Thursday 12 July 2018



#நாம் உலகத்தோடு கலந்து இருக்கிறவர்கள் அல்ல! உலகத்தைக் கலக்குகின்றவர்கள்!

டேனியல்: ஆதி திருச்சபையின் எருசலேம் பட்டணத்திலே, இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, ஏற்றுக் கொண்டவர்கள்,அவரைப் பற்றி பேசவோ,பிரசங்கிக்கவோ கூடாது என்ற நிலை காணப்பட்டாலும் கூட
ஆதி கிறிஸ்தவ விசுவாசிகள் மதத்தலைவர்களின் கட்டளைகளை மீறி எருசலேம் பட்டணத்தை இயேசுவின் நாமத்தினால் நிரப்பினார்கள்.

பால்ராஜ்: ஆமா டேனி ஆதி
கிறிஸ்தவ விசுவாசிகள் அதிக வாஞ்சையும் பக்திவைராக்கியமும் கொண்டவர்களாக இருந்தார்கள்,ஏனெனில் அவர்களின் விசுவாசம்  முழுவதும் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் மட்டுமே இயங்கியது,அவர்களுக்கு போதித்த அப்போஸ்தர்கள் திருவசனத்தை மட்டுமே போதிக்கிறவர்களாக காணப்பட்டனர்... அதனால் தான் அவர்களுக்கு வாஞ்சையும் பக்திவைராக்கியமும் அதிகமாக இருந்தது... அது அவர்களுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது...

இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, தன்னுடைய வாழ்வில் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவரான அப்போஸ்தலன் பவுலும் பல இடங்களுக்கு பிரயாணங்கள் செய்து இயேசுவே கிறிஸ்து என்று தர்க்கம் செய்தவராக காணப்படுகின்றார்.
ஏனெனில் அவரது ஆவியில் அனல் இருந்தது....

இவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றில் பவுல் தன்னுடனே சீலாவையும் அழைத்துக் கொண்டு தெசலோனிக்கே என்ற பட்டணத்தில் உள்ள ஜெப ஆலயம் ஒன்றிற்கு சென்று அவர் தன் வழக்கத்தின் படி வேதவாக்கியங்களைக் கொண்டு அவர்களோடு தர்க்கித்து கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும்  நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
இதனால் அந்த பட்டணத்தில் அமளியுண்டாகியது பட்டணத்தில் விசுவாசியாகிய யாசோனுடைய வீட்டை அமளி காரர்கள் வளைத்துக் கொண்டு பவுலையும், சீலாவையும் கண்டுபிடிக்க இயலாமல் யாசோனையும் சில சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடம் இழுத்துக் கொண்டு  வந்து‘உலகத்தைக் கலக்குகின்றவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.’ என்று கூறினார்கள். (அப்17:3-6)

டேனியல்: ஆமா முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சமுதாயத்தைத் தலைகீழாக மாற்றினார்கள் இது அவர்களை எதிர்த்தவர்களே சொன்ன சாட்சி ஆகும்.

பால்ராஜ்: இன்று உலகில் கோடிக்கணக்கான மக்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி வசனத்தைப் பரப்புவதை ஆதரிக்கின்றனர். ஆனால் முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போல இவர்கள் உலகத்தைக் கலக்கவோ, மாற்றவோ முடியவில்லை.

டேனியல்: ஏன் என்று ஒரு கேள்வியை எழுப்பினோம் என்றால் பதில்....
இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லி அனேகர் இருக்கிறார்கள்,ஆனால் கிறிஸ்துவை உடையவர்களாக எல்லோரும் இல்லை.. அவர்கள் வேத வசனத்திற்கு முக்கியத்துவம்  கொடுக்கிறது இல்லை,வேத  வசனத்துக்கு ஏற்ப தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்வதும் இல்லை,

பால்ராஜ்: ஆமா! அதுமட்டுமல்ல உலகில் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களின் விசுவாசம் அவர்களின் பாரம்பரியத்தின் அடிப்படையில் இருக்கிறது
வேதத்தின் அடிப்படையில் இல்லை, அதனால்தான் அவர்களால் தங்களின் சுய வாழ்வை கூட மாற்றி அமைக்க முடியாமல் போகிறார்கள்,நமது சுய வாழ்வை மாற்ற முடியாமல் நம்மால் எப்படி நமது  சமுதாயத்தையே மாற்ற முடியும்?

டேனியல்: ஆமா நண்பா! நாமே இருளில் இருந்து கொண்டு ஒளியின் இடத்திற்கு வாருங்கள் என்று எப்படி மற்றவர்களுக்கு கூற முடியும்? நாமே கீழான இடத்தில் இருந்து கொண்டு உயரமான இடத்துக்கு வாருங்கள் என்று எப்படி மற்றவர்களுக்கு கூற முடியும்?கிறிஸ்துவை அறியாத பிற மதத்தினர்  கிறிஸ்தவர்களாகிய நம் வாழ்க்கையைப் பார்த்துத் தான் கிறிஸ்தவத்தை எடை போடுகின்றனர்

எனவே நாம் தேவனுடைய வார்த்தைகளை கேட்பதும்,போதிப்பதும் என நிருத்திவிடாமல் தேவனுடைய வார்த்தைகளைக்  கருத்தாய் கடைப்பிடித்து கிறிஸ்துவுடையவர்களாக வாழ்ந்தோமானால் நம்மால் சமுதாயத்தை மட்டுமல்ல உலகத்தையே இயேசுவுக்காக மாற்றி அமைத்திட நிச்சயம் முடியும்

"உலகத்தைக் கலக்குகின்றவர்கள் இங்கேயும் வந்து விட்டார்கள்.என்ற பெயரை நாமும் நிச்சயம் பெற்றுக் கொள்ள முடியும்"

ஆமென்... அல்லேலூயா...

======================
Revelation by spirit of God
======================


No comments:

Post a Comment