Thursday 12 July 2018



ஆகையால்,ஏற்றகாலத்திலே
தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
(1பேதுரு 5: 6)

பரத்: மனிதன் தனக்கென்று சொந்த வழிகளையும்,தீர்மானங்களையும் உண்டாக்கி கொண்டு தன் மனம் போல்  வாழவேண்டுமென்று விரும்புகிறான்.

பிரவீன்: ஆமா தன் சுய முயற்சியால் அவன் பெரிய காரியங்களைச் செய்யமுடியும் என்று நினைத்து அவ்விதம் செயல்படுகிறான்.
ஆனால் அது அவனுக்கு ஒருபோதும் உண்மையான முழுமையான வெற்றியை பெற்றுக்கொள்ள முடியவில்லை

பரத்: ஆசீர்வாதமான காரியங்கள்
சுய பலத்தின் வழியாக வராது. உண்மையான ஆசீர்வாத வழியை
ஒரு மனிதன் பெற வேண்டுமானால் முதலாவது அவன் தேவனோடு ஒப்புரவாகப்பட்ட வாழ்க்கையை பெற்றிருக்கவேண்டும்.

பிரவீன்: கிறிஸ்து இயேசுவின்
மூலம் தேவனோடு ஒப்புரவாகாமல், அவனுடைய  பாவங்களுக்காக வருத்தப்பட்டு மனம்திரும்பாமல்
அவன் இந்த உலகத்தின் பெற்ற வெற்றிகள் எல்லாம் ஒன்றுக்குமே பயன்படாத குப்பைக்கு சமானம்.
அவனால் தன் மரணத்தை ஜெயிக்க முடியாது,மறுரூபமாக முடியாது..
நித்தியத்தில் இருக்க முடியாது..
அவர்களுக்கு எந்த நேரத்தில் என்ன நேரிடும் என்று தெரியாது..

பரத்: ஆமா ஆனால் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்ட நாமக்கு
சகலமும் நன்மைக்கேதுவாகவே
நாம் தேவனுடைய பலத்தகைக்குள்
அடங்கியிருக்கிறோம் என்று வேதம் சொல்கிறது...

பிரவீன்: அவருடய ‘பலத்த கை’ என்று சொல்லப்படுவது,சர்வ வல்லவருடைய உன்னதத் திட்டம்,அவருடைய ஞானம், வல்லமையைக் குறிக்கிறது.

பரத்: ஆம் நாம் நம்முடைய திட்டம் சிறப்பானது என்றோ,நம்மை புத்திமானென்று எண்ணக்கூடாது.... நம்முடைய ஞானம்,அறிவு நம்மை வழிநடத்தும் என்றும் எண்ணக்கூடாது அவ்விதம் எண்ணி மோசம் போனவர்கள்,கணக்கிலடங்காதவர்கள்.
அப்படிப்பட்ட கூட்டத்தில் ஒருவனாக நாம் இருப்பது தேவனுக்குப் பிரியமானதல்ல.

பிரவீன்: அதே சமயத்தில் தேவனிடத்தில் தங்களைத் தாழ்த்தி
அவருடைய கரத்தின் ஆளுகைக்கு தங்களை ஒப்புக்கொடுத்த மக்களை தேவன் அபரிமிதமான ஆசீர்வதித்திருக்கிறார்.அவர்களின் எண்ணிக்கையும் கணக்கிலடங்காது. நாம் இப்படிப்பட்ட பரிசுத்தவான்களின் கூட்டத்தில் ஒருவனாக இருப்பதே
நம்மை படைத்தவரின் விருப்பம்.

பரத்: ஆமா தேவன் தமக்கு கீழ்படிபவர்களை ஏற்றகாலத்தில் உயர்த்துவார் வரும் வரை,நாம் அவரின் வார்த்தையின் படி பொறுமையுடன் காத்திருக்கவேண்டும், அவசரப்படக்கூடாது. தேவன் அருளும் காலத்திற்க்காக காத்திருப்பவர்கள்  ஏமாந்துபோகமாட்டார்கள், தேவன் அவர்களை நிச்சயமாகவே உயர்த்துவார்,தேவன் செய்வது எதுவாக இருந்தாலும் அது மிகச்சிறந்ததாகவே அமையும். அது இரண்டாம் தரமானதாக இருக்கவே இருக்காது.

ஆமென்... அல்லேலூயா...

நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.
(சங்கீதம் 37:34)


No comments:

Post a Comment