Saturday 9 June 2018

எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது

#ஜீவவழியின் நற்செய்தி

எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. (ஏசாயா 60: 1)

உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1: 9)

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.(யோவான் 12:46)

பரத்: இருள் மிகவும் மோசமானது,
எந்த மனிதன் இருளில் இருக்க விரும்பமாட்டான்,இருளில் நடக்கிறவன்  தடுமாறி,விழுவான், தனக்கு முன்னால் என்ன இருக்கு என்பதை பார்த்து
அவன் நடக்கமுடியாது.

பிரவீன்: ஆமா இரவு நேரத்துல,
வீட்டுல மின்சாரம் போய்விட்டால், மின்சாரம் திரும்ப வரும் வரை எந்த மனிதனும்,சும்மா அமர்ந்திருக்க மாட்டான்,உடனே எழுந்து விளக்கை ஏற்றிவைப்பான், இருள் அவனுக்கு ஏற்றதல்ல என்ற உணர்வு இயற்கையாகவே மனிதனுக்கு இருக்கு.

பரத்: இருள் இருக்கிற இடத்தில் வெளிச்சம் வந்ததும்,அந்த இடத்தில் எந்தெந்த பொருட்கள் இருக்கின்றன, எந்த நிலையில் இருக்கின்றன என்பதைத் தெளிவாய்க் காட்டும். சரியில்லாதவைகளைச் சரிபடுத்த உதவும்.

பிரவீன்: தேவன் சிருஷ்டிப்பில், இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்னார், அவர் மனிதனுடைய இருதயத்தில் வெளிச்சத்தை பிரகாசிக்கப்பண்ண விரும்புகிறார்.

பரத்: ஆம் அந்த மெய்யான ஒளி
இயேசு, ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட  ஒவ்வொரு மனிதனிலும் ஒளி இருக்கிறது.. அந்த மனிதன் இருளின் தீமையான செயல்களை விரும்ப மாட்டான்... இருளில் இருந்த போது அவன் விரும்பி செய்த பாவமான காரியங்களை வெறுப்பான்,

பிரவீன்: நம்மில் அனேகர்,
ஒளியாகிய இயேசுவினிடம் வரமல்  இருக்க காரணம்,அவர்கள்
ஒளியை பகைக்கிறார்கள்,

"பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்".
(யோவான் 3: 20)

பரத்: இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கிறேன்,
தேவனை அன்பு செய்கிறேன் என்று சொல்லி,அவர் நம்மிடம் காட்டிய உண்மையான அன்பை மற்றவர்களிடம் காட்டாமல், பகை உணர்வுடன் இருக்கிற எந்த மனுஷனும், தான் ஒளியில் இருப்பதாக எண்ணிக்கொண்டு இருளிலே இருக்கிறான்...

தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? (1யோ4: 20)

எனவே ஒளியாகிய தேவனோடு உள்ள உறவில் நாம் வளர்ந்து..ஒளியாகிய இயேசுவின் வழியில் நடந்து.. அந்தகார இருளை கடந்து.. இன்னம் நாம் அதிகமதிகமாக பிரகாசிப்போம்...
உலகத்திற்கு வெளிச்சமாக இருப்போம்..

=======================

No comments:

Post a Comment