Thursday 12 July 2018



சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

(ரோமர் 1:18)

டேனியல்: தேவ பிள்ளைகளை
எந்த ஒரு மனிதன்,சத்தியத்தை அறிவிக்கவிடாமல் அடக்கி வைக்கிறானோ,சத்தியத்திற்கு விரோதமாய் குடும்பத்திலிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ எழும்பி எதிர்த்து நிற்கிறானா அவன் மேல் தேவ கோபாக்கினை இறங்கி இருக்கிறது

பால்ராஜ்: ஆமா சத்திய வசனங்களை பிரசங்கிக்கவிடாமல் தடுக்கிறவர்கள் இயேசுவையே துன்படுத்துகிறார்கள்...

டேனியல்: ஆமா! நண்பா அப் 9:5 ல் பார்கிறோமே!!
ஆதி திருச்சபையிலே சவுல்
சுவிசேஷத்திற்கு விரோதமாய் இருந்தான், சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறவர்களை துன்புறுத்தினான்.. இயேசு அவனை சந்திக்கும் போது...
"நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே"என்றார்.... எனவே சத்தியத்திய  வசனங்களை பிரசங்கிக்கவிடாமல்  தடுக்கிறவர்கள்,தேவ பிள்ளைகளை  சத்தியத்தின் நிமித்தம் துன்பப்படுத்துகிறவர்கள்  இயேசுவை  நேரடியாக துன்படுத்துகிறார்கள்... அவர்கள் மீது தேவகோபம் இருக்கிறது என்று வேதம் போதிக்கிறது...

பால்ராஜ்: ஆமா! இது முற்றிலும் உண்மை... தேவன் சவுலை எச்சரித்தார்
"சவுலே சவுலே தயவு செய்து இரட்சிக்கப்படுவிடுப்பா! என் ஊழியர்களை தடை செய்யாமல் விடுப்பா,நீ ரொம்ப நல்ல யூதன் கிருபையின் காலத்துல இருக்கிறாய்
 என்று இயேசு அவனிடம் பேசவில்லை"
#முள்ளில் உதைக்கிறது #உனக்குதான் #பிரச்சனை என்று எச்சரித்தார்

டேனியல்: ஆமா நானும் கூட சொல்கிறேன் இந்த செய்தியை படித்து கொண்டு இருக்கிறவர்களே! உங்களில் யாராவது... வசனத்தை கேட்கிறதற்கு தடை செய்கிறவர்களாயும்! சத்தியத்தை  போதிக்கவிடாமல் விரோதமாய் நீங்க இருக்கிறவர்களாயும் இருப்பீர்களானால், உங்களுக்கு ஒரு வார்த்தையை மறுபடியும் சொல்கிறேன்
#முள்ளில் உதைக்கிறது #உங்களுக்குதான் #பிரச்சனை

பால்ராஜ்: ஆமா! நானும் சொல்கிறேன்
#முள்ளில் உதைக்கிறது #அவர்களுக்கு தான் #பிரச்சனை.... அவ்வாறு முள்ளில் உதைத்து தன்னை காயப்படுத்திக்கொண்டு தன் கண்களை குருடாக்கி கொண்ட அந்த சவுல்  இரட்சிக்கப்பட்டு,கண்கள் திறக்கப்பட்டு  அப்:பவுலாக ஆன பிறகு இவ்வாறு எழுதுகிறார்....

"சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது"
(ரோமர் 1:18) இந்த வசனத்தை நாம்
புதிய ஏற்பாட்டில் வாசிக்கிறோம்...
நம் தேவன் அன்பாகவே இருக்கிறார்,அவர் கிருபை மிகுந்தவர் தான்,இரக்கத்தில் ஐஸ்வரிய சம்பூரணர்தான்... ஆனால் மனுகுலத்தின் இரட்சிப்புக்குகாக தன் அளவற்ற அன்பால் செய்து முடித்த காரியங்களை.. மக்களின் மீட்புக்காக சுவிசேஷமாக அறிவிக்க தேவன் தனது பிள்ளைகளை நியமித்து இருக்கிறார்,அவ்வாறு அறிவிக்கிற தேவ பிள்ளைகளை அடக்க நினைப்பவர்களையும்,
ஒடுக்கி தடை செய்ய வருபவர்களையும்,
தேவன் சும்மா விட்டுவிட மாட்டார்..
அவர்கள் மீது தேவகோபம் வந்தே தீரும்...

டேனியல்: ஆமா நண்பா! அப்:பவுல் இவ்வாறு தீமோத்தேயுக்கு எழுதுகிறார்

"கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்;#அவனுடைய #செய்கைக்குத்தக்கதாகக் #கர்த்தர் அவனுக்குப் #பதிலளிப்பாராக.
நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்"(2 தீமோத்தேயு 4:14-15)

பால்ராஜ்: எந்த பாவத்தையும் மன்னிக்கிற நம் அன்பின் தேவன்,சுவிசேஷத்தை சத்தியத்தை போதிப்பதற்கு தடை செய்கிற காரியங்களை தண்டிக்காமல் விட மாட்டார்... அவர்களின் செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் பதிலளிக்காமல் விடமாட்டார்....

டேனியல்: ஆமா நண்பா! சத்தியத்தை கேட்கவிடாமல்,போதிக்க விடாமல்,எழுதவிடாமல்,தடை செய்கிற ஒரு மனிதனை தேவன் தண்டிக்காமல் விட்டால்..ஆயிரம் பேர் சுவிசேஷத்தை கேட்காமல்,சத்தியத்தை அறியாமல் நரகத்திற்கு போவதற்கு அது காரணமாகிவிடும்,ஆனால் நம் தேவன் நீதி உள்ளவர்,சத்தியத்தை போதிக்க விடாமல் குறுக்கே தடையாக இருக்கிற எவனையும் தேவன் தூக்கி எறிவார், ஒன்று அவன் பவுலை போல் மனம் திருந்த வேண்டும்,இல்லை தடை செய்யாமல் விலகி ஓடிவிட வேண்டும்,இல்லையெனில்
தேவ கோபம் அவனுக்கு விரோதமாய் வந்தே தீரும், ஊழியங்களுக்கு தடையாக இருக்கிற என் அன்பு  உறவுகளே ! நண்பர்களே!  இது ஆவியானவர் உங்களுக்கு தருகிற எச்சரிக்கை..... உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது ஏனென்றால்
 உலகத்திலிருக்கிறவனிலும் எங்களிலிருக்கிறவர் பெரியவர்.

ஆமென்... அல்லேலூயா...


No comments:

Post a Comment