Sunday 19 February 2017


விழித்திருங்கள்,விசுவாசத்திலே நிலைத்திருங்கள்,புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.

(1 கொரிந்தியர் 16:13)

பரத்: நாம் விழிப்போடு,
திடன் கொண்டு தைரியமாயிருக்க
வேண்டும் விசுவாசத்திலே நிலைத்திருக்க வேண்டும்,நம்மை சுற்றியிருக்கிற,நம்மை நெருக்குகிற சூழ்நிலையை பார்த்து, நம் இருதயத்தை தளர விடக்கூடாது

பிரவீன்: ஆமா நம் இருதயத்தை
தளர விடக்கூடாது,ஒரு மனிதனால் எப்பொழுது விழிப்பாய்,தைரியமாய்,
திடமாய் இருக்க முடியும்? என்ற கேள்விக்கு பதில் அவன்,தேவனோடு கொண்டுள்ள ஆழமான உறவே, அவனை  விழிப்பானவனாய், திடமுள்ளவனாய், தைரியமுள்ளவனாய் விசுவாசமுள்ளவனாய், மாற்றும். தேவனோடு ஒரு மனிதன் கொண்டுள்ள ஆழமான உறவு,
அவனது எதிர்மறையான சூழ்நிலையை,நேர்மறையாக
மாற்ற செய்யும்.

பரத்: ஆம்,தேவனோடு ஆழமான ஐக்கியம் கொள்ளும்போது,மனிதன் தேவனிடம்  இருந்து வருகிற சமாதானத்தையும்,
சத்துவத்தையும், செழிப்பையும்,
பலத்தையும், பெறுகிறான்...

பிரவீன் :ஆமா,ஆனால் ஒரு மனிதன் தனது சூழ்நிலையைப் பார்த்து,தனது நிகழ்காலத்தையும்,எதிர்காலத்தையும் குறித்து பயந்து கலங்கும்போது,
அதை சந்திப்பதற்கான தைரியத்தையும் உறுதியையும் இழக்கிறான்,கடைசியில் தோல்வி அடைகிறான்.ஆனால் தேவனோடு நல்ல ஐக்கியம் கொண்டிருக்கிற
மனிதன் சூழ்நிலைகளை பார்த்து பயப்படாமல்,அந்த இக்கட்டான  சூழ்நிலைகளை மாற்ற வல்ல, தேவனுடைய வார்த்தைகளையும்,வாக்குத்தங்களையும் நோக்கி பார்த்து அதையே விசுவாசித்து சூழ்நிலைகளை ஜெயம் கொள்கிறான்
நாம் இப்படிப்பட்ட ஜெயம் கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்
என்று தேவன் விரும்புகிறார்.

பரத்: ஆமா,எனவே இக்கட்டான
சூழ்நிலை வரும் போது அதை
பார்த்து பயந்து கர்த்தருடைய வாக்குத்தங்களின்  பேரில் உள்ள விசுவாசத்தை,தளர்த்திவிடாமல்,
தீவிரமாகவும் உறுதியாகவும்
வசனங்களை இருதயத்தில்
வைத்து  பற்றி கொள்ளுவோம்..
தேவனோடு நமக்குள்ள ஆழமான ஐக்கியத்தை இன்னும் அதிகமாக்குவோம். நாம் எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் இப்போது இருந்தாலும் அந்த சூழ்நிலையை மேற்கொண்டது நிச்சயமாகவே நாம் ஜெயம் எடுப்போம்.. கர்த்தர் நம்மோடு இருக்கிறார்,நாம் கர்த்தரோடு பழகும் நேரத்தை அதிகமாக்குவோம்..
அதனால் நமக்கு நன்மை தான் வரும்.

ஆமென்... அல்லேலூயா...

நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.
அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

(யோபு 22:21-22)

======================
Revelation by spirit of God
======================

No comments:

Post a Comment