஒருபோதும் திரும்பி பார்க்க கூடாது,ஆனா ஒரு சிலர் லேசா திரும்பி பார்க்க ஆரம்பிக்கிறார்கள்... பாவம் அவர்கள்.....

டேனியல்: ஆமா பால்ராஜ்! கர்த்தரின் துதியை சொல்லாத அவரின் நாமத்தை உயர்த்தாத,வேத வசனத்துக்கு ஒத்துபோகாத எந்த பாடலாக இருந்தாலும் சரி,அதை யார்
இசையமைத்து பாடி இருந்தாலும்
சரி அது நமக்கு தேவையில்லை.
நமது காதையும்,மனதையும்,அதிலே செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஏனென்றால் சாத்தான் பக்க வழியாய் உள்ளே வர முயற்சிப்பான்,நாம் தான் விழிப்போடு இடங்கொடுக்காமல் இருக்க வேண்டும்.

பால்ராஜ்: ஆமா டேனியல் ஆனால்
நம் இதயத்தில் தேவனை துதிக்கும் பாடல்கள் இருக்கும்போது சத்துரு தன் இடத்தை காலிசெய்து ஓடுவான்
வேதத்தில் நாம் வாசிக்கிறோமே!!!! சவுலை பொல்லாத ஆவி வந்து அலைகழிக்கும்போது, தாவீது, தனது சுரமண்டலத்தை எடுத்து அதை வாசித்தபோது அவன் அமைதியானான் என்று.. (1சாமு16:23)

டேனியல்: ஆமா நண்பா நம் இதயத்திலும்,வாயிலும் தேவனை துதிக்கும் பாடல்கள் இருக்கும்போது சத்துரு தன் இடத்தை காலிசெய்து ஓடுவான்.ஆகவே நாம் எப்போதும் #கர்த்தரை #துதிக்கும் பாடல்களை பாடி தேவனை மகிமைப்படுத்திக்கொண்ட இருக்க வேண்டும் அதனால் நமக்கு அனேக நன்மைகள் உண்டு....

பால்ராஜ்: இந்த காலத்தில் ஏராளமான கிறிஸ்தவ பாடல்கள் பாடப்பட்டு,
அருமையான இசையில் இசைக்கப்பட்டு வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. கர்த்தரை துதிக்கும் பாடல்களை பாடி ஒருவருக்கொருவர்புத்தி சொல்லி கொள்ள வேண்டியும்,நம் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ண வேண்டும் என்று வேதம் போதிக்கிறது ஏராளமான நல்ல பாடல்கள் தமிழ் கிறிஸ்தவ வட்டாரத்தில் உள்ளது.அதற்காக நாம் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்....

டேனியல்: ஆம் நானும் நல்ல பாடல்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன்,ஆனால்
அதே நேரத்தில் ஒரு சிலர் தங்கள் அனுபவங்களையும்,தாங்கள் பட்ட பாடுகளையும்,தோல்வியையும்
அவிசுவாச அறிக்கைகளையும் பாடல் வரிகளாக்கி வெளியிடுகிறார்கள்
அது மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்குகிறது....

பால்ராஜ்: ஆமா நானும் பார்த்து இருக்கிறேன்..அதுமட்டுமல்ல சிலர் தேவனின் தன்மைகள் பற்றி வேதம் என்ன போதிக்கிறது என்பதை முழுமையாக அறியாதவர்களாய்,தேவனை பற்றிய தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை பாடுகிறார்கள் அது கொடுமையின் உச்சம்....
கர்த்தருக்கடுத்த காரியங்களை விளங்கி கொள்ள முடியாத உலகத்தனமான பாடலாசிரியர் தேவனை பற்றி தன் சுய  அனுமானங்களை பாடலாக எழுதி பாடுகிறார்கள்...

டேனியல்: ஆமா பால்ராஜ் நானும்
சில பாரம்பரிய சபைகள்ல பாடப்படும் பாடல்களை கேட்டுருக்கேன்...
வேத வசனத்துக்கு கொஞ்சம் கூட பொருந்தாத நேறய பாடல்களும் இருக்கு...அந்த பாடலை எழுதியவர் நிச்சயம் இரட்சிக்கப்பட்டவராக இருக்க மாட்டார் என்று நம்மால் அடித்து சொல்ல முடியும் அந்த அளவுக்கு மோசமான பாடல்களும் உண்டு,
தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படை இல்லாத பாடல்களால் தேவனை மகிமைபடுத்த முடியாது...

