Sunday 19 February 2017

ஜெயம் தரும் இயேசுவின் #இரத்தம்


#ஜெயம் தரும் இயேசுவின் #இரத்தம்

ஆட்டுக்குட்டியின் (இயேசுவின்)
#இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை (சாத்தானை) #ஜெயித்தார்கள்.

(வெளி 12:11)

டேனியல்: இயேசு கிறிஸ்துவின் இரத்தம்,மனுக்குலத்திற்கு தேவனால் கொடுக்கப்பட்ட, பெரிய ஈவாகும். இயேசுவின் இரத்தம் இல்லாவிட்டால், சுவிசேஷம் இல்லை,பாவ மன்னிப்பு இல்லை, இரட்சிப்பு இல்லை. சாத்தானிடமிருந்தும்,அந்தகார வல்லமையிலிருந்தும், நித்திய அக்கினியிலிருந்தும் நாம்
மீட்கப்பட வேறு வழியில்லை.

பீட்டர்: இயேசுவின் இரத்தத்தை,
நாம் இன்று தியானிக்கும்போது,
அந்த இரத்தம், எவ்வளவு வேதனைகள், நிந்தைகள்,அவமானங்கள்,
தியாகங்கள் வழியாக வழிந்து வந்திருக்கிறது என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்

டேனியல்: உலகத்தில்,எந்த மனிதரும் பட்டிராத அளவு, அத்தனைப் பாடுகளையும்,இயேசு அனுபவித்தார். வானத்துக்கும், பூமிக்கும் நடுவே, சிலுவை மரத்திலே தொங்கி சாபமானார். சரீரப் பாடுகளைப் பார்க்கிலும்,ஆத்தும வியாகுலம், எவ்வளவு வேதனையானது,
மனுகுலத்தின் மீது செலுத்தப்பட வேண்டிய தேவனுடைய  கோப ஆக்கினை இயேசுவின் மீது முழுவதுமாய் ஊற்றப்பட்டது..
தேவ குமாரனால் மட்டுமே அவற்றை தாங்கிக்கொள்ள முடியும்.

பீட்டர்: என்றைக்கு நாம் இயேசுவை ஏற்றுக்கொண்டு,இரட்சிக்கப்பட்டோமோ,
அன்றைக்கு இருளின் ஆதிக்கத்திலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும், மீட்டெடுக்கப்பட்டு, அன்பின் குமாரனாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்துக்குள் வந்து விட்டோம்

டேனியல்: இதனால் சாத்தான்,
நமக்கு எதிராளியாக மாறி,
கொடூரமாய் நம்மை தாக்க முயற்சிக்கிறான்,உலகம்,மாம்சம்,
பிசாசு என்னும்,அந்தகார லோகாதிபதிகள்,வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள் நம்மோடு போராட ஆரம்பிக்கிறது,ஆனாலும்
நாம் பயப்படக்கூடாது,கிறிஸ்துவின் இரத்தத்தோடு பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும் அப்போது அவன் ஓடிப்போவான்... தோற்றுப்போவான்..

பீட்டர்: சாத்தான் ஒரு கர்ஜிக்கிற சிங்கம்
யாரை விழுங்கலாமோ என்று வகைத் தேடி, சுற்றித்திரிகிறான் (1 பேது. 5:8-9). அதே நேரம், நாம் கர்த்தர் யூத ராஜ சிங்கமாய்,நம்முடைய அருகிலே நிற்கிறார் (வெளி. 5:5). சிங்கத்தின்மேலும், வலுசர்ப்பத்தின் மேலும், கர்த்தர் நமக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். சிங்கத்தின்மேலும்,விரியன் பாம்பின்மேலும் நடந்து,பால சிங்கத்தையும், வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போட கிறிஸ்துவுக்குள் நம்மால் முடியும்....

டேனியல்: கிறிஸ்துவின் இரத்தத்தால் மாத்திரமே நாம் சாத்தானுடைய தந்திரங்களையும்,சதி ஆலோசனைகளையும் முறியடிக்க முடியும்... இயேசுவின் இரத்தத்தை நாம் பேசும் போது சாத்தானின் கிரியைகள் இல்லாமல் போகிறது.
சாத்தான் இயேசுவின் இரத்தத்திற்கு முன்னால் செயலற்றவனாய் ஆகிறான்

பீட்டர்: ஆமா டேனியல்! தேளின் கொடுக்கு,கூரிய கத்தியினால் நறுக்கப்பட்டுவிட்டால், அதனுடைய விஷம் நம்மேல் இறக்க முடியாது. அதுபோல கரு நாகப்பாம்பின் விஷப்பற்களைப் பிடுங்கி விட்டால், அது என்ன தான் சீறினாலும்,நம்மை அது சேதப்படுத்த முடியாது. அதுபோல, பால சிங்கம், பலமாக இரும்பு சங்கிலியினால் கட்டப்பட்டிருக்குமேயானால்,
நம்மேல் பாய முடியாது,அதே போல் நாம் இயேசுவின் இரத்தத்தை சாட்சியாக வைத்து வசனத்தை பிரயோகித்து நாம் சாத்தானை எதிர்க்கும் போது அவன் நிலைகுலைந்து போய் செயலிழந்து போய்விடுவான்.... அவனின் அழிவின் சக்திகள் நம்மேல் பலிக்காது..

டேனியல்: எனவே நம்முடைய வாழ்க்கையிலே,கர்த்தர் கல்வாரிச் சிலுவையிலே பெற்ற ஜெயத்தை செயல்படுத்துவோம்,அவரின் இரத்தத்தை பயன்படுத்துவோம்,
தேவனுடைய வார்த்தையினாலும்,
இயேசுவின் இரத்தத்தாலும்,
நாம் எதிர்கொள்ளும்  போராட்டங்களையும்,
பிரச்சனைகளையும்  மேற்கொள்ளுவோம்,
கிறிஸ்துவுக்குள் வெற்றியும்
வாழ்வும் என்றும் நமதே...

ஆமென்... அல்லேலூயா...

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

(2 கொரிந்தியர் 2:14)

======================
Revelation by spirit of God
======================

No comments:

Post a Comment