Thursday 12 July 2018



தேவனுடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
(ரோமர் 8: 28)

பரத்: தேவனிடத்தில் அன்புக்கூறும் நமக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கும் என்பதைக் குறித்த நிச்சயம் நமக்குள் அதிகமாக பெருக வேண்டும்

பிரவீன்: நமது வாழ்வில் நடக்கும் சோதனைக்கும்,வேதனைக்கும்,கர்த்தர் காரணர் அல்ல.. அதற்கு காரணம் சாத்தானும் அவனுக்கு செவிகொடுத்து, அவன் காட்டும் இச்சையால் இழுக்கப்பட்ட நாமும் தான்.. நம் கர்த்தர் நல்லவர்... அவர் யாரையும் பொல்லாங்கினால் சோதிப்பவர் அல்ல

பரத்: எனவே, நம்முடையடைய நிலைமைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், எல்லா வேளைகளிலும் நாம் கர்த்தரை நம்ப வேண்டும் குறிப்பாக சோதனை உபத்திர வேளைகளில் தேவன் நம்மை தப்புவிக்க வல்லவராக இருக்கிறார், தீமையான சூழ்நிலையிலிருந்து, நம்மை விடுவித்து,நன்மையான வழியில் நடத்துவார்  என்கிற விசுவாசத்தில் உறுதியடைய வேண்டும்...

பிரவீன்: ஆமா, நண்பா அதோடுகூட
நம் குறைவுகளையெல்லாம் தேவன் நிறைவாக்குவார்...நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர்,அவர் நம்மை அனாதையாக விட்டுவிட மாட்டார்.. நமது வாழ்வில் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்,எனவே நம் வாழ்நாட்கள் அனைத்திலும் ஒரே நல்லவராகிய நம் தேவனை துதிப்போம்.. உயர்த்துவோம்...

ஆமென்... அல்லேலூயா...

ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.

(சங்கீதம் 86:5)


No comments:

Post a Comment