பால்ராஜ்: ஆமா! அதுமட்டுமல்ல நல்லா சத்தியங்களை மக்களுக்கு எடுத்து போதிக்கும் சில விசுவாச சபைகளில் பாடப்படும்,பாடல்களில் சில அவிசுவாச அறிக்கைகள் நிறைந்த பாடல்களும் இருக்கு நான் கவனிச்சு இருக்கேன்... தவறான அறிக்கைகள் தவறான விளைவுகளை மக்களின் வாழ்வில் உண்டாக்கிவிடும்...

டேனியல்: ஆமா நானும் கவனிச்சு இருக்கேன்!
சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
(ஏசா40:29) மனிதனுக்கு சோர்வை எற்படுத்துகிற கரியங்கள் பாடல்கள்  தேவனிடத்திலிருந்து வருவது அல்ல
பாதகமான சூழ்நிலை நேர்ந்தாலும்,
நெருக்கம் வந்தாலும்,என்று அறிக்கையிடுவது விசுவாசம் அல்ல அது அவிசுவாசமே....

பால்ராஜ்: ஆமா நண்பா! நாம் விசுவாசிக்கும் போது தேவனுடைய மகிமையை காண முடியும்,நாம் தேவனை அதிகமாக விசுவாசிக்கும் போது,தேவனுடைய மகிமை நம்  உள்ளங்களில் தங்கியிருப்பதை உணரவும் முடியும்,இப்படி  விசுவாசத்தின்  மூலம்,தேவ மகிமை  நம்மில் தங்கியிருக்கும் போது,யார் நம்மை சோர்வுற செய்ய முடியும்? அப்பரம் எதுக்கு சோர்ந்து போனாலும்,சோர்வு வந்தாலும்னு பாடனும்? என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு... இதுதான் விசுவாச அறிக்கை,இதை பாடி கர்த்தரை நாம் துதிக்க வேண்டும்.

ஆமா நம் சூழ்நிலை தலைகீழாக இருக்கும் போது என் சூழ்நிலையை மாற்றவல்ல,
இயேசு என்னோடு இருப்பதால் அஞ்சிடேன்!என அறிக்கையிட்டு அவரை நாம் ஸ்தோத்திரித்து பாட வேண்டும்...

நெருக்கமான வேளையில் நெருக்கத்தை அல்ல,என் கர்த்தர் என்னை நலமும் விசாலமான பாதையில் நடத்துவார் என்று அறிக்கையிட்டு,அவரை நாம் போற்றி பாட வேண்டும்

வனாந்திரமான வறண்ட வாழ்க்கை என்ற சூழ்நிலையில் என் வாழ்க்கையை செழிப்பாக மாற்றவும் எனக்கு வழியை உண்டாக்க,என் தேவன் வல்லவர்,
எனஅறிக்கையிட்டு அவரை நாம் பாடி மகிமைபடுத்த வேண்டும் இப்படி பட்ட துதி செலுத்துதலை தான் தேவன் விரும்புகிறார்...

டேனியல்: ஆம் நண்பா  நாம் வேதத்தில் காண்கிறோமே! சங்கீதத்தில் தாவீதின் வரிகள் எல்லாம் இப்படித்தான் இருக்கிறது தேவனை நோக்கி நேர்மறையான எதிர்பார்போடு தான் அவன் படுகிறான்.. தாவீது கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவனாக இருந்தான் (1 சாமு 13:14)
ஏனென்றால் அவன் கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்புடைய சிந்தனை சொல்,செயல்களை கொண்டிருந்தான்

பால்ராஜ்: ஆமா அவனின் பாடல்களும் கர்த்தருக்கு ஏற்புடையதாகவே இருந்தது... எனவே நாம் அவனை போல்
இருதயத்தின் ஆழத்திலிருந்து கர்த்தரை துதிக்கும்,துதி கொண்டவர்களாக வேண்டும்.
நம் இருதயம் தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய பாட்டினால் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும்

டேனியல்: பலருக்கு மகிழ்சி வந்தால் தேவனை துதிக்கும் பாடல்கள் நன்றாக வரும்,ஆனால் எப்போதாவது இருதயம்  துக்கத்தால் நிறைந்திருந்தால் தேவனை துதிக்கும் பாடல் வராது.ஆனால் அப்படிப்பட்டவர்களாக நாம் இருக்க கூடாது,எதிர்மறையான எல்லா காரியங்களையும் புறம்பே தள்ளி, தேவனை துதிக்கும் பாடல்களுக்கு இருதயத்திலும் வாயிலும் இடம் கொடுப்போம், மற்றவை எல்லாம் தன்னாலே மாறிப்போகும்.

ஆமென்... அல்லேலூயா...

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.

(சங்கீதம் 34:1)

======================
Revelation by spirit of God
======================


No comments:

Post a Comment