தேவனுடைய வார்த்தைகளை பேசு:
கர்த்தர் உன் சகாயராய் இருக்கிறார்,
மனிதர்கள் உனக்கு எதிராக என்ன
செய்ய முடியும் !
தேவனை தவிர யாருக்கும் நீ அஞ்சாதே...
தன்னை தொழுது கொள்கிற
அனைவருக்கும் அவர் ஐஸ்வர்ய சம்பூரணராய் இருக்கிறார்,
எனவே நீ யாரிடமும் போய் கடன்
கேட்டு கெஞ்ஜாதே...
உன் பெலவினங்களையும்,
உன் நோய்களையும்,
தேவன் முழுமையாக சுமந்து தீர்த்துவிட்டார்.உன் வியாதியை பற்றி யாரிடமும் சொல்லி புலம்பாதே...
இந்த வாக்குத்தத்தங்கள் எல்லாம் எப்போது எங்கள் வாழ்வில் நிறைவேறும்...
தேவனுடைய வசனத்தில் மூலம்,
எப்படி எங்கள் வாழ்கையின் நிலைமாறும்...
என்று சிந்தித்து,வருந்தி
கொண்டிருக்காதே...
கிறிஸ்துவுக்குள் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது. என்று எழுதியிருக்கிறதே...
அதை நீ உன் முழு இருதயத்துடன்
விசுவாசிக்கிறாயா?
நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை நிச்சயம் காண்பாய்...
உனக்கு எதிராக இருக்கும் எதிர்மறை சூழ்நிலையை பார்த்து, இது மாறாது இந்த பிரச்சினை என்றும் ஓயாது, என்று அவிசுவாசமாய் பேசாதே...
அந்த எதிர்மறை சூழ்நிலைக்கு எதிராக தேவனுடைய வார்த்தைகளை எடுத்து பேசு.
பிறகு பார் உன் எதிர்மறையான சூழல்
நேர்மறையாக மாறிவிடும்...
உனக்கு இருக்கிற எல்லா பிரச்சினைகளும்,உன்னைவிட்டு நீங்கி ஓடி விடும்...
உன் பயங்கள்,பிரச்சினைகள், வியாதிகளை,நோக்கி
பார்ப்பதையும் அதை பற்றி அடிக்கடி பேசுவதையும் முதலில் நிறுத்து...
அதை முற்றிலும் இல்லாமல் போக செய்ய ஒரே தீர்வாக இருக்கிற, தேவனுடைய வார்த்தைகளை நோக்கி உன் முழு பார்வையையும்
செலுத்து...
பிரச்சினையை பேசாதே தீர்வை பேசு...
தரித்திரத்தை பேசாதே,தேவனுடைய மகிமையின் ஐஸ்வரியத்தை பேசு...
வியாதியை பேசாதே,தேவன் உனக்காக ஏற்படுத்தி வைத்திருக்கும் ஆரோக்கியத்தை பேசு...
தேவனுடைய ஜீவன் நிறைந்த வாக்குத்தத்தங்கள்,
உன் வாழ்வில் நிறைவேறுவதும், நிறைவேறாமல்
போவதும்,உன்னுடைய நாவின் அதிகாரத்தில் தான் இருக்கிறது
இதை நீ மறந்துவிடாதே...
நீ எதை விதைக்கிறாயோ,
அதை தான் அறுப்பாய்...
ஆமென்... அல்லேலூயா...
******************************
https://facebook.com/LIVINGWAYMARVEL/
http://marveljerome.blogspot.in
கர்த்தர் உன் சகாயராய் இருக்கிறார்,
மனிதர்கள் உனக்கு எதிராக என்ன
செய்ய முடியும் !
தேவனை தவிர யாருக்கும் நீ அஞ்சாதே...
தன்னை தொழுது கொள்கிற
அனைவருக்கும் அவர் ஐஸ்வர்ய சம்பூரணராய் இருக்கிறார்,
எனவே நீ யாரிடமும் போய் கடன்
கேட்டு கெஞ்ஜாதே...
உன் பெலவினங்களையும்,
உன் நோய்களையும்,
தேவன் முழுமையாக சுமந்து தீர்த்துவிட்டார்.உன் வியாதியை பற்றி யாரிடமும் சொல்லி புலம்பாதே...
இந்த வாக்குத்தத்தங்கள் எல்லாம் எப்போது எங்கள் வாழ்வில் நிறைவேறும்...
தேவனுடைய வசனத்தில் மூலம்,
எப்படி எங்கள் வாழ்கையின் நிலைமாறும்...
என்று சிந்தித்து,வருந்தி
கொண்டிருக்காதே...
கிறிஸ்துவுக்குள் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது. என்று எழுதியிருக்கிறதே...
அதை நீ உன் முழு இருதயத்துடன்
விசுவாசிக்கிறாயா?
நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை நிச்சயம் காண்பாய்...
உனக்கு எதிராக இருக்கும் எதிர்மறை சூழ்நிலையை பார்த்து, இது மாறாது இந்த பிரச்சினை என்றும் ஓயாது, என்று அவிசுவாசமாய் பேசாதே...
அந்த எதிர்மறை சூழ்நிலைக்கு எதிராக தேவனுடைய வார்த்தைகளை எடுத்து பேசு.
பிறகு பார் உன் எதிர்மறையான சூழல்
நேர்மறையாக மாறிவிடும்...
உனக்கு இருக்கிற எல்லா பிரச்சினைகளும்,உன்னைவிட்டு நீங்கி ஓடி விடும்...
உன் பயங்கள்,பிரச்சினைகள், வியாதிகளை,நோக்கி
பார்ப்பதையும் அதை பற்றி அடிக்கடி பேசுவதையும் முதலில் நிறுத்து...
அதை முற்றிலும் இல்லாமல் போக செய்ய ஒரே தீர்வாக இருக்கிற, தேவனுடைய வார்த்தைகளை நோக்கி உன் முழு பார்வையையும்
செலுத்து...
பிரச்சினையை பேசாதே தீர்வை பேசு...
தரித்திரத்தை பேசாதே,தேவனுடைய மகிமையின் ஐஸ்வரியத்தை பேசு...
வியாதியை பேசாதே,தேவன் உனக்காக ஏற்படுத்தி வைத்திருக்கும் ஆரோக்கியத்தை பேசு...
தேவனுடைய ஜீவன் நிறைந்த வாக்குத்தத்தங்கள்,
உன் வாழ்வில் நிறைவேறுவதும், நிறைவேறாமல்
போவதும்,உன்னுடைய நாவின் அதிகாரத்தில் தான் இருக்கிறது
இதை நீ மறந்துவிடாதே...
நீ எதை விதைக்கிறாயோ,
அதை தான் அறுப்பாய்...
ஆமென்... அல்லேலூயா...
******************************
https://facebook.com/LIVINGWAYMARVEL/
http://marveljerome.blogspot.in
No comments:
Post a Comment