Tuesday 24 July 2018

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து,எருசலேமிலும், யூதேயா முழுவதிலும்,சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும்,எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
(அப்போஸ்தலர் 1:8)

ஜான்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
கல்வாரி சிலுவைக்கு பிறகு,மனுகுலத்திற்கு வந்த முதல் ஆசீர்வாதம் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம்

பீட்டர்: ஆமா நண்பா! பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசியின்
வாழ்வில் வரும் போது,முதலில்
அவர்,அவர்களின் பெலவீனமான
காரியங்களை நீக்கி அவர்களை பெலப்படுத்துகிறார்,அதனால்
அவர்கள் இயேசுவுக்கு  சாட்சிகளாயிருப்பார்கள்..

ஜான்:ஆம் நாம் பெலவீனமான இருந்துகொண்டு,இயேசுவுக்கு
சாட்சியாக இருக்க முடியாது,
எனவேதான்,ஆவியானவர் வந்த
உடனே,பெலப்படுத்தும் வேலையை
நம்மில் ஆரம்பிக்கிறார்..இயேசுவின் கல்வாரி நிகழ்வுக்குப்பிறகு பெலவீனமாய் பூட்டிய வீட்டிற்குள்,பயத்தோடு இருந்த சீஷர்கள்,பரிசுத்த ஆவியானவரின் பொழிவுக்குப்பிறகு பெலனடைந்து தைரியாமாய்,சுவிசேஷத்தை பிரசங்கிக்க தொடங்கி,சாட்சியாக வாழ்ந்தார்கள்,

பீட்டர்:ஆமா ஜான்! ஆவியானவரின் செயல்பாடு ஒரு மனிதனின் வாழ்வில் வெளிப்படும் போது,அவனின் வாழ்கையில் இருக்கும் பெலவீனமான காரியங்கள்,
நீங்குகிறது,அவன் புது பெலன் அடைகிறான்,பிறகுதான்,அவனில்
இயேசுவுக்கு சாட்சி என்கிற நிலை
ஆரம்பமாகிறது..

ஜான்: நாம் பரிசுத்தில்,பெலவீனமாக இருந்து சாட்சியாக இருக்க முடியாது,
நாம் ஆரோக்கியத்தில்,பெலவீனமாக இருந்து சாட்சியாக இருக்க முடியாது,
நாம் ஐஸ்வரியத்திலே,பெலவீனமாக இருந்து சாட்சியாக இருக்க முடியாது,
நாம் எதிலும் பெலவீனமாக இல்லாமல் எல்லாவற்றிலும் பெலமுள்ளவர்களாய் இருப்போம்,என்றால் நாம் தான் இயேசுவுக்கு சாட்சி...

பீட்டர்: ஆமா! ஒரு விசுவாசி
சினிமா போஸ்டரை கண்டவுடன்,
கண்களை மூடிக்கொண்டு,பாவத்தில் விழுந்துவிடுவோமோ என்று பயப்படுகிறார் என்றால் அவர் பரிசுத்ததில் பெலவீனமாய் இருக்கிறார் என்று அர்த்தம்....

ஒரு விசுவாசி கொஞ்சம் மழையில்
நனைந்த உடன் தனக்கு காய்ச்சல் வந்துவிடுமோ!ஜலதோஷம் பிடித்துவிடுமோ! என்று பயந்து மருந்தும் கையுமாக அலைகிறார் என்றால் அவர் ஆரோக்கியத்தில் பெலவீனமாக இருக்கிறார் என்று அர்த்தம்....

ஒரு விசுவாசிக்கு பணம் வந்தவுடனே முதலில்,கர்த்தருடைய காரியங்களுக்கென்று விதைப்பதற்கும்,கஷ்டப்படுகிற மனிதர்களுக்கு கொடுப்பதற்கும்
அவர் தயங்குகிறார் என்றால்  ஐஸ்வரியத்திலே பெலவீனமானவராக இருக்கிறார் என்று அர்த்தம்...

ஒரு ஊழியரிடம் திடீரென இந்த
கூட்டத்தில் அரைமணி நேரம்,
நீங்கள் செய்திகொடுங்கள் ஒன்று
சொன்ன உடன்.. நான் செய்தி எதுவும்
தயார் செய்யவில்லை என்று சொல்லி
தயங்கி தடுமாறுகிறார் என்றால்,அவர் ஆவியானவரின் அபிஷேகத்தை பெறாமல் பெலவீனமாய் இருக்கிறார் என்று அர்த்தம்...

இன்னும் இதுபோல் பல பெலவீனமான காரியங்கள் உள்ளன.......

