Thursday 12 July 2018



என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.

(சங்கீதம் 41:11)

பரத்: நாம் ஒவ்வொரு நாளும் பலவித போராட்டங்கள மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில இருக்கிறோம். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் போராட்டங்கள் நடந்தி கொண்டு தான் இருக்கு

பிரவீன்: ஆமா இது ஒவ்வொரு தேவப்பிள்ளையினுடைய வாழ்க்கையிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கு....
ஏனென்றால் நம்முடைய எதிராளியான சத்துருவானவன் எப்பொழுது நம்மை விழத்தட்டலாம் என்று வகைதேடி சுற்றிக் கொண்டேயிருக்கிறான்.

பரத்: பல தடுமாற்றங்கள் நம்ம  வாழ்க்கையில வந்தாலும் தோல்வியைச் சந்திக்கும்படியான ஒரு சூழ்நிலையை தேவன் அனுமதிப்பதே இல்லை.நம்முடைய தேவன் அன்பானவர். நம்மேல் வைத்த மிகுதியான அன்பினாலே தம்முடைய ஒரே குமாரனையே நமக்காகப் பலிகொடுத்தவர். அப்படிப்பட்டவர் நம்மைக் கைவிடுவாரா என்ன?

பிரவீன்: கண்டிப்பாக அவர் நம்மை கைவிடவே மாட்டார்.... நம்ம ஆவிக்குரிய வாழ்க்கையில நமக்கு சத்துரு கொண்டு வருகிற போராட்டங்களில் நமக்கு ஒருசில சறுக்கல்கள் வந்தாலும் இறுதியில் நம்முடைய சத்துருவிற்கு தான் தோல்வி வரும்,கிறிஸ்துவுக்குள் நமக்கு எப்போதும் வெற்றி தான்,சாத்தான் ஒருபோதும் ஜெயமெடுக்க முடியாதபடி நம்முடைய ஜெயகிறிஸ்து  நம்மேல் பிரியமாயிருக்கிறார்,

பரத்: ஆமா பிரவீன்,இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைத்தனத்தில் இருந்தபோது  அவர்களுடைய  பட்டயமும், புயபலமும் அவர்களை இரட்சிக்கவில்லை. தேவன் அவர்கள்மேல் வைத்த பிரியத்தினால் அவர்களை இரட்சித்தார் என்று வேதத்தில் போடப்பட்டுள்ளது.(சங்.44:3)

பிரவீன்: நாம் எடுக்கிற சுயமுயற்சிகளை சார்ந்து நாம் ஜெயமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ நினைத்தால் பெரும் தோல்விதான் வரும். ஆதனால் தேவன் நம்மேல் வைத்த  அன்பையையும்,பிரியத்தையும் சார்ந்து கொள்வோம்,தேவன் கிறிஸ்துவுக்குள் நம்மேல் வைத்த பிரியமும்,அவரின் மகிமையின் பிரகாசமும்,சத்துரு நமக்கு விரோதமாக கொண்டு வருகிற சகல காரியங்களிலும் நம்மை ஜெயம் கொள்கிறவர்களாய் மாற்றும்

ஆமென்....... அல்லேலூயா.......

அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.
(சங்கீதம் 44:3)

=======================


No comments:

Post a Comment