நீங்கள் தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள்
பரத்: இரட்சிக்கப்பட்ட நாம் தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள்,என்கிற உணர்வு நமக்குள்ளே இருக்க வேண்டும்..
பிரவீன்: தேவன் எதற்கு நம்மை முன் குறித்து இருக்கிறார்?
பரத்: (ரோமர் 8:29) நம்மை தமது குமாரனாகிய கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்.
(எபேசியர் 1:6)தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.
பிரவீன்: அப்படியா! தேவன் நம்மை முன்குறித நிகழ்வு ஏதோ தற்செயலாக நடந்த செயல் மாதிரி தெரியலையே!!!
பரத்: ஆமா நண்பா! தேவன் நம்மை முன்குறித நிகழ்வு ஏதோ தற்செயலாக நடந்த செயல் அல்ல..(எரேமியா 1:5) நாம் நம் தாயின் கருவில் உருவாகும் முன்னே நடந்த செயல்... நம் அங்கங்களின் அவயவங்கள் உருவாகும் முன்னே உண்டான செயல், (சங்கீதம் 139:16)
பிரவின்: தேவனின் முன்குறித்தல்,அவரின் தெரிந்தெடுத்தல் எதன் அடிப்படையில் இருக்கும்... நமது அறிவின் அடிப்படையிலா? ஞானத்தின் அடிப்படையிலா? எதன் அடிப்படையில் இருக்கும்?
பரத்: தேவன் நமது தகுதியின் அடிப்படையில்,நம்மை முன்குறிக்கிறவர் அல்ல,அவர் தமது கிருபையின் அடிப்படையில் நம்மை முன்குறிக்கிறார்,
அதனால்தான் தேவன் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளாகிய நம்மை தெரிந்துகொண்டார்,பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமான நம்மை தெரிந்துகொண்டார்.
உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானஅற்பமாய் எண்ணப்பட்டவர்களாகிய நம்மை
தெரிந்துகொண்டார் (1 கொரி 1:27-28)
அத்தனையும் அவரின் கிருபையின் அடிப்படையில் மட்டுமே... நமது தகுதியின் அடிப்படையில் இல்லை...
பிரவீன்: உண்மையிலே ஆச்சரியமாக இருக்கிறது நண்பா! தேவனுடைய அளவற்ற அன்பை எண்ணிப்பார்க்கும் போது அது நமது அறிவுக்கு எட்டாததாக இருக்கிறது..
கிறிஸ்து இயேசுவின் மூலமாக தேவன் நம்மீது காட்டிய அந்த கிருபைக்காக,
நாம் என்றும் நன்றியுள்ள உள்ளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்..
ஆமென்... அல்லேலூயா...
அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ண வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
(எபேசியர் 3:19)
பரத்: இரட்சிக்கப்பட்ட நாம் தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள்,என்கிற உணர்வு நமக்குள்ளே இருக்க வேண்டும்..
பிரவீன்: தேவன் எதற்கு நம்மை முன் குறித்து இருக்கிறார்?
பரத்: (ரோமர் 8:29) நம்மை தமது குமாரனாகிய கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்.
(எபேசியர் 1:6)தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.
பிரவீன்: அப்படியா! தேவன் நம்மை முன்குறித நிகழ்வு ஏதோ தற்செயலாக நடந்த செயல் மாதிரி தெரியலையே!!!
பரத்: ஆமா நண்பா! தேவன் நம்மை முன்குறித நிகழ்வு ஏதோ தற்செயலாக நடந்த செயல் அல்ல..(எரேமியா 1:5) நாம் நம் தாயின் கருவில் உருவாகும் முன்னே நடந்த செயல்... நம் அங்கங்களின் அவயவங்கள் உருவாகும் முன்னே உண்டான செயல், (சங்கீதம் 139:16)
பிரவின்: தேவனின் முன்குறித்தல்,அவரின் தெரிந்தெடுத்தல் எதன் அடிப்படையில் இருக்கும்... நமது அறிவின் அடிப்படையிலா? ஞானத்தின் அடிப்படையிலா? எதன் அடிப்படையில் இருக்கும்?
பரத்: தேவன் நமது தகுதியின் அடிப்படையில்,நம்மை முன்குறிக்கிறவர் அல்ல,அவர் தமது கிருபையின் அடிப்படையில் நம்மை முன்குறிக்கிறார்,
அதனால்தான் தேவன் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளாகிய நம்மை தெரிந்துகொண்டார்,பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமான நம்மை தெரிந்துகொண்டார்.
உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானஅற்பமாய் எண்ணப்பட்டவர்களாகிய நம்மை
தெரிந்துகொண்டார் (1 கொரி 1:27-28)
அத்தனையும் அவரின் கிருபையின் அடிப்படையில் மட்டுமே... நமது தகுதியின் அடிப்படையில் இல்லை...
பிரவீன்: உண்மையிலே ஆச்சரியமாக இருக்கிறது நண்பா! தேவனுடைய அளவற்ற அன்பை எண்ணிப்பார்க்கும் போது அது நமது அறிவுக்கு எட்டாததாக இருக்கிறது..
கிறிஸ்து இயேசுவின் மூலமாக தேவன் நம்மீது காட்டிய அந்த கிருபைக்காக,
நாம் என்றும் நன்றியுள்ள உள்ளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்..
ஆமென்... அல்லேலூயா...
அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ண வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
(எபேசியர் 3:19)
No comments:
Post a Comment