இப்படிப்பட்ட பெலவீனமான காரியங்களிலிருந்து நம்மை விடுதலையாக்கி,பெலப்படுத்தி
இந்த பூமியின் கடைசிப்பரியந்தமும் இயேசுவுக்கு சாட்சியாக நம்மை மாற்றக்கூடியவர் தான் பரிசுத்த ஆவியானர்

ஜான்: முதல் நூற்றாண்டு சபைகளில்
இருந்த எழுப்புதல்,வல்லமையான செயல்பாடு இன்றைய காலக்கட்டத்தில் குறைந்ததற்கான,காரணம் சபைகள் ஆவியானவரின் அபிஷேகத்திற்கும்,
அவரின் ஆளுகைக்கும் முக்கியத்துவம் கொடுக்காததே ஆகும்.. நாம் சாட்சியாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம்,நம்மை சாட்சியாக ஆக்குகிறவருக்கு அதிக இடம் கொடுக்க வேண்டும்...

பீட்டர்: ஆமா நண்பா! ஆதிகால திருச்சபையில் சீஷர்கள் ஆவியானரின் அபிஷேகத்தில் நிறைந்து பிரசங்கம் பண்ணினார்கள்,அதனால் முதல், பிரசங்கத்திலே மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள்,ஆனால் இன்று ஊழியர்களிடம் பிரகங்கம் இருக்கிறது,
அபிஷேகம் இல்லை அதனால் ஆத்தும அறுவடை மிகக்குறைவாக இருக்கிறது..
அபிஷேகம் இல்லாத பிரசங்கள்,
நெருப்பில்லாமல் செய்யப்படுகிற
சமையல்.. அதனால் யாருக்கும் பயன் இல்லை..

ஜான்: ஆமா நண்பா!அழகான அலங்காரம் நிறைந்த அரைமணி நேர செய்தியை விட,
அபிஷேகம் நிறைந்த ஐந்து நிமிட செய்தி,
அதிக ஆத்துமாக்களை அறுவடை செய்யும்...

பீட்டர்: அதுமட்டுமல்ல,ஆவியானவரின் அபிஷேகம் ஒரு ஊழிக்காரனின் மீது இருந்தால் மட்டும் போதும்,அவனை
அந்த அபிஷேகம்  தலைசிறந்த ஊழியனாக மாற்றிவிடும்,தாவீதின் மீது இருந்த அபிஷேகம் அவனை எப்படி ராஜாவாக மாற்றியதோ அதேபோல்....

ஜான்: ஆமா,நமது வேலை அனுதினமும்    மக்களை சபையிலே  கொண்டுவந்து சேர்ப்பது அல்ல,நமது வேலை அனுதினமும் அபிஷேகத்தில் நிறைந்து
மக்களுக்கு சத்திய வசனத்தை  போதிப்பது,

இரட்சிக்கப்படுகிறவர்களை அநுதினமும் சபையிலே கொண்டு வந்து  சேர்க்கிற வேலையை கர்த்தர் பார்த்துக்கொள்வார்..
(அப் 2:47).... 

பீட்டர்: ஆமா! ஆனா இன்று இந்த காரியங்கள் எல்லாம் சபைகளிலே தலைகீழாக பின்பற்றப்படுகிறது,
அதனால்தான் சபைகளில் ஆத்துமாக்களின் நிறைவு இல்லாமல்,குறைவாக இருக்கிறது...

ஜான்: கர்த்தரால் அழைக்கப்பட்ட,
அபிஷேகம் பெற்ற ஒரு ஊழியக்காரன்,படிப்பறிவு இல்லாதவராகவோ,வேதாகம கல்லூரியில் பாடம் பயிலாதவராகவோ,இருக்கலாம்,
இல்லை வயதில்,அனுபவத்தில் சிறியவராகவோ இருக்கலாம்,ஆனால்  அவர் மேல் இருக்கிற அபிஷேகம் அவரை பிரகாசிக்க செய்யும்,அவர் செய்வதெல்லாம் வாய்க்கும்,அனேக அற்புத அதிசயங்களை கர்த்தர் அந்த அபிஷேகம் பெற்ற ஊழியக்காரன் மூலமாக நடப்பிப்பார்..
அந்த அபிஷேகம் பெற்ற ஊழியக்காரர்களுக்கு யாரும் போதிக்க வேண்டியது இல்லை,அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து அவர்களுக்கு  போதிக்கும் (1 யோவான் 2:27)

ஆமென்... அல்லேலூயா...

Bro. Marvel Jerome
Madurai

No comments:

Post a Comment