Tuesday 24 July 2018

கர்த்தர் வியாதியை உன்னிலிருந்து விலக்குவார்......

உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
(யாத்திராகமம் 23:25)

பீட்டர் : என்ன சாம்.. ஒருவாரமா
ஆளேயே காணோம்... வெளியூருக்கு போயிருந்தியா ?

சாமுவேல்: இல்ல பீட்டர்,ஒரு வாரமா எனக்கு டெங்கு காய்ச்சல்,ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருந்தேன்..

பீட்டர் : ஓ!!! அப்படியா? இப்ப எப்படி இருக்க சாம்..

சாமுவேல்: ஏதோ இருக்கேன் நண்பா!
நான் ஏதோ காரியத்துல தவறி பாவம் செய்துட்டேன் போல,அதான் கர்த்தர் எனக்கு வியாதியை கொடுத்து என்னை ஒழுங்கு படுத்திகிட்டு இருக்கிறார்...

பீட்டர் : கர்த்தர் உனக்கு வியாதியை கொடுத்தாரா? நீ சொல்றது தவறு சாமுவேல்,கர்த்தர் நமக்கு வியாதியை கொடுக்கிறவர் அல்ல, வியாதியை நம்மிலிருந்து விலக்குகிறவர்,(யாத்:23:25)
அதுமட்டுமல்ல  எந்த வியாதியும்
நம்மை அணுகாதவாறு நம்மையும் விலக்கி காக்கிறவர்.. கர்த்தர் இதை முதலில் தெரிந்து கொள்..

சாமுவேல்: அப்படியா?

பீட்டர் : ஆமா,வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன் என்று கர்த்தர் சொல்கிறார்
அப்படினா வியாதியை உன்னில் சேர்த்தது யார்?

சாமுவேல்: அதுதான்ப்பா தெரியல!!!

பீட்டர் : ஏன்டா உனக்கு விடை தெரியலனா நீ கர்த்தர் மேல பழியை போடுவியா?

சாமுவேல்: ம்ம்ம்... இல்லப்பா

பீட்டர் : சாம்... லூக்கா 13 ஆம் அதிகாரத்தில் ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது...

பதினெட்டு வருடமாய் பெலவீனமாய் கூனியாய் இருந்த ஒரு பெண்ணை இயேசு ஓய்வு நாளிலே குணமாக்குகிறார்.. மக்கள் கூட்டத்தால் கோபம் கொண்ட ஜெப ஆலய தலைவன் ஓய்வுநாளில் குணமாக்கி கொள்ளக்கூடாது என்று மக்களை திட்டுகிறான்... அதற்கு இயேசு இவ்வாறு பதில் அளித்தார்.....

"இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார் "(லூக்கா 13:16)

நண்பா! வியாதி என்பது சாத்தானின் கட்டு... இதை நீ நன்றாக புரிந்து கொள்,
#கட்டியது சாத்தான்,#கட்டவிழ்த்தது கர்த்தர்.

சாமுவேல்: அப்படியா! ஆனா எங்க
சபை போதகர்.. வியாதி என்பது நம்மை ஒழுங்குபடுத்தும் பிரம்பு என்று சொல்கிறார் பிரம்பை கையாடாதவன்
தன் மகனை பகைக்கிறான்.. எனவே
தேவன் அப்பைக்கு அப்ப வந்து வியாதி என்னும் பிரம்பால் நம்மை அடித்து ஒழுங்குபடுத்துவார் என்று
எங்க சபை போதகர் போதிக்கிறார்...

பீட்டர் : அது தவறான போதனை
சாம்... பிரம்பு வியாதி என்றால்,அந்த பிரம்பு நம்மை ஒழுங்கு படுத்தும் என்றால்
ஏன் தேவன் அதை விலக்க வேண்டும் (யாத்:23:25)

சாமுவேல்: ஆமாப்பா அதான் எனக்கு தெரியல...

பீட்டர் : பிரம்பு என்பது வியாதி அல்ல,
பிரம்பு என்பது நம்மை கண்டித்து ஒழுங்குபடுத்தும் தேவனுடைய வார்த்தை

சாமுவேல்: ஓ... அப்படியா!!

பீட்டர் : ஆமா சாம்... நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ?
(1 கொரி 4:21) என்று பவுல் கேட்பது வியாதியோடு வரவா? என்று அர்த்தமாகாது பிரம்பு என்பது கண்டித்து உணர்த்தி ஒழுங்குபடுத்தும் தேவனுடைய வார்த்தையாகும்....தேவன் தன் பிள்ளைகளை தம் வார்த்தையால்தான் நடத்துவார்..

சாமுவேல்: ஆமா இப்பதான் எனக்கு புரியுது...

பீட்டர் : அவரின் கிருபை நிறைந்த வார்த்தையை கேட்டதால் நீ இரட்சிக்கப்பட்டாய்,பிசாசின் ராஜ்யத்திலிருந்து விடுதலை பெற்று பரலோக ராஜ்யத்தின் பிரதிநிதி ஆனாய்
அவரின் கிருபை நிறைந்த வார்த்தையால் இரட்சிக்கப்பட்ட உன்னை அந்த வார்தையாலே நடத்துவார்,கண்டித்து உணர்த்துவர்,இதை நன்றாக தெரிந்து கொள் சாம்....

சாமுவேல் : ஓகே நண்பா!

பீட்டர் :

#வியாதி என்பது உன்னை ஒழுங்குபடுத்தும் ஆசீர்வாதம் என்றால் அதை ஏன் கர்த்தர் விலக்க வேண்டும் (யாத்:23:25)

#இயேசு தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்
(மத்8:17) வியாதியும் பெலவீனமும்
உன்னை சீர்படுத்தும் நெறிப்படுத்தும் ஆசீர்வாதம் என்றால் இயேசு ஏன் அதை தன்மீது போட்டுக்கொண்டு சுமக்க வேண்டும்

#வியாதி என்பது பிசாசின்
வல்லமை,அதில் அகப்பட்டவர்களை குணமாக்குவதே கர்த்தரின் வல்லமை (அப்10:38) நீ வியாதியின் இருப்பது தேவனின் விருப்பம் இல்லை,நீ பூரண சுகத்துடன் இருப்பதே தேவனின் விருப்பம்.

#நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்  பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது (யாக்1:17) வியாதி என்பது நன்மை அல்ல,அது தீமை...
வியாதி என்பது வரம் அல்ல,அது சாபம்..

சாமுவேல்: இப்பதான்ப்பா எனக்கு எல்லாம் நல்ல புரியுது.. நான் ஆரோக்கியமாக இருப்பதே தேவனுடைய விருப்பம் எனக்கு வந்த வியாதிக்கு காரணம் தேவன் அல்ல பிசாசு... இயேசுவின் நாமத்தினால் வியாதி என்னும் பிசாசின் வல்லமையை என் சரீரத்திலிருந்து விரட்டுகிறேன், ஆமென்... அல்லேலூயா... இனி தேவ கிருபையால் என்றுமே ஆரோக்கியமாக வாழ்வேன்...

ஆமென்... அல்லேலூயா...

No comments:

Post a Comment