Thursday 12 July 2018



அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.(ரோமர் 10:11)

பரத்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் யாரும் நிச்சயமாக வெட்கப்படுவதில்லை.நம்முடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலாவது நாம் வெட்கப்பட்டு போய்விடுவோமோ
என்று எண்ணவேண்டிய அவசியமில்லை.

பிரவீன்: ஆமா! அவரை விசுவாசிப்பவர்கள் ஒருக்காலும் வெட்கப்பட்டு போகமாட்டார்கள்.ஏசாயா 28:16 –ல் “விசுவாசிக்கிறவன் பதறான்” என்று சொல்லுகிறார்.எனவே நாம் எந்த சூழ்நிலையிலும் வெட்கப்படவும் பதறவும் அவசியமும் இல்லை.

பரத்: ஒரு சில தருணங்களில் நம்முடைய வாழ்க்கையில் நாம்  எதிர்பார்க்கிற காரியங்களைக் குறித்து, தேவனிடத்தில் ஜெபித்து அவருடைய சித்தத்திற்கும்,
அவருடைய வழிநடத்தலுக்கும் நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது,அந்த நேரத்தில் நாம் பதறவேண்டிய தேவையில்லை,அவர் எப்பொழுதும் நமக்கு சிறந்ததையே கொடுக்கிறவராக இருக்கிறார்.

பிரவீன்: ஆம் இதை நாம் எப்பொழுதும் நினைத்துக் கொள்ள வேண்டும் இன்னுமாக தேவன், ஏசாயா 49:23 –ல் “நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்” என்று சொல்லுகிறார். அவர் கர்த்தர். தேவாதி தேவன். சகலத்தையும் படைத்தவர். சர்வ ஞானம் கொண்ட அவரின் சித்தத்திற்காக,நாம் காத்திருக்கும்பொழுது ஒருக்காலும் நாம் வெட்கப்பட்டு போகமாட்டோம்.

பரத்! அதுமட்டுமல்ல!! நண்பா!!!எரேமியா தீர்க்கதரிசி,இவ்வாறு சொல்கிறார்............
“கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (எரே 17:7) என்று சொல்லுகிறார். ஆகவே ஆசீர்வதிக்கப்பட்ட பாக்கியவான்களாகிய நாம் கர்த்தர்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தை
ஒருக்காலும் தளர்த்தி விடக்கூடாது.

பிரவீன்: ஆமா நண்பா!! நாம்  கர்த்தர்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தை
மட்டும் எந்த சூழ்நிலையிலும் தளர்த்தி விடக்கூடாது. சாத்தான் எப்பொழுதும் நம்முடைய விசுவாசத்தை அசைத்து தாக்குகிறவனாகவே வருகிறான்
நாம் அசையவும்கூடாது,அவனால் தாக்கப்படவும் கூடாது... நாம் விசுவாசத்தில் மிகவும் உறுதியாக நின்று சாத்தானை துரத்தி விரட்ட வேண்டும்.....

பரத்: ஆமா நண்பா! நாம் சாத்தானால் துரத்தப்பட்டு குழம்பி சுற்றி ஓட  கூடாது,
நாம் தான் அவனை துரத்தி
ஓட விட வேண்டும்.....
பலவிதமான நெருக்கங்களையும் சோதனைகளையும் சாத்தான் கொண்டு வரும் பொழுது,நாம் பதறவேண்டிய தேவையும் இல்லை, அதிர்ச்சி அடைய வேண்டிய அவசியமில்லை, ஜீவனுள்ள  தேவனை விசுவாசிக்கிற நம்மை,அவர் வெட்கப்பட விடமாட்டார்,நிச்சயம்
கைவிடவே மாட்டார்...நாம் நம்
விசுவாசத்தில் உறுதியாயிருப்போம்,
கர்த்தர் நம் விசுவாசத்தைக் கனப்படுத்துவார்.. நம் தலையை
அவர்।உயர்த்துவார்....

ஆமென்.... அல்லேலூயா....

நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்,வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்;
என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

(யோவேல் 2:27)


No comments:

Post a Comment