Thursday 12 July 2018



நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்,நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். (யோவான் 15:7-8)

சுரேஷ் : தேவன்,நாம் ஜெபித்து கேட்டதையெல்லாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அது அவருக்கு மகிமையைக் கொண்டு வருகிறது.

சுகுமார் : யோவான் 15:7 இல்,
“நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்று வாசிக்கிறோம்.கேட்கிற எவனும் பெற்றுக் கொள்ளுகிறான்.
அவன் வார்த்தையில் நிலைத்திருந்தால்.....

சுரேஷ் : சிலர் நம்மல பாத்து கேட்கிறாங்க! கேட்கிற எவனும் பெற்றுக் கொள்ளலாம் என்று நீங்க சொல்லுறீங்க,ஆனா எத்தனையோ பேர் ஜெபத்துல கேட்டுப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறாங்களேனு

சுகுமார் : அதற்குக் காரணத்தை நான் சொல்றேன்,ஏன் அவங்க ஜெபத்துல கேட்டுப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறாங்கனா,அவங்க தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருகவில்லை,அந்த
ஜெபமே சரியில்லை....
இயேசு கிறிஸ்து தெளிவா சொல்றாரு
“நீங்கள் என்னிலும்,
என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்று

சுரேஷ் : ஆமா நண்பா அவங்க
பண்ண ஜெபம் உண்மையாகவே வார்த்தைகளை அடிப்படையாக கொண்ட ஜெபமாயிருந்தால் கேட்கிற எவனும் பெற்றுக் கொள்வான்.

சுகுமார் : ஆம்! எல்லாரும் கேட்டதையெல்லாம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதுதான் தேவனுடைய சித்தம் என்று 7 ஆம் வசனத்தில் சொல்லிவிட்டு, 8 ஆம் வசனத்தில், “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார்” என்கிறார்.

சுரேஷ் : ஆமா! மிகுந்த கனிகொடுக்கிறவர்கள் என்பது ஜெபத்தில் கனிகொடுக்கிறவர்களைக் குறிக்கிறது. அதாவது,நாம்  கேட்டதையெல்லாம் பெற்றுக் கொண்டு,ஜெப வாழ்க்கையில் வெற்றி பெறுகிறவர்களாய் இருக்க தேவன் விரும்புகிறார்.

சுகுமார் : ஆமா தேவனுடைய வார்த்தையில் வேரூன்ற பட்ட மக்களிடம் நாம் அதிக ஜெப கனிகளைக் காண முடிகிறது.சிலருடைய ஜெபத்தினால் கனி உண்டாவதே கிடையாது.ஏனென்றால் அவர்கள் தேவனுடைய வார்த்தையை மிகவும் முக்கியமாக கருதவில்லை,வசனத்தை ஒழுங்கா கவனிக்கவில்லை.........

சுரேஷ்: அவர்கள் தாங்கள் எவ்வளவு நேரம் ஜெபித்தோம்,எத்தன நாள் உபவாசம் இருந்தோம்,எவ்வளவு கண்ணீர்விட்டோம்...
என்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள் தவிர கர்த்தருடைய வசனத்தின்படி நாம் வார்த்தையில் நிலைநிற்க வேண்டும் என்கிற ஆர்வம் இல்லை... அதன் விளைவு பலனற்ற கனியற்ற ஜெப நிலை....

சுகுமார்: நாம் எவ்வளவு நேரம் ஜெபித்தோம்,
எத்தன நாள் உபவாசம் இருந்தோம்,எவ்வளவு கண்ணீர்விட்டோம் என்பது முக்கியம் அல்ல,நாம் அந்த ஜெபத்தின் மூலமாக என்ன விதமான கனி நம் வாழ்வில் உண்டானது என்பதுதான் முக்கியம்.

சுரேஷ்: ஆமா சுகுமார் ! கனி இல்லையென்றால் பிதாவிற்கு மகிமை உண்டாகாது.பிதா,நாம் கனியைப் பெற்றோமா, இல்லையா என்பதைக் குறித்து நம்மைக் காட்டிலும் கரிசணை உள்ளவராக இருக்கிறார்.

சுகுமார்: ஆமா நண்பா! நாம் ஜெபத்தில் வெற்றி பெறுவது நமக்கு முக்கியம். அதை விட பிதா மகிமைப்படுவது மிகவும் முக்கியம்.

சுரேஷ்: ஆமா நண்பா! ஜனங்கள் நம்மல பார்த்து, “இவங்க தேவனிடத்தில் விரும்பி கேட்டதையெல்லாம் பெற்றுக் கொள்கிறாங்க,எப்படி ஜெபித்து பெற்றுக் கொள்வது என்பதை இவங்கல பார்த்துதான் கேட்க வேண்டும், இவங்க வணங்குகிற தேவன் கேட்டதையெல்லாம் தருகிறார்” என்று அந்த அளவிற்கு ஆச்சரியப்பட்டு, அதன் மூலம் தம்மை மகிமைப்படுத்துகிற அளவிற்கு நம்முடைய வாழ்க்கை இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.... எனவே நாம் தேவனுடைய வார்த்தையில் வேரூன்ற பட்டவர்களாய்,எல்லாவற்றிற்கும்
மேலாக வார்த்தைகளின் அடிப்படையில் ஜெபிக்கிறவர்களாய்,கிறிஸ்துவிலும்
அவரின் உபதேசத்திலும் நிலைத்திருந்து... மிகுந்த கனிகொடுத்து நம் தேவனுடைய நாமத்தை இந்த பூமியில் மகிமைப்படுத்துவோம்.....

ஆமென்... அல்லேலூயா....


No comments:

Post a Comment