Thursday 26 July 2018

இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்;பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

பரத்: நமக்கெதிராய் திரளாய் எழுந்து நிற்கும் பிரச்சனைகளையும்,
போரட்டங்களையும்,பொல்லாத
மனிதர்களின் சூழ்ச்சிகளையும் கண்டு
நாம் பயப்படவோ கலங்கவோ கூடாது,ஏனென்றால் நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய சொந்த ஜனமாய் இருக்கிறோம்,தேவன் நம் சார்பில் இருக்கிறார்... எனவே நமது எண்ணக்குவியலை,நமக்கு எதிராய் திரளாய் இருக்கும் பிரச்சனைகள் மீது அல்ல... பிரச்சனைகளுக்கு தீர்வாய் இருக்கிற தேவன் மேல்  செலுத்த
வேண்டும்..

பிரவீன்: அப்படியா ?

பரத்: ஆமா நண்பா! பார்வோன்
இஸ்ரவேல் மக்களை மீண்டும் அடிமைகளாக்கிகொள்ள,திரளான ரதங்களோடும்,படைகளோடும்
அவர்களை பின் தொடர்ந்தான்...

பிரவீன்: ம்ம்ம்...

பரத்: இஸ்ரவேல் மக்கள் இதனால் கலங்கினார்கள்,ஆனால் மேசே
சொன்னார் இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்,இந்த மாகா பெரிய படையோடு யுத்தம் செய்யப்போவது நீங்கள் அல்ல,கர்த்தரே உங்களுக்காக யுத்தம் செய்வார்,நீங்கள் சும்மா இருப்பீர்கள் என்று..(யாத்14:14)அந்த வார்த்தைகளை அவர்கள் சும்மா இருந்தார்கள்,கர்த்தர் அவர்கள் சார்பாக யுத்தம் செய்து பார்வோன் சேனைகளை முறியடித்தார்...

பிரவீன்: ஆமா.....

பரத்: யூதாவுக்கு விரோதமாய்
அம்மோன் புத்திரர்,மோவாபியர்,
சேயீர் மலைத்தேசத்தார்,ஆகியவர்கள் ஏராளமான கூட்டமாக வந்தார்கள்,
யோசபாத்தும்,தேவ ஐனங்களும் யுத்தம் செய்ய பயந்தார்கள்,கர்த்தர் அவர்களை பார்த்து சொன்னார்,இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தராகிய நான் உங்களோடே இருக்கிறேன் என்று (2 நாளாகமம் 20:17)
எனவே அவர்கள் கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்று பாடும் பாடகரை முன் நிறுத்தினான்.. கர்த்தர் எதிரிப்படைகளை அவர்கள் சார்பாக முறியடித்தார்..

பிரவீன்: திரளான எதிரிகளும்,ஏராளமான எதிர்ப்புகளும் நம்மை சூழ்ந்து இருந்தாலும்,
கர்த்தர் நம்மோடு இருப்பாரானால் நமக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் அப்படிதானே?

பரத்: ஆமா நண்பா..கர்த்தர்
நம்மோடு இருக்கிறார்...(மத்1:23)
(நீதி 3:6-7) நாம் நம் வழிகளிலெல்லாம்
அவரை நினைத்துக்கொள்ள வேண்டும்,அப்பொழுது அவர் நம் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
அவரே நம் சார்பாக வந்து நிற்பார்,
நாம் கர்த்தருக்கு மட்டும்தான் பயப்பட வேண்டும்....

பிரவீன்: அப்படினா! நாம் கர்த்தரை தவிர வேறு எதற்கும் பயப்பட கூடாதா?

பரத்: ஆமா பிரவீன்.. சத்துருவுக்கும்,
நம்மை எதிர்ப்பவர்களுக்கும்,
எதிர்ப்புகளுக்கு,எதற்கும்
பயப்பட கூடாது அவைகள் எவ்வளவு பெரிய படையாக இருந்தாலும்,நாம் பயப்பட கூடாது....(உபாகமம் 20:1)
ஏனென்றால் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்,
அவர் நம் சார்பில் செயலாற்றுவார்.
இன்றைக்கு நாம் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டோம்
கர்த்தர் நமக்கு செய்யும் இரட்சிப்பைப் நமது கண்கள் பார்க்கும்,நாம் பயப்படாமலும் கலங்காமலும் இருப்போம்  ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
(1 யோவான் 4:4)

ஆமென்... அல்லேலூயா...

Bro:Marvel Jerome
Madurai-south India
Mobile Phone: 8667501353


No comments:

Post a Comment